விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
நியூசிலாந்து டெஸ்ட் குழாமிலிருந்து போல்ட், க்ரெண்ஹோம் நீக்கம் By Akeel Shihab - இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தசைப்பிடிப்பு உபாதை காரணமாக நியூசிலாந்து வீரர்களான வேகப் பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் மற்றும் சகலதுறை வீரர் கொலின் டி க்ரெண்ட்ஹோம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் டி20 சர்வதேச மற்றும் டெஸ்ட் ஆகிய இரு தொடர்களில் பங்கேற்கிறது. டி20 சர்வதேச தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியிருந்த நிலையில் டெஸ்ட் தொடரின் மு…
-
- 0 replies
- 308 views
-
-
கிரிக்கெட் அணிகளும் பயிற்றுநரின் தேசிய அடையாளமும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று பயிற்றுநர்களின் தேசிய அடையாளங்கள் குறித்து எந்த அணிகளும் அக்கறை கொண்டதாகவோ அதனால் கவலை கொண்டதாகவோ தெரியவில்லை. ஆனால் இலங்கை இந் நிலைமை தலைகீழாக இருக்கின்றது. லோர்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெல்ல மென்ச்செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்ட் டெஸ்டில் அதே அணி பாகிஸ்தானினால் பதம் பார்க்கப்பட்டது. ஓல்ட் ட்ரபோர்ட் டெஸ்ட் முடிவில் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும் இங்கிலாந்து பயிற்றுநர் சக்லெய்ன் முஷ்தாக்கும் ஆர்வ மிகுதியுடன் உரையாடியவண்ணம் இருந்தனர். …
-
- 0 replies
- 344 views
-
-
தீபாவளி பரிசாக ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெற்றி ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இறுதி போட்டியில் இந்தியா 3:2 என்ற புள்ளிக்கணக்கில் சம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. நிக்கின் திம்மையா அடித்த கோல் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது 2011 ஆம் ஆண்டு இதே போட்டியில் இவ்விரு அணிகளும் ஆடி பெற்ற வெற்றிக்கு பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் இந்தியா வென்றுள்ளது. தற்காத்து விளையாடுவதில் ஏற்பட்ட சில சறுக்கல்களுக்கு பின்னர், பொதுவான இந்தியாவின் ஆதிக்கமே விளையாட்டில் தொடர்ந்தது. இந்தியா வீரர் ருபின்தர் பால் சிங் 18-வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து இந்தியாவின…
-
- 0 replies
- 287 views
-
-
ஒரே பந்துக்கு இரண்டு ரிவியூக்கள்: வங்கதேச கடைசி விக்கெட் எழுப்பும் சந்தேகங்கள் படம்.| பிடிஐ. ஹைதராபாத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி முடிந்த விதம் வெற்றிக் கொண்டாட்டங்களினால் நம் கவன ஈர்ப்பை பெறாமல் போயிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு என்று நிபுணர்களால் கருதப்படுகிறது. ஆனாலும் இந்தத் தீர்ப்பு முடிவை மாற்றக்கூடியதல்ல ஏனெனில் ஆட்டம் முடிய இன்னும் 2 மணி நேரங்கள் இருந்தது, கடைசி விக்கெட்தான் வங்கதேசம் கையில் உள்ளது, எனவே இந்தத் தீர்ப்பினால் முடிவு மாறிவிட்டது என்றுகூற முடியாவிட்டாலும், இது எதிர்காலத்தில் மேலும் நெருக்கமான சூழ்நிலைகளில் கடும் சர்ச்சைகளைக் கிளப்பக்கூடிய (தவ…
-
- 0 replies
- 337 views
-
-
புதிய உலக சாதனையை நிலைநாட்டிய திக்வெல்ல மற்றும் குணத்திலக்க Tamil புதிய உலக சாதனையை நிலைநாட்டிய திக்வெல்ல மற்றும் குணத்திலக்க இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டியில், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக 200 ஓட்டங்களுக்கு மேலாக இணைப்பாட்டத்தினைப் பெற்ற இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜிம்பாப்வே அணியுடன் இலங்கை அணியானது, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி…
-
- 0 replies
- 320 views
-
-
100 மீற்றரில் தங்கம் வென்ற மங்கை உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி போவி 10.85 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். உலக தடகள சம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்றுவருகிறது. இதில் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி போவி 10.85 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் இறுதித் தூரத்தை தாவி இலக்கை கடந்தார். ஐவரிகோஸ்ட் வீராங்கனை மேரி ஜோசி தாலு 10.86 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தையும், நெதர்லாந்து வீராங்கனை ஸ்சிப்பெர்ஸ் 10.96 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலப் பதக…
-
- 0 replies
- 378 views
-
-
அஷ்வின், ஜடேஜாவிடம் கற்றுக்கொண்ட வங்கதேச பந்துவீச்சாளர்கள்! ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், வங்கதேச அணி பெற்ற முதல் வெற்றி அதுவாகும். மிர்பூரில் நடந்த அந்தப் போட்டியில், வங்கதேச சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியின் 19 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். அதிலும் குறிப்பாக, ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் சாய்த்தார். வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம், சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் சுனில் ஜோஷி என அறியப்படுகிறார். இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் ஜோஷி, …
-
- 0 replies
- 373 views
-
-
தோனி உள்ளே, யுவராஜ், ரெய்னா வெளியே..! டி.என்.ஏ, YoYo டெஸ்ட் விளைவு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் வேண்டுமா? இனிமேல் ரஞ்சிக் கோப்பை சதமோ, ஐ.பி.எல் பர்ப்பிள் கேப்போ இருந்தால் மட்டும் போதாது. எதிர் அணி ஜிம்பாப்வேவாக இருந்தாலும் அந்தத் தொடரில் எளிதில் இடம் கிடைத்துவிடாது. உலகக்கோப்பையின் தொடர் நாயகனாக இருந்தாலும் சரி, உள்ளூர் வீரனாக இருந்தாலும் சரி, ‘ஃபிட்டா இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு சீட்’ என்பதில் தெளிவாக இருக்கிறது அணி நிர்வாகம். ஏற்கெனவே `yoyo' டெஸ்ட் மூலம் ஃபிட்னெஸின் தேவையை வலியுறுத்திய இந்திய கிரிக்கெட் அணி, இப்போது இன்னொரு படி மேலே போய், வீரர்களுக்கு DNA டெஸ்ட் நடத்தியுள்ளது. இந்தத் தேர்வுகள் எதற்காக? நாம் கொண்டாடும் இந்த விளையாட்டின் …
-
- 0 replies
- 489 views
-
-
4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம் 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம் உலகின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு விளையாட்டுத்துறையும் விதிவிலக்கு அல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தமட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், பின்னர் டி20 போட்டிகளுக்கும், அதனையடுத்து பகலிரவு டெஸ்ட், தற்போது டி10 போட்டிகள் என மாற்றம் பெற்ற கிரிக்கெட், தற்போது நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் புதிதாக அற…
-
- 0 replies
- 427 views
-
-
முத்தரப்பு டி 20 தொடர்: இறுதிப் போட்டியில் நுழைந்தது நியூஸிலாந்து முத்தரப்பு டி 20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனினும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கேப்டன் மோர்கன் 46 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்களும், டேவிட் மலான் 36 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் விளாசினர். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போ…
-
- 0 replies
- 325 views
-
-
பளு தூக்கலில் பதக்கங்களை வென்று சாதித்த மாணவிகள் By NANTHINI 12 NOV, 2022 | 12:35 PM பளு தூக்கும் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று, வவுனியா மாவட்டத்துக்கும் பளு தூக்கல் கழகத்துக்கும் மூன்று மாணவிகள் பெருமை சேர்த்துள்ளார்கள். இலங்கை பளு தூக்குதல் சம்மேளனத்தால் (Sri Lanka Weightlifting Federation) இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பொலன்னறுவையில் நடத்தப்பட்ட தேசிய பளு தூக்குதல் சம்பியன்ஷிப் 2022 (National Weightlifting Championship 2022) போட்டியில் வவுனியா பளு தூக்கல் கழகத்தை சேர்ந்த தி.கோசியா (youth) இரண்டாம் இடத்தையும், நி.சுஸ்மிதாகினி (senior) மூன்றாம் இடத்தையும்,…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
பில் ஹியூக்ஸ் காயமடைந்து சரிந்து விழுந்த பிட்சுக்கு ஓய்வு! சிட்னி: ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹியூக்ஸ், பவுன்சர் பந்து தாக்கி படுகாயமடைந்து கீழே விழுந்த பிட்ச்சுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அந்த பிட்ச் பயன்படுத்தப்பட மாட்டாது என்று சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சிட்னி மைதானத்தின் 7வது பிட்ச் இது. 22 யார்டு நீளமுள்ள அந்த பிட்ச்சில்தான் தலையில் பந்து பட்டு படுகாயமடைந்த நிலையில் கீழே விழுந்தார் ஹியூக்ஸ் என்பதால் அந்த பிட்ச்சை இனிமேல் பயன்படுத்துவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பில் ஹியூக்ஸ் காயமடைந்து சரிந்து விழுந்த பிட்சுக்கு ஓய்வு! சிட்னி மைதானத்தில் மொத்தம் 10 பிட்ச்சுகள் உள்ளன. அதில் 7வது பிட்ச்சில்தான் ஹியூக்ஸ் படுகாயமடைந்து …
-
- 0 replies
- 387 views
-
-
இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான இலங்கை கிரிக்கட் குழாமில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கௌஷால் சில்வா, திமுத் கருணாரட்ன, சகலதுறை ஆட்டக்காரர் டில்ருவன் பெரேரா, விக்கட் காப்பாளர் ப்ரசன்ன ஜயவர்தன ஆகியோர் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடர் இம் மாதம் 26ஆம் திகதி க்றைஸ் ட்சேர்ச் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரை முன்னிட்டு 16 வீரர்கள் அடங்கிய டெஸ்ட் கிரிக்கட் குழாமை இலங்கை கிரிக்கட் தெரிவாளர்கள் பெயரிட்டுள்ளனர். அந்தக் குழாமில் அஞ்சலோ மெத்…
-
- 0 replies
- 261 views
-
-
பெல்ஜியம் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் வெட்டல் பெல்ஜியம் கிரான்ட் பிறிக்ஸில், நடப்பாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான தனது போட்டியாளரான மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனைத் தாண்டி வென்ற பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல், நடப்பாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், ஹமில்டனின் முன்னிலையை 17 புள்ளிகளாகக் குறைத்துக் கொண்டார். நேற்று இடம்பெற்ற குறித்த பந்தயத்தை ஹமில்டனே முதல்நிலையிலிருந்து ஆரம்பித்திருந்தபோதும் இரண்டாவதாக பந்தயத்தை ஆரம்பித்திருந்த வெட்டல் முதலாவது சுற்றிலேயே ஹமில்டனை முந்தியதுடன், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்றார். …
-
- 0 replies
- 578 views
-
-
மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கேப்டன்! கொழும்பு: உலகக் கோப்பையை வெல்லாமல் வந்ததற்காக இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அந்த நாட்டு அணியின் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்ற இலங்கை அணி நேற்று கொழும்பு திரும்பியது. லண்டனிலிருந்து நேரடியாக கொழும்பு வர முடியாமல் தவித்த இலங்கை அணியின் வீர்ரகள் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை கத்தார் ஏர்லைன்ஸ் மூலம் நாடு திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. பின்னர் விமான நிலையத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகம் வரை வீரர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வர…
-
- 0 replies
- 1.1k views
-
-
Published By: RAJEEBAN 13 SEP, 2023 | 12:03 PM பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் இலங்கையின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடும் வீரர் ஒருவர் குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அணி டுனித் வெல்லாலகே என்ற இளம் வீரரைகண்டுபிடித்துள்ளதுபோல சாருஜன் சண்முகநாதனும் இலங்கையின் எதிர்கால வீரர் என வக்கார் யூனுஸ்தெரிவித்துள்ளார். வெல்லாலகே எவ்வளவு திறமையும் தன்னம்பிக்கையும் கொண்ட வீரர் எதிர்காலத்திற்கான ஒருவர் என தெரிவித்துள்ள வக்கார் யூனிஸ் இலங்கையில் திறமைக்கு என்றும் குறைவில்லை. இந்த சிறிய ச…
-
- 0 replies
- 415 views
- 1 follower
-
-
சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட் ‘அவுட்’ மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட் அணி இழந்தது. ஜுவென்டஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கிளப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ் அணிகள் மோதின. இத்தாலியில் நடந்த அரையிறுதியின் முதல் போட்டியில் ஜுவென்டஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த 2வது போட்டி, ஆட்டநேர முடிவில் 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. ரியல் மாட்ரிட் சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (23வது நிமிடம…
-
- 0 replies
- 291 views
-
-
பிளிஸ்கோவாவிடம் தோற்று வெளியேறினார் செரீனா Editorial / 2019 ஜனவரி 23 புதன்கிழமை, பி.ப. 11:24 Comments - 0 அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் 10ஆவது நாளான இன்று, 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார். உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முதலாவது செட்டை 4-6 என இழந்திருந்தார். எனினும், சுதாகரித்துக் கொண்ட 37 வயதான செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது செட்டை 6-4 எனக் கைப்பற்றியதுடன், தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் 5-1 என முன்னிலையிலிருந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எவ்வாறாயினும், அபாரமான மீ…
-
- 0 replies
- 798 views
-
-
அஜ்மல் மீது ஐ.சி.சி. நடவடிக்கை November 06, 2015 பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீரர் சயித் அஜ்மல், சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை விரும்பத்தகாத வகையில் விமர்சித்தமையை அடுத்து, குறித்த விமர்சனத்துக்கு விளக்கம் தருமாறு ஐ.சி.சி. அஜ்மலை கேட்டுள்ளது. அஜ்மல் விளக்கம் கொடுத்த பின்னர் -அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் முறைகேடான பந்துவீச்சால் இவரது பந்துவீச்சுக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. விதிமுறைப்படி 15 டிகிரி வரை முழங்கையை மடக்கலாம். ஆனால் அஜ்மல் வீசும் அனைத்துப் பந்துகளும் விதிமுறைகளை மீறும் வகையில் இருந்தன. 5 மாதங்களுக்கு பிறகு அவரது பந்துவீச்சுக்கு ஐ.சி.சி. அனுமதி அளித்தது. பந்துவீச்சு ம…
-
- 0 replies
- 338 views
-
-
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்துக்கு, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முன்னேறினார். இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் 92 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை ஸ்மித் அடைந்துள்ளார். இதேவேளை, நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 161 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கையணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, 12ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில், இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் நான்கு ஓட்டங்களையே பெற்றிருந்த நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், இரண…
-
- 0 replies
- 458 views
-
-
’அவுட்’ கொடுத்ததால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை December 21, 2015 இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. இதில் நியூசிலாந்து அணிக்கு 189 ஓட்டங்களை இலக்காக கொடுத்துள்ளது இலங்கை அணி. இன்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற 47 ஓட்டங்கள் தேவை. முன்னதாக 2வது இன்னிங்சில் இலங்கை வீரர் ஜெயசுந்தேராவின் டி.ஆர்.எஸ் முறையிலான ஆட்டமிழப்பு சலசலப்பை ஏற்படுத்தியது. நியூசிலாந்தின் பிரேஸ்வெல் 23வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ஜெயசுந்தேராவிற்கு லெக் திசையில் வீசினார். பந்து அவரது கையுறையை உரசிச் சென்றது போல் சென்…
-
- 0 replies
- 721 views
-
-
”கிரிக்இன்போ’ விருதை வென்றார் ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 3வது முறையாக ’கிரிக்இன்போ’ விருதை பெற்றுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் தரம்சாலாவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் ரோஹித் சர்மா 66 பந்தில் 106 ஓட்டங்கள் குவித்தார். இந்த சிறந்த இன்னிங்சிற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே பரிந்துரை செய்தார். இவருடன் முன்னாள் தலைவர்களான வாலஷ் (மேற்கிந்திய தீவுகள்), ஜான் ரைட் (நியூசிலாந்து) ஆகியோரும் அந்த விருது வழங்கும் தெரிவு குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும் ஆண்டின் சிறந்த தலைவருக்கான விருது சமீபத்தில் ஓ…
-
- 0 replies
- 674 views
-
-
400 கி.மீற்றர் பயணித்து செரெண்டிப் கழகத்தை வெற்றிபெறச் செய்து யாழ். திரும்பிய அபிஷான் 05 Jan, 2026 | 01:09 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்திலிருந்து 400 கிலோ மீற்றர் பயணித்து கொழும்பு வருகை தந்து சனிக்கிழமை (03) இரவு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் ஏ குழுப் போட்டியில் பங்குபற்றி கடைசிக் கட்டத்தில் கோல் போட்டு மாவனெல்லை செரெண்டிப் கழகத்துக்கு இறுக்கமான வெற்றியை (1 - 0) ஈட்டிக்கொடுத்த விஜயகுமார் அபிஷான், வெற்றிக்களிப்புடன் போட்டி முடிவடைந்த சிறிது நேரத்தில் மீண்டும் யாழ். திரும்பினார். அபிஷானுடன் அவரது மூத்த சகோதரர், அணித் தலைவர் விஜயகுமார் விக்னேஷும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்து போட்டி முடிந்தவுடன் யாழ். திரும்பினார். இந்த சகோதரர்கள் இருவரும் அற்புதமான கால்பந்…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக நிக் போதஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ் நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. நிக் போதஸ் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியில் இருந்து இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்பார். 42 வயதான நிக் போதஸ், தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பளரும் துடுப்பாட்ட வீரரும் ஆவார். கடந்த 2011 ஆம் ஆண்டு நிக் போதஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 11 ஆயிரம் ஓட்டங்களையும் 50…
-
- 0 replies
- 258 views
-
-
(செ.தேன்மொழி) 2011 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் போதிய ஆதராங்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆகையால் இது தொடர்பான விசாரணைகளை நிறுத்தி வைப்பதற்கு விளையாட்டு குற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த விசேட பொலிஸ் விசாரணைப்பிரிவு தீர்மானித்துள்ளது. ஆட்ட நிர்ணயம் தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இந்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 2019 ஆம் ஆண்டு 24 இலக்க விளையாட்டு தொடர்பான குற்றச் செயற்பாடுகளை தடுக்கும் சட்டத்தின் கீ…
-
- 0 replies
- 510 views
-