விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
ஆண்டர்சன் இருக்கும் ஃபார்மிற்கு விராட் கோலி கஷ்டம்தான்: கிளென் மெக்ரா 2014 தொடரில் விராட் கோலியை வீழ்த்திய ஆண்டர்சன். - படம். | ஏ.எஃப்.பி. 2014-ல் இங்கிலாந்தில் ஆடிய கோலி இப்போது இல்லை என்றாலும் பார்மில் உள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நிச்சயம் விராட் கோலிக்குக் குடைச்சலைக் கொடுப்பார் என்று ஆஸி. கிரேட் கிளென் மெக்ரா அபிப்ராயப்படுகிறார். இது தொடர்பாக கிளென் மெக்ரா கூறும்போது, “கோலி தற்போது கொஞ்சம் அனுபவமிக்க வீரர். தரமான வீரர், இதைப்பற்றி எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இங்கிலாந்து சூழ்நிலைகள் எப்போதும் கடினம். அதுவும் ஜிம்மி ஆண்டர்சன் இருக்கும்போது, நன்றாக வீசும்போது நிச்சயம் இது கடினமான …
-
- 0 replies
- 384 views
-
-
ஓய்வு பெற்றார் இந்திய அணியின் பறக்கும் வீரர் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொத்த 37 வயதாகும் முகம்மது கைப், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 13 டெஸ்ட்கள் மற்றும் 125 ஒரு நாள் போட்டிகள், முதல் தரப் போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்தவர் முகம்மது கைப். 2000 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைவராக இருந்தவர். 2002 ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பையை வெல்வதற்கு மிகப் பெரிய பலமாக இருந்தவர் கைப். அந்தப் போட்டியில் 87 ஓட்டங்களை எடுத்து இந்தியாவுக்கு கோப்பையை வென்றுத் தந்தார். நாட்வ…
-
- 0 replies
- 644 views
-
-
தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்!! தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர். கொழும்பு மகறகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 10-08-2018 மற்றும் 11 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற (வூசோ) குத்துச்சண்டை போட்டிகளில் வவுனியாவைச் சேர்ந்த 15 இளைஞர்க யுவதிகள் பங்குபற்றி 12 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர். வடமாகாண வூசோ அமைப்பினூடாக, வவுனியா கண் போய்ஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் வவுனியா,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் இக் குத்துச்சண்டை போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். …
-
- 0 replies
- 322 views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஐரோப்பிய நாடுகள் பொதுவாக கால்பந்தாட்டம் அல்லது றக்பி விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு காட்டுவதை நாம் கண்ணுற்றுள்ளோம். ஆனால் இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமான பின்னர் ஐரோப்பிய நாடுகளில் கிரிக்கெட் ஆர்வம் அதிகரித்துள்ளதுடன் பல நாடுகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணை உறுப்பு நாடுகளாகவும் அங்கத்துவம் பெற்றுள்ளன. இதனை அடுத்து அந் நாடுகள் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான முன்னோடி தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். ஜேர்சி நாட்டில் இம் மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச இருபது20 கிரிக்கெட் முன்னோடி தகுதிகாண் போ…
-
- 0 replies
- 348 views
-
-
யாழ்ப்பாணம் அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் கு.லங்காபிரதீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் .மா.ஆனந்தகுமார், வலிவடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/story/15/அருணாசலம்-வித்தியாலயத்தின்-விளையாட்டுப்-போட்டி.html
-
- 0 replies
- 753 views
-
-
பாகிஸ்தான் 308 ரன்கள் எடுத்து வங்கதேசத்தை 1 ரன் கூட எடுக்கவிடாமல் ஆல்- அவுட் செய்ய வேண்டும். 350 ரன்கள் எடுத்தால் 311 ரன்களிலும் 400 ரன்கள் எடுத்தால் 316 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற வேண்டும்.... உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்று விட்டன. நான்காவது அணிக்கான போட்டியில் நியூசிலாந்து அணி முன்னணியில் உள்ளது. 9 ஆட்டங்களில் 11 புள்ளிகளை நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. இந்த அணியின் நெட் ரன் ரேட் +0.175 ஆக உள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் 8 ஆட்டங்களில் விளையாடி 9 புள்ளிகளை ஈட்டியுள்ளது. நெட் ரன் ரேட் -0.792 என உள்ளது. இதனால், பாகிஸ்தான் அணியின் அரையிறுதிக் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது…
-
- 0 replies
- 704 views
-
-
தற்போதைக்கு ஓய்வுபெறப் போவதில்லை முரளிதரனே எனக்கு முன்னுதாரணம் [03 - January - 2008] [Font Size - A - A - A] *கில்கிறிஸ்ட் கூறுகிறார் `பொக்சிங் தின டெஸ்ட் போட்டிதான் (மெல்போர்ன் டெஸ்ட்) எனது கடைசி டெஸ்ட்டாக இருக்கும்..."இப்படி ஒரு வருடத்திற்கு முன் கூறியவர் `கில்லி' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கில்கிறிஸ்ட். இன்றோ தலைகீழ் மாற்றம். `ஓய்வைப் பற்றி இப்போது நினைக்கவே இல்லை'என்கிறார் அவர். 36 வயதாகும் கில்கிறிஸ்ட்,உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரராகக் கருதப்படுபவர். அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தின் அதிரடி மையமாக இருப்பவர். ஆனால், `உங்களுக்கு வயதாகிறதே... எப்போது ஓய்வு பெறப்போகிறீர்கள்?' என்ற கேள்வி `கில்லி'யை தொட…
-
- 0 replies
- 1.3k views
-
-
சென்னை இல்லாத ஐ.பி.எல். தொடரா... சான்சே கிடையாது! வரும் ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தானை மையமாக கொண்டே இரு அணிகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நடந்த பி.சி.சி.ஐ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்கள் அடுத்து உருவாகவுள்ள புதிய ஐ.பி.எல். அணியில் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்ற வீரர்களை ஏலத்தில் விட்டு எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நவம்பர் 9ஆம் தேதி மும்பையில் நடைபெறும் பி.சி.சி.ஐ செயற்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். டிசம்பர் மாத இறுதிக்குள் புதிய இரு அணிகள் உருவாக்கப்பட்ட…
-
- 0 replies
- 255 views
-
-
சையத் கிர்மானிக்கு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது சையத் கிர்மானி. | 1991-ம் ஆண்டு இந்து ஆர்கைவ்ஸ் படம். 2015-ம் ஆண்டுக்கான சிகே.நாயுடு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சையத் கிர்மானி ரூ.25 லட்சம் பெறுவார். 88 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள சையத் கிர்மானி 198 விக்கெட்டுகளுக்குக் காரணமாகியுள்ளார். இதில் 160 கேட்ச்கள் 38 ஸ்டம்பிங்குகள். உலக கிரிக்கெட்டின் பெரிய பேட்ஸ்மென்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த பிரசன்னா, பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன் ஆகிய 4 ஸ்பின்னர்கள் கோலோச்சிய காலத்தில் சையத் கிர்மானி அபா…
-
- 0 replies
- 395 views
-
-
பாகிஸ்தான் ரசிகருக்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி! இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, பாகிஸ்தானை சேர்ந்த தன்னுடைய தீவிர ரசிகரான பசீருக்கு போட்டிக்கான டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 62 வயதான முகமது பசீர் தீவிர கிரிக்கெட் ரசிகர். பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது ஆதரவை தோனிக்கும் இந்திய அணிக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதியப் போட்டியை பார்க்க பசீருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனையறிந்த தோனி அவருக்கு உதவியுள்ளார். இந்தநிலையில் 2015ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காகவும், தோனிக்காகவும் ஆதரவு அளித்து வந்தார். அவர…
-
- 0 replies
- 392 views
-
-
கம்ப்யூட்டர் வந்ததுக்கு அப்புறம் செஸ் விளையாட்டு மாறிப் போச்சு - விஸ்வநாதன் ஆனந்த் . சென்னை : தமிழகத்தை சேர்ந்தவரும், ஐந்து முறை செஸ் சாம்பியன் பட்டம் வென்றவருமான செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கணினி வந்த பின் செஸ் விளையாட்டு மாறியதை பற்றி பேசி உள்ளார். சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் செஸ் விளையாட்டைப் பற்றி பகிர்ந்து கொண்டார். செஸ் விளையாட்டின் அணுகுமுறை, அதனால் ஏற்படும் அழுத்தம், தான் ஓய்வு பெறலாம் என நினைத்த போது தான் பெற்ற முக்கிய வெற்றி என பல விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். என் அண்ணன், அக்கா செஸ் ஆடும் போது எனக்கு ஆறு வயது. அப்போது நான் என் அம்மாவிடம் எனக்கும் செஸ் கற்றுத் தருமாறு கேட்டேன். திடீ…
-
- 0 replies
- 544 views
-
-
இன்றுடன் நிறைவடைகிறது உலக மெய்வல்லுநர் போட்டி இன்றுடன் நிறைவடையும் உலக மெய்வல்லுநர் போட்டியில் உலகின் அதிவேக மனிதனான ஜமைக்காவின் உசெய்ன் போல்ட் சர்வதேச தடகள அரங்கில் தனது கடைசிப் போட்டியில் பங்கேற்றார். ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியே அவர் பங்குபற்றிய கடைசிப் போட்டி நிகழ்வாகும். இப்போட்டி இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு 2.20 மணிக்கு இடம்பெற்றது. போல்டின் பிரியாவிடைப் போட்டியைக்கான பெருமளவான ரசிகர்கள் வந்திருந்தனர் இதேவேளை பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டி நேற்று நள்ளிரவு 2 மணிக்கு இடம்பெறவிருந்தது. இப்பத்திரிகை அச்சுக்கு செல்கையில் இப்போட்டிகள் ஆரம்…
-
- 0 replies
- 557 views
-
-
2018 இளையோர் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2 வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெறும் போட்டிகள் குறித்த விபரங்கள் தற்பொழுது உத்யோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை இடம்பெறும் 12ஆவது இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது. அந்நாட்டின் க்ரைஸ்சேர்ச், குயிண்ஸ்டவுண், தவுரங்கா, சங்கரேய் உள்ளிட்ட 4 முக்கிய மைதானங்களில் இப்போட்டிகள் அனைத்தும் நடைபெறவுள்ளன. இப்போட்டித் தொடரின் நடப்புச் சம்பியனான மேற்கிந்தி…
-
- 0 replies
- 496 views
-
-
சங்காவின் அதிரடியோடு கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி Image Courtesy - Getty Image விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வரும், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ‘கரீபியன் பிரிமியர் லீக்’ T-20 தொடரில் பிளே ஒப் சுற்றிற்கு, குமார் சங்கக்கார தலைமையிலான ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி, சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியினை வீழ்த்தியதன் 41 ஓட்டங்களால் வீழ்த்தியதன் மூலம் தெரிவாகியுள்ளது. இம்மாதம் (ஒகஸ்ட்) 4 ஆம் திகதி முதல் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் சேர்ந்த அணிகளின் பங்குபெற்றதலுடன் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் T-20 தொடரின், குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறை…
-
- 0 replies
- 404 views
-
-
சவூதி செஸ் போட்டியில் பங்குபற்ற மறுக்கும் அனா அனா முஸிசுக் , உலக சம்பியன் பட்டங்களை இழக்கிறார் : பெண்கள் இரண்டாந்தர உயிரினங்கள் போன்று நடத்தப்படுவதாக கூறுகிறார் பெண்களை இரண்டாந்தர உயிரினங்கள் போன்று சவூதி அரேபியா கருதுவதால் அங்கு நடைபெறவுள்ள செஸ் உலக சம்பியன் போட்டிகளில் பங்குபற்றப்போவதில்லை என இரண்டு தடவைகள் உலக செஸ் சம்பியனான யூக்ரெய்ன் வீராங்கனை அனா முஸிசுக் தெரிவித்துள்ளார். ‘எனது கொள்கைகளை நான் கடைப்பிடிக்கவுள்ளேன்” எனத் தெரிவித்த அவர், சவூதியில் பெண்கள் உரிமை மற்றும் பால் சமத்துவம் பேணப்படாததால் இரட்டை உலக சம்பியன் பட்டங்களைத் தக்கவைக்கப்போவதில்லை என்றார். வீதிகளில் தனியாகக்க…
-
- 0 replies
- 322 views
-
-
கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014 காலத்திற்கு காலம் புதிய வீரர்கள் பலரை கிரிக்கெட் பார்த்திருந்தாலும் இதுவரை காலமான டெஸ்ட் போட்டிகளின் முதுகெலும்புகள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தான். பொதுவாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற சகல அணிகளையும் எடுத்து பார்க்கும் போது வீரர்கள் பலர் காணப்பட்டாலும் ஜாம்பவான்கள் என்று வர்ணிக்கக்கூடிய ஒரு சில வீரர்களே அணியின் வெற்றியில் பெரிதும் தாக்கம் செலுத்தியிருப்பார்கள். இலங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரையில் முரளிதரன், சமரவீர, சங்கக்கார, ஜெயவர்த்தன என்று அந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களை எழுமாறாக நிரப்பலாம். மேலே குறிப்பிடப்பட்ட வீரர்களில் இம்முறை பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டிகளின் பிறகு தனது ஓய்வை அறிவித்திருந…
-
- 0 replies
- 498 views
-
-
புதிரா? சவாலா? ஏ.பி.டிவில்லியர்ஸைக் கண்டு அலறும் ஆஸி. ஊடகங்கள் 2வது டெஸ்ட்டில் ஆஸி. பவுலர் கமின்சை விளாசும் டிவில்லியர்ஸ். - படம். | ராய்ட்டர்ஸ். ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்புத் தொடரில் பவுலர்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்து வருகிறார், மேலும் ஏபிடிவில்லியர்ஸுக்கு என்று ஒரு செல்வாக்கும் உள்ளது, அவரது சிறந்த இன்னிங்ஸ்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏபி.டிவில்லியர்ஸை மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா எப்படி அடக்கி ஆளும் என்ற கவலை ஆஸ்திரேலிய கேப்டனை விட ஆஸி.ஊடகங்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது. ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்.காம்.ஏயு என்ற ஆஸ்திர…
-
- 0 replies
- 219 views
-
-
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா By DIGITAL DESK 3 17 NOV, 2022 | 04:56 PM இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று இப்போட்டி நடைபெற்றது. அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இருபது20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி சம்பியனாகியது. அத் தொடரின் பின்னர் பட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும்; 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடி வருகின்றன. இன்று நடைபெற்ற…
-
- 0 replies
- 548 views
- 1 follower
-
-
டெஸ்ட்டில் வெற்றி கேப்டன் யார்? ரிக்கி பாண்டிங்கா? கிரேம் ஸ்மித்தா? ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித், ராபின் பீட்டர்சன், ஹஷிம் ஆம்லா. - படம். | ராய்ட்டர்ஸ். டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை அதிகம் குவித்த கேப்டன்கள் யார் என்பது கிரிக்கெட்டில் ஒரு சுவாரசியமான கேள்வி. கிரிக்கெட் ஆட்டத்தில் மிகச்சிறந்த கேப்டன்கள் இருந்துள்ளனர், இவர்களில் பலரை வெற்றிகளை வைத்து தீர்மானிக்க முடியாது. ஆனால் கிரிக்கெட் ஆகட்டும் எந்த ஒரு விளையாட்டாகட்டும் வெற்றிதானே பேசும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன் யார் என்று பார்த்தோமானால், புள்ளிவிவரங்கள் கூறுவது என்னவென்பதைப் பார்ப்போம்: தென் ஆப்பிரிக்காவின் கி…
-
- 0 replies
- 335 views
-
-
“தாதா” கங்குலிக்கு இன்று பிறந்தநாள்: தன்னுடைய ஸ்டைலில் வாழ்த்துக்கூறிய சேவாக் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று 46-வது பிறந்தநாளாகும். அவருக்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணி, டிராவிட் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி என்பது மறுப்பதற்கில்லை. கடந்த 1990களில் இந்திய அணிக்கு அறிமுகமாகினார் சவுரவ் கங்குலி. தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். …
-
- 0 replies
- 447 views
-
-
என் முதல் டெஸ்ட் சதத்தின் இனிய நினைவுகளை அழிக்கும் முயற்சி: ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டை மறுக்கும் கிளென் மேக்ஸ்வெல் வேதனை கிளென் மேக்ஸ்வெல். | ஏ.எப்.பி. 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளை ஆடிய போது ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’கில் ஆஸி.வீரர்கள் ஈடுபட்டதாக அல்ஜசீரா புலனாய்வு ஆவண வீடியோ வெளியிட்டது. தற்போது கிளென் மேக்ஸ்வெலையும் இதில் இழுத்து விட்டது குறித்து அவர் கடுமையாக வருத்தமடைந்துள்ளதோடு குற்றச்சாட்டுகளை மேக்ஸ்வெல் தீவிரமாக மறுக்கவும் செய்துள்ளார். மேக்ஸ்வெல் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் ஸ்பாட் பிக்சிங் நடைபெற்றதாக கூறப்படும் தருணம், காட்டப்பட…
-
- 0 replies
- 341 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுக்கு உட்பட்ட பெண்களிற்கான வலைப்பந்தாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது. இதன் இறுதியாட்டம் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணியை எதிர்த்து வட இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி 28:13 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது. …
-
- 0 replies
- 634 views
-
-
பிஃபா தேர்தல்: ஸிகோவுக்கு பிரேசில் ஆதரவு ஸிகோ சர்வதேச கால்பந்து சம்மேளன (பிஃபா) தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடுவதற்கு பிரேசிலைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான ஸிகோவுக்கு அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. 62 வயதான ஸிகோவுக்கு இதற்கு முன்னர் பிரேசில் கால்பந்து சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு பெரிய அளவில் இருந்ததில்லை. ஆனால் இப்போது முழுமையான ஆதரவு கிடைத்திருப்பது ஸிகோவுக்கு பெரிய உத்வேகம் கொடுப்பதாக அமைந்துள்ளது. பிரேசில் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மேலும் 4 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து சங்கங்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே பிஃபா தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஸிகோ களமிறங்க …
-
- 0 replies
- 234 views
-
-
சாது மிரண்டால் காடு தாங்காது... எதிரணி வீரரின் கழுத்தை பிடித்து நெறிக்கும் மெஸ்சி! கால்பந்து களத்தில் பார்சிலோனா அணியின் துணை கேப்டன் லயனல் மெஸ்சி அமைதி போக்கையை கடைபிடிப்பவர். பெரும்பாலும் அவரது முகத்தில் கோபத்தை பார்க்க முடியாது. எதிரணி வீரர்கள் முன்கள வீரரான இவரிடம்தான் தங்களது முரட்டு ஆட்டத்தை காட்டுவார்கள். தடுப்பாட்ட வீரர்களுக்கு தண்ணி காட்டுவதில் மெஸ்சி சளைக்காதவர் என்றாலும் சில நேரங்களில் மெஸ்சிக்கே கோபத்தை வரவழைக்கும் வகையில் எதிரணி வீரர்களின் ஆட்டம் அமைந்து விடுகிறது. தற்போது பிரிசீசன் நட்புரீதியிலான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று பார்சிலோனா அணியுடன் ஏ.எஸ். ரோமா அணி மோதியது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆட்டத…
-
- 0 replies
- 584 views
-
-
ஆறுதல் வெற்றியுடன் உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் அணி! உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 42ஆவது போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நேற்று லீட்ஸ்- ஹெடிங்லீ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதிக்கொண்டன. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 5.3ஆவது ஓவரின் போது தனது முதல் விக்கெட்டை இழந்தது. அணி 21 ஓட்டங்களை பெற்றிருந்த போது, அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற…
-
- 0 replies
- 531 views
-