Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பவர்பிளேவில் அசத்துவது அதிர்ஷ்டம்: மனம் திறக்கிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாஷிங்டன் சுந்தர் - THE HINDU பவர்பிளேவில் விக்கெட்கள் எடுக்கும் திறனை தான் கொண்டிருப்பது அதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர். இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். 18 வயதான வாஷிங்டன் சுந்தர், ம…

  2. 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒளிபரப்பு உரிமைகளை இழந்த சேனல் 9 சேனல் 9 பிதாமக வர்ணணையாளர் ரிச்சி பெனோ. கடந்த 40 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிகளை உயர்தரமாக ஒளிபரப்பு செய்து வந்த சேனல் 9 இம்முறை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒளிபரப்பு உரிமைகளை இழந்தது. 1 பில்லியன் டாலர்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை இழந்தது சேனல் 9. சேனல் 7 மற்றும் அதன் பே டிவி பார்ட்னர் ஃபாக்ஸ்டெல் இந்த ஒப்பந்தத்தைத் தட்டிச் சென்றது. இந்த ஒப்பந்தம் 6 ஆண்டு காலத்துக்கானது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் என்றாலே சேனல் 9-தான். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முதன் முதலில் கிரிக்கெட…

  3. பிக் பாஷ் போட்டியில் புத்திசாலித்தனமாக நேசர் எடுத்த பிடி விதிக்குட்பட்டது By DIGITAL DESK 2 03 JAN, 2023 | 05:50 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற ப்றிஸ்பேன் ஹீட் அணிக்கும் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கும் இடையிலான பிக் பாஷ் கிரிக்கெட் போட்டியில் மிக முக்கிய தீர்மானம் மிக்க வேளையில் மைக்கல் நேசர் மிகவும் புத்திசாலித்தனமாக எடுத்த அற்புதமான பிடி இன்று கிரிக்கெட் உலகில் பேச்சுப் பொருளாகிவிட்டது. ஆடுகளத்திற்கு உள்ளே பவுண்டறி எல்லையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மைக்கல் நேசர், வேகமாக ஓடியவாறு பிடியை எடுத்தார். ஆனால், அவரால் சமநிலை பேணமுடியாமல் போனதால் பந்தை மேலே எறிந்துவிட்டு பவு…

  4. 2019 உலகக்கோப்பை இறுதி ஆட்டம்: லார்ட்ஸில் நடத்த பரிந்துரை 2019 உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. இருபது வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்குப் பரிந்துரை செய்துள்ளது. 2017 மகளிர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தையும் லார்ட்ஸில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1975, 1979, 1983, 1999 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பை இறுதி ஆட்டங்கள் லார்ட்ஸில் நடைபெற்றுள்ளன. உலகக் கோப்பையின் அரை யிறுதி ஆட்டங்களை மான்செஸ்டர், பர்மிங்காம் (எட்பாஸ்டன்) ஆகிய நகரங்களிலும், தொடக்கப் போட்டியை ஓவலிலும் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வ…

  5. சானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார் சானியா மிர்சா : கோப்புப்படம் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் வங்கதேச கிரிக்கெட் வீரர் முறைதவறி நடந்ததாகக் கூறி சானியாவின் கணவர் சோயிப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்ட சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். இவை மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் நடந்த டென்னிஸ் போட்டிகளிலும் சானியா மிர்ஸா சிறப்ப…

  6. (நெவில் அன்தனி) ஆசிய - ஜேர்மன் விளையாட்டுத்துறை பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் செயலாளர்நாயகம் சந்தன பெரேராவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மேசைப்பந்தாட்டப் போட்டிகள் யாழ். மத்திய கல்லூரி மேசைப்பந்தாட்ட அரங்கில் சனி, ஞாயிறு தினங்களில் (டிசம்பர் 29, 30) நடைபெறவுள்ளன. தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூன்று சமூகங்களிடையேயும் சகோதரத்துவம், நட்புறவு, புரிந்துணர்வு ஆகியவற்றைக் கட்டி எழுப்பும் நோக்கத்துடளேயே ஆசிய - ஜேர்மன் விளையாட்டுத்துறை நிகழ்ச்சித் திட்டம் இப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இப் போட்டிகளில் நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் வீர, வீராங்கனைனகள் பங்குபற்றவுள்ளனர். …

  7. டென்னிஸ் மைதானத்தில் முத்தத்துக்கு போட்டிபோட்ட ஜோகோவிச்! (வீடியோ) லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் வீரர்கள் ஜோகோவிச், ரிச்சர்டுக்கு இளம் ரசிகைகள் முத்தம் கொடுத்து மைதானத்தையே அதிர வைத்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சுடன், பிரான்ஸ் வீரர் ரிச்சர்டு மோதினார். போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது ஜோகோவிச் திடீரென தனது சட்டையை பார்வையாளர் மாடத்தில் இருந்த இளம் ரசிகை ஒருவரிடம் வீசினார். அதை பார்த்த வீரர் ரிச்சர்டு பதிலுக்கு தனது சட்டையை கழற்றி மற்றொரு இளம் ரசிகையிடம் கொடுத்தார். பதிலுக்கு அ…

  8. ஊழலில் கைது செய்யப்பட்ட ஃபிஃபா அதிகாரி அமெரிக்காவிடம் ஒப்படைப்பு! லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஃபிஃபா நிர்வாகி ஒருவரை, சுவிட்சர்லாந்து அரசு அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. லஞ்சம் ஊழலில் திளைத்த 7 ஃபிபா அதிகாரிகளை சுவிட்சர்லாந்து அரசு, கடந்த மே 27ஆம் தேதி கைது செய்தது. அமெரிக்க புலனாய்வுத்துறையான எப்.பி.ஐ, சுவிட்சர்லாந்து அரசை கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உலககையே அதிர வைத்த இந்த கைது நடவடிக்கைக்குள்ளான 7 பேரும், உலக கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவில் பல்வேறு பதவிகளில் இருந்தவர்கள், இருப்பவர்கள். அப்படி கைது செய்யப்பட்ட 7 பேரில் ஒருவரை சுவிட்சர்லாந்து அரசு, நேற்று அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டது. இதற்காக அமெரிக்காவ…

  9. சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து தொடரிலிருந்து வெளியேற்றியது லிவர்பூல் ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது இத்தொடரில், அரையிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று பலம் பொருந்திய அணிகளான பார்சிலோனா அணியும் லிவர்பூல் அணி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரசிகர்களின் உச்சக் கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது, இங்கிலாந்தில் உள்ள என்பீல்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிலையில், லிவர்பூல் அணி, நட்சத்திர வீரர்களான முகமது சாலா மற்று…

  10. விராட் கோலி, டிவில்லியர்ஸை யார் என்று கேட்ட ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்பா. | படம்: அகிலேஷ் குமார். விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸை ‘யார் இவர்கள்’ என்று ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஸம்பா கேட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு அணியும், புனே அணியும் ஐபிஎல் கிரிக்கெட்டில் மோதின. இதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது, இதனையடுத்து பெங்களூரு அணியின் ஆஸ்திரேலிய பவுலர் கேன் ரிச்சர்ட்ஸன் புனே அணியின் தன் சக ஆஸி.வீரரான லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்பாவுக்கு ட்வீட் செய்யும் போது, விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் படத்தை வெளியிட்டு அதற்குக் கீழே, “ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் இருவரும் பேட் செய்வதைப் பார்…

  11. இந்திய அணியில் ’இவர்கள்’ தேர்வு செய்யப்படுவார்களா? நடப்பு ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, பார்த்திவ் படேல், அக்சர் படேல், மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நன்றாக ஆடி வருகின்றனர். இந்நிலையில் இளம் வீரர்களுக்கும் அனுபவ வீரர்களுக்கும் மீண்டும் வாய்ப்பளித்து வரும் இந்திய அணித்தேர்வுக்குழு இவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக கம்பீர் இருக்கும் ஃபார்ம் அவரை முரளி விஜய்யுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட தொடக்க வீரராக மீண்டும் களமிறக்கலாம் என்ற அளவுக்கு கம்பீர் ரசிகர்கள் நினைக்கின்றனர். அதுவும் ஷிகர் தவண் ஒரு போட்டியில் அடித்தால் பிறகு 5-6 போட்டிகளில் தொல்வியடைகிறார், மேலும் சமீபத்த…

  12. வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடையலாம்: ஜோக்கோவிச் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றுள்ள உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், கலெண்டர் கிரான்ட் ஸ்லாமைக் கைப்பற்ற முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரேயை எதிர்கொண்டிருந்த ஜோக்கோவிச், 3-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, தனது முதலாவது பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை வென்றிருந்தார். இதன்மூலம், நான்கு வகையான கிரான்ட் ஸ்லாம்களையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஜோக்கோவிச் பெற்றுக் கொண்டதோடு, தனது 12ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தையும…

  13. அசாருதீன் மீதான ஆயுட்கால தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவு! ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் வீரர் மொஹம்மது அசாருதீன் மீதான ஆயுட் கால தடையை நீக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட அசாருதீனுக்கு, கிரிக்கெட் விளையாட பிசிசிஐ ஆயுள் தடை விதித்தது. இதனை எதிர்த்து அசாருதீன், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம்,அசாருதீன் மீதான ஆயுள் கால தடையை நீக்குமாறு இன்று பிசிசிஐக்…

  14.  இங்கிலாந்துச் சம்பியன்களை வீழ்த்திய பிரெஞ்சுச் சம்பியன்கள் இங்கிலாந்தின் கால்பந்தாட்டச் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி அணியை எதிர்கொண்ட பிரான்ஸின் சம்பியன்களான பரிஸ் செய்ன்ட் ஜேர்மைன் அணி, மிக இலகுவான வெற்றியொன்றைப் பெற்றுக் கொண்டது. லொஸ் ஏஞ்சலஸில் இடம்பெற்ற கண்காட்சிப் போட்டியொன்றில், 25,667 இரசிகர்கள் மைதானம் முழுவதும் காணப்பட, இரு நாட்டுச் சம்பியன்களும் மோதினர். ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமாக விளையாடிய பரிஸ் செய்ன்ட் ஜேர்மைன் அணி, 26ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியூடாக, கோல் எண்ணிக்கை ஆரம்பித்தது. எடின்சன் கவானியினால் அந்தக் கோல் பெறப்பட்டது. பின்னர், முதற்பாதி முடியும் நே…

  15. டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு யாழில் இரத்த தானம்.! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு யாழில் இரத்த தனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு இன்று 39 வது பிறந்தநாள். இதனை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாண டோனி ரசிகர் மன்றத்தின் சார்பில் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூலை-7) காலையில் இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியும், கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியும் கொண்டாடியுள்ளனர். தமிழர் தாயகப்பரப்பில் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுக்கு ரசிகர் மன்…

  16. பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களான தஸ்கின்,அரபாத் சன்னி ஆகியோருக்கு பந்து வீச ICC அனுமதி. பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களான தஸ்கின்,அரபாத் சன்னி ஆகியோருக்கு பந்து வீச ICC அனுமதி. பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமெட் ,மற்றும் சூழல் பந்து வீச்சாளர் அரபாத் சன்னி ஆகியோருக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியது. T20 உலக கிண்ணப் போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணியில் இடம்பிடித்திருந்த இவ்விருவருக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவை, முறையற்ற பந்து வீச்சு என்பதை காரணம் காட்டி தடை விதித்தது. நெதர்லாந்துக்ககெதிராக தரம்சாலாவில் இடம்பெற்ற உலக T20 கிண்ண போட்டியில் இருவரும் விளையாடிய போது இவர்களது பந்து வீ…

  17. போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா-இலங்கை இடையேயான இறுதி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்துக்குள் பாட்டிலை வீசி எறிந்த ரசிகருக்கு டிரினாட் அண்ட் டொபாகோ கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகால தடை விதித்துள்ளது. இந்தியா- இலங்கை இடையேயான இறுதிப் போட்டி கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அப்போது விஜய் அவுடிம் என்பவர் பாட்டிலை மைதானத்துக்குள் வீசிவிட்டு தப்பி ஓட முயன்றார். அந்த பாட்டில் இலங்கை வீரர் மலிங்க மீது பட்டது. இதைத் தொடர்ந்து பாட்டிலை வீசிய ரசிகரை கடுமையாக எச்சரித்திருக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் நுழைய 5ஆண்டுகாலத்துக்கு அவருக்கு தடையும் விதித்திருக்கிறது. கரீபியன் தீவுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில்…

  18. ‘நடுவர்’ குமார் தர்மசேனவின் புதிய சாதனை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் குமார் தர்மசேன, நடுவராகப் பணிபுரிவதில் புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நூற்றைம்பதில் நடுவராகப் பணிபுரிந்த நடுவர்களின் குழுவில் குமார் தர்மசேனவும் இணைந்துள்ளார். 2010 முதல் 2017 வரையான காலப் பகுதியில் 46 டெஸ்ட் போட்டிகளிலும், 2009 முதல் 2017 வரையான காலப் பகுதியில் 82 போட்டிகளிலும், 22 இ-20 போட்டிகளிலும் குமார் தர்மசேன நடுவராகப் பணியாற்றியுள்ளார். இலங்கையைப் பொறுத்தவரையில், அசோக டி சில்வாவே 150 போட்டிகளில் பணியாற்றிய முதல் நடுவராவார். இதுவரை அதிக போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய சாதனையை…

  19. இங்கிலாந்தின் டர்ஹேம் கழகத்துடன் இணைந்தார் சங்கக்கார இலங்கை அணியின் முன்னாள் தலைவரம் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார இங்கிலாந்தின் டர்ஹேம் (Durham) கழகத்திற்காக விளையாடவுள்ளார் இதன் காரணமாக இலங்கை அயர்லாந்து அணிகள் மோதும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சங்கக்கார விளையாடமாட்டார் என்றும் மே 14ஆம் திகதி டர்ஹேம் அணி பங்கேற்கின்ற போட்டிகளுக்குப் பிறகு இலங்கை அணியுடன் சங்கக்கார மீண்டும் இணைந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பமானது தனக்கு கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பாக கருதுவதாக சங்கக்கார குறிப்பிட்டுள்ளார். தான் வோக்ஷயர் அணிக்காக முதலில் கழகங்கிடையிலான போட்டியில் டர்ஹேம் கழகத்திற்ககு எதிராக விளையாடியதாகவும் இந்த முறை வோக்ஷயர் அணிக்கெத…

  20. வேகப்பந்து வீச்சாளராக இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவரும், தற்போதைய போட்டி நடுவராகவும் உள்ள பிரதீப் ஜயப்பிரகாஷுடனான சிறப்பு நேர்காணல்.

  21. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சஞ்சு சாம்சன்: பயிற்சியாளர் புகழாரம் இந்தியா ஏ அணியில் இடம்பெற்று 4 அணிகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை எடுத்த சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று இந்தியா ஏ அணியின் ஃபீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியாளர் அபய் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார். இஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் இந்தியா ஏ அணி 4 அணிகள் பங்கேற்ற ஒருநாள் தொடரில் சாம்பியன் ஆனதையடுத்து அந்தத் தொடர் பற்றி கூறும்போது சஞ்சு சாம்சனைப் புகழ்ந்துள்ளார். "சஞ்சு சாம்சன் நிச்சயம் இந்தியாவின் எதிர்காலம் என்றே கூறலாம், பேட்ஸ்மெனாக திறமையாக ஆடுகிறார், சூழ்நிலைக்கு ஏற்ப அவர் தன்னை தகவமைத்துக் கொண்டு ஆடுவது அபாரம். ஆஸ்திரேலியா ஏ அணிக்…

  22. வடக்கு, கிழக்கில் கால்பந்து நிலைமை எவ்வாறு உள்ளது? இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களை உள்வாங்குவதற்கான தேர்வு முகாம்கள் (Trials) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில் இரண்டு மாகாணங்களுக்கும் வெவ்வேறு கட்டங்களாக கடந்த வாரம் நடைபெற்று முடிந்திருக்கின்றன. கடந்த காலங்களில் சர்வதேசப் போட்டிகள் எதிலும் பங்கு கொள்ளாத இலங்கை கால்பந்து அணி, FIFA தரவரிசையில் வரலாற்றில் மிகவும் மோசமான பதிவாக தற்போது 200ஆவது இடத்தில் உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில், இலங்கையின் கால்பந்து விளையாட்டில் பல முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுத்து இருக்கின்ற இலங்கை கால்பந்து சம்மேளனம், அதன் முதற்க…

  23. அவுஸ்திரேலியாவின் புதிய விக்கெட் காப்பாளர் அரபு தேசத்திலிருந்து !!! மத்திய கிழக்கின் அனல் பறக்கும் பாலை ஆடுகளங்களில் பாகிஸ்தானிய அணியை கிரிக்கெட் போட்டிகளில் எதிர்கொண்டுவரும் அவுஸ்திரேலிய அணிக்கு நேற்றைய தினம் புதிய விக்கெட் காப்பாளரையும் வழங்கியுள்ளது அரபு தேசம். ஆமாம், அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானிய A அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நான்கு நாள் பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடி வருகிறது. மூன்றாம் நாளான நேற்று தங்கள் விக்கெட் காப்பாளர் ப்ரட் ஹடினை கொளுத்தும் பாலை வெயிலில் இருந்து காப்பாற்றும் நோக்கில் அவுஸ்திரேலியப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் விக்கெட் காப்பாளரான சக்லைன் ஹைடருக்கு அழைப்பு விடுத்திருந்தார். பெருமையோடும், மகிழ்ச்சியோடும…

  24. ”ICC உலக கிண்ணம்” செப்டம்பர் 20 முதல் இலங்கையில் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சம்பியன் கிண்ணத்தை நாடுகளில் காட்சிப்படுத்தும் நடவடிக்கை நாளை முதல் டுபாயில் அமைந்துள்ள ஐ.சீ.சீ தலைமையகத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. போட்டியில் கலந்துக்கொள்ளும் 21 நாடுகளின் 60 நகரங்களில் இந்த கிண்ணம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளில் கொழும்பிலும் 24 முதல் 27 வரை ஹிக்கடுவை மற்றும் காலியிலும் அந்த கிண்ணம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/icc-உலக-கிண்ணம்-செப்டம்பர்-20/

  25. இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர காலமானார். இவர் தனது 87ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் ராகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று(30) சிகிச்சை பலனின்றி காலமானார். R Tamilmirror Online || பெர்ஸி அபேசேகர காலமானார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.