விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கிரிக்கெட்டின் உயர்தர ஹாட்ரிக்: இங்கிலாந்தின் ஜோர்டான் கிளார்க் சாதனை ஜோர்டான் கிளார்க். | கெட்டி இமேஜஸ். ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் நடைபெறும் ரோஸஸ் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் லங்காஷயர் வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டான் கிளார்க் கிரிக்கெட் ஆட்டத்தின் உயர்தர ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது டெஸ்ட் போட்டிகளில் சுமார் 14,639 ரன்களை தங்களிடையே பகிர்ந்து கொள்ளும் ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வரிசையாக வீழ்த்தினார் ஜோர்டான் கிளார்க். யார்க்ஷயர் அணிக்கு எதிராக ஜோர்டான் கிளார்க் நிகழ்த்தும் இந்த ஹாட்ரிக் சாதனையின் போது ஹாட்ரிக் ஓவரின் 2வது மற்றும் …
-
- 0 replies
- 217 views
-
-
கிரிக்கெட்டின் நேர்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு- ஐசிசி தலைவர் பந்தை சேதப்படுத்துவது மற்றும் எதிரணி வீரர்களை வார்த்தைகளால் நிந்திப்பது போன்ற விடயங்கள் கிரிக்கெட்டின் கௌரவத்திற்கும் நேர்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என தெரிவித்துள்ள ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சட்சன் சமீபத்தைய மோசமான நடத்தைகளை வீரர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். நேர்மையே கிரிக்கெட் மரபனு என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல விடயங்கள் சமீபத்தில் இடம்பெற்றுள்ளன இதனை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிரணி வீரர்களை வார்த்தைகளால் நிந்திப்பது அவர்களை வார்த…
-
- 0 replies
- 286 views
-
-
சங்கா தவறவிட்ட சாதனை 28-12-2014 ஒரு வருடத்தில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை 21 ஓட்டங்களால் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தவறவிட்டுள்ளார். குறித்த சாதனை தற்சமயம் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங்கிடம் இருக்கிறது. ஒரு வருடத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் 2,833 ஓட்டங்களை 2005ஆம் ஆண்டு ரிக்கி பொன்டிங் பெற்றுக்கொண்டமையே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை குமார் சங்கக்கார முறியடிப்பார் என எதிர்பார்த்த வேளையில், 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 2,813 ஓட்டங்களை இதுவரை சங்கக்கார பெற்றுள்ளார். இன்னமும் 21 ஓட்டங்கள் பெற்றிருந்தால் பொன்டிங்கின் சாதனையை சங்கக்கார முறியடித்திருப்பார். இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடைய…
-
- 0 replies
- 745 views
-
-
என்னுடைய ஒருநாள் போட்டி சிறப்புக்கு ஐ.பி.எல் கிரிக்கெட் காரணம்: ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச்-வின்னராகத் தான் மாறியதற்கு ஐ.பி.எல். கிரிக்கெட் பெரும்பங்கு வகித்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுக்கு முன்னதாக ஸ்டீவ் ஸ்மித்தை ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் ஒரு பிரதான வீரராகக் கருதியதில்லை. ஆனால். அணியில் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு எதிராக தற்போது முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஒரு மேட்ச் வின்னராகத் திகழ்ந்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதும் அவருக்குக் கிடைத்துள்ளது. தன்னுடைய இந்த எழுச்சிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் …
-
- 0 replies
- 353 views
-
-
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல் பெர்த்தில் இன்று நடக்கும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. #ODI #SouthAfrica #Austrialia #Perth பெர்த்: தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி குறுகிய கால சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் செயல்பாடு மோசமாக இருந்து வருகிறது. அதுவும் …
-
- 3 replies
- 607 views
-
-
அவுஸ்ரேலிய ஓபன் – ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி பெற்றனர்! கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று காலை இடம்பெற்ற 4 வது சுற்று டென்னிஸ் போட்டியொன்றில் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒசாகா, லாட்வியா வீராங்கனை சுலெஸ்டானா ஆகியோர் விளையாடினர். இதில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 13-வது இடத்தில் இருக்கும் சுவஸ்டோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரான்ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக அவுஸ்ரேலிய ஓபனில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். கடந்த முறை 4-வது சுற்று வரை முன்னேறியமையே அவரது சிறந்த …
-
- 0 replies
- 393 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கதாயுதத்தை ஏந்தியது இந்தியா! டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலானது, கிரிக்கெட் அணிகளுக்கு மிக முக்கியமான தரவரிசைப் பட்டியலாக பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் திகதி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிடும். இந்த பட்டியலில், முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு சம்பியன்ஷிப் பட்டத்தோடு, ஐசிசி.யின் கதாயுதமும் வழங்கப்…
-
- 0 replies
- 559 views
-
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் ஆரம்பமாகின்றது. உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு பிறகு, உலக கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் போட்டித் தொடரான யூரோ கிண்ண தொடராகும். உதைப்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் பெரும்பான்மையான அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்தப் போட்டித் தொடரில் நடப்பு சம்பியன் இத்தாலி உட்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன. கூடவே ஜெர்மனி, இத்தாலி, இஙகிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் என முன்னாள் உலக சம்பியன்களும் களம் காணுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. போட்டியில் பங்கேற…
-
-
- 123 replies
- 8.4k views
- 2 followers
-
-
லாராவுக்கு பந்து வீசுவதே கடினமாயிருந்தது சச்சினை களத்தில் சந்தித்தது குறைவென்கிறார் முரளி [25 - December - 2007] [Font Size - A - A - A] தான் சந்தித்த துடுப்பாட்ட வீரர்களில் லாராவுக்கு பந்து வீசுவதே கடினமாக இருந்ததாக முரளிதரன் கூறியிருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சமீபத்தில் தனது சொந்த ஊரான கண்டியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷேன் வோர்னின் அதிக டெஸ்ட் விக்கெட் (708 விக்கெட்) சாதனையை முறியடித்து புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரரானார். முரளிதரன் இதுவரை 118 டெஸ்ட் விளையாடி 723 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் 35 வயதான முரளிதரன் சென்னையைச்…
-
- 0 replies
- 1.1k views
-
-
செய்தித் துளிகள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனது கடைசி கிரிக்கெட் தொடராக இருக்கலாம். எனினும் ஓய்வு பெறுவது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். ------------------------------------------- முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யின் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதி ரான தொடருக்காக அவர் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட் டிருக்கிறார். ------------------------------------------- ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், ஒடிசா அணிக்கு எதிராக 128 ரன்கள் குவித்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட…
-
- 0 replies
- 322 views
-
-
46 பந்தில் ஜாஸ் பட்லர் சதம் விளாசல் 46 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்த ஜாஸ் பட்லர். பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் குவித்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகித்த நிலையில் நேற்று கடைசி போட்டி துபையில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர்களில் ஒருவரான ராய் 117 பந்தில், 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 102 ரன்னும், அடுத்து வந்த ஜோ ரூட் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஜாஸ் பட்லர் 46 பந்தில் சதம் அடித்து மிரட்டினார். அவர் 52 பந்தில், 8 சிக்ஸர், 10 பவுண்ட…
-
- 1 reply
- 300 views
-
-
உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயர்பெற்ற ஜெஸிகா கோம்ப்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயதான ஜெஸிகா, ஜெட் விமானத்தின் இயந்திரத்தைப் பொருத்தி கார் ஓட்டுவதில் சிறந்தவராக உள்ளார். இதன் காரணமாகவே உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயரெடுத்தவர். கடந்த 2013ஆம் ஆண்டு மணிக்கு 641 கிலோ மீற்றர் (398 mph) வேகத்தில் காரை ஓட்டி சாதனை செய்தார். இதனைத் தொர்ந்து 824 கிலோ மீற்றர் (512 mph) வேகத்தில் காரை இயக்கி தனது சாதனையை தானே முறியடித்தார். இந்நிலையில் இந்தச் சாதனையையும் முறியடிக்க அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக தென்மேற்கு ஓரேகான் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானதில் ஜெஸிகா உயிரிழந்ததாகத…
-
- 0 replies
- 669 views
-
-
T20i தரவரிசையில் மிகப் பெரிய மாற்றங்கள் By Akeel Shihab - இந்தியா – தென்னாபிரிக்கா T20i தொடர், பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண T20i தொடர் மற்றும் அயர்லாந்து முக்கோண T20i தொடர்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது குறித்த தொடரில் பிரகாசித்த வீரர்களை உள்ளடக்கிய புதிய T20i வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை சமநிலையில் நிறைவுக்குவந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடை…
-
- 0 replies
- 685 views
-
-
லிவர்பூல் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய வம்சாவளி வீரர் சாதனை! லிவர்பூல்... இந்த பெயரை சொன்னாலே கால்பந்து உலகம் அதிரும். ஏனென்றால் உலகின் அபாயகரமான கால்பந்து ரசிகர்கள் கொண்ட அணி எதுவென்றால், தாராளமாக லிவர்பூல் அணியை நோக்கி கை காட்டலாம். கடந்த 1985-ம் ஆண்டு, பிரஸ்சல்ஸ் நகரில் உள்ள ஹேசல் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில், லிவர்பூல் அணியுடன் இத்தாலியின் யுவான்டஸ் மோதிக் கொண்டிருந்தது. இந்த போட்டியில் யுவான்டஸ் அணி ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்த போது, லிவர்பூல் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். இந்த சம்பவத்தில் 39 யுவான்டஸ் ரசிகர்கள் கொல்லப்பட்டனர். 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக லிவர்பூல் அணிக…
-
- 0 replies
- 709 views
-
-
தீபக் சஹாரின் ஹெட்ரிக் மற்றும் அசத்தலான பந்து வீச்சுக் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு -20 போட்டியில் இந்திய அணி 30 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று இருபதுக்கு - 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுக்களினால் வெற்றியும் பெற்றிருந்தது. இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரை கிண்ணத்தை தீர்மானிக்கும் தொடரின் இறுதிப் போட்டி நாகபூ…
-
- 0 replies
- 703 views
-
-
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ரூ.15.5 கோடிக்கு ஏலம் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற்று வரும் ஏலத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் பதினைந்தரை கோடி ரூபாய்க்கும், இன்னொரு ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நிலவிய கடும் போட்டிக்கு பிறகு, இங்கிலாந்து வீரர் இயன் மோர்கனை 5 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச்சை ஏலம் எடுப்பது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலன்ஜர்ஸ் இடையே நீண்ட நேரம் போட்டி நிலவியது. முடிவில்…
-
- 6 replies
- 1.6k views
-
-
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆண்டிற்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான (மாற்றுத் திறனாளிகளுக்கான) தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி இன்றையதினம் 03.04.2025 மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தேசிய மட்டத்தில் 25 மாவட்டத்திலிருந்தும் இதில் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். 06 தங்கப் பதக்கத்தையும் , 10 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டது. குறித்த விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 21 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர். குறித்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத…
-
- 0 replies
- 248 views
-
-
எல்லா திட்டமும் பக்கவா வச்சிருப்பானுக; எச்சரிக்கும் முன்னாள் வீரர் !! இந்திய அணியை வீழ்த்துவதற்கு இங்கிலாந்து அணி மிகத் தீவிரமாக முயற்சி செய்யும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கோச் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள், 5 t20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.பலம் வாய்ந்த இரு அணிகளும் பங்கேற்க உள்ள இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று பலரும் எதிர்பார்த்து உள்ளனர். 2012 நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2-1 என வீழ்ந்தது. இதில் குறிப்பாக அலாஸ்டர் குக் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய…
-
- 0 replies
- 514 views
-
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்: ஓவல் டெஸ்டில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வெற்றி 6 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி நான்காவது டெஸ்ட் போட்டியை வென்றிருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. பெருமை மிக்க ஓவல் மைதானத்தில் 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா பெற்றிருக்கும் முதல் டெஸ்ட்வெற்றி இது. 50 ஆண்டுக் காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. 1971-ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணிதான் கடைசியாக ஓவல் ம…
-
- 1 reply
- 467 views
- 1 follower
-
-
இலங்கை அணி ரசிகர்களுக்கு சங்கா விடுக்கும் அவசர வேண்டுகோள் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் தம்புள்ளையில் ரசிகர்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததையடுத்து மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இலங்கை அணி ரசிகர்களுக்கு காணொளி மூலமான அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தற்போது மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ஜமெய்க்கா தளவஹாஸ் அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில், தாய்நாடு தொடர்ச்சியான பல தோல்விகளை ச…
-
- 0 replies
- 318 views
-
-
அடுத்தாண்டு ஒலிம்பிக்கிலும் ரஷ்யா இல்லை தென்கொரியாவின் பியொங்சங்கில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்குபற்றுவதற்கு, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், தாம் குற்றமில்லாதவர்கள் என நிரூபிக்கும் ரஷ்ய தடகள வீரர்கள் சுயாதீனக் கொடியொன்றின் கீழ் பியொங்சங்கில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபற்ற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது குறித்த தடகள வீரர்கள் ரஷ்யாவிலிருந்தான ஒலிம்பிக் தடகள வீரர்கள் என்றவாறு பங்குபற்றமுடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவால் 2014ஆம் ஆண்டு சோச்சியில் நடத்தப்பட்ட குளிர்கால ஒலிம்பின்போது அரச ஆதர…
-
- 0 replies
- 400 views
-
-
பிரிவு இரண்டின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி பிரிவு இரண்டின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 13 வயதிற்கு உட்பட்ட பிரிவு இரண்டு (டிவிஷன்-2) அணிகளுக்கு இடையிலான 2017/18 பருவகாலப் போட்டித்தொடரின் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு, மஹாநாம கல்லூரி (B) அணியினை, அன்ரன் அபிஷேக்கின் சகலதுறை ஆட்டத்தின் துணையுடன் வெற்றி கொண்ட யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஒரு நாளில் 4 இன்னிங்ஸ்களைக் கொண்டமைந்த இந்தப் போட்டியானது அநுராதபுரம் மாவட்ட கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியி…
-
- 0 replies
- 242 views
-
-
600-வது கோல் அடித்தார், மெஸ்சி லா லிகா கால்பந்து தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பார்சிலோனா கிளப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மெஸ்சி ஒரு கோல் அடித்ததன் மூலம் 600 கோல்களை எட்டியுள்ளார். பார்சிலோனா: லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா கிளப் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 26-வது நிமிடத்தில் ‘பிரீ கிக்’ வாய்ப்பில் லயோனல் மெஸ்சி அடித்தார். தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் 30 வயதான மெஸ்சி அடித்த 600-வது கோல் இதுவாகும். …
-
- 0 replies
- 309 views
-
-
காமன்வெல்த்: காணாமல் போன விளையாட்டு வீரர்கள், இந்தியாவுக்கு தங்கம் வென்ற பத்திரிகையாளர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகாணாமல் போனவர்களில் பளு தூக்கும் வீராங்கனை ஆர்க்கெஞ்சலின் ஃபுடோஜி சொங்போவும் ஒருவர். கேமரூன் நாட்டைச் சேர்ந்த எட்டு விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் கோல்டு கோஸ்டிலிருந்து காணாமல் …
-
- 0 replies
- 319 views
-
-
திராவிட் என்னுடைய உண்மையான குரு: கெவின் பீட்டர்சன் தன்னுடைய பேட்டிங் உத்தியில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தியவர் திராவிட், அவர் மூலம் உண்மையான குருவைக் கண்டடையும் தனது தேடலும் முடிந்தது என்று கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன். KP என்ற அவரது சுயசரிதை நூலில் ஸ்பின்னர்களை விளையாடும் உத்திகள் பற்றி திராவிட் தனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் பற்றி பீட்டர்சன் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். அதாவது திராவிட் கற்றுக் கொடுத்த அந்த உத்திகள் தனது பேட்டிங்கில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்று அவர் அதில் கூறியுள்ளார். “அவரது பேட்டிங் காலத்தில் ராகுல் திராவிட் இந்தியாவின் நாயக பேட்ஸ்மென், சுழற்பந்து வீச்சைக் கையாள்வதில் அவர் ஒரு மேதை. எங்கள் இருவருக்கும் இடையே ந…
-
- 0 replies
- 424 views
-