Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அசத்தலான ஒலிம்பிக் தொடக்க விழா காட்சிகள்

  2. இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் கனடா செல்கின்றது [21 - September - 2008] கனடாவில் நடைபெற இருக்கும் 20 -20 கிரிக்கெட்போட்டியில் பங்குபற்ற இருக்கும் இலங்கை அணி வீரர்களின் பெயர்பட்டியல் கடந்தவாரம் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இலங்கை அணியின் முன்னணி மூத்த வீரர்களான முத்தையா முரளீதரன், சமிந்தவாஸ், குமார்சங்கக்கார, சாமர சில்வா ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இவர்களுக்குப் பதிலாக தற்போது முதல்தர கிரிக்கெட்போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் திலின கண்டம்பி, தில்ரா, லொக்கு ஹெட்டிகே, ஜீவன்தகுலதுங்க ஆகியோர் இலங்கை அணியில் புதியதாக இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் காயம் காரணமாக கடந்த 8 மாதங்களாக இலங்கை அணியில் இடம்பிடிக்காது இருந்து வந்த சகலதுறை ஆட…

  3. இனிய வணக்கங்கள், 2008 ஒலிம்பிக் இன்னும் சில கிழமைகளில சீனாவில ஆரம்பமாக இருக்கிது. இந்த ஒலிம்பிக் பற்றிய கலந்துரையாடல், வர்ணனைகளிற்காக இந்த தலைப்பை ஆரம்பிக்கின்றேன். இதில நீங்கள் வாழுற நாடுகளில ஒலிம்பிக் சம்மந்தமான செய்திகளையும் கொஞ்சம் சொல்லுங்கோ. நம்மோட கனடா நாடு கடந்த 2004 ஒலிம்பிக்கில் 12 பதக்கங்கள் பெற்று 21ம் இடத்தில வந்திச்சிது. இந்தமுறையும் அவ்வாறே 20 சொச்சத்தில வரக்கூடும். இந்தமுறை சீனா பதக்க பட்டியலில முதலாம் இடம் பெறும் எண்டு கூறப்படுகிது. ஒரு பதக்கம் குறைவாக எடுத்து அமெரிக்கா இரண்டாம் இடத்தில வரும் எண்டு சொல்லப்படுகிது. முக்கியமாக இந்த ஒலிம்பிக் போட்டியின் கதாநாயகனாக அமெரிக்காவின் நீச்சல் வீரர் Michael Phelps விளங்குவார் என எதிர்வு கூறப்பட்டுள்ள…

    • 81 replies
    • 12.6k views
  4. ஒலிம்பிக்: தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா-வரலாறும் படைத்தார் பெய்ஜிங்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒலிம்பிக் தங்கம் இது. மேலும் தனி நபர் ஒருவர் இந்தியாவுக்காக தங்கம் வென்றதும் இதுவே முதல் முறையாகும். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே இந்தியாவுக்கு ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய காலை இந்தியாவுக்கு தங்கமான காலையாக புலர்ந்துள்ளது. ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை தட்டி புதிய வரலாறு படைத்தார். …

  5. ஒலிம்பிக் குத்துச்சண்டை: அகில்குமார் போராடி வெற்றி! வெள்ளி, 15 ஆகஸ்ட் 2008( 18:21 IST ) ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வெற்றியை இந்திய மக்களுக்கு சுதந்திர தினப் பரிசாக அளிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த இந்திய வீரர் அகில்குமார், இன்று உலக சாம்பியன் செர்ஜியை போராடி வென்றார். சற்றுமுன் நடந்து முடிந்த (இந்திய நேரப்படி மாலை 6 மணி) 54 கிலோ பான்டம்வெயிட் 2வது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜி வோடோப்யனோவ் உடன் மோதிய அகில்குமார் மொத்தமுள்ள 4 ரவுண்டுகளின் முடிவில் 9-9 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார். போட்டி நடுவர்களின் முடிவே வெற்றியாளரை நிர்ணயிக்கும் என்ற நிலையில், அகில்குமார் வெற்றி பெற்றதாக ந…

  6. பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந் நாட்டு நேரப்படி இன்று இரவு 8 மணி 8 நிமிடத்துக்கு ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்குகின்றன. உலக விளையாட்டரங்கில் மிகப் பெரிய திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெறுகிறது. அந் நாட்டு நேரப்படி இன்று இரவு சரியாக 8 மணிக்கு பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சீன அதிபர்ஹூ ஜின்தாவோ, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். தொடக்க விழாவை மிகப் பிரமாண்டமான முறையில் நடத்த சீனா ஏற்பாடு செய்துள்ளது. தொ…

  7. டெல்லி: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள இருந்த மோனிகா தேவி ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறி வெளியேற்றப்பட்டார். இதனால் பெண்கள் பளு தூக்கும் போட்டியில் இந்தியா இடம் பெறுமா என்பது தெரியவில்லை. ஒலிம்பிக் போட்டி வரும் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கிறது. இதில் 57 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. தடகளம், துப்பாக்கி சுடுதல், நீச்சல், வில் வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், குத்துச்சண்டை, மல்யுத்தம், பளு தூக்குதல், ஜூடோ, துடுப்பு படகு, பாய் மர படகு ஆகிய விளையாட்டுகளில் இந்திய அணி கலந்து கொள்கிறது. பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் சார்பில் இடம் பெற்ற ஒரே பெண் வ…

    • 1 reply
    • 1.3k views
  8. மென்டிஸை விட அபாயமானவர் முரளி அவரே இந்திய அணிக்கு சவாலாயிருப்பார் [19 - July - 2008] *ஹர்பஜன் கூறுகிறார் அஜந்த மென்டிஸை விட முரளிதரன் தான் மிகவும் அபாயகரமானவரென ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்ததற்காக 5 போட்டி தடை விதிக்கப்பட்டு, பின் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர் ஹர்பஜன், மென்டிஸை விட முரளிதரனே ஆபத்தானவர் என்கிறார். இது குறித்து ஹர்பஜன் அளித்த பேட்டியில்; மென்டிஸின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது. இதுபோன்ற மந்திர பந்துவீச்சை டெனிஸ் பந்துகளில் செய்தவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், கிரிக்கெட் பந்திலும் இதை சாதிக்க முடியுமென அவர் நிரூபித்துள்ளார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்ட…

    • 6 replies
    • 2.2k views
  9. ஒரு கலாச்சாரக் கணக்கெடுப்பு சச்சிதானந்தன் சுகிர்தராஜா என்னுடைய முதல் எழுத்து கிரிக்கட் பற்றியது. சிறிலங்கா சிலோனாக இருந்த நாள்களில் Daily News பத்திரிகையில் இந்த விளையாட்டைப் பற்றி எழுதியிருந்தேன். பக்கம் பக்கமாகப் பத்தி அல்ல. ஒரு சின்ன பத்தி. இந்தியப் பந்து வீச்சாளர் பாபு நட்கரிணி (அந்த நாள்களில் ஏழை மக்களின் கபில் தேவ் என்று வைத்துக்கொள்ளுங்கள்) சென்னையில் நடந்த ஆங்கில அணிக்கெதிரான போட்டி ஆட்டத்தில் தொடர்ந்து ஓட்டங்கள் இல்லாமல் பந்தெறிவதில் ஒரு சாதனை புரிந்திருந்தார். கிட்டத்தட்ட நூற்றிப்பதினான்கு நிமிடங்கள் நட்கரிணி ஆங்கிலேய ஆட்டக்காரர்களான பிரயன்பாவூலுசுக்கும் கென் பாரிங்டனுக்கும் எதிராகப் பந்து வீசினார் என்று நினைக்கிறென். நட்கரிணி வீசிய சுழல் பந்தில் அவர…

    • 0 replies
    • 849 views
  10. ரொனால்டினோவை ஒலிம்பிக்கிற்கு அனுமதிக்க முடியாது- பார்சிலோனா! பிரேசில் வீரர் ரொனால்டினோவை பீஜிங் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளுக்கு அனுப்ப முடியாது என்று அவர் விளையாடி வரும் ஸ்பெயின் கால்பந்து லீக் கிளப் பார்சிலோனா தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் நோக்கத்துடன் பிரேசில் அணியில் ரொனால்டினோ, ருபீனோ ஆகிய மூத்த வீரர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் 2008-09 ஸ்பானிய கால்பந்து சீசனுக்கான தயாரிப்புப் பயிற்சிகளுக்கு அவர் பார்சிலோனா அணிக்கு தேவைப்படுகிறார். அதனால் அவரை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுமதிக்க முடியாது என்று பார்சிலோனா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிபாவின் போட்டி விவரப்பட்டியலில் ஒலிம்பிக் கால்பந்து இடம்பெறவில்ல…

    • 4 replies
    • 1.5k views
  11. 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து சிம்பாப்வே அணியை ஐ.சி.சி. நீக்கியது [07 - July - 2008] சிம்பாப்வே பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இங்கிலாந்தில் நடக்கும் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து விலக சிம்பாப்வே ஒப்புக்கொண்டது. அதேசமயம், ஐ.சி.சி. உறுப்பினர் அந்தஸ்தில் தொடர்ந்துமிருக்கும். ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாப்வேயில் நிலவும் அரசியல் பிரச்சினை காரணமாக, அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் துண்டித்தன. சமீபத்தில் சர்ச்சைக்குரிய மறுதேர்தலில் ரொபர்ட் முகாபே மீண்டும் சிம்பாப்வே ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். முகாபே அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் இங்கிலாந்து அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 20…

    • 0 replies
    • 728 views
  12. ஒருநாள் போட்டிகளில் அக்ரத்தின் சாதனையை முறியடிக்க முரளிக்கு இன்னும் 30 விக்கெட்டுகள் தேவை [03 - July - 2008] ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அக்ரத்தின் சாதனையை முறியடிக்க முரளிதரன் ஆர்வமாயுள்ளார். உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முரளிதரன். அவர் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் என்ற சாதனை படைத்துள்ளார். 37 வயதான முரளிதரன் 120 டெஸ்டில் விளையாடி 735 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷேன் வோர்னின் சாதனையை முறியடித்து அவர் முதலிடத்திலுள்ளார். ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பாகிஸ்தான் முன்னாள் கப்டன் வாஸிம் அக்ரமின் சாதனையை முறியடிக்க முரளிதரன் …

    • 0 replies
    • 923 views
  13. இவ்வாண்டின் மிகப்பெரிய கோடைகாலத் திருவிழாவாக ஐரோப்பாவில் எதிர்பார்த்து காத்திருப்பது ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளாகும். இம்முறை சுவிற்சர்லாந்தும் ஓஸ்ரியாவும் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன. இதற்காக சுவிற்சர்லாந்தில் பாசல், சூரிச், ஜெனீவா, பேர்ன், ஆகிய நான்கு நகரங்களும் ஒஸ்ரியாவில் வியன், கிளாகன்பேர்ட், இன்ஸ்புறாக், சால்ஸ்பூர்க் ஆகிய நான்கு நகரங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளன. மேலதிக விபரம் http://www.swissmurasam.info

    • 296 replies
    • 27.4k views
  14. உலகக் கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் ஆர்ஜென்ரீனா ஆட்டம் "டிரா'வில் முடிந்தது [21 - June - 2008] பிரேசிலில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் ஆர்ஜென்ரீனா அணிகள் கோல் எதுவும் போடாததால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. இரு அணிகளும் தடுப்பு வியூகத்தை ஊடுருவி முன்னேற முடியாமல் தத்தளித்தன. ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி ஆட்டம் முடியும் தருணத்தில் கோல் அடிக்க கிடைத்த 2 வாய்ப்புக்களையும் தவறவிட்டார். இந்த உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஆர்ஜென்ரீனாவும், பிரேசிலும் மோசமாக விளையாடி வருகின்றன. பராகுவே அணியுடன் பிரேசில் 20 என்று அதிர்ச்சித் தோல்வியடைந்தது. அதேபோல் ஆர்ஜ…

    • 0 replies
    • 1k views
  15. கடைசி நிமிடத்தில் பெனால்டி கொடுத்த நடுவரை கொல்ல வேண்டும் போலிருந்தது [16 - June - 2008] * போலந்து பிரதமர் ஆவேசம் ஐரோப்பிய கால்பந்து போட்டியில் போலந்து அணி வெற்றியை நெருங்கிய கடைசி நிமிடங்களில் ஆஸ்திரியாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கிய இங்கிலாந்து நடுவர் ஹாவட் வெப்பை கொலை செய்ய வேண்டும் போல், தான் உணர்ந்ததாக போலந்து பிரதமர் டொனால்ட் துஸ்க் ஆவேசமாகக் கூறியிருக்கிறார். "ஒரு பிரதமர் என்ற முறையில் நான் நடுநிலைமையோடு இருக்க வேண்டியுள்ளது. ஆனால், கால்பந்து ரசிகர் என்ற முறையில் இந்த ஆட்டத்தை பார்த்த போது, அந்த நடுநிலைத் தன்மையை இழந்து ஆத்திரத்தில் பேசினேன். அந்த நேரத்தில் நடுவரைக் கொல்ல வேண்டும் போல் தோன்றியது. நடுவர்களும் தவறு செய்வர் என்பது எல்லோருக்கும் தெரியும…

  16. உதை பந்து எண்டால் என்ன? ஆக்களுக்கு உதைஞ்சு விளையாடுறதோ இல்லாடிக்கு பந்துக்கு உதைஞ்சு விளையாடுறதோ? இல்லாட்டிக்கு பந்துக்கு உதையுறமாதிரி பாசாங்கு செய்துகொண்டு ஆக்களுக்கு உதைஞ்சு விளையாடுறதோ? நான் பார்த்த அளவில கால்தடம் போடுறதுக்கு.. ஆக்களிண்ட கையக், கால பிடிச்சு இழுத்து விழுத்துறதுக்கு.. foul விளையாட்டுக்கு போர்த்துக்கல் அணியிட்ட எல்லாரும் பாடம் படிக்கவேணும். அவனுகள் முறைகேடா விளையாடிபோட்டு - மற்றவன இழுத்து விழுத்திப்போட்டு - எதுவும் தெரியாத அப்பாவி பாப்பா மாதிரி நடிக்கிற அழகோ அழகு.. இப்பிடி விளையாடுறது எல்லாராலையும் ஏலாது.. கீழ இருக்கிற விளையாட்டுக்கு பெயர்தான் உதை பந்தோ எண்டு ஒருக்கால் பார்த்து சொல்லுங்கோ..

  17. பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா கிரிக்கட் அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மீத்பூர் தேசிய கிரிக்கட் மைதானத்தில் இந்தப் போட்டி பிற்பகல் 2.30 ஆரம்பமாகும். விபரம்: http://www.swissmurasam.info/

  18. ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில் தொடர்ந்தும் பலம்பொருந்திய அணிகளுக்கு நெதர்லாந்து கால்பந்தாட்ட அணி அதிர்சி வைத்தியம் அளித்து வருகிறது. சுவிற்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற குழு ‘சீ;கான போட்டிகளில், பிரான்ஸை மிக இலகுவாகத் தோற்கடித்து நெதர்லாந்து காலிறுதிக்கு தகுதிபெற்றது. மற்றுமொரு ஆட்டத்தில் இத்தாலியும், ரோமானியாவும் சமநிலை பெற்றன. விபரம்: http://swissmurasam.info/content/blogcategory/72/54/

  19. இலங்கை அணியில் மீண்டும் சனத் [19 - May - 2008] இலங்கை அணியில் சனத் ஜெயசூரியா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 38 வயதான ஜெயசூரியா இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்டார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் அவர் மீண்டும் இடம்பெற்றுள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக ஆடி வருவதையடுத்து ஜெயசூரியா மீண்டும் இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக உப்புல் தரங்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜூன் மாதம் 24 ஆம் திகதி பாகிஸ்தானில் இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ணப் போட்டி தொடங்குகிறது. thinakural.co…

  20. ராஜஸ்தான் அணியுடனான தோல்வியால் சென்னையின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலில் [26 - May - 2008] சென்னையில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல். லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சுப்ப கிங்ஸ் அணியின் போராட்டம் வீணானது. கடைசி ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிடம் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது. மோர்கலின் அதிரடி ஆட்டம் எடுபடாமல் போனது. ஐ.பி.எல். தொடரில் 49 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில் சென்னை சுப்ப கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் கப்டன் வோர்ன் முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. வித்யூத…

  21. இத்தருணத்தில் உதைப்பந்தாட்ட ரசிகர்களை கேட்பதில் ஆச்சரியம் இருக்காது என நினைக்கிறேன். ஏனோ தெரியவில்லை பிறேசில் விளையாட்டு வீரர் கவ்வு எனது மனதை கவர்ந்தவர்.எத்தகைய சூழ்நிலையிலும் அவரின் வசீகர சிரிப்பை காணலாம். உங்களுக்கு பிடித்த வீரர்களை கூறுங்களேன். தயவு செய்து விளையாட்டு செய்திக்கு மாற்றுங்கள்.

  22. வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி யாழில் ஆரம்பம் வடக்கின் பெரும் போர் என வாண்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையேயான துடுப்பாட்டப் போட்டி நேற்று காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியில் பூவா தலையா போட்டதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 102 வது தடவையான போட்டி முதல் மூன்று நாட்களுக்கு இடம் பெறவுள்ளது. pathivu.com

  23. 2016 இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது யார்? ஆசியா உட்பட உலக நாடுகளிடையே போட்டி [07 - June - 2008] 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு ஆசியா உள்ளிட்ட உலக நாடுகளிடையே கடும்போட்டி நிலவுகிறது. சீனாவில் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டில் (824) நடைபெறவுள்ளது. அதற்கடுத்த போட்டி, 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ளது. அதற்கடுத்த போட்டியை நடத்துவதற்கு உலக நாடுகள் பல போட்டியிட்டு வருகின்றன. இருந்தாலும் அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளிடையில்தான் கடும் போட்டி இருக்குமெனத் தெரிகிறது. இதற்கிடையே போட்டியை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு பல்வேறு நாடுகள், தங்களது சாதகமான அம்சங்களைத் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத…

  24. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளின் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 105 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷேவாக், முதலில் ராஜஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தார். ஸ்மித்தும், அஸ்னோட்கரும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி அதிரடி ஆட்டம் ஆடினர். அஸ்னோட்கர் 23 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை, பவுண்டரி லைனில் நின்ற மகரூப் நழுவ விட்டதால் அவர் மேற்கொண்டு 16 ரன்கள் தங்கள் அணிக்கு சேர்த்து விட்டார். முதல் விக்கெட்டுக்கு 6…

    • 5 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.