Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், தான் தற்கொலை செய்து கொள்ள விரும்பியதாக அதிர்ச்சி அளிக்கும் விதமாக பேசியுள்ளார். உலக கிண்ண கிரிக்கெட் கடந்த 30ம் திகதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கடந்த ஜூன் 16ம் திகதி இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் விளையாடிய விதம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக போட்டியின் நடுவே பாகிஸ்தான் தலைவர் சர்பிராஸ் அகமது கொட்டாவி விட்டது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களும், முன்னாள் வீரர்களும் கடுமையாக சர்பிராசை வி…

    • 0 replies
    • 585 views
  2. லாரா மருத்துவமனையில் அனுமதி! மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் புகழ்பெற்று விளங்கிய காலகட்டத்தில் அவருக்கு இணையாக பார்க்கப்பட்டவர் பிரையன் லாரா. கிரிக்கெட்டில் தனி நபர் சாதனைகள் பல புரிந்த லாரா அணியையும் சிறப்பாக வழிநடத்தினார். ஓய்வுக்குப் பின் லாரா கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டுவருகிறார். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்டார் கிரிக்கெட் சேனலுக்காக கிரிக்கெட் வர்ணனை செய்துவரும் இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் பரேல் நகரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மதியம் 12.30 மணியளவில் அனுமதிக…

  3. இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 64 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்குள் முதலாவது அணியாக காலடி எடுத்து வைத்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை குவித்தது. 286 என்ற வெற்ற…

  4. டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு! டென்னிஸ் இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த, டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளின் தரநிலையை ஒவ்வொரு தொடரின் பின்னரும் மதிப்பிட்டு, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு தற்போது மாற்றம் கலந்த டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் உள்ள வீராங்கனைகளின் விபரத்தை தற்போது பார்க்கலாம், இந்த தரவரிசைப் பட்டியலில், யாரும் எதிர்பாராத விதமாக அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்டி, முதலிடத்திற்கு முதல்முறையாக முன்னேறியுள்ளார். …

  5. பங்களாதேஷிடமும் ஏமாந்த ஆப்கான்! பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ், குல்படீன் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றது. 263 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்…

  6. பொதுவாக ஆப்கானித்தான் என்றதும், தலிபான் மற்றும் குண்டுவெடிப்புக்கள் தான் நினைவுக்கு வரும். 36 மில்லியன்கள் மக்களை கொண்ட இந்த நாடு பல யுத்தங்களை கொண்டிருக்கின்றது. பல வல்லரசுகளை எதிர்த்து போராடி உள்ளது. ஆனால், இங்கே மிகவும் விருப்பம் பெற்ற விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகின்றது, ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி ஆப்கானித்தான் நாட்டினை முன்னிருத்தி சர்வதேச துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடும் துடுப்பாட்ட அணியாகும். துடுப்பாட்டம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆப்கானித்தானில் விளையாடப்பட்டாலும், சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே அந்த அணி முக்கியத்துவம் பெற்று உள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கூட்டமைப்பு 1995 ல் உருவாக்கப்பட்டு மற்றும் 2001 ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் …

    • 0 replies
    • 895 views
  7. இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த பாகிஸ்தான்! தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டத்தினால் வெற்றிபெற்று இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை குவித்தது. 309 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் ம…

  8. உலக கோப்பை கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி - பிரித்வெய்ட்டின் சதம் வீண் ஜூன் 23, 02:18 AM உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் கோதாதவில் இறங்கின. வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூன்று மாற்றமாக காயத்தால் அவதிப்படும் ஆந்த்ரே ரஸ்செல் மற்றும் கேப்ரியல், டேரன் பிராவோ ஆகியோர் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக கார்லஸ் பிராத்வெய்ட், கெமார் ரோச், ஆஷ்லே நர்ஸ் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்…

  9. சமியின் ஹெட்ரிக்கின் உதவியுடன் போராடி ஆப்கானை வென்றது இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிகொண்டது. இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டம் சவுத்தாம்டனில் இன்று பகல் 3 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில் நாணயசுலட்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இந்நிலையில் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா ஒரு ஓட்டத்துடன் வெளியேறி அதிர்ச்சி அளித்த நிலையில். ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இதனால் இந்திய அண…

  10. பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை! துடுப்பாட்டத்தில் சொதப்பியிருந்தாலும், பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 233 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும…

  11. 2019 கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிவந்த தொடக்க வீரர் ஷிகர் தவான், தனது இடதுகை பெருவிரல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த்தை அணியில் சேர்க்க ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் சதமடித்த ஷிகர் தவான், காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த முந்தைய போட்டியில், அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவதால் உண்டாகும் தாக்கம் குறித்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வ…

    • 1 reply
    • 1.2k views
  12. சம்பியனாகியது தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்படும் பெரு விளையாட்டுப் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனானது. தமது கல்லூரி வலைப்பந்தாட்டத் தொடரில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியை 34-18 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றே தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனாகியிருந்தது. http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/சம்பியனாகியது-தெல்லிப்பழை-யூனியன்-கல்லூரி/88-234413 சம்பியனானது விநாயகபுரம் விநாயகர் வி. க சரவனை கந்தையா வெற்…

    • 0 replies
    • 392 views
  13. இறுதி வரை போராடிய முஷ்பிகுர் ! அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 48 ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 26 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் 381 ஓட்டங்களை குவித்தது. 382 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 333 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமி சர்கார் ஆகியோர் களமிறங்கி துடு…

  14. உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது தென்னாபிரிக்கா! இம்முறையாவது உலகக்கிண்ண தொடரில் சாதிக்க வேண்டுமென்ற ஆசையுடன், உலகக்கிண்ண தொடருக்குள் அடியெடுத்து வைத்த தென்னாபிரிக்கா அணி, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது. பர்மிங்ஹாம்- எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் 25ஆவது போட்டியில், நியூஸிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதின. எதிர்பார்பு மிக்க இப்போட்டியில், நாணய சுழற்சி சுழற்றுவதற்கு முன்னரே மழை குறுக்கிட்டதால், போட்டி 49 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, இ…

  15. 150 ஓட்டத்தால் வெற்றிபெற்ற இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 150 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 24 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து குல்படீன் நைய்ப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை மான்செஸ்டரில் 3.00 மணிக்கு ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணியக்கப்பட்ட 50 ஓவரின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 150 ஓட்டத்த…

  16. மே.இ.தீவுகளை துவம்சம் செய்த வங்கப்புயல் ! மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் அசத்தலாக வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள், மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு டவுன்டனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்தது. 322 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்…

  17. மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கிண்ண கிரிக்கெட் போரில் வென்றது இந்தியா! உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், எங்களை தோற்கடிக்கவே முடியாது என இந்தியக் கிரிக்கெட் அணி, மீண்டுமொரு முறை பாகிஸ்தான் அணிக்கு உணர்த்தியுள்ளது. இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 22ஆவது போட்டியில், பரம எதிரி நாடுகளான இந்தியா அணியும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. நேற்று மென்செஸ்டர் ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. நீலம் மற்றும் பச்சை வண்ண ஆடைகளால் மைதானத்தில் புடை சூழ்ந்திருந்த இரசிகர்கள் சத்தமிட்டு வீரர்களை உற்சாக படுத்த, பெரும் எதிர்பார்…

  18. அவுஸ்ரேலிய அணி 87 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியது! நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 20ஆவது போட்டியில் அவுஸ்ரேலிய அணி 87 ஓட்டங்களால் இலங்கை அணியை வீழ்த்தியது. லண்டன், ஹென்னிங்றன் ஒவல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி ஆரொன் பிஞ்ச் இன் சதத்தின் உதவியுடன் இலங்கை அணிக்கு கடின இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளது. அவுஸ்ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்ரேலிய அணி சார்பாக, ஆரொன் பிஞ்ச் 5 ஆறு ஓட்டங்கள், 15 நான்கு ஓட்டங்கள் உள்ள…

    • 2 replies
    • 967 views
  19. தென்னாபிரிக்காவின் முதல் வெற்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வெற்றிபெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிணண தொடரின் 21 ஆவது போட்டி நேற்றைய தினம் கார்டிப் மைதானத்தில் டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரக்கா மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் 35 ஓட்டங்களையும், நூர் அலி சாட்ரன் 32 ஓட்டத்தையும் அதிகபட்சமாக பெற்றுக்…

  20. நேற்று எனக்கு ஒரு அதிர்ஷ்டவசமான நாள். இங்கு நல்ல வெயில் நிலவுகிறது. மழை பொழிவதற்கான வாய்ப்பும் இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்தும் வாய்ந்த இருவரை நான் பேட்டி கண்டேன். ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக்; இன்னொருவர் 'லிட்டில் மாஸ்டர்' சுனில் கவாஸ்கர். காலை 7.30 மணிக்கு பேட்டிக்கு அவர்கள் ஒப்புக்கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. மான்செஸ்டரில் உள்ள கதேட்ரல் கார்டன்சின் ரசிகர்கள் கூடுமிடத்துக்கு சென்றோம். போட்டி நடக்க ஒரு நாள் இருந்தது என்றாலும் சுனில் கவாஸ்கர் மற்றும் இன்சமாம் உல்-ஹக் ஆகியோர் வரும் தகவல் தெரிந்ததால் ஏராளமான இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணி இன்று …

    • 0 replies
    • 782 views
  21. இங்கிலாந்து 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி! மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 19ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. சௌத்தம்ரனிலுள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தின் பந்துவீச்சுக்குத் தடுமாறிய நிலையில் அவ்வணி, 44.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்திய அணி சார்பாக, நிக்கோலஸ…

  22. தொடரும் மழையின் ஆட்டம் ; கைவிடப்பட்ட அடுத்த போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே ஆரம்பமாகவிருந்தது. எனினும் தொடர்ச்சியாக அங்கு பெய்து வந்த மழை காரணமாக போட்டி நாணய சுழற்சிகூட மேற்கொள்ளப்படாது இலங்கை நேரப்படி 7.30 மணியளவில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டது. நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட நான்காவது போட்டி இது என்பதும் …

    • 1 reply
    • 1.2k views
  23. 41 ஓட்டத்தால் வீழ்ந்தது பாகிஸ்தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டி ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணியளவில் டவுன்டானில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை குவித்தது. 307 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் இரண்டு ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.…

  24. ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். ஐபிஎஃப் எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், 'வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஸ்வீடனில் நடைபெற்று வரும் தொடரில், 20-22 வயத்துக்குட்பட்ட, 63 எடைய…

    • 0 replies
    • 500 views
  25. இந்திய கிரிக்கெட் அணி போன்ற உடையணிந்த, அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவர் டீ குடித்துக் கொண்டே ’Am sorry. I not supposed to tell this’ என்று திரும்ப திரும்ப பேசுவார். பாகிஸ்தான் நாட்டிடம் சிக்கிய இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்யும் விதமாக அந்நாட்டு ஊடகம் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான பாலகோட்டுக்குச் சென்று தீவிரவாத முகாமின் மீது பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப் படையின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் விமானத்தின்மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் நாட்…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.