Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. துடுப்பு மட்டைக்கு ஓட்டை போட்ட அமெரிக்கா சுங்க அதிகாரிகள் சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014 மேற்கிந்திய துடுப்பாட்ட வீரர் லென்டி சிமொன்சின் துடுப்பு மட்டையில் அமெரிக்கா சுங்க அதிகாரிகள் துளையிட்டு போதைப் பொருள் கடத்தப்படுகின்றதா என சோதனை செய்துள்ளனர். கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்காக அமெரிக்காவினூடாக பயணிக்கும் போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷாம் தந்து டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலம் இல்லாத விளையாட்டு. துடுப்பு பெரியதாகவும், பாரமானதகவும் இருக்க சுங்க அதிகாரில் சந்தேகத்தின் பேரில் இந்த செயலை செய்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-…

    • 1 reply
    • 526 views
  2. ஆடம் வாக்கர் என்ற நீச்சல் வீரர் 7 ஜலசந்திகளை நீந்திக் கடந்த முதல் பிரிட்டிஷ் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு இங்கிலீஷ் கால்வாயைக் கடபப்தன் மூலம் தனது சவாலை தொடங்கிய அவர், பின்னர் ஜிப்ரால்டர், ஹவாய், நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கால்வாய்களை வெற்றிக்காரமாக கடந்தார். இந்த சாதனையின் இறுதிக்கட்ட நிகழ்ச்சியாக 21 மைல் நீளம் கொண்ட ஐரிஷ் கால்வாயை நேற்று அவர் நீந்திக் கடந்தார். வடக்கு அயர்லாந்திலிருந்து ஸ்காட்லாந்தின் மேற்குக் கடற்கரை வரை நீண்டுள்ள இந்தக் கால்வாயை கடந்ததன் மூலம் தனது சாதனையை நிறைவு செய்ததாக அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த முயற்சியின் போது தன்னை ஜெல்லி மீன்கள் இடைவிடாது தாக்கியதையும், சுறாக்களை எதிர்கொள்ள நே…

  3. தொடர்ந்து வசையில் ஈடுபட ஆண்டர்சனுக்கு அறிவுரை இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆண்டர்சன் தொடர்ந்து வசையில் ஈடுபட வேண்டும் என்று மைக்கேல் வான் கூறியுள்ளார். கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டையும், பந்தையும் தவிர வீரர்கள் பேசுவது, வசைபாடுவது முறையல்ல என்கிறார் மைக்கேல் ஹோல்டிங், ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்ந்து இந்திய வீரர்களை நோக்கி வசைமாரி பொழியவேண்டும் என்கிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான். "4வது டெஸ்ட் போட்டியிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய வீரர்கள் மீது வசையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் மீண்டுமொரு முறை அவர்கள் ஆண்டர்சன் மீது புகார் எழுப்பாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் இங்கிலாந்துக்காக தொடரை வென்று கொடுப்பவர், தேவையில்லாமல் புகாரில் ச…

  4. தொடரைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? சர்வதேச கிரிக்கெட் என்பது மலர்ப் படுக்கை அல்ல என்பது இந்திய டெஸ்ட் அணியின் இளைஞர்களுக்குப் புரிந்திருக்கும். இங்கே வெற்றியும் தோல்வியும் ஏற்றமும் சறுக்கலும் மிக விரைவில் மாறிவிடும். திறமை அல்ல, சீராகவும் தொடர்ச்சியாகவும் வெளிப்படும் திறமையே இங்கு முக்கியம். அதுவும் ஒருவரோ இருவரோ திறமை காட்டினால் போதாது. மட்டையிலும் பந்து வீச்சிலுமாகச் சேர்ந்து குறைந்தது ஐந்து பேராவது நன்கு ஆடினால்தான் வெற்றிபெற முடியும். இந்த யதார்த்தத்தை இப்போது இந்திய அணியின் இளைஞர்கள் நன்கு புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்பலாம். முரளி விஜய், அஜிங்க்ய ரஹானேயின் மட்டை வீச்சு, இஷாந்த் ஷர்மாவின் துல்லியமான எகிறு பந்துகள், இங்கிலாந்து மட்டையாளர்களின் பொறுப்…

  5. பாகிஸ்தானுடனான கடினமான தொடரில் திறமையை வெளிப்படுத்த முடியும்; மத்தியூஸ் நம்பிக்கை 0 Submitted by Priyatharshan on Wed, 08/06/2014 - 12:56 பாகிஸ்தான் எந்த மைதா­னத்தில் விளை­யா­டி­னாலும் அவ்­வ­ணியை எதிர்­கொள்­வது மிகவும் கடி­ன­மா­ன­போ­திலும் தங்­களால் திற­மையை வெளிப்­ப­டுத்த முடியும் என்ற நம்­பிக்கை இருப்­ப­தாக இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மத்தியூஸ் கூறு­கின்றார். காலி சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள இலங்கை - பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கட் போட்­டிக்கு முன்­னோ­டி­யாக நேற்­றுப்­பகல் நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது மெத்யூஸ் இதனைக் குறிப்­பிட்டார். பாகிஸ்­தா­னி­யர்கள் பெரும்­பாலும் உப கண்­டத்­தி­…

  6. கெயில் உலக சாதனை கரி­பீயன் பிரீ­மியர் லீக் போட்­டியில் பங்­கேற்று வரும் மேற்­கிந்­திய தீவுகள் அணியின் அதி­ரடி வீரர் கிறிஸ் கெயில் இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் அதிக தட­வைகள் ஓட்­ட­மெ­த­னையும் பெறாது ஆட்­ட­மி­ழக்­காத வீரர் என்ற சாத­னையை படைத்­துள்ளார். இது­வரை நடை­பெற்ற கடைசி 90 போட்­டி­களில் கெயில் ஓட்­ட­மெ­த­னையும் பெறாது ஆட்­ட­மி­ழக்­க­வில்லை. மேலும் இப்­பட்­டி­யலில் பாகிஸ்தான் அணி யின் வீரர் மாலிக் (89தடவை) இங்­கி­லாந்தின் ஸ்ரீவன் (82தடவை) டோனி(80தடவை) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/08/05/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88

  7. உதவி,சுழற்பந்து பயிற்சியாளர்கள் இராஜினாமா இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப்பயிற்சியாளர் ருவான் கல்பகே மற்றும் சுழற்பந்து பயிற்சியாளர் பியால் விஜேயதுங்க ஆகியோர் தங்களது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கான பயிற்சியாளராக பணிபுரியும் ஹத்துருசிங்கவின் உதவிப்பயிற்சியாளர்களாக இணைவதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததை தொடர்ந்தே இருவரும் இவ்வாறான முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமது சுய விருப்பத்தின் பேரிலேயே இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளனர் எனவும் அவர்களது விருப்பத்தின் படி இலங்கையிலோ பங்களாதேஷிலோ தமது சேவையினை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது htt…

  8. வலைப்பயிற்சியில் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாமல் சாதித்த சச்சின் – ராகுல் புகழாரம்! 2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளின் போது தொடர் முழுதும் வலைப்பயிற்சியில் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாமல் சச்சின் டெண்டுல்கர் சாதித்துக் காட்டினார் என்று ராகுல் திராவிட் புகழாரம் சூட்டியுள்ளார். அந்த உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்தது இன்று வரை உலக சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. பொதுவாக சச்சின் என்றாலே பயிற்சி மேலும் பயிற்சி மேன்மேலும் பயிற்சி என்பதுதான் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் திராவிட் கூறியிருப்பது உண்மையில் ஒரு ஆச்சரியமான தகவலே. “அவரது தயாரிப்பு அவ்வப்போது மாறுபடும். 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் போது தொட…

    • 0 replies
    • 554 views
  9. காமன்வெல்த் போட்டியில் இந்தியா - ஒரு பார்வை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவில் இருந்து 215 பேர் பங்கேற்றனர். நெட்பால், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா பங்கேற்கவில்லை. தடகள பிரிவில் வட்டு எறிதலில் இந்தியாவின் விகாஸ் கவுடா இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்தார். இதன் மூலம் 52 ஆண்டுகளுக்குப் பின் காமன்வெல்த் தடகளத்தில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. அதேபோல காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காஷ்யப் தங்கம் வென்றார். இதன் மூலம் 32 ஆண்டுகளுக்குப் ஆடவர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இவை இந்த காமன்வெல்த் போட்டியில் குறிப்பிடத்தக்க ச…

  10. 08.+ 09.08.2014 ஆகிய நாட்களில் சுவிஸ் நாட்டில் வின்ரர்தூர் எனும் இடத்தில் நடைபெறவிருக்கும் தமிழீழ கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி பற்றிய ஒரு முன்னோட்டத்தை பார்ப்போம். இதுவரை வளர்தோருக்கான உதைபந்தாட்டப்போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த கழகங்கள். அதிகமான வெற்றியீட்டிய கழகங்கள்/நாடுகள்: இந்த ஆண்டிற்கான போட்டிகள்: சுவிஸ் நாட்டில் உள்ள சிறந்த 6 கழகங்கள்: 1. SC Royal 2. SC Young Stars 3. Thaiman SC 4. Blue Stars (french part) 5. Ilam Siruthaikal 6. Vaanavil தகவல்: தமிழர் உதைபந்தாட்டச சம்மேளனம் சுவிஸ் அதே போல் பிரான்ஸ் நாட்டிலிருந்தும் புள்ளகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த 6 கழகங்களும் பங்குபற்றுகின்றன. இந…

  11. நேற்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் காலை 08:00 மணிக்கு ஆரம்பமான தமிழீழ அணிக்கு இடையிலான நடந்த உதை பந்தாட்ட போட்டியின் விபரங்கள். 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 3 – Husum - 0 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 2 – Holstebro – 1 போட்டிகளில் வாகை சூடிய 16, வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 4 –Vardeneset BK 0 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 0 – LKB /Gistrup– 0 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 0 - Stenløse BK – 0 எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள். http://www.sankathi24.com/news/44892/6…

  12. காமன்வெல்த்தில் பரபரப்பு: 2 இந்திய விளையாட்டு துறை நிர்வாகிகள் ஸ்காட்லாந்தில் கைது. கிளாஸ்கோ:இந்திய விளையாட்டு துறையின் இரு முக்கிய நிர்வாகிகள் ஸ்காட்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் நிலையில் இவர்கள் இருவரும் கைதாகியுள்ளனர். இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜிவ்மேத்தா மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கான நடுவரான வீரேந்திர மாலிக் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அறிவித்துள்ளது. இதில் ராஜிவ்மேத்தா, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், வீரேந்திர மாலிக், பாலியல் சீண்டல் குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காமன்வெல்த் போட்டிகள் இன்று நிறைவடைய …

  13. மஹேலவை கட்டுப்படுத்த வேண்டும்: மிஸ்பா ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014 இலங்கை கிரிக்கெட் அணியின் மஹேல ஜெயவர்தெனவின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்தினாலேயே இலங்கை அணியை வெற்றி பெற முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த வேளையில் பாகிஸ்தான் கராச்சியில் வைத்து இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் இலங்கையில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் அவர்களின் துடுப்பாட்ட வீரர்களை முழுமையாக கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும். அதில் முக்கியமானவர் மஹேல ஜெயவர்தென. அவர் மீது எனக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர் கிரிக்கெட்டில் நல்ல சாதனைகளை செய்துள்ள ஒருவர். ஆனால் நாங்கள் அங்கே வெல்வதற்…

  14. 'அதுதான் கிரிக்கெட்' - பங்கஜ் சிங் விரக்தியில் தெளிவு இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகப் பெயர் பெற்று போராடி இந்திய அணிக்குள் நுழைந்த ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அருமையாக வீசியும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இதுதான் அறிமுக பவுலர் ஒருவரின் முதல் டெஸ்ட்டின் மோசமான பந்து வீச்சு என்ற அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. 1.98மீ உயரமுடைய நல்ல உடற்கட்டு கொண்ட இந்த வேகப்பந்து வீச்சாளர் பேட்டி ஒன்றில் இந்தியாவுக்கு விளையாட முடியவில்லையெனில் நான் இனி ராஜஸ்தானுக்கும் ஆடப்போவதில்லை. எனக்கு பணம் முக்கியமல்ல, நிறைய சம்பாதித்து விட்டேன், கிரிக்கெட் எனது மூச்சு, இந்தியாவுக்கு விளையாடாமல் எனது கனவு சிதைந்து போய்விடும். என்று கூறியுள்ளார். மேலும் இவர் ஒரு…

  15. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சஞ்சு சாம்சன்: பயிற்சியாளர் புகழாரம் இந்தியா ஏ அணியில் இடம்பெற்று 4 அணிகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை எடுத்த சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று இந்தியா ஏ அணியின் ஃபீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியாளர் அபய் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார். இஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் இந்தியா ஏ அணி 4 அணிகள் பங்கேற்ற ஒருநாள் தொடரில் சாம்பியன் ஆனதையடுத்து அந்தத் தொடர் பற்றி கூறும்போது சஞ்சு சாம்சனைப் புகழ்ந்துள்ளார். "சஞ்சு சாம்சன் நிச்சயம் இந்தியாவின் எதிர்காலம் என்றே கூறலாம், பேட்ஸ்மெனாக திறமையாக ஆடுகிறார், சூழ்நிலைக்கு ஏற்ப அவர் தன்னை தகவமைத்துக் கொண்டு ஆடுவது அபாரம். ஆஸ்திரேலியா ஏ அணிக்…

  16. ஜென்டில்மேன்களின் விளையாட்டில் ஒரு மோசமான தீர்ப்பு இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் வெற்றி, தோல்விகளைவிட அதிகமாக பேசப்பட்ட விஷயம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்-இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடையிலான மோதல் விவகாரம்தான். நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் மதிய உணவுக்காக இரு அணியினரும் பெவிலியின் திரும்பியபோது ஆண்டர்சனுக்கும், ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஆண்டர்சன், ஜடேஜாவை கீழே தள்ளிவிட்டதாகப் புகார் எழுந்தது. ஐசிசி நடத்தை விதி லெவல்-3 ஐ ஆண்டர்சன் மீறியதாக இந்தியா புகார் அளிக்க, பதிலுக்கு ஆண்டர்சனை மிரட்டியதாக இங்கிலாந்து சார்பில் ஜடேஜா மீது ஐசிசியிடம் புகார் அளி…

  17. இன்று ஆரம்பமாக உள்ள ஐரோப்பாவில் 4ஆவது பெரிய சர்வதேச உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியான vildbjerg cup இல் 750 இற்கும் மேற்பட்ட ஆண், பெண் அணிகள் போட்டியிடும். இப்போட்டியில் இரண்டாவது தடவையாக தமிழீழ அணிகளும் போட்டியிட தயாராகி வருகின்றன. 8நபர் கொண்ட 14 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும் , 11 நபர் கொண்ட 16 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும் போட்டியிடுகின்றனர். வார இறுதி நாட்கள் வரை தொடரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எமது தமிழீழத் தாயக அணியை உற்சாகப்படுத்த அனைவரையும் அழைக்கின்றோம் நேற்று Vildbjerg Cup உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கோலாகரமாக ஆரம்பமாகியது. Vildbjerg கிராமத்தின் ஊடாக அணிவகுப்பு 750 இற்கும் மேற்பட்ட அணிகளுடன் 3000 மேற்பட்ட வீரர்களுடன் நடைபெற்றது. இன்று காலை …

  18. பாக்.டெஸ்ட் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு பாகிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நிலையிலேயே 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலேத மெத்தியூஸ் தலைவராக செயற்படும் அதேவேளை, லகிரு திரிமன்னே உபதலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். கௌசல் சில்வா, உபுல் தரங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, கித்துருவன் விதானகே, நிரோஷன் டிக்வெல, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, சமிந்த ஏரங்க, சுரங்க லக்மால், சங்க வெலகெதர, தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை டெ…

  19. இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் பழிவாங்குகிறார் : சங்கா இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரியொருவர் நான் அணித் தலைவராக செயற்பட்ட காலம் முதல் தனிப்பட்ட முன்விரோதம் மற்றும் பழிவாங்கல் காரணமாக என்னை தொந்தரவு செய்துவருவதாக இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு-20 தொடரில் உள்ளூர் அணிக்காக விளையாடாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட லசித் மலிங்க எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்துள்ளமை மூலம் இது தெளிவாக புலப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த முறை, iஹாராபாத் அணிக்காக விiளாயட விரும்பிய போதிலும் தன்னுடைய விடயத்தில் கிரிக்கெட் சபையின் ஒரு அதிகார…

  20. மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் 7 ஆண்டு சிறைத்தண்டனை: நியூசிலாந்தில் புதிய சட்ட மசோதா அறிமுகம் வெலிங்டன், ஜூலை 31- நியூசிலாந்தில் விளையாட்டு வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. மேட்ச் பிக்சிங் மசோதா பாராளுமன்றத்தில் இன்று அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற உள்ளன. அதற்கு முன்னதாக முன்னதாக இந்த புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. ‘மேட்ச் பிக்சிங் சர்வதேச அளவில் வளர்…

  21. தரமான கிரிக்கெட்டை நாங்கள் ஆடவில்லை: தோனி ஒப்புதல் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த பிறகு தோனி கூறும்போது, ‘தரமான கிரிக்கெட்டை ஆடவில்லை’ என்று கூறியுள்ளார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திய கேப்டன் தோனி, இஷாந்த் சர்மா 4வது டெஸ்ட் போட்டிக்குள் காயத்திலிருந்து மீள்வது கடினம் என்று கூறியுள்ளார். அதாவது அடுத்த போட்டியிலும் இஷாந்த் சர்மா இல்லை என்பதை அவர் அறிவித்துள்ளார். தோல்வி குறித்து தோனி கூறும்போது, “தரமான கிரிக்கெட்டை நாங்கள் ஆடவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களை நன்றாக ஆடினோம். மொயீன் அலி நன்றாகவே வீசினார். ஆனாலும் அவரை நன்றாக வீச அனுமதித்தோம். ஸ்பின்னருக்கு எதிராக பாசிடிவ் அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும். அவர் நல்ல திசையில் வீசி…

  22. சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 569 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளர் செய்துள்ளது. அதிகபட்சமாக பெல் 167 ஓட்டங்களும் மற்றும் பேலன்ஸ் 156 ஓட்டங்களும் குவித்துள்ளனர். இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராகனே 54 ஓட்டங்களும் தோனி 50 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்நிலையில் 261 ஓட்…

  23. தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜெக் கலிஸ் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வுபெற்ற கலிஸ் தற்போது ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 166 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 13289 ஓட்டங்களைப் பெற்றுள்ள ஜெக் கலிஸ் 328 ஒருநாள் போட்டிகளில் 11579 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதேவேளை 25 இருபதுக்கு-20 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜெக் கலிஸ் 666 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=606313275030792010

  24. வெற்றி பெற்ற பிறகும் கேப்டன்சியில் தடுமாறும் தோனி ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நேற்று தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. கேரி பாலன்ஸ் 104 ரன்களுடனும், இயன் பெல் 16 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர், இன்று 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கும் முன் முதல் நாள் ஆட்டத்தில் தோனி கேப்டன்சியின் சில வினோதங்களைப் பார்ப்போம். இஷாந்த் சர்மா காயத்தினால் விளையாடவில்லை என்ற போதே தோனி நிச்சயம் தனது பாதுகாப்பு உத்திகளுக்கே செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கக் கூடும். அதுதான் நடந்தது. டெஸ்ட் போட்டியை ஆட்டம் தொடங்கிய 2 மணி நேரத்திலேயே அலுப்பூட்டுவதாக மாற்றி விடுகிறார் தோனி. அணித் தேர்வில் மீண்ட…

  25. இங்கிலாந்து வீரர் மொயீன் அலியின் காஸா ஆதரவு உணர்வை முடக்கியது ஐசிசி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி ‘காஸாவைக் காப்பாற்றுங்கள்’ மற்றும் 'பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளியுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய ரிஸ்ட் பேண்ட் அணிந்து டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். உடனே ஐசிசி சமயம் மற்றும் அரசியல் சார்ந்த செய்திகள் அடங்கிய ரிஸ்ட் பேண்ட்களை அணியக்கூடாது என்று தடை விதித்தது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மொயீன் அலியின் இந்தச் செயல்பாடு மனிதார்த்த மதிப்பீடுகள் சார்ந்ததே தவிர அரசியல் அல்ல என்று ஆதரவு அளித்துள்ளது. அதாவது, மொயீன் அலி தனது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறலாம், ஆனால் கிரிக்கெட் மைதான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.