விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
2025 Masters வெற்றியாளர் ரோரி மெக்கல்ரோய் Rory McIlroy இந்த வருட மாஸ்டேர்ஸ் சற்றுமுன் நடந்து முடிந்தது. இப்போட்டியில் ரோரி மெக்கல்ரொய் வெற்றியீட்டி பச்சை மேல்சட்டையைத், Green Jacket, தனதாக்கிக் கொண்டார். 35 வயதான ரோரி இதற்காக 14 வருடங்களாகப் போராடிக் கொண்டிருந்தார். 2011 ஆம் வருடப் போட்டி அவரின் வாழ்க்கையில் ஏறபடுத்திய வலியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. நான்கு புள்ளிகள் முன்னணியில் இருந்து. கடைசி நாளில் காலடி எடுத்து வைத்தவர், கடைசியில் மிக மோசமாகத் தோற்றார். Meltdown என்று சொல்வார்கள். அவனால் ஒரு பந்தையும் fairwayல் அடிக்கவே முடியவில்லை. திரும்பத் திரும்ப மரங்களுக்கும், வெளியாலும் அடித்து, 8 புள்ளிகளால் பின்தங்கினார். மூன்றாம் நாள் முடிவில் முதலாவதாக இருந்தவர் கடைசி…
-
-
- 4 replies
- 305 views
-
-
கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் சொத்துக்கள் பறிமுதல்! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசனின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான ஷகிப் அல் ஹசன், கடந்த ஆண்டு இடம்பெற்ற அரசுக்கு எதிரான மாணவர்களின் கிளர்ச்சியின் போது, கனடாவில் தஞ்சம் அடைந்தார். இதற்கிடையே, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 15ம் திகதி ஐ.ஐ.எப்.சி., வங்கியின் சார்பாக ஷகிப் அல் ஹசன் உட்பட நால்வர் மீது 3 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இவ் வழக்கில் ஆஜராகாததினால் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணைப் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவரது சொ…
-
-
- 7 replies
- 523 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 APR, 2025 | 01:01 PM வட கொரியாவில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பியோங்யாங் சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த மரத்தன் ஓட்டப்போட்டியில் சுமார் 200 வெளிநாட்டு வீரர்களை வட கொரியாவின் தலைநகர் வரவேற்றுள்ளது. 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மரத்தன் ஓட்டப் போட்டி வட கொரியாவின் முதல் ஜனாதிபதி கிம் இல் சுங்கின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படுகிறது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. அதில் 950 வெளிநாட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். கொவிட்-19 தொற்று பரவியமையை அடுத்து வட கொரியா மரத்தன் ஓட்டப் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், வடகொர…
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆண்டிற்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான (மாற்றுத் திறனாளிகளுக்கான) தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி இன்றையதினம் 03.04.2025 மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தேசிய மட்டத்தில் 25 மாவட்டத்திலிருந்தும் இதில் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். 06 தங்கப் பதக்கத்தையும் , 10 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டது. குறித்த விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 21 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர். குறித்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத…
-
- 0 replies
- 224 views
-
-
2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இலங்கையில்! 12 ஆவது உலகக் கிண்ணப் போட்டியான 2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நடத்துவதாக சிலோன் இன்டோர் கிரிக்கெட் சங்கம் (CICA) அறிவித்துள்ளது. 5 மாதங்களுக்கு முன்பு CICA மிகவும் வெற்றிகரமான உலக மாஸ்டர்ஸ் தொடரை நடத்திய பின்னர் சர்வதேச இன்டோர் கிரிக்கெட் கூட்டமைப்பு (WICF) போட்டியை நடத்தும் உரிமையை வழங்கியது. இந்த போட்டிகள் பின்வரும் ஆண்கள் ஓபன், பெண்கள் ஓபன், 22 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 22 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் நடத்தப்படும். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் நடத்தும் இலங்கை ஆகிய…
-
- 3 replies
- 280 views
-
-
Published By: VISHNU 01 APR, 2025 | 07:44 PM (நெவில் அன்தனி) கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கும் பொறளை வெஸ்லி கல்லூரிக்கும் இடையில் பி.சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 5ஆவது வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ண இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி எவ்வித பரபரப்பையும் ஏற்படுத்தாமல் வெற்றி தோல்வியின்றி இன்று (01) முடிவடைந்தது. இதன் காரணமாக வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ணம் இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலையில் இருந்த புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கு மேலும் ஒரு வருடத்திற்கு கிண்ணம் சொந்தமானது. இரண்டு அணிகளும் 3 இன்னிங்ஸ்களிலும் 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்ததுடன், வெஸ்லி கல்லூரி சார்பாக நால்வர…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் தெரிவு! யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு தெரிவாகியுள்ளனர் இந்த பெருமைமிகு சாதனைக்காக அவர்களுக்கு கல்லுாரி சார்பாகவும் பழைய மாணவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். (ப) இலங்கை தேசிய எறிபந்து அணிக்கு யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி வீராங்கனைகள் தெரிவு!
-
- 0 replies
- 269 views
-
-
19 FEB, 2025 | 05:56 PM (நெவில் அன்தனி) வல்லுநர்கள் (Masters) என விபரிக்கப்படும் புகழ்பூத்த சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் 6 அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் நவி மும்பை, வடோதரா, ராய்ப்பூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாஸ்டர்ஸ் அணிகள் பங்குபற்றுகின்றன. இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு குமார் சங்கக்கார, இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு ஷேன் வொட்சன், இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு ஒய்ன் மோர்கன், மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கு ப்றயன் லாரா, தென் ஆபிர…
-
- 1 reply
- 375 views
- 1 follower
-
-
கடைசி ஓவர் வரை திக் திக்! மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன் - மதுரை வீராங்கனை கமலினி சாதித்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 சீசனுக்கான மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மும்பை அணி வெல்லும் 2வது சாம்பியன் பட்டம் இதுவாகும். ஏற்கெனவே 2023ம் ஆண்டில் அறிமுக ஐபிஎல் தொடரில் மும்பை அணி பட்டம் வென்றுள்ளது. மும்பையில் பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை அணி. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மேத்யூ ஹென்றி பதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர் 10 மார்ச் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கிய இடத்திலிருந்து 1,000 கி.மீ தள்ளியும், முடிந்திருக்க வேண்டிய இடத்திலிருந்து 2,000 கி.மீ அப்பாலும் நிறைவடைந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி உலகின் முன்னணி 'வெள்ளை பந்து' அணியாக அதன் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 16 மாதங்களுக்கு முன்பு ஆமதாபாத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இந்திய அணி அனுபவித்த வேதன…
-
- 1 reply
- 297 views
- 1 follower
-
-
பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது; ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அட்டவணை திருத்தப்படலாம்? (நெவில் அன்தனி) ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் செல்லப்போவதில்லை என இந்தியா உறுதிபடக் கூறியுள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டுக்கான அட்டவணைகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் 2025 பெப்ரவரி 19ஆம் திகதி ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியாவின் இந்தத் தீர்மானம் போட்டியின்போது சிக்கல்களை தோற்றுவிக்கும் என கருதப்படுகிறது. …
-
-
- 39 replies
- 1.7k views
- 1 follower
-
-
Published By: Vishnu 05 Mar, 2025 | 10:56 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மிகவும் விறுவிறுப்பான 118ஆவது வடக்கின் சமர் மாபெரும் வருடாந்த 3 நாள் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை வியாழக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென சீரற்ற காலநிலை நிலவியதால் பிற்போடப்பட்டிருந்தது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குபட்ட ஆசிய கிண்ண இளையோர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இருவர் இந்த இரண்டு கல்லூரி அணிகளிலும் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். சென். ஜோன்ஸ் அணியில் இடம்பெறும் வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாத…
-
- 4 replies
- 415 views
- 1 follower
-
-
Published By: Vishnu 06 Mar, 2025 | 10:05 AM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டு வரும் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது பழைமைவாய்ந்த சென். பெட்றிக்ஸ் அணிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது பொன் அணிகளின் போர் சென். பெட்றிக்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை (06) ஆரம்பமாகிறது. இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தபோதிலும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டிருந்தது. சென். பெட்றிக்ஸ் கல்லூரி இந்த வருடம் 175 வருட பூர்த்தியைக் கொண்டாடுவதை முன்னிட்டு முதல் தடவையாக பொன் அணிகளின் போர் மூன்று நாள் போட்டியாக நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக இந்த வருடப் போட்டியில் முடிவு கிட்டும் என நம்பப்படுகிறது. பொன் அணிகளின் …
-
-
- 4 replies
- 399 views
- 1 follower
-
-
05 Mar, 2025 | 01:16 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவின் அற்புதமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்மித் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற்றுவரும் 9ஆவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேறியதை அடுத்து, சர்வதேச 50 ஓவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக ஸ்டீவ் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் ஸ்டீவன் ஸ்மித் அறிவித்தார். இந்தியாவுக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 'இத…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய குகேஷ்! உலக செஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை (கிளாசிக்கல்) சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி முன்னாள் உலக செம்பியனான நோர்வேயின் மாக்னஸ் கார்ல்சென் 2,833 புள்ளிகளுடன் 1 ஆவது இடத்திலும், ஜப்பானின் ஹிகாரு நகமுரா 2,802 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதேவேளை கடந்த ஆண்டு டிசம்பர் உலக செஸ் செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சென்னையைச் சேர்ந்த குகேஷ் 2,787 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அத்துடன் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா 2,758 புள்ளிகளைப் பெற்று 8ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு டொப்-10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும் என்பதும்…
-
- 0 replies
- 313 views
-
-
12 FEB, 2025 | 12:02 PM (நெவில் அன்தனி) இலங்கையுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் மெத்யூ குனேமானின் பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டுள்ளது. காலியில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் குனேமான் மொத்தமாக 16 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். அவரது பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற நிலையத்தில் சுயாதீன பரிசோதனைக்கு குனேமான் உட்படுத்தப்படவுள்ளார். பெரும்பாலும் பிறிஸ்பேனில் அமைந்துள்ள நிலையத்திலேயே அவரது பந்துவீச்சு பாணி தொடர்பான பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது ம…
-
- 1 reply
- 245 views
- 1 follower
-
-
எதிர்வரும் 27ஆம் திகதி பொன் அணிகலன்களின் போர் ஆரம்பம்!.. சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் மாசி மாதம் 27,28, மற்றும் பங்குனி 01 (வியாழன், வெள்ளி, சனி) ஆகிய மூன்று தினங்களிலும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென் பற்றிக்ஸ் கல்லூரி 175வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வாண்டு பொன் அணிகள் போரின் வரலாற்றில் முதன் முறையாக மூன்று தின போட்டியாக இது நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. இத் தொடரின் தொடர்ச்சியாக 32வது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி 08/03/2025 சனிக்கிழமை காலை …
-
- 0 replies
- 250 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 24 பிப்ரவரி 2025, 02:31 GMT "கோலியின் ஃபார்ம் மோசமாகிவிட்டது என்று யார் சொன்னது? ஒரே ஒரு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வையுங்கள். கோலியின் ஒட்டுமொத்த ஃபார்மும் கண் முன் வந்து நிற்கும்" இந்த வார்த்தைகளைக் கூறியது வேறு யாருமல்ல, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப்பில் பேசியிருந்தார். நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் கோலி தொடர்ந்து மோசமாக ஆடிவரவே, அவ்வளவுதான் கோலியின் கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிட்டது, டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்றெல்லாம் கதைகள் பறக்கவிடப்பட்டன. அப்போதுதான் கோலி குறித்த தனது அசைக்க முடியாத நம்பிக்கையை ஷோ…
-
- 0 replies
- 504 views
- 1 follower
-
-
Published By: VISHNU 23 FEB, 2025 | 09:47 PM (நெவில் அன்தனி) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பாத்திமா ஜின்னா பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியின் சிரேஷ்ட பிரிவில் இலங்கையின் விக்னராஜா வக்சன் தங்கப் பதக்கத்தையும் கனிஷ்ட பிரிவில் சிவாகரன் துதிஹர்ஷிதன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். பாகிஸ்தானுக்கான இலங்கையின் பதில் தூதுவர் ரூபன் கிறிஸ்டி நேரடியாக போட்டி நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்து வெற்றிபெற்ற இலங்கை மெய்வல்லுநர்களைப் பாராட்டி கௌரவித்தார். 10 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சிரேஷ்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியை 31 நிமிடங்கள், 56.38 செக்கன்களில் நிறைவு செய்து தலவாக்கொல்லையைச் சேர்ந்த இராணுவ வீரர் விக்னராஜா வக்சன் முதலாம் இடத்தைப் …
-
- 1 reply
- 483 views
- 1 follower
-
-
விபத்துக்குள்ளாகி கோமாவிலிருந்த ஐரிஷ் குதிரைப் பந்தய வீரர் மரணம்! அயர்லாந்தின் குதிரைப் பந்தய விளையாட்டு வீரரான மைக்கேல் ஓ’சுல்லிவன் (Michael O’Sullivan) தனது 24 ஆவது வயதில் உயிரழந்துள்ளார். கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி துர்ல்ஸில் குதிரை பந்தயத்தின் போது நடந்த விபத்தில் கொர்க் பல்கலைக்கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் இருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் ஐரிஷ் குதிரையேற்றம் ஒழுங்குமுறை வாரியத்தினை (IHRB) பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. IHRB இன் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெனிஃபர் புக் ஒரு அறிக்கையில், இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் மைக்கேலின் குடும்பத்தினர் உயிரிழந்த வீரரின் உறுப்புகளை தான…
-
- 0 replies
- 243 views
-
-
இலங்கை - அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம் Published By: DIGITAL DESK 2 28 JAN, 2025 | 02:53 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை புதன்கிழமை (29) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. தனஞ்ஜய டி சில்வா தலைமையில் களமிறங்குகின்ற இலங்கை அணியில் புதுமுக வீரரான ஷொனால் தினூஷ 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஓஷத பெர்னாண்டோவுக்கும் மீள அழைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக சிறந்…
-
-
- 19 replies
- 716 views
- 1 follower
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை அயர்லாந்து அணி படைத்துள்ளது. அயர்லாந்து அணி 10 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள நிலையில் குறித்த சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 14 போட்டிகளில் விளையாடி தென்னாப்பிரிக்க அணி ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. தென்னாப்பிரிக்கா வசமிருந்த சாதனையை தற்போது அயர்லாந்து அணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/315203
-
- 1 reply
- 235 views
- 1 follower
-
-
05 FEB, 2025 | 01:38 PM (நெவில் அன்தனி) சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தானின் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ராஷித் கான் நிலைநாட்டியுள்ளார். தென் ஆபிரிக்காவில் தற்போது நடைபெற்றுவரும் SA20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் கேப் டவுன் அணிக்காக விளையாடிவரும் ராஷித் கான், பார்ல் றோயல்ஸ் அணி வீரர் துனித் வெல்லாலகே கேயை ஆட்டம் இழக்கச் செய்ததன் மூலம் 632ஆவது ரி20 விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை நிலைநாட்டினார். MI கேப் டவுன் அணியின் தலைவரான ராஷித் கான் அப் போட்டியில் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அத்துடன் இதுவரை 461 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியு…
-
- 1 reply
- 223 views
- 1 follower
-
-
வருண் மாயஜாலம், அபிஷேக் அதிரடி: முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தின் பேஸ்பால் வியூகத்தை நொறுக்கிய இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் (வலது) உடன் வருண் சக்ரவர்த்தி (இடது) கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் மாயஜாலப் பந்துவீச்சு, அபிஷேக் சர்மாவின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஜன. 22) நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. பேஸ் பால் வியூகத்துக்கும், ஸ்கைபால் வியூகத்துக்கும் இடையிலான ஆட்டமாக …
-
-
- 16 replies
- 758 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, பாராலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற முதல் பார்வை மாற்றுத் திறனாளி இந்திய பெண் ரக்ஷிதா கட்டுரை தகவல் எழுதியவர், திவ்யா ஆர்யா பதவி, பிபிசி ஹிந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் "என் இளம் வயதில் என் கிராமத்தில் உள்ள அனைவரும் 'இவளுக்கு கண் பார்வை இல்லை, இவள் வீண்' என்று கூறுவார்கள்," என்கிறார் ரக்ஷிதா ராஜு. இப்போது 24 வயதான அவர் இந்தியாவின் சிறந்த இடைநிலை (middle distance) பாரா தடகள வீரர்களில் ஒருவர் ஆவார். "இது என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது," என்று அவர் கூறுகிறார். ரக்ஷிதா தென்னிந்தியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் பார்வை மாற்றுத் திறனாளியாகப் பிறந்தார். 10 வ…
-
-
- 2 replies
- 283 views
- 1 follower
-