Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 28 வயதான பிரிட்டன் குத்துச் சண்டடை வீரர் அன்டனி யார்ட், தனது தந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார். குறித்த தகவலை அன்டனி யார்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார். அத்துடன் அந்த பதிவில் உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/78903

    • 0 replies
    • 572 views
  2. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை: சச்சின் கொச்சி: ‘‘எனது தந்தை அறிவுரைப்படி புகையிலை, மதுபான பொருட்கள் தொடர்பான விளம்பரங்களில் தோன்றுவதில்லை,’’ என, சச்சின் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், 42. பல பொருட்களுக்கு விளம்பர ‘மாடலாக’ உள்ளார். புகையிலை, மது விளம்பரங்களில் மட்டும் தோன்றியது கிடையாது. இது குறித்து கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சச்சின் கூறியது: புகையிலை, மது உள்ளிட்ட போதை தரும் பொருட்களுக்கு எப்போதுமே விளம்பரம் செய்ய மாட்டேன். இவற்றை ஊக்கப்படுத்த கூடாது என மறைந்த எனது தந்தை அறிவுறுத்தினார். இதற்கேற்ப, இப்பொருட்களில் இருந்து விலகியே உள்ளேன்.இளைஞர்கள் தங்களது இலக்கை எட்டும் வரை போராட வேண்டும். நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் பல சவால்களை சந்தித்த…

  3. தந்தை தந்தைதான்... மகன் மகன்தான்: தோனி, கோலியை ஒப்பிட்டு கபில் ருசிகரம் ஜெய்பூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கபில் தேவ். | படம்: ரோஹித் ஜெயின் பராஸ். கேப்டனாக தோனியின் சாதனைகளை எட்டிப்பிடிக்க கோலி இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். ஜெய்பூரில் ஒண்டர் சிமெண்ட் கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கபில் கூறியதாவது: கேப்டன்சியைப் பொறுத்தவரை தந்தை தந்தைதான்... மகன் மகன் தான். தோனியின் தலைமைத்துவ சாதனைகளை எட்டிப் பிடிக்க கோலி இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். இதைக்கூறும்போது இன்னொன்றையும் தெரிவிக்கிறேன், கோலி ஒரு அபாரமான பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார், இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் சிறப்புறுவார் என்று நான் வலிமையாக நம்புகிறேன். இந்திய…

  4. தந்தையின் அதிரடியை தொடரும் டில்ஷானின் மகன் ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷானின் மகன் ரேசாந்து திலகரட்ன அண்மையில் இடம்பெற்ற 13 வயதிற்குற்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 114 ஒட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியை பிரதிநிதித்துவம் படுத்தும் ரேசாந்து திலகரட்ன கோட்டை புனித தோமஸ் கல்லூரிக்கு எதிரான போட்டியிலேயே இவ்வாறு சதம் அடித்து, அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். சிறுவயதிலேயே இவ்வாறு திறமைகளை கொண்டுள்ள ரேசாந்து எதிர்காலத்தில் டில்ஸ்கூப்பை ஞாபகப்படுத்துவார் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11895

  5. தந்தையும் தனயனும் ஒரே அணிக்காக விளையாடி கோல் அடித்து அசத்தல்! கடந்த 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம் பிடித்தவர் ரிவல்டோ. ரிவல்டோ விளையாடிய காலக்கட்டத்தில் உலகிலேயே மிகச்சிறந்த அட்டாக்கிங் மிட்பீல்டராக திகழ்ந்தார். ரொனால்டோ, ரிவல்டோ, ரொனால்டினோ கூட்டணிதான் பிரேசில் அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தது. 1999ஆம் ஆண்டு உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரராக ரிவல்டோவை ஃபிஃபா தேர்வு செய்தது. கிளப் கால்பந்தை பொறுத்த வரை ஏ.சி.மிலன்,பார்சிலோனா போன்ற புகழ்பெற்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார். பிரேசில் அணிக்காக 74 சர்வதேச போட்டிகளில் விளையாடி 35 கோல்களை அடித்துள்ள ரிவல்டோ, 24 ஆண்டு கால கால்பந்து வாழ்க்கைக்கு பின், கடந்த வருடம் ஓய்வு அறிவித்தார். தொடர்ந்து…

    • 1 reply
    • 289 views
  6. தனது இரட்டைக் குழந்தைகளை வரவேற்றார் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் ஜமைக்காவைச் சேர்ந்த மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட்டுக்கு இரட்டைக் குழந்தைகளாக இரு மகன்மார் பிறந்துள்ளனர். இரட்டைக் குழந்தைகளுக்கு போல்ட் தண்டர் மற்றும் செயிண்ட் லியோ என பெயர் வைத்து அவர்களை வரவேற்றார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரட்டை மகன்களின் பிறப்பை புகைப்படத்துடன் அறிவித்தார் போல்ட். அதில், உசைன் போல்ட் அவரது மனைவி காசி பென்னட், அவர்களின் மூத்த மகள் ஒலிம்பியா லைட்னிங் போல்ட் ஆகியோர் தற்போது பிறந்த இரட்டையர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். மூத்த மகளான ஒலிம்பியா லைட்னிங் போ…

    • 1 reply
    • 735 views
  7. தனது குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட இந்திய வீரர்களுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி, யுவராஜ்வுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அசார் அலியின் குழந்தைகள் | படம் உதவி: அசார் அலியின் ட்விட்டர் பக்கத்திலிருந்து தனது குழந்தைகளுடன் நேரம் செலவழித்த இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெர்ட் வீரர் அசார் அலி நன்றி தெரிவித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தானுடனான இந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட் ரசி…

  8. தனது முதல் டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடுகிறது ஆப்கானிஸ்தான்! ஒருநாள், டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு கடந்த ஜூன் மாதம் டெஸ்ட் அங்கீகாரம் அளித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இரு அணிகளும் தங்களுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடும் முனைப்பில் இருக்க, முதல் அணியாகத் தனது தொடரை அறிவித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த வருடத்தின் இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட…

  9. தனி ஒருவனை கிரிக்கெட் உலகம் மிஸ் செய்ய 7 காரணங்கள்! இந்த வெஸ்ட் இண்டீஸ் வீரரை தெரியாமல் யாரும் இருக்க முடியாது. களத்தில் இவரது வினோதமான பேட்டிங் ஸ்டைலை ரசிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி நிற்கும் மனிதர் பந்து வீச்சாளரின் வேகத்துக்கு ஏற்ப ஸ்டெம்புகளை நோக்கி நகர்ந்து பந்தை பவுண்டரிக்கு விரட்டுவது கிரிக்கெட்டின் கிளாசிக் ஷாட்களில் ஒன்று. இதற்கு சொந்தக்காரர் இந்திய வம்சாவளியை சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிவ் நாராயண் சந்தரபால் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு கிளாசிக் கிரிக்கெட்டர். அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இவரை கிரிக்கெட் உலகம் இந்த 7 காரணங்களுக்காக கட்டாயம் மிஸ் செய்யும். தனி ஒருவன்! மிகப்பெரிய ஜாம்பவான்களை கொண்ட வெஸ்ட் இ…

  10. தனி நிறுவனமாகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் "சென்னை சூப்பர் கிங்ஸ் டிவிஷனை தனி உரிமை துணை நிறுவனமாக மாற்ற எங்கள் நிறுவனம் (இந்தியா சிமெண்ட்ஸ்) முன்மொழிந்துள்ளது” என்று மும்பைப் பங்குச் சந்தைக்கு ஃபைல் செய்த மனுவில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்தியா சிமெண்ட்ஸிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு தனிச்சிறப்பான பிராண்ட் இமேஜை வழங்கியுள்ளது. மேலும் அனைத்திந்திய கார்ப்பரேட் நிறுவனம் என்ற அடையாளத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பிராண்ட் இந்தியா சிமெண்ட்ஸிற்கு வழங்கியது. தோனி என்ற மிகப்பெரிய கிரிக்கெட் பிம்பத்தின் காரணமாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் குஜராத் ம…

  11. தனிமைப்படுத்தப்படுகிறாரா டோணி? அனுஷ்கா-கோஹ்லிக்காக கொந்தளித்தவர்கள் போனது எங்கே? சென்னை: அனுஷ்கா ஷர்மாவால் உலக கோப்பை அரையிறுதியில் விராட் கோஹ்லி சொதப்பல் ஆட்டம் வெளிப்படுத்தினார் என்ற விமர்சனங்களுக்கு உடனடியாக பாய்ந்து வந்து பதிலடி கொடுத்த கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணி கேப்டன் டோணியை, தொடர்ந்து மோசமாக விமர்சனம் செய்யும் யுவராஜ்சிங் தந்தை யோக்ராஜ்சிங்கை கண்டிக்காதது ஏன் என்பது டோணி ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. யுவராஜ் ஒதுக்கப்பட்டது ஏன்? கடந்த டி20 உலக கோப்பை பைனலில் இலங்கைக்கு எதிராக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் யுவராஜ்சிங் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதில் இந்தியா தோற்றபிறகுதான், யுவராஜ்சிங் அணி தேர்வுகளில் இருந்து ஒதுக்கப்பட்டார். டோணி மீது வ…

  12. தனுஷ்க குணதிலகவுக்குத் தடை இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக, அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என, இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (22) அறிவித்தது. வீரர்களுக்கான நடத்தைக் கோவையை மீறினார் என்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முடிவடையும் வரையே, அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும், இத்தடை அமுலுக்கு வருமெனவும், இப்போட்டியிலும் இன்றைய (23) தினம் அவர் பங்குபற்ற மாட்டாரெனவும், கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்தது. …

  13. தனுஸ்கவும் வன்டர்சேயும் மீண்டும் இலங்கைக்காக விளையாடுவார்கள் - ஹத்துருசிங்க அணியின் விதிமுறைகளை மீறியதற்காக தடைகளை அனுபவித்துவரும் தனுஸ்க குணதிலகவும் ஜெவ்ரி வன்டர்சேயும் மீண்டும் அணியில் இடம்பெறுவார்கள் என இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க மீண்டும் தெரிவித்துள்ளார் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றமை குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன், என தனுஸ்க குணதில ஜெவ்ரி வன்டர்சேயின் விவகாரம் குறித்து ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இது கடந்த காலங்களிலும் இடம்பெற்றது,எங்கள் கலாச்சாரம் வித்தியாசமானது, எங்களால் இதனை சகித்துக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஒரு இரு நபர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தவி…

  14. தன் குழந்தைகளின் தாயை மணந்தார் பென் ஸ்டோக்ஸ்! இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் நேற்று (14) தனது நெடுநாள் காதலியும் தனது இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமான க்ளேர் ரெட்க்ளிஃப்பை நேற்று திருமணம் முடித்தார். இங்கிலாந்தின் சம்மர்செட் நகரில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் ஜோ ரூட், ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் அலிஸ்டேர் குக், இயொன் மோர்கன், க்ரஹெம் ஒனியன்ஸ் உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். திருமண நிகழ்வின்போது ஸ்டோக்ஸின் வலது கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இருபத்தாறு வயதான ஸ்டோக்ஸ், கடந்த மாதம் பிஸ்டலில் உள்ள இரவு விடுதி ஒன்றின் வெளிப்புறம் மற்றொருவரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட…

  15. தன் நடத்தையை விமர்சித்தவர்களுக்கு கிறிஸ் கெயில் பதிலடி கிறிஸ் கெய்ல். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். ஆஸ்திரேலிய சேனல் ஒன்றின் பெண் நிருபரிடம் தகாத வார்த்தைகளைக் கூறியதற்காக கெய்ல் மீது கண்டனங்கள் குவிந்த நிலையில் அவர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். கடந்த பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சேனல் 10 பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசியதற்காக கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து கிறிஸ் கெயில் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். சானல் 10 பெண் நிருபரான மெல் மெக்லாஃப்லின் கெயிலை அன்றைய தினம் பேட்டிக்காக அணுகிய போது, don't blush baby என்று கூறியது கிரிக்கெட் உலகில் கடும் சர்ச்சைக்குள்ளானது, கெயிலுக்கு அவர் ஆடிய கிளப்…

  16. தன் பந்துவீச்சில் கடுமையாகக் காயப்படுத்த விரும்பிய வீரர் யார்? ஷோயப் அக்தர் ருசிகரம் அக்தர். - கோப்புப் படம். | வி.வி.கிருஷ்ணன். ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் பாகிஸ்தானிய வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தன் உச்ச பந்து வீச்சுக் காலக்கட்டத்தில் பலவீரர்களை தன் அதிவேக பந்துகளில் காயப்படுத்தியுள்ளார். ஜஸ்டின் லாங்கர், மைக்கேல் ஸ்லேட்டர், பாண்டிங், டேமியன் மார்டின், கங்குலி, கயீஃப், லஷ்மண் உட்பட பல வீரர்களை தன் பந்து வீச்சில் காயமடையச் செய்துள்ளார் ஷோயப் அக்தர். ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இது பற்றிக் கூறும்போது, சுமார் 19 பேட்ஸ்மென்களை காயப்படு…

  17. தன் மீது மோசமான வசைமொழியை பிரயோகித்ததாக ஆர்தர் மீது உமர் அக்மல் ஆவேசம் உமர் அக்மல். - படம். | ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ‘வேண்டா மருமகள்’ ஆகிவிட்ட உமர் அக்மல், பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோசமான மொழியில் வசைமாரி பொழிந்ததாகவும், தேசிய கிரிக்கெட் அகாதெமியின் வசதிகளைத் தான் பயன்படுத்துவதற்கு தடை விதித்தார் என்று கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாக உமர் அக்மலின் எழுச்சியைக் கண்டித்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசிய உயர் ஆட்டத்திறன் முகாமில் உமர் அக்மல் பெயர் சேர்க்கப்பட்டிர…

  18. தன்னம்பிக்கை பெறுவது பற்றி தோனி எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்: அஜிங்கிய ரஹானே தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்படி என்பதை கேப்டன் தோனி இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுத்தார் என்று அஜிங்கிய ரஹானே பாராட்டு தெரிவித்துள்ளார். "தோனியின் கீழ் விளையாடும் போது இளம் வீர்ர்களான நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம். அவர் எங்களுக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கையை ஊட்டினார். டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் என்று எதுவாக இருந்தாலும் அவர் எங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது பற்றியும் ஒவ்வொரு சூழலிலும் எப்படி வினையாற்ற வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தார்” என்றார் அஜிங்கிய ரஹானே. விராட் கோலி பற்றி.. விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுபவர், எதிரணியினர் ஆஸ்திரேலியாவாக …

  19. தன்னம்பிக்கை மிகுந்த ஆக்ரோஷமான கேப்டன் தேவை: தோனி மீது கங்குலி விமர்சனம் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் நல்ல நிலையிலிருந்து மோசமான நிலைக்கு இந்திய அணி செல்வதற்கு தோனியின் கேப்டன்சி அணுகுமுறையே காரணம் என்று பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுவாக தோனியை பாராட்டும் இயன் சாப்பல், ஆஸ்திரேலியாவை 216/5 என்ற நிலையிலிருந்து 530 ரன்கள் எடுக்க விட்டதற்கு காரணம் தோனியே என்று கூறியுள்ளார். கடந்த டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சனுக்கு ஷாட் பிட்ச் பந்துகளை வீசி பல்பு வாங்கிய இந்திய அணி இன்று பிராட் ஹேடின், ரயான் ஹேரிஸ் ஆகியோரிடம் மீண்டும் பல்பு வாங்கியது. களத்தில் தோனியின் எந்த வித நோக்கமுமற்ற தோனியின் கேப்டன்சியினால் இந்திய அணி காயப்பட்டுள்ளது என்று கூறிய இயன் சாப்பல…

  20. தன்னை அணியிலிருந்து நீக்கிய இங்கிலாந்துக்கு நன்றி: மனம் திறக்கிறார் கெவின் பீட்டர்சன் கெவின் பீட்டர்சன். - படம். | கெட்டி இமேஜஸ் 2014-ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு எழுந்த பலவித சர்ச்சைகளில் பலிகடாவாக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். தன்னை இங்கிலாந்து நீக்கியதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் கெவின் பீட்டர்சன் இது குறித்து கூறியதாவது: 2014 ஆஷஸ் தொடருக்குப் பிறகு என்னை இங்கிலாந்து அணி நீக்கியதன் மூலம் எனக்கு நன்மை செய்துள்ளனர். இதனால் என் குடும்பத்தை காப்பாற்ற முடிந்தது, மனைவி குழந்தைகளுடனான உறவை மீட்டெடு…

  21. தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயதான கத்ரின் மயோர்கா (Kathryn Mayorga ) என்ற பெண் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கடந்த 2009-ம் ஆண்டு ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அது குறித்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கு பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார் எனினும் இந்த முறைப்பாட்டினை மறுத்த ரொனால்டோ , கத்ரின் மயோர்கா தனது பெயரை பயன்படுத்தி புகழ்தேட முயற்சி மேற்கொள்கிறார் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதன் முறையாக பதிலளித்துள்ள ரொனால்டோ, இது வெறும் …

  22. தப்பாக டெலிவரி செய்த ஹோட்டல் ஊழியர்.. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு வியூகம் பேஸ்புக்கில் லீக்கானது செஞ்சூரியன்: நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எந்த மாதிரியான பந்துகளை வீச வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க பவுலர் டேல் ஸ்டெயினுக்கு அனுப்பப்பட்ட ஐடியாக்கள் அடங்கிய டிப்ஸ், வேறு ஒருவரின் கையில் சிக்கி தற்போது அம்பலமாகியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியரினில் நடக்கிறது. இதையடுத்து, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை சமாளிக்க தென் ஆப்பிரிக்க முன்னணி பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு வியூகம் அமைத்து கொடுத்தார் கோச். இதற்காக ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் எந்த இடத்தில் பந்து வீச வேண்டும், அவ…

  23. தப்பினார் செபஸ்டியன் வெட்டல் அஸர்பைஜானில் இடம்பெற்ற கிரான்ட் பிறிக்ஸ் தொடரில், லூயிஸ் ஹமில்டனின் காரோடு ஏற்பட்ட வாகன மோதல் தொடர்பாக, போர்மியூலா வண் சம்பியன்ஷிப்பில் முன்னிலை வகிக்கும் செபஸ்டியன் வெட்டல், மேலதிக நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாட்டார் என, சர்வதேச ஓட்டோமொபைல் சம்மேளனம் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காருக்குப் பின்னால் நின்ற போது, தனது சக மெர்சிடீஸ் சாரதியான ஹமில்டனின் காரோடு, வெட்டல் மோதியிருந்தார். இதனால் அவருக்கு, 10 செக்கன்கள் நிறுத்திச் செல்லும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான மீளாய்வு இடம்பெற்ற நிலையில், தனது நடவடிக்கை தவறானது என ஏற்றுக் கொண்ட வெட்டல், அது தொடர்பாக பகிரங்க மன…

  24. தப்பியது சங்கா -மஹேல சாதனை, இந்தியாவின் ராஞ்சி கிண்ணப் போட்டிகளில் புதிய இணைப்பாட்ட சாதனை. தப்பியது சங்கா -மஹேல சாதனை, இந்தியாவின் ராஞ்சி கிண்ணப் போட்டிகளில் புதிய இணைப்பாட்ட சாதனை. இந்தியாவில் இடம்பெற்றுவரும் முக்கிய ராஞ்சி கிண்ணப் போட்டிகளில் டெல்லி மற்றும் மகாராஸ்த்ரா மாநில அணிகளுக்கிடையிலான போட்டியில் புதிய இணைப்பாட்ட சாதனை படைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கையின் சங்கா- மஹேல ஜோடி 3 வது விக்கெட்டில் 2005 ம் ஆண்டு இலங்கையில் வைத்து தென் ஆபிரிக்க அணிக்கெதிராக நிலைநாட்டிய 624 எனும் சாதனை இணைப்பாடடம், இன்றைய நாளில் முறியடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டாலும் இறுதியில் தப்பித்துப் போயிருக்கிறது. இந்தியாவின் மகாராஸ்த்ரா மாநிலத…

  25. தப்புமா சென்னை அணி புதுடில்லி: பிரிமியர் தொடரிலிருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகள் நிரந்தரமாக நீக்கப்பட வாய்ப்பில்லை. கடந்த 2013ல் நடந்த பிரிமியர் தொடரில் வெடித்த சூதாட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முத்கல் குழு விசாரித்தது. இக்குழு சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தலா 2 ஆண்டு தடை விதித்தது. பிரிமியர் லீக் தொடரிலிருந்து இந்த இரு அணிகளும் நீக்கப்படும் என கூறப்பட்டது. இந்தச் சூழலில் மும்பையில் நாளை பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிலைமை குறித்து விவாதிக்கப்படலாம். இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘சென்னை, ராஜஸ்தான் அணிகள் நிரந்தரமாக நீக்கப்பட வாய்ப்பில்லை. அடுத்த தொடரில் புதிதாக இரு அணிகளை சேர்த்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.