Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. புதிய சாதனையுடன் பல்கலைக்கழக பளு தூக்கல் சம்பியனாகிய யாழ் பல்கலை மாணவன் சாமுவேல் துஷாந்த் இந்த ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளு தூக்கல் சுற்றுப் போட்டிகள் கடந்த வாரம் யாழ் பல்கலைக்கழக வணிகப்பீட அரங்கில் இடம்பெற்று நிறைவுற்றது. இப் போட்டிகளில் பங்கேற்றிருந்த யாழ் பல்கலை மாணவன் சாமுவேல் துஷாந்த் புதிய சாதனை ஒன்றினை நிலை நாட்டி சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவரான குணசீலன் சாமுவேல் துஷாந்த், குறித்த பளு தூக்கல் சுற்றுப் போட்டிகளில், 105 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று ஸ்னேட்ச் (Snatch) முறையில் அதிகபட்சமாக 100 கிலோ கிராம் எடையினை தூக்கியதோடு, கிளின…

  2. ஐசிசி தரவரிசை: முதல் இடத்தில் இந்தியா இலங்கை அணியை 5-0 என்று ஒருநாள் தொடரில் தோற்கடித்த இந்திய அணி, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒருநாள் தொடர் ஆரம்பிக்கும் முன்பு 113 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருந்த இந்திய அணி, தொடரின் முடிவில், 117 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியை விடவும் 2 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது. ஒருநாள் தொடரில் தோற்ற இலங்கை அணி, 4ம் இடத்தில் உள்ளது. இப்போது நடந்துவரும் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில், எந்த அணி 4-1 என்று ஜெயிக்கிறதோ அந்த அணி ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் இந்தி…

  3. பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மிக்கி ஆதர் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக 48 வயதான தென்னாபிரிக்காவின் மிக்கி ஆதர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மிக்கி ஆதர் 2005-2010 வரை தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளராகவும் 2011 முதல் 2013 வரை அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராகவும் கடமையாற்றியுள்ளார். பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக டீன் ஜோன்ஸ், பீட்டர் மூர்ஸ், என ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தாலும் பின்னர் ஸ்டுவார்ட் லோ அந்த பதவியில் அமர்த்தப்படப் போகிறார் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இறுதியில் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் அணியின் தலைமை பயி…

  4. 2032ம் ஆண்டுக்கான... "ஒலிம்பிக்" அவுஸ்ரேலியாவின், பிரிஸ்பேன் நகரில் நடைபெறும். 2032ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் பாராலிம்பிக் போட்டிகள் அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1956 இல் மெல்போர்ன் மற்றும் 2000 ஆம் ஆண்டில் சிட்னி என அவுஸ்ரேலியா ஏற்கனவே இரண்டு முறை ஒலிம்பிக் தொடரை நடத்தியுள்ளது. https://athavannews.com/2021/1229901

    • 3 replies
    • 375 views
  5. விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 06 தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வரலாறு படைத்த திஸர பெரேரா தலைமையிலான இலங்கை அணி, வருடத்தின் சிறந்த கால்பந்து வீரருக்கான பெலான் டி ஓர் விருதை 5ஆவது தடவையாகவும் தட்டிச்சென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட கிரிக்கெட், கால்பந்து மற்றும் ரக்பி களம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இந்த வார விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

  6. தலைமுறையில் ஒருமுறைதான் தோனி போன்ற வீரர்கள் கிடைப்பார்கள்: காஸ்பரோவிச் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் காஸ்பரோவிச், இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடர் பற்றி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்திய கேப்டன் தோனி பற்றி கூறுகையில், “தோனி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த வீரர் என்றே நான் கருதுகிறேன். தோனி போன்ற வீரர்கள் எப்போதும் அபாயகரமானவர்கள், இவரைப்போன்றவர்கள் தலைமுறைக்கு ஒரு முறையே உருவாகக் கூடியவர்கள்” என்றார். இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது, அங்கு இந்திய அணியின் வாய்ப்புகளைப் பற்றி அவர் கூறுகையில், “இந்திய அணியின் இப்போதைய வீரர்கள் நிச்சயம் திறமை மிக்கவர்கள். அவர்கள் ஆஸ்திரேலியாவில் ஆதி…

  7. ஆஸி, இலங்கை அணிகளிடம் எளிதாக வென்ற இந்தியா நியூசிலாந்திடம் தடுமாறியதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஒருநாள் போட்டி தொடரை வென்றது. படத்தின் காப்புரிமைREUTERS/DANISH SIDDIQUI விளம்பரம் இத்தொடரை வென்ற இந்தியா தொடர்…

  8. ரொனால்டோ, மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர்: கால்பந்து உலகில் அதிக சம்பளம் யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய கால்பந்து உலகின் தலைசிறந்த 4 வீரர்கள் ஒரே போட்டியில் விளையாடியதைக் கண்ட மகிழ்ச்சியில் அரபு உலகம் திக்குமுக்காடிப் போயுள்ளது. அந்த நான்கு பேரின் ஆட்டத்தைப் போலவே, அவர்கள் வாங்கும் சம்பளம் குறித்த ஒப்பீடும் கால்பந்து ரசிகர்களிடையே சுவாரஸ்யமாகப் பகிரப்படுகிறது. சர்வதேச கால்பந்து அரங்கில் கடந்த 2 தசாப்தங்களாகத் தவிர்க்க இயலாத பெயராக ரொனால்டோ - மெஸ்ஸி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். உலகின் மூலை முடுக்கெல்லாம் இருவரின் பெயர்களும் ரசிகர்களால் உச்சரிக்கப்படுகின…

  9. இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மைதான மாற்றம் By Mohamed Azarudeen - மார்ச் மாதம் இலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கை வீரர்களுடன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மார்ச் 27ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்ததது. எனினும், குறித்த காலப்பகுதியில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் சில திருத்த வேலைகள் இருப்பதால் இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி தற்போது கொழு…

    • 0 replies
    • 375 views
  10. அஷ்வின், ஜடேஜாவிடம் கற்றுக்கொண்ட வங்கதேச பந்துவீச்சாளர்கள்! ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், வங்கதேச அணி பெற்ற முதல் வெற்றி அதுவாகும். மிர்பூரில் நடந்த அந்தப் போட்டியில், வங்கதேச சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியின் 19 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். அதிலும் குறிப்பாக, ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் சாய்த்தார். வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம், சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் சுனில் ஜோஷி என அறியப்படுகிறார். இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் ஜோஷி, …

  11. உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது- 10 பேர் பட்டியலில் எம்பாப்பே, கிரீஸ்மேன் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு உள்ளது. இதில் எம்பாப்பே, கீரிஸ்மேனுக்கு இடம் கிடைத்து உள்ளது. #KylianMbappe #AntoineGriezmann பாரீஸ்: 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்…

  12. ஒலிம்பிக்: களத்தில் மகள்... தவிப்பில் பெற்றோர்! - (வைரல் வீடியோ) “இப்படியெல்லாம் நிஜத்தில் ஜிம்னாஸ்டிக் செய்ய முடியுமா ?“ என நெட்டிசன் ஒருவர், வீடியோ ஒன்றை ஷேர் செய்ய. அந்த வீடியோவை ஒரே நாளில் 1.5 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, “பல ஆண்டுகளின் உழைப்பு இது. மில்லியன் முறை , மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். 14 வயதில் இருந்து இதற்கு பயிற்சி எடுக்கிறேன்” என அந்த ட்விட்டிற்கு ரிப்ளை செய்து இருக்கிறார் அந்த வீடியோவில் அசத்தியிருக்கும் வீராங்கனை. அவர், அலெக்ஸாண்ட்ரா ரைஸ்மான் . யூத - அமெரிக்கரான அலெக்ஸாண்ட்ரா , அமெரிக்காவிற்கு தங்கம் வென்ற மற்றொரு தங்கமகள். அவரது அணி, அவருக்கு சூட்டியிருக்கும் செல்ல…

  13. ஊடகங்களை உதைந்தார் மெஸ்ஸி உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், மோசமான பெறுபேறுகள் காரணமாக விமர்சனங்களைச் சந்தித்திருந்த ஆர்ஜென்டீன அணி, கொலம்பிய அணிக்கெதிரான வெற்றியைப் பெற்றுவிட்டு, ஊடகங்களைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தியது. உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் முதற்போட்டியில் வென்ற ஆர்ஜென்டீன அணி, அதன் பின்னர் இடம்பெற்ற 4 போட்டிகளில், வெற்றியைப் பெறத் தவறியிருந்தது. அதில் இறுதி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது. முன்னதாக, ஜூன் மாதம் இடம்பெற்ற கோப்பா அமெரிக்கத் தொடரின் இறுதிப் போட்டியிலும், ஆர்ஜென்டீன அணி தோல்வியடைந்திருந்தது. இதையடுத்து, ஆர்ஜென்டீன அணி மீது, கடுமையான விம…

  14. `ஒரு மணி நேரத்தில் 2 ஹாட்ரிக்!’ - நியூஸிலாந்து உள்ளூர் தொடரில் சாதனை நியூஸிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், ஒரு மணி நேரத்தில் 2 ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை நிகழ்த்தப்பட்டது. Photo Credit: Black Caps நியூஸிலாந்தில் ப்ளங்கிட் ஷீல்டு கோப்பைக்கான உள்ளூர் தொடர் நடந்துவருகிறது. இதில், வெலிங்டன் ஃபையர் பேர்டு மற்றும் கேன்டர்பெர்ரி அணிகள் மோதிய போட்டி, ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில், வெலிங்டன் அணியின் லோகன் வான் பீக், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உள்ளூர் தொடரில், அவரின் முதல் ஹாட்ரிக் விக்கெட் இதுவாகும். அவர், 5 விக்கெட்டுகளை வீழ்த்த, கேன்டர்பெர்ரி அணி 53 ரன்களில் ஆட்டமிழந்தது…

  15. `முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை!’ - பி.சி.சி.ஐ விளக்கம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை எனப் பி.சி.சி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விளக்கமளித்துள்ளது. முகமது ஷமிமீது மேட்ச் பிக்ஸிங் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரின் மனைவி ஹாசின் ஜஹான் முன்வைத்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்மணி மூலமாக முகமது பாய் என்பவரிடமிருந்து ஷமி பணம் பெற்றதாகவும் ஜஹான் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாகக் கொல்கத்தா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து வீரர்களுக்கான வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில் ஷமியின் பெயரை பி.சி.சி.ஐ…

  16. நியூஸிலாந்துடன் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் ஜான் பேர்ஸ்டோ அபார ஆட்டம்- 5 விக்கெட்களைச் சாய்த்தார் சவுதி பந்தை பவுண்டரிக்கு விரட்டும் நியூஸிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ - படம்: ராய்ட்டர்ஸ். நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்துள்ளது. ஜான் பேர்ஸ்டோ அபாரமாக ஆடி 97 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இங்கிலாந்து அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது…

  17. அதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்! இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவி சாஸ்திரியின் ஆண்டு சம்பளம் பலரையும் வியக்கவைத்துள்ளது. கேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் ட்ராபியுடனேயே கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவதாக இருந்தது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கும், கும்ப்ளேவே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் அதை ஏற்ற கும்ப்ளே, பின்னர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, பயிற்சியாளர் இல்லாமலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரை விளையாடியது இந்தியா. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சே…

  18. 'ஓய்வு நெருங்கியுள்ளதால் இறுதிப் போட்டிகளை அனுபவித்து விளையாடுவேன்" என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் என்னுடைய இறுதிப் போட்டிகள் சிலவற்றை அனுபவித்து விளையாடுவேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீற்றர்சன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ‘பிக் பாஷ்’ இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த 37 வயதான கெவின் பீற்றர்சன், அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப்பின் சர…

  19. ”பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்கு திரும்ப முடியாது” மோர்கன் February 10, 2016 இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் திரும்புவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டதாக அந்த அணியின் தலைவர் மோர்கன் கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான பீட்டர்சன் மீண்டும் அணிக்கு திரும்ப போராடி வருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார். ஆனால் பீட்டர்சனை அணியில் இணைத்துக் கொள்ள முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் பீட்டர்சன் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.…

  20. நன்றி, நன்றி, நன்றி... கிறிஸ்டியானோ ரொனால்டோ உருக்கமான பேச்சு! (வீடியோ) கிறிஸ்டியானோ ரொனால்டோ - கால்பந்து உலகின் காந்த சக்தி. கோல் அடித்தாலும் சரி, மிஸ் செய்தாலும் சரி... அவர் என்ன செய்தாலும் அது வைரல். யூரோ கோப்பை சாம்பியன் ஆனதும், டிரஸ்ஸிங் ரூமில் அவர் எமோஷனலாக பேசிய வீடியோ, கால்பந்து உலகின் தற்போதைய ஹாட் டாபிக். பாரிஸில் நடந்த 2016 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் ஃபைனலில் ஃபிரான்ஸை அதன் சொந்த மண்ணில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல். வெற்றிக்கான கோல் அடித்த போர்ச்சுகல் வீரரை (எடெர்) நாம் மறந்திருப்போம். ஆனால், அன்று ரொனால்டோ செய்த அழிச்சாட்டியங்கள் அவ்வளவு எளிதில்…

  21. குழந்தைப் பருவம் முதல் உலக சாம்பியன் வரை.. - கார்ல்சனைப் பற்றிய ஒரு நிருபரின் அனுபவம் செஸ் விளையாட்டில் மீண்டும் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சரித்திரம் படைத்திருப்பதாகக் கூறுகிறார் ராக்கேஷ் ராவ். கார்ல்சன், பத்து வயது குழந்தை பருவத்தில் களம் இறங்கியது முதல் அவரைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார் ‘தி இந்து’ மற்றும் ‘ஸ்போர்ட்ஸ்டார்’நாளிதழின் மூத்த செய்தியாளரான ராக்கேஷ் ராவ். அவர் தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார். முதன் முதலில் கார்ல்சன் நவம்பர், 2004-ல் செஸ் விளையாட ஸ்பெயின் வந்த போது அவரை அனைவரும் அதிசயமாக பார்த்தனர். கார்ல்சன் ஆடிய ஆட்டத்தைவிட குழந்தை முகம் மாறாத அவரை பார்க்கவே அனைவருமே ஆர்வம் காட்டினர். புகைப்படக்காரர்களும் போட்டி போட்டு…

  22. (எம்.எம்.சில்வெஸ்டர்) ஐந்து தசாப்த கால சர்வதச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒவ்வொரு தசாப்தத்துக்குமான அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களாக ஐவரின் பெயர்களை உலக புகழ்பெற்ற விஸ்டன் சஞ்சிகை பெயரிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மூவரும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் அடங்குகின்றனர். மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ் 1970 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டார். இந்தியாவுக்கு முதன் முதலாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கபில் தேவ் 1980 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெ…

  23. கால்பந்துப் போட்டிகளில் வீடியோ காட்சிகள் மூலம் முடிவுகள் மறுபரிசீலனை கால்பந்து போட்டிகளில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உதவும் வகையில், வீடியோவை ஒப்பிட்டு மறுபரிசீலனை செய்வதற்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது. `இது கால்பந்து வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்' இரண்டு ஆண்டுகளுக்கு சில போட்டிகளில் மாத்திரமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். கோல் போடப்பட்டுள்ளதா, தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமா, விளையாட்டு வீரர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமா போன்றவற்றை நடுவர் தீர்மானிப்பதற்கு, இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இது கால்பந்து வரலாற்றில் மேற்கொள்ளப்பட…

  24. இறுதிச் சுற்றில் இந்திய இதயங்களை வென்ற தீபா கர்மகர்! ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கான இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபா கர்மகர் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று தருவார் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் ஆரம்பத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தார் தீபா. ஒட்டுமொத்த இந்தியாவும் தீபா பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால் இறுதியில் தீபா கர்மகர் நான்காம் இடம் பிடித்தார். உலக ஜிம்னாஸ்டிக்ஸில் டாப் வீராங்கனையான சிமோன் பைல்ஸ்(தங்கம்) களத்தில் இருக்கும்போது நான்காம் இடம் பிடித்தது மிகப்பெரிய விஷயம். ஒட்டு மொத்த தேசமும் இவரது சாதனை பாரட்டியது. இறுதி போட்டியில் அவர் …

  25. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்: குஜராத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.700 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் மோதிரா பகுதியில் இருந்த சர்தார் பட்டேல் ஸ்டேடியம் 54 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. மிக பழமையான இந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி சம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.