Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டீம்ல நாலு ஃபாஸ்ட் பெளலர் இருந்தாபோதும்... எந்த டீமுக்கும் தண்ணி காட்டலாம் ! "ஆம், அந்தப் பந்தை இன்னும் 20, 30 முறை எதிர்கொண்டாலும் நான் அவுட்தான் ஆவேன். பெளலரைப் பாராட்டிவிட்டு, இந்த விஷயத்தை விட்டு நகருங்கள்..." - ஜேம்ஸ் வின்ஸ் வார்த்தைகளில் குற்றவுணர்வு. அவரால் கம்பீரமாக பத்திரிகையாளர்களை எதிர்கொள்ள முடியவில்லை. அந்த பந்தைப் பற்றி அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தது ரொம்பவுமே எரிச்சலூட்டியது. ஏனெனில், அவர் அவுட்டான விதம் அப்படி. சமீபத்தில் முடிந்த ஆஷஸ் தொடரில், மிச்செல் ஸ்டார்க் வீசிய அந்த மாயப்பந்தில், ஆஃப் ஸ்டம்ப் சரிந்து விழ, பெய்ல்கள் மின்னிக்கொண்டே பறக்க, ஆட்டமிழந்தார் வின்ஸ். கேட்ச், எல்.பி.டபிள்யூ, ரன் அவுட் என வேறு எப்படி அவுட் ஆகியிருந்த…

  2. கோலியை தேர்வு செய்ய எதிர்த்த தோனி; பலிகடாவான தமிழக வீரர் பத்ரிநாத்: அம்பலப்படுத்தினார் வெங்சர்க்கர் கோப்புப் படம் விராட் கோலி அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீரர் பத்ரிநாத் சுப்பிரமணியன் தேர்வு செய்யப்படவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான திலிப் வெங்சர்க்கர் அம்பலப்படுத்தியுள்ளார். அணிக்குள் விராட் கோலியைத் தேர்வு செய்ய அப்போது கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனியும், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கர், கடந்த 2006-ம் ஆண்டில் …

  3. வட மாகாண விளையாட்டு விழா : வவுனியா மாணவனுக்கு தங்கம், வெள்ளி By DIGITAL DESK 2 20 DEC, 2022 | 05:16 PM வட மாகாண விளையாட்டு விழாவில் வவுனியா மாவட்டத்தைச் செர்ந்த சசிகுமார் டனுசன் ஒரு தங்கம் உட்பட 2 பதக்கங்களை வென்று பலத்த பாராட்டைப் பெற்றார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சசிகுமார் டனுசன் வென்றெடுத்தார். 1,500மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள், 37.00 செக்கன்களில் ஓடி முடித்து சசிக…

  4. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு விராட் கோஹ்லி கேப்டன்! மும்பை: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் டோணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோஹ்லிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி திடீரென ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டதால், அதற்கு பதிலாக, நவம்பரில், இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு விராட் கோஹ்லி கேப்டன்! இந்த சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி தேர்வு இன்று நடைபெற்றது. இதன்படி, டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டு கோஹ்லி, இத்தொடருக்கான கேப்டனாக்கப்பட்டுள்ளார். டோணிக்கு பதிலாக விருத்திமான் ச…

  5. ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா? பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலுடன் நட்பு குறித்து கே.எல்.ராகுல் பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கொண்டுள்ள நட்பு குறித்து சமூகவலைத்தளங்கள் படங்களுடன் அலற, இது காதல்தான் என்று பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமா? என்று அங்கலாய்த்துள்ளார். இது தொடர்பாக என்.டி.டிவியில் கே.எல்.ராகுல் கூறும்போது, “ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமானதா? எனக்கு அவரை நீண்டகாலமாகத் தெரியும், நாங்கள் இருவரும் ஒரே நகரைச…

  6. 2 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து மிதாலி ராஜ் சாதனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச இருபதுக்கு- 20 போட்டிகளில் 2 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். மிதாலி ராஜ், இந்திய மகளிர் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவியாக செயற்பட்டு வருகின்றார். மிதாலி ராஜ், அனைத்த வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் சிறந்த மகளிர் துப்பாட்ட வீராங்கனையாக கருதப்படுகின்றார். இந்நிலையில், மிதாலி ராஜ் புதிய சாதனையொன்றை தற்போது படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மகளிர் ஆகியக் கிண்ண லீக் போட்டியில் மிதாலி ராஜ் 23ஓட்டங்களை பெற்றபோது, சர்வதேச டஇருபதுக்கு - 20 போட்டிகளில் 2 ஆயி…

  7. விம்பிள்டனில் புதிய சாதனை: முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றவர்கள்! (படங்கள்) கிராண்ட்ஸ்லாம் ஓபன் எராவில் இப்படி நடைபெற்றதில்லை. இதுவே முதல்முறை என்பதால் இந்த எட்டு வீராங்கனைகளும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த வருட விம்பிள்டன் போட்டியில் மகளிர் பிரிவில் காலிறுதிக்குத் தகுதி பெற்ற எட்டு வீராங்கனைகளும் போட்டித் தரவரிசையில் டாப் 10-க்கு வெளியே உள்ளவர்கள். ஓபன் எரா காலக்கட்டத்தில் எந்தவொரு கிராண்ட்ஸ்லாமிலும் இதுபோல நடைபெற்றதில்லை. (ஓபன் எரா - 19…

  8. இன்றைய தரவரிசைப்படி துடுப்பெடுத்தாட்டத்தில் முதலாம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் மைக்கல் ஹசியும் இரண்டாம் இடத்தில் இந்தியாவின் டோனியும் உள்ளார்கள். சிரிலங்காவை :P அண்மையில் மண் கவ்வ வைத்த ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் டோனியின் அதிரடி ஓட்டக் குவிப்பு அவரை இரண்டாம் இடத்திற்கு ஏற்றி விட்டது. ஜானா

  9. திருநெல்வேலி வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய தோனி: தடை காலத்திலும் ரசிகர்கள்ஆதரவு அளித்ததாக நெகிழ்ச்சி படம். | ஆர்.ரகு. சனிக்கிழமையன்று திருநெல்வேலியில் தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 போட்டிக்கு ‘தல’ தோனி திடீரென மைதானத்துக்கு வந்து ரசிகர்களை சந்தோஷ அதிர்ச்சியடையச் செய்தார். டி.என்.பி.எல். கிரிக்கெட்டுக்கு தோனி வருகை தருவது வழக்கமாயினும் சென்னைக்கு வெளியே, அதுவும் திருநெல்வேலிக்கு அவர் இப்போதுதான் முதல் முறையாக வருகை தந்துள்ளார். இது சிறப்பான இடம் என்று கூறிய தோனி, “இங்குதான் இந்தியா சிமெண்ட்ஸ் தொடங்கப்பட்டது, நான் அவர்களுடன் நீண்ட கால தொடர்பில் இருக்கிறேன். எனவே நிறுவனத்தின் முதல் ஆலையைப் …

  10. ‘தம்பி, உங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தியா?’- சச்சினிடம் வம்பு; மன்னிப்பு கேட்ட ஹர்பஜன்: ருசிகரங்களைப் பகிர்ந்த வாசிம் அக்ரம் சச்சின் டெண்டுல்கர், வாசிம் அக்ரம் : கோப்புப்படம் சச்சின் டெண்டுல்கர் அறிமுகப் போட்டியில் களமிறங்கியபோது, அவரைக் கிண்டல் செய்த விதம், நினைவுகள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பகிர்ந்துள்ளார். டெல்லியில் இந்தியாடுடே வார இதழ் சார்பில் சலாம் கிரிக்கெட் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், சுனில் கவாஸ்கர், யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், அப்துல் காதிர், ஹர்பஜன் சிங், முகமது அசாருதீன், ஆர்.அஸ்வின், முத்தையா முரளிதரன், மதன் லால் ஆகியோர் பங்கேற்று தங்களின…

  11. ஆசிய கால்பந்து: மகுடம் சூடிக்கொண்ட அவுஸ்திரேலியா ஆசிய நாடுகளின் கால்பந்தாட்ட மன்னர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் ஆசியக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நேற்று அவுஸ்திரேலியாவில் முடிவுக்கு வந்தன. 1956இல் ஆசியக் கால்பந்து சம்மேளனம் ஆரம்பித்த ஆசியக்கிண்ணக் கால்பந்துத் தொடர், இம்முறை தான் முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஜனவரி 9 முதல் நடைபெற்று வந்த 16ஆவது ஆசியக்கிண்ணம், முதல் தடவையாக அவுஸ்திரேலியாவின் கைகளில் போய்ச் சேர்ந்துள்ளது. ஆசியக் கிண்ணத்தை வெல்கின்ற 8ஆவது நாடு என்னும் பெருமையும் அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்துள்ளது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், ஓஷியானிய வலயத்திலிருந்து அவுஸ்திரேலியா 2006-2007ஆம் ஆண்டுகளில் தான் ஆசிய நாடுகளோடு …

  12. இந்த உலக கோப்பை தொடர்தான் இந்த 10 முன்னணி வீரர்களுக்கும் கடைசி! சென்னை: நடப்பு உலக கோப்பை தொடர் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கடைசி உலக கோப்பை தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இந்திய அணி கேப்டன் மகேந்திரசிங் டோணியும் ஒருவர். வயது மூப்பு தவிர்த்து, காயம், டீம் பாலிடிக்ஸ் என பல காரணங்களால் வீரர்கள் அடுத்த உலக கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் தொடராமல், இடையிலேயே ஓய்வு பெற திட்டமிட்டுள்ளனர். சிலர் இந்த உலக கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு பெறவும் திட்டமிட்டுள்ளனர். அதில் முக்கியமான பத்து வீரர்களின் பட்டியல் இதோ... டோணி இந்திய அணியின் கேப்டன் டோணிக்கு தற்போது 33 வயதாகிறது. உலக கோப்பையை வென்றாலும், தோற்றாலும், அதையே காரணமாக சொல்லிவிட…

  13. இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் ஜோன் ரைட் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணியின் பயிற்சியாளரான ரொம் மூடி இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் நிலையில் இலங்கை அணி புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளசொன ஜோன் ரைட்டை புதிய பயிற்சியாளராக நியமிப்பதில் இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகமும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இது குறித்து ஜோன் ரைட்டுடன் பேசவுள்ளதாகவும் அவர் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் சபை அதிகாரியொருவர் தெரிவித்தார். இதேநேரம் இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக, அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும்…

    • 0 replies
    • 788 views
  14. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டித் தொடரில் ஒர்அங்கமான ஆண்களுக்கான மென் பந்துத் துடுப்பாட்டத் தொடரில் சென்.பீற்றஸ் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது. கடந்த திங்கட்கிழமை முல்லையடி விநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இறுதியாட்டம் இடம் பெற்றது. இதில் துர்க்கா விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து சென்.பீற்றஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய துர்கா விளையாட்டுக்கழக அணியினர் 8 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்கினையும் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றது. …

  15. வவுனியா காத்தார் சின்னக்குளம் அ.த.க.பாடசாலையின் வருடார்ந்த மெய்வன்மைப் போட்டி, பாடசாலை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதிபர் சு.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக காத்தார் சின்னக்குளம் கிராமஅலுவலர் க.தர்சன், சிறப்பு விருந்தினராக பிரதேச்சபை உறுப்பினர் யோகராசா , கெளரவ விருந்தினர்களாக சமாதான நீதவான் ந.ரவீந்திரன் , கங்கேஸ்வரி முன்பள்ளி ஆசிரியை திருமதி டட்லி,ச மூக சேவையாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். …

  16. முதல் தர போட்டியிலாவது அனுமதியுங்கள்: கெஞ்சும் சல்மான் பட் பாகிஸ்தான் கிரிக் கெட் அணி 2010-ஆம் ஆண்டு இங்­கி­லாந்திற்கு சுற்­றுப்­ப­யணம் செய்­தது. அப்­போது மேட்ச் பிக்­சிங்கில் ஈடு­பட்­ட­தாக சல்மான் பட், முக­மது ஆசிப் மற்றும் முக­மது சமி ஆகியோர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டது. இந்த குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டதால் அவர்­க­ளுக்கு ஐந்து வரு­டங்கள் கிரிக்கெட் விளை­யாட தடை விதிக்­கப்­பட்­டது. இந்த தடை இன்­றுடன் முடி­வ­டை­கி­றது. இவர்கள் மூன்று பேரும் உட­ன­டி­யாக சர்­வ­தேச அணியில் சேர்த்­துக்­கொள்ள தகுதி பெற­மாட்­டார்கள் என்று கடந்த புதன்­கி­ழமை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறி­வித்­தது. மேலும், அவர்­க­ளுக்­கான விரி­வான நட­வ­டிக்கை திட்­டத்­தையும் அறி­வித்­தது. அ…

  17. மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டிகள், டி20, மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளுக்கான அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும், டெஸ்ட் தொடரில் அஷ்வினுக்கும் இடம் கிடைத்துள்ளது. தோனிக்கு இந்த போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விரலில் ஏற்பட்ட காயத்தினால் உலகக் கோப்பை அணியில் இருந்து பாதியில் விலகிய ஷிகார் தவான் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆகஸ்டு 3ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தத் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன. டி20க்கான அணி விராட் கோலி (கேப்டன்),…

    • 0 replies
    • 483 views
  18. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்: ஒரு வருடத்திற்கு யாரும் அசைக்க முடியாது! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த தென்னாப்பிரிக்க அணி, நம்பர் 1 இடத்தையும் இழந்தது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. தோனி தலைமையிலான இந்திய அணி முதலிடத்தில் 2011ம் ஆண்டு இருந்தது. அதன் பின் அந்த இடத்தை தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி பிடித்துள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட மிக குறைந்த டெசிமல் புள்ளிகள் வித்தியாசத்தில் வேறுபட்டுள்ளது. ஆனாலும் இந்திய அணியால் ஒரு வருடத்துக்கு இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் எப்படி தெரியுமா? ஆஸ்திரேலிய அணிக்கு தற்போது உள்ள அட்டவணைப…

  19. சென்னை: ஒரு நாள் போட்டிகளில் 7000 ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார் இந்திய கேப்டன் எம்.எஸ்.டோணி. இன்று பாகிஸ்தானுடன் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியின்போது இந்த ரன்களை அவர் எடுத்தார். 7000 ரன்களை எடுத்த 7வது இந்திய வீரர் டோணி ஆவார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். அவர் சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார். சச்சின் 18,426 ரன்களை குவித்துள்ளார். 2வது இடத்தில் கங்குலி 11,221 ரன்களும், ராகுல் டிராவிட் 10,768 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். அதற்கடுத்த இடங்களில் அசாருதின் 9378 ரன்களுடனும், ஷேவாக் 8242 ரன்களுடனும், யுவராஜ் சிங் 8053 ரன்களுடனும் உள்ளனர். டோணி இன்று போட்ட சதம் அவரது ஒரு நாள் போட்டி வரலாற்றில் 8வது சதமாகும். இதே சென்னையில்…

  20. வருகை தரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு நியூஸி. கேப்டனின் எளிய அறிவுரை கேன் வில்லியம்சன். | படம்: ஏ.பி. வரும் மாதங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருப்பதை முன்னிட்டு நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் எளிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். இந்திய அணியிடம் 0-3 என்று ஒயிட்வாஷ் ஆன நியூஸிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் டாஸில் தோல்வியுற்று டெஸ்ட்டிலும் தோல்வி தழுவியது. இந்திய பிட்ச்களில் முதலில் பேட் செய்யும் சாதகங்களைக் குறிப்பிட்டு கேன் வில்லியம்சன் கூறும்போது, “டாஸில் வெல்வது உதவியாக இருக்கும். நிச்சயம் அணிகள் இந்திய அணிக்கு எதிராக தங்களது சிறப்பான ஆட்ட்த்திறனை வெளிப்படுத்துவது அவ…

  21. ஆசிய கிரிக்கட் சபையின் வளர்ந்துவரும் அணிக்கான கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை! (படங்கள்) ஆசிய கிரிக்கட் சபையின் வளர்ந்துவரும் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது. இலங்கை 23 வயதுக்குற்பட்டோர் மற்றும் பாகிஸ்தான் 23 வயதுக்குற்பட்டோர் அணிகளுக்கிடையிலான இறுதி போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஸ்வான் மற்றும் சபர் கோஹார் தலா 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் செஹான் ஜயச…

  22. ஸ்பெயின் பார்முலா-1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி பார்சிலோனாவில் நேற்று நடந்த 5-வது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்பிரீ போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். வெற்றிக்கோப்பையுடன் ஹாமில்டன். பார்சிலோனா : இந்த ஆண்டுக்கான பார்முலா-1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 5-வது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்பிரீ போட்டி பார்சிலோனாவில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 307.104 கிலோ மீட்டராகும். வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். விறுவிறுப்பான இ…

  23. 2022 டி-20 உலகக் கிண்ணத்துக்கான விவரங்களை அறிவித்தது ஐ.சி.சி 2021 ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணம் நிறைவடைந்துள்ள நிலையில் 2022 டி-20 உலகக் கிண்ணம் தொடர்பான விவரங்களை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2022 ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணம் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடங்கும், இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் திகதி அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சமீபத்திய டி-20 சம்பியன் பட்டத்தை வென்ற அவுஸ்திரேலியா, 2022 டி-20 உலகக் கிண்ணத்திலும் சொந்த மண்ணில் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள போராடும். போட்டிகள் அடுத்த ஆண்டு ஒக்டோபர் 16 முதல் ந…

  24. முன்னேறினார் ரங்கண ஹேரத் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரங்கண ஹேரத் ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப்படி ரங்கண ஹேரத் 866 புள்ளிகளைப்பெற்று 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். முதலாமிடத்தில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா உள்ளார். இவர் 898 புள்ளிகளைப்பெற்றுள்ளார். தொடர்ந்து 3 ஆவது இடத்தை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பிடித்துள்ளார். இவர் 865 புள்ளிகளைப்பெற்றுள்ளார். இந்நிலையில், நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ரங்கண 8 முற…

  25. இந்த ஆண்டில் அதிக விக்கெட்: லயனை சமன் செய்த அஸ்வின் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை சமன் செய்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை அவர் சமன் செய்தார். லயன் இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 9 டெஸ்டில் 55 விக்கெட்டை தொட்டார். அஸ்வின் 11 டெஸ்ட்டில் 55 விக்கெட் எடுத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.