அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ரிஷாட்டும் அரசாங்கமும் -எம்.எஸ்.எம். ஐயூப் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஸ் பதியுதீன், கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். அது, தென்னிலங்கை அரசியலில், பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே, ரியாஸ் பதியுதீன் கைது செய்யப்பட்டார். “குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களுடன், அவர் நடத்திய தொலைபேசி உரையாடல்களைப் பற்றிய உறுதி செய்யப்பட்ட தகவல்கள் பொலிஸாரிடம் இருக்கின்றன” என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர…
-
- 1 reply
- 500 views
-
-
இலங்கையுடனான இந்திய உறவும், இந்தியாவில் ஈழத்தமிழ் அகதிகளும்… இலங்கையில் தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பான வடக்கு- கிழக்கில் அதிகாரபூர்வமாக ஆயுதப்போர் முடிந்து ஒரு தசாப்தத்தை கடந்து விட்டது. இப்போரின் முடிவு அருகாமையில் இருக்கும் இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கையில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைக்கவில்லை. தமிழகத்தில் அமைந்திருக்கும் நூற்றுக்கும் அதிகமான அகதி முகாம்களில் வசித்து வரும் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே நாடு திரும்பியிருக்கின்றனர். அகதி முகாம்களில் வசிக்கும் தமிழ் அகதிகளின் முன் இருப்பது இரண்டு வாய்ப்புகள் மட்டுமே. அகதியாக இ…
-
- 2 replies
- 748 views
-
-
வடக்குகிழக்கை இணைப்பது திராவிடதேசமொன்றிற்கு வழிவகுக்கும் என்பதை இந்தியா உணரவேண்டும்- சரத்வீரசேகர 13வது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருவதற்கு இந்தியாவிற்கு எந்ததார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கைநாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் 13 வது திருத்தம் இந்திய இலங்கை உடன்படிக்கையின் வெளிப்பாடு என அர்த்தப்படுத்தப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார். இந்தியா தனது கடப்பாடுகளை நிறைவேற்றாததன் காரணமாகஉடன்படிக்கை குறித்த இந்தியாவின் பங்களிப்பு பற்றி கேள்விகள் உள்ளன எனவும் அவர்தெரிவித்துள்ளார் 13வது திருத்தம் இலங்கையின் உள்விவகாரம் என்பதை புறக்கணித்துவி;ட்டு இந்தியபிரதமர் எங்கள் பிரதமரிடம் …
-
- 8 replies
- 1.4k views
-
-
13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்’ -நீதியரசர் விக்னேஸ்வரன் இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ‘இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்’ என்ற தலைப்பில் இந்தியாவின் சிந்தனை மையம் ஒன்று இன்று ஒழுங்கு செய்த இணையம் மூலமான கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்…
-
- 6 replies
- 1.1k views
-
-
பழங்கள்ளின் போதைதர ‘பாட்டனார்’ இருக்கின்றார் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் பங்குபற்றிய, நிகர்நிலை கலந்துரையாடல் ஒன்று, சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. ‘தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்’ என்ற அமைப்பு நடத்திய இந்தக் கலந்துரையாடல், ‘இன்றைய பூகோள அரசியல் இயங்குநிலையில் ஈழத்தமிழரின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் எரிக் சொல்ஹெய்ம், வி. உருத்திரகுமாரன், ஊடகவியலாளர் ஐயநாதன், பேராசிரியர் கிருஷ்ணா, நெறியாளராக பூகோள அரசியல் ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் பங்குகொண்டனர். இந்தக் கலந்துரையாடலை ‘யூடியூப்’பில் பார்வையிட முடியும். போர் முடிந்து, 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த ஒரு தசாப்த காலத…
-
- 0 replies
- 671 views
-
-
சீனா: பொருளாதார அரசியலும் மேலாதிக்க விஸ்தரிப்பும்! பகுதி 1 கொரோனா நெருக்கடி என்பது இந்த நூற்றாண்டின் முதலாவது உலகளாவிய பேரிடர். இதற்கு முந்தைய உலகளாவிய நெருக்கடிகள் என இரண்டு உலகப்போர்களும் கணிப்பிடப்படக்கூடியவை. இன்னொரு வகையில் சொல்வதானால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குள் மூன்று நெருக்கடிகள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உயிரழிவுகள், பொருளாதார வீழ்ச்சி சார்ந்தவற்றைப் பொதுவான பாதிப்புகளாகச் சுட்டமுடியும். தவிர உலகமயமாக்கலின் தன்மைகள், உலக அமைதிக்குப் பங்கம், நாடுகளுக்கிடையிலான உறவுகளில் இந்நெருக்கடிகள் விளைவுகளை ஏற்படுத்தின. புதிய இயல்பு அல்லது புதிய வழமை கொரோனா நெருக்கடியின் விளைவுகள் உலகளாவிய மாற்றத்திற்குரிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.…
-
- 0 replies
- 453 views
-
-
-
பேச்சாளர் பதவியில் பிடிவாதம் ததேகூ இருந்து வெளியேற்றவா? அல்லது வெளியேறவா?
-
- 0 replies
- 480 views
-
-
அரசியல் அறம் கற்க வேண்டிய தமிழ்க் கட்சிகள் -புருஜோத்தமன் தங்கமயில் இன விடுதலை, தேச விடுதலை, அரசியல் உரிமை என்று மேடைகளில் முழங்கினாலும், தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால் வெற்றிக்காகவும் பதவிக்காகவும், எவ்வளவு மட்டகரமான வேலைகளையும் செய்வதற்கு அரசியல்வாதிகள் தயங்குவதில்லை. சாதிய அணுகுமுறை, பிரதேசவாதம், மதவாதம் என்று தொடங்கி, சமூக மேம்பாட்டுக்கு ஒப்பில்லாத அனைத்துக் கட்டங்களையும் அவர்கள் துணைக்கு அழைப்பார்கள். கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும், அதற்குப் பின்னரான நாள்களிலும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, அசிங்கமான வழிகளில், இதைப் பதிவு செய்து வருகின்றது. பொதுத் தேர்தல் காலத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் சக வேட்பாளர…
-
- 0 replies
- 762 views
-
-
தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது -கொளத்தூர் மணி திராவிடர் விடுதலைக் கழக தலைவரும், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவருமான கொளத்தூர் மணி அவர்கள் எமது ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேகமான நேர்காணலை இங்கு தருகின்றோம். கேள்வி காந்தி தேசம், காந்தியை விட உறுதியுடன் போராடிய போராளிகளின் வேண்டுகோளை கண்டுகொள்ளாமல் போனது ஏன்? ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சூழ்ச்சிக்கு ராஜீவ் காந்தி பலியாகியிருந்தார் என்று தான் சொல்ல முடியும். ஒப்பரேஷன் பூமாலை என்ற உணவுப் பொட்டலங்களைப் போட்டது. மற்றும் மில்லரின் கரும்புலித் தாக்குதல் நடைபெற்றது. இவற்றிற்கிடையான காலப்பகுதியில் ஜே.ஆர். ராஜீவ் காந்தியை வசப்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல…
-
- 0 replies
- 728 views
-
-
சாத்வீகப் போராட்டம் பயங்கரவாதம் ஆகுமா? ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும். பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும் என்று சொல்வார்கள். தன்மைகளுக்கும், நிலைமைகளுக்கும் ஏற்ற வகையில் பிரச்சினைகளைக் கையாள்வதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் இந்த அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டியது அவசியம். அரசியலைப் பொறுத்தமட்டில் இந்த உத்தி மிகமிக முக்கியமானதாகும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் பல தசாப்தங்களாகத் தொடர்கின்றது. போராட்டங்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கின்றன. பேச்சுவார்த்தைகள் மூலமாக அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகள் தோற்றுப் போயிருக்கின்றன. முதலில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பலன் கிடைக்கவில்லை. சாத்வீகப் போராட…
-
- 0 replies
- 690 views
-
-
அறம் மறந்து சுமந்திரனின் ஊதுகுழலான ஊடக ஜாம்பவானுக்கு ஒரு திறந்த மடல்.! கால விசித்திரத்தில், எத்தனை மாற்றங்களும் உரையாடல்களும் நிகழத் தலைபட்டுள்ளனவோ, “ஓடமும் ஓர் நாள் வண்டியில் ஏறும்”, என்பார்கள். ஊடகத்துறையில் இந்தப் பழமொழி அடிக்கடி நிஜமாகிக்கொண்டே இருக்கின்றது. ஊடக ஜாம்பவானாக, தன் எழுத்து – பேச்சு ஆற்றலினால் அனைவரின் கவனிப்பைப் பெற்றிருந்த மூத்த ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன், இன்றைய காலத்தில் தன்னை மறந்து – ஊடக அறத்தை மறத்து சுமந்திரனின் ஊதுகுழலாக – அநியாயத்தின் எழுத்து வடிவாக மாறியிருப்பது காலத் துயரமே. அவருக்கே இந்தப் பகிரங்க மடல்…! வித்தியாதரன் அவர்களே…! ஒரு காலத்தில் வடக்கு, கிழக்கில் தன்னலமற்ற – நீதியின் பாதையில் பயணித்த – அறத்தலைமை, நிலை…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 837 views
-
-
‘நன்மை தரும் சர்வாதிகாரி’ எனும் மாயை அண்மைய ஆண்டுகளாக உலகளவில் ‘ஸ்தாபன எதிர்ப்பு’ (anti-establishment) மனநிலை, மக்களிடம் மேலோங்கி வருவதை, அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அது என்ன ‘ஸ்தாபன எதிர்ப்பு’? காலங்காலமாக அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும், ஆதிக்கம் செலுத்தி வரும் தரப்பே, இங்கு ‘ஸ்தாபனம்’ எனப்படுகிறது. இந்தத் தரப்பே, அரசியலில் உயரடுக்காகின்றனர். இந்த உயரடுக்குக்கு எதிரான அரசியல்தான், ‘ஸ்தாபன எதிர்ப்பு’ அரசியல் என்றாகிறது. இந்த ‘ஸ்தாபன எதிர்ப்பு’ அரசியல், “நாம் எதிர் அவர்கள்” என்ற பெருந்திரள்வாத பகட்டாரவாரம் மூலம், மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கப்படுகிறது. இதன் மூலதனம், இயல்பிலேயே மக்களுக்குள்ள ‘ஸ்தாபன அரசியல்’ மீதான அதிருப்தியாகும். “இவர்களே …
-
- 0 replies
- 472 views
-
-
ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் இலங்கை விவகாரத்தில் ஏமாற்றப்படப் போகின்றன; தமிழர் இயக்க இணைப்பாளர் நிஷா பீரிஸ் இலங்கை அரசாங்கம் எமக்கு ஒரு போதும் விடிவைத் தரப்போவதில்லை. ஐ.நா.வும், சர்வதேச சமூகமும் இலங்கை விடயத்தில் ஏமாற்றப்படப்போகின்றார்கள். இது வெறுமனே கால நீடிப்பு நாடகமாகத்தான் இருக்கின்றது. இதற்கு ஐ.நா. வை மட்டும் சாட முடியாது” எனக் கூறுகின்றார் தமிழர் இயக்கத்தின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கான இணைப்பாளர் நிஷா பீரஸ். ஜெனீவாவில் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் நாளை – புதன்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. இந்தப் பின்னணியில் தற்போதைய கூட்டத் தொடர் மற்றும், எதிர்வரும் மார்ச் மாதத்துக்கான உபாயங்கள் குறித்து ‘தினக்க…
-
- 0 replies
- 432 views
-
-
எம்.சி.சி உடன்படிக்கை விடயத்தில் அரசாங்கமும் மௌனம் காப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது: எல்லே குணவங்ஸ தேரர் எங்களுடைய நாடு சர்வதேச குறிப்பாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டுள்ளது. எம்.சி.சி உடன்படிக்கை போன்றன ஆபத்தானதென்ற போதிலும், இந்த விடயத்தில் இந்த அரசாங்கமும் மௌனம் காப்பது எங்களுக்கு பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது” என தெரிவித்துள்ளார் எல்லே குணவங்ஸ தேரர். தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஆவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது நேர்காணலின் விபரம் வருமாறு; கேள்வி – புதிய அரசாங்கம் பயணிக்கும் பாதை உங்களுக்கு திருப்தி அளிக்கின்றதா? பதில் – கொவிட் – 19 தொற்று காரணமாக அரசாங்கம் தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் சிறிய சந்தர்ப்…
-
- 3 replies
- 627 views
-
-
திலீபன் கொலையாளி என்றால் டக்ளஸ் தேவானந்தா யார்..? எம்.கே.சிவாஜிலிங்கம் செயலாளர் நாயகம் த.தே.கட்சி வை.தவநாதன் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்
-
- 0 replies
- 716 views
-
-
-
மகிந்தவின் நினைவு மறதியும் சுமந்திரனின் நினைவு ஏந்தலும்! – பனங்காட்டான் October 4, 2020 பனங்காட்டான் இந்தியப் பிரதமர் மோடியுடன் உரையாடியபோது அவர் தெரிவித்த 13வது அரசியல் திருத்த அமுல் பற்றி தமக்கு நினைவில்லையென்று கூறி தப்பப்பார்த்த மகிந்தவையிட்டு ஊடகவியலாளர்கள் அனுதாபப்பட்டனர். திலீபனின் தியாகத்துக்கான நினைவேந்தலை முழுமையாக பகிஷ்கரித்த சுமந்திரன், இதனை நடத்த வேண்டுமென்ற அதிகளவு உணர்வு தமிழ் மக்களிடம் தற்போது இல்லையென்று கூறி அவர்களின் கடுமையான கோபத்துக்கு ஆளாகியுள்ளார். இதனால் தமிழர் தேசத்தில் ‘சுமந்திரன் நீக்க அரசியல்’ மேலோங்கி வருகிறது. ————————————- இந்த வாரமென்பது இலங்கை அரசியலைப் பொறுத்தளவில் பரந்துபட்ட பல விடயங்களைக் கொண்டதாக அமைந்திருந…
-
- 0 replies
- 447 views
-
-
இந்தியாவின் எல்லைக்கோடும் தமிழர் தரப்பு செய்ய வேண்டியதும்? - யதீந்திரா அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஐபக்சவிற்கும் இடையில் கானொளி வாயிலாக, உத்தியோகபூர்வமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இந்திய பிரதமர் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர். மோடியின் தலைமையிலான பி.ஜே.பி அரசாங்கம், அயல்நாடுகள் தொடர்பில் கைக்கொண்டு வரும் சாகர் SAGAR doctrine (Security and Growth for All in the Region) கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கைக்கு முன்னுரிமைளிக்கும் அறிவிப்பை இந்த சந்திப்பின் போது வெளியிட்டிருந்தது. இதனை சரியாக விளங…
-
- 0 replies
- 353 views
-
-
வேண்டும் புதிய பாதை! முற்றிலும் புதிய அணுகுமுறை: ஏ.ஜி.யோகராஜா சயந்தன் என்னிடம் இப்படிக் கேட்டிருந்தார்: இலங்கையின் இன்றைய அரசியல் – குறிப்பாக சாதிய மற்றும் தமிழ்த் தேசிய – பிரச்சனைகள் குறித்த உங்கள் கருத்தியலை, (அதாவது மார்க்ஸியமா, அல்லது பெரியார் மற்றும் அம்பேத்கார் வழியிலா அல்லது வேறு எந்த அடிப்படையில்) கட்டுரையாக எழுதித்தரும்படி. இவ் வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருந்த “எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்! சமூக சமத்துவம்: அடுத்தகட்ட நகர்வு குறித்த முன்வரைவு” எனும் எனது நூலை வாசித்ததன் பிரகாரம் இம் முடிவுக்கு வந்திருப்பார் என்பது எனது எண்ணம். சோவித் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் மார்க்ஸிய உலகங்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன என்பது உலகள…
-
- 0 replies
- 325 views
-
-
-
- 9 replies
- 1.6k views
-
-
தமிழ்க் கட்சிகளின் கூட்டு நிலைக்குமா? நிலாந்தன். October 3, 2020 கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டார்கள். ஒரு கட்டத்தில் 5 கட்சிகள் கூட்டாக ஒரு பொது ஆவணத்தில் கையெழுத்திட்டன. ஐந்து கட்சிகளும் கூட்டாக கையொப்பமிட்ட பின் அதில் பங்குபற்றிய ரெலோ அமைப்பின் பிரதானி சிறீகாந்தா பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி பின்வரும் தொனிப்படக் கூறினார் முன்பு விடுதலைப் புலிகள் இயக்கம் துப்பாக்கிகள்; பீரங்கிகள் படைபலத்தை வைத்துக் கொண்டு தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்தது. ஆனால் இன்றைக்கு நீங்களோ துப்பாக்கிகளோ பீரங்கிகளோ படைபலமோ எவையும் இன்றி எங்களை ஒருங்கிணைத்திருக்கிறீர்கள்.…
-
- 0 replies
- 446 views
-
-
வருடம் 365நாளும் இனவழிப்பை சந்தித்த இனம் நாங்கள், சர்வதேச சட்டங்களால் நாம் பலவற்றை சாதிக்க முடியும்; சட்டத்தரணி காண்டீபன்
-
- 1 reply
- 641 views
-
-
தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா? புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஒக்டோபர் 01 தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஹர்த்தாலையும் நடத்தி முடித்திருக்கின்றன. தமிழ்த் தேசிய கட்சிகள், வாக்கு அரசியல் ரீதியாகத் தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டாலும், நினைவேந்தல் தடை போன்றதொரு முக்கியமான பிரச்சினையில், ஒன்றுமையாக ஓரணியில் திரண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஆனால், ஓரணியில் திரள்வதும் அதன் ஊடாகச் சர்வதேசத்துக்குச் செய்தி சொல்வதும் மாத்திரம், அரசியல் வெற்றிகளைப் பெற்றுத் தந்துவிடுமா என்கிற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் எழுச்…
-
- 2 replies
- 1.2k views
-