விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் அவுஸ்ரேலியா இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் அவுஸ்ரேலிய அணி 179 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களுக்குள் சுருண்டது. தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நிறைவில் 2 விக்கெட…
-
- 0 replies
- 324 views
-
-
[size=4]இந்தியா, இலங்கை இடையே இன்று நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. சங்கரகரா 73 ரன்களும், ஜெயவர்த்தனே 65 ரன்களும், மாத்யூஸ் 71 ரன்களும் சேர்த்தனர். 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை எட்டிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கவுதம்காம்பீர் 102 ரன்களும், சுரேஷ் ரெய்னா 65 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. TO VIEW THE FULL SCORE BOARD AND IMAGES CLICK HERE[/size]
-
- 0 replies
- 427 views
-
-
இலங்கைக்கு எதிரான ரி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. பவுலிங் யூனிட்டில் அதிரடி மாற்றங்கள். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ரி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் வென்ற நிலையில், அடுத்ததாக இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர், அதற்கடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. இலங்கை இந்தியாவிற்கு வந்து 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் ஆடுகிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடர் ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 5, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முறையே கவுஹாத்தி, இந்தூர் மற்றும் புனே ஆகிய இடங்களில் மூன்று ரி20 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு முழுவதும், ஒர…
-
- 1 reply
- 530 views
- 1 follower
-
-
இலங்கைக்கு ஏழு பதக்கங்களை பெற்றுக்கொடுத்த வடமாகாண குத்துச்சண்டை வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர். பாக்கிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி வளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23-01-2020 தொடக்கம் 26-01-2020 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஏழு குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். வடக்கு மாகாண கிக் பொக்சிங் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வ…
-
- 0 replies
- 345 views
-
-
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக ஜோசன் ஹோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை வந்தடையும். அதைத் தொடர்ந்து 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை 3 நாள் பயிற்சிபோட்டியில் விளையாடவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி 14ஆம் திகதி முதல் 18ஆம்திகதிவரை காலியிலும்இ இரண்டாவது டெஸ்ட் போட்டி 22ஆம் திகதி முதல் 26ஆம் திக…
-
- 0 replies
- 221 views
-
-
இலங்கைக்கு நீச்சல், சைக்கிளோட்டம், வூஷுவில் தங்கங்கள் நீச்சல் வீரர் மெத்யூவின் வெற்றி அலை தொடர்கின்றது 2016-02-08 10:37:31 (குவாஹாட்டியிலிருந்து எஸ். ஜே. பிரசாத்) இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் நடைபெற்றுவரும் 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை தனது தங்கப் பதக்க எண்ணிக்கையை எட்டாக அதிகரித்துக ்கொண்டுள்ளது. எனினும் வரவேற்பு நாடான இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. போட்டியின் இரண்டாம் நாளான (விழாவின் மூன்றாம் நாள்) நேற்றைய தினம் இலங்கையின் சாதனை நீச்சல் வீரர் மெத்யூ அபேசிங்க, தனது தங்கப் பதக்க எண்ணிக்கையை 4 ஆக உயர்த்திக…
-
- 0 replies
- 328 views
-
-
இலங்கைக்கு படையெடுக்கவுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு இம் மாத இறுதியில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போலி தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தொடர்பான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணை வருமாறு, ஜூலை மாதம் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி காலி சர்வதேச க…
-
- 0 replies
- 449 views
-
-
இலங்கைக்கு பதிலடி கொடுக்குமா தென்ஆப்பிரிக்கா? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம் இலங்கை, தென்ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது. #SriLanka #SouthAfrica கொழும்பு: பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை 3-வது நாளுக்குள் சுருட்டிய…
-
- 14 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு பயிற்சியளிக்க இப்போதைக்கு மஹேலவுக்கு முடியாது இலங்கை அணிக்கு பயிற்சியளிப்பதற்கு மஹேல ஜயவர்தனவால் தற்போதைக்கு முடியாது என்றும், தேசிய அணியொன்றுக்கு பயிற்சியாளராவதற்கு அவருக்கு வயது போதாது என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். அதேபோல் அவருடன் விளையடிய வீரர்கள் இன்னும் இலங்கை அணியில் விளையாடி வருவதால் அவரை உடனடியாக பயிற்சியாளராக்க முடியாது. அதற்கு இன்னும் சில காலம் செல்ல வேண் டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தென்னாபிரிக்காவை சேர்ந்த கிரஹம் போர்ட் அந்த பொறுப்பிலிருந்து நேற்றும…
-
- 3 replies
- 550 views
-
-
இலங்கைக்கு வருகிறார் ஹத்துருசிங்க? இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராகப் பதவியேற்பது குறித்து, பங்களாதேஷ் அணியின் பயிற்றுநரும் இலங்கை அணியின் முன்னாள் வீரருமான சந்திக்க ஹத்துருசிங்கவுடன், இலங்கை கிரிக்கெட் சபை, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் பயிற்றுநராக இதுவரை பதவிவகித்த கிரஹம் ஃபோர்ட், தனது பதவியிலிருந்து விலகுவதாக, நேற்று முன்தினம், உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். எனினும் அதற்கு முன்னரே, அவர் பதவியிலிருந்து விலகுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இடைக்காலப் பயிற்றுநராக, தற்போது களத்தடுப்புப் பயிற்றுநராக இருக்கும் நிக் போதாஸ் பதவியேற்றுள்ளார். …
-
- 0 replies
- 645 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கெள்ளவுள்ளது இந்திய அணி இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வகைக் கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. இலங்கை – இந்திய அணிகள் மோதும் குறித்த தொடரானது எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 18 நாட்களாக நடைபெற்றுவந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது. தற்போது இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 -ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், ஒரு இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாடவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுடனான இந்தப் போட்டித் தொடர…
-
- 0 replies
- 229 views
-
-
இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றில் அனுப்பி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்தளு. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று விளையாட்டுச் சட்டத்தில் சில புதிய ஒழுங்குமுறைகளை உள்ளடக்கியிருந்ததோடு, அதற்கு எதிராக தற்போது பல தேசிய விளையாட்டு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன…
-
- 0 replies
- 843 views
-
-
இலங்கைக்கு வெற்றியிலக்காக 156 ஓட்டங்கள் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்காக 156 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் சிம்பாபே அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைப்பு விடுத்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி, 33.4 ஓவர்களில் 155 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது. சிம்பாபே அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மசகட்ஸா அதிகபட்சமாக 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.இதேவேளை இலங்கை அணி சார்பாக அபாரமாக பந்து வீசிய லக்ஷான் சன்டகன் நா…
-
- 2 replies
- 954 views
-
-
இலங்கைக்கு வெற்றியைக் கொண்டுவருமா இருபதுக்கு-20 போட்டிகள்? நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடர், நாளை இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடரையும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரையும் இழந்த இலங்கை அணி, தான் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இருபதுக்கு-20 போட்டிகளிலாவது வெற்றிபெற எதிர்பார்த்துள்ளது. நாளைய போட்டியில், நியூசிலாந்தின் டிம் சௌதி பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்குப் பதிலாக, ஒருநாள் தொடரில் இலங்கைக்குத் தலையிடியாக அமைந்த மற் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார். அவர், 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். …
-
- 7 replies
- 605 views
-
-
இலங்கைக்குக் காத்திருக்கும் சோதனைக் காலம் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலக இருபதுக்கு-20 தொடர் நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. ஆனால், இத்தொடருக்குள் நடப்புச் சம்பியன்களாகக் களமிறங்கிய இலங்கை அணிக்கு, அவ்வணியின் சுப்பர் 10 சுற்றில் ஒரு போட்டி மீதமிருக்கும் போதே, இத்தொடர் முடிவடைந்திருந்தது. இதற்கு முன்னரும் கூட நடப்புச் சம்பியன்களாக இருந்த அணிகள், அடுத்த தொடரில் ஆகக்கூடுதலாக அரையிறுதிவரையே முன்னேறியிருந்தன என்ற வரலாறு இருந்ததோடு, இம்முறை இலங்கை அணி சாதிக்காது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது. இலங்கை அணியிலும் கிரிக்கெட் சபையிலும் காணப்பட்ட குழப்பங்கள் அவ்வாறு இருந்தன. …
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கைக்கெதிரான 2வது இருபதுக்கு 20 – தென்னாபிரிக்கா வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது March 23, 2019 இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியிலும் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் தொடரிலும் 5 ஒருநாள் தொடரிலும் 3 இருபதுக்கு 20 தொடரிலும் பங்கேற்று விளையாடிய நிலையில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றிருந்ததுடன் ஒருநாள் தொடரை 5-0 என தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையில் முதலாவது போட்டியில் சுப்பர் ஓவர் மூலம் தென்னாபரிக்க அணி 14 ஓட்டங்களால் வெற்…
-
- 0 replies
- 538 views
-
-
இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1:0 என கைப்பற்றியுள்ளது. December 30, 2018 இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியினை நியூஸிலாந்து அணி 423 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளதுடன் தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. நியூஸிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை அணி நியூஸிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில் இரண்டாது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி கிறிஸ்ட் சரச்சில் ஆரம்பமானது. இப் போட்டியில் இன்னிங்சில் நியூஸிலாந்து அணி 178 ஓட்டங்களையும் இலங்கை அணி 104 ஓட்டங்களையும் எடுத்திருந்தன. இதையடுத்து…
-
- 0 replies
- 526 views
-
-
இலங்கைக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி March 20, 2019 இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளதை அடுத்து சூப்பர் ஓவர் மூலம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 135 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்ப…
-
- 0 replies
- 464 views
-
-
இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் நியூசிலாந்து Editorial / 2018 டிசெம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11:23 Comments - 0 நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுக் காணப்படுகிறது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து இலங்கை: 282/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 83, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 80, திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 6/68, நீல் வக்னர் 2/75, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/35, ட்ரெண்ட் போல்ட் 1/83) நியூசிலாந்து: 311/2 (துடுப்பாட்டம்: டொம் லேதம் அ.இ 121, …
-
- 1 reply
- 474 views
-
-
இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி November 9, 2018 இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் நிறைவில் 139 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இன்று இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து 322 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. எனினும் இரண்டா…
-
- 0 replies
- 437 views
-
-
இலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி October 18, 2018 1 Min Read பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. மழை காரணமாக போட்டி 21 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயசெய்யப்பட்ட 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து, 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்று வெற்ற…
-
- 0 replies
- 261 views
-
-
இலங்கைத் தமிழனின் மற்றுமொரு உலக சாதனை! In விளையாட்டு December 16, 2018 2:29 pm GMT 0 Comments 1041 by : Benitlas தாய்லாந்தில் நடைபெற்ற உலக உடல்கட்டமைப்பு (ஆணழகர்) போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ் வெற்றி பெற்று உலக சாம்பியனாக முடி சூடியுள்ளார். 100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த வருடம் டெக்சாஸில் நடைபெற்ற போட்டியில் 4’ம் இடத்தையும், பின்னர் அவுஸ்திரேலியாவில் 2’ம் இடத்தையும் பெற்ற அவர், தற்போது உலக சாம்பியனாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கைத்-தமிழனின்-மற்றும/
-
- 1 reply
- 682 views
-
-
இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரிய நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதியில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களின் எண்ணிக்கையில் ஒருவர் அதிகரிக்கப்படவுள்ளார். இதற்கான பரிந்துரைக்கான நபர்களின் விபரங்கள் இலங்கை விளையாட்டு அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலேயே சனத் ஜெயசூரியவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 பேரின் விபரங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பட்டியலில் மேலும் சிலர் சேர்க்கப்படலாம் எனவும், இவர்களில் ஒருவர் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்படவுள்ளார். சனத் ஜெயசூ…
-
- 12 replies
- 872 views
-
-
இலங்கைத் தொடருக்கான மேற்கிந்திய அணிக் கப்டனாக கிறிஸ்கெய்ல் நியமனம் [08 - March - 2008] மேற்கிந்திய தீவுகள் அணியின் கப்டனாக கிறிஸ் கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் கிறிஸ்கெயில் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அணியின் தொடக்க வீரராக உள்ள கிறிஸ்கெய்ல், டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சதமடித்த ஒரே வீரர் என்று பெருமையைப் பெற்றுள்ளார். இவரது நியமனத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையும் அனுமதியளித்துள்ளது. 70 டெஸ்ட் போட்டிகள் (4658 ஓட்டங்கள்), 50 விக்கெட்டுகள், 176 ஒரு நாள் போட்டிகள் (6244 ஓட்டங்கள்), 142 விக்கெட்டுகள் வீழ்த்தியதென சகலதுறை வீரராக இருந்துவருகிறார் கெய்ல…
-
- 0 replies
- 917 views
-
-
இலங்கைத் தொடருக்கு பிராவோ – பொல்லார்டை இணைக்க போராடும் சிம்மன்ஸ். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிராவோ மற்றும் பொல் லார்ட் இல்லாமையினால் விரக்தியடைந்துள்ளாராம் அந்த அணியின் பயிற்சியாளர் சிம் மன்ஸ். இந்த இருவரையும் அணியில் சேர்க்க முயற்சி செய்து வருகிறார். இதற்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி யின் தலைவர் ஜேசன் ஹோல்டரும் ஆதரவாக இருக்கிறா ராம். விரைவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யஇருக்கிறது. இந்த தொடரில் இடம்பெறும் வீரர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்இ வெய்ன் பிராவோ மற்றும் பொல்லார்டு ஆகியோரை சேர்த்தால் மேற்கிந்தியத்தீவுகள் அணி வலுவானதாக இருக்கும் என்று சிம்மன்ஸ் கூறி…
-
- 0 replies
- 309 views
-