Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை அணி 219 ஓட்டங்களால் அமோக வெற்றி இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 219 ஓட்டங்களினால் அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்தப் போட்டிக்கும் மழை குறுக்கிட்டதனால் டக்வர்த் லுவிஸ் முறைமையின்படி இலங்கைக்கு வெற்றியென நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 367 ஓட்டங்களுக்காக பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 26.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. http://www.dailyceylon.com/170632

    • 0 replies
    • 340 views
  2. தேசிய மட்ட உதைப்பந்தாட்ட சம்பியனாகியது யாழ், புனித பத்திரிசியார் கல்லூரி தேசிய மட்ட உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் சமநிலை தவிர்ப்பு உதைமூலம் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் 16 வயதிற்குட்பட்டோருக்கான அணி வெற்றிபெற்று தேசிய மட்ட சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள் கடந்த மாதம் அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் 16 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டம் இடம்பெறாமல் பிற்போடப்பட்டது. இதன் இறுதியாட்டம் நேற்று புதன்கிழமை அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இந்த இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை அநுராதபுரம் அல்ஹமிர் மத்திய கல்லூரி சந்தித்த்து. முதல் பாதியாட்டத்தில் ஆதி…

  3. சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி! சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவினை தற்போது பார்க்கலாம், சிட்டங்கொங் மை…

  4. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்- பிராவோ அறிவிப்பு மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான பிராவோ 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 66 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையிலேயே ஓய்வை அறிவித்துள்ளார். பிராவோ ஒருநாள் அணியி;ன் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் அனைத்து வகை போட்டிகளிலிருந்தும் நான் உத்தியோகபூர்வமாக ஓய்வுபெற்றுள்ளேன் என்பதை கிரிக்கெட் உலகிற்கு அறிவிக்க விரும்;புகின்றேன் என பிராவோ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். 14 வருடத்திற்கு முன்னர் நான் மேற்கிந்திய அணிக்காக எனது முதல்போட்டியை ஆடிய தருணம் நினைவிலுள்ளது என பிராவோ குறிப்பிட…

  5. அவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டி – 66 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி: October 25, 2018 அவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் 66 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றியீட்டியுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் அபுதாபியில் நேற்றையதினம் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பினை தெரிவு செய்தநிலையில்; முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 156 னெற் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அஅவுஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 89 ஓட்டங்களை மாத்திரN ம பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இ…

  6. ‘ஆகாயம் முழுவதும் சிங்கள இரத்தம்’-இலங்கை கிரிக்கட் துவேச பாடலுக்கு கண்டனம். இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் கெத்தாராம பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 5வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி பெரும் வெற்றியீட்டியது. தொடரை 3-1 என்ற போட்டிகள் வித்தியாசத்தில் இழந்த போதும் வெற்றியை அடுத்து இலங்கை அணி ஒரு பாடலை அதன் கிரிக்கட் கீதமாக அறிமுகப்படுத்தியது. இலங்கை அணி வெற்றிபெறும் போதெல்லாம் இந்தப்பாடலைப்பாடவுள்ளதாக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் ஆரம்பவீரர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் ஆரம்பத்தில் உரையாற்றியதை அடுத்து இந்தப்பாடலைப்பாடியிருந்தனர். இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் க…

  7. பத்தாயிரத்தில் இணைந்தார் கோலி இந்திய அணியின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக 10000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 24) இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. முதல் போட்டியில் இரண்டாவதாகக் களமிறங்கிய இந்திய அணி இதில் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி ஷிகர் தவனும், ரோஹித் ஷர்மாவும் களமிறங்கினர். முதல் போட்டியில் 150+ ரன்கள் சேர்த்து எதிரணியைக் களங்கடித்த ரோஹித் இதில் நான்கு ரன்கள் மட்…

  8. இறுதி வரை பரபரப்பு: இந்தியா – மேற்கிந்தியதீவு போட்டி சமநிலையில் நிறைவு! இறுதி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (புதன்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 321 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்கத்து 157 ஓட்டங்களை, அம்பத்தி ராயுடு 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி ஓபேட் மெக்காய், …

  9. ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை ? இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக 2:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 3:0 என்ற கணக்கில் வெற்றயீட்டு கைப்பற்றியுள்ளதுடன், இதில் ஒரு போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டது. இதில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டத்தினால் டக்வெத் லூயிஸ் முறையிலும், மூன்றாவது போட்டியில் 7 விக்கெட்டுக்களினாலும், நான்காவது போட்டியிலும் 18 ஓட்டத்தினால் டக்வெத் லூயிஸ் முறையில் முறையில் வெற்றி பதிவு செய்தது. இந் நிலையில் மூன்று போ…

  10. October 22, 2018 இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் தலைமை நிதி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையில்; இடம்பெறவிருந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் இன்று இரவு அவர் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போட்டித் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ய முற்பட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப…

  11. இந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று October 21, 2018 1 Min Read இந்தியா மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் பொட்டி இன்று ; கவுகாத்தியில் இன்று நடைபெறவுள்ளது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியதீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்ற நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டி கவுகாத்தியில் இன்று ஆரம்பமாகின்றது. http://globaltamilnews.net/2018/100071/

  12. சச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். Shaமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார 29 வயதாகும் விராட் கோலி நேற்று பெற்றுக் கொண்ட சதத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதுவரை 60 சதங்களை நிறைவு செய்துள்ளார். அதன்படி டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களையும், ஒருநாள் போட்டியில் 36 சதங்களையும் விளாசித் தள்ளியுள்ளார். இதற்காக அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் 124 இன்…

    • 0 replies
    • 522 views
  13. 4 ஆவது போட்டியிலும் வெற்றி : இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்தியது இங்கிலாந்து! இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூவிஸ் முறைப்படி18 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இன்று (சனிக்கிழமை) அரம்பமானது. கண்டி, பல்லேகல மைதானத்தில் அரம்பமான இப்போட்டியில், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும் தலைமை தங்கியிருந்தனர். போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன் படி இலங்கை அணி முதலில் களமிறங…

  14. இலங்கை கிரிக்கெட் பின்னோக்கி செல்கின்றது- மகேல கவலை hare இலங்கையில் கிரிக்கெட் பின்னோக்கி செல்கின்றது என முன்னாள் அணித்தலைவர் மகேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஸ்கை ஸ்போர்ட்ஸிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் தற்போது இருக்குமிடத்திலிருந்து பின்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ள மகேல ஜயவர்த்தன நாங்கள் தற்போது மிகவும் கீழே உள்ளோம் தரவரிசைப்பட்டில் இதனை தெளிவாக புலப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆட்டநிர்ணய சதி குறித்து இலங்கை இன்னமும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை இந்த விடயத்தில் இலங்கை ஒத்துழைக்க மறுக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே இந்த நிலை எதனை…

    • 0 replies
    • 343 views
  15. உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் சாதனை படைத்த குத்துச்சண்டை வீரர்! விளையாட்டு, ஒரு வீரருக்கு எவ்வளவு புகழை தேடிக் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு பணத்தையும் கொட்டிக் கொடுக்கின்றது. அவ்வாறு புகழுடன் கூடிய பணத்தை சம்பாதிக்கும் ஓர் குத்துச்சண்டை வீரர் குறித்து தான் தற்போது நாம், பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இச்செய்திக்குள் நுழையலாம்… மெக்சிகோ நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீரரான கானலோ அல்வரேஸ், உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில், புதிய சாதனை படைத்துள்ளார். இவர் ஒரு ஒளிபரப்பு நிறுவனத்துடன் செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தப் படி, சுமார் 365 மில்லியன் டொலர்கள் சம்பாதிக்க உள்ளார். விளையாட்டு உலகத்தில் இதுவே அதிக மதிப்ப…

  16. அவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்! அவுஸ்ரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 538 என்ற வெற்றி இலக்கை அவுஸ்ரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது. அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் டுபாயில் ஆரம்பமானது. இதில் நாணசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாடிய முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 282 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில், பகர் சமான், சர்ப்ராஸ் அஹமட் ஆகியோர் தலா 94 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில், அவுஸ்ரேலியா அணி சார்பில் நதன் லயன் 4 விக்கெட்டுக்களையும், மார்னஸ் லபுஷங்கே 3 விக…

  17. என்னை மன்னித்து விடுங்கள் ; பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சூதாட்டப் புகாரை ஒத்துக்கொண்டார் Share கடந்த 6 ஆண்டுகளாகத் தான் எந்தவிதமான சூதாட்டத்திலும் தான் ஈடுபடவில்லை என தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் டினேஷ் கனேரியா, திடீரென்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி அணியில் இணைந்து பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டினேஷ் கனேரியா விளையாடினார். அப்போது அனு பாட் என்ற சூதாட்ட தரகருடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட எசெக்ஸ் அணி வீரர் மெர்வின் வெஸ்ட்பீல்ட், கனேரியாவும் அணி…

    • 0 replies
    • 442 views
  18. கபில் தேவின் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா ? Share மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்றும் சில தினங்களில் இடம்பெறவுள்ள நிலையில், இந்திய அணியின் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் உலகில் ஏற்பட்டுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதல் போட்டி எதிர்வரும்வரும் 21 ஆம் திகதி கவுகாத்தியில் ஆரம்பமாகின்றது. ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ள ரவீந்திர ஜடேஜா, ஆசியக் கிண்ணத்…

    • 0 replies
    • 346 views
  19. இலங்கையில் பலரை விசாரணை செய்கின்றோம்- ஐ .சி.சி. அதிகாரி அதிர்ச்சித் தகவல் ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவினர் இலங்கையில் பலரை விசாரணை செய்து வருகின்றனர் என அதன் தலைவர் அலெக்ஸ் மார்சல் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்குள் ஊருடுவி அதற்கும் இளம் வீரர்களிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வரும் ஊழல் மற்றும் துஸ்பிரயோகம் என்ற நச்சுவட்டத்தை உடைக்க முயல்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கின்போவுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பேட்டடியின் வடிவம் வருமாறு, கேள்வி - இலங்கையில் தனது நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு ஏன் தீர்மானித்தது? அலெக்ஸ் மார்சல்- இலங்கை உட்பட பல நாடுகள் குறித்து எங்களிற்கு பெருமளவு …

  20. இலங்கை அணியின் துடுப்பாட்டம் குறித்து திக்வெல ஏமாற்றம் Share இருபத்தியொரு ஓவர் போட்டியில் 150 ஓட்டங்களை பெறுவதன் மூலம் அணியொன்று வெற்றி பெற முடியாது என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல தெரிவித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை அணி சிறப்பாக ஆரம்பித்தது ஆனால் நாங்கள் 25 -30 ஓட்டங்கள் குறைவாக பெற்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த நாங்கள் தீடீர் என மேலும் இரண்டு விக்கெட்களை இழந்தோம் என தெரிவித்துள்ள நிரோசன் திக்வெல இதுவே முக்கிய திருப்…

    • 0 replies
    • 474 views
  21. இலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி October 18, 2018 1 Min Read பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. மழை காரணமாக போட்டி 21 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயசெய்யப்பட்ட 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து, 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்று வெற்ற…

  22. வவுனியா - பொகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சரித்த நிர்மல புத்திக்க இந்திரபால ஆசியா 2018 பரா விளையாட்டில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். இன்று காலை வடமாகாணசபை உறுப்பினர் தர்மபாலா செனவிரத்தினாவின் மூன்றுமுறிப்பு அலுவலகத்திலிருந்து அவரது பொகஸ்வெவ பகுதிக்கு வாகனப்பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆசியா 2018 பரா விளையாட்டில் ஆசியாவில் நீளம் பாய்தலில் தங்கப்பதக்கம் 200மீற்றர் ஓட்டத்தில் பிறன்ஸ் பதக்கத்தையும் உயரம் பாய்தலில் 5ஆவது இடத்தினையும் இந்தோனோஷியா, ஜகார்த்தாவில் இடம்பெற்ற போட்டியில் கலந்துகொண்டு இங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரை கௌரவிக்கும் நிகழ்வில் கிராம மக்கள் கலந்துகொண்டு வாகனப்பேரணியாக பொகஸ…

  23. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழலுக்கு எதிரான நடத்தைவிதிகளை மீறிவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளது. 49 வயது முன்னாள் ஆல் ரவுண்டரான ஜெயசூரியா இதுகுறித்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். ஆதாரங்களை மறைப்பதாகவும் அல்லது அழிப்பதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தேர்வு குழு உறுப்பினராக இருந்த ஜெயசூரியா புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக பாராட்டப்பட்டவர். இந்த கு…

  24. இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று October 17, 2018 1 Min Read இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி கண்டி பல்லேகலயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்டதோடு, இரண்டாவது போட்டியில் டக் வேர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றியீட்டிருந்தது. இந்தநிலையில் தொடரைக் கைப்பற்ற வேண்டுமாயின் இன்றைய போட்டி உட்பட மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/99583/

  25. முதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான். பாக்கிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் ஜமான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பகர் ஜமான் 94 ஓட்டங்களிற்கு ஆட்;டமிழந்தார். அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி தனது முதல் ஐந்து விக்கெட்களையும் 57 ஓட்டங்களிற்குள் இழந்து தடுமாறியது. அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன்லயன் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தான் அணியை நிலைகுலையச்செய்தார். எனினும் ஆறாவது விக்கெட்டிற்காக இணைந்த பகர் ஜமானும் பாக்கிஸ்தான் அணியின் தல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.