விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7850 topics in this forum
-
86 வருடங்களுக்குப் பின் ஐந்து Ashes Test போட்டிகளிலும் வெற்றி பெற்று (5:0) சாதனை படைத்தது அவுஸ்ரேலியா. Sydney துடுப்பாட்ட மைதானத்தில் 2 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்ற ஐந்தாவதும் கடைசியுமான Ashes Test போட்டியில் அவுஸ்ரேலியா அணி இங்கிலாந்து அணியை 10 விக்கெற்றுக்களால் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அவுஸ்ரேலியா அணி Ashes வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. ஆட்டத்தின் நாயகனாக Stuart Clark தெரிவு செய்யப்பட்டார் தொடர் ஆட்ட நாயகனாக அவுஸ்ரேலியா அணித்தலைவர் Ponting தெரிவு செய்யப்பட்டார். Ashes Test போட்டி வரலாற்றில் 86 வருடங்களுக்கு பின் "நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்று (5:0) சாதனை படைத்துள்ளது என்பது கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
நான்காவது Ashes Test போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தியது அவுஸ்ரேலியா! 26 ஆம் திகதி அவுஸ்ரேலியாவின் மெல்போன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிய நான்காவது Ashes Test போட்டியில் அவுஸ்ரேலியா அணி இங்கிலாந்து அணியை ஒரு இனிங்ஸ் மற்றும் 99 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் தமது அணி முதலில் துடுப்பெடுத்து ஆடுவதாக தீர்மானித்தார் அதன் படி களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர் Shane Warne இன் சுழல் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 74.2 ஓவர்களில் 159 ஓட்டங்களுக்கு சகல விக்கெற்றுக்களையும் இழந்தனர் இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் Strauss - 50 ஓட்டங்களை பெற்றார் அவுஸ்ரேலியா அணி சார்பில் Shane Warne -…
-
- 1 reply
- 1.1k views
-
-
சாதனை பந்து வீச்சாளர்களான ஷேன் வோர்ன், மெக்ராத் ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச அரங்கில் முடிசூடா மன்னர்களாக நடைபோட்டு வரும் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஷேன்வோர்ன் (37 வயது), மெக்ராத் (36 வயது). இருவரும் இணைந்து சுமார் 1200 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை சமீபத்தில் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக இவர்கள் இருவரும் இத்தொடருடன் ஓய்வுபெறப்போவதாக புகழ்பெற்ற அவுஸ்திரேலிய `ரி.வி.' `சனல் நைன்' தகவல் வெளியிட்டுள்ளது. பேர்த்தில் நடந்த மூன்றாவது டெஸ்டின்போது, விரைவில் ஓய்வு பெறப்போவதாக வோர்ன், சூசகமாக தெரிவித்தார். ஆனால், மெக்ராத்தும் தற்போது இணைந்துள்ளது அவுஸ்…
-
- 2 replies
- 1.5k views
-
-
டர்பன்: தென் ஆப்பிரிக்காவும், இந்தியாவும் மோதிய 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க மு¬டியாமல் 91 ரன்களில் சுருண்டு, 157 ரன்கள் வித்தியாசத்தில் கேவலமான தோல்வியை சந்தித்தது இந்தியா. இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே தற்போது ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்கியுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக அப்போட்டி கைவிடப்பட்டது. இந் நிலையில் டர்பன் நகரில் 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய தொடக்கப் பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசியதால் தென் ஆப…
-
- 2 replies
- 1.1k views
-
-
15 வது ஆசிய விளையாட்டு நான்கு வருடத்திற்கொருமுறை நடக்கும் இப்போட்டி தற்போது கத்தார் தலைநகரமான டோஹா வில் மிக கோலாகலமாக 1-12-2006 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது அதில் 45 நாடுகளுக்கும் மேல் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து நடை பெறும் இப்போட்டி 15 நாட்கள் வரை நீடிக்கும். விரும்பியவர்கள் இந்த இடத்திற்கு சென்று எந்த நாடு என்ன மெடல்களைப் பெற்றுள்ளது என்பதைக் கண்டறியலாம் http://www.dohaasiangames.org/gis/me...InfoMedal.aspx
-
- 0 replies
- 1k views
-
-
பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் முகமட் யூசுபின் சாதனை மேற்கிந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் 124 ஒட்டங்கள் பெற்றார். இவர் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் 102 ஒட்டங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒருவருடத்தில் அதிக ஒட்டங்கள் பெற்றவர் என்ற 30 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்த மேற்கிந்திய அணியின் விவிலியன் ரிச்சாட்டின் சாதனையினை இவர் முறியடித்தார். விவிலியன் ரிச்சாட் 1976ல் 11 போட்டிகளில் 1710 ஒட்டங்கள் பெற்றிருந்தார். முகமட் யூசுப் 11 போட்டிகளில் இந்த வருடம் 1788 ஒட்டங்கள் பெற்றார். இவரது இன்னொரு சாதனை- ஒரு வருடத்தில் அதிக 100 ஒட்டங்கள் பெற்றவர் என்ற சாதனையினை இவர் பெற்றுள்ளார். இவர் இந்த வருடம் 9முறை 100 ஒட்டங…
-
- 1 reply
- 1.4k views
-
-
கிரிக்கெட்டில் இந்தியப் பள்ளி மாணவர்கள் உலக சாதனை கிரிகெட்டில் உலக சாதனைப் படைத்த இந்திய மாணவர்கள் இந்தியப் பள்ளி மாணவர்கள் இருவர் கிரிக்கெட் விளையாட்டில் உலக சாதனைப் படைத்துள்ளார்கள். முஹமது ஷைபாஸ் தும்பி மற்றும் மனோஜ் குமார் ஜோடி செகந்தராபாதில் 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கானப் போட்டியில் நாற்பது ஓவர்களில் 721 ஓட்டங்களை எடுத்து இந்தச் சாதனையை படைத்துள்ளனர். உலக அளவில், ஒரு நாள் போட்டிகளில் ஜோடியாக எடுத்த ஓட்டங்களிலும் சரி, மிகப்பெரிய அளிவில் ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதிலும் சரி, இது தான் மிக அதிகமானது என கிரிக்கெட் விளையாட்டின் புள்ளி விபர நிபுணர்கள் கூறியுள்ளார்கள். இவர்கள் இவ்வாறு எடுத்த ஓட்டங்களை கண்ட எதிர் அணியினர் 21 ஓட்டங்கள…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிட்னி: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மாண்டி பனீசார் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இனவெறி கருத்துக்களை வெளியிட்டு அவமதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா வந்துள்ளது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி சில பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் பனீசரும், தென் ஆப்பிரிக்காவில் பிறந்த வெள்ளையரான கெவின் பீட்டர்சனும் இடம் பெற்றுள்ளனர். பனீசர் ஒரு சீக்கியர் ஆவார். கான்பெர்ரா நகரில் நியூ சௌத் வேல்ஸ் அணியுடன் நடந்…
-
- 7 replies
- 1.6k views
-
-
மும்பை: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழாவின்போது மத்திய அமைச்சரும், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான சரத் பவாரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தோள்பட்டையைப் பிடித்து தள்ளி விட்டது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் என்று மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என வர்ணிக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்த ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார் கோப்பையை பரிசாக வழங்கினார். கோப்பையைப்…
-
- 0 replies
- 960 views
-
-
மினி உலகக் கிண்ணப் போட்டி அடுத்த மாதம் 7 ஆம் திகதி ஆரம்பம் 8 நாடுகள் பங்கேற்கும் மினி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 7 ஆம் திகதி இந்தியாவில் தொடங்குகிறது. 8 நாடுகள் பங்கேற்கும் மினி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி (ஐ.சி.சி. சம்பியன் கிண்ணம்) அடுத்த மாதம் (அக்டோபர்) 15 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 5 ஆம் திகதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் இந்திய அணி `ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இது மட்டுமல்லாமல் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளாகும். `பி' பிரிவில் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. 6 அணிகள் இந்தப் போட்டியில் ஆட நேரடியாக தகுதி பெற்று விட்டன. மேலும் இரண்டு அணிகள் தக…
-
- 38 replies
- 4.8k views
-
-
-
- 0 replies
- 944 views
-
-
களத்தில் அதிரடியாக ஆடும் ஹெர்ஷல் கிப்ஸ், கிரிக்கெட் சூதாட்ட விசாரணையின் போது மிரண்டு போயுள்ளார். டில்லி பொலிஸார் இவரிடம் 100க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு மடக்கியுள்ளனர். மிகுந்த பதற்றமாக இருந்த கிப்ஸ், சில கேள்விகளுக்கு `மறந்து விட்டேன்', `நினைவுக்கு வரவில்லை' என்று கூறி சமாளித்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்க அணி இந்தியா வந்த போது கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இதில் அப்போதைய கப்டன் குரோஞ்ஞே, கிப்ஸ், சுழற்பந்து வீச்சாளர் நிக்கி போஜே சிக்கினர். குரோஞ்ஞே மரணமடைய, மற்ற இருவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்படும் அபாயம் இருந்ததால் இந்தியப் பயணத்தை கிப்ஸ் தவிர்த்து வந்தார். இந்தச் சூழலில் இவர் மினி உலகக் கிண்ணத் தொடரில…
-
- 0 replies
- 991 views
-
-
கிரம்னிக் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ----------------------------------------------------------------- 14 அக்டோபர் 2006 ரஷ்யாவின் எலிஸ்டாவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டிகளில் ரஷ்ய வீரர் விளாடிமிர் கிரம்னிக் (Vladimir Kramnik), பல்கேரியாவின் வாசலின் டோபலோவை (Vasline Topolov) டைபிரேக்கர் முறையில் வீழ்த்தி சாம்பியன் ஆனார். இதன் மூலம் கடந்த 1993ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சாம்பியனாக கிரம்னிக் வெற்றிபெற்றுள்ளார். கிராம்னிக் தனது சிப்பாய் ஒருவரை முன்னகர்த்திய பின் (10. e4 ) இறுதி நாளன்று மிகவும் சீக்கிரமாக (rapid games) நடைபெற்ற, குறிப்பிட்ட நேரத்திலான ஆட்டத்தில் கிரம்னிக் 8.5 - 7.5 என்ற ஸ்கோருடன் இந்த வெற்றியை …
-
- 4 replies
- 1.8k views
-
-
25 வருடகால தமிழ் - சிங்கள பகையை தீர்ப்பது மிகக் கடினம்" *மனம் திறந்து பேசுகிறார் சாதனை நாயகன் முரளி தமிழ்க் குழந்தைகளுக்கு கணினி மற்றும் ஆங்கில பாடங்களை கற்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள உலக சாதனையாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரன், இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலுள்ளது 25 வருடகால நீண்ட பகையெனவும் இந்த இடைவெளியை குறைப்பது மிகக் கடினமெனவும் தெரிவித்துள்ளார். `இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸின் தலைமை ஆசிரியர் சேகர் குப்தா என்.டீ.ரீ.வியின் `வோக் த ரோக்' நிகழ்ச்சிக்காக முரளிதரனை நேர்கண்டிருந்தார். அந்த நேர்காணலில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்தும் அதனால் தனது பெற்றோர் எதிர்நோக்…
-
- 0 replies
- 1k views
-
-
லாலம்பூர்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக கோலாலம்பூரில் இன்று நடந்து வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்தார். இது அவருக்கு 40வது ஒரு நாள் சதமாகும். இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியை அபாரமாக தோற்கடித்தது. இன்று இந்தியாவுக்கும்,மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டிராவிடும், சச்சின் டெண்டுல்கரும் களம் இறங்கினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் களம் இறங்கியதால் ர…
-
- 5 replies
- 2.1k views
-
-
தரையில் விழுந்து வந்த பந்தை பிடித்து அவுட் கேட்டதால் பாகிஸ்தான் கப்டன் இன்சமாம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தான் அணி கப்டன் இன்சமாம் ஒவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளானார். இந்த விவகாரம் தொடர்பாக இன்சமாமிடம் சர்வதேச கிரிக்கெட் சபை ஒழுங்கு நடவடிக்கை குழு 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலண்டனில் விசாரணை நடத்த விருக்கிறது. இந்த நிலையில் இன்சமாம் இன்னொரு புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையேயான 4 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நொட்டிங்காமில் நடந்தது. இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இங்கிலாந்து கப்டன் ஸ்டாரஸ் அடித்த பந்தை சிலிப்பில் நின்ற இ…
-
- 13 replies
- 2.3k views
-
-
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் தரக்குறைவாக திட்டியதற்கு பிரான்ஸ் வீரர் ஸிடேனின் சகோதரியிடம் இத்தாலி வீரர் மாட்டராஸி மன்னிப்பு கேட்டுள்ளார். ஜேர்மனியில் நடந்த 18 ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இத்தாலி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. இதன் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் கப்டன் ஸிடேன், இத்தாலி வீரர் மார்கோ மாட்டராஸியின் மார்பில் தலையால் ஆக்ரோஷமாக முட்டினார். சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்துக்குக் காரணம் ஸிடேனின் அம்மா மற்றும் சகோதரியை மாட்டராஸி தரக்குறைவாக திட்டியதாகவும், தீவிரவாதி என்று கூறியதாகவும் அப்போது தகவல்கள் வெளியாயின. இதனைத் தொடர்ந்து ஸிடேனுக்கு 3 போட்டிகளில் ஆட தடையும் சுமார் ஐந்து இலட்சம்…
-
- 0 replies
- 1.6k views
-
-
இந்திய கால்பந்து அணிக்கு பிரேசில் பயிற்சியளிக்கவுள்ளது. இதுதவிர இந்தியாவும், பிரேசிலும் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் பிரேஸிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனசியோ லுலா டிசில்வாவை அவர் சந்தித்து பேசினார். இருதரப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இரு தலைவர்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ஐ.நா. அமைப்பை சீர்திருத்த வேண்டும். தற்போதைய உலக சூழ்நிலைகளுக்கேற்ப ஐ.நாவின் செயல்பாடுகள் அமைய வேண்டியது அவசியம். இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இங்கே உள்ள கழகத்தின் பெயர்களை தெரிந்தவர்கள் அறியத்தருவீர்களா? சரியாக இடப்படாத பட இணைப்புக்கள் சரி செய்யப்பட்டுள்ளது.- யாழ்பாடி
-
- 0 replies
- 2.7k views
-
-
தென்னாபிரிக்க அணி தாயகம் திரும்புகிறது அமைச்சர் மட்டப் பாதுகாப்பத் தருவதாகவும் அவர்கள் இடைநடுவில் தாயகம் திரும்பினால் உல்லாசப் பயணத்துறை பெரிதம் பாதிக்கப்படும் என்று இலங்கை இரசு கெஞ்சிய பொதிலும் தனிப்பட்ட முறையில் இலங்கையின் பாதுகாப்பு நிலமைகளை ஆய்வு செய்த தென்னாபிரிக்க கிறிக்கெற் அணி இலங்கையில் தொடாந்து தங்கவது பாதுகாப்பில்லை எனக் கூறி தாயகம் திரம்பவதற்கு மடிவசெய்தள்ளது. அவாகளை இலங்கையில் தொடாந்த தங்கச் செய்வதற்குப் பரிந்தரை செய்யும் படி இந்திய கிறிக்கெற் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் டால்மியாவை இலங்கை கெட்டுக் கொண்டதற்கிணங்க அவரும் கடம் மயற்சி எடுத்த பொதிலும் தென் ஆபிரிக்க அணியினர் திரும்ப எடுத்தள்ள மடிவு இலங்கைக்கப் பெருத்த அடி என்று கருதப்படுகிறது
-
- 12 replies
- 2.7k views
-
-
இங்கிலன்ட் நாட்டின் தேசிய அணியிலிருந்து டேவிட் பெக்கம் இன்று வெளியேற்றப்பட்டுள்ளார். இங்கிலன்ட் நாட்டின் புதிய உதைபந்தாட்ட பயிற்சியாளர் இவரை அணியிலிருந்து எடுத்துவிட்டார். இளைஞர்களிற்கு முன்னுரிமை கொடுக்கும் முகமாக இது நிகழ்ந்துள்ளது.
-
- 2 replies
- 1.5k views
-
-
தென்னாபிரிக்க அணிக்கெதிரான ரெஸ்ட் போட்டியில் உலக சாதனை ஒன்று படைப்பட்டது மாத்திரமன்றி.ஒரு இனிங்ஸ் மற்றும் 153 ஓட்டங்களால் சிறீலங்கா அணி வெற்றி பெற்றுள்ளது. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/5230382.stm
-
- 0 replies
- 1.1k views
-
-
-
உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாறு உருகுவே - 1930 சர்வதேச ரீதியில் உலகில் நடத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டிகளில் முதன்மை விளையாட்டாகக் கணிக்கப்படுவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிதான். உலகம் முழுவதிலும், கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் ரசித்துப் பார்க்கும் ஒரு விளையாட்டு உதைபந்தாட்டப் போட்டி தான். 4 வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முதன் முதலில், இலத்தின் அமெரிக்க நாடான உருகுவேயில் தான் 1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் உருகுவே அணியும், அயல் நாடான ஆர்ஜென்ரீனா அணியும் போட்டியிட்டன. 20,000 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் உருகுவே அணி 4-2 கோல்கள் வித்தியாசத்தினால் வெற்றி பெற்று மு…
-
- 618 replies
- 55.5k views
-
-