Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முள்ளிவாய்க்காலில் பேரெழுச்சி விடுதலைப் பயணத்தில் அடுத்து…? – விதுரன் May 26, 2025 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 16ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகப்பாரிய உணர்வெழுச்சியுடன் ஆயிரக் கணக்கான தாயக உறவுகளின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப் படு கொலை நாளான மே 18ஆம் நாளன்று நடை பெற்று நிறைவடைந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் (வடக்கு-கிழக்கு) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பிரகடனம் செய்யப்பட்டிருக் கின்றது. குறித்த பிரகடனத்தில் முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளம். தமிழ் இன அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலில் நினைவு கூர்வது மீண்டும் எம்தினத்தின் எழுச்சியை சுட்டி நிற்கின்றது. ஈழத்தமிழ்…

  2. தமிழர் விடுதலைக்கான துரோகக் கோட்பாட்டின் முடிவு லக்ஸ்மன் இலங்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலையான பின்னர் முகிழ்த்த தமிழ்த் தேசிய விடுதலைக்கான சிந்தனாவாதக் கோட்பாடுகளுக்கு இதுவரையில் சரியான வடிவம் கொடுக்கப்படாத நிலை உள்ளதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஏனெனில், அதன் நோக்கத்தை அடைவதில் உள்ள இதுவரையான இழுபாடுகளே அதற்குக் காரணமாகும். அந்த வகையில் தான் சுதந்திர இலங்கையில் தமிழர்களின் அபிலாஷையைத் தமிழ்த் தேசியம் எய்தவில்லை என்ற முடிவு கிடைக்கும். தமிழர்கள் எதிர்பார்க்கின்ற விடுதலையை, உரிமையை வென்றெடுப்பதற்காக அகிம்சைப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற ஜனநாயக அரசியல் கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. அதன் தோல்வி காரணமாகத்தான் ஆயுதப் போராட்…

  3. Published By: RAJEEBAN 23 MAY, 2025 | 02:39 PM tamilguardian 67 ஆண்டுகளிற்கு முன்னர் இந்த நாளில் இலங்கையில் சிங்கள காடையர்கள் தமிழர்களை தாக்கதொடங்கினார்கள், பாலியல்வன்முறைகளில் ஈடுபட்டார்கள், கொலை செய்தார்கள். தமிழ் மக்களிற்கு எதிரான தொடர்ச்சியான பயங்கரமான இனவன்முறைகளில் ஒன்றாக இந்த வன்முறை வரலாற்றில் பதிவாகயிருந்து. தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் அன்றைய நாட்களில் 300 முதல் 1500 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது. பலர் காயமடைந்தனர், சூறையாடல்கள் தமிழர்களின் வீடுகளை வர்த்தக நிலையங்களை அழித்தல் போன்றனவும் இடம்பெற்றன. 1958ம் ஆண்டு மே மாதம் 27 திகதி இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது. 1956ம் ஆண்டில் சுதந்திர இலங்கையில் முதலாவது இன அடிப்படையிலான …

  4. ஒரு தீவு இரு நினைவு நாட்கள் - நிலாந்தன் கடந்த 18ஆம் தேதியும் 19 ஆம் தேதியும் இலங்கைத் தீவில் இரண்டு மக்கள் கூட்டங்கள் இருப்பதனை மீண்டும் உணர்த்திய அடுத்தடுத்த நாட்கள். 18 ஆம் திகதி தமிழ் மக்கள் இன அழிப்பை நினைவு கூர்ந்தார்கள். 19ஆம் திகதி சிங்கள மக்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடினார்கள். பதினெட்டாம் திகதியை நோக்கி அந்த வாரம் முழுவதும் தமிழ் மக்கள் ஊர் ஊராக, சந்தி சந்தியாக கஞ்சி காய்ச்சிக் கொடுத்தார்கள். 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் கூடினார்கள்; உருகி அழுதார்கள். அடுத்த நாள் கொழும்பில் அரசாங்கம் யுத்த வெற்றியைக் கொண்டாடியது. காலையில் அரசுத் தலைவர் உடல் வழங்காத படை வீரர்கள் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று அவர்களைக் கௌரவித்தார். அதன்பின் படைத் தள…

  5. காணி நிலம் வேண்டும்! நிலாந்தன். காணி நிலம் வேண்டும்! நிலாந்தன். காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் நாலாம் பிரிவின் கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலானது இலங்கைத் தீவின் இன முரண்பாடுகள் தொடர்பில் ஆகப் பிந்திய தலைப்புச் செய்தியாக மாறியிருக்கின்றது. வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5.940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத் துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத் தப்படும் என மேற்படி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவிலிருந்து வடமராட்சி கிழக்கு வரையிலுமான நீண்ட பிரதேசத்துக்குள் காணப்படும் காணிகளைக் குறித்த மேற்படி வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணிகளில் கிட்டத்தட்ட அரைவ…

  6. மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் May 25, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களுக்கு பிறகு உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மாகாணசபை தேர்தல்களை பற்றி பேசுவது பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்கள் சுமார் இரண்டரை வருடங்கள் தாமதிக்கப்பட்ட அதேவேளை மாகாணசபை தேர்தல்கள் ஏழு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்றன. உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி காரணமாக மாகாணசபை தேர்தல்களை தற்போதைக்கு நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டாது என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அரசாங்கம் மாத்திரமல்ல, எ…

  7. போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும் மீநிலங்கோ தெய்வேந்திரன் May 23, 2025 | Ezhuna இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே அன்றாடக் கதையாடல்களுக்குரியவற்றுடனோ அல்லது பொதுப்புத்தியில் எப்போதும் நிலைத்திருக்கும் விடயப்பரப்புகளுடனோ மட்டும் நின்றுவிடுவதல்ல. இலங்கைச் சமூகப் படிநிலையில் நலிந்தோரின் கதைகள் சொல்லப்பட வேண்…

  8. ஜேர்மனியின் நான்காவது சாம்ராஜ்ய ஆரம்பம்? சிவதாசன்இரண்டாம் உலக யுத்தத்தில் தோல்வியடைந்து ஏறத்தாழச் ‘சிறைப்படுத்தப்பட்டுக் கிடந்த’ இரண்டு நாடுகளான யப்பானுக்கும் ஜேர்மனிக்கும் விடுதலை கிடைத்துவிட்டது. இதில் முரண்நகை என்னவென்றால் இரண்டாம் போரில் இந்நாடுகளைத் தோற்கடித்து சிறைப்படுவதற்குக காரணமான சோவியத் குடியரசின் பதாங்கமான ரஸ்யாவே அவற்றுக்கு இந்த இந்த விடுதலையைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஹிட்லரின் விஸ்தரிப்பைத் தடுத்து மேற்கைக் காப்பாற்றுவதற்காக சேர்ச்சில் வைத்த பொறியில் வீழ்ந்த ஸ்டாலின் இதற்காக காவு கொடுத்தது 9 மில்லியன் சோவியத் படைகளையும் 18 -19 மில்லியன் பொதுமக்களையும். மீண்டுமொரு தடவை கோர்பச்சேவ் வடிவத்தில் மேற்கின் பொறியில் சோவியத் வீழ்ந்து தன்னையே சிதலம் செய்து இன்று பல…

  9. 20 MAY, 2025 | 12:46 PM டி.பி.எஸ். ஜெயராஜ் ஐரோப்பாவில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் இன்றைய நாட்களில் பெரிதும் பேசப்படுபவராக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு தலைவரான 'பொட்டு அம்மான்' என்ற சண்முகநாதன் சிவசங்கர் விளங்குகிறார். பெரிதும் அஞ்சப்பட்ட புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவர் போரின் இறுதிக்கட்டத்தில் 2009 மே மாதத்தில் இறந்துவிட்டார் என்ற போதிலும், ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒரு குழுவினர் பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வெளியில் வந்து இயக்கத்துக்கு புத்துயிரளித்து இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்ற…

  10. அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின் மனச்சாட்சியும் May 21, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தன. காலஞ்சென்ற என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனச்சார்பு) வாலிபர் இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவராக விளங்கிய ரோஹண விஜேவீர முரண்பாடுகள் காரணமாக கட்சியில் இருந்து விலகி 1965 மே 14 ஆம் திகதி ஜே.வி.பி. யை தாபித்தார். அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்து இரத்தக் களரிகளை கடந்து வந்த ஜே.வி.பி. ஜனநாயக அரசியலில் பிரவேசித்த பிறகு அதன் ஐந்தாவது தலைவரான அநுரா குமார திசாநாயக்கவின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி என்ற …

    • 2 replies
    • 267 views
  11. சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ. கட்சியில் வெற்றி பெற்றவர்களும் வாக்காளர்களும் விரும்பியவர்களை விட சுமந்திரனின் ஆதரவாளர்களை பதவியில் அமர்த்த முற்பட்டவேளை கூட்டம் நுச்சல் குழப்பமாக இருந்தது.

  12. 22 MAY, 2025 | 02:52 PM PELED ARBELI பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்றவற்றின் கடும் கண்டனங்களிற்கு மத்தியில் இஸ்ரேல் காசா மீது புதிய சர்ச்சைக்குரிய தாக்குதலிற்கு தயாராகிவரும் வேளையில், இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியும், பாதுகாப்பு ஆய்வாளருமான கேர்ணல் கலாநிதி மோசே எலாட் ஹமாசினை ஒழிப்பதற்கு இலங்கை இறுதி யுத்தத்தில் கையாண்ட வழிமுறைகளை இஸ்ரேல் பயன்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார். ஹமாசை ஒழிப்பதற்கும் காசாவில் அதன் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் இஸ்ரேல் பெரும் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த தருணத்தில் தெற்கு லெபனான் மண்டலத்தில் உள்ள டைர் மற்றும் பின்ட் பெய்ல் மாவட்டங்களின் முன்னாள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான நிப…

  13. 21 MAY, 2025 | 03:30 PM ரொபட் அன்டனி தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு பொருளாதார வழித்தடம் உருவாக வேண்டியது அவசியமாகும். இலங்கை இந்தியாவுக்கு இடையிலான பாலம் அமைக்கப்படுவதை தற்போதைய அரசாங்கம் அதனை விரும்பவில்லை. ஆனால் பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்தாமல் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2050ஆம் ஆண்டாகும்போது இந்தியா 30 ட்ரில்லியன் பொருளாதாரத்துடன் உலகில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். அப்போது அந்த வளர்ச்சியில் பல்வேறு நாடுகள் நன்மை பெறும். இதற்காக நாம் என்ன செய்யப்போகின்றோம்? எமது தொடர்புகள் என்ன ? எவ்வாறான தொடர்புகளை மேற்கொ…

  14. வலிசுமந்த மாதத்தில் அம்பலமான தோழர்கள் -விதுரன் May 19, 2025 ஈழத் தமிழர்களின் இனவிடுதலை வரலாற்றில் மே மாதம் கண்ணீரால், தோய்ந்த, வலிகளும், காயங்களும் தாரளமாகவே நிறைந்ததொன்றாகும். 2009 மே இல் முள்ளிவாய்க்காலில் கட்டமைக் கப்பட்ட இனவழிப்பொன்று நிகழ்ந்தேறியது. ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற போர்வையில் மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் தாராளமாகவே மீறப்பட்டு முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு கடந்த 16வருடங்களாக பேரவலத்துக்கான நீதி கோரிய போராட்டமும் இனவிடுதலைக்கான பயணத்தில் பின்னிப்பிணை ந்து தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கின்றது. தமிழின விடுதலைப்போராட்டம் ஆரம்பித்தகாலம் முதல், தாயகக் கோட்பாட்டிற்கும், அதிகாரப் பகிர்வுக்கும் ஆட்சியிலிருந்த சிங்கள, பௌத்த ம…

  15. பதினாறாவது மே பதினெட்டும் உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன். adminMay 18, 2025 ஆரியகுளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் போனது உண்மை. புதுக்குடியிருப்பிலும் கிளிநொச்சியிலும் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதியினர் போனது உண்மை. புதுக்குடியிருப்பில் ஆயிரக்கணக்கில் போய் படைத்தரப்பு வழங்கிய குடிபானங்களையும் அன்னதானத்தையும் வாங்கியதும் உண்மை. அதேசமயம் கடந்த வாரம் தாயகம் முழுவதிலும் ஆங்காங்கே பரவலாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி கொடுக்கப்படுவதும் உண்மை. மக்கள் பரவலாக அதை வாங்கி அருந்துவதும் உண்மை. இன்று முள்ளிவாய்க்காலில் பெருந்திரளாக மக்கள் திரள்வார்கள் என்பதும் உண்மை. ஒரு தேசம் என்பது அப்படித்தான…

  16. 16ஆவது மே 18இல் நீதிக்கான போராட்டம் – நிலாந்தன். நீதி கிடைக்காத 16ஆவது ஆண்டு.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலை நீதிக்கான போராட்டம் என்று வர்ணிக்கின்றார்கள். ஆனால் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டமானது தொடர்ச்சியானதாக, செறிவானதாக பெருந் திரள் மயப்பட்டதாக இல்லை.அவை அவ்வப்போது தொடர்ச்சியாக நிகழும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் போராட்டங்களாகத்தான் காணப்படுகின்றன. கடந்த 16 ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டும்தான். அவர்களுடைய போராட்டம்தான் ஒப்பீட்டளவில் தொடர்ச்சியானது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்க்கத்தக்க விதத்தில் தென்னிலங்கையில் தாக்கத்தை ஏற்…

    • 1 reply
    • 224 views
  17. கார்ணியின் மந்திரிசபைசிவதாசன்கனடிய மத்திய அரசைக் கைப்பற்றி லிபரல் கட்சியின் தலைவர் கார்ணி மந்திரிசபையை இவ்வாரம் அறிவித்திருக்கிறார். அதில் இரு தமிழர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. துர்ப்பாக்கியமாக அமைச்சர் கெரி ஆனந்தசங்கரியுடன் நான் எடுத்துக்கொண்ட படம் எதுவும் கைவசம் இல்லாமையால் அதை இக்கட்டுரையில் இணைத்துக்கொள்ள முடியவில்லை. தேர்தலுக்குப் பின் சற்றே ஒதுங்கியிருந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பொய்லியேவ் கார்ணியின் மந்திரிசபை அறிவிக்கப்பட்டதும் மீண்டும் முனக ஆரம்பித்திருப்பது பரிதாபமாகவிருக்கிறது. பாவம், பின்னாலிருந்து முதுகில் இடி விழுகிறது போல; ஏதாவது சொல்லியாகவேண்டும் என்பதற்காகச் சொல்கிறார் போலிருக்கிறது. “இந்த மந்திரிசபையில் பலர் ட்றூடோவின் அ…

    • 0 replies
    • 269 views
  18. வடக்கு- கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் முடிவு கூறும் செய்தியும் தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலமும் தமிழ் மக்களின் இன்றைய நிலை – ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரல் – எமது பலம் – சர்வதேச சக்திகளின் நிலைப்பாடும் – தீர்வுநோக்கி முன்னேறவுள்ள சாத்தியப்பாடுகள் – போன்றவற்றை மனம்விட்டு வெளிப்படையாகப் பேசி கூட்டு முடிவை எடுக்க தமிழரசும் காங்கிரசும் தயாராக வேண்டும். எனவே புதிய கூட்டிணைவு என்பது வெறுமனே சபைகளை கைப்பற்றுவதோடு நிற்க முடியாது. மாறாக தீர்வு நோக்கி ஒன்றுபட்டு செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற வேண்டும் – தொடர வேண்டும். கலாநிதி க.சர்வேஸ்வரன் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலானது வெறுமனே உள்ளூராட்சிக்கான வினைத்திறன் மிக்க நிர்வாகத்தை நடத்தவல்ல வேட்பாளர்களைத் தெரி…

  19. எப்படி போர் நிறுத்தம் ஏற்பட்டது? -ச.அருணாசலம் அமெரிக்காவின் நிர்பந்தமா? பாகிஸ்தான் பின்னணியில் சீனா இருந்ததால் ஏற்பட்ட தயக்கமா? நமது ரபேல் ராணுவ விமானங்களை சீனாவின் PL-15E ஐ பயன்படுத்தி பாகிஸ்தான் முறியடித்ததால், சீனாவின் ஆயுத வியாபாரத்திற்கு சர்வதேச மவுசு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அமெரிக்காவின் பதட்டமா..? ஒரு அலசல்; பெஹல்காம் படுகொலையைத்தொடர்ந்து, இந்திய அரசு , பாகிஸ்த்தான் நாட்டில் ஒன்பது இடங்களை குறி வைத்து தாக்கி தாக்குதலை (போரை) தொடங்கி வைத்தது. அண்டை நாட்டு மீதான இத்தாக்குதலை இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என அழைத்தாலும், இது ஒரு மட்டுபடுத்தப்பட்ட, பொறுப்பான, அளவான, பிரச்சினையை விரிவாக்காத தாக்குதல் என இந்திய அரசு வருணித்தது! இத்தாக்குதல் பாகிஸ்த்தான் இராணுவத்தின் மீ…

  20. “சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் ; காலம்” ? - நிலாந்தன் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் கிடைத்த பின் முல்லைத்தீவில் இருந்து ஒரு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்… “முல்லைத்தீவு ரவிகரனோடு, கிளிநொச்சி சிறீயரோடு” என்று. அதற்கு கிளிநொச்சியைச் சேர்ந்தவரும் முன்பு பிரதேச சபை உறுப்பினராக இருந்தவரும், இப்பொழுது சுமந்திரனின் தீவிர விசுவாசியுமான ஒருவர் பதில் எழுதினார் “யாழ்ப்பாணம் சுமந்திரனோடு” என்று. இது ஒரு சமூக வலைத்தளக் காட்சி. இரண்டாவது காட்சி, தேர்தல் வெற்றிகள் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், “தமிழரசுக் கட்சி பலவீனமடையவில்லை. தமிழ்த் தேசியக் கூடடமைப்பாக சேர்ந்து இருந்ததைவிட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கிறது” என்று கூறிய…

    • 1 reply
    • 317 views
  21. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன். எதிர்பாக்கப்பட்டதைப் போலவே உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கிடையே இணங்கிச் செயற்படத் தயாராக இருந்தால் சபைகளை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும். எனவே தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் கட்சிகள் பின்வரும் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறுவது போல, உள்ளூராட்சி சபைகள் உள்ளூர் நிலைமைகளுக்கானவை என்ற போதிலும் அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் வழியில் அடிப்படையானவை. கீழிருந்து மேல் நோக்கித்தான் தேசத்தைக் கட்டியெழுப்பலாம். அந்த அ…

  22. நீலமானின் மாயப்பொதிகள் நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதியானது (அரசமைப்பு திருத்த வரைபுகள்) பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000 முறையே), பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப, கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அஃது முதன் முதலில் ஓகஸ்ட் 3 1995 அன்று சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் முன்மொழியப்பட்டது. (முன்மொழிவு) எவ்வாறெயினும் இது தனது மெய்யான முன்மொழியப்பட்ட மிளிர்வில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான …

  23. Published By: DIGITAL DESK 2 08 MAY, 2025 | 10:04 AM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கை தமிழ் அரசியல் களத்தில் தலைமைத்துவம் தொடர்பான அக்கறைகள் அண்மைக்காலமாக உத்வேகம் பெறும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் யார் எதிர்கால தமிழ் அரசியல் தலைவராக மேன்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார் என்பது உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு விவாதத்துக்குரிய ஒரு விடயமாக இருக்கும். வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு கட்டங்களில் செல்வாக்குமிக்க தலைவர்கள் வெளிக்கிளம்பி ஆதிக்கம் செய்த தோற்றப்பாடு இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றின் எடுத்துக்காட்டான ஒரு அம்சமாகும். பொன்னம்பலம் சகோதரர்கள் இராமநாதனும் அருணாச்சலமும், அருணாச்சலம் மகாதேவா , ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி…

  24. மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது - நிலாந்தன் உப்புக்குத் தட்டுப்பாடு. ஒரு கிலோ உப்பு பக்கெட் 300ரூபாய்க்கு மேல் போகிறது. இத்தனைக்கும் இலங்கை ஒரு தீவு. சுத்திவர உப்புக்கடல். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரச்சாரத்திற்கு அள்ளிக் கொட்டுவதற்கு தாராளமாக நிதி இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரமாண்டமான கூட்டங்களை சிறீதரன் ஒருவரைத் தவிர தேசிய மக்கள் சக்திதான் ஒழுங்குபடுத்துகின்றது. கிராமங்களிலும் நகரங்களிலும் அவர்கள் தமது இருப்பை காட்சிப்படுத்தும் விதத்தில் தமிழ்க் கட்சிகளிடம் இல்லாத ஓர் உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். பூட்டிக் கிடக்கும் ஒரு கடை அல்லது ஒரு மண்டபம் அல்லது ஒரு முழிப்பான இடம் போன்றவற்றில் கவிழ்த்து விடப்பட்ட பானா வடியில…

    • 1 reply
    • 418 views
  25. கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம் சிவதாசன்எதிர்பார்த்தபடியே லிபரல் கட்சி வெற்றீவாகை சூடியிருக்கிறது. அறுதிப் பெரும்பான்மை இல்லாவிடினும் இவ்வெற்றி மகத்தானது. நான்காவது தடவையாக அது ஆட்சியமைக்கப்போகிறது. இத் தேர்தலில் பல திருப்பங்கள், அதிர்ச்சிகள் எதிர்பாராதவாறு கிடைத்திருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் தலைவர் பியர் பொய்லியேவ் , கடந்த 20 வருடங்களாகக் கட்டிக் காத்து வந்த தொகுதியை இழந்திருக்கிறார். அது போலவே என்.டி.பி. கட்சித் தலைவர் ஜக்மீத் சிங்கும் தனது தொகுதியை இழந்திருக்கிறார். ட்றம்ப் என்ற புயல் வந்து இவர்களை ஒதுக்கியிருக்கிறது. லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்ணி முன் பின் எதுவித அரசியல் அனுபவமுமில்லாதவர். கனடிய மக்கள் அவரிடம் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத…

      • Thanks
      • Like
    • 12 replies
    • 764 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.