விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இந்திய அணியை அச்சுறுத்த இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு உதவ வருகிறார் சக்லைன் முஷ்டாக் அடில் ரஷீத்துடன் சக்லைன் முஷ்டாக். | கெட்டி இமேஜஸ் முன்னாள் பாகிஸ்தான் ‘கிரேட்’ சக்லைன் முஷ்டாக், இந்தியாவுக்கு வருகை தரும் இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்பந்திக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து தொடரில் சக்லைனின் அறிவுரைகள் இங்கிலாந்து அணிக்கு உதவியது. இதனையடுத்து இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு உதவ சக்லைன் முஷ்டாக் ஒப்பந்திக்கப்பட்டுள்ளார். நவம்பர் 2-ம் தேதி முதல் இவர் இங்கிலாந்து அணியுடன் இருந்து பயிற்சி அளிப்பார். காரெத் பாட்டீ, அடில் ரஷீத், சஃபர் அன்சாரி ஆகியோர் தங்க…
-
- 0 replies
- 262 views
-
-
இப்படியொரு கால்பந்து போட்டி நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா …? இன்று டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருப்பதற்கும், 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒபாமா தேர்தலில் வென்றதும் ஒன்றல்ல. இன்று நடந்திருப்பது சம்பவம். அன்று நடந்தது வரலாறு. ஒரு வழக்கமான தேர்தலை வரலாறாக மாற்றியது எது? ஒபாமா தோலின் நிறம். அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற வரலாற்றுப் பெயரோடு அமர்ந்தார் ஒபாமா. வெறும் நிறம் தான் அங்கு வரலாறு படைத்தது. ஆனால் அந்த நிறத்திற்கென்று மிகப்பெரிய வரலாறு உண்டு. உலகின் ஒவ்வொரு மூளையிலும் முடக்கப்பட்டதால்தான் என்னவோ, லிங்கன், லூதர் கிங், ஒபாமா என்று அது எழும்போதெல்லாம் பெரும் ஓசை கேட்டது. அதற்கெல்லாம் காரணம் அந்நிறம் அடைந்த அவமானங்கள். வீதிகளிலும், வீ…
-
- 0 replies
- 385 views
-
-
இந்திய அணியின் வீரரான இவரது கேப்டன்சியின் கீழ் நான் விளையாட ஆசைப்படுகிறேன் – மனம்திறந்த வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக, ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு விக்கெட் கீப்பராக, பினிஷராக பல ரோல்களில் சிறப்பாக விளையாடிய வீரர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை கூறலாம். அந்த அளவிற்கு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு சிறப்பான பங்கை கொடுத்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அதிரடியான ஓய்வை அறிவித்தார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்பான செய்திகளுக்கும், பேச்சுகளுக்கும் இப்பொழுதும் குறையில்லை. அந்த அளவிற்கு அவரது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வரு…
-
- 0 replies
- 945 views
-
-
ஒரே ஒரு 20 ஓவர் போட்டி: இந்தியா-இலங்கை நாளை பலப்பரீட்சை இந்தியா- இலங்கை இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் கொழும்பில் நாளை நடக்கிறது. இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெறும் வேட்கையுடன் இருக்கிறது. கொழும்பு: வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா முழுமையாக கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது. இந்தியா- இலங்கை இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் கொழும்பில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது. 20 ஓவர் போட்டியிலும் வெ…
-
- 4 replies
- 715 views
-
-
சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷை விட்டு இலங்கை அணிக்கு வருவாரா? பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தனது ராஜினாமா கடிதத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு (BCB) கையளித்துள்ளார். அவரது ஒப்பந்தக் காலம் 2019ஆம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையிலேயே இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஜுன் மாதம் கிராஹம் போர்ட் ராஜினாமா செய்தது தொடக்கம் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ள நிலையில், ஹதுருசிங்க 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மூன்று வருட காலத்திற்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவிருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் ThePapare.com க்கு தெரியவருகிறது. இலங்கை அண…
-
- 1 reply
- 419 views
-
-
டி20-யில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி சாதனை டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து லாகூர் ஒயிட்ஸ் அணியின் கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி உலக சாதனைப் படைத்துள்ளது. பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ‘நேஷனல் டி20 கோப்பை’ தொடரில் லாகூர் ஒயிட்ஸ் - இஸ்லாமாபாத் அணிகள் ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. லாகூர் ஒயிட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்கள் நிலைத…
-
- 0 replies
- 470 views
-
-
சென்னை திரும்பிய அஸ்வின்: புதிரான ட்வீட்டால் கவலையடைந்துள்ள ரசிகர்கள்! மோசமான நாள். வீட்டுக்குத் திரும்பியுள்ளேன். ஊரிலிருந்து கிளம்பியபிறகு நடந்த சில விஷயங்கள் சரியில்லை. பிரார்த்திக்கிறேன் என்று ட்வீட் செய்தார் கிரிக்கெட் வீரர் அஸ்வின். இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவுள்ள நிலையில் இதுபோன்ற ஒரு ட்வீட்டை அவர் வெளியிட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் கவலையும் குழப்பமும் அடைந்துள்ளார்கள். அஸ்வினின் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இன்று மும்பையிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவிருந்த அஸ்வின், சென்னைக்குத் திரும்பியுள்ளதாகக…
-
- 0 replies
- 283 views
-
-
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக் கும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக் கும் இடையே வருடாந்தம் நடத்தப்படும் "நாயகர்களின் போர்' (ஆச்ttடூஞு ணிஞூ tடஞு ஏஞுணூணிண் ஞுண்)துடுப்பாட்டப் போட்டி ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகி யது. நண்பகல் ஒரு மணிக்கு அணிகள் களம் இறங்கின. பூவா தலையா போட்டு வெற்றி யீட்டிய ஸ்கந்தா அணி மகாஜனா அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. மகாஜனாக் கல்லூரி அணி நேற்றைய தினம் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 145 ஓட்டங்களை மட்டும் பெற்றுக் கொண்டது. மகாஜனாக் கல்லூரியின் சார்பில் பிரக லாதன் 50 ஓட்டங்களையும் மயூரன் 26 ஓட் டங்களையும் ஆகக் கூடிய ஓட்டங்களாகப் பெற்றுக் கொடுத்தனர். ஸ்கந்தவரோதயக் கல்லூரி சார்பில் பந்து வீசிய நிரோஜன் 46 ஒட்டங்களுக்கு 3 …
-
- 0 replies
- 1.5k views
-
-
வீரர்களுக்குள் நிற வேற்றுமை? சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிப் புகைப்படம்! ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களுக்குள் நிற வேற்றுமை நிலவுகிறதா என்ற கேள்விகளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வெற்றிப் புகைப்படம் ஒன்று எழுப்பியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணியானது ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற போதும், டெஸ்ட் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த வெற்றிற்குப் பின்னர் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு தென் ஆப…
-
- 0 replies
- 271 views
-
-
தேசிய கால்பந்து அணிக்கான தேர்வு வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வெவ்வேறாக இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வுகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற நிலையில், இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களுக்கான தேர்வுகள் வெவ்வேறாக இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சர்வதேச அனுபவம் கொண்ட பயிற்றுவிப்பாளருமான பக்கீர் அலி கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், பக்கீர் அல…
-
- 1 reply
- 248 views
-
-
ராணுவ சீருடையில் பத்மபூஷண் விருது பெற்ற மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் மற்றும் வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து உயரிய பத்மபூஷண் விருது பெற்றார். இந்திய அரசால் வழங்கப்படும் மிகப்பெரிய 3-ஆவது நிலை கௌரவமாக பத்மபூஷண் விருது உள்ளது. இதன்மூலம் இந்திய அளவில் பத்மபூஷன் பெறும் 11-ஆவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இந்த விழாவில் ராணுவ சீருடையில் வந்த மகேந்திர சிங் தோனி, ராணுவ அணிவகுப்பில் சென்று குடியரசுத் தலைவரிடம் இருந்து இவ்விருதை பெற்றார். புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகைய…
-
- 1 reply
- 538 views
-
-
பீட்டர்சன் என்ற தலைவலியை குக்கினால் சமாளிக்க முடியாது: பாய்காட் இங்கிலாந்து அணியில் மீண்டும் கெவின் பீட்டர்சன் தேர்வு செய்யப்பட வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளார் ஜெஃப்ரி பாய்காட். ஸ்போர்ட் 24 பேட்டியில் அவர் கூறும் போது, “கெவின் பீட்டர்சன் இங்கிலாந்துக்கு மேட்ச்-வின்னிங் ஆட்டங்களை ஆடக்கூடியவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அவர் சில தலைவலிகளைக் கொடுப்பார். அதனைச் சமாளிக்க தற்போதைய கேப்டன் அலிஸ்டர் குக் லாயக்கற்றவர். முன்னாள் கேப்டன்களில் மைக்கேல் வான் போன்றவர்கள் பீட்டர்சன் போன்ற ஆளுமைகளைத் திறமையாகக் கையாள்வார். ஆனால் குக்கினால் முடியாது. ஆகவே பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்துக்காக ஆடுவது கடினமே” என்றார். இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் தொடரில் இ…
-
- 0 replies
- 509 views
-
-
நடுவர் டேரல் ஹேருக்கு பித்து பிடித்து விட்டது: ஹர்பஜன் காட்டம் ஹர்பஜன், முரளி, சக்லைன் ஆகிய பவுலர்களை பந்து வீச அனுமதித்திருக்கக் கூடாது என்று ஆஸி.முன்னாள் நடுவர் டேரல் ஹேர் கூறியதற்கு ஹர்பஜன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். ஐசிசி.யின் முன்னாள் உயர்மட்ட நடுவர் டேரல் ஹேர், பந்துவீசாமல் த்ரோ செய்பவர்களை 20 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேற்றிருக்க வேண்டும் என்று கூறிய கருத்திற்கு ஹர்பஜன் சிங் காட்டமாக பதில் அளித்துள்ளார். ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் நேர்காணலில் நடுவர் டேரல் ஹேர் கூறியது: 1990-ஆம் ஆண்டுகளின் இறுதியிலேயே நான் கூறினேன், த்ரோ செய்பவர்களை அனுமதித்தால் ஒரு காலத்தில் த்ரோ செய்பவர்களே பவுலர்களாக உருவாகிவிடுவார்கள் என்று எச்சரித்தேன். சக்லைன் முஷ…
-
- 1 reply
- 589 views
-
-
விம்பிள்டனில் ஆதிக்கம் செலுத்திய மூன்று பெண்கள் பகிர்க 2018-ம் ஆண்டுக்கான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கியுள்ளது. விம்பிள்டன், அமெரிக்க ஓபன், பிரஞ்ச் ஓபன், ஆஸ்திரேலியா ஓபன் ஆகிய நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பே மிகவும் பழமையான மற்றும் முக்கியமான டென்னிஸ் தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த காலங்கள் விம்பிள்டன் போட்டியின் பெண்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய மூன்று முக்கிய வீராங்கனைகளை பார்ப்போம். மார்டினா நவ்ராட்டிலோவா படத்தின் காப்புரிமைGETTY IMAGES செக்கோஸ்லோவாக்கியா சேர்ந்த மார்டினா நவதிலொவா 1956-ம் ஆண்டு பிறந்தார். செக்கோஸ்லோவா…
-
- 0 replies
- 357 views
-
-
ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடிப்பது கடினம்: பிரையன் லாரா இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா எடுத்த 264 ரன்கள் என்ற ஒருநாள் கிரிக்கெட் உலக சாதனையை முறியடிப்பது கடினம் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ஹெரால்ட் சன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் லாரா கூறியது: "மான்செஸ்டர் மைதானத்தில் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் எடுத்த 189 ரன்கள் என்ற சாதனையுடன் கிரிக்கெட்டில் வளர்ந்தவர்கள் நாங்கள். அன்று அவர் பந்து வீச்சை எவ்வாறு ஆதிக்கம் செலுத்தினார் என்பது பற்றி நாங்கள் போதிக்கப்பட்டோம். அப்போது இந்த ஸ்கோர்தான் உலக சாதனை. சில ஆண்டுகளுக்கு முறியடிக்க முடியாமல் நிலைபெற்றது. அப்போதெல்லாம் 200 எடுக்க முடியும் என்றே நான் உணர்ந்தேன். ஆன…
-
- 0 replies
- 642 views
-
-
துபாயில் மோதும் இந்தியா, பாகிஸ்தான் - ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு! ஆசியக் கண்டத்தில் இருக்கும் நாடுகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும். கடந்த முறை டி20 போட்டியாக நடைபெற்ற தொடர் இந்த ஆண்டு ஒரு நாள் போட்டி வடிவில் நடைபெற உள்ளது. கடந்த முறை ஆசியக் கோப்பையை தொடர்ந்து நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டு டி20 போட்டிகளாக நடத்தப்பட்டது. மேலும், ஆசியக் கோப்பைத் தொடரை டி20 மற்றும் ஒருநாள் போட்டி வடிவங்களில் தொடர்ந்து நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு நடைபெற உள்ள …
-
- 1 reply
- 436 views
-
-
கப்டன் பொண்டிங் கூறுகிறார் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெல்லும் என்பதை மேற்கிந்தியாவில் நாங்கள் ஆடத் தொடங்கியதும் நீங்களே சொல்வீர்கள் என்று அந்த அணியின் கப்டன் பொண்டிங் செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடைசியாக விளையாடிய 5 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்துள்ளது.இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை அடுத்தடுத்து இழந்தது. இதனால் லேசான தடுமாற்றமடைந்துள்ள அவுஸ்திரேலிய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் உலகக் கிண்ணப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலிய அணி நேற்று முன்தினம் புறப்பட்டது. அப்போது அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கிபொண்டிங்கிடம் அவுஸ்திரேல…
-
- 0 replies
- 914 views
-
-
சாய்ந்தது "தல".... டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு "குட்பை" சொன்னார் டோணி...கோஹ்லி புது கேப்டன்! மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோணி அறிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி இந்தியாவுக்கு தலைமையேற்பார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. காயம் காரணமாக முதல் போட்டியில் டோணி களமிறங்காததால் விராட் கோஹ்லி தலைமையில் இந்தியா களம் கண்டது. ஆனால் போராடி தோற்றது. 2வது மற்றும் இன்று நிறைவடைந்த மூன்றாவது டெஸ்டில் டோணி கேப்டனாக செயல்பட்டார். 2…
-
- 24 replies
- 1.7k views
-
-
லண்டன்: 15 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக வந்த புகாரின் பேரில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான ஆடம் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீரருக்கு வயது 27 ஆகும். இங்கிலாந்து அணிக்காக 12 போட்டிகளில் ஆடியுள்ளார் ஜான்சன். இதுகுறித்து துர்ஹாம் போலீஸார் கூறுகையில், 16 வயதுக்குட்பட்டவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். தற்போது ஆடம் ஜான்சன் மீது 15 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக புகாரும், சந்தேகமும் வந்துள்ளது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுளளார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றனர். இந்த நிலையில் விசாரணை முடியும் வரை ஆடம் ஜான்சன் கால்பந்துப் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சுன…
-
- 0 replies
- 294 views
-
-
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ, தற்போது ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான இவர்தான் உலகிலேயே தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அத்துடன் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் ரொனால்டோ 3வது இடத்தையும் பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 450 கோடிக்கும் அதிகம் ஆகும். ரொனால்டோவுக்கு பல மாடல் அழகிகளுடன் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் ரொனால்டோ, தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். ஆனால் குழந்தைக்கு தாய் யார்?என்பதை ரொனால்டோ இன்று வரை அறிவிக்கவில்லை. ஜுனியர் ரொனால்டோ பிறந்தது முதல் ரொனால்டோவின் தாயார் மற்றும் சகோதரிகள் பராம…
-
- 0 replies
- 335 views
-
-
கொச்சினில் இன்று நடந்த 50 ஓவர்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அவுஸ்திரேலியா 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தங்கள் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. 20-20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் இந்தியா விளையாடி முழுமையடைந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் நிலை பரிதாபகரமாக அமைந்திருந்தது. ஏலவே இரண்டு போட்டிகள் மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்தன. ஸ்கோர் விபரம்.. அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 306 ஓட்டங்கள். இந்தியா 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இந்திய அணியின் சரிவுக்கு இடைநிலைப் பந்துவீச்சாளர்களும்.. துடுப்பாட்டக் காரர்களின் பொறுமையின்மையுமே முக்கிய காரணமாக இருந்தது. ஏலவே இந்தியா…
-
- 7 replies
- 2.4k views
-
-
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை விட அதிக ரன் அடித்த 'எக்ஸ்ட்ரா'! ஆ தொடரில் இன்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி, வரலாறு காணாத அவமானத்தை சந்தித்துள்ளது. அந்த அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 60 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்களில் யாரும் நிலைத்து விளையாடவில்லை. கேப்டன் மைக்கேல் கிளார்க்கில் இருந்து அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவர், கொஞ்சம் நிலைத்து விளையாடினார். ஆனால் அவரும் 13 ரன்களில் அவுட் ஆகி விட்டார். அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்காக உதிரிகளாக 14 ரன்கள் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் அடித்தது எக்ஸ்ட்ராதான். ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே தனிவீரர்…
-
- 4 replies
- 536 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 8 ஆகஸ்ட் 2024, 01:46 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார். ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் நேற்று காலை எடையை அளவிடும் போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்தியக் குழு கூடுதல் …
-
- 1 reply
- 365 views
- 1 follower
-
-
சினிமா நட்சத்திரங்கள் அடங்கிய 6 அணிகள் பங்கேற்றுள்ள செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக்' என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சனிக்கிழமை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த அரைஇறுதியில் தமிழக நடிகர்கள் அடங்கிய சென்னை ரைனோஸ் அணியும், தெலுங்கு வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் ஜெயித்த வாரியர்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி உள்ளூர் ரசிகர்கள், நடிகர் நடிகைகளின் உற்சாகமான ஆதரவுடன் சென்னை ரைனோஸ் பேட்டிங் செய்தது. விஷ்ணு (45 ரன், 25 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜீவா (27 ரன்), விக்ராந்த் (24 ரன்) ஆகியோரின் குறிப்பிடத்தக்க ஆட்டத்தால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. …
-
- 1 reply
- 681 views
-
-
அலெக்சிஸ் சாஞ்செஸ் மாயஜாலம் : ஆர்சனலிடம் மான்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி ( வீடியோ) இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் நேற்று பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை தோற்கடித்தது. லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆர்சனல் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் மெசூத் ஓசில் கொடுத்த பாசை மிக அழகாக வளைக்குள் தள்ளி ஆர்சனல் அணிக்கு முன்னிலை தேடி கொடுத்தார் அலெக்சிஸ் சாஞ்செஸ். அடுத்த நிமிடம் தியாகோ வால்காட் கொடுத்த கிராசை மிக நேர்த்தியாக கோலுக்குள் அடித்தார் ஓசில். ஆட்டம் தொடங்கிய 7 நிமிடங்களுக்குள் ஆர்சனல் அணி 2 கோல்கள் முன்னிலை பெற்றது. பின…
-
- 0 replies
- 391 views
-