Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் ஓய்வு குறித்து அறிவிப்பு! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 9,000 ரன்களுக்கு மேல் எடுத்தவருமான யூனிஸ் கான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். யூனிஸ் கான் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக பாகிஸ்தான் அணி சார்பில் களம் இறங்கினார். அவர் கடந்த நவம்பர் 2015-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது, பாகிஸ்தான் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடப் போகும் டெஸ்ட் தொடருக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அவர் அ…

  2. பிரித்தானியா செல்லும் கிளிநொச்சி வீரர்! பிரித்தானியா - பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள 2022ம் ஆண்டுக்கான கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்குபெற்றும் குத்துச்சண்டை அணியில் கிளிநொச்சியைச் சேர்ந்த வீரர் ஒருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்குகொள்ள பயணமாகவுள்ளார். இவர் தேசியப் போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வடமாகாணத்திற்காக பெற்றுக்கொடுத்துள்ளதுடன், இராணுவ அணிக்காக விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்திருந்தார். …

    • 0 replies
    • 370 views
  3. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் விடைபெற்றார் மோர்னே மோர்கல் தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் விடைபெற்றார். #SAvAUS #MorneMorkel தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மோர்னே மோர்கல். 33 வயது 179 நாட்களாகும் இவர், தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தியாவிற்கு எதிரான டர்பன் டெஸ்டில் அறிமுகமானார். அதன்பின் அந்த அணியின் ம…

  4. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹொக்கி போட்டியில் யாழ். பல்கலைக்கழகம் 2 ஆம் இடம் By NANTHINI 15 DEC, 2022 | 10:23 AM (என்.வீ.ஏ.) பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஹொக்கி போட்டியில் யாழ். பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தை பெற்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் இந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்ட பல்கலைக்கழக விளையாட்டு விழாவின் ஹொக்கி போட்டி பொலிஸ் பார்க் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. முதல் சுற்று லீக் அடிப்படையிலும், இறுதிச் சுற்று நொக்-அவுட் அடிப்படையிலும் நடைபெற்ற இப்போட்டியில் தோல்வி அடையாமல் யாழ். பல்கலைக்கழகம் 2ஆம் இடத்தை பெற்றது. இறுதிப் போட்டி வெற்றி தோ…

  5. இந்திய அணி இடைக்கால பயற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், அணியின் துணைப் பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர், பரத் அருண் மற்றும் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் தொடருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாம்ப்வே தொடர் தொடங்கவுள்ள ஜூலை மாதத்துக்குள்ளாகவே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக் குழு நிர்வாகம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக, இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் எதிரொலியாக, இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அப்போதே பாங்கர், அருண், ஸ்ரீதர் ஆகியோர் துணைப் பயிற்ச…

  6. ஐ.சி.சி அணிகள் அறிவிப்பு: ஒரு நாள் அணியில் சங்கா, டில்ஷான் Comments சர்வதேச கிரிக்கெட் சபையின், 2015ஆம் ஆண்டுக்கான உலக பதினொருவர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளே அறிவிக்கப்பட்டுள்ளன.செப்டெம்பர் 18, 2014 முதல் செப்டெம்பர் 13, 2015 வரையிலான காலப்பகுதியில் வெளிப்படுத்தப்பட்ட திறமைகளின் அடிப்படையிலேயே, இவ்வணிகள் தெரிவாகியுள்ளன. டெஸ்ட் அணியில் இலங்கையர்கள் எவரும் இடம்பெறாத அதேவேளை, ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் திலகரட்ண டில்ஷானும் குமார் சங்கக்காரவும் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட்: டேவிட் வோணர், அலஸ்டெயர் குக் (தலைவர்), கேன் வில்லியம்ஸன், யுனிஸ் …

  7. ஸ்டார்க், ஹேசில்வுட்டுடன் கமின்ஸும் இணைந்தால் ஆஸி.யை கண்டு எதிரணிகள் அஞ்சும்: ரியான் ஹாரிஸ் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ். | படம்: ஏ.எஃப்.பி. காயத்தினால் பாதிக்கப்பட்டு அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்து வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ் தற்போது முழுமையாக குணமடைந்து விட்டார். விரைவில் அஸ்திரேலியா ஏ அணிக்காக பேட் கமின்ஸ் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்குரிய பந்தில் வீச வருகிறார் என்று அவர் காயத்திலிருந்து மீளவும் தனது பழைய வேகப்பந்து வீச்சை மீண்டும் பெறவும் உதவிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். பேட் கமின்ஸ் ஓடிவந்து பந்தை வீசும் விதம் காயங்கள் ஏற்பட பெரும் காரணமாக அமைந்ததையடுத்து ரியான் ஹா…

  8.  சம்பியனானது அரசடித்தீவு விக்னேஸ்வரா வி.க -வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு முதலைக்குடா விளையாட்டுக் கழகத்தின் 55ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், பெனால்டி மூலம் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று, முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இத்தொடரில் 24 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்று இறுதிச் சுற்றுக்கு முதலைக்குடா விளையாட்டுக் கழகமும் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும் தெரிவாகியிருந்தன. இக்கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீ…

  9. மகி­ழடித்­தீவு மகிழை இளைஞர் விளை­யாட்டுக் கழ­கத்தின் கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்டி ; முத­லைக்­குடா விநா­யகர் அணி சம்­பி­ய­னா­கி­யது (சதீஷ்) மட்­டக்­க­ளப்பு மகி­ழடித்­தீவு மகிழை இளைஞர் விளை­யாட்டுக் கழ­கத்­தினால் நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் முத­லைக்­குடா விநா­யகர் அணி சம்­பி­ய­னா­கி­யுள்­ளது. 1987 மற்றும் 1991ஆம் ஆண்­டு­களில் இப்­பி­ர­தே­சத்தில் படு­கொலை செய்­யப்­பட்ட உற­வு­களின் ஞாப­கார்த்­த­மாக இந்த கால்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. 20 இற்கும் அதி­க­மான கழ­கங்கள் இப்­போட்­டி­களில் பங்…

  10. கோலியின் ரன்னிங்... தோனி ஸ்டெம்பிங்... இந்த 19 பேர் இல்லாமல் பார்க்க முடியாது! ஆஸ்திரேலியால மேட்ச் நடந்தா 5 மணிக்கு அலாரம் வைச்சு எழுந்து மேட்ச் பாக்கணும், வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்சுக்கு நைட்டு 12 மணி வரைக்கும் கண்னு முழிச்சு மேட்ச் பாக்கணுனு லைவ் கிரிக்கெட் பாக்குற வெறித்தனமான கிரிக்கெட் ஃபேனா நீங்க. அந்த லைவ் எப்படி நடக்குதுனு தெரியுமா? எத்தனை கேமரா சுத்தி சுத்தி படமெடுக்குது தெரியுமா? ஒரு லைவ் மேட்சைகூட செய்ய மொத்தமா 29 கேமராக்கள் தேவை. அதில் 19 கேமராக்களை மனிதர்களும் 10 தானியங்கி கேமராக்களும் இயங்கும். ஒவ்வோரு கேமராவும் டைரக்டரின் கட்டளைக்கு ஏற்றவாறு இயங்கும் ஒவ்வோரு கேமராக்கும் ஒரு சிறப்பு பணி உள்ளது. உதாரணமாக சட் ஸ்க்ரீனுக்கு எதிராக உள்ள கேமர…

  11. மக்களை தலைகுனியச் செய்துவிட்டேன்: கிரிக்கெட் வீரர் பான்கிராப்ட் உருக்கம் பான்கிராப்ட். - AFP பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நான் பொய் சொன்னதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன். சம்பவம் நடந்தபோது பயத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆஸ்திரேலிய மக்களை தலைகுனியச் செய்துவிட்டேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் பான்கிராப்ட் தெரிவித்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பான்கிராப்டுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 9 மாத தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பான் கிராப்ட் தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பினார். இதுதொடர்பாக பெர்த் நகரில் செய்தியாளர்களிடம…

  12. டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஆரோன் பின்ச் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக 900 புள்ளிகளை கடந்து ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் சாதனை படைத்துள்ளார். துபாய் : டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியளில் 900 புள்ளிகளை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரும், டி20 போட்டிகளின் கேப்டனுமான ஆரோன் பின்ச் படைத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற தொடரின் ம…

  13. பீலே, மரடோனா சிலைகளுக்கு பக்கத்தில் மெஸ்ஸிக்கு சிலை! கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அது முதல் மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், அவருக்கு இம்மாதம் 27ஆம் திகதி சிலை ஒன்றை வழங்கி உள்ளது தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு. இந்த சிலை CONMEBOL-ன் அருங்காட்சியகத்தில் கால்பந்து உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு பக்கத்தில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிகிறது. சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் ஆர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றிருந்தது. இந்த நிலையில், மெஸ்ஸியின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. ஆர்ஜென்டினா அணி ஜெர்சி அணிந…

  14. முழங்கால் காயம் : மருத்துவமனையில் சானியா அனுமதி! சனி, 3 மார்ச் 2007 இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கால் முட்டியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்! டோஹாவில் நடந்த கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் முதல் சுற்றில் இத்தாலி வீராங்கனையை வென்ற சானியா மிர்சாவிற்கு வலது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. அதனால் இரண்டாவது சுற்றில் இருந்து அவர் விலகிக் கொண்டார். நாடு திரும்பிய அவருக்கு நேற்று எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டபோது, முட்டியில் முழங்கால் எலும்பையும், தொடை எலும்பையும் இணைக்கும் குறுத்தெலும்பில் காயம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அ…

  15. இங்கிலாந்து பயிற்சியாளர் நீக்கம் லண்டன்: இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் நீக்கப்பட்டு முன்னாள் வீரர் ஸ்டிராஸ், ‘இயக்குனர்’ ஆனார். இந்திய அணி பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், இருக்கும் போதே ‘இயக்குனர்’ என்ற பெயரில் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இந்த வழியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு இறங்கியது. சமீபத்திய உலக கோப்பை தொடரில் சொதப்பிய இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ‘டிரா’ செய்தது. இதையடுத்து, கடந்த 2007–09க்குப் பின் இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட பீட்டர் மூர்ஸ், 52, அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்குப் பதில் ‘தேசிய கிர…

  16. யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான மேசைப்பந்தாட்ட தொடரில் யாழ்ப்பாண பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி உள்ளகரங்கில் நேற்று இறுதிய ட்டம் இடம் பெற்றது. ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் நல்லூர் பிரதேச செயலக அணியை எதிர்த்து யாழ்ப்பாண பிரதேச செயலக அணி மோதியது. முதல் செற் ஆட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலக அணியை பிரதிநிதித்துவப்படுத்தி மேசாக்கும், நல்லூர் பிரதேச செயலகஅணியை பிரதிநிதித்துவப்படுத்தி தனுஸஸூம் மோதிக் கொண்டனர். இதில் நல்லூர் பிரதேச செயலக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையடிய தனுஸ் 3:2 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்றார். …

  17. யார்கிட்ட...செல்போனை திருடிய நபரை விரட்டி பிடித்த செரீனா ! உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீன உணவகம் ஒன்றில், தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது செரீனாவின் மேஜை அருகே வந்த நபர் ஒருவர், அவரது மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்து விட்டு சென்று விட்டார். சில வினாடிகள் கழித்து தனது மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போனை காணாமல் போனதை கவனித்த செரீனா, அவரை பின்னாடியே விரட்டி சென்று செல்போனை திரும்ப கேட்டு வாங்கி விட்டார். அப்போது தெரியாமல் எடுத்து வந்துவிட்டீர்களா? என்றும் செரீனா அந்த நபரிடம் கேட்டா…

  18. நீண்டகால இடைவெளிக்கு பின்னர் இருதரப்பு தொடரொன்றில் மோதவுள்ள இலங்கை – மேற்கிந்திய தீவுகள் By A.Pradhap சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை மறுதினம் (22) கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை வந்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியானது தங்களுடைய அனுபவ வீரரான கீரன் பொல்லார்ட்டின் தலைமையில் களமிறங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியிருந்த திமுத் கருணாரத்ன மீண்டும் தலைமைத…

  19. மனைவி சொன்னால் ஓய்வு பெறுவேன்: பெடரர் உங்களுடன் சேர்ந்து டென்னிஸ் பயணத்தை தொடர விரும்பவில்லை’ என்று மனைவி எப்போது சொல்கிறாரோ, அந்த கணமே எனது டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் (ஓய்வு) கொள்கிறேன் என்று சொல்லி விடுவேன் என்று பெடரர் கூறியுள்ளார். இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள சுவிட்சர்லாந்து ஜாம்பவான் 35 வயதான ரோஜர் பெடரர் அளித்த பேட்டியில், ‘எனது மனைவி மிர்கா தான் எனக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக இருக்கிறார். அவர் இல்லாவிட்ட…

  20. 2016/17 லா லிகா சிறந்த வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி courtesy - AFP ஐரோப்பிய கால்பந்து லீக் தொடர்களில் முக்கிய இடத்தை வகிக்கின்ற லா லிகா போட்டித் தொடரில் 2016/17 பருவகாலத்திற்கான ”ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்” மற்றும் ”அதிக கோல்களைப் பெற்ற வீரர்” ஆகிய 2 விருதுகளும் பார்சிலோனா அணியின் நட்சத்திர ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான லா லிகா கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஸ்பெய்னின் பிரபல விளையாட்டு பத்திரிகையான மார்காவினால் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா பார்சிலோனாவில் கடந்த திங்களன்று (18) நடைபெற்றது. …

  21. இறுதிப் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான, விலகல் முறையிலான கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதிபெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், இன்னொரு பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸை வென்றே இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதிபெற்றுள்ளது. இப்போட்டியை வேகமாக ஆரம்பித்த டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ், தமதணியின் கிறிஸ்டியன் எரிக்சனின் உதையை அவரின் சக வீரர் டெலே அல்லி போட்டியின் 11ஆவது நிமிடத்திலேயே கோலாக்க ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. …

  22. விமர்சனங்களை முறியடித்து பாக். டெஸ்ட் குழாமில் இணைந்த இன்ஸமாமின் மருமகன் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக முன்னாள் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக்கின் மருமகன் இமாம் உல் ஹக் இடம்பிடித்துள்ளார். இந்த டெஸ்ட் குழாமில் பகார் சமான், சாத் அலி மற்றும் உஸ்மான் சலாஹுத்தின் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பிடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாத கடைசியில் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் அயர்லாந்து அணியுடனான கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பதோடு அதனைத் தொடர்ந்து…

  23. உலகக்கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நேரத்தில் இங்கிலாந்து அணி இலங்கையை நொறுக்கித் தள்ளும் என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் கூறியுள்ளார். இங்கிலாந்து அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இந்த தொடர் வரும் 26ம் திகதி தொடங்கவுள்ளது. இதற்கு முன்பாக 21 மற்றும் 23ம் திகதி இரு அணிகளும் பயிற்சி போட்டியில் மோதுகின்றன. இந்நிலையில் இலங்கையில் இங்கிலாந்து அணி தொடரை இழந்து விடாது என கிறிஸ் ஜோர்டான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் எல்லோரும் உலகக்கிண்ணத்தை பற்றி பேசுகின்றனர். ஆனால் இப்போது இருக்கின்ற தருணத்தை சரியாக பயன்படுத்தினால் போதுமானது. இலங்கை சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்டு உலகக்கிண்ண போட்டிகளுக்கு அடித்தளம் அம…

  24. என்னப்பா ஜடேஜா! ஏன் இப்படி? 1 லட்ச ரூபாய் ஆட்ட நாயகன் விருதை குப்பையில் வீசினாரா? திருவனந்தபுரம் : கடந்த நவம்பர் 1 அன்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஐந்தாவது ஒருநாள் போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.அந்த போட்டியில் ஜடேஜா ஆட்ட நாயகன் விருது வென்றார். அந்த விருது குப்பைகளை அகற்றும் ஊழியர் கையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.அப்படியென்றால் ஜடேஜா தன் ஆட்ட நாயகன் விருதை குப்பையில் தூக்கி வீசி விட்டாரா? என்ன நடந்தது? ஆட்டநாயகன் “விருதா”? வெறும் அட்டையா ? கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆட்ட நாயகன் விருது என்பது ஒரு பெரிய அட்டையில் விளம்பரதாரர் பெயர்களோடு, செக் மதிப்பு குறிக்கப்பட்டு இருக்கும். இந்த அட்டையை …

  25. கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்களுக்கு பாதி மொட்டையடித்து வங்கதேசத்தில் விளம்பரம்! டாக்கா : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அரை மொட்டையடித்து விட்டது போல, வங்கதேச பத்திரிகை சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. முதன் முறையாக வங்கதேசம் அணி இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்திய அணி சந்தித்த இந்த தோல்வியை குறிக்கும் வகையில் ‘புரோதோம் ஆலோ’ என்ற வங்கதேசத்தை சேர்ந்த வாரப்பத்திரிகை, இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகை வைத்துள்ள பேனரில், இந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.