விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
100 சதங்கள் அடித்தார் சங்ககரா... குவியும் வாழ்த்துகள்! இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககரா, 'ஃபர்ஸ்ட்- கிளாஸ் மற்றும் லிஸ்ட்- ஏ' போட்டிகளில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சங்ககரா, கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். ஆனாலும், அவர் தொடர்ந்து ஃபர்ஸ்ட்- கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்தார். இந்த நிலையில்தான், அவர் இங்கிலாந்தின் சர்ரே அணி சார்பில் விளையாடிய போட்டியில் 121 ரன்கள் ஸ்கோர் செய்து, 100-வது சதமடித்து சாதனை புரிந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில், 100 சதங்கள் அடிக்கும் 37-வது நபர்தான் அவர் என்பது, இந்தச் சாதனையின் வீச்சைப் பற்றி அறியச்செய்யும். …
-
- 2 replies
- 647 views
-
-
ஏலத்தில் என்ன நடந்தது?- ஐ.பி.எல் 'லக்கிமேன்' முருகன் அஸ்வின் பேட்டி வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முருகன் அஸ்வின் புனே அணிக்காக ரூ. 4.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.10 லட்சம்தான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். ஐ.பி.எல். என்ட்ரி குறித்து அவர் அளித்த பேட்டி இங்கே... ஐ.பி.எல். ஏலத்தில் என்ன நடந்தது? பிப்ரவரி 6ஆம் தேதி காலை 9 மணிக்கே டி.வி. முன்னாள் உட்கார்ந்துட்டேன். லஞ்சுக்கு மட்டும்தான் எழுந்துருச்சேன். மாலை 4 மணிக்குதான் எனது பெயர் ஸ்கிரீன்ல தெரிஞ்சது. ரொம்ப நெர்வசா இருந்தது. எனக்கு ஐ.பி.எல்.ல விளையாடனும்னுதான் ஆசை…
-
- 0 replies
- 646 views
-
-
மத்திய கல்லூரி வெற்றியைத் தழுவியது யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டு சங்கம் நடத்திய 20வயதுப்பிரிவு ஆண்களுக்கான காற்பந்தாட்ட தொடரில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி சம்பியனானது. யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ் மத்திய அணியை எதிர்த்து சென். ஹென்றிஸ் கல்லூரி அணி மோதியது. முதல் பாதி முடிவில் 2:1 என்று மத்திய கல்லூரி முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் மத்திய கல்லூரி மூன்றாவது கோலை பதிவு செய்து 3:1 என்ற கணக்கில் சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. http://onlineuthayan.com/sports/
-
- 0 replies
- 646 views
-
-
உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியா: என்ன காரணம்? முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான ரிக்கி பாண்டிங்,'அடிலெய்ட் டெஸ்ட் தோல்வியை பார்க்கும் போது,இந்தியா இந்த தொடரில் ஒயிட் வாஷ் ஆகிவிடும்' என தெரிவித்திருந்தார்.ஆனால் நடந்ததே வேறு. https://www.facebook.com/BBCnewsTamil/videos/398622391203863 புதிய உச்சம் - சரித்திர சாதனை படைத்தது இந்திய அணி. எப்படி சாத்தியமானது இந்த வெற்றி? 36 ரன்களில் ஆல் அவுட் ஆன அணி தொடரை வென்றது எப்படி? https://www.facebook.com/186742265162/videos/413423799768237/
-
- 0 replies
- 646 views
-
-
பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி உண்பதற்கு அணியின் பயிற்றுவிப்பாளரும் தெரிவுக்குழுவின் தலைவருமான மிஸ்பா உல் ஹக் தடை விதித்துள்ளார். புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மிஸ்பாஉல் ஹக் வீரர்களிற்கான உணவு திட்டமொன்றை வெளியிட்டுள்ளதுடன் அதனை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பாக்கிஸ்தான் அணி வீரர்களின் உடற்தகுதி வீழ்ச்சியடைவதை கருத்திலெடுத்துள்ள மிஸ்பா உல் ஹக் பாக்கிஸ்தான் அணி வீரர்கள் மேலும் உற்சாகத்துடன் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு வழிவகுக்ககூடிய உணவுநடைமுறையை அறிவித்துள்ளார். இதனடிப்படையில் மிஸ்பா உல் ஹக் இனிப்பு மற்றும் எண்ணெய் உணவுகளிற்கு தடை விதித்துள்ளார். பாக்கிஸ்தான் அணியின் தேசிய பயிற்சி முகாமில் இணைக்கப்பட…
-
- 0 replies
- 646 views
-
-
ஐ.பி.எல் என்ற மூன்று எழுத்து, பாரத தேசத்தின் பாராளுமன்றம் முதல் பட்டி தொட்டி வரை பேசும் விஷயமாகிவிட்டது. ஐ.பி.எல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஒரு அமைச்சரின் பதவியையும் காவுவாங்கியுள்ளது. காரணம் இதன் பின்னால் நடந்த திரை மறைவு விவகாரங்கள் வெளியே வந்தததால்தான். 2008ல் தான் முதன் முதலில் ஐ.பி.எல் 20-20 மேட்ச் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களுர் ராயல் சேலஜ்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி என 8 அணிகள் உருவாக்கப்பட்டது. இந்த அணிகள் சந்தையில் ஆடு, மாடுகள் ஏலம் விடப்படுவதை போல ஏலம் விடப்பட்டன. ஏலத்தில் பெருமுதலாளிகளும், சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டு அணிகளை ஏலம் …
-
- 0 replies
- 645 views
-
-
உலகக் கிண்ணத்திற்கான பதினொருவர் அணியில் இலங்கையின் ரவிந்து ரசந்த By Mohamed Azarudeen - ©ICC இந்த ஆண்டுக்கான (2020) ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) தென்னாபிரிக்காவில் நிறைவுக்கு வந்தது. இந்த உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் இளையோர் அணி, இந்திய இளையோர் அணியை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியன் பட்டம் வென்ற நிலையில், இந்த உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயற்பட்ட வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொடரின் சிறந்த பதினொருவர் அணி, ஐ.சி.சி. இனால் அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 645 views
-
-
சம்பியனானது சென்றலைட்ஸ் கொக்குவில் மத்திய சனசமூக நிலையத்தின் கிரிக்கெட் தொடரின் வெள்ளி விழாக் கிண்ணத்தை, ஜொனியன்ஸ் அணியை வீழ்த்தி யாழ். சென்றலைட்ஸ் அணி கைப்பற்றியதுடன், இத்தொடரை அதிக தடவைகளாக ஐந்தாவது தடவையாக வென்ற அணியாக தம்மை மாற்றிக் கொண்டது. யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கொண்ட தொடராக ஆண்டுதோறும் நடைபெறும் இத்தொடர், இம்முறை கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய மைதானங்களில் நடைபெற்றது. இவ்வாண்டு தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்குபற்றி, சென்றலைட்ஸ…
-
- 0 replies
- 645 views
-
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட்டைக் குட்டிச்சுவராக்கியது வக்கார் யூனிஸ்: கம்ரன் அக்மல் கடும் சாடல் கம்ரன் அக்மல், வக்கார் யூனிஸ் - படம் | ஏ.பி. வக்கார் யூனிஸ் ஒரு பயிற்சியாளராக தோல்வி அடைந்தவர், அவரால் பாகிஸ்தான் கிரிக்கெட் குட்டிச்சுவராகிவிட்டது என்று விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் கடுமையாகச் சாடினார். ஜியோ சூப்பர் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘வக்கார் பயிற்சியாளராக தோல்வியடைந்தவர், அவரால் பாகிஸ்தான் அணிக்கு ஏகப்பட்ட சேதம், பரிசோதனை முயற்சிக்கான தன்னார்வத்தில் நிரூபித்த வீரர்களை வீட்டுக்கு அனுப்பி அணியைக் குட்டிச்சுவராக்கியதோடு 2-3 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தி விட்டார். சில வீரர்களுக்கும் அவருக்கும் பிரச்சினை இருந்தது.…
-
- 0 replies
- 645 views
-
-
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: 14பேர் கொண்ட அணியில் ஒல்லி ரொபின்சனுக்கு வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க 14பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விலகிய சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக, ஒல்லி ரொபின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போட்டியில் விளையாடவுள்ள முழுமையான அணி விபரத்தை பார்க்கலாம், ஜோ ரூட் தலைமையிலான அணியில் ஜேம்ஸ் எண்டரசன், ஜொஃப்ரா ஆர்சர், டொமினிக் பெஸ்,ஸ்டூவர்ட் பிராட், ரொறி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸெக் கிராவ்லி, சேம் கர்ரன், ஒல்லி போப், ஒல்லி ரொபின்சன், டொம் சிப்ல…
-
- 0 replies
- 645 views
-
-
பங்களாதேஷுக்கு எதிரான வெற்றி அலையை இங்கிலாந்து அணியினால் தொடர முடியுமா? டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் 2016-10-20 09:46:03 பங்களாதேஷுக்கு எதிராக இன்று ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தனது வெற்றி அலையைத் தொடர்வதற்கு இங்கிலாந்து உறுதி பூண்டுள்ளது. ஆனால் அது இலகுவாக அமையும் என்று கூறுவதற்கில்லை. பங்களாதேஷுக்கு எதிராக 2003 முதல் 2010 வரை விளையாடிய 8 போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவைவிட பங்களாதேஷுடனான டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்ற இரண்டாவது நாடு இங்கிலாந்து ஆகும். எனினும் பங்களாதேஷின் அண்மைக்கால ஆற்றல்…
-
- 7 replies
- 645 views
-
-
ஓய்வு பெற்றார் இந்திய அணியின் பறக்கும் வீரர் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொத்த 37 வயதாகும் முகம்மது கைப், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 13 டெஸ்ட்கள் மற்றும் 125 ஒரு நாள் போட்டிகள், முதல் தரப் போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்தவர் முகம்மது கைப். 2000 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைவராக இருந்தவர். 2002 ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பையை வெல்வதற்கு மிகப் பெரிய பலமாக இருந்தவர் கைப். அந்தப் போட்டியில் 87 ஓட்டங்களை எடுத்து இந்தியாவுக்கு கோப்பையை வென்றுத் தந்தார். நாட்வ…
-
- 0 replies
- 645 views
-
-
ஓய்வுபெறும் எண்ணமில்லை! சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் என்னால் விளையாட முடியும் என்று இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். நடப்பு உலகக்கிண்ணத் தொடரோடு இலங்கை அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளனர். இந்நிலையில் தற்போது தனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று டில்ஷான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்இ ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் எண்ணம் எனக்கிருக்கிறது. உலகக்கிண்ணத் தொடர் முடிந்த பின்னர் இது க…
-
- 0 replies
- 645 views
-
-
சாமுவெல்ஸ் சொல்லும் கண்ணீர் கதை.... தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை வார்னேவுக்கு அர்ப்பணிப்பதாக கூறி அவருக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் சாமுவெல்ஸ். 6-வது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மேற்கிந்திய தீவுகள். இதன் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய டேரன் சமி “கடவுளுக்கு நன்றி. நாங்கள் தொடர்ந்து பிராத்தனைக் செய்துக் கொண்டே இருந்தோம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று யாருமே நம்பவில்லை. எங்கள் கிரிக்கெட் வாரியம் எங்களை அவமதித்தது. ஜெர்ஸி கூட இல்லாமல் தான் நாங்கள் இந்தியா வந்தோம். ஆனால் எங்கள் நாட்டு மக்களுக்காக கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்று உறுதி…
-
- 0 replies
- 645 views
-
-
2016ம் ஆண்டின் சிறந்த டி20 போட்டி எது? #Top10T20 #2016Special டெஸ்ட் போட்டியை உலகச் சினிமா என்றால், டி 20 தான் பக்கா கமர்ஷியல் சினிமா. நிமிடத்துக்கு நிமிடம் சஸ்பென்ஸ், ஓவருக்கு ஓவர் மாறும் வெற்றி வாய்ப்பு, பரபர சேஸ், ஆட்டத்தையே மாற்றி விடும் ஒரு ரன் ..ஒரு விக்கெட் ..ஒரு நோபால் என செம த்ரில், செம டிவிஸ்ட் கிரிக்கெட்டுக்கு கியாரண்டி எப்போதுமே உண்டு. அதுவும் இந்த ஆண்டு ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை என டி20 போட்டிகளை நம்மவர்கள் கொண்டாடினார்கள். அப்படி இந்த ஆண்டு நடந்த முடிந்த பத்து சிறந்த டி20 போட்டிகளை பற்றிப்பார்ப்போமா? 10. இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் : - அமெரிக்காவில் நடந்த டி20 போட்டி இது. இந்திய வீரர்கள் முதன் முதலாக அமெரிக்க…
-
- 0 replies
- 645 views
-
-
தென்னாப்ரிக்கா சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செவ்வாய், 24 நவம்பர் 2015 (00:18 IST) தென்னாப்ரிக்காவின் சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்ரிக்காவில், இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தென்னாப்ரிக்காவின் சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தான் ரபடா அறிமுகம் ஆனார். ஆனால், அந்த போட்டியில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆநால் 6 விக்கெட்டுகள் அற்புதமாக வீழ்த்தினார். இதன் மூலம், அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற…
-
- 0 replies
- 645 views
-
-
கெய்லின் சாதனை முறியடிப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் டொபாகோ வீரர் ஈராக் தோமஸ் 21 பந்துகளில் அதிவேக சதம் அடித்து, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார். கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டிரினிடாட் டொபாகோவில் அந்நாட்டு கிரிக் கெட் நிறுவகம் சார்பில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான இ–20 போட்டி நடத்தப்படுகிறது. இதில்,நடந்த போட்டியில் ஸ்கார் போரோக் மேசன் ஹால் அணியும், ஸ்பைசைட் அணியும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்பைசைட் அணி 152 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்து துடுப்பெடுத்தாடிய ஸ்கார்போரோக் அணியின் 23 வயதான தோமஸ், தான் சந்தித்த அனைத்து பந்துகளையும் விளாசித் தள்ள…
-
- 0 replies
- 644 views
-
-
ஐரோப்பிய சூப்பர் லீக்கிலிருந்து விலகிய ஆறு அணிகள் ஐரோப்பிய சூப்பர் லீக் திட்டங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆறு ஆங்கில கிளப்களும் ரசிகர்களின் பெரும் பின்னடைவைத் தொடர்ந்து வெறுக்கத்தக்க போட்டியில் இருந்து வியத்தகு முறையில் விலகியுள்ளன. அதன்படி மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், செல்சியா மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகிய 6 ஆங்கில கிளப்களே இவ்வாறு விலகியுள்ளன. ஐரோப்பாவில் உள்ள அனைத்து முன்னணி அணிகளும் சேர்ந்து அவர்களுக்கென அமைக்கப்படும் ஒரு லீக் போட்டிதான் ஐரோப்பிய சூப்பர் லீக். இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, ஆர்சேனல், டாட்டன்ஹாம், செல்சியா ஆகிய குழுக்களும் ஸ்பெயி…
-
- 0 replies
- 644 views
-
-
இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் மார்ச் 01, 2014. ஆன்டிகுவா: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொறுப்பாக ஆடிய இங்கிலாந்து வீரர் மைக்கேல் லம்ப் சதம் வீணானது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டூவர்ட் பிராட், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். திணறல் துவக்கம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போவல் (5) மோசமான துவக்கம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரர் டுவைன் ஸ்மித் (24) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த கிர்க் எட்வர்ட்ஸ் (10), டேரன் பிராவோ (2) சொற்ப ரன்னி…
-
- 4 replies
- 644 views
-
-
இலங்கைக்கு வருகிறார் ஹத்துருசிங்க? இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராகப் பதவியேற்பது குறித்து, பங்களாதேஷ் அணியின் பயிற்றுநரும் இலங்கை அணியின் முன்னாள் வீரருமான சந்திக்க ஹத்துருசிங்கவுடன், இலங்கை கிரிக்கெட் சபை, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் பயிற்றுநராக இதுவரை பதவிவகித்த கிரஹம் ஃபோர்ட், தனது பதவியிலிருந்து விலகுவதாக, நேற்று முன்தினம், உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். எனினும் அதற்கு முன்னரே, அவர் பதவியிலிருந்து விலகுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இடைக்காலப் பயிற்றுநராக, தற்போது களத்தடுப்புப் பயிற்றுநராக இருக்கும் நிக் போதாஸ் பதவியேற்றுள்ளார். …
-
- 0 replies
- 644 views
-
-
அயல்நாட்டுப் பிட்ச்களில் வீசும் முறையைக் கற்க வேண்டிய நிலையில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இதுவரை 24 போட்டிகளில் 115 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் இந்தியாவில் மட்டும் 95 விக்கெட்டுகளை 15 போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். இந்தியாவில் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமான, புழுதி நிறைந்த ஆட்டக்களங்களில் மட்டுமே அவரால் ஆஃப் ஸ்பின்னர்களை திறமையாக வீச முடிகிறது என்பதை இது காட்டுகிறது. அவரது பிரச்சினை என்னவென்று பார்த்தால் அவர் வீசும் திசை மற்றும் லெந்த், அவர் கேட்கும் களவியூகம் என்று அயல்நாடுகளில் அவரால் திறம்பட வீச முடியாமல் இருப்பதே. அதுவும் பிரிஸ்பன், மெல்பர்ன், தற்போது சிட்னி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் பந்து வீச்சு எரிச்சலைக் கிளப்புவதாகவே…
-
- 0 replies
- 644 views
-
-
இங்கிலாந்து சென்றது இலங்கை இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக, இங்கிலாந்து நோக்கி இலங்கை அணி, இன்று புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்து அணிக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியனவற்றிலும், அயர்லாந்துக்கெதிரான இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்காக விளையாடுவதற்கு முன்னர், இலங்கை அணியின் வீரர்கள், சுற்றுலா ஒப்பந்தமொன்றில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் கைச்சாத்திட்டனர். இலங்கை வீரர்களின் வருடாந்த ஒப்பந்தம், இவ்வாண்டு பெப்ரவரியிலேயே நிறைவடைந்த போதிலும், ஏப்ரல் வரை அது நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையி…
-
- 1 reply
- 644 views
-
-
ஆட்டத்தை ஆரம்பித்தார் ஹத்துரு இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான சந்திக்க ஹத்துருசிங்க, நேற்று தனது பயிற்சிகளை ஆரம்பித்தார். கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான சந்திக்கவுடனான பயிற்சியில் தேசிய அணி வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அணி பங்களாதேஷ் செல்லவுள்ள நிலையில் பயிற்சிகள் தீவிரமாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இலங்கை அணியின் தலைமையும் மாறலாமாம். இலங்கை அணித் தலைவராக மீண்டும் மெத்தியூஸ் அல்லது…
-
- 2 replies
- 644 views
-
-
ஒருநாள் தொடரும் இந்தியா வசம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள இந்திய அணி, நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இருபதுக்கு - 20 தொடரை போலவே ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது. அதன்படி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்றையதினம் இரவு 7.00 மணிக்கு இப் போட்டி ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்…
-
- 1 reply
- 643 views
- 1 follower
-