Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இதயசுத்தி இல்லாமல் இனப்பிரச்சினைக்கு இணக்கப்பாடு இல்லை - காரை துர்க்கா ஓர் ஊரில் திரு திருமதி இலங்கை என்ற பெற்றோர்களுக்கு மூன்று அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்குச் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பெற்றோர்கள் பெயரிட்டனர். மூன்று சகோதரர்களும் தங்களுக்குள் அன்பாக, ஒற்றுமையாக இருந்தனர். ஆனால், பெற்றோர்கள் மூத்த பிள்ளையாகிய சிங்களவர் மீது அன்பையும் அரவணைப்பையும் செலுத்திக் கொண்டு ஏனைய பிள்ளைகளாகிய தமிழர் முஸ்லிம் மீது கோபத்தையும் வெறுப்பையும் காட்டினர். அதுவே, நாளடைவில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுக்கிடையில் - சகோதரங்களுக்கிடையில் சண்டைகளையும் சந்தேகங்களையும் குரோத மனப்பான்மைகளையும் வளர்த்தன. இதுவே, இ…

  2. இன்னொரு படுகொலைக்குத் தயாராகிறதா இலங்கை அரசு? மிக அண்மைய ஒரு சில அரசியல் நிகழ்வுகளை கவனிக்கின்றபோது குறிப்பாக வடக்கு கிழக்கில், இலங்கை அரசு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை இம்மியளவும் பின்வாங்காத நிலையில் சிங்கள – பௌத்த கூட்டு உளவியல் பெரும்பாண்வாதத்தில் பலப்படுத்தப்பட்டு, தற்போதுள்ள அரசாங்கம் தன்னை வெளிப்படையாகவே சிங்கள – பௌத்த அரசாங்கமாக அடையாளப்படுத்தி மற்றெந்த அரசுகளையும் விட – சிங்கள – பௌத்த நிகழ்ச்சி நிரலை, சிங்கள – பௌத்த இலங்கை தேச – அரச கட்டுமானத்தை நோக்கி மிக வேகமாக நகர்த்திச் செல்கின்றது. டொனால்ட் ட்ரம்ப் வீழ்ச்சி கூட இந்த அரசாங்கத்திற்கு பட்டறிவைக் கொடுக்கவில்லையோ எனத் தோன்றுகின்றது. நினைவுகூரல் தொடர்பில் ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினத்தை ஒட்டியும், மு…

  3. அடிமையாகிய நான்! டைரக்டர் ராமின் அருமையான பேச்சு

    • 0 replies
    • 580 views
  4. இப்போது புரிகிறதா அரசாங்கத்தின் நிலைப்பாடு? பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கும் இடையிலான பனிப்போர், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக, இரண்டு பேருமே ஒருவர் மீது ஒருவர், போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று, பகிரங்கமாகக் கருத்துகளை வெளியிடத் தொடங்கியிருக்கின்றனர். பிரேஸில் உள்ளிட்ட ஐந்து நாடுகளில், தமக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது, அதனை நிராகரித்த, ஜெனரல் ஜகத் ஜயசூரிய, போருக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தால், இந்த விவகாரம் அப்படியே ஓய்ந்திருக்கும். ஆனால் அவர், போரை கொழும்பில் இருந்து வழிநடத்தியத…

  5. அரகலய தாக்குப் பிடிக்குமா? எதிர்காலம் என்ன? Photo courtesy of Anoma Wijewardene கொழும்பின் புறநகரில் தொடங்கிய சிறிய, உள்ளூர்மயமாக்கப்பட்ட போராட்டத்திலிருந்து, அரகலய அல்லது போராட்டம், நூலகம், முதலுதவி மையம், சினிமா, சட்ட உதவி அலுவலகம், பல்கலைக்கழகம், மறுசுழற்சி மையம் ஆகியவற்றுடன் கோட்டா கோ கம (GGG) என்ற சிறிய கிராமமாக வளர்ந்துள்ளது. சமூக சமையலறை (Community Kitchen)மற்றும் கலைக்கூடம். காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் நடப்பட்டுள்ளன, இது கிராம மக்கள் நீண்ட காலமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறிய கூடாரங்கள் மரத்தாலான பலகைகள் மற்றும் மெல்லிய மெத்தைகளுடன் ஆன படுக்கைகளை கொண்டுள்ளன…

    • 0 replies
    • 315 views
  6. தேர்தலுக்குப் பின்னர் அரசின் நிலை என்ன? உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் கொழும்பு அர­சியல் களம் எப்­ப­டி­யான மாற்­றத்தைச் சந்­திக்கும் என்ற கேள்வி பர­வ­லாக எதி­ரொ­லிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இப்­போது ஆட்­சியில் உள்ள கூட்டு அர­சாங்கம் நிலைத்­தி­ருக்­குமா? இல்­லையா? என்­பதே முதற் கேள்­வி­யாக இருக்­கி­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் செய்து கொண்ட கூட்டு அர­சாங்­கத்தை அமைக்கும் உடன்­பாடு டிசம்பர் 31ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யாகி விட்­டது. அதனை இரண்டு கட்­சி­களும் புதுப்­பிக்­க­வில்லை. உடன்­பாட்டை நீடிப்­பது தொடர்­பான ஆவணம் ஏதும் தனக்கு அனுப்­பப்­ப­ட­வில்லை என்று சபா­நா­யகர் கரு ஜய …

  7. குழப்பத்தில் தமிழ் மக்கள் பேரவை உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் நடந்த தமிழ் மக்கள் பேர­வையின் கூட்டம் பெரும் பர­ப­ரப்­பையும், விமர்­ச­னங்­க­ளையும் தோன்­று­வித்­தி­ருக்­கி­றது. காரணம், பேர­வையில் அங்கம் வகிக்கும் பங்­கா­ளி­க­ளுக்குள் தோன்­றி­யுள்ள முரண்­பா­டுகள் தான். இதனால், தமிழ் மக்கள் பேர­வையின் எதிர்­காலம் குறித்த கேள்­விகள் எழுப்­பப்­ப­டு­கின்ற நிலையும் தோன்­றி­யி­ருக்­கி­றது. தமிழ் மக்கள் பேரவை உரு­வாக்­கப்­பட்­டதே, ஒரு குழப்­ப­மான அர­சியல் நிகழ்ச்சி நிர­லுடன் தான். பேரவை உரு­வாக்­கப்­பட்­டதன் பின்­ன­ணியும், அதற்குப் பின்னால் இருந்த தரப்­பு­களும், தமிழ்த் தேசிய அர­சி­யலை வலுப்­ப­டுத்­து­வது என்ற பெயரில், முன்­னெ­டுத்த…

  8. http://www.eelampage.com/?cn=28488 http://www.tamilnaatham.com/articles/2006/...chandran/28.htm இது எமது யுகம். எவ்வளவு மன்றாடிணோம்...மன்றாடுகிறோம

    • 0 replies
    • 1.2k views
  9. கூட்டமைப்பின் பிடி; முன்னணியின் சறுக்கல் அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணமாகக் கொள்ளலாம். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. முக்கியமாக, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் தோல்வியடைந்திருந்தது. யாழ். மாநகர சபையில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தது. இவ்வாறான நிலையில், யாழ். மாநகர சபையில் மாத…

  10. குறிப்பால் உணர்த்தல் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், இம்முறை வசந்த காலத்தில், நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்றோரின் தொகை மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. குறிப்பாக, முஸ்லிம்கள் வழமைபோல, நுவரெலியாவுக்குச் செல்லவில்லை என்பது வெள்ளிடைமலை. நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள், கூட்டிணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கை, வெற்றியளித்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகின்ற சமகாலத்தில், “இது ஒரு வேண்டத்தகாத நிலைப்பாடு” என்றும் சிலர், அபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றனர். அதாவது, நியூட்டனின் இரண்டாம் விதி வேலை செய்யத் தொடங்கி இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்…

  11. வடக்கு மக்­களை அர­வ­ணைக்­கப் பார்க்­கின்­றாரா தலைமை அமைச்­சர்? வடக்கை அபி­வி­ருத்தி செய்­வதே தமது அர­சின் பிர­தான இலக்கு எனக் கூறி­யி­ருக்­கி­றார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. வடக்­கின் அபி­வி­ருத்தி தொடர்­பான அர­சின் திடீர் கரி­ச­னையை ரணி­லின் கருத்து வௌிப்­ப­டுத்­து­கின்­றது. நாட்­டில் வட­ப­கு­தியே முழு நாட்­டி­லும் அபி­வி­ருத்­தி­யில் அதிக பாதிப்­பைச் சந்­தித்­தது நாட்­டின் ஏனைய பகு­தி­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது, வட­ப­குதி அபி­வி­ருத்தி குன்­றிய நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. போரைக் கார­ணங்­காட்­டியே நெடுங்­கா­ல­…

  12. சதிப்புரட்சியின் தோல்வியில் கோட்டாபயவின் எழுச்சி புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 16 புதன்கிழமை, மு.ப. 06:35 கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன. கடந்த காலத்தைப் போலல்லாது, இம்முறை அந்த உரையாடல்கள் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றன. நாட்டு மக்கள் விரும்பினால், ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, அவர் கடந்த வாரம் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக, ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய உரையாடல்களில் கோட்டாபயவின் பெயர் உச்சரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதற்காகவே, ‘வியத்கம’ என்கிற அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனாலும், தன்னுடைய விரு…

  13. இரட்டை நிர்வாகத்தில் இலங்கைத்தீவு கே. சஞ்சயன் / 2019 பெப்ரவரி 03 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:50 Comments - 0 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபுறமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னொருபுறமும் அரச நிர்வாகத்தை முன்கொண்டுச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர், இப்படியொரு நிலை இருக்கவில்லை. கூட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள், கிட்டத்தட்ட ஒருமித்த வகையிலேயே முன்னெடுக்கப்பட்டன. சில சமயங்களில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டபோதும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒருமித்த நிலை இருந்தது. எனினும், பிரதமர் ரணில், தன்னிச்சையாகச் செயற்பட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒக்டோபர் 26 ஆட்சிக் …

  14. அரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மார்ச் 20 புதன்கிழமை, பி.ப. 06:40 Comments - 0 அரசாங்க தூதுக் குழுவின், குழுக்களின் ஜெனீவாப் பயணம், விசித்திரமானதொரு நாடகமாகவிருந்த போதிலும், இறுதி நேரத்தில் அது தவிர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பில் ஒரு தூதுக்குழுவும் ஜனாதிபதியின் சார்பில் மற்றொரு குழுவுமாக இரண்டு குழுக்கள், முன்னர் ஜெனீவா செல்லவிருந்தன. இப்போது ஒரு குழு தான், ஜெனீவா சென்றுள்ளது. 2015ஆம் ஆண்டு, அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கி, நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற, அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் தேவை என்கிறது. …

  15. போராட்டங்களுக்கும் தமிழ் மக்களுக்குமான இடைவெளி? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:03 மூன்றாவது எழுக தமிழ்ப் போராட்டத்தில், மக்களைப் பங்கெடுக்கக் கோரும் பத்திரிகை விளம்பரங்கள், கடந்த வாரம் வெளியாகியிருந்தன. எதிர்வரும் 16ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் முற்றவெளியை நோக்கி தமிழ் மக்கள் திரள வேண்டும் என்று, அந்த விளம்பரங்கள் கோருகின்றன. அந்த விளம்பரங்களை முன்வைத்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அரசியல் நையாண்டிப் பதிவுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, மக்கள் எழுச்சிப் போராட்டமொன்றுக்குப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, கூட்டம் சேர்க்க வேண்டிய நிலைக்கு, தமிழ் மக்கள் பேரவையும் அதன் இணைச் சக்திகளும் வந…

  16. எழுக தமிழின் பின்னரான சூழலில், விக்கினேஸ்வரன் செய்ய வேண்டியது என்ன? யதீந்திரா பல்வேறு எதிர் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் எழுக தமிழ் – 2019 நடந்தேறிவிட்டது. எழுக தமிழ் 2016இன் போது ஒன்றுதிரண்ட மக்கள் இம்முறை ஒன்றுதிரளவில்லை என்னும் அவதானம் பலராலும் முன்வைக்கப்படுகிறது. அது உண்மைதான். ஆனால் இதற்கு பலவாறான காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ் மக்கள் பேரவை ஒப்பீட்டடிப்படையில் முன்னரை விடவும் மிகவும் பலவீனமாக இருந்த ஒரு சூழலில்தான் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த எழுக தமிழின் போது, மக்களை அணிதிரட்டுவதில் பங்களித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகியவை இம்முறை எழுக தமிழில் பங்குகொண்டிருக்கவில…

  17. முடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள் -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றுப் பின்புலத்தில், வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைப்பு முயற்சியானது, பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என்று கடந்த காலங்களில், இளைஞர் முன்னெடுப்புகளைத் தட்டிக் கழித்த தமிழ்த் தலைமைகள், இன்று அவர்களின் அழைப்பில்பேரில் ஒன்றுபட்டது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாராட்டத்தக்கது; ஒரு முற்போக்கான முயற்சியாகவும் அமைந்துள்ளது. தமிழ் வாக்குகள் பிளவுபடாமல், கணிசமான அளவில் ஒன்றிணைப்பதுடன், தமிழர் தம் பலத்தை ஒரே குரலாய், சிங்கள தேசத்துக்கும், சர்வதேசத்துக…

  18. சமாதானம் உருவாகுமா? sudumanal மாறிவரும் பூகோள அரசியல் THanks for image: Aljazeera தான் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரசியா போரை சமாதானம் மூலம் முடிவுக்கு கொண்டுவருவேன் என ட்றம்ப் தேர்தலுக்கு முன் கூறிவந்தார். அது அவளவு இலகுவில் முடியாமல் போனது. ஏன், இப்போதும் அது சாத்தியமற்றது என்பதிலிருந்து சாத்தியமானது என்ற எல்லைக்கள் வந்தபாடில்லை. அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என பலரும் நினைத்திருந்தார்கள். அது உண்மையில் நேற்றோவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என்ற வியாபகத்தைக் கொண்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கான அச்சுறுத்தலாக ரசியா இருக்கிறது என அமெரிக்காவால் ஒருபோதும் பர்க்கப்படவில்லை. மாறாக ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத…

  19. கலைஞர் குற்றச்சாட்ட வேண்டியது இந்திய உளவுத்துறையே! Fri, 05/02/2008 - 06:58 — அரசியல் அலசல் - வி. சபேசன் `இலங்கையில் அமைதி ஏற்படுவதற்காக அங்கு மோதலில் ஈடுபடும் இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தீர்மானத்திற்கான விவாதத்தின் போதுசர்ச்சைக்குரிய பல விடயங்கள் தமிழ்நாட்டின் சட்டசபையில் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த அநியாயங்கள் பற்றி பேசியவர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் பிழையான ஒரு வரலாற்றுத் தகவல் அவைக் குறிப்பில் பதியப்பட்டு விட்…

    • 0 replies
    • 911 views
  20. உள்ளகப் போட்டியால் தடுமாறும் தமிழ் அரசியல் பாரா­ளு­மன்றத் தேர்தல் வரப்­போ­வது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில், யாழ்ப்­பா­ணத்தில் அர­சியல் கருத்­த­ரங்­குகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் பெரி­ய­ள­வி­லான கருத்­த­ரங்கு நடத்­தப்­பட்­டது. வட­ம­ராட்சி, வலி­காமம், தென்­ம­ராட்சி என பிர­தேச ரீதி­யா­கவும் அர­சியல் கருத்­த­ரங்­குகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. இங்­கெல்லாம், கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் தான், பிர­தான பேச்­சா­ள­ராகப் பங்­கேற்று வரு­கிறார். கருத்­தா­ளர்­களின் விமர்­ச­னங்­க­ளுக்கு பதி­ல­ளித்­தி­ருந்தார். பிறர் மீது அவர் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கவும் தவ­ற­வில்லை.…

  21. கொழும்பிலுள்ள வெளிநாட்டுத்தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்வதும், அங்கு சந்திப்புகளை நிகழ்த்துவதும் வழக்கமானதொரு விடயமாக இருந்தாலும், கடந்த வாரம் சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தை வழக்கமானதொன்றாக எடுத்துக்கொள்ள முடியாது. சீனத் தூதுவர் யி ஷியான்லியாங், சீனத் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் லி செங்லின் உள்ளிட்ட தமது அதிகாரிகளுடன், கடந்த 14ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். அவர் அங்கு மூன்று முக்கிய தரப்பினரைச் சந்தித்துப் பேசினார். வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட குரே, யா்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன். சீனத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு மே…

  22. தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தது தமிழ் மக்கள் பேரவை! Posted on July 19, 2020 by நிலையவள் 6 0 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் தமிழ் மக்கள் பேரவையால் ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் அரசியல் கடந்து எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை இலக்காகக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையானது மக்களிடம் அன்புரிமையுடன் பின்வரும் 5 கோரிக்கைகளை முன்வைத்து நிற்கின்றது. 1. தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் அணிதிரண்டு தவறாமல் வாக்களிப்போம் என உறுதிபூணுவோம். எமது பிரதேசத்தில் இயங்கும் பொது அமைப்புக்கள் தொடர்ந்து தமிழ் மக…

    • 0 replies
    • 370 views
  23. சிறீலங்கா தொடர்பாக இதுவரை நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயங்கள்-விராஜ் மென்டிஸ் October 22, 2020 43 Views ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பாக, போர்க்குற்றத் தீர்ப்பாயத்தை முன்னெடுப்பது என்ற எண்ணத்தின் ஆரம்பப்புள்ளி, ஜேர்மனியின் பிரேமன் (Bremen) நகரத்தில், 2009 ஜூன் மாதத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் இடப்பட்டது. அப்போது நாங்கள் எதிர்கொண்டிருந்த மிகவும் கொடூரமான இனவழிப்பை எதிர்கொள்வதற்காக சிறீலங்காவின் அமைதிக்கான அயர்லாந்து ஆர்வலர்கள் குழாமைச் சேர்நதவர்கள் (Irish Forum for Peace in Sri Lanka), பிரேமன் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பைச் (International Human Righrs Association in Bremen) சார்ந்த ஆர்வலர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டார்…

  24. முஸ்லிம்களுக்கு ஆபத்தான சட்டம் இலங்­கையில் 1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் 1979 ஜூலை மாதம் நிறை­வேற்­றப்­பட்­டது. நாட்டில் ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்­வ­தற்­கா­கவே இச்­சட்டம் கொண்டுவரப்­பட்­டது. யாரையும் கேள்­வி­யின்றி கைது செய்­யவும், தடுத்து வைக்­கவும் இச்­சட்­டத்தில் ஏற்­பா­டு­க­ளுண்டு. இதனால், இச்­சட்­டத்தை பயன்­ப­டுத்தி பல இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்­டார்கள். இன்றும் இச்­சட்­டத்தின் மூல­மாக கைது செய்­யப்­பட்­ட­வர்கள் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்கள். அத்­தோடு அவ­சரகால சட்­டமும் நாட்டில் கொண்டு வரப்­பட்­டது. இந்த சட்­டமும், பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டமும் தனி­ந­பர்­களை கைது செய்­ய…

  25. சீனத் தலையீடு: சிக்கலாகின்றதோ சம்பளப் பிரச்சினை? -மலைமகன் 81 Views பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். சமூக, அரசியல், பொருளாதார ரீதியாகவும், அடிப்படை மனித வாழ்வுரிமை ரீதியிலும் அவர்களுடைய வாழ்க்கை மிக மோசமான நிலைமையில் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். தோட்டத் தொழிலாளர்களே நாட்டின் அந்நியச் செலவாணியை ஈட்டித் தருகின்ற தொழிற்துறையின் முதுகெலும்பாகத் திகழ்கின்றார்கள். இலங்கையின் தோட்டத்துறை என்பது இருநூறு ஆண்டு பழைமை வாய்ந்தது. ஆங்கிலேயர்களினால் முதன் முதலில் கோப்பிச் செய்கையின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தோட்டத்துறை, பின்னர் தேயிலை மற்றும் றப்பர் உற்பத்தித் து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.