Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஒரு தொற்றுக் காலத்தில் கற்றுக்கொள்ள வேண்டியவை -நிலாந்தன்.. May 2, 2020 பெரும்பாலான தமிழ் ஆசிரியர்களும் அதிபர்களும் கல்வி அதிகாரிகளும் பெற்றோரும் நம்புகிறார்கள் ‘வைரஸ் விடுமுறை’ முடிந்ததும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் விட்ட இடத்திலிருந்து தொடங்கிவிடும் என்று. பெரும்பாலான பல்கலைக்கழக சமூகத்தினரும் அப்படிதான் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் எல்லாரும் இணையக் கல்வியை நாடத் தொடக்கி விட்டார்கள். பெரும்பாலான பெரிய பாடசாலைகள் அதைக் கடந்த மாதமிருந்தே தொடங்கிவிட்டன. கற்றல் கற்பித்தலில் தொடர்ச்சியறாமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் சிந்திப்பது சரிதான். ஆனால் ‘வைரஸ் விடுமுறை’ முடிந்ததும் உலகம் விட்ட இடத்திலிருந்து இயங்கத் தொடக்கி விடும…

  2. சமகால அரசியல் சமதளம் இலட்சுமணன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அரசியல் சிக்கல் நிலைமைகள் தொடர்பாக பொருளாதார ரீதியில் நாடு எதிர்பாராத சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அரசாங்கம் இந்த சிக்கல் நிலைமைகளில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய தேவை உள்ளதை உணர்ந்துள்ளது. இதற்குக் காரணம் தனது அரசியல் அதிகார பலத்தின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டியது அதற்கு உள்ளது. அந்த வகையில் தற்போதைய சூழலில் கொரோனா தொற்றை எதிர்கொண்ட விதம் தொடர்பான மக்களின் வரவேற்பும் கொரோனா நிவாரணம் தொடர்பான மக்களின் அதிருப்தியையும் தற்போதைய அரசு சம்பாதித்திருக்கிறது. இதை விட பொருளாதார ரீதியில் நொந்துபோயுள்ள பாமர மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பு எ…

  3. கிழக்கிற்கான தொல் பொருள் செயலணி தமிழ் தலைமைகளிடமுள்ள உபாயம் என்ன? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன அடையாளங்களை பாதுகாப்பதற்கென, ஒரு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருந்தது. (The Presidential Task Force for Archaeological Heritage Management in the Eastern Province). இந்தச் செயலணியின் நோக்கங்களில், எந்தவொரு இடத்திலும் பௌத்த அடையாளங்களை பாதுகாப்பது தொடர்பில் பேசப்படவில்லை. தொல்பொருள் பாரம்பரியத்தை முகாமை செய்வது தொடர்பில், பொதுவாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தலைமைகள், வழமைபோல் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. அதே வேளை, சர்வதேச அமைப்புக்கள் சிலவும் இது தொடர்பில் கண்டனங்களை பதிவு செய்திருந்தன. ஆனால் இவ்வாறான கண்டனங்கள் எத…

  4. வரலாற்றின் அத்தனை திடீர் திருப்பங்களையும், அத்தனை எழுச்சிகளையும், வீழ்ச்சிகைளையும் தீர்மானிப்பவைகளாக உரைகளே விளங்கி இருக்கின்றன. இன்னும் விளங்கி வந்து கொண்டிருக்கின்றன. தமிழீழதேசியமும் எழுச்சி பெறவும் அது தொடர்ந்து அத்தனை நெருக்கடிக்குள்ளாகவும் நின்று போராட தேவையான தெளிவை தருபவையாகவும் இரண்டு உரைகளை வரலாற்றில் குறித்து கொள்ளலாம். இலங்கை ஒரு ஒற்றைநாடு என்ற கனவு தமிழர்களுக்கு முழுமையாக கலைந்த அந்த ஜூலை நாட்களில் சிங்கள தேச அதிபர் ஆற்றிய அந்த உரை ஒரு முக்கியமானது. அதனை போலவே உலகின் நான்காவது பெரும் படையை கொண்ட இந்தியா அமைதி படை என்ற பெயரில் வந்து இறங்கி எமது தேசிய விடுதலை போராட்டத்தை நசுக்கி எறிய முனைந்த நாட்களில் எமது மக்களுக்கு, எம…

  5. ஆபத்தான அரசியல் வருமா?

  6. ஐ.நா மெய்யாகவே மனித குலத்தை பாதுகாக்கும் அமைப்பா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஒக்டோபர் 24. இன்று ஐ.நா தினமாகும். 1945 ஒக்டோபர் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டது. உலகில் உள்ள நாடுகளின் அமைதி, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு அமைப்பாக தேசங்களை ஒன்றிணைக்கும் ஒரு உலக அரசாக ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது. இதன்படி ஐ.நாவில் 193 நாடுகள் தற்போது அங்கம் வகிக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இன்னுமொரு உலகப் போர் நடைபெறாத வகையில் அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டோல் ஐக்கிய நாடுகள் சபையை தோற்றுவித்தார். வ…

  7. கமலா ஹாரீஸ் அவர்களே உங்களுக்கு இசைப்பிரியாக்களை தெரியுமா.? - கவிஞர் தீபச்செல்வன் ‘‘சமத்துவம், விடுதலை, நீதிக்காகப் போராடிய பெண்கள், குறிப்பாகக் கறுப்பினப் பெண்கள் பெரிதும் பொருட்படுத்தப்படுவதில்லை. ஆனால், அவர்கள் தான் நம்முடைய ஜனநாயகத்தின் முதுகெலும்பு. அப்படியான ஒருவராக அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்கும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம். ஆனால், நிச்சயமாகக் கடைசிப் பெண்ணாக இருக்க மாட்டேன்” இது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மகலா ஹாரிஸ் குறிப்பிட்ட விசயம். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் என்பது, உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்க்குமொரு தேர்தல். உலக நாடுகளின் அரசியலில் அமெரிக்காவின் அரசியல் கடுமையான தாக்கத்தை செலுத்துவதுதான் இதற்கு காரணமாகும். அ…

  8. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-14#page-3

  9. பாதிக்கப்பட்டோரின் நீதிக்கான ஏக்கத்தை புரிந்துகொள்ளாத நகர்வுகள் ரொபட் அன்­டனி அர­சாங்கம் நல்­லி­ணக்க விட­யத்தில் அவ­ச­ர­மாக முன்­னேற்­றங்­களை வெளிக்­காட்­ட­வேண்டும். குறிப்­பாக பாதிக்­கப்­பட்ட மக்­களின் பக்கம் இருந்து அர­சாங்கம் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம். பாதிக்­கப்­பட்ட மக்கள் திருப்தி அடை­யாத நல்­லி­ணக்க பொறி­மு­றையில் அர்த்­த­மில்லை என்­பதை அர­சாங்கம் புரிந்­து­கொள்­ள­வேண்டும். அந்­த­வ­கையில் செய்ட் அல் ஹுசைன் அறிக்கை குறித்து அர­சாங்கம் ஆழ­மான முறையில் கவனம் செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் அனை­வரும் எதிர்­பார்த்­தி­ருந்த ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யா­ளரின் இலங்கை தொடர்­பான எழுத்­து­மூல அறிக்கை கடந்­த­வாரம் வெளிவந்­…

  10. தமிழ் ஜனநாயக அரசியல் அரங்கைத் திறக்க வேண்டும் வடக்கு மாகாணசபையில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் தமிழ் மக்களிடத்தில் கவலைகளை உண்டாக்கியுள்ளன. கூடவே, தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினையில் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. இதற்கான கூட்டுப்பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேரும் என்று சிந்திப்போர் குறிப்பிடுகின்றனர்; உண்மையும் அதுதான். இதனால்தான் அரசாங்கத்தை நோக்கிய தமிழர்களின் கவனக்குவிப்பு திசை மாறி தமிழர் அரசியலின்மீதும் அதை முன்னெடுக்கும் தமிழ் அரசியலாளர் மீதும் குவிந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் கொதித்துக் கொண்டிருந்த முரண்பாடு…

  11. குசினிக் குண்டு – நிலாந்தன்! December 5, 2021 காஸ் சிலிண்டர் வெடிப்பது என்பது தமிழ்ப் பத்திரிகைகளுக்கு புதியது அல்ல. இந்தியாவில் சீதனம் கேட்டு பெண்களைக் கொன்றுவிட்டு அப்பெண் சிலிண்டர் வெடித்து இறந்துவிட்டார் என்று கூறி பெண்ணின் கணவரும் அவருடைய உறவினர்களும் தப்ப முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்பில் பல செய்திகளை நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம்.ஒரு கொலையை சமையலறை விபத்தாக உருமறைப்பு செய்வது என்பது குடும்ப வன்முறைகளில் மிகக் குரூரமான ஒன்று. சீதனப்படுகொலை என்று வர்ணிக்கத்தக்க காஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் நமது நாட்டில் அனேகமாக இல்லை. எனினும் தமிழ் வாசகர்கள் படித்த சிலிண்டர் வெடிப்பு செய்திகளில் கணிசமானவை சீதனப் படுகொலையோடு தொடர்புடையவை.இத…

  12. காங்கிரஸுக்கு நேரு குடும்பம் விடை கொடுக்க வேண்டிய தருணம் இது ராமச்சந்திர குஹா தமிழில்:வ.ரங்காசாரி ஒவ்வொரு தேர்தலுமே வென்றவர்கள், தோற்றவர்களைப் பற்றிய கதைகள்தான். சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிய விமர்சனங்கள் பெரும்பாலும் பெரும் வெற்றிபெற்ற கட்சிகளையும் தலைவர்களையும் விதந்தோதுவதாகத்தான் இருக்கும், இந்தக் கட்டுரை தோற்றவர்களில் முக்கியமானவர்களைப் பற்றியே எழுதப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் மீண்டும் மிக வசதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார், பாஜகவும் அறுதிப் பெரும்பான்மை வலு பெற்றுவிட்டது; பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி (ஆஆக) அபாரமான வெற்றி பெற்றிருக்கிறது. மதச்சார்பற்ற காங்கிரஸ் க…

  13. புதிய அரசியலமைப்பு எப்படி அமையும்? பி.மாணிக்கவாசகம் Constitution. Illustration: Ratna Sagar Shrestha.THT புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதில் தோல்வியையே சந்தித்திருக்கின்றது. அடிப்படையான விடயங்களில் முரண்பாட்டையும், அரசியல் கட்சிகளின் கொள்கை ரீதியான விடயங்களில் ஆழமான விவாதங்களுக்கான தேவையையும் அது உள்ளடக்கியிருக்கின்றது. முப்பது வருடங்களாக நீடித்த தமிழ் மக்களுக்கான ஆயுதமேந்திய போரட்டத்தின் மீதான வெற்றிவாத அரசியல் போக்கே,நாட்டுக்குப் புதியதோர் அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொண்ட மகிந்த ராஜபக்ச …

  14. நெம்புகோல் தத்துவத்தை புரிந்து கொள்ளுமா கூட்டமைப்பு…? வசந்தன்- ஒரு சதாப்த காலமாக நடைபெற்று வரும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான தீர்வாக அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையில் உடனபடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அதது சிங்கள பெரும்பான்மையினரால் கிழித்தெறியப்பட்மையே வரலாறு. ஒரு கட்டத்தில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக முழுமையாக தீர்வு இல்லாவிட்டாலும் தமிழ் தேசிய இனத்தின் தாயகக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டு இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு மாகாணசபையும் உருவாக்கப்பட்டது. சிங்கள தேசியம் இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தையும் சீர்குலைப்பதில் முனைப்பு காட்டி அதில் வெற்றியும் பெற்றது. அதன்பின்னர் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்…

  15. பொலிஸாகும் பொது பலசேனா - செல்வரட்னம் சிறிதரன்:- 26 ஏப்ரல் 2014 நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் துப்பாக்கிச் சண்டைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனவே தவிர, மோதல்கள் இன்னும் தொடரத்தான் செய்கின்றன. சத்தமின்றி, கத்தியின்றி இந்த மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிகார பலம் என்ற ஆயுதமும், பெரும்பான்மை என்ற பலமும் இந்த மோதல்களில் தாரளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் சிறுபான்மையினராக இருக்கின்ற மக்களும், சிறுபான்மை மதத்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன. ஒழுங்கு விதிகள் இருக்கின்றன. சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதாகவும், அதற்குப் பொறுப்பாக பொலிசாரும், பொலிசாருக்கு உதவியாக இரா…

  16. கண்களை குத்திக்கொண்ட அதிகாரம் – ஏமாற்றப்பட்ட காரைநகர் சுயேட்சைக் குழு – நிலாந்தன்…. கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்புநிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருக்கவில்லை. பெரிய கட்சிகள் கடந்த காலங்களில் தமது மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை என்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூடப் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் இச் சுயேட்சைக் குழு குற்றம் சாட்டியது. தேர்தலில் இக் குழுவிற்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன. கூட்டமைப்புக்கும் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. ஏனைய கட்சிகள் அதை விட குறைவாகப் பெற்றன. யாருக்…

  17. அதிகாரத்தை பகிர மறுப்பது தமிழீழத்திற்கு வழிவகுக்குமா? வட மாகாண சபை - இன்றுடன் ஒருவருடம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் ஆட்சி அமைத்து இன்றுடன் ஒரு வருடமாகின்றது. வட மாகாண சபையுடன் இனப்பிரச்சினையை முடக்கி விடலாம் என எதிர்ப்பார்த்த இலங்கை அரசின் எண்ணம் ஈடேறவில்லை. இலங்கை இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்கும் முகமாக இலங்கை அந்திய ஒப்பந்தத்தின்படி 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்று அமைக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் 25 வருடங்களின் பின்னர் பிரிக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கான…

  18. இரா­ணு­வத்­தினர் மீதான முத­ல­மைச்­சரின் குற்­றச்­சாட்டும் யதார்த்த நிலையும் வடக்கு கிழக்குப் பகு­தி­களில் இரா­ணு­வத்­தி­னரின் ஆதிக்கம் தொடர்ந்து வரு­வ­தாக பல்­வேறு தரப்­பி­னரும் தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­ வ­ரு­கின்­றனர். படை­யினர் சிவில் நிர்­வாக நட­வ­டிக்­கை­களில் தலை­யி­டு­வ­தா­கவும் வியா­பார செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­ப­டு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. அப்­ப­கு­தியில் பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான பெரு­ம­ள­வான நிலங்­களில் படை­யினர் தொடர்ந்தும் நிலை கொண்­டுள்­ள­துடன் ஆதிக்கம் செலுத்த முனை­வ­தா­கவும் விசனம் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் இரா­ணு­வத்­தி­னரின் இத்­த­…

  19. அரசியல்வாதிகள் மீட்பர்கள் இல்லை எம்.எஸ்.எம் ஐயூப் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைக்க, அரசாங்கம் இதுவரை எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அம்முயற்சிகளை நாம், கடந்த வாரக் கட்டுரையில் பட்டியலிட்டோம். ஆனால், அதன் பின்னரும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும், தேர்தல்களின் போது செலவிடும் பணத்தின் தொகையை கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று, வியாழக்கிழமை (19) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் இம்முறை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திப்போடப்படலாம் …

    • 0 replies
    • 856 views
  20. யாழ் கலாச்சார மையம் யாருடைய பொறுப்பில்? நிலாந்தன். கொழும்பில் ஆயிரக்கணக்கான பிக்குகள் திரண்டு 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அத்திருத்தத்தின் பிரதியை நெருப்பில் கொளுத்தியிருக்கிறார்கள். 13 ஆவது திருத்தம் தொடர்பான ரணில் விக்கிரமசிங்காவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்குமாறு கூறி அவருக்கு இரண்டு கிழமைகள் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க 13ஐ முழுமையாக அமல்படுத்த போவதில்லை. கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரையில் அது தெரிகிறது. குறிப்பாக போலீஸ் அதிகாரம் தொடர்பில் அவர் தெளிவற்ற வார்த்தைகளில் கதைக்கிறார். இப்பொழுதுள்ள போலீஸ் நிர்வாக கட்டமைப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு டிஐஜி…

  21. சம்பந்தன் பேசும் தேர்தல் ஒற்றுமையும் விக்கினேஸ்வரன் பேசும் கொள்கைசார் ஒற்றுமையும் எது தமிழ் மக்களுக்குத் தேவையானது ? யதீந்திரா கடந்த 24ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடும், அங்கு இடம்பெற்ற உரைகளும் தமிழ் தேசிய அரசியல் அரங்கில் அதிக கவனிப்பை பெற்றிருந்தது. வழக்கத்துக்கு மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களும் இந்த நூல் வெளியீட்டில் பங்குகொண்டிருந்தனர். இதில் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தன் சிறப்பு விருந்தினராக பங்குபற்றியிருந்தார். சம்பந்தன் நிகழ்வில் பங்கு பற்றியது அத்துடன், விக்கினேஸ்வரனை எவ்வாறாயினும் அரசியலிலிருந்து ஓரங்கட்ட வேண்டுமென்னும…

  22. ஜூலை 83 தமிழின அழிப்பு: 40 ஆண்டுகளின் பின்னரும் கூட அதற்கு வழிகோலிய மூல காரணங்கள் இன்னும் கவனத்தில் எடுக்கப்படவில்லை Photo, SRILANKA GUARDIAN 2023 ஜூலை 23ஆம் திகதி 1983 ஜூலை இன அழிப்பின் 40ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. இந்த இன அழிப்பு இலங்கையின் வரலாற்றில் அழியாத ஒரு கறையை விட்டுச் சென்றிருக்கிறது. இந்த இருண்ட அத்தியாயம் நமது தேசத்தின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட யுகத்தின் பூதாகரமான ஒரு நிழலாக வியாபித்திருப்பதுடன், அதனையடுத்து இடம்பெற்ற நீண்ட உள்நாட்டுப் போரில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்தது. இந்த வன்முறைக்கான விதைகள் நீண்ட காலத்துக்கு முன்னரேயே விதைக்கப்பட்டிருந்தன. 1956, 1958, 1961, 1964, 1974, 1977 மற்றும் 1981 ஆகிய வருடங்களையும் உள்ளடக்கிய…

  23. ஓரு உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னரான அரசியல் தீர்வு முயற்சி ஏன் இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது? யதீந்திரா புதிய அரசியல் யாப்பு ஒன்று வரவுள்ளது என்னும் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய தென்னிலங்கை அரசியல் நிலைமைகள் ஒரு விடயத்தை தெளிவாக நிரூபித்துவிட்டது. அதாவது, அவ்வாறானதொரு அரசியல் யாப்பு ஒன்று வரப்போவதில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான நிபுனர் குழு அறிக்கையொன்று வெளியாகியிருக்கிறது. இதனை தாம் நிராகரிப்பதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியியான புளொட்டின் தலைவர் சித்தார்த்தனோ, பல்வேறு சந்தர்ப்பங்களில், புதிய …

  24. கந்தையா அருந்தவபாலன் இலங்கை மக்களுக்கு வளமான வாழ்வையும் அழகான நாட்டையும் தருவதாக வாக்குறுதியளித்த அனுரகுமார திசநாயகவை இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். ஜனாதிபதியாக பதவியேற்ற அனுர தானும், தனது கட்சிக்கு நாடாளுமன்றத்திலிருந்த மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து அமைச்சுப் பொறுப்புகளைப் பகிர்ந்த பின் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆந் திகதி தேர்தல் நடைபெறவிருப்பதுடன், 21 ஆந் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் சட்டவாக்கத்துறையான நாடா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.