Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது உண்மையான பெயர் சண்முகநாதன் சாருஜன். ஆனால் எல்லோரும் அவரை " Little Sanga" என்றுதான் அழைக்கிறார்கள். காரணத்தை நீங்களும் பாருங்கள் !

    • 6 replies
    • 556 views
  2. விராட் கோலி தலைமையில் இந்தியா உலகக் கோப்பை வெல்லும்: சவுரவ் கங்குலி நம்பிக்கை விராட் கோலி ரன்கள் குவிக்கும் வரையில் அவரது சொந்த நடத்தையைப் பற்றி பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் டால்மியா, விராட் கோலியின் நடத்தை நெருக்கமாக கண்காணிக்கப்படும் என்றும், மீறல் தொடர்ந்தால் வாரியம் தலையிடும் என்ற ரீதியில் தெரிவித்திருந்தது பற்றி சவுரவ் கங்குலியிடம் கேட்ட போது, “விராட் கோலி பற்றி அவர் என்ன கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் விராட் ஒரு அபாரமான கிரிக்கெட் வீரர். நான் அப்படித்தான் பார்க்கிறேன். அவர் இளம் வீரர். 26 வயதுதான் …

  3. இலங்கை அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளராக மைக்கல் மெயின் இலங்கை கிரிக்கெட் அணிக்கு உடற்­ப­யிற்சி வழங்கும் பயிற்­று­விப்­பா­ள­ராக இங்­கி­லாந்தைச் சேர்ந்த மைக்கல் மெயின் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்­றுத்­தொடர் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்னர், தனது கட­மை­களை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹம்ப்ஷியர் கிரிக்கெட் அணியின் வீரர்­க­ளுக்கு பயிற்­று­விப்­பா­ள­ராக செயற்­பட்­டுள்ளார். இவர்இ வீரர்­களை வலு­வூட்­டுதல் பற்­றியும்இ விளை­யாட்டு கற்­கைகள் பற்­றியும் பல்­க­லைக்­க­ழக பட்டங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8…

  4. உண்மைதான்..! உலகக்கோப்பையில் ஸ்டம்பை பறிகொடுத்த பலரும் இதில் வெளுத்து வாங்குகிறார்கள்..!!

  5. Hobart Hurricanes அணியில் விளையாடும் சங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பிக் பாஷ் லீக் (Big Bash League) கிரிக்கெட் போட்டியில் ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குமார் சங்கக்கார ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில் இரண்டு வருடங்கள் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/06/hobart-hurricanes-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%A…

  6. ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஐரோப்­பிய நாடுகள் பொது­வாக கால்­பந்­தாட்டம் அல்­லது றக்பி விளையாட்டுக்­களில் அதிக ஈடு­பாடு காட்­டு­வதை நாம் கண்­ணுற்­றுள்ளோம். ஆனால் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மான பின்னர் ஐரோப்­பிய நாடு­களில் கிரிக்கெட் ஆர்வம் அதி­க­ரித்­துள்­ள­துடன் பல நாடுகள் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் இணை உறுப்பு நாடு­க­ளா­கவும் அங்­கத்­துவம் பெற்­றுள்­ளன. இதனை அடுத்து அந் நாடுகள் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான முன்­னோடி தகு­திகாண் சுற்றில் விளை­யா­ட­வுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். ஜேர்சி நாட்டில் இம் மாதம் 9ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள சர்­வ­தேச இரு­பது20 கிரிக்கெட் முன்­னோடி தகு­திகாண் போ…

  7. ஐ.சி.சி.,க்கு எதிராக புது அமைப்பு * கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சி புதுடில்லி: ஐ.சி.சி.,க்கு போட்டியாக புதிய கிரிக்கெட் அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இதன் சார்பில் ‘டுவென்டி–20’ தொடர் ஒன்றையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலக கிரிக்கெட் அமைப்பை நிர்வாகம் செய்வது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,). இதன் விதிமுறை, அட்டவணைப்படி தான் போட்டிகள் நடக்கும். இதன் அங்கீகாரம் இல்லாமல் 2007ல் கபில் தேவ் தலைமையில் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) அமைப்பு உருவானது. இதன் சார்பில் நடந்த ‘டுவென்டி–20’ போட்டிகளில் பல வீரர்கள் பங்கேற்றனர். உடனடியாக விழித்துக் கொண்ட இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்…

  8. பாகிஸ்தான் செல்வது ஆபத்து சிம்பாப்வேயை எச்சரிக்கிறது சர்வதேச கிரிக்கெட் சங்கம் பாகிஸ்­தா­னுக்கு செல்­வது ஆபத்­தா­னது என்றும் அங்கு போதி­ய­ளவு பாது­காப்பு இல்லை என்றும் சிம்­பாப்வே அணிக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது சர்­வ­தேச கிரிக்கெட் சங்கம். பாகிஸ்தான் சென்று விளை­யாட சிம்­பாப்வே அணி அண்­மையில் ஒப்­புதல் கொடுத்­தது. ஆனால், இந்த ஒப்­பு­தலை மீள் பரி­சீ­லனை செய்­யுங்கள் என்று சிம்­பாப்­வேக்கு ஆலோ­சனை தெரி­வித்­துள்­ளது சர்வதேச கிரிக்கெட் சங்கம். பாகிஸ்தான் லாகூரில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தீவி­ர­வா­திகள் தாக்­குதல் நடத்­தினர். இந்த சம்­ப­வத்­துக்குப் பிறகு அனைத்து நாட்டு கிரிக்கெட் அணிகளும் பாகிஸ்தான் சென்று விளை­யாட தயக்கம்…

  9. தொடர்ந்து ஏமாற்றம்: வருத்தத்துடன் ஓய்வு பெற்றார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொனாதன் டிராட் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொனாதன் டிராட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 பூஜ்ஜியங்களுடன் 72 ரன்களை மட்டுமே டிராட் எடுத்தார். இதனால் அவர் கடும் ஏமாற்றமடைந்தார். பொதுவாக 3-ம் நிலையில் களமிறங்கி இங்கிலாந்துக்கு மிகப்பெரிய டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடிக் கொடுத்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரரான ஜொனாதன் டிராட், ஆஷஸ் தொடரின் போது டேவிட் வார்னரின் முதிர்ச்சியற்ற மோசமான விமர்சனத்தினால் மனமுடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பிறகு தற்போது மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் அவர…

  10. இந்தியா-வங்கதேசம் போட்டி அட்டவணை இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணி ஜூன் 7-ம் தேதி வங்கதேசத்துக்கு புறப்படுகிறது. டெஸ்ட் போட்டி ஜூன் 10-ம் தேதி ஃபதுல்லாவில் நடைபெறுகிறது. 9 ஆண்டுளுக்குப் பிறகு ஃபதுல்லா மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஒரு பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் முறையே ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் அடுத்த மாதம் மழைக்காலம் என்பதால் ஒருநாள் போட்டி மழையால் தடைபட வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டி தடைபடுமானால் அடுத்த நாளில் நடத…

  11. எனக்கு கொல்கத்தா அணியே போதும்: வாசிம் அக்ரம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு அளிக்கப்பட்டால் என்ன செய்வார் என்ற கேள்விக்கு வாசிம் அக்ரம், 'எனக்கு கொல்கத்தாவே போதும்' என்று சற்றே நகைச்சுவையுடன் பதிலளித்தார். கொல்கத்தாவில் செய்தி நிறுவனத்திடம் வாசிம் அக்ரம் பேசும்போது, அவருக்கு முன்னால் இந்திய முன்னாள் வீரரும் தேர்வுக்குழு தலைவருமான திலிப் வெங்சர்க்கார் அமர்ந்திருந்தார். வாசிம் அக்ரமிடம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு வந்தால் என்ன செய்வார் என்று கேட்கப்பட்டது. அப்போது வெங்சர்க்கார் குறுக்கிட்டு, “இது ஒரு அருமையான யோசனை. வாசிம் அக்ரம் தன்னம்பிக்கையையும் நேர்மறை அணுகுமுறையையும் வீர்ர்களிடத்தில் வளர்த்தெடுப்பார். இன்றைய கிரிக்கெ…

  12. சென்னை மட்டன் பிரியாணி.. இசையின் மீதான காதல்: மனம் திறந்த பிராவோ சென்னையில் திவோ என்ற நிறுவனம் சார்பில் ‘சலோ சலோ‘ பாடல் வெளியீட்டு விழா நேற்று இரவு நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் பிராவோ இந்த பாடலை பாடியுள்ளார். இந்த விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி தனது மனைவி சாக்ஷி, குழந்தையுடன் பங்கேற்றார். தவிர, கிறிஸ் கெய்ல், ஜடேஜா, சுமித், ஆசிஷ் நெஹ்ரா, மைக் ஹஸ்சி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாடலுடன் நடனம் ஆடிய பிராவோ கூறுகையில், நான் உலா என்ற தமிழ் படத்தில் ஏற்கனவே நடித்து இருக்கிறேன். இந்தி நடிகர்களில் ஷாருக்கானையும், தீபிகா படுகோனையும் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் படங்…

  13. இங்கிலாந்து கிரிக்கெட் பணிப்பாளர் பதவி அண்ட்றூ ஸ்ட்ரோஸுக்கு வழங்கப்படலாம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் பதவி முன்னாள் அணித் தலைவர் அண்ட்றூ ஸ்ட்ரோஸுக்கு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவி வகித்த போல் டௌன்டன், ஏப்ரல் மாதத்துடன் விலகிக்கொண்டதை அடுத்து அப் பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுப்பாட்டுச் சபை ஆலோசித்து வருகின்றது. இப் பதவியை வகிப்பதற்கு தாங்கள் விரும்புவதாக முன்னாள் அணித் தலைவர்களான மைக்கல் வொன், அலெக் ஸ்டுவர்ட் ஆகியோரும் தெரிவித்திருந்தனர். ஆனால் மைக்கல் வோன் இறுதி நேரத்தில் விலகிக் கொள்ளத் தீர்மானித்ததால் பெரும்பாலும் …

  14. ப்றீமியர் லீக் சம்பியன் பட்டத்தை வென்றெடுக்க செல்சி கழகத்திற்கு 3 புள்ளிகள் மாத்திரம் தேவை இங்­கி­லாந்தில் நடை­பெற்­று­வரும் பார்க்லேஸ் ப்றீமியர் லீக் கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் சம்­பி­ய­னா­வ­தற்கு செல்சி கழ­கத்­திற்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி அல்­லது மூன்று புள்­ளிகள் தேவைப்­ப­டு­கின்­றது. 20 கழ­கங்கள் பங்­கு­பற்றும் இவ் வருட ப்றீமியர் லீக் போட்­டி­களில் இது­வரை 34 போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள செல்சி கழகம் 24 வெற்­றிகள், 8 வெற்றி தோல்­வி­யற்ற முடி­வு­க­ளுடன் 80 புள்­ளி­களைப் பெற்று முத­லி­டத்தில் உள்­ளது. மென்­செஸ்டர் சிட்டி 34 போட்­டி­களில் 67 புள்­ளி­களைப் பெற்று இரண்டாம் இடத்­தி­லி­ருக்­கின்­ற­போ­திலும் எஞ்­சி­யுள்ள 4 போட்­டி­க­ளிலும் வெற்றி பெ…

  15. 16 மாதங்களுக்குப் பிறகு ஆட வந்த ஜொனாதன் டிராட் 'டக்' அவுட் 16 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பிய இங்கிலாந்து வீரர் டிராட் அவுட் ஆகி பரிதாபமாக வெளியேறும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பிய இங்கிலாந்து வீரர் ஜானதன் டிராட் மே.இ.தீவுகளுக்கு எதிராக முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் இவரது ஆட்டத்தைப் பற்றி எகத்தாளமாகக் கருத்துக்கூற அந்தத் தொடரிலிருந்து மனத்தாங்கலுடன் பாதியிலேயே இங்கிலாந்து திரும்பினார் டிராட். இந்நிலையில் மோசமான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இன்று ஆண்டிகுவாவில் மே.இ.தீவுகளுக்கு…

  16. ஓய்வை அறிவித்தார் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதி­ரடி சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரான அப்­ரிடி 2010ஆம் ஆண்டு டெஸ்­டிலும், இரு மாதங்­க­ளுக்கு முன்பு ஒரு நாள் போட்­டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இப்­போது 20 ஓவர் அணிக்கு தலை­வ­ராக இருந்து இரு­பது ஓவர் கிரிக்­கெட்டில் மட்டும் விளை­யாடி வரு­கிறார். இந்த நிலையில் அப்­ரிடி அடுத்த ஆண்­டுடன் 20 ஓவர் கிரிக்­கெட்­டுக்கும் முழுக்கு போட முடிவு செய்­துள்ளார். இது தொடர்­பாக அப்ரிடி கூறு­கையில், அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்­டி­யுடன் 20 ஓவர் போட்­டியில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டு விடுவேன். இத்­துடன் எனது சர்­வ­தேச கிரிக்கெட் வாழ்க்கை நிறைவு பெற்று விடும். ஆனாலும் இங்­கி­லாந்தில் கழ…

  17. தொடரைக் கைப்­பற்­றி­யது இலங்கை அணி இலங்கை ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடை­யி­லான 3 போட்­டி­களைக் கொண்ட உத்­தி­யோ­பூர்­வ­மற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்­பற்­றி­யது. இரு அணி­க­ளுக்கும் இடையில் நேற்று கொழும்பு ஆர் .பிரே­ம­தாஸ மைதா­னத்தில் நடை­பெற்ற ஒரு நாள் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை ஏ அணி 47.2 ஓவர்­களில் சகல விக்­கெட்­டு­க­ளையும் இழந்து 277 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. துடுப்­பாட்­டத்தில் இலங்கை ஏ அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 87 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார். கடந்த இரண்டு போட்­டி­க­ளிலும் சதம் அடித்­தி­ருந்த குசல் பெரேரா இப்­போட்­டியில் 13 ஓட்­டங்­களால் சதம் அடிக்கும் வாய்ப்பை தவ­ற­விட்டார். இதன் மூல…

  18. இருபெரும் ஜாம்பவான்கள் மோதுவதை ஆயிரக் கணக்கானோர் நேரடியாகப் பார்க்கின்றனர் இந்த நூற்றாண்டின் பெரும் குத்துச்சண்டை என்று வர்ணிக்கப்படும் போட்டியில் அமெரிக்க வீரர் ஃளோய்ட் மேவெதர் மற்றும் பிலிப்பைன்ஸ் வீரர் மணி பக்கியா ஆகியோர் லாஸ் வேகஸ் நகரில் இன்று சனிக்கிழமை மோதுகின்றனர். உலகின் இருபெரும் குத்துச்சண்டை ஜாம்பவான்களும் மோதுவதை சுமார் 11 ஆயிரம் ரசிகர்கள் நேரடியாக கண்டுகளிக்கவுள்ளனர். முன்னதாக, உடல் எடை பார்க்கும் நிகழ்வில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது, பக்கியா புன்னகைத்தார். மேவெதர் எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை. இதுவரை தோல்விகண்டிராத மேவெதர் பாக்ஸிங் உலகின் வில்லன் என்று வர்ணிக்கப்படுபவர். பக்கியா பிலிப்பைன்ஸின் தேசிய வீரராக வர்ணிக்கப்படுகி…

    • 1 reply
    • 430 views
  19. மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் மரணம் கால்­பந்து போட்­டி­யின்­போது மார­டைப்பு ஏற்­பட்­டதால் மைதா­னத்தில் மயங்கி விழுந்த பெல்­ஜியம் நாட்டின் இளம் கால்­பந்து வீரர் கிரி­கோரி மெர்டன்ஸ் சிகிச்சை பல­னின்றி உயிரிழந்தார். 21 வய­துக்குட்பட்­டோ­ருக்­கான பெல்ஜியம் தேசிய அணியில் இடம்­பெற்­றி­ருந்த துடிப்­பான வீரர் கிரி­கோரி மெர்டன்ஸ். தேசிய அணியில் சில போட்­டி­க­ளிலே விளை­யாடியிருந்­தாலும், செர்கிள் புரூகஸ், லோகிரன் ஆகிய கழகங்களுக்காக சுமார் 100 போட்­டி­களில் விளை­யா­டிய அனு­பவம் பெற்­றவர். இவர் கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற ரிசர்வ் அணி போட்­டியில் விளை­யாடிக் கொண்­டி­ருந்­த­போதுஇ திடீ­ரென மார­டைப்பு ஏற்­பட்­டது. இதனால் நிலை­கு­லைந்த அவர் மைதா­னத்­தி­ல…

  20. கிரிக்கெட்டை கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் கிரிக்­கெட்டை நாம் கிரா­மத்­திற்கு எடுத்துச் செல்­ல­வேண்டும். கிரிக்­கெட்டை மட்­டு­மல்ல, நமது விளை­யாட்­டையே கிரா­மத்­தி­லி­ருந்து ஆரம்­பித்தால் சிறந்த­தொரு பெறு­பேற்றை நாம் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும் என தெரி­வித்தார். இலங்கைக் கிரிக்கெட் இடைக்­கா­ல ச­பையின் தலைவர் சிதத் வெத்­த­முனி. இலங்கைக் கிரிக்கெட் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­படி தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில், கிரா­மத்­தி­லி­ருந்­துதான் சிறந்த வீரர்கள் வரு­கி­றார்கள். ஆனால் நாங்­களோ தலை­ந­க­ரத்­தில்தான் விளை­யாட்­டுக்­கான அனைத்து வளங்­க­ளையும் கொடுத்­துக் கொண்டிருக்­கிறோம். இது மாற­வேண்டும். …

  21. "ராக்கெட்" கெய்லின் செம ரெக்கார்ட்... 500 சிக்ஸ் அடித்து உலக சாதனை! பெங்களூர்: டுவென்டி 20 போட்டிகளில் 500 சிக்ஸர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார் கிறிஸ் கெய்ல். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தற்போது ஆடி வரும் கெய்ல், இதுவரை ஆடியுள்ள டுவென்டி 20 போட்டிகளில் மொத்தமாக 500 சிக்ஸர்களைக் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார். நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது தனது 500வது சிக்ஸரை விளாசினார் கெய்ல். இது கெய்லுக்கு 201வது டுவென்டி 20 போட்டியாகும். இவருக்கு அடுத்த இடத்தில் சக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரரான கீரன் போலார்ட் உள்ளார். அவர் இதுவரை 348 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஐபிஎல் வரலாற்றிலும் அதிக சிக்ஸர்களை விளாசியவர் கெய்ல்தான்.…

  22. ஜேர்மன் கிண்ண கால்பந்தாட்டத்திலிருந்து நடப்பு சம்பியன் மியூனிச் வெளியேற்றம் பொரு­சியா டோர்ட்மண்ட் கழ­கத்­திற்கு எதி­ரான ஜேர்மன் கிண்ண அரை இறுதிப் போட்­டியில் சம­நிலை முறிப்பு பெனல்­டிகள் அனைத்­தையும் கோட்டை­விட்ட நடப்பு சம்­பியன் பயேர்ன் மியூனிச்கழகம் 2 – 0 என்ற பெனல்டி அடிப்­ப­டையில் தோல்வியடைந்து போட்­டி­க­ளி­லி­ருந்து ஏமாற்­றத்­துடன் வெளி­யே­றி­யது. இரண்டு அணி­க­ளுக்கும் இடையில் வார இறு­தியில் நடை­பெற்ற அரை இறுதி ஆட்டம் மேல­திக நேர முடி­வின்­போது 1– 1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தி­ருந்­தது. இதனை அடுத்து வழங்­கப்­பட்ட பெனல்­டி­களில் தனது நான்கு பெனல்டிகளையும் பயெர்ன் மியூனிச் கோட்டை விட்­டது. ஜேர்மன் வீரரும் பயேர்…

  23. 12 வயதிலேயே டெண்டுல்கரின் சாதனை...Gone!... முறியடித்த 'சர்ப்ரைஸ்' கான்!! பெங்களூர்: நடப்பு 8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்த போதும் அனைவரது பார்வையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 'இளம்புயல்' சர்பராஸ்கான் மீதுதான் இருக்கிறது.. அவரது நேற்றைய அசத்தல் ஆட்டம் முன்னணி வீரர்கள் பலரையும் ஈர்த்திருக்கிறது. 1997ஆம் ஆண்டு பிறந்தவர் மும்பையைச் சேர்ந்த சர்பராஸ்கான்.. 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கும் போது சர்பராஸ்கான் சிறுவன் தான்.. இப்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் ஒரே டிரெஸ்ஸிங் அறையில் சரிசமமாக நிற்கிறார்... 2009ஆம் ஆண்டு ஹாரீஸ் கோப்பைக்கான போட்டியில் சர்பராஸ்கான் 439 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை மு…

  24. கேட்ச் பிடிக்க முற்படாத தோனி: நெஹ்ராவின் இரு அனுபவம் ஸ்லிப் திசையிலோ அல்லது லெக் திசையிலோ ஓரளவுக்கு தள்ளி கேட்ச் சென்றால் அதனை பிடிக்க விக்கெட் கீப்பர் தோனி சில காலங்களாக முயற்சி எடுப்பதில்லை. இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பரான தோனி சில வேளைகளில் அத்தகைய கேட்ச்களை அருமையாக பிடித்த தருணங்களும் உண்டு. ஆனால் சமீப காலங்களில் அவர் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் முதலில் 8-0 என்று இரு அணிகளுக்கு எதிராக உதை வாங்கிய போதும் சரி, அதன் பிறகு சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் 3-1 என்று இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி தழுவிய போதும் சரி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டித் தொடரில் பாதியிலேயே ஓய்வு அறிவித்த தோனி பல கேட்ச்…

  25. சாதனைபடைக்கவிருந்த பெண் வீராங்கனை பலி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கவிருந்த இந்திய மலையேற்ற வீராங்கனை ரெனே நிலநடுக்கத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். டெல்லியை சேர்ந்த இந்திய மலையேற்ற வீராங்கனையான ரெனே(வயது- 49) தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வந்தார். தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ரெனே, தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் பனிப்பாறைகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோன்று எவரெஸ்ட் பகுதியில் சிக்கியுள்ள 150க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகளை மீட்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/29/%E0%AE%9…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.