விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
உலகக் கிரிக்கெட் கோப்பைப் போட்டித் திருவிழா ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு எட்டிவிட்டது. நோஞ்சான் அணி எனக் குறைவாக மதிப்பிட்ட அணிகள் எல்லாம் விளாசித் தள்ளி தப்புக் கணக்குப் போட்டவர்களை எல்லாம் அதிர்ச்சி வைத்தியத்துக்குள்ளாக்கியது இந்த உலகக் கோப்பையின் ஒரு விசேஷம். அதோடு பெரிய ஜாம்பவான்களாக கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்கிற கதையாக சந்தடியில்லாமல் திரும்பி வந்துள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இந்தியாவின் தோல்வியை மறந்து விட்டாலும் இந்திய இளைஞர்கள் மட்டும் இந்த துக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இந்த இளைஞர்களின் முகங்கள் எல்லாம் கடந்த சில நாட்களாக களையிழந்தும், பொலிவிழந்தும் காணப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்து எ…
-
- 1 reply
- 1.1k views
-
-
விமர்சகர்களின்றி முன்னேற்றம் ஏற்படாது: அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின்.| தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த முழு பேட்டி. | கோப்புப் படம். ஸ்பின்னர் அஸ்வின், தனது ஆட்டம், அவர் மீதான விமர்சனங்கள், கேப்டன் தோனி கூறினால் களத்தில் உயிர்விடவும் தயார் என்று கூறியது ஆகியவை பற்றி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி. ஆஸ்திரேலியா தொடர், மற்றும் உலகக் கோப்பை, வங்கதேசத்தொடரில் மற்றொரு 5 விக்கெட் பவுலிங், இவற்றுடன் நீங்கள் உங்கள் கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருப்பதாக கருதுகிறீர்களா? ஆம்.! நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கியதிலிருந்து இதுதான் எனது சிறந்த பவுலிங்காக அமைந்தது. அனுபவம் கூடக்கூட இன்னும் சிறப்பாக மாறும். நான் என்னையே ஆச்சரியத்திற்கு ஆட்படுத்திக் கொள்ள…
-
- 0 replies
- 400 views
-
-
விக்கெட் இழப்பின்றி ஆடி முடித்த நியூஸிலாந்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே கார்டிப்பில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கை அணிக்கு வழங்க இலங்கை அணியும் முதலில் துடுப்பெடுத்தாடியது. நியூஸிலாந்து அணியின் பந்துகளில் திணறிய இலங்கை அணி வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறியமையினால், இலங்கை அணி 29.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்…
-
- 0 replies
- 410 views
-
-
ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது தென்னாபிரிக்கா! அவுஸ்ரேலிய அணிக்கெதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 10 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி லீக் போட்டி நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் டுபிளசிஸிஸ் 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து 326 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ர…
-
- 0 replies
- 552 views
-
-
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த சில நாட்களிலேயே, அணிக்குள் பிளவு இருப்பது வெளியே தெரிய வந்துள்ளது. இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் கேப்டன் கோலிக்கு ஆதரவாக சில வீரர்கள் இருப்பதாகவும், ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சில வீரர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தோல்விக்குப் பொறுப்பேற்று கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக ரோகித் சர்மாவை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. இந்திய அணியில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் சேர்ந்து கொண்டு அணியில் தன்னிச்சையாக பல முடிவுகளை எடுக்கிறார்கள் என்றும் கோலி மற்றும் சாஸ்திரி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல தவறான முடிவுகளை எடுத்துள்ளனர் என்று…
-
- 0 replies
- 838 views
-
-
அஷ்வின் vs டி வில்லியர்ஸ் - இதுவரை ஜெயிச்சது யாரு? கிரிக்கெட் உலகில், கடந்த சில ஆண்டுகளாக உலகின் அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் மரண பயத்தைக் கொடுத்து வருகிறார் தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ். ஒரு காலத்தில் சச்சின் விக்கெட்டை வீழ்த்தும் பவுலரை உலகம் எப்படி கொண்டாடியதோ, அதுபோல தற்போது டி வில்லியர்ஸின் விக்கெட்டை வீழ்த்தும் நபருக்கு பாராட்டுகள் குவிகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை தென்னாப்பிரிக்கா கைப்பற்ற, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டி20, ஐந்து ஒருநாள் போட்டி, மூன்று டெஸ்ட் இன்னிங்ஸ…
-
- 0 replies
- 581 views
-
-
மாற்றம்... முன்னேற்றம்... கிரிக்கெட்... களம் இறங்கும் பெண் நடுவர்கள்! கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் நடுவர்களை நியமித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது ஐ.சி.சி. இன்று முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை, தாய்லாந்தில் நடக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு, இந்நால்வரும் நடுவர்களாக செயல்படவுள்ளனர். உள்ளூர் மகளிர் போட்டிகளில் மட்டும் அதிகப்படியாக பெண் நடுவர்கள் செயல்பட்டு வந்த நிலையில், ஒரு சர்வதேச தொடருக்கு நான்கு பெண் நடுவர்களை ஐ.சி.சி நியமிப்பது இதுவே முதல் முறையாகும். இவங்கதான் அந்த நாலு பேரு நியூசிலாந்தைச் சார்ந்த கேத்தி கிராஸ், ஆஸ்திரேலியாவின் க்ளேர் பொலோசக், இங்கிலாந்தின் சுயூ ரெட்ஃபெர்ன் மற்…
-
- 0 replies
- 924 views
-
-
05 Mar, 2025 | 01:16 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவின் அற்புதமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்மித் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற்றுவரும் 9ஆவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேறியதை அடுத்து, சர்வதேச 50 ஓவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக ஸ்டீவ் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் ஸ்டீவன் ஸ்மித் அறிவித்தார். இந்தியாவுக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 'இத…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
சம்பியன்ஸ் லீக்கில் மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வந்த பிறீமியர் லீக்கின் இறுதி நாள் ஆட்டங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையில், மன்செஸ்டர் சிற்றியின் சம்பியன்ஸ் லீக் தகுதி ஏறத்தாள உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துடன் ஆர்சனல் முடித்துக் கொண்டது. மன்செஸ்டர் சிற்றி, சுவான்சீ சிற்றி அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்று போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 66 புள்ளிகளைப் பெற்று மன்செஸ்டர் சிற்றி நான்காமிடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று பௌர்ண்மௌத் உடனான போட்டியில் 19-0 என்ற கோல்கண…
-
- 0 replies
- 312 views
-
-
இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் பதவியில் ஜெரோம் ஜயரத்ன இலங்கை உள்ளூர் தொடர்களில் பங்குபற்றிய முன்னாள் சகலதுறை வீரரான ஜெரோம் ஜயரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நடவடிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம், உடனடியாக அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் சபையில் பல்வேறு பதவிகளை வகித்த ஜெரோம் ஜயரத்ன, இறுதியாக செப்டெம்பர் 2015இல், அப்போதைய பயிற்றுநரான மார்வன் அத்தப்பத்து, தனது பதவியிலிருந்து விலகியதையடுத்து, தற்காலியப் பயிற்றுநராகச் செயற்பட்டு, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இலங்கையில் இடம்பெற்ற தொடருக்கும் நியூசிலாந்துக்கெதிராக நியூசிலாந்தில் வைத்து இடம்பெற்ற தொ…
-
- 0 replies
- 308 views
-
-
கால்பந்து உலகின் மிக மோசமான சேம்சைட் கோல் (வீடியோ) அமெரிக்காவில் பிளெயின் நகரில் மினிசோட்டா யுனைடெட் அணியுடன் போர்னேமவுத் அணி மோதியது. இந்த போட்டியில் எதிர்பாராதவிதமாக மினிசோட்டா அணியின் கோல்கீப்பரே சேம்சைடு கோல் அடித்தார். மினிசோட்டா அணியின் கோல்கீப்பர் சமி, கோலி ஏரியாவுக்குள் கிடைத்த பந்தை தனது அணி வீரர்களிடம் எறிவதற்காக முயற்சித்தார். ஆனால் கையில் இருந்து நழுவிய பந்து எதிர்பாராமல் கோல் கம்பத்தை நோக்கி சென்றது. அதனைத் தடுக்க சமியும் முயற்சித்தார். ஆனால் பலன் கிடைக்கவில்லை. பந்து கோல் லைனை தாண்டிவிட்டது. கால்பந்தாட்ட உலகிலேயே மிக மோசமான சேம்சைடு கோலாக இது கருதப்படுகிறது. http://www.vikatan.com/news/sports/66422-mi…
-
- 0 replies
- 431 views
-
-
ஜேர்மன் கால்பந்தாட்ட கழக அணியில் பிரகாசிக்கும் இலங்கை வீரர் வசீம் ராசிக் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று உலக நாடுகளில் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனைகளை நிலைநாட்டும் இலங்கையர்கள் அநேகம். அந்தவகையில் அண்மையில் ேஜர்மன் சென்றிருந்தபோது இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசும் நபரொருவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் தான் இலங்கையிலிருந்து சென்று ஜேர்மனில் கால்பந்தாட்டக்கழகமொன்றுக் குத் தெரிவாகி அங்கு கலக்கி வரும் வசீம் ராசிக். அவர், தனது அனுபவங்கள், சாதனைகள், சவால்களில் சிலவற்றைப் பற்றி பகிர்ந்துகொண்டார். இவர் ஜேர்மனின் தலைநகர் பேர்லினில் தனது பெற்ற…
-
- 0 replies
- 745 views
-
-
சிம்பாவே தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு. சிம்பாவே தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு. இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி விபரம் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அணித்தலைவராக மத்தியூஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக சுரங்க லக்மால் மட்டுமே இடம்பிடித்துள்ளார். அணிவிபரம்-அஞ்சலோ மத்தியூஸ், குசல் ஜனித் பெரேரா , குசல் மெண்டிஸ் ,கௌஷல் சில்வா ,திமுத் கருணாரத்ன , தனஞ்சய டி சில்வா, நிரோஷான் டிக்கவெல்லா ,ரங்கன ஹேரத் ,டில்ருவான் பெரேரா , லக்ஸன் சண்டகன், கசுன் மதுஷங்க , லஹிரு குமார,லஹிரு கமகே,சுரங்க லக்மால், அசேல குணரத்ன http:/…
-
- 2 replies
- 474 views
-
-
"தற்கொலை செய்ய நினைத்தேன்" - சுயசரிதையில் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு, முதல் திருமணம் தோல்வி... இரண்டும் சேர்ந்து வதைக்க, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கெள்ள நினைத்ததாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக், தன் சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார். பிராட் ஹாக், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்துவீச்சாளர். 1996-ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன இவரால், ஷேன் வார்ன் புகழ் வெளிச்சத்துக்கு முன் பிரகாசிக்க முடியவில்லை. ஆனாலும், 2003 மற்றும் 2007 ல் உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். 2008-ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் …
-
- 0 replies
- 538 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இலங்கை வெளியேற்றப்படலாம்: ஐ.தே.க சர்தேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவதன் முன்னர் 'ஸ்ரீலங்கா கிரிக்கெட்' டின் தேர்தல்களை நடந்த தவறினால் இலங்கை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்தது. முன்னர் வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இலங்கை கேட்டதற்கு இணங்க 2013 ஆம் ஆண்டு யூலை வரை நீடிக்கப்பட்டது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தேர்தல்களை நடத்த இலங்கை போதிய காலத்தை ஐ.சி.சி கொடுத்துவிட்டது. ஆனால் இ…
-
- 2 replies
- 905 views
-
-
விராட் கோலியே உலகின் சிறந்த பேட்ஸ்மேன்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் புகழாரம் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டம் ஆகிய கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் விராட் கோலியே உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்துள்ளார் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார். புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 350 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி, கேதர் ஜாதவ் ஆகியோரின் அதிரடியான சதமே இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. …
-
- 0 replies
- 504 views
-
-
இந்தியாவிற்கு எதிரான வங்காள தேச கிரிக்கெட் அணி அறிவிப்பு இந்தியாவிற்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட வங்காள தேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - வங்காள தேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் வருகிற 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் வங்காள தேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவிற்கு எதிரான தங்கள் அணியை இன்று அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. முஸ்டாபிஜ…
-
- 0 replies
- 393 views
-
-
பிரஸீலிய அழகி 25 வயதான பெர்னான்டா உலியானா உதவி நடுவரகியுள்ளார்! http://www.stuff.co.nz/sport/football/10035479/Brazils-breakthrough-referee-Fernanda-Colombo-Uliana
-
- 4 replies
- 682 views
-
-
ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இரு அணிகளினதும் தலைவர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் வழிநடத்தலால் விறுவிறுப்புடன் நிறைவுக்கு வந்தது. இதில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டாலும், அண்மைக்கால ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற காரணத்தால் இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ஓட்டக்குவிப்பில் அசத்தி வருகின்ற சந்திமால், ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்காக…
-
- 0 replies
- 270 views
-
-
போலி ஐபிஎல்: ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர் கைது 41 நிமிடங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, ஐபிஎல்: போலி கிரிக்கெட் போட்டியை நடத்தியவர்களை இந்திய போலீசார் கைது செய்தனர் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் (ஐபிஎல்) போலியான பதிப்பை உருவாக்கி, ரஷ்யாவில் சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய ஒரு கும்பலை இந்தியாவில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த போலி ஆட்டம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சத்துக்கும் மேல் (கிட்டத்தட்ட $4,000) அவர்கள் ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மோசடிக்கு உயிர் கொடுக்க, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குரலில் ஒருவர் பேசுவது போலவும் இந்த கும…
-
- 1 reply
- 322 views
- 1 follower
-
-
புதிய FIFA தரவரிசை வெளியீடு : ஆண்டின் சிறந்த அணியாக ஜெர்மனி சாதனை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) இந்த ஆண்டிற்கான இறுதி தரவரிசை வெளியீட்டின்படி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி ‘ஆண்டின் சிறந்த அணி’யாக 2017ஆம் ஆண்டு முழுவதும் நீடித்துள்ளது. 2018ஆம் ஆண்டு தனது உலக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள போராடவிருக்கும் ஜெர்மனிக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக இருந்தது. 2017 இல் 10 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஜெர்மனி, தான் ஆடிய 15 போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக உள்ளது. இதன்மூலம் 2016 மற்றும் 2015இல் ஆண்டின் சிறந்த அணியாக வந்த முறையே ஆர்ஜன்டீனா மற…
-
- 0 replies
- 312 views
-
-
சிலம்பம் சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. "சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு.எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்…
-
- 1 reply
- 1.3k views
-
-
38 வயதிலும் அபார கேட்ச் பிடித்த அப்ரிடி: குவியும் பாராட்டுக்கள் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, லீக் போட்டி ஒன்றில் பிடித்த கேட்ச்சின் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி. ஆல்ரவுண்டரான இவர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், தற்போது பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தான் பிரிமியர் லீக் போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகின்றன. இதில், கராச்சி அணிக்காக அப்ரிடி விளையாடி வருகிறார். நேற்று நடந்த போட்டியில், கராச்சி கிங்ஸ் அணியும், குவட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின. குவாட்டா அணி துடுப்பாட்டத்த…
-
- 0 replies
- 335 views
-
-
கோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ; நாளை ஆரம்பம் : அச்சுறுத்தலாக அமையும் காலநிலை கடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெற்றுவரும் கொமன்வெல்த் விளையாட்டுப்போட்டி நாளை அவுஸ்திரேலியாவின் கோல்கோஸ்ட் நகரில் ஆரம்பமாகின்றது. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து இந்த கொமன்வெல்த் விளையாட்டு போட்டி இடம்பெற்று வருகின்றது. இம்முறை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் (கொமன்வெல்த் விளையாட்டு) 6, 600 வீர வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள போட்டிகளில் ஆண் பெண் இருபாலாருக்கும் சரிசமமான தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும். ஒலிம்பிக், ஆச…
-
- 2 replies
- 401 views
-
-
விராட் கோலியின் அணுகுமுறை சரியா? டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றதுமே பலர் மனதில் எழுந்திருக்கக்கூடிய கேள்வி இதுதான். “வெற்றிபெற வேண்டும் என்று ஆடியது சரியா?” இந்திய அணித் தலைவர் விராட் கோலி, பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த ஒரு கருத்து இதற்குப் பதிலாக அமைந்தது. “டிராவுக்காக ஆடியிருந்தால் 150 ரன் வித்தியாசத்தில் தோற்றிருப்போம்.” இது சரிதானா? டிராவுக்காக ஆடியிருந்தால் இந்தியா படு கேவலமாகத் தோற்றிருக்குமா? இப்போது வெற்றிக்காக ஆடியதால்தான் வெற்றிக்கு மிக அருகில் வர முடிந்ததா? கடைசியில் தோல்விதான் கிடைத்தது என்றாலும் இந்த அணுகுமுறையில் ஏதேனும் பலன் இருக்கிறதா? ஒரு போட்டியை எப்போது டிரா செய்ய முயற்சிக்க வேண்டும்? அடிக்க வேண்டிய ரன் விகிதம் 5 அல்லது அதற்கு மேல்…
-
- 0 replies
- 343 views
-