விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடும் இலங்கையர்! இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு இலங்கையர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இலங்கையர் விளையாடியுள்ளார். 19 வயதிற்குட்பட்ட இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரராக களமிறங்கும் சவின் பெரேரா இலங்கையை சேர்ந்தவர் ஆவார். கொழும்பில் பிறந்த சவின் பெரேரா 13 வயதில் பிரித்தானியாவில் குடியேறினார். அங்கு அவர் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய திறமை காரணமாக 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவாகியுள்ளார். கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் சவ…
-
- 0 replies
- 282 views
-
-
வரலாற்றில் முதல் முறையாக ஆண்களுக்கான கிரிக்கட் போட்டியில் பெண் வீராங்கனை கிரிக்கட் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்தை சேர்ந்த பெண் கிரிக்கட் வீரர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆண்கள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டியில் விளைடுகிறார். இந்த கிரிகட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்கள் கிளப் அணியும், போர்ட் அடிலெய்டு அணியும் மோதுகின்றது. இந்த கிரிக்கெட் போட்டி 2 நாட்கள் நடக்கிறது. இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீராங்கனையான இந்த பெண், அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்களுக்கான கிளப் அணி சார்பாக இந்த தொடரில் விளையாடுகிறார். கிரிக்கெட் வரலாற்றியில் முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் ஒருவர் விளையாடுவது இ…
-
- 0 replies
- 328 views
-
-
வரலாற்றில் முதல் முறையாக தனிச் சுவட்டில் ஓடி சாதனை படைத்த மக்வாலா! வரலாற்றில் முதல் முறையாக தனிச் சுவட்டில் ஓடி சாதனை படைத்த மக்வாலா! லண்டனில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பொட்ஸ்வானாவைச் சேர்ந்த ஐசாக் மக்வாலா தனிச் சுவட்டில் ஓடி போட்டியை நிறைவு செய்து மெய்வல்லுனர் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார். 16ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் லண்டன் ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்றிருந்த ஒரு சில வீரர்கள் உணவு நஞ்சானமையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். இதன் கார…
-
- 0 replies
- 521 views
-
-
முழு மாரத்தான் (Full Marathon) எனப்படும் 42 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரத்திற்குள் முடித்து கென்ய வீரர் எலியூத் கிப்சோக் (Eliud Kipchoge) சாதனை படைத்துள்ளார். மாரத்தான் வரலாற்றில் இது யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. இதனை எலியூத்தின் மனைவி, 3 குழந்தைகள் நேரில் பார்த்து அவரை உற்சாகமூட்டினர் 42 கிலோ மீட்டர் தூர முழு மாரத்தானை கென்யாவை சேர்ந்த பிரபல மாரத்தான் வீரர் எலியூத் கிப்சோக் 2 மணி நேரத்திற்குள்ளாக ஓடி முடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 1 மணி 59 நிமிடம் 40.2 வினாடிகளில் அவர் 42 கிலோ மீட்டரை ஓடி முடித்தார். இது இதுவரையில் யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. 34 வயதாகும் அவர் இதே முழு மாரத்தானை 2018 - ல் ஜெர்மனியின் பெர்லினில் 2 மணி நேரம் …
-
- 4 replies
- 753 views
-
-
வரலாற்று சாதனை படைத்த தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை ஆவடி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கும் விளையாட்டு வீரர் நந்தினி (22) தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். முதல்முறையாக தேசிய அளவிலான கோப்பையை வென்ற தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணியின் தலைவர்தான் நந்தினி. Image captionநந்தினி எளிமையான குடும்ப பின்னணி, அரசுப்பள்ளியில் படித்து, வ…
-
- 0 replies
- 688 views
-
-
வரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன? Tamil வரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன? வளர்ந்து வரும் இளம் வீரர்களைக் கொண்டுள்ள ஒரு படையாகத் திகழும் யாழ்ப்பாணம் குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம், தாம் கடந்து வந்த கடந்த கால வெற்றிகளை எதிர் காலத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி, இலங்கையின் முன்னணி அணிகளில் ஒன்றாக வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி வருகின்றது. …
-
- 0 replies
- 498 views
-
-
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் விடைபெற்றார் மோர்னே மோர்கல் தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் விடைபெற்றார். #SAvAUS #MorneMorkel தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மோர்னே மோர்கல். 33 வயது 179 நாட்களாகும் இவர், தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தியாவிற்கு எதிரான டர்பன் டெஸ்டில் அறிமுகமானார். அதன்பின் அந்த அணியின் ம…
-
- 0 replies
- 401 views
-
-
வரலாற்று வெற்றியினை பதிவு செய்தது பங்களாதேஷ் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது வெற்றியினை இன்று பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி 16 வருடங்கள் கடந்த நிலையில் இன்று இங்கிலாந்தினை முதல் முறையாக வெற்றி கொண்டுள்ளது. பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியினை வெற்றிக் கொண்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். தனது முதலாவது இனிங்ஸில் பங்களாதேஷ் அணி 63.5 ஓவர்களுக்கு சகல விக்…
-
- 4 replies
- 522 views
-
-
வரலாற்றுச் சாதனைகளுடன் அவுஸ்திரேலியாவை அபார வெற்றிகொண்டது இலங்கை (நெவில் அன்தனி) காலி சர்வதேச விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற அவுஸ்திரெலியாவுடனான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரலாற்றுச் சாதனைகளுடன் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட வோர்ன் - முரளிதரன் டெஸ்ட் தொடர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் 1 - 1 என சமநிலையில் முடிவடைந்தது. அறிமுக சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசூரய பந்துவீச்சிலும் மூத்த வீரர் தினேஷ் சந்திமால் துடுப்பாட்டத்திலும் வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டி இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றினர். ப்ரபாத் ஜயசூரிய தனது…
-
- 0 replies
- 389 views
-
-
வரலாற்றை மாற்றுமா ஜெர்மனி? 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த வலுவான அர்ஜென்டீனாவும் மோதவிருக்கின்றன. இந்த இரு அணிகளும் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் மோதவிருக்கின்றன. இதற்கு முன்னர் 1986, 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 1986-ல் அர்ஜென்டீனாவும், 1990-ல் ஜெர்மனியும் வெற்றி பெற்றுள்ளன. வரலாறு மாறுமா? தென் அமெரிக்க கண்டத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த (உருகுவே இருமுறை, ப…
-
- 0 replies
- 627 views
-
-
வரி ஏய்ப்பு: பிரேசில் வீரர் நெய்மரின் ரூ.310 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்! வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரின் ரூ. 310 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரேசில் அணியின் முன்கள வீரரான நெய்மர், தற்போது பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன்னர் தாய்நாட்டை சேர்ந்த சான்டோஸ் அணிக்காக அவர் விளையாடினார். பின்னர் அவரை ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்தது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, சுமார் 16 மில்லியன் பவுண்டுகள் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக சா பாலோ நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதாவது 33.1 மில்லியன் பவுண்டுகள் கொண்ட சொத்து மதிப்பை, வெறும் 3.2 மில்லியன…
-
- 0 replies
- 164 views
-
-
வரி ஏய்ப்பு விவகாரம் : தந்தையால் நீதிமன்ற படிகட்டு ஏறும் லயனல் மெஸ்சி! பார்சிலோனா :வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா அணி வீரர் லயனல் மெஸ்சி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயனல் மெஸ்சி, உலகப் புகழ்பெற்ற கால்பந்து அணியான ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வருகிறார். கடந்த 2007 முதல் 2009 ஆம் ஆண்டு காலத்தில் லயனல் மெஸ்சி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. விளம்பர வருவாயை குறைத்துக் காட்டி, சுமார் 4.1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 கோடி) வரி ஏய்ப்பு செய்ததாக மெஸ்சி அவரது தந்தை ஜார்ஜ் ஹார்சியோ ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அத…
-
- 0 replies
- 286 views
-
-
வரி ஏய்ப்பு விவகாரம் : லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை? வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும் பார்சிலோனா அணியின் நம்பிக்கை வீரருமான லயனல் மெஸ்சி கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில்தான் வசித்து வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டு ஸ்பெயின் குடியுரிமையும் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது. லயனல் மெஸ்சியின் புகைப்படங்களை பயன்படுத்தி கொள்ள உருகுவே, சுவிட்சர்லாந்து நாடுகளின் நிறுவனங்களுக்கு அனுமதியளித்த வகையில், கிடைத்த வருவாய்க்கு மெஸ்சி முறையாக வரி செலுத்தவில்லை என்று ஸ்பெயின் நிதித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். …
-
- 0 replies
- 307 views
-
-
வரி ஏய்ப்பு: மெஸ்சியின் 21 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் 21 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து கால்பந்து வீரர் மெஸ்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் நிராகரித்து, தண்டனையை உறுதி செய்துள்ளது. பார்சிலோனா: உலக புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி. இவர் அர்ஜென்டினா, பார்சிலோனா ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். இவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2007 முதல் 2009 - ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 4.1 மில்லியன் யூரோ அளவுக்கு வரி ஏய்ப…
-
- 0 replies
- 304 views
-
-
வரி ஏய்ப்பு.. பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது புகார்! ரியோ டி ஜெனீரோ: பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது. பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மார், பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில், பிரேசிலின் சாந்தோம் கிளப் அணியில் இருந்து ஸ்பானிஷ் கிளப் அணிக்காக அவர் பரிமாற்றம் செய்யப்பட்டதில், தனக்கு அளிக்கப்பட்ட தொகையில் நெய்மார் வரி ஏய்ப்பு செய்ததாக பிரேசிலை சேர்ந்த வார இதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நெய்மாருக்கு சொந்தமான அனைத்து சொத்துகளின் மதிப்புகளையும் தணிக்கை செய்யுமாறும் சண்டோஸ் நகர் மத்திய அரசு வழக்கறிஞர்கள் உத்தரவிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் மீதான குற்றச்சாட்டு …
-
- 0 replies
- 278 views
-
-
வருகிறது மேற்கூரையிட்ட கிரிக்கெட் மைதானம் புதுடில்லி: மழையால் போட்டிகள் தடைபடாமல் இருக்க, மேற்கூரையிட்ட கிரிக்கெட் மைதானம் உருவாகிறது. வரும் 2019 உலக கோப்பை தொடரில் இது பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. கிரிக்கெட் நடக்கும் போது மழை வந்தால் போட்டியை முழுமையாக நடத்த முடியாது. அப்போது ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கு குறித்து நிர்ணயம் செய்ய ‘டக்–வொர்த் லீவிஸ்’ விதி பின்பற்றப்படுகிறது. இதனால், பல போட்டிகளின் முடிவுகள் அப்படியே தலைகீழாகி விடும். 1992 உலக கோப்பை தொடரில் சிட்னி போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான இலக்கு மாற்றப்பட, தென் ஆப்ரிக்க அணி (1 பந்து, 22 ரன்) பரிதாபமாக வீழ்ந்தது. சமீபத்திய உலக கோப்பை தொடரிலும், மழை வந்து தென் ஆப்…
-
- 3 replies
- 499 views
-
-
வருகை தரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு நியூஸி. கேப்டனின் எளிய அறிவுரை கேன் வில்லியம்சன். | படம்: ஏ.பி. வரும் மாதங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருப்பதை முன்னிட்டு நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் எளிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். இந்திய அணியிடம் 0-3 என்று ஒயிட்வாஷ் ஆன நியூஸிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் டாஸில் தோல்வியுற்று டெஸ்ட்டிலும் தோல்வி தழுவியது. இந்திய பிட்ச்களில் முதலில் பேட் செய்யும் சாதகங்களைக் குறிப்பிட்டு கேன் வில்லியம்சன் கூறும்போது, “டாஸில் வெல்வது உதவியாக இருக்கும். நிச்சயம் அணிகள் இந்திய அணிக்கு எதிராக தங்களது சிறப்பான ஆட்ட்த்திறனை வெளிப்படுத்துவது அவ…
-
- 0 replies
- 317 views
-
-
வருங்காலத்துக்கான வேகப்பந்து வீச்சு திறமைகள் இந்தியாவில் உள்ளன: கிளென் மெக்ரா எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியின் இயக்குநராக இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆஸ்திரேலிய கிரேட் கிளென் மெக்ரா, இந்திய வேகப்பந்துவீச்சு திறமைகள் பற்றி நம்பிக்கை தெரிவித்துள்ளார். எம்.ஆர்.எஃப். அகாடமியிலிருந்து அடுத்து வரும் வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றி கிளென் மெக்ரா கூறும் போது, “வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டே ஆகியோர் சிறப்பாக வீசி வருகின்றனர். மேலும் பல்தேஜ் சிங் இருக்கிறார், இவரிடம் நல்ல ஆக்ஷன் உள்ளது. சந்தீப் வாரியர் என்பவரும் நம்பிக்கை அளிக்கிறார். அஸ்வின் கிரிஸ்ட் என்பவரும் நெடுந்தூரம் முன்னேறி வந்துள்ளார். இவர் சரியான இடங்களில் பந்தை பிட்ச் செய்கிறார், தான் என்ன …
-
- 0 replies
- 471 views
-
-
வருட இறுதியில் 2022 கால்பந்தாட்டம்? 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடர் நவம்பர் - டிசெம்பர் மாதங்களில் நடத்தப்படுவதே நல்லது என ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் செய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா தெரிவித்துள்ளார். அந்தக் காலப்பகுதி குளிர் காலமாக இருப்பதனால் அனைத்து நாட்டு வீரர்களும் அதனை விரும்புவார்கள். வெப்ப காலத்தில் போட்டிகளை நடாத்தினால் வீரர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள். அதேவேளை 2022ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளமையினால் அந்த நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதி இல்லாமலும் இருக்க வேண்டும். எனவே இந்தக் காலப்பகுதியே பொருத்தமானது என கட்டார் கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் செய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா தெரிவி…
-
- 0 replies
- 379 views
-
-
வருடத்தின் அதி சிறந்த வீரருக்கான லோரியஸ் விருது ஜோகோவிச்சுக்கு; சிறந்த வீராங்கனையாக செரீனா வில்லியம்ஸ் தெரிவு சேர்பியாவின் டென்னிஸ் சம்பியன் நொவாக் ஜோகோவிச் வருடத்தின் அதி சிறந்த விளையாட்டு வீரருக்கான லோரியஸ் விருதை வென்றெடுத்துள்ளார். இதேவேளை, வருடத்தின் அதி சிறந்த வீராங்கனைக் கான லோரியஸ் விருதை ஐக்கிய அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வென்றெடுத்துள்ளார். இவ் வருடத்திற்கான லோரியஸ் விருது விழா ஜேர்மன் நாட்டின் தலைநகரான பேர்லினில் அமைந்துள்ள பலாய்ஸ் அம் ஃபன்க்டேர்ன் கோபுர மண்டபத்தில் திங்களன்று நடைபெற்றது. செரீனா வில்லியம்ஸ் வென்றெடுத்த நான்காவது லோரியஸ் விருது இது…
-
- 0 replies
- 281 views
-
-
(நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த உலக மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை ஒலிம்பிக் சம்பியன்கள் சிபான் ஹசன், லெட்சைல் டெபோகோ ஆகியோர் வென்றெடுத்தனர். மொனாக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக மெய்வல்லுநர்கள் விருது விழா 2024இன் போது அவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநருக்கான விருதை வென்றெடுத்த நெதர்லாந்தின் சிபான் ஹசன், அதிசிறந்த வெளியரங்க வீராங்கனைக்கான விருதையும் வென்றெடுத்தார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 7 நாட்கள் இடைவெளியில் 2 வெண்கலப் பதக்கங்களையும் ஒரு தங்கப் பதக்கத்தையும் சிபான் ஹசன் வென்றிருந்தார். பெண்களுக்கான 5000 மீற்றர், 10000 ம…
-
- 0 replies
- 490 views
- 1 follower
-
-
வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீரர் பாபர் அஸாம் ! வீராங்கனை நட்டாலி சிவர் By VISHNU 26 JAN, 2023 | 03:37 PM (என்.வீ.ஏ.) வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி .கிரிக்கெட் வீரருக்கான சேர் ஜோன் கார்பீல்ட் விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் வென்றெடுத்தார். வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேவோ விருது இங்கிலாந்தின் நட்டாலி சிவருக்கு கிடைத்துள்ளது. வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் இர்ணடாவது தொடர்ச்சியான தடவையாக வென்றெடுத்துள்ளார். வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர் 02 Dec, 2025 | 03:11 PM (நெவில் அன்தனி) சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் உலக சம்பியன்களான மொண்டோ டுப்லான்டிஸ் மற்றும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் ஆகிய இருவரும் இந்த வருடம் நிலைநாட்டிய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் இருவரையும் வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) தெரிவுசெய்து உயர் விருதுகளை வழங்கியது. மொனோக்கோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விhழவின்போது இந்த உயர் விருதுகளுடன் இன்னும் சில விருதுகள் வழங்கப்பட்டன. சுவடு, மைதானம், மற்றும் வெளிக்களம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண், பெண் இருபாலா…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
12 DEC, 2023 | 03:28 PM (நெவில் அன்தனி) 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த மெய்வல்லுநர்களாக நோவா லைல்ஸ், மொண்டோ டுப்லான்டிஸ், கெல்வின் கிப்டம், டிகிஸ்ட் அசேஃபா, ஃபெய்த் கிப்பிகோன், யூலிமா ரோஜாஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொனாக்கோவில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விழாவின்போது உலக சாம்பியன்கள் மற்றும் உலக சாதனை படைத்தவர்கள் இறுதி வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த வருடத்தின் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர்களாக இம்மானுவேல் வன்யோன்யி, ஃபெய்த் செரோட்டிச் ஆகியோர் தெரிவாகினர். வாக்களிக்கும் முறையின்போது பெறப்பட்ட கருத்துக்களைப் பின்பற்றி இந்த வருடத்துக்கான உலக மெய்வல்லுநர் விருதுகள் வழங்கப்பட்ட…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
வருத்தத்துடன் ஓய்வு பெற்றார் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மேட் பிரையர் ஜூலை 23, 2007-ம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோனி விளாசுவதை பார்க்கிறார் தற்போது ஓய்வு அறிவித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மேட் பிரையர். | கோப்புப் படம். குதிகால் தசைநார் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் இங்கிலாந்து மற்றும் சசெக்ஸ் அணி விக்கெட் கீப்பர் மேட் பிரையர் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இஷாந்த் சர்மா அபாரமாக வீச் இந்தியாவை வெற்றி பெறச் செய்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் பிரையர். இதனையடுத்து 2014 சீசன் முழுதும ஆட முடியாத நிலை ஏற்பட்டது. 2015-இல் மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழையல…
-
- 0 replies
- 311 views
-