விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
11 ஆவது உலகக் கிண்ணம் : 11 கிலோ எடை வெள்ளியால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட 11 ஆவது உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரத்தையும் 11 கிலோ எடையையும் கொண்டது. குறித்த 11 ஆவது உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தப் போகும் அணி எது என்பது மார்ச் மாதம் 29 ஆம் திகதி தெரிய வரும். ஆரம்பத்தில் ஒவ்வொரு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போதும், வெவ்வேறு வடிவங்களில் கிண்ணம் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியின் போது தான் நிரந்தர வடிவமைப்பை பெற்றது. அந்த உலகக் கிண்ணத்தை லண்டனை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியது. இதற்காக 2 மாத காலம் எடுத்துக் கொண்டது. உலகக் கிண்ணம் 60 சென்ரிமீற்றர் உயரமும், 11 கிலோ எடையும் கொண்டது. வெள்ளியால் செய்…
-
- 0 replies
- 504 views
-
-
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : ஆரம்ப விழா இன்று 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆரம்ப விழா அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளில் இன்று கோலாகலமாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 14 அணிகள் பங்கேற்கும் 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் சனிக்கிழமை 14 ஆம் திகதி தொடங்குகிறது. மார்ச் 29 ஆம் திகதி வரை இடம்பெறும் இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன. உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாக இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் தொடக்க விழா இன்று இரண்டு நகரங்களிலும் கோலாகலமாக நடத்த …
-
- 2 replies
- 1k views
-
-
2015: எந்த அளவுக்கு இந்தியா தயாராக உள்ளது? உலகக் கோப்பையை இந்தியா தக்கவைத்துக் கொள்ளுமா என்னும் கேள்வியும் ஏக்கமும் இந்திய ரசிகர்கள் மனங்களில் உள்ளன. இந்தியாவின் அதி தீவிர ஆதர வாளர்கூட இந்தியா வெல்லும் என்று சொல்லும் நிலையில் இன்றைய இந்திய அணி இல்லை என்பதே கசப்பான யதார்த்தம். இந்திய அணியைப் பீடித்தி ருக்கும் பிரச்சினைகளில் முதன்மை யானது உடல் தகுதி. ரோஹித் சர்மா, ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், ஷமி, மோஹித் சர்மா ஆகியோர் எப்போது வேண்டுமானாலும் காய மடையலாம் என்ற நிலையே உள்ளது. இரண்டாவதாக, இந்திய பவுலிங். உயர் தரத்திலான போட்டி களுக்கு ஏற்ற பந்து வீச்சு இந்தியா விடத்தில் இல்லை என்பதே நிதர்சனம். அதுவும் வேகப்பந்துக்கு உகந்த ஆஸ்திரேலிய நியூஸிலாந்து …
-
- 0 replies
- 735 views
-
-
சதத்தை நெருங்கும் போது பேட்ஸ்மென்களின் ஆட்டத்தில் நடுக்கம் ஏற்படுவது உண்மையே: ஆய்வு 90 ரன்களைக் கடந்த பிறகு சதம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் பேட்ஸ்மென்களுக்கு நடுக்கம் ஏற்படுவது உண்மையே என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் உள்ள QUT பொருளாதாரப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 1971ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான ஒருநாள் சர்வதேச போட்டிகளை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அப்போது, பேட்ஸ்மென்கள் தங்களது முக்கிய மைல்கல்லை எட்டும் முயற்சியில் தங்களது ஸ்ட்ரைக் ரேட்டை குறைத்து விடுகின்றனர் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், ம…
-
- 1 reply
- 343 views
-
-
8ஆவது ஐ.பி.எல். ஏப்ரல் 8 இல் ஆரம்பம் 8ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து ஆண்டுதோறும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 8 ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. இப் போட்டி குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை, புனே ஆகிய இடங்களில் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் மைதானமான …
-
- 449 replies
- 23.8k views
-
-
கபில் தேவின் 175 ரன் இன்னிங்ஸைக் கண்டு மிரண்டு போனேன்: கிரேம் ஹிக் 1983 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணியில் கேப்டன் கபில் தேவ் 175 ரன்கள் எடுத்ததை நேரில் பார்த்து மிரண்டு போனேன் என்று ஜிம்பாப்வே நாட்டுக்காரரான முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மென் கிரேம் ஹிக் கூறியுள்ளார். கிரேம் ஹிக் வயது அப்போது 17. ஜிம்பாப்வேயிற்கு டெஸ்ட் தகுதி கிடைக்கவில்லை. கபில் 175 ரன்கள் அடித்த போட்டியின் போது கடைசி 10 ஓவர்கள் ஜிம்பாப்வே அணிக்கு பதிலி வீரராக பீல்டிங் செய்துள்ளார் கிரேம் ஹிக். இந்த அனுபவம் பற்றி கிரேம் ஹிக் பகிர்ந்து கொண்ட போது, “அவர் ஆட்டததைப் பார்த்து மிரண்டு போனேன், கபிலின் பேட்டிங் என்னை வியப்பில் ஆழ்த்தியது. கடைசி 10 ஓவர்கள் நான் பத…
-
- 0 replies
- 357 views
-
-
அதிக உலகக் கோப்பையில் விளையாடியவர்கள் 2015 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதன் மூலம் 5 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இணைகிறார் இலங்கையின் மகிலா ஜெயவர்தனே. இவரின் முதல் உலகக் கோப்பைப் போட்டி 1999. பாகிஸ்தானின் சயீத் அப்ரிடிக்கும் இது 5-வது உலகக் கோப்பைத் தொடர். இவருக்கும் 1999-ம் ஆண்டு தொடர்தான் முதல் உலகக் கோப்பைத் தொடர். அதிக உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியவர் என்ற பெருமையை பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத் முதலில் பெற்றார். கடந்த 1975-ம் ஆண்டு தொடரில் அறிமுகமான மியான்தத், முதல் 6 உலகக் கோப்பைத் தொடர்களிலும் விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1992 முதல் 2011 வரை நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கேற்று, அதிக உலகக்கோப்பைத் தொ…
-
- 0 replies
- 548 views
-
-
பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் டயமன்ஸ் சம்பியன் கரவெட்டி பிரதேச இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டு நிகழ்வில், பெண்களுக்கான மென்பந்தாட்ட கிரிக்கெட் போட்டியில் வதிரி டயமன்ஸ் அணி சம்பியனாகியது. கரவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்குபற்றிய இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி அணிக்கு 6 பேர் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக இமையாணன் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (08) நடைபெற்றது. இறுதிப்போட்டியில் அல்வாய் மனோகரா அணியும் வதிரி டயமன்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மனோகரா அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 5 ஓவர்களில் 43 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டயமன்ஸ் அணி, 4.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து…
-
- 3 replies
- 456 views
-
-
இலங்கையின் வெற்றிகரமான உலகக்கிண்ணம் - 1996 வில்ஸ் உலகக்கிண்ணம் என்றழைக்கப்பட்ட 1996ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரானது 6ஆவது உலகக்கிண்ணமாக அமைந்தது. இந்திய, இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் இணைந்து கூட்டாக நடாத்திய இந்த உலகக்கிண்ணம், இலங்கை அணியால் வெற்றிகொள்ளப்பட்டது. இலங்கை அணி இந்த உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்டது என்பதற்கப்பால், இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றும் தொடராக இது அமையும். இலங்கை அணி உலகக்கிண்ணத்தை இதுவரை வென்றுள்ள ஒரே சந்தர்ப்பமாகவும் இது காணப்படுவதால் (டுவென்டி டுவென்டி போட்டிகளின் உலகத் தொடர் உலகக்கிண்ணம் என்றழைக்கப்படுவதில்லை. அவை 'உலக டுவென்டி டுவென்டி' என்றே அழைக்கப்படுகின்றன.) அந்தத் தொடரை மீட்டுப் பார்க்கலாம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்த…
-
- 0 replies
- 440 views
-
-
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களின் வீதியோட்டம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் பிரதான நிகழ்வான வீதியோட்டம் வெள்ளிக்கிழமை(06) நடைபெற்றது. இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு முதுநிலைப் பிரிவு எனும் இரு பிரிவுகளாக நடைபெற்றது. இப் போட்டிக்கு இரு பிரிவுகளிலிருந்தும் சுமார் 250 மாணவர்கள் பங்குபற்றினர். வீதியோட்டத்தை யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் சண்.தயாளன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இப்போட்டியில் இளநிலைப்பிரிவில் முதலாமிடத்தை வி.சஜீவன் இரண்டாமிடத்தை நி.ஆதவன், மூன்றாமிடத்தை ந.பானுஜன் ஆகியோர் பெற்றுக்கொணடனர். முதுநிலைப்பிரிவில் முதலாமிடத்தை எஸ்.சுபராஜ் இரண்டாமிடத்தை எஸ்.ஜெசிந்தன் மூன்றாமிடத்தை தோ.நிரோஜன…
-
- 3 replies
- 603 views
-
-
தோனியும் ‘மேன்லி பியூட்டி பார்லர்’ சிகையலங்கார நிலையமும் தோனி தனது சிகையலங்காரத்தை அடிக்கடி விதம் விதமாக மாற்றுபவர் என்பது நாம் அறிந்ததே. அவர் தனது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்வில் இருந்த சமயம், ‘மேன்லி பியூட்டி பார்லர்’ என்ற ஒரு சிகையலங்கார நிலையத்திற்கு அடிக்கடி செல்வார் என்பது உள்ளிட்ட சுவையான தகவல் அடங்கிய அவரது வாழ்க்கை வரலாற்றை மூத்த பத்ரிகையாளர் பிஸ்வதீப் கோஷ் எழுதியுள்ளார். "எம்.எஸ்.டி, தி மேன், தி லீடர்" என்ற வாழக்கை வரலாற்று நூலில் தோனியைப் பற்றி இதுவரை கேள்விப்படாத தரவுகள், நிகழ்வுகள் மற்றும் அவரைப்பற்றி பிறர் கூறுவது என்று 245 பக்கங்க்ளுக்கு அந்த நூலை எழுதியுள்ளார் பிஸ்வதீப். தன் கிரிக்கெட் வாழ்வின் தொடக்க காலங்களில் ராஞ்சியில் உள்ள சாதாரணமான சலூன்களில…
-
- 0 replies
- 381 views
-
-
40 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் மிகப் பெரிய துரதிர்ஷ்டசாலி யார் தெரியுமா....? பெங்களூரு: 40 ஆண்டு கால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய துரதிரஷ்டசாலி என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரஹாம் கூச்சைக் கூறலாம். காரணம், அவரது வரலாறு அப்படி. உலக கிரிக்கெட் அணிகளிலேயே இங்கிலாந்து அணியைப் போல சோக வரலாறு கொண்டது எதுவும் இருக்க முடியாது. கிரிக்கெட்டின் தாயகமாக கூறப்படுவது இங்கிலாந்து. ஆனால் இந்த அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. மேலும் உலககக் கோப்பை வரலாற்றில் 3 முறை இறுதிப் போட்டியில் தோல்வி கண்ட ஒரே அணி இங்கிலாந்துதான். அந்த மூன்று இறுதிப் போட்டியிலும் கிரஹாம் கூச்சும் ஆடியுள்ளார். இதுதான் மிகப் பெரிய சோகம். 1979 இறுதிப் போட்ட…
-
- 0 replies
- 481 views
-
-
குழந்தையை பார்க்க அவசரம் இல்லை: உலகக் கோப்பையை வெல்வதுதான் மிக முக்கியம் - கேப்டன் தோனி பேட்டி எனது குழந்தையை பார்க்கச் செல்வது மிக அவசரமான வேலையில்லை. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் மிக முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். தோனி, பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். குர்காவ்னில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவரது மனைவி சாக்ஷிக்கு குழந்தை பிறந்தது. இது தோனியின் முதல் குழந்தையாகும். கடந்த இரு மாதங்களாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அடுத்து உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது. எனினும் தனது குழந்தையை பார்க்க தோனி இந்தியாவுக்கு உடனடியாக வந்து செல்வார் என்று எத…
-
- 0 replies
- 282 views
-
-
நெருக்கடி என்றால் என்ன என்று எனக்கு தெரியாது: லஷித் மலிங்கா காயம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடாத இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா தனக்கு நெருக்கடி என்றால் என்னவென்றே தெரியாது என்று கூறியுள்ளார். வேகம் குறைந்து, வயிறும் அவருக்கு முன்னால் நீண்டு கொண்டிருக்க லஷித் மலிங்காவின் தோற்றம் அவரை அச்சுறுத்தும் பவுலர் என்ற நிலையிலிருந்து கீழே இறக்கி விடுமோ என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. “நெருக்கடி தருணங்கள் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. பிரஷர் தருணங்கள் எனக்கு பழக்கமானவை. அதனால் நெருக்கடி பற்றி தனியாகப் பேச வேண்டினால் எனக்கு அதைப்பற்றி தெரியாது என்றே கூறுவேன். நான் எப்போதும் எங்கு விளையாடுகிறேன், சூழ்நிலைம…
-
- 0 replies
- 509 views
-
-
முக்கியக் கட்டத்தில் தவறு செய்த ஆனந்த் மீண்டும் கார்ல்சனிடம் தோல்வி ஜெர்மனியில் நடைபெறும் கிரென்கா கிளாசிக் செஸ் போட்டித் தொடர் 4-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வி அடைந்தார். வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஆனந்த் இந்தத் தோல்வியினால் 6-வது இடத்தில் உள்ளார். இதனால் மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஆனந்த். இந்த முறை கார்ல்சன், ஆனந்தின் உத்திகளை முன்னமேயே கணித்து விட்டது போலவே இருந்தது. ஆனந்தின் காய்கள் உள்ளே நுழையாதவாறு கல்கோட்டைத் தடுப்பணை அமைத்தார். தொடக்கத்தில் ஆனந்துக்கு அனுகூலமான நிலைமைகள் இருந்தது. செஸ் போர்டின் மையப்பகுதி காய்கள் நகர முடியாதவாறு இறுக்கமாக அமைந்தது. ஆன…
-
- 2 replies
- 623 views
-
-
உலக கோப்பையில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப்-10 பேட்ஸ்மேன்கள்! சென்னை: வரும் 14ம்தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில், பல நாட்டு ரசிகர்களும் தங்களது ஃபேவரைட் ஹீரோ பேட்ஸ்மேன்கள் மீது ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை வைத்து காத்திருக்கின்றனர். இந்த உலக கோப்பையில் ஜொலிக்க வாய்ப்புள்ள கிரிக்கெட் வீரர்களில் முக்கியமான பத்து பேரின் பெயர்களையும், அதற்கான காரணங்களையும் இப்போது பார்க்கலாம். ஏபிடி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ். டெஸ்ட் போட்டியிலும் 2வது ரேங்க் இவருக்கு என்பதில் இருந்து எத்தனை திறமையான மனிதர் என்பதை புரிந்துகொள்ள முடியும். தொடர்ந்து 78 டெஸ்ட்…
-
- 0 replies
- 1.5k views
-
-
உலகக் கோப்பையை வென்றால் 1 மில்லியன் டாலர்கள் போனஸ்; இலங்கை அரசு அறிவிப்பு உலகக் கோப்பையை வென்றால் இலங்கை அணி வீரர்களுக்கு 1 மில்லியன் டாலர்கள் போனஸாக அளிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அரசுச் செய்தித் தொடர்பாளர் ரஜித சேனரத்ன கூறும்போது, “உலகக் கோப்பையை மீண்டும் வெற்றி பெற்று நாட்டுக்குக் கொண்டு வந்து பெருமை சேர்த்தால் இலங்கை அணிக்கு 1 மில்லியன் டாலர்கள் போனஸாக வழங்கப்படும்.” என்றார். 1996-ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் வென்றது. அதன் பிறகு 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இறுதிக்கு தகுதி பெற்றது. 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கை வென்றபோது, அந்த அணி வீரர்களுக்கு கார்கள், வீடுகள் மற்றும் நிலம் வழங…
-
- 1 reply
- 513 views
-
-
இலங்கை அணிக்கு உதவ ஜெரெமி ஸ்னேப் நியமிப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக ளில் விளையாடவுள்ள இலங்கை அணியினரை ஊக்குவிக்கும் பொருட்டு உளவியல் ஆலோசகராக ஜெரெமி ஸ்னேப் நியமிக்கப் பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவ னம் அறிவித்துள்ளது. இப்பதவியில் அவர் நியமிக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது தடவையாகும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போதும் இலங்கையின் உளவியல் ஆலோசகராக ஜெரெமி செயற்பட்டிருந்ததுடன் அந்தத் தொடரை இலங்கை கைப்பற்றியிருந்தது. ஜெரெமி ஸ்னேப் இம் மாதம் 24ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு இலங்கை அணியினருடன் இணைந்து செயற்படவுள்ளார். உலகக் கிண்ணத்தை மனத்தில் நிறுத்தி இலங்கை வீர…
-
- 0 replies
- 325 views
-
-
சங்கக்காரவின் திறமை இலங்கைக்கு கைகொடுக்கும் : முன்னாள் ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான சங்கக்காரவின் திறமையானது உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்கு கைகொடுக்கும் என மேற்கிந்தி யத்தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார். சமீபத்திய அடுத்தடுத்த தோல்விகளால் உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு தயாராவதில் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியை தயார் செய்வதில் முழு மகிழ்ச்சி இல்லை என தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜெயசூரியவும் கவ லை தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே விவி யன் ரிச்சர்ட்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்தெரி…
-
- 0 replies
- 302 views
-
-
பிசிசிஐ தேர்தலில் போட்டியிட சீனிவாசன் முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கைகழுவுகிறார் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட என்.சீனிவாசன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மத்திய நிதியமைச்சரும், டெல்லி மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் ஜேட்லியை சீனிவாசன் சந்தித்துப் பேசி ஆதரவு கேட்டுள்ளார். பிசிசிஐ பதவியில், ஐபிஎல் அணி உரிமையாளராக இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து நீதிமன்றத்தால் தற்காலி கமாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள சீனிவாசன் இப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக உள்ளார். த…
-
- 0 replies
- 309 views
-
-
இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டும் பிரெட் லீ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய வேகப் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவ தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச்சு நுட்பங்களை கற்றுக் கொடுக்க நான் தயாராகவே இருக்கிறேன். அதே நேரத்தில் இப்பணியை என்னால் முழு நேரமாக ஏற்க முடியாது. எனெனில் உலகம் முழுவதும் உள்ள வேகப்பந்து வீச்சாளருக்கு உதவ வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார். http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF…
-
- 0 replies
- 364 views
-
-
இந்த உலக கோப்பை தொடர்தான் இந்த 10 முன்னணி வீரர்களுக்கும் கடைசி! சென்னை: நடப்பு உலக கோப்பை தொடர் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கடைசி உலக கோப்பை தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இந்திய அணி கேப்டன் மகேந்திரசிங் டோணியும் ஒருவர். வயது மூப்பு தவிர்த்து, காயம், டீம் பாலிடிக்ஸ் என பல காரணங்களால் வீரர்கள் அடுத்த உலக கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் தொடராமல், இடையிலேயே ஓய்வு பெற திட்டமிட்டுள்ளனர். சிலர் இந்த உலக கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு பெறவும் திட்டமிட்டுள்ளனர். அதில் முக்கியமான பத்து வீரர்களின் பட்டியல் இதோ... டோணி இந்திய அணியின் கேப்டன் டோணிக்கு தற்போது 33 வயதாகிறது. உலக கோப்பையை வென்றாலும், தோற்றாலும், அதையே காரணமாக சொல்லிவிட…
-
- 0 replies
- 2k views
-
-
சங்கக்காரவின் குற்றச்சாட்டு ஆச்சரியமளிக்கின்றது: மஹிந்தானந்த இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார, தன் மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கட் சபையின் செயலாளர் நிஷான்த ரணதுங்க மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மறைமுகமாக செயற்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார காரசாரமாக குற்றம் சுமத்தியிருந்தார். இந்நிலையிலேயே மஹிந்தானந்த அளுத்கமகே தனது மறுப்பை ஈ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்…
-
- 0 replies
- 405 views
-
-
17/5 என்ற நிலையில் முதல் பந்தையே பவுண்டரி அடித்த கபில்: 1983 உலகக்கோப்பையை நினைவுகூரும் ஸ்ரீகாந்த் 1983 உலகக்கோப்பை போட்டிகளில் பலமான அணிகளை வென்று கோப்பையையும் முதன் முதலாக கைப்பற்றிய அந்தத் தொடரை முன்னாள் அதிரடி தொடக்க வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த முழு பேட்டியில் கூறியிருப்பதாவது: "உலகக்கோப்பை வெற்றி நாங்கள் சிறந்த அணி என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய விதத்தில் அந்த தொடர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனை தருணமாகும். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஓல்ட் டிராபர்டில் நடந்த முதல் …
-
- 1 reply
- 523 views
-
-
உலகக்கோப்பை: அதிரடி பேட்களுக்கு வருகிறது கட்டுப்பாடு உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் பயன்படுத்தப்படும் மட்டைகளுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வர ஐசிசி பரிசீலனை செய்து வருகிறது. நவீன விதிமுறைகளின்படி, ஆட்டம் ஒரேயடியாக பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாகி, பவுலர்களை கோமாளியாக்கி வருகிறது என்ற விமர்சனங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதுபற்றி ஐசிசி தலைமை அதிகாரியும் முன்னாள் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பருமான டேவ் ரிச்சர்ட்ஸன் கூறும்போது, “பிரமாதமான ஷாட்களை ஆடிவரும் டீவிலியர்ஸ், குமார் சங்கக்காரா, பிரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட வீர்ர்கள் மீது யாருக்கும் எந்த வித மனத்தாங்கலும் இல்லை. இது போன்ற வீரர்கள் அசாதாரணத் திறமை உடையவர்கள் இவர்கள் சிக்சர்க…
-
- 1 reply
- 548 views
-