Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பார்ஸிலோனா ரசிகர்களால் சூழப்பட்ட சுவாரெஸ் 2014-07-21 18:45:33 உருகுவேயின் சர்ச்சைக்குரிய கால்பந்தாட்ட நட்சத்திரமான லூயிஸ் சுவாரெஸும் அவரின் மனைவியும் ஸ்பெய்னின் பார்ஸிலோனா நகரில் ரசிகர்களால் சுற்றிவளைக்கப்பட்டதால் சங்கடத்துக்குள்ளாகினர். இங்கிலாந்தின் லிவர்பூல் கழகத்துக்காக விளையாடி வந்த சுவாரெஸ் தற்போது பார்ஸிலோனா கழகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் பார்ஸிலோனா நகருக்கு தனது மனைவி சோபியாவுடன் சென்ற லூயிஸ் சுவரெஸ் சென்றபோது ரசிகர்கள் பலரால் சுற்றிவளைக்கப்பட்டார். அங்கிருந்து நழுவிச்செல்வதற்கு சுவாரெஸும் அவரின் மனைவியும் பெரும்பாடு பட்டனர். பார்ஸிலோ அணி வீரரான ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லயனல் மெஸ்ஸியின் பெயர் பொறித்த அங்கியொன்றை அணிந்திருந்த ரசிகருக்கு சுவாரெஸ் 'ஆட்…

  2. பார்ஸிலோனாவுக்காக 500-வது கோலை அடித்தார் மெஸ்ஸி! ரியல் மாட்ரிடுக்கு எதிரான லா-லிகா போட்டியில், இரண்டாவது கோலை அடித்தபோது, பார்ஸிலோனோ அணிக்காக 500-வது கோலை அடித்து சாதனை படைத்தார், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி. இரண்டாவது கோலை மெஸ்ஸி எக்ஸ்ட்ரா டைமில் அடித்துள்ளார். இதனால் பார்ஸிலோனா, மாட்ரிட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், மெஸ்ஸி ஆக்ரோஷமாக விளையாடியபோது, சக வீரர் ஒருவரால் தற்செயலாகத் தாக்கப்பட்டார். இதனால், அவரது வாயில் ரத்தம் வடிந்தது. இருப்பினும், காயத்தைப் பொருட்படுத்தாமல் மெஸ்ஸி தொடர்ச்சியாக விளையாடி, கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். மெஸ்ஸி, பார்சிலோனாவுக்காக 500-வது கோல் அ…

  3. 02 JUL, 2024 | 11:46 AM ஆர்.சேதுராமன் ஆணாகப் பிறந்து ஆண்களுக்கான நீச்சல் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர், பாலினமாற்றம் செய்து பெண்ணாக மாறிய லியா தோமஸ், பெண்களுக்கான நீச்சல் போட்டிகளில் தான் பங்குபற்றுவதை தடுக்கும் வகையிலான விதிகளுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவை, சர்வதேச விளையாட்டுத்துறை நீதிமன்றமான விளையாட்டுப் பிணக்குத் தீர்ப்பாயம் (CAS) நிராகரித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயதான லியா தோமஸ் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் ஆண்களுக்கான நீச்சல் போட்டிகளில் பங்குபற்றியவர். அப்போது அவரின் பெயர் வில்லியம் தோமஸ். 6 அடி 1 அங்குல உயரமான வில்லியம் தோமஸ், நீச்சல் போட்டிகளில் பல…

  4. பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் ஜொன்சன் February 11, 2016 இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அடம் ஜொன்சன் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அடம் ஜொன்சன் மீது மூன்று பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பிலான வழக்கு விசாரணைகள் பிரெட்போர்ட் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த வழக்கு மீதான விசாரணைகளின் போது 15 வயது சிறுமி ஒருவருடன் தான் பாலியல்; ரீதியான உறவினை பேணி வந்ததாக தெரிவித்துள்ளார். எனினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஏனைய இரண்டு பாலியல் குற்றச்சாட்டுக்களையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. …

    • 1 reply
    • 542 views
  5. இந்திய கிரிக்கெட் அணி நேற்றைய முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் புற்றுநோயிலிருந்து மீண்டு சில மாதங்களுக்கு முன்பு அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் சகலதுறை வீராக அசத்தினார். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய அணியின் யுவராஜ் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை யுவராஜ் சிங், இந்திய தலைநகர் புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவிக்கு அர்ப்பணித்தார். இது குறித்து மனிதநேயமிக்க யுவராஜ் கூறுகையில், டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட செய்தியை படித்த போது மனதிற்கு வேதனையாக இருந்தது. ஆட்ட நாயகன் விருதை அவருக்கும், அவரது பெ…

  6. பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண…

  7. பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஒத்திவைப்பு By Mohamed Shibly கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணப் போட்டிக்கான, அடுத்துவரும் ஆசிய மண்டல தகுதிகாண் போட்டிகளை ஒத்திவைப்பதற்கு பிஃபா மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) இணங்கியுள்ளன. ஆசியாவின் உறுப்பு நாடுகளின் ஆலோசனையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2020 மார்ச் 23-31 மற்றும் 2020 ஜூன் 1-9 காலப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச போட்டி அட்டவணைகள் பின்னர் ஒரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்படும்…

    • 0 replies
    • 384 views
  8. பிஃபா உலகக் கோப்பை வசப்படுமா? 11 ஜோடி கால்களை உருவாக்குமா ஐ.எஸ்.எல்.? இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இரண்டாம் சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது. பரபரப்பான ஃபைனலில், கோவாவை வீழ்த்தி மகுடம் சூடியிருக்கிறது சென்னையின் எஃப்.சி அணி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, ஐ.பி.எல்-லில் இருந்து நீக்கப்பட்ட சோகத்தை மறைத்துள்ளது இந்த வெற்றி. கால்பந்து இந்தியாவில் பிரபலமடைவது சாத்தியமில்லை என பலரும் ஆருடம் சொல்ல, உலகின் ஐந்தாவது புகழ்பெற்ற கால்பந்து தொடர் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது ஐ.எஸ்.எல். சென்ற ஆண்டை விட இவ்வருடம் வரவேற்பு அதிகம், எதிர்பார்ப்பும் அதிகம், ரசிகர்களின் ஆதரவும் அதிகம். இத்தொடரைப் பற்றிய கண்ணோட்டம் இங்கே… கேப்…

  9. பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய பிரேசில் பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய பிரேசில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) புதிய தரவரிசை பட்டியலில் உலகக் கிண்ண நடப்புச் சம்பியன் ஜெர்மனியை பின்தள்ளி பிரேஸில் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பிஃபா, வியாழக்கிழமை (10) புதுப்பித்த தரவரிசையில் ஜெர்மனி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு இரண்டாவது இடத்திற்கு வந்ததோடு, பிரேஸில் ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலாவது இடத்தைப் பிடித்தது. ஜெர்மனி அணி 2014 ஆம் ஆண்டுக்கு பின் கடந்த ஆண்டிலேயே முதலிடத்திற்கு முன்னேறிய…

  10. பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது ஜெர்மனி சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) கூட்டுறவு கிண்ணத்தை (Fifa confederations cup) வென்ற உலகக் கிண்ண நடப்புச் சம்பியன் ஜெர்மனி, பிஃபா வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் 2014ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கூட்டுறவு கிண்ண தொடருக்கு முன்னர் ஜெர்மனி அணி தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிலி அணியை வீழ்த்தி முதல் முறை கூட்டுறவுக் கிண்ணத்தை வென்ற ஜெர்மனி, தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்திற்கு வந்தது. இதனால் பிரேஸில் மற்றும் ஆர்ஜன்டீன அணிகள் முறையே 2 …

  11. பிஃபா தேர்தல்: ஸிகோவுக்கு பிரேசில் ஆதரவு ஸிகோ சர்வதேச கால்பந்து சம்மேளன (பிஃபா) தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடுவதற்கு பிரேசிலைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான ஸிகோவுக்கு அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. 62 வயதான ஸிகோவுக்கு இதற்கு முன்னர் பிரேசில் கால்பந்து சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு பெரிய அளவில் இருந்ததில்லை. ஆனால் இப்போது முழுமையான ஆதரவு கிடைத்திருப்பது ஸிகோவுக்கு பெரிய உத்வேகம் கொடுப்பதாக அமைந்துள்ளது. பிரேசில் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மேலும் 4 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து சங்கங்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே பிஃபா தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஸிகோ களமிறங்க …

  12. பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருது: ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார் ரொனால்டோ போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருதை ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். ரியல் மாட்ரிட் அணி இந்த வருடம் லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கோப்பை, ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது. இதற்கு ரொனால்டோவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வருடத்திற்கான பிஃபாவின் சிறந்த வீரரருக்கான வி்ருது நேற்று அறிவிக்…

  13. பிக் பாஷ் டி20 லீக்: இரண்டாக உடைந்த மெக்கல்லத்தின் பேட் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லத்தின் பேட் இரண்டாக உடைந்தது. ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் குவித்தது. அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணியின் பியர்சன், பிர…

  14. பிக் பாஷ் போட்டியில் புத்திசாலித்தனமாக நேசர் எடுத்த பிடி விதிக்குட்பட்டது By DIGITAL DESK 2 03 JAN, 2023 | 05:50 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற ப்றிஸ்பேன் ஹீட் அணிக்கும் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கும் இடையிலான பிக் பாஷ் கிரிக்கெட் போட்டியில் மிக முக்கிய தீர்மானம் மிக்க வேளையில் மைக்கல் நேசர் மிகவும் புத்திசாலித்தனமாக எடுத்த அற்புதமான பிடி இன்று கிரிக்கெட் உலகில் பேச்சுப் பொருளாகிவிட்டது. ஆடுகளத்திற்கு உள்ளே பவுண்டறி எல்லையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மைக்கல் நேசர், வேகமாக ஓடியவாறு பிடியை எடுத்தார். ஆனால், அவரால் சமநிலை பேணமுடியாமல் போனதால் பந்தை மேலே எறிந்துவிட்டு பவு…

  15. பிக் பாஷ் போட்டியில் ரசிகர்களால் புதிய சாதனை January 04, 2016 அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பிக் பாஷ் போட்டியை 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்து சாதனை படைத்தனர். அவுஸ்திரேலியாவில் சிட்னி, பெர்த், மெல்போர்ன் போன்ற உலக பிரபலம் வாய்ந்த கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. எனினும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் தொடங்கும் ‘பாக்சிங் டே’ கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் மெல்போர்னில்தான் நடத்தப்படும். இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம் என்பதே இதற்கு காரணம். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மெல்ப…

  16. பிக் பாஷ் லீக்: சிட்னி தண்டரை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ். இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 2016-17-க்கான தொடர் நேற்று முன்தினம் (20-ந்தேதி) தொடங்கியது. இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மெல்போர்ன் மைதனாத்தில் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங…

  17. பிக்ஸ் செய்ய கெய்ன்ஸ் பணித்தார்: வின்சென்ட் தனது அணித்தலைவராக இருந்த கிறிஸ் கெய்ன்ஸின் நேரடி உத்தரவின் கீழேயே, போட்டிகளை நிர்ணயம் செய்ததாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் லூ வின்சென்ட் வாக்குமூலமளித்துள்ளார். இலண்டனில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின் போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலத்தின் போது கிறிஸ் கெய்ன்ஸ் சேர்க்கப்படாமைக்கு, இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) தொடரில் போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டமையே காரணமென, அப்போதைய ஐ.பி.எல் பணிப்பாளரான லலித் மோடி பதிவிட்ட டுவீட், தனது நற்பெயரைப் பாதித்துள்ளதாகத் தெரிவித்து, கிறிஸ் கெய்ன்ஸ் 2012ஆம் ஆண்டில் வழக்குத் தாக்கல் செய்து, நட்டஈடு பெற்றிருந்தார். எனினும், கிறிஸ்…

  18. Started by akootha,

    [size=4]ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியரான பிங்கி பிரமாணிக் உண்மையில் ஓர் ஆண் என்பது மருத்துவ மற்றும் பாலின பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பிங்கி மீது பாலியஸ் துஷ்பிரயோகம் மற்றும் மோசடி குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிங்கி, கடந்த 2006ஆம் ஆண்டு டோகா நகரில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். தடகளத்தில் பல்வேறு முத்திரை பதித்த பிங்கி மீது 2012ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பிங்கி பெண் அல்ல ஆண் என்றும் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்ததாகவும் பணத்தை மோசடி செய்ததாகவும…

  19. பிசிசிஐ ஆலோசனை குழுவில் சச்சின், சவுரவ் கங்குலி, லஷ்மண் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லஷ்மண் ஆகிய முன்னாள் வீர்ர்கள் சேர்க்கப்பட்டனர். கிரிக்கெட் தொடர்பான அனைத்து முடிவு எடுக்கும் தீர்மானங்களிலும் இனி இந்த மூவர் கூட்டணியின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் இருக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா, செயலர் அனுராக் தாக்கூர் ஆகியோர் கிரிக்கெட் குறித்த மிக முக்கியமான முடிவுகள் அனைத்திலும் இவர்களை ஆலோசித்தே முடிவு எடுப்பார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%…

  20. பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்பு: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் கலந்து கொண்டது பற்றி உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சீனிவாசன் இதனைச் செய்திருக்கக் கூடாது. அவரது நடவடிக்கைகளில் முரண்பட்ட லாப நோக்குடைய இரட்டை நலன் இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இப்படியிருக்கையில் அவர் பிசிசிஐ கூட்டத்தில் கலந்து கொள்வது எங்ஙணம்? சீனிவாசனின் இந்த நடவடிக்கை பற்றிய நிலைப்பாட்டை வழக்கறிஞர் கபில் சிபல் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனவரி 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சீனிவாசனுக்கு இரட்டை லாப நோக்க முர…

  21. பிசிசிஐ தடையையும் மீறி சிட்னியில் கோஹ்லியுடன் சுற்றும் நடிகை அனுஷ்கா சிட்னி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் சிட்னியில் உள்ள டார்லிங் ஹார்பருக்கு சென்று வந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்ற பிறகு தான் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில விதிமுறைகளை விதித்துள்ளது. காதலிகளுக்கு தடை கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் ஆஸ்திரேலியா செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்…

  22. பிசிசிஐ தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு சஷாங்க் மனோகர் | படம்: ஏபி பிசிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சஷாங்க் மனோகர் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிசிசிஐ தலைவராக அவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும். மும்பையில் இன்று நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரை மணிநேரத்துக்கும் குறைவாக நடந்த இந்த சிறப்பு பொதுக்குழுவில் சஷாங்க் மனோகர், பிசிசிஐ தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டால்மியாவின் மகன் அவிஷேக், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி, திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் சவுரவ் தாஸ் குப்தா, அசாம் கிரிக்கெட் சங்கத்தின் கவுதம் ராய், ஒட…

  23. பிசிசிஐ தேர்தலில் போட்டியிட சீனிவாசன் முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கைகழுவுகிறார் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட என்.சீனிவாசன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மத்திய நிதியமைச்சரும், டெல்லி மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் ஜேட்லியை சீனிவாசன் சந்தித்துப் பேசி ஆதரவு கேட்டுள்ளார். பிசிசிஐ பதவியில், ஐபிஎல் அணி உரிமையாளராக இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து நீதிமன்றத்தால் தற்காலி கமாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள சீனிவாசன் இப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக உள்ளார். த…

  24. பிசிசிஐ பாராட்டு விழாவில் தோனி பெயரை மறந்த சேவாக் டெல்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சேவாக்கிற்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர். அருகில் ஷேவாக்கின் தாய், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பிசிசிஐ சார்பில் சேவாக்கிற்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பேசிய சேவாக் தனது கேப்டன்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதேவேளையில் தோனியின் பெயரை அவர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து கடந்த அக்டோபர் 20ம் தேதி சேவாக் ஓய்வு பெற்றார். இந்நிலையில் டெல்லியில் நேற்று தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக…

  25. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பிசிசிஐ-யின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்வு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரான சீனிவாசன், தலைவர் பதவிக்கு பிரிஜேஷ் படேல் பெயரை முன்மொழிந்த போதிலும், அவருக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. தலைராக கங்குலியை, தேர்வு செய்ய பெரும்பான…

    • 0 replies
    • 389 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.