விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
இங்கிலாந்து பயிற்சியாளர் நீக்கம் லண்டன்: இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் நீக்கப்பட்டு முன்னாள் வீரர் ஸ்டிராஸ், ‘இயக்குனர்’ ஆனார். இந்திய அணி பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், இருக்கும் போதே ‘இயக்குனர்’ என்ற பெயரில் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இந்த வழியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு இறங்கியது. சமீபத்திய உலக கோப்பை தொடரில் சொதப்பிய இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ‘டிரா’ செய்தது. இதையடுத்து, கடந்த 2007–09க்குப் பின் இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட பீட்டர் மூர்ஸ், 52, அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்குப் பதில் ‘தேசிய கிர…
-
- 0 replies
- 325 views
-
-
இங்கிலாந்து - அயர்லாந்து போட்டி கைவிடப்பட்டது இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையில் டப்ளினில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டி 18 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் கடும் மழை காரணமாக கைவிடப்பட்டது. ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணிக்கு ஜேம்ஸ் டெய்லர் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் அந்த அணி விளையாடிய முதலாவது போட்டி இதுவாகும். அத்தோடு 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து அணியில் ஐந்து அறிமுக வீரர்கள் ஒரே போட்டியில் இடம்பிடித்த சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. போட்டி ஆரம்பித்த நேரம் முதலே மழைபெய்துகொண்டிருந்தாலும் விளையாடக்கூடிய நிலைமை காணப்பட்ட…
-
- 0 replies
- 307 views
-
-
பாக். – பங்களாதேஷ் மோதும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று டாக்காவில் நடக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள், இருபது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடவுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்திற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பங்களாதேஷில் உள்ள தங்களது தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தது. இதனால் போட்டி நடக்கும் இடங்கள் அறிவிக்கப்படாமல் இருந்தன. அதன்ப…
-
- 17 replies
- 827 views
-
-
கோபத்தில் ஸ்டீவ் வாஹ்-ஐ தாக்கச் சென்றேன்: சுயசரிதையில் கர்ட்லி ஆம்ப்ரோஸ் மேற்கிந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் 'Curtly Ambrose - Time to Talk' என்ற தலைப்பில் சுயசரிதை நூலை வெளியிட்டுள்ளார். 1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டது. அப்போது போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் தனக்கும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹிற்கும் ஏற்பட்ட தகராறு பற்றி எழுதியுள்ளார். கைகலப்பு அளவுக்கு சென்றது அந்த வாக்குவாதம் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சி ரிச்சர்ட்ஸன் மட்டும் தடுக்கவில்லை என்றால் அன்று ஸ்டீவ் வாஹ்-ஐ ஆம்ப்ரோஸ் தாக்கியிருப்பார். ஸ்டீவ் வாஹ் எதிரணி வீரர்களை தனது வார்த்தைகளால் முடக்கும் வாய் சாதுரியம்…
-
- 2 replies
- 417 views
-
-
என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது உண்மையான பெயர் சண்முகநாதன் சாருஜன். ஆனால் எல்லோரும் அவரை " Little Sanga" என்றுதான் அழைக்கிறார்கள். காரணத்தை நீங்களும் பாருங்கள் !
-
- 6 replies
- 556 views
-
-
விராட் கோலி தலைமையில் இந்தியா உலகக் கோப்பை வெல்லும்: சவுரவ் கங்குலி நம்பிக்கை விராட் கோலி ரன்கள் குவிக்கும் வரையில் அவரது சொந்த நடத்தையைப் பற்றி பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் டால்மியா, விராட் கோலியின் நடத்தை நெருக்கமாக கண்காணிக்கப்படும் என்றும், மீறல் தொடர்ந்தால் வாரியம் தலையிடும் என்ற ரீதியில் தெரிவித்திருந்தது பற்றி சவுரவ் கங்குலியிடம் கேட்ட போது, “விராட் கோலி பற்றி அவர் என்ன கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் விராட் ஒரு அபாரமான கிரிக்கெட் வீரர். நான் அப்படித்தான் பார்க்கிறேன். அவர் இளம் வீரர். 26 வயதுதான் …
-
- 0 replies
- 288 views
-
-
இலங்கை அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளராக மைக்கல் மெயின் இலங்கை கிரிக்கெட் அணிக்கு உடற்பயிற்சி வழங்கும் பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கல் மெயின் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹம்ப்ஷியர் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார். இவர்இ வீரர்களை வலுவூட்டுதல் பற்றியும்இ விளையாட்டு கற்கைகள் பற்றியும் பல்கலைக்கழக பட்டங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8…
-
- 0 replies
- 302 views
-
-
உண்மைதான்..! உலகக்கோப்பையில் ஸ்டம்பை பறிகொடுத்த பலரும் இதில் வெளுத்து வாங்குகிறார்கள்..!!
-
- 0 replies
- 380 views
-
-
Hobart Hurricanes அணியில் விளையாடும் சங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பிக் பாஷ் லீக் (Big Bash League) கிரிக்கெட் போட்டியில் ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குமார் சங்கக்கார ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில் இரண்டு வருடங்கள் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/06/hobart-hurricanes-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%A…
-
- 1 reply
- 300 views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஐரோப்பிய நாடுகள் பொதுவாக கால்பந்தாட்டம் அல்லது றக்பி விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு காட்டுவதை நாம் கண்ணுற்றுள்ளோம். ஆனால் இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமான பின்னர் ஐரோப்பிய நாடுகளில் கிரிக்கெட் ஆர்வம் அதிகரித்துள்ளதுடன் பல நாடுகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணை உறுப்பு நாடுகளாகவும் அங்கத்துவம் பெற்றுள்ளன. இதனை அடுத்து அந் நாடுகள் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான முன்னோடி தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். ஜேர்சி நாட்டில் இம் மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச இருபது20 கிரிக்கெட் முன்னோடி தகுதிகாண் போ…
-
- 0 replies
- 346 views
-
-
ஐ.சி.சி.,க்கு எதிராக புது அமைப்பு * கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சி புதுடில்லி: ஐ.சி.சி.,க்கு போட்டியாக புதிய கிரிக்கெட் அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இதன் சார்பில் ‘டுவென்டி–20’ தொடர் ஒன்றையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலக கிரிக்கெட் அமைப்பை நிர்வாகம் செய்வது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,). இதன் விதிமுறை, அட்டவணைப்படி தான் போட்டிகள் நடக்கும். இதன் அங்கீகாரம் இல்லாமல் 2007ல் கபில் தேவ் தலைமையில் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) அமைப்பு உருவானது. இதன் சார்பில் நடந்த ‘டுவென்டி–20’ போட்டிகளில் பல வீரர்கள் பங்கேற்றனர். உடனடியாக விழித்துக் கொண்ட இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்…
-
- 0 replies
- 388 views
-
-
பாகிஸ்தான் செல்வது ஆபத்து சிம்பாப்வேயை எச்சரிக்கிறது சர்வதேச கிரிக்கெட் சங்கம் பாகிஸ்தானுக்கு செல்வது ஆபத்தானது என்றும் அங்கு போதியளவு பாதுகாப்பு இல்லை என்றும் சிம்பாப்வே அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் சங்கம். பாகிஸ்தான் சென்று விளையாட சிம்பாப்வே அணி அண்மையில் ஒப்புதல் கொடுத்தது. ஆனால், இந்த ஒப்புதலை மீள் பரிசீலனை செய்யுங்கள் என்று சிம்பாப்வேக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் சங்கம். பாகிஸ்தான் லாகூரில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்துக்குப் பிறகு அனைத்து நாட்டு கிரிக்கெட் அணிகளும் பாகிஸ்தான் சென்று விளையாட தயக்கம்…
-
- 0 replies
- 279 views
-
-
தொடர்ந்து ஏமாற்றம்: வருத்தத்துடன் ஓய்வு பெற்றார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொனாதன் டிராட் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொனாதன் டிராட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 பூஜ்ஜியங்களுடன் 72 ரன்களை மட்டுமே டிராட் எடுத்தார். இதனால் அவர் கடும் ஏமாற்றமடைந்தார். பொதுவாக 3-ம் நிலையில் களமிறங்கி இங்கிலாந்துக்கு மிகப்பெரிய டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடிக் கொடுத்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரரான ஜொனாதன் டிராட், ஆஷஸ் தொடரின் போது டேவிட் வார்னரின் முதிர்ச்சியற்ற மோசமான விமர்சனத்தினால் மனமுடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பிறகு தற்போது மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் அவர…
-
- 1 reply
- 449 views
-
-
இந்தியா-வங்கதேசம் போட்டி அட்டவணை இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணி ஜூன் 7-ம் தேதி வங்கதேசத்துக்கு புறப்படுகிறது. டெஸ்ட் போட்டி ஜூன் 10-ம் தேதி ஃபதுல்லாவில் நடைபெறுகிறது. 9 ஆண்டுளுக்குப் பிறகு ஃபதுல்லா மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஒரு பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் முறையே ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் அடுத்த மாதம் மழைக்காலம் என்பதால் ஒருநாள் போட்டி மழையால் தடைபட வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டி தடைபடுமானால் அடுத்த நாளில் நடத…
-
- 0 replies
- 394 views
-
-
எனக்கு கொல்கத்தா அணியே போதும்: வாசிம் அக்ரம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு அளிக்கப்பட்டால் என்ன செய்வார் என்ற கேள்விக்கு வாசிம் அக்ரம், 'எனக்கு கொல்கத்தாவே போதும்' என்று சற்றே நகைச்சுவையுடன் பதிலளித்தார். கொல்கத்தாவில் செய்தி நிறுவனத்திடம் வாசிம் அக்ரம் பேசும்போது, அவருக்கு முன்னால் இந்திய முன்னாள் வீரரும் தேர்வுக்குழு தலைவருமான திலிப் வெங்சர்க்கார் அமர்ந்திருந்தார். வாசிம் அக்ரமிடம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு வந்தால் என்ன செய்வார் என்று கேட்கப்பட்டது. அப்போது வெங்சர்க்கார் குறுக்கிட்டு, “இது ஒரு அருமையான யோசனை. வாசிம் அக்ரம் தன்னம்பிக்கையையும் நேர்மறை அணுகுமுறையையும் வீர்ர்களிடத்தில் வளர்த்தெடுப்பார். இன்றைய கிரிக்கெ…
-
- 0 replies
- 424 views
-
-
சென்னை மட்டன் பிரியாணி.. இசையின் மீதான காதல்: மனம் திறந்த பிராவோ சென்னையில் திவோ என்ற நிறுவனம் சார்பில் ‘சலோ சலோ‘ பாடல் வெளியீட்டு விழா நேற்று இரவு நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் பிராவோ இந்த பாடலை பாடியுள்ளார். இந்த விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி தனது மனைவி சாக்ஷி, குழந்தையுடன் பங்கேற்றார். தவிர, கிறிஸ் கெய்ல், ஜடேஜா, சுமித், ஆசிஷ் நெஹ்ரா, மைக் ஹஸ்சி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாடலுடன் நடனம் ஆடிய பிராவோ கூறுகையில், நான் உலா என்ற தமிழ் படத்தில் ஏற்கனவே நடித்து இருக்கிறேன். இந்தி நடிகர்களில் ஷாருக்கானையும், தீபிகா படுகோனையும் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் படங்…
-
- 3 replies
- 1.4k views
-
-
இங்கிலாந்து கிரிக்கெட் பணிப்பாளர் பதவி அண்ட்றூ ஸ்ட்ரோஸுக்கு வழங்கப்படலாம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் பதவி முன்னாள் அணித் தலைவர் அண்ட்றூ ஸ்ட்ரோஸுக்கு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவி வகித்த போல் டௌன்டன், ஏப்ரல் மாதத்துடன் விலகிக்கொண்டதை அடுத்து அப் பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுப்பாட்டுச் சபை ஆலோசித்து வருகின்றது. இப் பதவியை வகிப்பதற்கு தாங்கள் விரும்புவதாக முன்னாள் அணித் தலைவர்களான மைக்கல் வொன், அலெக் ஸ்டுவர்ட் ஆகியோரும் தெரிவித்திருந்தனர். ஆனால் மைக்கல் வோன் இறுதி நேரத்தில் விலகிக் கொள்ளத் தீர்மானித்ததால் பெரும்பாலும் …
-
- 0 replies
- 312 views
-
-
ப்றீமியர் லீக் சம்பியன் பட்டத்தை வென்றெடுக்க செல்சி கழகத்திற்கு 3 புள்ளிகள் மாத்திரம் தேவை இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் பார்க்லேஸ் ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் சம்பியனாவதற்கு செல்சி கழகத்திற்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி அல்லது மூன்று புள்ளிகள் தேவைப்படுகின்றது. 20 கழகங்கள் பங்குபற்றும் இவ் வருட ப்றீமியர் லீக் போட்டிகளில் இதுவரை 34 போட்டிகளில் விளையாடியுள்ள செல்சி கழகம் 24 வெற்றிகள், 8 வெற்றி தோல்வியற்ற முடிவுகளுடன் 80 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. மென்செஸ்டர் சிட்டி 34 போட்டிகளில் 67 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலிருக்கின்றபோதிலும் எஞ்சியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெ…
-
- 3 replies
- 390 views
-
-
16 மாதங்களுக்குப் பிறகு ஆட வந்த ஜொனாதன் டிராட் 'டக்' அவுட் 16 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பிய இங்கிலாந்து வீரர் டிராட் அவுட் ஆகி பரிதாபமாக வெளியேறும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பிய இங்கிலாந்து வீரர் ஜானதன் டிராட் மே.இ.தீவுகளுக்கு எதிராக முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் இவரது ஆட்டத்தைப் பற்றி எகத்தாளமாகக் கருத்துக்கூற அந்தத் தொடரிலிருந்து மனத்தாங்கலுடன் பாதியிலேயே இங்கிலாந்து திரும்பினார் டிராட். இந்நிலையில் மோசமான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இன்று ஆண்டிகுவாவில் மே.இ.தீவுகளுக்கு…
-
- 17 replies
- 791 views
-
-
ஓய்வை அறிவித்தார் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை ஆட்டக்காரரான அப்ரிடி 2010ஆம் ஆண்டு டெஸ்டிலும், இரு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இப்போது 20 ஓவர் அணிக்கு தலைவராக இருந்து இருபது ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த நிலையில் அப்ரிடி அடுத்த ஆண்டுடன் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கும் முழுக்கு போட முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அப்ரிடி கூறுகையில், அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியுடன் 20 ஓவர் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டு விடுவேன். இத்துடன் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நிறைவு பெற்று விடும். ஆனாலும் இங்கிலாந்தில் கழ…
-
- 0 replies
- 702 views
-
-
தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி இலங்கை ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட உத்தியோபூர்வமற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று கொழும்பு ஆர் .பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை ஏ அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 87 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். கடந்த இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்திருந்த குசல் பெரேரா இப்போட்டியில் 13 ஓட்டங்களால் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன் மூல…
-
- 0 replies
- 349 views
-
-
இருபெரும் ஜாம்பவான்கள் மோதுவதை ஆயிரக் கணக்கானோர் நேரடியாகப் பார்க்கின்றனர் இந்த நூற்றாண்டின் பெரும் குத்துச்சண்டை என்று வர்ணிக்கப்படும் போட்டியில் அமெரிக்க வீரர் ஃளோய்ட் மேவெதர் மற்றும் பிலிப்பைன்ஸ் வீரர் மணி பக்கியா ஆகியோர் லாஸ் வேகஸ் நகரில் இன்று சனிக்கிழமை மோதுகின்றனர். உலகின் இருபெரும் குத்துச்சண்டை ஜாம்பவான்களும் மோதுவதை சுமார் 11 ஆயிரம் ரசிகர்கள் நேரடியாக கண்டுகளிக்கவுள்ளனர். முன்னதாக, உடல் எடை பார்க்கும் நிகழ்வில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது, பக்கியா புன்னகைத்தார். மேவெதர் எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை. இதுவரை தோல்விகண்டிராத மேவெதர் பாக்ஸிங் உலகின் வில்லன் என்று வர்ணிக்கப்படுபவர். பக்கியா பிலிப்பைன்ஸின் தேசிய வீரராக வர்ணிக்கப்படுகி…
-
- 1 reply
- 431 views
-
-
மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் மரணம் கால்பந்து போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் மைதானத்தில் மயங்கி விழுந்த பெல்ஜியம் நாட்டின் இளம் கால்பந்து வீரர் கிரிகோரி மெர்டன்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 21 வயதுக்குட்பட்டோருக்கான பெல்ஜியம் தேசிய அணியில் இடம்பெற்றிருந்த துடிப்பான வீரர் கிரிகோரி மெர்டன்ஸ். தேசிய அணியில் சில போட்டிகளிலே விளையாடியிருந்தாலும், செர்கிள் புரூகஸ், லோகிரன் ஆகிய கழகங்களுக்காக சுமார் 100 போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர். இவர் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ரிசர்வ் அணி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோதுஇ திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர் மைதானத்தில…
-
- 1 reply
- 370 views
-
-
கிரிக்கெட்டை கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் கிரிக்கெட்டை நாம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும். கிரிக்கெட்டை மட்டுமல்ல, நமது விளையாட்டையே கிராமத்திலிருந்து ஆரம்பித்தால் சிறந்ததொரு பெறுபேற்றை நாம் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்தார். இலங்கைக் கிரிக்கெட் இடைக்கால சபையின் தலைவர் சிதத் வெத்தமுனி. இலங்கைக் கிரிக்கெட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்படி தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கிராமத்திலிருந்துதான் சிறந்த வீரர்கள் வருகிறார்கள். ஆனால் நாங்களோ தலைநகரத்தில்தான் விளையாட்டுக்கான அனைத்து வளங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது மாறவேண்டும். …
-
- 0 replies
- 286 views
-
-
"ராக்கெட்" கெய்லின் செம ரெக்கார்ட்... 500 சிக்ஸ் அடித்து உலக சாதனை! பெங்களூர்: டுவென்டி 20 போட்டிகளில் 500 சிக்ஸர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார் கிறிஸ் கெய்ல். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தற்போது ஆடி வரும் கெய்ல், இதுவரை ஆடியுள்ள டுவென்டி 20 போட்டிகளில் மொத்தமாக 500 சிக்ஸர்களைக் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார். நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது தனது 500வது சிக்ஸரை விளாசினார் கெய்ல். இது கெய்லுக்கு 201வது டுவென்டி 20 போட்டியாகும். இவருக்கு அடுத்த இடத்தில் சக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரரான கீரன் போலார்ட் உள்ளார். அவர் இதுவரை 348 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஐபிஎல் வரலாற்றிலும் அதிக சிக்ஸர்களை விளாசியவர் கெய்ல்தான்.…
-
- 0 replies
- 439 views
-