அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வந்த, 34/1, 40/1 தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்து விட்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவை அறிவித்திருந்தார். அதற்குப் பின்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதத்தின் போதும், அரசாங்கத்தின் முடிவை அவர் நியாயப்படுத்தியிருந்தார். ஜெனீவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையில் இருந்து, விலகும் அரசாங்கத்தின் முடிவு குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதுபோலவே பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட இணை…
-
- 2 replies
- 679 views
-
-
ஒளித்து ஓடும் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் தேவை என்.கே. அஷோக்பரன் தமிழர்களும் அடுத்த தேர்தலும் [பகுதி - 03] எதிர்பார்த்தது போலவே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டிருக்கிறது. வேட்பாளர் தெரிவு, வேட்புமனுத் தாக்கல் என்பவற்றுக்குக் கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், பிரசார நடவடிக்கைகளும் ஆரம்பமாகத் தொடங்கி இருக்கின்றன. தமிழர்களைப் பொறுத்தவரையில், வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் கூட்டணியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்வரும் தேர்தல் முக்கியமானதொன்றாக அமையவிருக்கிறது. தமிழ் ம…
-
- 0 replies
- 628 views
-
-
முக்கியக் காலமொன்றில் இனியும் ‘உக்கிய’ முடிவுதானா? -விரான்ஸ்கி அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பொருட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் நாடளாவிய ரீதியில் தேர்தல் நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கி இருக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவருவதாக, மொத்தச் சனமும் ‘தொடைநடுங்கி’க் கொண்டிருக்கும் இந்தவேளையில், தேர்தல் வைரஸ்தான் இலங்கையை வீரியமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தேர்தலின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுதல், கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது வரையிலான பூர்வாங்க நடவடிக்கைகளில் எல்லாக் கட்சிகளும் மும்முரமாகி இருக்கின்றன. பெரும்பான்மையினக் கட்சிகள் அனைத்தும், தத்தம…
-
- 0 replies
- 915 views
-
-
அடுத்த தேர்தலில் தமிழர்கள் என்.கே. அஷோக்பரன் / 2020 பெப்ரவரி 24 இன்னொரு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், நிறைவுக்கு வருகின்றது என்று எதிர்பார்க்கலாம். ஆளும் அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைத் தனது விருப்பின்படி கலைக்கக்கூடிய அதிகாரம், நாடாளுமன்றத்தின் பதவிகாலத்தில், நான்கரை வருடங்கள் பூர்த்தியானதன் பின்னரே வரும் என்ற அடிப்படையில், மார்ச் மாதத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். அதன் மூலம், பொதுத் தேர்தலைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை, முடிந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதே, ராஜபக்ஷக்களின் நிச்சயமான திட்டம் என்பதில் ஐயமேது…
-
- 3 replies
- 681 views
-
-
தேர்தல் காய்ச்சல் மொஹமட் பாதுஷா மீண்டும், தேர்தல் காய்ச்சல் தொற்றியிருக்கின்றது. இலங்கை அரசியலில், பெப்ரவரி மாதம் இருந்த நிலைமைகள் சட்டென மாறி, ஒரு புதுவித பரபரப்புமிக்க களச்சூழல், உருவாகி இருக்கின்றது. அரசமைப்பின்படி, தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தை மார்ச் இரண்டாம் திகதி நள்ளிரவு முதல் கலைத்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளியிட்டமையால், அரசியலில் இந்தப் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், ஒரு நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டு, நான்கரை வருடங்களுக்கு முன்னதாக, அதைக் கலைக்க முடியாது என்ற நிபந்தனை காணப்படுகின்றது. …
-
- 2 replies
- 522 views
-
-
ஈழக் குரல் ஜெனீவாவிற்கு கேட்பதே இல்லையா.? காணாமல் ஆக்கப்பட்ட பேரப் பிள்ளைக்காக போராடி வந்த தாயொருவர், தன் தேடல் முடிவுறாத தருணத்தில் காலமானார் என்கின்ற துயரச் செய்தி ஒரு புறம். முன்னாள் போராளி ஒருவர், ஆறாக்காயங்களுடன் அவதிப்பட்டு மரணித்தார் என்கிற அதிர்ச்சி செய்தி இன்னொரு புறமாய். போர் முடிந்து பதினொரு ஆண்டுகள் ஆகின்ற தருணங்கள் இவை. 2009 கொடும் போர் நடந்து கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் இவை. ஏப்ரல், மே என ஆண்டின் அரைவாசி வரையில் இனப்படுகொலையின் காலம்தான். இன்னும் ஈழ நிலத்தில் உயிர்கள் வீழ்ந்து கொண்டே இருக்கின்றது. உண்மையில் இந்தக் குரல்கள் எவையுமே ஜெனீவாவிற்கு கேட்பதே இல்லையா? செல்வம் சிவபாக்கியம் என்ற தாயின் மரணமும் மௌ…
-
- 0 replies
- 406 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஒரு பலமான வெளியுறவுக் கட்டமைப்புத் தேவை – நிலாந்தன்.. March 7, 2020 Dan Saelinger illustration for Foreign Policy ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசுகளின் அரங்கம். ஆனால் இந்த உலகம் அரசுகளால் மட்டும் ஆனதல்ல. அரசுகளுக்கும் வெளியே மிகப்பெரிய பொதுசனத் தளம் ஒன்று உண்டு. அதற்குள் மத நிறுவனங்கள் ஊடகங்கள் படைப்பாளிகள் துருத்திக்கொண்டு தெரியும் முக்கிய ஆளுமைகள் பொது நிறுவனங்கள் சிவில் நிறுவனங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் கருத்துருவாக்கிகள் ஆய்வு நிறுவனங்கள் கொள்கை ஆய்வு நிறுவனங்கள் போன்ற அனைத்தும் இந்தப் பெரும்பரப்பிற்குள் அடங்கும்.அரசுகளை தெரிந்தெடுப்பதற்கு வேண்டிய பொதுசன அபிப்பிராயத்தை இப்பொது சனப் பரப்ப்பே உருவாக்குகின்றது. …
-
- 0 replies
- 385 views
-
-
தென்னிலங்கையின் தேர்தலுக்கான தயார்படுத்தல்களும், தமிழ்த் தலைமைகளின் தயார் நிலையும்.
-
- 0 replies
- 292 views
-
-
இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் ஜக்கிய அமெரிக்கா, இலங்கையின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் நுழைய முடியாதளவிற்கு பயணத்தடையை விதித்திருந்தது. இந்தத் தடை அறிவிக்கப்பட்டிருக்கும் சம வேளையிலேயே ஜ.நா மனித உரிமைகள் பேரiயின் கூட்டத் தொடரும் ஆரம்பித்திருந்தது. மேலோட்டமாக பார்த்தால் அமெரிக்காவின் பயணத் தடைக்கும் ஜ.நா மனித உரிமைகள் பேரவைக்கும் தொடர்புள்ளதான ஒரு தோற்றம் தெரியக் கூடும். இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் பேசுபவர்களும் இவ்வாறான தொணியில் பேசுவதையும் ஆங்காங்கே காண முடிகின்றது. ஆனால் அமெரிக்காவின் பயணத் தடை அறிவிப்பிற்கும், ஜ.நா மனித உரிமைகள் பேரவ…
-
- 0 replies
- 329 views
-
-
வடக்கில் தலைகாட்டும் மதவாதம் கே. சஞ்சயன் / 2020 மார்ச் 06 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ் அரசியல் பரப்பும் சூடுபிடித்திருக்கிறது. வடக்கில் மாற்று அணி, மாற்றுத் தலைமை என்ற கோசத்தை முன்னிறுத்தியும், கிழக்கில் தமிழர் ஒற்றுமை என்ற கோசத்தைப் பயன்படுத்தியும், புதிய அரசியல் அணிகள் தோற்றம் பெற்று, இம்முறை தேர்தல் களத்தில் தீவிரமான உள்ளகப் போட்டியை உருவாக்கியிருக்கின்றது. வடக்கில், பேரினவாதக் கட்சிகள், அவற்றின் செல்லப்பிள்ளைகளாக இருக்கின்ற தமிழ்க் கட்சிகள், ஆசனங்களைக் குறிவைத்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் முரண்பாடு, அவற்றுக்குச் சாதகமாக மாறும் சூழல் உள்ளது. கிழக்கில் தமிழ்த் தரப்…
-
- 8 replies
- 984 views
-
-
ராஜபக்ஷக்களைப் பலப்படுத்தும் ரணில்? புருஜோத்தமன் தங்கமயில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அணி தவிர்ந்து, ஏனைய அனைத்துக் கட்சிகளும் கூட்டணிகள் முதற்கொண்டு, வேட்பாளர்கள் வரையில் இறுதி செய்துவிட்டு, பிரசாரப் பயணத்தைத் தொடங்கிவிட்டன. ஆனால், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான பிணக்கு, இன்னமும் முடிந்தபாடில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது சார்ந்து எழுந்த சர்ச்சைகள், பல மாதங்…
-
- 1 reply
- 590 views
-
-
’100 நாள்களில் திருப்தி இல்லை’ ஜனாதிபதியாகப் பதவியேற்று நூறு நாள்களைக் கடந்துள்ளபோதிலும், தன்னுடைய தகுதிக்கேற்ற விதத்தில் நாட்டு மக்களுக்கு நூறு சதவீதம் பணியாற்றியதாகத் தன்னால் திருப்திகொள்ள முடியவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். காணாமல் போனவர்கள், இராணுவ பிரசன்னம், ஜெனீவா தீர்மானம், அரசியல் கைதிகள், பட்டதாரிகள் விவகாரம், 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்றையதினம் பதிலளித்தார். ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மதியம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஜனாதிபதி தெரிவித்தார். மக்களின் ஆணையையேற்றுப் பதவியில் இருக்கின்றபோதில…
-
- 0 replies
- 520 views
-
-
பி.கே. பாலச்சந்திரன் கொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா) 2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இலங்கையின் பழமை வாய்ந்த பிரதான கட்சிகள் இரண்டும் உண்மையில் மறைந்து போகக்கூடிய சாத்தியம் இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி 1946 ஆம் ஆண்டில் டொன் ஸ்டீபன் சேனாநாயக்காவினாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1951 ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்காவினாலும் தாபிக்கப்பட்டவை. இவற்றில் சுதந்திர கட்சி ஏற்கனவே பயனற்றதாகப் போய்விட்டது. 2019 நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற அமோக வெற்றியை அடுத்து சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையிலான புதிய பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு சென…
-
- 0 replies
- 409 views
-
-
தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நிகழ்த்திய உரையின் முக்கியத்துவத்தை கவனிக்கத் தவறக்கூடாது. 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30-1 க்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகும் பிரச்சினை பெரும் கவனத்தை ஈர்த்ததன் பின்னணியில் அவரது உரைக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. நாட்டில் நல்லிணக்கத்துக்கும் நீதிக்குமான செயன்முறையொன்றை வகுத்த அந்த தீர்மானத்திற்கு அன்றைய அரசாங்கம் (சர்வதேச சமூகத்திற்கு நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் முகமாகவே) இணை அனுசரணையை வழங்கியது. அதற்கு முன்னரான 5 வருடங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பல…
-
- 0 replies
- 333 views
-
-
வீட்டு முற்றத்தில் பிணமெரிக்கும் சாதித் திமிர் நூற்றுக்கணக்கான பொலிஸார், ஆயுதந்தரித்த இராணுவத்தினர், சாதித்திமிர் பிடித்த ஒரு கூட்டம், ஒரு பிணத்துடன் ஒருபக்கம். இழப்பதற்கு எதுவுமற்ற சாதாரண மக்கள், கூலி உழைப்பாளர்கள், பெண்கள் மறுபக்கம். இவை கடந்த வாரம் இலங்கையின் வடபுலத்தில் ஒரு கிராமத்தில் அரங்கேறிய காட்சி. புத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தில் இன்னொருமுறை மக்களுக்கு வாழ்விடங்களுக்கு நடுவே பிணத்தை எரித்தே தீருவது என்று சிலர் முடிவெடுத்து, கடந்த வாரம் மேற்கொண்ட முயற்சிகள் ஊர்மக்களின் தளராத தீரமான போராட்டத்தின் விளைவால் தடுக்கப்பட்டுள்ளத…
-
- 12 replies
- 1.1k views
-
-
ஈராக்கில் இருந்து அமெரிக்கா வெளியேறல் - ஜனகன் முத்துக்குமார் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இராணுவத் தளங்களை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. அது இத்தாலி, ஜப்பான், ஹொண்டுரஸ், பேர்கினா பாஸோ, ஈராக், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் தளங்களை அமைத்துள்ளது. ஐக்கிய அமெரிக்க ஆர்வத்தையும் பிராந்திய ஸ்திரத்தன்மையையும் இராணுவ இருப்பு பாதுகாக்கிறது. ஆயினும்கூட, குறித்த நிலைமையைத் தக்கவைக்க ஐக்கிய அமெரிக்கா பல தடைகளை எதிர்கொள்கிறது. ஈராக்கில், எதிர்ப்பாளர்களுக்கு எதிரான உள் அமைதியின்மை மற்றும் வன்முறை மோதல்கள் தொடர்கின்றன. அந்நா…
-
- 1 reply
- 671 views
-
-
ஜெனீவா எதிர் கொழும்பு: மீண்டும் ஆரம்பித்த மோதல் எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையுடன் மீண்டும் மோத ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசாங்கமாக இருந்தாலும் அது, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவின் அரசாங்கம் என்பதாலேயே, இந்த நிலைமை உருவாகியிருக்கிறது. கடந்த வருடம், இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பான ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், அந்த இணை அனுசரணையை இம்முறை வாபஸ் பெற்றுக் கொண்டது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 2012, 2013, 2014 ஆகிய …
-
- 0 replies
- 440 views
-
-
அமெரிக்க - தலிபான் சமாதான உடன்படிக்கை: ஆப்கானில் அமைதி? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மாதானம் ஏன் வருகிறது, யாருக்காக வருகிறது என்பது தெரியமுதலே சமாதான உடன்படிக்கைகள் கையொப்பமிடப்படுகின்றன. அதில் மக்கள் பங்காளிகளாவதும் இல்லை; அவர்கள் நலன்கள் பிரதிபலிக்கப்படுவதும் இல்லை. ஒரு யுத்தக் களத்தில் சமாதான உடன்படிக்கை, அமைதி, ஆரவாரம், பரிசுகள் என எதிர்பார்ப்புகளோடு விடிகிறது ஆப்கானியப் பொழுதுகள். கடந்தவாரம் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டது. ஆப்கானுக்கு அமைதி திரும்புமா என்பதே எல்லோரினதும் கேள்வியாகும். ஆப்கானின் வரலாறு, பிராந்திய நலன்களாலும் பேராசைகளாலும் ஆதிக்க…
-
- 0 replies
- 288 views
-
-
தேர்தல் முடியும் வரை கிழக்கு மக்கள் காத்திருப்பார்கள்? -இலட்சுமணன் ஆளுமை மிக்கவர்கள் அரசியலுக்குள் வரவேண்டும் என்ற ஒரு கதையை பலரும் சொல்கிறார்கள். எதனை வைத்து அதனை மட்டிடுகிறார்கள் என்பதுதான் புரிந்துகொள்ள முடியாத விடயமாக இருக்கிறது. “எனது மகன் வைத்தியராக வரவேண்டும்”, “பொறியியலாளராக வரவேண்டும்”, “கணக்காளராக வரவேண்டும்”, “சட்டத்தரணியாக வரவேண்டும்” என்று கனவு, கற்பனை வைத்து கற்பிக்கின்ற பெற்றோர், எனது மகன் அரசியல்வாதியாக வர வேண்டுமென்று எண்ணம் கொள்வதே இல்லை. இது வெறும் வாசகம் அல்ல நாம் அறிந்த உண்மை. தேர்தல் வரும் போதெல்லாம், நாம் எல…
-
- 0 replies
- 281 views
-
-
ரணில் சஜித் சதுரங்கம். செய்தியும் எனது கருத்தும். . செய்தி. . <சற்றுமுன் செய்தி; News Just Now> . மங்கள, மலிக் ஆகியோர் சற்று முன் ரணிலை சந்தித்து "ஒன்றாய் முன்னோக்கி போவோம். பிளவு வேண்டாம். அது அரசுக்கு வாய்ப்பாக போய் விடும்" என்று கோரினர். அதற்கு ரணில், "அப்படியானால், கூட்டணியை கடாசிவிட்டு வாருங்கள். (பழையபடி முதலில் இருந்து ஆரம்பித்து...) ஐ.தே.கட்சியாக யானையில் போட்டியிடுவோம்" என்று கூறியுள்ளார். . எனது கருத்து. . தோழன் மனோ கணேசன் போன்ற யு.என்.பி நட்ப்புக் கட்சித் தலைவர்கள் சஜித்தைவிட தீவிரமான தீவிர சஜித் நிலைபாடு எடுத்திருக்கக்கூடாது. பிரச்சினையில் சமரசம்…
-
- 0 replies
- 591 views
-
-
தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல் முகம்மது தம்பி மரைக்கார் அநேகமாக இந்தப் பத்தியை, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலொன்றுக்கான தினத்தை அறிவிக்கும் வர்த்தமானி வெளியாகி இருக்கக்கூடும். இல்லா விட்டாலும், அடுத்து வரும் நாள்களில் அது நடக்கும். ‘ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் அணிதான், அடுத்து அமையும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றும்’ என்கிற பொதுவான நம்பிக்கையொன்று இருக்கத்தக்கதாக, ‘பொதுத்தேர்தல்’ எனும் போட்டியில் களமிறங்குவதற்கு, அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. “எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்…
-
- 0 replies
- 522 views
-
-
பழசைக் கிளறிக் கிளறி புதிதாக்குதல் காரை துர்க்கா / 2020 மார்ச் 03 உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த 1983ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலங்களில், புலம்பெயர்ந்து கனடா நோக்கிச் செல்லும் தமிழ் மக்களது எண்ணிக்கை, சடுதியாக அதிகரித்தது. இவ்வாறு, வேறு பல நாடுகளிலிருந்தும் கனடா நோக்கி, இடம்பெயர்ந்து மக்கள் சென்றார்கள். இவ்வாறு செல்லும் குடியேற்றவாசிகளை, அங்கு சிறையில் அடைத்து வைப்பார்கள். பிறநாட்டு அகதிகள் தங்கியிருந்த அறை, அவர்கள் வெளியே செல்லாதவாறு, பூட்டுகள் போட்டுப் பூட்டப்பட்டிருக்கும். ஆனால், இலங்கைத் தமிழ் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்குக் கதவே கிடையாது. இந்நிலையில், ஒரு நாள் சிறைச்சாலையைப் பார்வையிட, அந்நாட்டு அரச உயர் அதிகாரி வந்தார். கதவே இல்ல…
-
- 0 replies
- 831 views
-
-
கடிநாய்கள் மலிந்த ஊரில் காலை தூக்கியிருந்தால் வீரமோ? -விரான்ஸ்கி முப்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த போர் முடிவடைந்த ஸ்ரீலங்காவில், தற்போது ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, ஸ்ரீலங்காவில் பேசாத அரசியல்வாதிகளின் வாய்களே இல்லை. மேடைக்கு மேடை, சோடைபோகாத தங்களின் தங்கக்குரல் பேச்சுகளில், அரசியல்வாதிகள் எப்போதும் வாய்கூசாமல் பயன்படுத்தி வருகின்ற சொல் ‘ஜனநாயகம்’. போன ஆட்சிக்காலத்தில், இந்தச் சொல்லுக்குத் தங்கத்தால் பூண் பூட்டிவிட்டதைப்போல, கொஞ்சம் அதிகமாகவே மவுசு இருந்தது. ‘நல்லாட்சி’ என்ற பொற்கிண்ணத்தில், மிதக்கின்ற விலை உயர்ந்த நாணயம் போன்ற இந்த ஜனநாயகத்தைத் தாங்கள் பெற்றெடுத்திருப்பதாக மைத்திரியும் ரணிலும் எல்லோரையும் …
-
- 1 reply
- 824 views
-
-
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மாவை சேனாதிராசா சுமந்திரன் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” நிகழ்வில் கலாநிதி கணேசலிங்கம் முன்வைத்த ஆய்வுக்குரிய கருத்துக்களுக்கு நன்றி. “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” என்பது வடகிழக்கு தலைமையை ஏற்றுக்கொண்டு பயணிப்பதே என்பதை கொழும்பு தலைவர்கள் உணரவேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் விமர்சன நீதியாக வடகிழக்கு மக்கள் தெரிவுசெய்யும் தலைமையுடன் [ஏசி அனுசரணையாக செயல்படவேண்டும். . தமிழரசுக் கட்ச்சியும் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்ச்சி வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலை தருகிறது. கடந்த காலத்தில் தமிழர் தலைமை யாழ்பாணம் வன்னி, மற்றும் திருமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் கொழும…
-
- 1 reply
- 588 views
-
-
டில்லிக் கலவரம்: ஒரு ‘கறுப்பு அத்தியாயம்’ எம். காசிநாதன் / 2020 மார்ச் 02 வலிமைமிக்க இந்திய ஜனநாயகம், ‘டெல்லிக் கலவரம்’ போன்றவற்றைச் சமாளித்து, தன் பன்முகத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல்மிக்கது. என்றாலும், அதே ஜனநாயக ரீதியிலான தேர்தலில் வெற்றி பெற்று வந்தவர்கள், ‘வெறுப்புப் பேச்சுகளை’ விதைத்து, இப்படியொரு சூழலை உருவாக்கியிருப்பது, அசாதாரணமான நிகழ்வாகவே தோற்றமளிக்கிறது. குறிப்பாக, காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்ட போதும், அயோத்தி வழக்குத் தீர்ப்பு வந்தபோதும் அமைதி காத்த மக்கள், இப்போது குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் களமிறங்கி, உலக அரங்கில் இந்தியாவின் மாண்புமிக்க ஜனநாயகத்தைக் களங்கப்படுத்த நினைப்பது …
-
- 0 replies
- 509 views
-