அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் ஒரு உண்மை வெள்ளிடைமலையாகும். அதாவது, இரண்டு வேறுபட்ட நபர்கள் அல்லது தரப்புக்களுக்கிடையிலான முரண்பாட்டின் வழியாகவே தமிழ்த் தேசிய அரசியல் உயிர்வாழ்ந்து வந்திருக்கிறது. முதலில் அது ஜி.ஜி.பொன்னம்பலத்திற்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் விழைவாக உருப்பெற்று, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. அந்த முரண்பாட்டின் நீட்சியாகவே இலங்கை தமிழரசு கட்சி உருவாகியது. ஜி.ஜி.பொன்னம்பலம் ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுகின்றார் என்பதே மேற்படி முரண்பாட்டின் அடிப்படையாக இருந்தது. இதன் விழைவாகவே தமிழ்த் தேசிய இனத்திற்கென ஒரு தனிக்கட்சி தேவை என்னும் முடிவுக்கு செல்வநாயகம் வரநேர்ந்தது. இதே செல்வநாயகம் 1968…
-
- 0 replies
- 511 views
-
-
சீனா: பொருளாதார அரசியலும் மேலாதிக்க விஸ்தரிப்பும்! பகுதி 1 கொரோனா நெருக்கடி என்பது இந்த நூற்றாண்டின் முதலாவது உலகளாவிய பேரிடர். இதற்கு முந்தைய உலகளாவிய நெருக்கடிகள் என இரண்டு உலகப்போர்களும் கணிப்பிடப்படக்கூடியவை. இன்னொரு வகையில் சொல்வதானால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குள் மூன்று நெருக்கடிகள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உயிரழிவுகள், பொருளாதார வீழ்ச்சி சார்ந்தவற்றைப் பொதுவான பாதிப்புகளாகச் சுட்டமுடியும். தவிர உலகமயமாக்கலின் தன்மைகள், உலக அமைதிக்குப் பங்கம், நாடுகளுக்கிடையிலான உறவுகளில் இந்நெருக்கடிகள் விளைவுகளை ஏற்படுத்தின. புதிய இயல்பு அல்லது புதிய வழமை கொரோனா நெருக்கடியின் விளைவுகள் உலகளாவிய மாற்றத்திற்குரிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.…
-
- 0 replies
- 453 views
-
-
இலங்கையில் புாிய அரசியலமைப்பு உருவாக்கலின் விவாதப் பொருள்கள் கடந்த 7 வருடங்களுக்குள் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பேணி வளர்ப்பதை நோக்காகக் கொண்டு அரசியல் ஒழுங்கை அமைப்பியல் ரீதியாக மறுசீரமைப்புச் செய்வதற்கு இலங்கைக்கு இருவாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முதல் வாய்ப்பும். 2015 ஆம் ஆண்டில் புதிய கூட்டரசாங்கம் பதவிக்கு வந்தபோது இரண்டாவது வாய்பும் கிடைத்தன. போரின் முடிவு மிகவும் முக்கியமான ஒரு திருப்புமுனையாகும். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியுடன் அதிகாரப் பரவலாக்கலுக்கும் இனங்களுக்குமிடையிலான நல்லிணக்கத்துக்கும் இருந்…
-
- 0 replies
- 538 views
-
-
வல்லாதிக்கச் சக்திகளும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் —ஆணையாளரின் பரிந்துரைகளை நிராகரித்துப் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கு மனித உரிமைச் சபையின் நிகழ்ச்சி நிரல் பத்தில் கூறப்பட்டுள்ள சர்வதேசத் தொழில் நுட்ப உதவிகளை மாத்திரம் இலங்கை கேட்கக்கூடும். அப்படிக் கோரினால் மனித உரிமைச் சபை அதற்கு இணக்கம் தெரிவிக்கக்கூடிய ஆபத்தும் உண்டு—- -அ.நிக்ஸன்- ஈழத்தமிழர்கள் இன அழிப்புக் கோரிக்கையில் பிடியாக நிற்காமல், இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லாதிக்கச் சக்திகளுக்கு ஏற்றவாறு செயற்படுகின்றமை இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு வாய்ப்பாகவே அமையும். குறிப்பாகச் சிங்கள அரசிய…
-
- 0 replies
- 608 views
-
-
தமிழர் அரசியல் எதை நோக்கி? - யதீந்திரா திருவிழா முடிவுற்றதும் அடியார்கள் காலாற ஓய்வெடுப்பதற்கும், தமிழர் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா? நிச்சயம் இருக்கின்றது. ஜெனிவா திருவிழா முடிந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக தமிழர் அரசியலானது, களத்திலும் புலத்திலும் கடும் பரபரப்பாக இருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஜெனிவா பற்றிய பேச்சுக்கள்தான். முதலில் பூச்சிய வரைபு சரியா – தவறா என்பதில் ஆரம்பித்த ஜெனிவா திருவிழா, இறுதியில் இந்தியா முதுகில் குத்திவிட்டது – தமிழர்கள் மீளவும் ஏமாற்றப்பட்டுவிட்டனர் – என்றவாறான விவாதங்களுடன் முற்றுப்பெற்றது. எப்போது மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதோ, அப்போதே தமிழ் …
-
- 0 replies
- 450 views
-
-
ஐ. நாவின் முகமும் தமிழ் மக்களின் மீட்சியும் - அருட்தந்தை மா. சத்திவேல் இலங்கை உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஐ. நா மனித உரிமைப் பேரவையில் 30/1 இல் ‘போரின் போது சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்கள், துஸ்பிரயோகங்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்குவதற்கு இலங்கையுடன் இணைந்து சர்வதேச நீதிபதிகள், பிரதிவாத தரப்பு சட்டத்தரணிகள் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குதல் வேண்டும்’ எனும் பிரேரணை இலங்கையின் அனுசரணையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாண்டு, கடந…
-
- 0 replies
- 398 views
-
-
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் தெட்டத் தெளிவாக விளங்கிக்கொள்ளபட்டிருக்கின்ற நிலையிலும் இன்றுவரை தமிழ் மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் உலக நாடுகள் உதவ முன்வராதது ஏன் என்பதை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் புரிந்துகொள்ளவேண்டிய காலம் ஏற்பட்டிருக்கிறது. உலகெங்கும் விடுதலைக்காக ஏங்குகின்ற மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு பலம் பொருந்திய வல்லரசு நாடுகள் துணை நின்றன. நிற்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் தேசிய சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கு இன்று வரை எந்தவொரு நாடும் ஆதரவு தரவில்லை. இதனால் சிறீலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் துணிந்து நின்று இலட்சக்கணக்கான தமிழ் மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிட்டு போராட்டத்தை அழித்திருக்கின்றன. இனியும் …
-
- 0 replies
- 972 views
-
-
பூகோள அரசியல்- புலிகளுக்கு வேறு வியாக்கியாணம் தலிபான்களுக்குச் சர்வதேச நீதி —ரஷியாவோடு இராணுவ ஒத்துழைப்புக்கான கலந்துரையாடலை இலங்கை மொஸ்கோவில் நடத்தியிருந்தது. இந்த உரையாடல் சீனாவுக்கான ஒத்துழைப்பாக இருக்கலாம் என்பதைவிட, அமெரிக்காவை மேலும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான கொழும்பின் உத்திகளில் ஒன்றாகவே கருதலாம்— -அ.நிக்ஸன்- ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்கலாம் என்று கருதப்படும் இந்திய இராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் சேஷர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் (Sher Mohammad Abbas Stanikzai…
-
- 0 replies
- 449 views
-
-
சாத்தியமாகுமா? திரு.ரவூப் ஹக்கீம்(முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்)
-
- 0 replies
- 335 views
-
-
சாதனையும் வேதனையும் நல்லாட்சி அரசாங்கம் தனது பெயருக்கு ஏற்ற வகையில் நல்லாட்சியைப் புரிகின்றதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, அமைச்சர்கள் இராஜினாமா செய்வதிலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதிலும், அது சாதனைகள் புரிந்திருப்பதாகவே கருதப்படுகின்றது. ஆனால் இந்த சாதனைகள் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் வழிவகுப்பதாகத் தெரியவில்லை. மத்திய வங்கி விவகாரத்தில் இடம்பெற்ற ஊழல்களில் சம்பந்தப்பட்டார் என அரசாங்கத் தரப்பினராலேயே முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாக வெளிவிவகார அமைச்சசர் ரவி கருணாநாயக்க தனது …
-
- 0 replies
- 386 views
-
-
தமிழ் மக்கள் பேரவையும் புதிய அரசியல் அணி உருவாக்கமும் – நிக்ஸன் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் மாத்திரமே வெற்றி பெறலாம் என ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் கருதுகின்றன. ஆனால் தேர்தல் அல்ல மக்களை ஒன்று திரட்டி அரசியல் கோரிக்கையை உறுதிப்படுத்துவதே பிரதானமாகும். அ.நிக்ஸன். தேர்தலில் வெற்றி பெறுவதை மாத்திரம் மையமாக வைத்து செயற்படுவதால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்குவதில் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் தயக்கம் காண்ப்பிக்கின்றன. தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டாமல் வேறு சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது என்ற மன நிலை அந்தக் கட்சிகளிடம் ஆழ பதிந்துள்ளது. …
-
- 0 replies
- 510 views
-
-
‘மூலதனம்’ - 150 ஆண்டுகள்: உலகை புரட்டிய புத்தகம் உலகத்தில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சிலவே காலம் கடந்தும் நிலைக்கின்றன. அதிலும் வெகுசிலவே பலரால் அறியப்படுகின்றன. வரலாறு தன் கொடுங்கரங்களால், எத்தனையோ நூல்களை அறியப்படாமல் ஆக்கியிருக்கிறது. திட்டமிட்ட பரப்புரைகளும் விஷமத்தனங்களும் பல நூல்களை, மக்களின் வாசிப்புக்கே எட்டாமல் செய்திருக்கின்றன. உலகில் அதிகளவான விமர்சனத்துக்கும் அவதூறுகளுக்கும் திரிப்புக்கும் ஆளாகியும் இன்றும் புதுப்பொலிவுடன் ஒரு நூல் திகழ்கின்றது என்றால், அந்நூலின் சிறப்பை விவரிக்க வேண்டியதில்லை. காலங்கள் பல கடந்து, மாற்றங்கள் பல கண்டு, ஒன்றரை நூற்றாண்டுகளாக ஒரு புத்தகத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை ராணுவத்தின் தந்திரங்கள் நிறைந்த மன்னார் புதைகுழி ! [Tuesday, 2014-03-11 21:14:45] படுகொலைகளின் நிலங்களாக இலங்கை இருந்து வருகிறது என்பதற்கு சமீபகால சான்று மனித புதைகுழிகள். இதுவரை மன்னார்,திருகோணமலை,முல்லைத்தீவு, மாத்தளை (சிங்களப் பகுதி)' என பல இடங்களில் மனித புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதைகுழிகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இத்தனை நாள் சொல்லி வந்த இலங்கை அரசும் ராணுவமும், ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடர் நெருங்கியதிலிருந்து 'இந்த புதைகுழிகள் புலிகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்' என பிரச்சாரம் செய்து வருகிறது. அவ்வாறாக கடந்த வாரத்தில் கொழும்பு-பி.டி.ஐ. , 'மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட புதைகுழி புலிகள் வலுவாக நிலைக்கொண…
-
- 0 replies
- 667 views
-
-
மக்களிடம் உள்ள துருப்பு சீட்டு யாருக்கு…? நரேன்- மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற இருக்கின்ற முதலாவது தேர்தலான உள்ளூராட்சி சபைத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றது. இழந்த செல்வாக்கை மீள நிலை நிறுத்துவதற்கும், இருக்கும் செல்வாக்கை தக்க வைப்பதற்கும், தமக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கும் என அரசியல் கட்சிகளும், அரசியல் கூட்டுக்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விடயத்தில் தென்னிலங்கை, வடக்கு – கிழக்கு என்ற வேறுபாடின்றி இரு பகுதிகளில் ஒரே விதமான செயற்பாடுகள் நடைபெறுவதையே அண்மைய அரசியல் நகர்வுகளும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றன. முன…
-
- 0 replies
- 303 views
-
-
அடுத்த கட்டம் என்ன? பி.மாணிக்கவாசகம் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியிருந்த ஜனாதிபதியின் கேள்விக்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பதில் பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 6 வருடங்களுக்கு பதவியில் நீடித்திருக்க முடியுமா, என்பதற்கு சட்ட ரீதியான விளக்கம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார். ஜனாதிபதியின் சட்டரீதியான பொருள்கோடல் கேள்வியைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம் தற்போது பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி 5 வருடங்கள் மாத்திரம…
-
- 0 replies
- 414 views
-
-
இடைக்கால அறிக்கை இடைத்தங்கல் ஆகுமா? சர்வதேச ரீதியில் ஐ.நா. வில் இலங்கை போர்க்குற்றத்தையும் ஏற்றுக்கொண்டு பொறுப்புக் கூறலையும் ஒப்புக்கொண்டு இணை அனுசரணையையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. போருக்கான காரணம் பேரின யாப்பே எனக் கருதித்தான் பல்லின வடிவம் சர்வதேசத்தால் வலியுறுத்தப்படுகிறது. இம்மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை ஐ.நா. வில் இலங்கைக்கு மேலும் நெருக்குதல் காத்திருக்கிறது. இத்தகைய இக்கட்டான காலகட்டத்திலும் கூட சர்வதேசம் ஏற்றுக் கொள்ளும் வடிவம் முன்வைக்கப்படாவிட்டால் அதிக சாதகம் தமிழ் தரப்புக்கே என சம்பந்தன் கருதுகிறார்போல் தெரிகிறது. தமிழ் ஆயுதப் போராளிகளின் காலத…
-
- 0 replies
- 381 views
-
-
மக்களின் உணர்வுகளை மதிக்குமா -வடக்கு மாகாணசபை? வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் இன்னமும் மூன்றே மாதங்களில் நிறைவு பெறவுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஒருவரின் பதவி நீக்கம் தொடர்பான சர்ச்சை, அதன் நிர்வாகச் செயற்பாடுகளை முடக்கி வைத்துள்ளதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்யும் விதத்தில் செயற்படும் முதலமைச்சர் இந்த விடயத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகத் தெரியவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டியது இல…
-
- 0 replies
- 713 views
-
-
அமைச்சர் பதவி என்ற ' பரிசு' கடந்த வருட இறுதியில் மூண்ட அரசியல் நெருக்கடியில் இருந்து பெரும் போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க எதிர்நோக்குகின்ற பெரும் பிரச்சினைகளில் ஒன்று அமைச்சர் பதவி தங்களுக்கு தரப்படவில்லை என்பதால் குமுறிக்கொண்டிருக்கின்ற தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சமாளிக்கமுடியாமல் இருப்பது ஆகும். அரசியல் நெருக்கடியின்போது மறுதரப்புக்கு தாவாமல் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நின்றதற்காக தங்களை அமைச்சர்களாக்க வேண்டும் என்று அவர்களில் பலர் பகிரங்கமாகவே கேட்டிருக்கிறார்கள். வெகுவிரைவில் பதவி தரப்படாவிட்டால் ' கடுமையான முடிவை ' எடுக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கை விடுப்பதற்கும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தய…
-
- 0 replies
- 628 views
-
-
பேரவையின் எழுக தமிழ் – 2019 – எதிர்கொள்ளப் போகும் உண்மையான சவால்? - யதீந்திரா இலங்கைத் தீவு மீண்டுமொரு தீர்க்கமான தேர்தல் ஒன்றை எதிர்கொண்டிருக்கின்ற சூழலில் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை மீண்டுமொரு எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. இதன் வெற்றி தோல்வி எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் பலவாறான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இது வெற்றியளிக்குமாக? ஒரு வேளை வெற்றியளிக்காவிட்டால் அது விக்கினேஸ்வரனை பலவீனப்படுத்திவிடாதா? இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்கள் பேரவையால் இதனை திறம்பட முன்கொண்டு செல்ல முடியுமா ? இப்படியான கேள்விகளை ஆங்காங்கே காண முடிகிறது. முதலில் இவ்வாறான கேள்விகள் ஏன் வெளிவருகின்றன என்று பார்ப்போம்! 2016இல் இடம்பெற்ற எ…
-
- 0 replies
- 389 views
-
-
தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா? அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்? December 26, 2024 1:27 pm தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் இன்றைய அந்நிய கையிருப்பு 800 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்தியாவின் வளர்ச்சியானது ஆசிய பிராந்தியத்துக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதுடன், இலங்கை, நேபாளம், மாலைத்தீவு, பங்களாதேஸ் உட்பட பல தெற்காசிய நாடுகளில் பொருளாதாரத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வதற்கான வாய்ப்புகளும் உர…
-
- 0 replies
- 236 views
-
-
கல்முனை தமிழ்ப் பிரிவு: துருப்புச் சீட்டா? -ரி. ஜெயந்தன் வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும், ஒற்றுமையாக ஓரணியில் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்வது என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித்தை ஏகமானதாக ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியதை அடுத்து, தமிழர்களின் வாக்கு யாருக்கு என்ற கருத்துகள், வௌிவரத் தொடங்கியிருக்கின்றன. அப்படியானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை விரைவில் அறிவிக்கும் என்று நம்புவோம். 13 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றுவது பற்றிய எதிர்பார்ப்புடன், ஜனாதிபதித் தேர்தல் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்த, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு, கோரிக்கைகள் நிறைவேறவில்லை. அதனால், விஞ்ஞாபனங்களில் உள்ளவற்…
-
- 0 replies
- 548 views
-
-
இது கார்த்திகை 27, வானம் மட்டுமல்ல தமிழர் நெஞ்சமும் கனக்கும் நாள். உறவுகள் – சொந்தங்கள் மட்டுமல்ல மேகமும் கண்ணீர் சிந்தும் நாள். தமிழன் தன்னைத் தானே ஆள்வதற்காகவும் – உரிமைகளுடன் வாழ்வதற்காகவும் நம் அண்ணன்களும் – அக்காக்களும் செங்குருதியை பூமிக்கு தாரை வார்த்து, மண்ணுக்கு விதையானமையை நினைவுகூரும் நாள். ஆம் இன்று மாவீரர் நாள்… தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் நினைவுகூரும் தினம். தாயக விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கியர்களை நாம் நினைவுகொள்ளும் புனிதநாள். உலக நாடுகளையே வியப்பிலும் ஆச்சரியத்திலும் தள்ளி வீரச்செயல்களைப் புரிந்த சாதனை மனிதர்களை நினைவில் கொள்ளும் நாள். இனமானம் ஒன்றே வாழ்வு எனக் கொண்டு சுடுகலன் …
-
- 0 replies
- 543 views
-
-
இராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறதா நாடு? கே. சஞ்சயன் / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 04:55 - 0 - 45 நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம், அரசாங்கத்துக்குக் கிடையாது என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூற வேண்டிய நிலை, ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர், இரண்டு விதமான தலையீடுகள் அதிகரித்திருக்கின்றன. முதலாவது, அரசியலில் ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஆதிக்கம்; ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகிய பதவிகளில் ராஜபக்ஷவினரே இருக்கிறார்கள். இரண்டாவது, நாட்டின் நி…
-
- 0 replies
- 688 views
-
-
இந்தியாவில் இலங்கை அகதிகள் இரட்டைக் குடியுரிமை விவாதங்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன். இலங்கையில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பற்றிய விவாதங்கள் பரவலாக இடம்பெறுகிறது. தந்தி தொலைக்காட்ச்சி எனது கருத்தையும் பதிவு செய்தது. பதிவின் சுறு பகுதி ஒலிபரப்பானது. யாழ் இணைய தோழ தோழியர்களுக்காக. .
-
- 0 replies
- 666 views
-
-
[size="4"]உன்னதங்களுக்காகப் போராடுவோம்[/size] ஈழத்தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டபின்னடைவு காரணமாகத் தோன்றியுள்ள மனச்சோர்வுகள்,குழப்பங்கள்,விரக்திகள் என்பவற்றிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு,மீண்டும் புத்துணர்ச்சியுடனும்,புதுவேகத்துடனும் எழுந்து முன் செல்லவேண்டியது நம் கடமையாகும்.நம் தாயகத்தில் அரக்கத்தனமான அடக்- குமுறை நிலவுவதால், புலம்பெயர்தமிழர்கள் கைகளிலேயே விடுதலைப்போராட்- டத்திற்கான முழுப்பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் புரிந்- துகொள்ளவேண்டும்.நாம் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளிலுள்ள மக்களாட்சிவழி- முறைகள் நமக்கு அதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. நாம் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, அமை…
-
- 0 replies
- 897 views
-