Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்? நிலாந்தன் கடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும் துறைசார் படிப்பாளிகளையும் காணமுடிந்தது. மாகாணசபைக்குள் கீரியும் பாம்புமாகக் காணப்படும் அரசியல்வாதிகள் பலரும் கம்பன் விழாவில் முன்வரிசையில் காணப்பட்டார்கள் . அவர்கள் மட்டுமல்ல விக்னேஸ்வரனின் தலையைச் சுற்றி ஒளிவட்டத்தை வரையும் ஒரு பத்திரிகாதிபரும் விக்னேஸ்வரன் எங்கே பிழைவிடுவார் என்று கண்டுபிடிக்க காத்திருக்கும் மற்றொரு பத்திரிகாதிபரும் கூட கம்பன் விழாவில் காணப்பட்டார்கள். விழாவின் இறுதிநாள் உரைநிகழ்த்திய கம்பன் கழக நிறுவுனர் ஜெயராஜ் பின்வரும் தொனிப்பட உரையாற்றியிருந்தார் ‘இங்கே மாகாணசபை உறுப்பினர்களைக் கண்டபோது இ…

  2. மோடிக்கான கடிதம், 13ம் திருத்தம், இலங்கை-இந்திய ஊடகங்களின் நிலைப்பாடுகள். - யோ.திருக்குமரன் - - யோ.திருக்குமரன் - 1 தினக்குரலின் பொங்கல் வெள்ளி இதழ் (14.01.2022) தனது தலைப்பு செய்தியாக, (கொட்டை எழுத்துக்களில்) பின்வரும் செய்தியை தீட்டியிருந்தது: “மோடிக்கான கடிதம் முற்றாக மாற்றம்” கடிதம் இறுதியாக்கப்பட்டு, தினங்கள் கழிந்த நிலையில், மேற்படி ‘கொட்டை எழுத்தை’, ‘தலைப்பு செய்தியாக’ வாசிக்கும் வாசகனில், மேற்படி செய்தி பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஆனால், இதனைவிட அடுத்த அடியே, செய்தியாளரின் மரண அடி கொடுக்கும் அவாவினை பேசுவதாய் இருந்தது: “இதனை செய்தது தமிழரசு கட்சியே – சுமந்திரன்” …

    • 0 replies
    • 374 views
  3. எழுதப்பட்ட தீர்ப்பும் வாசிக்கபடாத அரசியல் செய்தியும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-03#page-11

  4. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆட்சி மாற்றத்தின் மூலம் தீர்வு காணலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்ததுடன் கூடவே இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளும் ஆட்சி மாற்றத்தின் மூலம் இனப்பிரச்சனைக்கும் மற்றும் இலங்கையின் சீனசார்பு வெளியுறவு கொள்கை பிரச்சனைக்கும் தீர்வு காணலாம் என்று நம்பின. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை ஆண்டுகால நடைமுறையின் பின்னான அனுபவம் அதற்கு எதிர்மாறான பதிலையே தந்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு அரசியல் கட்டமைப்பை புரிந்து கொள்ளாமல், சிங்கள-பௌத்த அரசியலின் பொறிமுறையைப் புரிந்து கொள்ளாமல் மேலேழுந்தவாரியாக ஆட்சி மாற்றத்தின் மூலம் எல்லாவற்றையும் கையாண்டுவிடலாம் என்று எண்ணியமை முற்றிலும் தவறாக முடிந்துள்ளது. இலங்கையில் மாறி மாறி ஆ…

    • 0 replies
    • 272 views
  5. கூட்டு அரசினை வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின் தலையாய எண்ணம் ‘‘எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் இனங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் சகல பிரிப்­புக்­க­ளை­யும் நான் கடு­மை­யாக எதிர்க்­கி­றேன். எனது வாழ்­நாள் பூரா­வும் நான் அதற்கு எதி­ரா­கப் போரா­டி­னேன். தற்­போது மட்­டு­மன்றி எனது உயிர் பிரி­யும் வரை அதற்­கா­கப் போரா­டு­வேன்’’ என நெல்­சன் மண்­டேலா பல சந்­தர்ப்­பங்­க­ளில் தெரிவித்துள்ளார். நூறு ஆண்­டு­கள் கால­மாக ஐரோப்­பா­வின் குடி­யேற்ற நாடா­க­இ­ருந்த தென்­னா­பி­ரிக்க நாட்­டில் நில­விய அடி­மைத்­தன நிற­பே­தத்­துக்கு எதி­ரான சுதந்­தி­ரப் போராட்­டத்­துக்­குத் தலைமை தாங்­கிய நெ…

  6. யாழ் குடாநாட்டின் ஊடகவியலாளர்களதும், வடஇலங்கைப் பத்திரிகையாளர் சங்கம், MRTC, மற்றும் பிற சக்திகளதும், இரகசியக் கூட்டுச் சதிகள் அம்பலம்! ..... ....... வட இலங்கை பத்திரிகையாளர் சங்கமும், MRTC யினர் சிலரும், ஏனைய தமிழ் ஊடகவியலாளர்களும், தமிழ்த் தேச மக்களை ஏமாற்றிச் செயற்படும் வல்லமையைத் தாம் உடையவர்களாக யாருக்கு, ஏன்; வெளிக்காட்டுகின்றனர் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய விடயமாகும். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், கிளிநொச்சியின் பெயரில் தமிழ் மக்களை ஏமாற்றும,; மிரட்டும் அதே வேளையில், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இரகசியமாகச் செயற்படும் ஒரு சாரார், தமது திறமையையும், வல்லமையையும் பிற சக்திகளுக்கு வெளிக்காட்டி, உறுதிப்படுத்தவேண்டிய பரிதாப நிலைக…

  7. அரசாங்கம் நியமித்திருந்த காணாமற் போனவர்கள் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க சர்வதேச மட்டத்தினை மனித உரிமைகள் மற்றும் யுத்தகுற்றங்கள் பற்றிய சட்ட நிபுணர்கள் மூவரை வரவழைக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பது சற்றும் எதிர்பாராத ஒன்றாகும். இத்தீர்மானம் அமைச்சரவையில் உள்ள சிரேஷ்ட அங்கத்தினர்கள் சிலருக்குமே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே மனித உரிமைகள் மீறல்களும் யுத்தக் குற்றங்களும் இடம்பெற்றமை குறித்த குற்றச்சாட்டை பெருமளவுக்கு உறுதியான முறையில் அரசாங்கம் மறுத்து வந்திருக்கின்றது. அரசாங்கத்தால் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளிலுமே அவ்வாறான குற்றங்கள் எதும் இடம்பெறவில்லை, என்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடே தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்…

    • 0 replies
    • 680 views
  8. ஈழத்தமிழரை வதைக்கும் கொடிய அரசின் உச்சக் கட்ட வதை இப்பொழுது நடக்கிறது. சர்வதேச சமூகமோ மெதுவான குரலில் வருந்துகிறோம் என்கிறது. கீழே செய்தியைப் படியுங்கள். THE PEOPLE OF JAFFNA PENINSULA IN THE OPEN PRISON AND THE EFFECT OF ITS HUMAN MISERY Situation report in Jaffna The military machinery and the Sinhalese collectivism of the Buddhist State has abridged the dignity of the people of Jaffna to the subhuman condition. Imposing economic embargo and closing the A9 highway it has blocked the supply of food, medicine, fuel and other essential commodities for the normal life of the people. Even the pregnant mothers, newborn babies, bedridden sick are being depriv…

  9. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் முக்கிய நிகழ்வொன்றாக வரலாற்றில் இடம்பெற்றது வட்டுக்கோட்டை தீர்மானம். 42 வருடங்களாக புரையோடிப் போன இனப்பிரச்சினையை தீவிரத்தை இன்றும் எடுத்தியம்புகிறது இத் தீர்மானம். தனிநாடு கோரிய போராட்டம், ஆயுதப் போராட்டம் என்று ஈழத் தமிழர்கள் கடந்து வந்த பாதைகளை தீர்மானித்த வட்டுக்கோட்டை தீர்மானம் இன்றும் தமிழ் அரசியல் தலைவர்களையும் சிங்களத் தலைவர்களையும் நோக்கி ஒரு கேள்வியாக நிற்கிறது. இதுபோல் ஒரு நாளில் குளோபல் தமிழ்ச் செய்திகள் வெளியிட்ட கட்டுரை இங்கே மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது. …

  10. சுன்னத் முதல் இறைச்சி வரை - ஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும் இணையும் புள்ளி எது? ஐரோப்பாவின் இஸ்லாமியர்களும், யூதர்களும் இதற்கு முன் ஒன்று சேராமல் இருந்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக தங்களுடைய மத நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். பெல்ஜியம் நாட்டில் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள சட்டம் சமீபத்திய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளைக் கொல்வதைப் பாதிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. கோஷெர் மற்றும் ஹலால் மாமிசத்துக்கு உரிய நம்பிக்கைகள இது பாதிக்கிறது. விலங்குகள் உரிமை இயக்கத்தினர் நீண்டகாலமாகவே இந்தச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் சுதந்திரத்துக்கான செயல் …

  11. வித்தியாவின் மரணத்தின் பின்னரான சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரல் நிர்மானுசன் பாலசுந்தரம் பல ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவின் கொடூரங்களையும், அது சுமந்து நிற்கும் பெரும் வலிகளையும் தமிழர் தேசம் கடந்து வந்திருக்கிறது. இவற்றில் பலவற்றிற்கு சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத உரிமை மறுப்பு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவை வெறும் துயர் பகிர்வோடு நிறைவுற்றன. கிரிசாந்தி, கோணேஸ்வரி மற்றும் ரஜனி போன்றவர்கள், குறிப்பாக கிரிசாந்தி மீதான சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகளின் கூட்டு பாலியல் பலாத்காரம் சர்வதேச அளவில் பேசப்பட்டும் கூட, மக்கள் போராட்டத்திற்கான ஓர் உடனடியானதும் நேரடியானதுமான தோற்றுவாயாக மாற்றம் பெற்றிருக்கவில்லை. ஆயினும், புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்தியா என்னும் …

  12. ‘எங்களை ரணில் நம்புவதில்லை’ காரை துர்க்கா / 2019 ஜூலை 09 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:28 Comments - 0 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தங்களை (கூட்டமைப்பை) நம்புவதைவிட, முஸ்லிம் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையுமே நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடந்த மாத இறுதியில் (ஜூன் 26), வவுனியா - பாலமோட்டை பகுதியில், அவரது விசேட நிதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையக் கட்டடத்தைத் திறந்து வைத்த பின்னர் ஊடவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறாகக் கூறியுள்ளார். இது, வெறுமனே சராசரியாக விட்டுவிடக் கூடிய கருத்து அல்ல. அத்துடன், சாதாரண நபர் கூறிய கருத்தும் அல்ல. தமிழ் மக…

  13. இருப்புக்கான போராட்டம் - பி.மாணிக்­க­வா­சகம் தமிழர் தரப்பு அர­சி­ய­லுக்கு வெளி­யிலும் முட்­டுக்­கட்­டைகள். உள்­ளேயும் பல முட்­டுக்­கட்­டைகள். இந்த முட்­டுக்­கட்­டை­களைக் கடந்து நாட­ளா­விய அர­சியல் வெளியில் உறு­தி­யா­கவும் வலு­வா­கவும் அது காலடி எடுத்து வைக்க வேண்­டி­யது அவ­சியம். இது காலத்தின் தேவை­யும்­கூட. ஏழு தசாப்­தங்­க­ளாக மறுக்­கப்­பட்டு வந்­துள்ள தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் உரி­மை­களை, அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக உறு­திப்­ப­டுத்தி, அவற்றைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஆட்­சி­யா­ளர்கள் மறுத்து வரு­கின்­றனர். தொடர்ச்­சி­யாக அதனை அவர்கள் உதா­சீனம் செய்­வதே வர­லா­றாக உள்­ளது. தமிழ் மக்­களும் இந்த நாட்டின் குடி­மக்கள், அவர்கள் சகல உரி­மை­க­ளு…

  14. அரசியற் கைதிகள் விவகாரத்தின் பின்னால் அரசின் பெரும் சூழ்ச்சி இருக்கிறது! - குணா கவியழகன் நேர்காணல் இனப்படுகொலை விவகாரத்தை இராணுவ அத்துமீறலாகச் சுருக்கும் முனைப்புடன் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பான விவகாரம் சிறிலங்கா அரசாங்கத்தினால் கையாளப்படுவதாக எழுத்தாளர் குணா கவியழகன் பொங்குதமிழுக்குத் தெரிவித்துள்ளார். கடந்த சனியன்று தனது 'விடமேறிய கனவு' நாவல் அறிமுக அரங்கில் பங்கேற்பதற்காக குணா கவியழகன் நோர்வேக்கு வருகை தந்திருந்த போது அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக அவருடன் நேர்காணல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய வாக்குறுதிகள் சில மாதம் முன்னரே வழங்கப்பட்டிருந்தன. ஆட்சிமாற்றத்தின் பின் இலகுவில் நடந்துவிடுமென நம்பப்…

  15. செயல்வடிவமும் நம்பகத்தன்மையும் ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. நாடு முழு­வதும் வேட்­பா­ளர்கள் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். இந்தத் தேர்­தலில் எந்த வேட்­பாளர் வெற்­றி­பெறப் போகின்றார்? என்று மக்கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர். இத்­தேர்­தலில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கும், பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ உள்­ளிட்ட ஏனைய சில வேட்­பா­ளர்­க­ளுக்கும் சிறு­பான்மைக் கட்­சிகள் ஆத­ரவு வழங்கி வரு­கின்­றன. மலை­யகக் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி சஜித் பிரே­ம­தா­ச­விற்கும், இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­ய­வி…

  16. மேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் ? நிலாந்தன்… November 2, 2019 இலங்கை தீவின் மூத்த தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவர் தனபாலசிங்கம். அவர் சில நாட்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்…. ‘வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் வழமையாக தமக்கு விருப்பமான ஒரு வேட்பாளரை தெரிவு செய்வது என்பதை விடவும் நமக்கு விருப்பம் இல்லாத ஒரு வேட்பாளரின் தோல்வியை உறுதி செய்வதற்காகவே தமது வாக்குரிமையை பயன்படுத்துகிறார்கள். அவர்களை அவர்களுடைய விருப்பப்படி வாக்களிக்க விடுவதே தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை உணர் திறன் மிக்கதாக இருக்கும். தமிழ் மக்கள் விவேகமாக முடிவெடுப்பார்கள்’. தனபாலசிங்கம் மட்டுமல்ல பெரும்பாலான கூட்டமைப்பு ஆதரவாளர…

  17. காஸாவின் குழந்தைகள் sudumanal Thanks: Aljazeera கடந்த சில மாதங்களாக எனது கைபேசித் திரையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் காட்சிகள் எனது வாழ்நாளின் எல்லைவரை என்னை துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டே இருக்கப் போகின்றன. காஸாவின் சிறிசுகள், பச்சைக் குழந்தைகள் திரையில் வரும் காட்சிகளைத்தான் குறிப்பிடுகிறேன். மரணித்தவர்கள், காயம்பட்டவர்கள், பசியால் உயிர்பிரிந்து கொண்டிருப்பவர்கள் என்பதான காட்சிகள் அவை. காயம்பட்ட குழந்தைகள் வலியால் கதறுகிறார்கள். தமக்கு பாதுகாப்பாயிருக்கிற தமது அப்பாக்களுக்காக அம்மாக்களுக்காக சகோதரங்களுக்காக என தமது குடும்ப உறவுகளுக்காகவும் சேர்த்து அவர்கள் அச்சப்படுகிறார்கள். குண்டு வீசும் விமானத்தின் பயங்கரம் ஒரு சிறுவனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வ…

  18. மனித உயிர் மகத்தானதா? மலிவானதா? இன்று நாமெல்லாம் ஒட்டு மொத்தமாகப் புலம்பிக் கொண்டிருக்கும் பொதுவான விஷயம் தமிழ்ப் பண்பாடு மாறிக்கொண்டு வருகிறது. இந்தியக் கலாச்சாரம் சீரழிந்து வருகிறது என்பதுதான். ஆனால் உலகமெங்கும் இன்று நல்ல குணங்கள், நல்ல பண்புகள், மனிதநேயம், மன்னிக்கும் தன்மை இவையெல்லாம் மிகவும் குறைந்து வருவதை நாம் உணரமுடிகிறது. நல்ல காரியங்கள் நான்கு நடக்குமுன்பு நாற்பது தீய காரியங்கள் மிகவும் வேகமாக நடந்தேறிவிடுகின்றது. அதுவும் வெட்டுவது குத்துவது என்பதெல்லாம் சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது. நாய் சேகர் மாமா மாதிரி ‘எல்லோரும் கேளுங்கள். நான் கொலை செய்யப் போறேன். கொலை செய்யப் போறேன்.’ என்று அறிவிப்பு செய்து நடத்தும் நிகழ்ச்சியாகி விட்டது. அப்படியென்ன மனித உய…

    • 0 replies
    • 1k views
  19. 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் கீழ் பாரா­ளு­மன்­றமும் அதற்­குள்ள அதி­கா­ரமும் புதிய அர­சி­ய­ல­மைப்பும் ஓர் ஆய்வு இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­த­தி­லி­ருந்து இன்று வரை மூன்று அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் கீழ் ஆளப்­பட்டு வந்­தது. 1948 ஆம் ஆண்டு முதல் சோல்­பரி அர­சியல் சட்­டத்தின் கீழும் 1972ஆம் ஆண்டு முதல் முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் கீழும் 1978 ஆம் ஆண்டு முதல் இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் கீழும் ஆளப்­பட்டு வந்­தது. தற்­போது அமுலில் உள்ள 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் அடுத்த பட்ஜெட் தொட­ருக்­கி­டையில் மாற்­றப்­ப­ட­வி­ருப்­ப­தாக செய்­திகள் கசிந்­துள்­ளன. ஆகவே நாலா­வது அர­சி­ய­ல­மைப…

  20. காணாத தேசத்திற்கு இல்லாத வழி : தங்கம் வன்னிப்பகுதியிலிருந்து 109 பெண்கள் இராணுவத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பான செய்தி பற்றி சிதறுசமூகத்தில் பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை ஊடகங்களில் இச்செய்தியை விமர்சிக்க முடியாத சூழலில் இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் ஊடகங்களில் நடைபெறுவது ஒருவகையில் ஆரோக்கியமானதே. தெற்காசிய நாடுகளையொத்த நிலையில் இலங்கையிலும் தந்தைவழிப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூக அமைப்பே காணப்படுவதாக நாம் இன்றும் கொள்ளவேண்டும். இச்சமூக அமைப்பில் பெண்கள் பத்னிகளாக, வீராங்கனைகளாக இன்னபிற புனைவுகளைக்குட்பட்டவர்களாகவோ அல்லது பரத்தையாகவோ, விபச்சாரிகள் போன்ற புனைவுகளுக்குட்பட்டவர்களாகவோ இருக்க …

  21. தமிழ் தேசியத்தையும் உரிமை அரசியலையும் தக்கவைத்தல் கூட்டமைப்பின் தோல்வியிலேயே தங்கியுள்ளது லோ. விஜயநாதன் ஒரு பக்கம் உலக மனித குலத்தை அழிந்துவரும் கொரோணா நோயின் தாக்கமும் மறுபக்கம் அதன் மூலம் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் என உலக நாடுகள் சிக்கி தவித்துவருகின்றன. இது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு தமிழ் மக்களை மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல் மேலும் பாதித்துள்ளது. இந்தநிலையில் தான், அரசாங்கம் சிறிலங்காவின் 16ஆவது பாராளுமன்ற தேர்தலை நடத்துகின்றது. பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் திரட்சியடைந்த சிங்கள பெளத்த பெரும் தேசியவாதம் ஐக்கிய தேசிய கட்சியின் பிளவினூடாக இந்த தேர்தலில் மேலும் வலுவடைந்துவருகின்றது. வட-கிழக்…

  22. அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்ள அடிமைப்படுத்தப்பட்ட கருப்பின பெண்கள் Reuters 1515 முதல் 19-ம் நூற்றாண்டின் மத்தியில் வரை 1.25 கோடி ஆப்பிரிக்கர்கள் அமெரிக்க நாடுகளுக்கு அடிமைகளாக அழைத்து வரப்பட்டனர். அமெரிக்க நாடுகளுக்கு 16 முதல் 19-ம் நூற்றாண்டு வரை அடிமைகளாக அழைத்துவரப்பட்ட ஆப்பிரிக்க மக்கள் பற்றிய பல புதிய தகவல்களை மரபணு ஆய்வு ஒன்று வெளிக்கொண்டு வந்துள்ளது. 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அடிமை வணிகம், அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் எத்தகைய ’’மரபணு தாக்கத்தை’’ ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்த கூடுதல் தகவல்களை அறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது. …

  23. அரசே எங்கள் மகள் காணாமல் போனது எவ்வாறு... பதில் கூறு அரசே.... பதில் கூறு.., வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்... காணாமல் போவதும் அரசாலே.. கடத்திச் செல்வதும் அரசாலே.., குற்றம் செய்திருந்தால் கோட்டுக்கு கொண்டு வா.., எங்கள் பிள்ளைகளை மீண்டும் எங்களிடம் தா... தடுத்து வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடு, எனது அப்பா எங்கே? அவரை பார்ப்பதற்கு அனுமதி தா.., அனுமதி தா..., எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தந்துவிடு... இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு...,எங்கள் வாழ்க்கை இன்னும் தெருவில் தானா!!! இனியாவது எங்களை நிம்மதியாக வாழவிடு .. இந்தப் புலம்பல்கள் எல்லாம் எதற்காகவென்று நினைக்கின்றீர்களா.... வோறொன்றும் இல்லை. காணாமல் போன உறவுகளின் உள்ளக் குமுறல்களே இவை. …

    • 0 replies
    • 903 views
  24. அதிகரித்து வரும் பெளத்த மதவாதம் இலங்கை அர­சி­ய­லா­னது ஒரு இரட்டைப் பிளவு கொண்­ட­தா­கவே எப்­பொ­ழுதும் இருந்து வந்­துள்­ளது என்­பதை சுதந்­தி­ரத்­திற்­குப் பின்­னுள்ள வர­லாற்றுப் புள்­ளிகள் எல்­லா­வற்­றிலும் காணக்­கூ­டிய ஒரு பொதுத்தன்­மை­யாகும். பௌத்த மத ஆதிக்கம், சிங்­களப் பேரி­ன­வாதம் என்ற இரு தண்­ட­வா­ளங்­களில் ஓடும் அர­சியல் தொடரூந்­தாக அல்­லது இரட்டைப் பிற­வி­க­ளாக இலங்கை இருந்­து­ வந்­துள்­ளது என்­ப­தனை சுதந்­தி­ரத்­திற்குப் பின்­னுள்ள அர­சியல் போக்­குகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் இலங்கை அர­சி­யலில் ஊடு­ருவிக் காணப்­படும் பௌத்த மத வாதமும் விகா­ரா­தி­ப­தி­களின் கடும் இன்று நேற்று உரு­வா­கிய ஒரு விட­ய­மல்ல. வர­லாற்றுக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.