விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
வில்லியம்சன் சதம்: நியூசிலாந்து அபாரம் ஜூன் 09, 2014. கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில், வில்லியம்சன் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி இமாலய இலக்கை நோக்கி செல்கிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜமைக்காவில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். நியூசிலாந்து அணிக்கு புல்டன் (1) ஏமாற்றினார். பின் இணைந்த டாம் லதாம், வில்லியம்சன் ஜோடி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம்பார்த்தனர். பொறுப்பாக ஆடிய லதாம் அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த போது, ஷில்லிங்போர்டு ‘சுழலில்’ லதாம் …
-
- 5 replies
- 554 views
-
-
கார் விபத்து: படுகாயமடைந்த ரிஷப் பண்ட் Dec 30, 2022 10:29AM IST ஷேர் செய்ய : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் கார் விபத்துக்குள்ளானதால், அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து , உத்ரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள தன் வீட்டுக்கு தனது பிஎம்டபிள்யூ காரில் ரிஷப் பண்ட் சென்று கொண்டிருந்த போது, முஹம்மத்பூர் ஜால் அருகில் உள்ள ரூர்க்கி என்ற இடத்தில் அவர் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. அங்கிருந்த சாலை தடுப்பில் கார் மோதிய நிலையில், தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இன்று (டிசம்பர் 30 ) அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ரிஷப் பண்ட் தலையில் பலத்த காயம் …
-
- 5 replies
- 956 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு கடும் சவால்கள் காத்திருக்கிறது: ஷேன் வாட்சன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி கடும் சவால்களைச் சந்திக்கும் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தியாவுக்கு தங்கள் அணி வரும்போது எத்தகைய பிட்ச்களை வழங்கி கடினமாக்கினார்களோ அதே போன்று இங்கு இந்திய அணிக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன என்கிறார் ஷேன் வாட்சன். ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் பிட்ச் தயாரிப்பாளர்கள் நிச்சயம் எங்களுக்குச் சாதகமான பிட்சையே தயாரிப்பார்கள் என்று நம்பலாம், இந்தியாவில் எப்படி அந்த அணிக்குச் சாதகமாக பிட்ச் தயாரிக்கப்படுகிறதோ அப்படி, ஆகவே இந்திய அணிக்குக் கடும் சவால்கள் காத்திருக்கின்றன.…
-
- 0 replies
- 339 views
-
-
உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஜாம்பவான் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு! PSG வெளியிட்ட பதிவு!! ஸ்பெயின் அணியின் ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செர்ஜியோ ராமோஸ் ஸ்பெயின் அணியின் 36 வயது ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ். தனது அணிக்காக 180 போட்டிகளில் விளையாடியுள்ள ராமோஸ் 23 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் ஸ்பெயினுக்கு உலகக்கோப்பை மற்றும் இரண்டு ஐரோப்பிய கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்கு 469 போட்டிகளில் 72 கோல்கள் அடித்த ராமோஸ், 2021ஆம் ஆண்டு பாரிஸ் செயிண்ட் ஜேர்…
-
- 0 replies
- 482 views
-
-
ஓய்வு பெறும் தீர்மானம் குறித்து திருப்தியடைகின்றேன்: – குமார் சங்கக்கார 2014-12-15 09:54:48 ''இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரானது இலங்கையில் எனது கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் என்பது நிச்சயம். உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சிந்திப்பேன்'' என இலங்கையின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரும் முன்னாள் அணித் தலைவருமான குமார் சங்கக்கார குறிப்பிட்டார். இங்கிலாந்துக்கு எதிராக கண்டி பல்லேகலையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆறாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சங்கக்கார 112 ஓட்டங்களைக் குவித்ததன் பலனாக 90 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றிருந்தது. இந்தப் போட்டி முடிவடைந்த …
-
- 0 replies
- 456 views
-
-
வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 66 போட்டிகள், பிரமாண்டமான பரிசுத் தொகை இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் 'IBC தமிழ்' நிறுவனத்தினால் நடாத்தப்படும் வடக்கு ,கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த மே மாதம் வெகு விமரிசையாக ஆரம்பாமாகி யாழ்ப்பாணத்தில் நடபெற்று வருகின்றது. ஓகஸ்ட் மாதம் 26ம் திகதி வரை நடைபெறவுள்ள இச்சுற்றுப்போட்டியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மொத்தமாக 12 அணிகள் கலந்து கொள்கின்றன. …
-
- 0 replies
- 279 views
-
-
கோலி, பெய்ன் மீண்டும் மோதல்: ஷமி அபாரம்; ஆஸி. அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழப்பு பி.டி.ஐபெர்த், பிடிஐ ஆஸி. கேப்டன் பெய்ன், கோலி இடையே வாக்குவாதம் நடந்த போது நடுவர் சமாதானம் செய்த காட்சி : படம் உதவி ட்விட்டர் ஆஸி. கேப்டன் பெய்ன், கோலி இடையே வாக்குவாதம் நடந்த போது நடுவர் சமாதானம் செய்த காட்சி : படம் உதவி ட்விட்டர் பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்குப் பின் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்திய அணியின் விராட் கோலியும், ஆஸி.கேப்டன் டிம் பெய்னும் ஏற்கெனவே நேற்று வார்த்தையில் மோதிக்கொண்ட நிலையில், இன்றும் இருவருக்குமிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. நண்பகல் உணவு இடையே…
-
- 0 replies
- 541 views
-
-
கிந்திய கிரிக்கெட் அணிக்கு இனிமே “காவி” உடை..! தேர்தல் “முடிவு”க்குப் பின் வெளியே வந்த பூனைக்குட்டி..! லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அதிக ஆரஞ்சு நிறம் கலந்த ஆடை அணிந்து விளையாட உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. ( ஆரஞ்சுன்னா இப்போதைக்கு அது அந்த நிறம் தானேப்பா ? ) சரியாக தேர்தல் முடிவு வரும் வரை மறைத்து வைக்கபட்டு, பின்னர் திட்டமிடப்பட்டு இந்த செய்தி வெளியாகி இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது இந்த ஆடை விவகாரம். நம்பிய ரசிகர்கள் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் ஆடை என எப்போதும் இந்தியா அணியும் நீல நிற ஆடை ஒன்றை ஐபிஎல் தொடருக்கு முன் அறிமுகம் செய்தனர். எல்லா இந்திய ரசிகர்களும் அதுதான் இந்திய அணியின் ஆடை என நம்பி இருந்தனர். …
-
- 0 replies
- 959 views
-
-
கென்ய வீரருக்கு பயிற்சியாளரான யூடியூப்: உலகத் தடகளத்தில் தங்கம் வென்றார்! யூடியூப் வீடியோக்களின் பயன் பற்றி விளக்கத் தேவையில்லை. ஆனால் தற்போது பயிற்சியாளர் எவரும் இல்லாமல் யூடியூப் வீடியோ காட்சிகளை பார்த்து பயிற்சியில் ஈடுபட்டு, உலகத் தடகளத்தில் வீரர் ஒருவர் தங்க பதக்கம் வென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பெய்ஜிங் நகரில் நடந்த உலகத் தடகளப் போட்டியில் கென்யா 7 தங்கம் உள்பட 16 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தது. கென்ய வீரர் ஜுலியஸ் எகோ, ஈட்டி எறிதல் போட்டியில் 92. 72 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஜுலியஸ் தனக்கென்று தனியாக எந்த பயிற்சியாளரையும் வைத்துக் கொள்ளவில்லை. யூடியூப்பில் மற்ற வீரர்களின் சாதனைகளை பார…
-
- 0 replies
- 321 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் என்ற சச்சின் டெண்டுல்காரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடிப்பர் என ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ள அவரின் தற்போதைய சராசராசரியில் ஆட்டத்தை தொடர்ந்தால் இலகுவாக இந்த சாதனையை முறியடிப்பர் என கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 15,921 ஓட்டங்கள் ''டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 53.78 சராசரியுடன் 15,921 ஓட்டங்களை எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் 143 போட்டிகளில் விளையாடி 12,027 ஓட்டங்களை குவித்துள்ளார். ரூட் ஆண்டுக்கு 800 முதல் 1000 ஓட்டங்களை எடுத்தால் டெண்டுல்கரின் சா…
-
-
- 5 replies
- 727 views
- 1 follower
-
-
உலக சம்பியனுக்கு வந்த சோதனை! அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களுக்களை மாத்திரம் பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இன்று லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 23.4 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் ரோரி பேர்ன்ஸ் 6 ஓட்டத்துடனும், ஜோசன் ரோய் 5 ஓட்டத்துடனும், ஜோ டென்லி 23 ஓட்டத்துடனும், ஜ…
-
- 1 reply
- 1k views
-
-
மேற்கிந்தியாவுடனான ஒருநாள் போட்டி தென் ஆபிரிக்கா 6 விக்கெட்டால் வெற்றி [23 - January - 2008] [Font Size - A - A - A] மேற்கிந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. தென் ஆபிரிக்கா -மேற்கிந்திய அணிகளிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமானது. இதனால், ஆட்டம் 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நாணயச் சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி, மேற்கிந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. முதலில் ஆடிய மேற்கிந்திய அணி, தென் ஆபிரிக்க வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாம…
-
- 0 replies
- 690 views
-
-
கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹுசைனுக்கு எதிராக சித்ரவதை குற்றப் பத்திரிகை தயார் வங்கதேசத்தின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷஹாதத் ஹுசைன் மற்றும் அவர் மனைவி ஜாஸ்மின் ஜஹான் ஆகியோர் தமது வீட்டில் வேலை செய்த பதினொரு வயது சிறுமியை சித்ரவதை செய்ததாக அவர்களுக்கு எதிராக முறைப்படி குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. இக்குற்றம் உறுதிசெய்யப்படுமானால், இருவருக்கும் ஏழு முதல் பதினான்கு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மஹ்ஃபூஸா அக்தர் என்ற அச்சிறுமி கடந்த செப்டம்பரில், உடலில் பல காயங்களுடனும் கால் உடைந்த நிலையிலும் வீதியில் கைவிடப்பட்டிருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரும் சிறையிலிருந்து இம்மாதத்தின் முற்பகுதியில் பிணையில…
-
- 0 replies
- 617 views
-
-
சனத்தின் சாதனையை முறியடித்தார் டில்ஷான் January 02, 2016 நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரர் டில்ஷான் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நெல்சனில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதில் டில்ஷான் 91 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் கடந்த 2001ம் ஆண்டு சனத் ஜெயசூரியா எடுத்த 1202 ஓட்டங்களே சாதனையாக இருந்தது. இவர் 33 இன்னிங்சில் இந்த ஓட்டங்களை எடுத்தார். ஆனால் டில்ஷான் 24 இன்னிங்சிலே 1207 ஓட்டங்கள் எடுத்து அவ…
-
- 0 replies
- 544 views
-
-
நாளை இலங்கை வருகிறது உலகக் கிண்ணம் 6 ஆவது இருபதுக்கு20 உலகக்கிண்ணம் இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை 16 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கை வரவுள்ளது. உலகம் முழுவதும் வலம் வரும் இக்கிண்ணம், நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இலங்கையில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக் கிண்ணமானது மக்கள் பார்வைக்காக எதிர்வரும் 17ஆம் திகதி காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 இல் பங்களாதேஷில் இடம்பெற்ற 5 ஆவது தொடரின் கிண்ணத்தை இலங்கை அணி தனதாக்கிக் கொண்டது. இருபதுக்கு20 கிண்ணத்திற்கான தொடர் 2007 ஆம…
-
- 2 replies
- 695 views
-
-
பாகிஸ்தான் அம்பயர் அசாத் ரவுப்பிற்கு 5 வருட தடை விதித்த பிசிசிஐ மும்பை: பாகிஸ்தான் நடுவர் அசாத் ரவுப் மீதான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு தங்களது போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அசாத் ரவுப் ஐபிஎல் போட்டிகளில் நடுவராக பணியாற்றியவர். அப்போது, சூதாட்ட புக்கிகளிடம் விலை உயர்ந்த பரிசு பொருட்களை அவர் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது, அசாத் ரவுப் பெட்டிங்கில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பிசிசிஐ அசாத் ரவுப்பை, 5 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. ஐபிஎல் உள்ளிட்ட பிசிசிஐ தொடர்பான எந்த ஒரு போட்டிகளிலு…
-
- 1 reply
- 506 views
-
-
விராட் கோலி தலை வணங்கியதற்கான காரணம் வெளியானது..! ஐசிசி இருபது - 20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. விராட் கோலியின் அபார ஆட்டம் மூலம் வெற்றியை இந்திய வசமாக்கி ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்தார். பாகிஸ்தான் முதலில் நிர்ணயம் செய்த 119 ஓட்ட இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு தொடக்கம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. ரோகித் சர்மா 10 ஓடடங்களுடனும், ஷிகர் தவான் 6 ஓட்டங்களுடனும், சுரேஷ் ரெய்னா ஓட்டம் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து விராட் கோலியும், யுவராஜ்சிங்கும் கைகோர்த்து அணியை சரிவில் இரு…
-
- 0 replies
- 616 views
-
-
சிங்கப்பூரின் உடல் கட்டழகர் பிரதீப் சுப்ரமணியம், முய் தாய் (Muay Thai) எனும் குத்துச்சண்டைப் போட்டியின் போது மரணமடைந்தமை இயற்கையானதே என்று அரசாங்கத் தரப்பு மரண விசாரணையில் உறுதியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் 32 வயதான பிரதீப் சுப்ரமணியம் கலந்துகொண்டார். இந்நிலையில், குறித்த போட்டியில் 41 வயது ஸ்டீவன் லிம்முடன் போட்டியிட்டார். போட்டி இடம்பெறுவதற்கு முன்னர் நடைபெற்ற வைத்தியப் பரிசோதனைகளில் பிரதீப்பின் உடல்நிலை சீராக இருந்தது, அதில் எந்தக் குறையும் இல்லை என்பதை வைத்தியர்கள் உறுதி செய்தனர். அத்துடன், தமக்கு உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லை என்று உறுதியளித்த பின்னரே, பிரதீப் போட்டியில் கலந…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை அணி வீரர்களின் நேர்த்தியான துடுப்பாட்டம் காரணமாக மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 3 ஆவது ஓருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 307 ஓட்டங்களை குவித்துள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினரின் சீரானா துடுப்பாட்டம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை அணி 307 ஓட்டங்களை குவித்தது. அவிஷ்க ப…
-
- 3 replies
- 939 views
- 1 follower
-
-
'உபாய ரீதியாக மஹேல உதவலாம்' Comments இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அத்தொடரில், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன, உபாய ரீதியாக இலங்கைக்கு உதவலாம் என, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற பின்னர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்ட மஹேல ஜெயவர்தன, இறுதியாக, இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரிலும் அவ்வாறு செயற்பட்டிருந்தார். இந்தத் தொடரில் அவர், இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேர்முக வர்ணனையாளப் பணியாற்றவுள்ளார். எனவே, இங்கிலாந்து அணியின் வீரர்கள் பற்றிய தகவல்களை…
-
- 50 replies
- 3.7k views
-
-
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 11-வது பட்டம் வெல்லும் முனைப்பில் ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த ரியல் மாட்ரிட்-அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் அட்லெடிகோ மாட்ரிட், பேயர்ன் முனிச் அணியையும், ரியல் மாட்ரிட் அணி, மான்செஸ்ட் சிட்டி அணியையும் தோற்கடித்திருந்தன. ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் 14-வது முறையாக இறுதிப்போட்டியை சந்திக்கிறது. 10 முறை சாம்பியன்ஸ் அந்த அணி 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தற்போது 11-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகி…
-
- 3 replies
- 1.2k views
-
-
அடுத்த முறை இங்கிலாந்து பந்துவீச்சை கோலி நிச்சயம் பதம் பார்ப்பார்: பயிற்சியாளர் நம்பிக்கை விராட் கோலி. | படம்: கே.பாக்யபிரகாஷ். விராட் கோலியின் பேட்டிங் ‘அடுத்த கட்டத்திற்கு’ முன்னேறியுள்ளதாகக் கூறும் அவரது ஆரம்பகால பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா சச்சின் சாதனைகளை கோலியால் முறியடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன், விராட் கோலியை தனது செல்லப்பிள்ளையாக்கி சொல்லி, சொல்லி வீழ்த்திக் கொண்டேயிருந்தார், இதனால் ஒரு அரைசதம் கூட 5 டெஸ்ட் போட்டிகளில் கோலியால் எடுக்க முடியவில்லை, இது பற்றி அவரது பயிற்சியாளர் கூறும்போது, அடுத்த முறை இங்கிலாந்தில் நிச்சயம் பந்து வீச்சை…
-
- 0 replies
- 292 views
-
-
முரளியிடமும் சங்காவிடமும் மன்னிப்புக் கோரினார் மக்கலம் நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில், முத்தையா முரளிதரனைச் சர்ச்சைக்குரிய விதத்தில் ரண் அவுட் செய்தமைக்காக, அப்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த குமார் சங்கக்காரவிடமும் ரண் அவுட் முறையில் ஆட்டமிழப்புச் செய்யப்பட்ட முரளிதரனிடமும் மன்னிப்புக் கோருவதாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார். எம்.சி.சி கிரிக்கெட்டின் உணர்வுக்கான கொலின் கௌட்ரி உரையை, லோர்ட்ஸில் வைத்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு மன்னிப்புக் கோரியிருந்தார். கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற…
-
- 2 replies
- 629 views
-
-
இந்தியன் சூப்பர் லீக் – 3: கோப்பையை வெல்லப்போவது யார்? #ISL ஐ.பி.எல் தொடருக்கு நிகராக பிரபலமடைந்து வெற்றிகரமாக மூன்றாவது சீசனில் காலெடுத்து வைக்கப்போகிறது ஐ.எஸ்.எல். வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி மூன்றாவது சீசனை வெல்ல அனைத்து அணிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. சென்னை அணியைத் தவிர்த்து மற்ற ஏழு அணிகளிலும் பயிற்சியாளர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. மெண்டோசா, எலானோ போன்ற சில முன்னனி வெளிநாட்டு வீரர்கள் இந்த சீசனில் இல்லை. ஆனாலும் டீகோ ஃபோர்லான், ஆரோன் ஹூக்ஸ் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்கள் புதிதாய் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். பல வீரர்களும் கடந்த முறை விளையாடிய அணிகளிலிருந்து வேறு அணிக்கு மாறியுள்ளன. அதுமட…
-
- 9 replies
- 1.9k views
-
-
வங்காள தேச அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம்: சஹா சொல்கிறார் வங்காள தேச அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா குறிப்பிட்டுள்ளார். இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியா வங்காள தேசத்தை குறைத்து மதிப்பிடாது என்று சகா கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான சகா, வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து கூறுகையில் ‘‘ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நாங்கள் அவர்…
-
- 23 replies
- 1.8k views
-