Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தொடரை வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு எதிராகக் களமிறங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தாக, அடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் இந்தியா, இங்கிலாந்துக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஸ்டூவர்ட் கூறியது போல் “ஒருநாள் கிரிக்கெட் பாடம் எடுத்தது”. இந்த நிலையில் நாளை 4வது ஒருநாள் போட்டியில் வென்று ஒருநாள் தொடரை இங்கிலாந்தில் கைப்பற்றும் முயற்சியில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அணி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாடியதோ அதேபோல் இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நாம் மொயீன் அ…

  2. உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் என்று கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக காயத்தினால் வெளியேறும் மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.பி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இழப்பது பிரச்சினையல்ல, உலகக் கோப்பையை வெல்வதே முக்கியம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறிய பிறகு ஜிம்பாப்வேயிடம் தோல்வி தழுவி முதலிடத்தை இழந்தது ஆஸ்திரேலியா. இதன் மூலம் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்ட இந்திய அணி இப்போது முதலிடத்தில் தனியான அணியாகத் திகழ்கிறது. ஹராரேயில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தர்மசங்கடமான தோல்வியைத் தழுவியது. கேப்டன் மைக்கேல் கிளார்க் …

  3. இரணைமடு ஆதவன் வி.கழக கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் கிளிநொச்சி புதிய பாரதி சம்பியன் 2014-09-01 10:26:46 இரணைமடு ஆதவன் விளையாட்டுக் கழகம் நடத்திய மாபெரும் கரப்பந்தாட்ட தொடரின் வெற்றிக் கிண்ணத்தை புதிய பாரதி அணி கைப்பற்றிக் கொண்டது. கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட இப் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் அண்மையில் இரணைமடு ஆதவன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் இளந்தென்றல் அணியும் புதிய பாரதி அணியும் மோதிக் கொண்டன. இரு அணிகளும் தலா ஒவ்வொரு செட்டினை பெற்று சமநிலையில் இருந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி செட்டில் வெற்றிபெற்று 2:1 என்ற கணக்கில் கிளிநொச்சி புதிய பாரதி அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது. …

    • 0 replies
    • 531 views
  4. உலகின் சிறந்த வீரர்களில் நானும் ஒருவர் 10-வது நிலையில் (பொசிஷன்) ஆடக்கூடிய உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் நானும் ஒருவர் என ஆர்செனல் கால்பந்து அணியின் ஸ்டிரைக்கர் மெசூத் ஒஸில் (Mesut Özil) தெரிவித்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த மெசூத், கடந்த ஆண்டு ஆர்செனல் அணிக்கு தாவினார். ஆனால் கடந்த சீசனில் அவ்வப்போது மட்டுமே களமிறக்கப்பட்ட அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளானார். அதற்குப் பதிலளித்துள்ள மெசூத் மேலும் கூறியதாவது: வலது புறத்தில் விளையாடக்கூடிய என்னை இடதுபுறத்தில் விளையாட வைப்பதால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. நான் கோலடிப்பதோடு மட்டுமின்றி, கோல் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொட…

  5. கேப்டன் தோனி அதிக ஸ்டெம்பிங் செய்து உலக சாதனை பதிவு செய்த நேரம்: 2014-08-30 17:17:44 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்து தோனி உலக சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 2 ஸ்டெம்பிங் செய்து தோனி முதலிடம் பிடித்தார். இதுவரை 131 முறை ஸ்டெம்பிங் செய்து விக்கெட் கீப்பர் தோனி முதலிடம் பிடித்துள்ளார். 129 முறை ஸ்டெம்பிங் செய்து இலங்கை வீரர் சங்ககாரா 2-வது இடத்தில் உள்ளார். http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=107294

  6. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வென்றது பாகிஸ்தான் 2014-08-23 19:01:13 இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 65 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பெண்டரிகள் உட்பட 89ஓட்டங்களைம் மஹேல ஜயவர்தன 66 பந்துகளில் 63 ஓட்டங்களையும் பெற்றனர். அஷான் பிரியஞ்சன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 40 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர். …

  7. எப்போதும் வலியில் இருப்பவர் போல் தோன்றுகிறார் டன்கன் பிளெட்சர்: பாய்காட் கருத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு ரவி சாஸ்திரியை அணி இயக்குனராக நியமித்ததைப் பாராட்டிய ஜெஃப் பாய்காட், பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் மீது தனது கேலி விமர்சனத்தைத் தொடுத்துள்ளார். "நான் டன்கன் பிளெட்சரை ஒரு போதும் பெரிய அளவுக்கு ஆதரிப்பவன் அல்ல. மனிதருக்கு சிரிக்கவே தெரியாது. முசுட்டுத் தோற்றம் உடையவராக இருக்கிறார். எப்போதும் வலியில் இருப்பவர் போலவே அவர் இருக்கிறார். மனிதர், தான் நேசிக்கும் வேலையைச் செய்வதற்கு நிறைய பணம் அளிக்கப்படுகிறது, ஆகவே கொஞ்சம் வேடிக்கை, விளையாட்டு ஆகியவை தேவை. அவரது முசுட்டுத்தனம் நிச்சயம் இந்திய அணியின் ஆட்டத்தைப் பாதிக்கிறது என்று நான் நம்புகிறே…

  8. பள்ளி நாட்களில் நன்றாக விளையாடியதற்காக புறக்கணிக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மென் கிளென் மேக்ஸ்வெல் நன்றாக விளையாடியதன் காரணமாகவே அவர் படித்த பள்ளி அவரைப் புறக்கணித்தது. இன்று ரிவர்ஸ் ஷாட்டில் பெரிய அளவுக்கு பவுலர்களை மிரட்டி வரும் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் அவரது பள்ளியினால் ஒதுக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வலது கை பேட்ஸ்மெனாக தொடக்கப் பள்ளி காலத்திலேயே பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்ந்த கிளென் மேக்ஸ்வெலை அழைத்து இனி இடது கையில் விளையாடினால்தான் அணியில் இருக்கப்போகிறாய் என்று பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் இவரை ஒடுக்கியுள்ளனர். அதன் பிறகு இடது கையில் பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார் மேக்ஸ்வெல்.…

  9. ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரராக ரொனால்டோ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014 08:44 0 COMMENTS ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரராக போர்த்துக்கல் அணித்தலைவரும், ரியல் மாட்ரிட் கழக வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான போட்டியில் நெதர்லாந்து வீரர் ஆர்ஜன் ரொபன், ஜேர்மனி வீரர் மனுஎல் நெயுர் ஆகியோருடன் போட்டியிட்டு ரொனால்டோ இந்த விருதை தனதாக்கியுள்ளார். இந்த விருதை பெறும் நான்காவது வீரர் இவர். இதற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் பிரான்க் ரிபேரி, ஸ்பெயின் வீரர் அன்றேஸ் இனியஸ்டா, ஆர்ஜன்டீன வீரர் லியனொல் மெஸ்ஸி ஆகியோர் வென்றுள்ளனர். மெஸ்ஸி அவரின் பார்சில்னோ கழகத்திற்காக விருதைப் பெற்றுக் கொண்டார். ஊடகவியலாளர்களினால் வாக்களித்து தெரி…

  10. இங்கிலாந்து அணியின் புதிய தலைவர் ரூனி 2014-08-29 10:22:49 இங்கிலாந்தின் புதிய அணித் தலைவராக மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் முன்கள வீரர் வெய்ன் ரூனியை பயிற்றுநர் ரோய் ஹொஜ்சன் நியமித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளின் முதலாம் சுற்றுடன் இங்கிலாந்து அணி வெளியேற்றப்பட்ட பின்னர் அணித் தலைவர் ஸ்டீவன் ஜெரார்ட் ஓய்வு பெற்றதை அடுத்து தலைவர் பதவியை 28 வயதான ரூனி பொறுப்பேற்றுள்ளார். 95 சர்வதேச போட்டிகளில் 40 கோல்களைப் போட்டுள்ள வெய்ன் ரூனியை மென்செஸ்டர் யுனைட்டட் அணியின் தலைவராக அதன் புதிய பயிற்றுநர் லூயி வன் கால் இம் மாத முற்பகுதியில் நியமித்திருந்தார். இங்கிலாந்துக்கும் நோர்வேக்கும் இடையில் செப்டெம்பர் 3ஆம் திகதி சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி வெம்ப்ளி விளையாட்டர…

  11. UEFA Champions League குழு A Atletico Madrid, Juventus Turin, Piräus, Malmö FF குழு B Real Madrid, FC Basel,FC Livepool, Ludogorez Rasgrad குழு C Bayer Leverkusen, Benfica Lissabon, Zenit St. Petersburg, AS Monaco குழு D Borussia Dortmund, FC Arsenal, Galatasaray Istanbul, RSC Anderlecht குழு E FC Bayern München, Manchester City, ZSKA Moskau, AS Rom குழு F FC Barcelona, Paris St. Germain, Ajax Amsterdam, Apoel Nikosia குழு G FC Schalke 04, FC Chelsea, Sporting Lissabon, NK Maribor குழு H FC Porto, Schachtjor Donezk, Bilbao, BATE Borisow

  12. அணியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார் ரவி சாஸ்திரி: சுரேஷ் ரெய்னா இங்கிலாந்துக்கு எதிராக 75 பந்துகளில் சதம் எடுத்த சுரேஷ் ரெய்னா அணியின் வெற்றிக்கு ரவி சாஸ்திரி போட்டிக்கு முன்னால் அணியினரிடத்தில் ஏற்படுத்திய தன்னம்பிக்கையே காரணம் என்று கூறியுள்ளார். "போட்டிக்கு முன்பாக அணி வீரர்கள் கூட்டத்திற்கு வந்த இயக்குனர் ரவி சாஸ்திரி சிறிய உரையாற்றினார். அது மிகவும் உத்வேகமூட்டுவதாக அமைந்தது. மேலும் ஸ்டேடியத்திற்கு பேருந்தில் வரும்போது அவர் என்னருகில் அமர்ந்திருந்தார். அவர் என்னிடம் ‘தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்து’ என்றார். மேலும் ஒரு முன்னாள் வீரரிடம் பேசும்போது வித்தியாசமான ஒரு சவுகரியம் ஏற்படுகிறது. மற்ற பயிற்சியாளர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்தாலும், ரவி சாஸ்திரியி…

  13. ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆடிவிட்டால் நாம் உடனே பீடத்தில் அமர்த்திவிடுகிறோம்: தோனி இங்கிலாந்துக்கு எதிரான ரெய்னாவின் சதம் அற்புதமானது என்று வருணித்துள்ள கேப்டன் தோனி, அவர் சோபிக்காது போயிருந்தால் கேள்விகள் வேறுவிதமாக அமைந்திருக்கும் என்றார். நேற்றைய வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் தோனி கூறியதாவது: “ரெய்னாவின் இன்னிங்ஸ் அற்புதமானது, 30வது ஓவர் முடியும் போது கூட நாங்கள் நிறைய ரன்களை எடுத்திருக்கவில்லை. எனவே ரெய்னா நிற்பது அவசியம் என்றானது. ஏனெனில் அவர்தான் நேற்று மிகவும் அனாயசமாக ஆடினார். நாங்கள் இருவரும் நின்றால், நிச்சயம் நிறைய ரன்களை இந்தப் பிட்சில் குவிக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ரெய்னா மிகவேகமாக ரன் குவிக்கு ஒரு பேட்ஸ்மென், ம…

  14. கிளார்க் மன்னிப்பு கேட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறேன்: ஏ.பி.டிவிலியர்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் எதிரணியினரை நோக்கி வசைச்சொற்களைப் பயன்படுத்தும் போது பல தருணங்களில் அது விரும்பத் தகாத தனிநபர் தாக்குதலாக அமைகிறது என்று தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி கேப்டன் ஏ.பி.டிவிலியர்ஸ் சாடியுள்ளார். ஜிம்பாவேயில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக வழக்கம் போல் இரு அணிகளும் வார்த்தைப்போரில் ஈடுபட்டன. அப்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணியை ஆஸ்திரேலியா 2-1 என்று வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போது ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லை கடந்து வசைச் சொற்களைப் பய…

  15. விளையாட்டு வினையாக முடிய ஜிம்பாவே கிரிக்கெட் வீரர் பன்யாங்கரா நீக்கம் ஜிம்பாவே அணியின் வீரர் பன்யாங்கரா விளையாட்டுத் தனமாக மிட்செல் ஜான்சன் தொடர்பான ஒரு வீடியோவை தன் அணி சகாக்களிடம் பகிர்ந்து கொள்ள அவர் அணியிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் முதல் போட்டியில் ஜிம்பாவேயைச் சந்திக்கும் முன்னர் இதனை பன்யாங்கரா செய்தது பெரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு இட்டுச் சென்றது. இதனால் ஒரு போட்டித் தொகையையும் இழந்த அவர், முத்தரப்பு ஒருநாள் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவர் என்ன வீடியோவைப் பகிர்ந்து கொண்டார் என்பதுதான் வேடிக்கை. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் யூ டியூப் சானலிலிருந்து ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜான்சன் இங்கிலாந்து வீ…

  16. ராகுல் திராவிட் ஆலோசனை மறக்க முடியாதது: முரளி விஜய் சிறப்புப் பேட்டி இங்கிலாந்தின் பிட்ச் மற்றும் தட்பவெப்ப நிலைகளில் தொடக்க வீரர் என்ற கடினமான பணியைத் திருப்தியளிக்கும் விதமாகச் செய்த முரளி விஜய் ஆஸ்திரேலியா தொடரில் இந்த இளம் இந்திய அணி எழுச்சிபெறும் என்று நம்பிக்கை கூறியுள்ளார். இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 402 ரன்களை 40.20 என்ற சராசரியில் எடுத்த முரளி விஜய் 'தி இந்து' (ஆங்கிலம்) இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் தமிழ் வடிவம் வருமாறு: டெஸ்ட் தொடரை சிறப்பாகத் தொடங்கி விட்டு பிறகு சவால் அளிக்காமல் தோல்வியடைந்தது உங்களை எப்படி ஏமாற்றமடையச் செய்தது? குறிப்பாக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் 4 மணி நேர ஆட்டத்திலேயே இந்திய அணியின் கையை விட்டுச் சென்றதே? இ…

  17. வங்கதேசத்தை மூழ்கடித்த ராம்தின், டேரன் பிராவோ சாதனை சதங்கள் செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வதும், இறுதியுமான ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய அணியின் பேட்டிங் வங்கதேசத்தை மூழ்கடித்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் விளாச, வங்கதேசம் 247 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி தழுவியது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது வங்கதேசம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தினேஷ் ராம்தின், டேரன் பிராவோ இணைந்து 3வது விக்கெட்டுக்காக 258 ரன்கள் சேர்த்தது. புதிய ஒருநாள் சாதனையாகும். இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்க ஜோடி ஹஷிம் ஆம்லா, ஏ.பி.டிவிலியர்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 238 ரன்களே உலக சாதனைய…

  18. பிளெட்சர் பற்றிய தோனியின் கருத்திற்கு பிசிசிஐ கடும் அதிருப்தி ரவிசாஸ்திரி அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்றாலும் பிளெட்சர்தான் எங்கள் பாஸ், அவர் 2015 உலகக் கோப்பையிலும் எங்களை வழிநடத்திச் செல்வார் என்று தோனி கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் கூறியுள்ளார். இது குறித்து தனியார் சானலுக்கு அவர் கூறும்போது, “நான் தோனியிடம் இதுபற்றிப் பேசவில்லை, பிசிசிஐ அவரது கருத்துக்கு வினையாற்றாது. தோனி பிளெட்சர் பற்றிக் கூறியது அவரது சொந்தக் கருத்தே” என்று கூறிய அவர், கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகளை அவரது கருத்துக் கட்டுப்படுத்தாது என்று தெளிவுபடுத்தினார். இது குறித்து பிசிசிஐயின் முக்கிய அதிகாரி ஒருவர் பெயரைக் குறிப்பிடாமல் செய்தி நிறுவனம…

  19. தொடர்ந்து செயலற்ற கேப்டனாக இருக்கிறார் தோனி: இயன் சாப்பல் 2011ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இழந்த பிறகு தற்போது 3-1 என்று தோல்வி தழுவியதற்கு தோனியின் செயலற்ற கேப்டன்சியும் பெரிதளவு பங்களிப்பு செய்தது என்று இயன் சாப்பல் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் எழுத்தாளர் மார்டின் ஜான்சன் என்பவர் இங்கிலாந்தின் தொடர் தோல்விகளை வர்ணிக்கும் போது “இங்கி்லாந்து அணியிடத்தில் 3 விஷயங்கள் தவறு. அவர்களால் பேட் செய்ய முடியாது, பந்து வீச முடியாது, பீல்ட் செய்ய முடியாது” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டதை இப்போது தோனி தலைமையிலான இந்திய அணிக்கும் குறிப்ப…

  20. தோனியுடன் மிஸ்பாவை ஒப்பிடலாமா: சோயப் மாலிக் கோபம் ஆகஸ்ட் 23, 2014. கராச்சி: ‘‘ஐ.சி.சி., யின் பல்வேறு தொடர்களில் கோப்பை வென்று தந்தவர் தோனி. இவரை பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பாவுடன் ஒப்பிடுவது தவறு,’’ என, சோயப் மாலிக் தெரிவித்தார். இங்கிலாந்து சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. அதேபோல, இலங்கை சென்ற பாகிஸ்தான் அணி 0–2 என, டெஸ்ட் தொடரை கோட்டை விட்டது. இதனால், இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் தோனி, மிஸ்பா உல் ஹக் பதவி விலக வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அணி வீரரும், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் கணவருமான சோயப் மாலிக் கூறியது: ஒவ்வொரு கேப்டன்களுக்கும் மோசமான தொடர்கள் அமைவது உண்டு. இந்த தோல்விகளை ஒப்பிட்டு பார்த்…

  21. அதிர்ச்சியில் விராட் கோலி இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாக்கும் காதல் என்று நீண்ட நாட்களாக செய்தி வந்துக்கொண்டே இருந்தது. அதேபோல் தான் விளையாட போகும் அனைத்து நாட்டிற்கும், இவரையும் தன்னுடன் அழைத்து சென்றார் கோலி. தற்போது இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக ஓர் அறிக்கை வந்துள்ளது. அனுஷ்காவின் உதவியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆன்லைனில் அனுஷ்கா சர்மாவின் திருமணம் பற்றி நிறைய செய்திகள் உலாவருகின்றன. நான் ஒன்றைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், இந்தச் செய்திகள் வெறும் வதந்திகளே. அதில் உண்மையில்லை. ஆகவே இது போன்ற விஷயங்களை இனி எழுதவேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளனர். …

  22. 13 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் படுதோல்வி; தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் செயிண்ட் ஜார்ஜில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தை 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் 247/7 என்று முடிய, வங்கதேசம் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். கிறிஸ் கெய்ல் தனது அனாயாச மட்டைச் சுழற்றலில் இறங்கினார். ஆனால் கர்க் எட்வர்ட்ஸ் அல் அமின் ஹுசைன் பந்தில் ஸ்டம்ப்களை இழந்தார். டேரன் பிராவோ, கிறிஸ் கெய்ல் இணைந்து 2வத…

  23. ஐபிஎல் அணியைத் தேர்வு செய்யும் அயல்நாட்டு வீரர்கள்: சாம்பியன்ஸ் லீக் அணிகளும் வீரர்களும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய சேவாக் பந்தை அடிக்கும் காட்சி. | படம்: கே.ஆர். தீபக். இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட தங்கள் நாட்டு அணியை விடுத்து ஐபிஎல் அணியை வீர்ர்கள் சிலர் தேர்ந்தெடுத்துள்ளனர். கெய்ரன் போலார்ட், அதிரடி நியூசி.இடது கை ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன், லஷித் மலிங்கா ஆகியோர் தங்கள் நாட்டு 20 ஓவர் அணி தகுதி பெற்றும் கூட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளனர். அதே போல் ஆச்சரியம் தரும் விதத்தில் ஆஸ்திரேலிய வீரர்களான ஜார்ஜ் பெய்லி மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் முற…

  24. வங்கதேசத்தை வென்றது மே.இ.தீவுகள் கிரனாடாவின் செயின்ட் ஜார்ஜ்ஸில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது மேற்கிந்தியத் தீவுகள். முதலில் பேட் செய்த வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் அனாமுல் 138 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் டுவைன் பிராவோ 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 218 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணியில் கெயில் (3 ரன்கள்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு வந்த ராம்தின்-ப…

  25. இந்திய அணிக்கெதிராக களமிறங்கவுள்ள இங்கிலாந்து அணி அறிவிப்பு இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றுள்ளார். அணித் தலைவர் அலிஸ்டர் குக்குடன் இணைந்து அலெக்ஸ் ஹேல்ஸ் ஆரம்ப ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ் இதுவரை 32 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளபோதும் ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இப்போதுதான் பெற்றுள்ளார். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவட் பிரோட் முழங்கால் ஏற்பட்டுள்ள உபாதையால் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் அணியில் இடம் பெற்றுள்ளார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.