அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
வடக்குக்கு வந்துள்ள ஆபத்து கே. சஞ்சயன் / காலநிலை மாற்றங்களால், அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பன மோசமான நிலையை எட்டும் என்று, உலக வங்கியின் அண்மைய அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. “வெப்பநிலை, மழைவீழ்ச்சி மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள்” என்ற தலைப்பில், அண்மையில் உலக வங்கி, ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. தெற்காசியாவில், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் குறித்து, தனித்தனியான அறிக்கைகளாக வெளியிடப்பட்டன. இந்த அறிக்கையில், 2050ஆம் ஆண்டில், இலங்கை எதிர்கொள்ளப் போகின்ற மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் தெளிவாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த…
-
- 0 replies
- 784 views
-
-
மாலேயில் செய்ததை புதுடில்லி கொழும்பில் செய்யமுடியாது - கொன்ஸரான்ரினோ சேவியர் இலங்கையின் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், உலகின் கண்கள் கொழும்பை மாத்திரமல்ல, புதுடில்லியையும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன. அயல்நாடுகளுடனான உறவுகளுக்கு முதன்மை கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது மாலைதீவில் எதேச்சாதிகாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தலையீடு செய்து வெற்றிகண்டதைப் போன்று கொழும்பிலும் இந்தியா செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனநாயக மீட்சியை நோக்கி நெருக்குதலைப் பிரயோகிக்க இந்தியாவினால் இயலுமாக இருந்தது என்று மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி …
-
- 0 replies
- 753 views
-
-
தந்தை செல்வநாயகம் அவர்களின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது. தமிழரசுக்கட்சியின் மதிப்பார்ந்த தலைவனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இந்த விடயத்தை ஆராய்வது காலப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் 'தமிழ்த் தேசிய இனம்' என்ற வார்த்தைப் பிரயோகம், தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண நாளில் இருந்தே பாவனையிலிருந்து வருகின்றது. 18.12.1949அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் முதலாவது கூட்டத்தில் கட்சியின் அமைப்புத் தீர்மானத்தை பிரேரித்துப் பேசிய தந்தை செல்வநாயகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''நாட்டின் ஒற்றுமைக்குப் பாதகமற்ற முறையில் இந்த அடிப்படைப் பிரச்சினைகளை நீதியாகவும் ஜனநாயக ரீதியாக…
-
- 0 replies
- 459 views
-
-
சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’: புதிய பாதையா, புதிய ஒழுங்கா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மே 02 வியாழக்கிழமை, பி.ப. 06:22 Comments - 0 உலக ஒழுங்கு நிரந்தரமானதல்ல; அது வரலாறு நெடுகிலும் மாறிவந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான கெடுபிடிக்காலம், என்றென்றும் நிலைக்கவில்லை. அதைத் தொடர்ந்த அமெரிக்க மய்ய ஒற்றை அதிகார உலகும், நீண்டகாலம் நிலைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு திகதி உண்டு. அதேபோல, காலமாற்றம் புதிய உலக ஒழுங்குகளை உருவாக்கும். பல சமயங்களில், அவ்வாறு எதிர்பார்க்கப்படுபவை, ஒழுங்குகள் ஆவதில்லை. எதிர்பார்க்காதவை, ஒழுங்குகளாக மாறியுள்ளன. அவ்வகையில், உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் முனைப்புகளை அவதானத்துடன் நோக்க வேண்டியுள்…
-
- 0 replies
- 634 views
-
-
மோடியின் முதல் பயணமும் இலக்கும் கே. சஞ்சயன் / 2019 ஜூன் 07 வெள்ளிக்கிழமை, மு.ப. 04:31 Comments - 0 இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை வரும், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ளார். முதல் பயணமாக, மாலைதீவுக்குச் சென்று விட்டு, மறுநாள் அவர், இலங்கைக்கு வரப் போகிறார். ‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு ஏற்ப, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பயணம் அமையவுள்ளது. சீன ஆதரவு ஆட்சியாளரின் பிடியில் இருந்து மீண்ட மாலைதீவுக்குத் தான், இந்தியப் பிரதமரின் முதல் பயணம் இடம்பெறவுள்ளது. அங்கு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, புதிய ஜனாதிபதியாக, இப்ராஹிம் சோலே பதவியேற்கு…
-
- 0 replies
- 458 views
-
-
-
பூனைக்கு மணி கட்டுவது யார்? Dec 21, 2015 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உருவாக்கிய முரண்பாடுகள் இப்போது, உட்கட்சி விவகாரம் என்பதையும் தாண்டி, சர்வதேச விவகாரமாக மாற்றம் பெற்றிருக்கிறது. அண்மையில் வடக்கு மாகாணத்துக்குச் சென்றிருந்த இந்தியத் தூதுவர் வை.கே..சின்ஹா, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் யாழ்ப்பாணத்தில் நீண்டதொரு பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட, வடக்கு மாகாண முதலமைச்சர், கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுக்கக்கூடாது என்றும் அரசியல் தீர்வுக்காக ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய தருணம் இது என்று இந்தியத் தூதுவர் குறிப்பிட்டதாக தெரிவித்திருந்தார். …
-
- 0 replies
- 1.4k views
-
-
கனவு மெய்ப்பட வேண்டும்…! 2016 எனும், புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். புதினப்பலகை நிறுவக ஆசிரியர் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் இழப்பு உள்ளிட்ட சோகங்கள், தமிழர் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் ஏற்பட்ட பெரு வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், அரசியல் திருப்பங்கள், வரலாற்றுப் பாடங்கள் என பலவற்றைத்தந்த 2015ஆம் ஆண்டு நேற்றுடன் விடை பெற்றிருக்கிறது. சென்ற ஆண்டு- துன்பங்கள், துயரங்கள், வரலாற்றுத் திருப்பங்கள் என்பனவற்றை மட்டுமன்றி, படிப்பினைகளையும் தமிழர்களுக்குத் தந்திருக்கிறது. பிறந்துள்ள புதிய ஆண்டு , இலங்கைத் தீவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கப் போகிறது. ஏனென்றால், இந்த ஆண்டில், பல்வேறு வாக்குறுதிகளை நி…
-
- 0 replies
- 801 views
-
-
முள்ளிவாய்க்கால் போன்ற பல துயர சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என குரல் கொடுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.
-
- 0 replies
- 630 views
-
-
தங்களைத் தாங்களே திரட்ட முடியாத கட்சிகள் தமிழ் மக்களை எப்படித் திரட்டும்? - நிலாந்தன். - “ஐயா சிறீதரன் அவர்களைப் பற்றி நாலு வசனம் நல்லதாக எழுதினால் கட்சித் தீர்மானத்தை மீறியதாக எடுத்து கொள்வீர்களா?உங்களால் ஏன் மக்களின் மனதை வெல்ல முடியவில்லை என்பதை அமைதியாக இருக்க கூடிய நேரங்களில் யோசித்து பார்த்ததுண்டா? உண்மையில் நீங்களும் சிறீதரனும் தலைமை பதவிக்கு சண்டை பிடிக்கவில்லை என்றால் இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்? ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் இருப்பிற்காகவும் பாடுபட வேண்டிய கட்சி ஒன்று தலைமைப் பதவிக்காக நீதிமன்றத்தில் நின்றால் மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள்? உங்களின் நாய்ச் சண்டைகளால் தெரு நாய்கள் எல்லாம் வவுனியாவில் வந்து ஊளையிட்டுச் செல்கி…
-
- 0 replies
- 112 views
-
-
-
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
அன்னையரின் கண்ணீரைப் பிரிக்காதீர்கள் – நிலாந்தன் September 5, 2020 அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு நடந்து முடிந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாவை ஆதரிப்பதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது. அவ்வறிவித்தலின் பின்னணியில் தேர்தலுக்குப் பின் அண்மையில் அந்தச் சங்கத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டது. தேர்தலுக்கு முன் கிளிநொச்சியில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் சுமந்திரனுக்கும் சிறிதரனுக்கும் வாக்களிக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது என்று பகிரங்…
-
- 0 replies
- 506 views
-
-
ஜெனீவாவுக்குப் பிறகு, எங்கே கையேந்துவது? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த பத்தாண்டுகளாக, ஈழத்தமிழ் அரசியலின் மையப்புள்ளிகளில் ஒன்றாக ஜெனீவா இருந்துவருகின்றது. ஒருபுறம் இலங்கையில் இருந்து பிரமுகர்கள் அங்கு காவடியெடுக்க, ‘புலம்பெயர் புத்திமான்கள்’ நடைபவனி, பேரணி, ஈருளிப் பயணம் என ஐரோப்பியத் தலைநகரங்களில் இருந்து, ஜெனீவாவை நிறைத்தார்கள். ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு நன்மை விளையாது என, 2010ஆம் ஆண்டுமுதலே, சொல்லி வந்தவர்கள் இருக்கிறார்கள். இலங்கையைத் தங்கள் வழிக்குக் கொண்டுவருவதற்கான ஒரு களமாக, ஜெனீவா பயன்படுகிறது. அதற்கு தமிழர் பிரச்சினை ஒரு துரும்புச்சீட்டு மட்டுமே என்பதை, தொடர்ச்சியாக வலியுறுத்தியவர்களை, அரசியல் தெரியாதவர்கள், உலகறிவு அற்றவர்கள், தேசியத்தின் வி…
-
- 0 replies
- 470 views
-
-
-
- 0 replies
- 910 views
-
-
இலங்கை குறித்த இந்திய வெளியறவு கொள்கையில் மாற்றம் வருமா? –ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளி மேலும் மேலும் அதிகரிக்கும். ஆனால் இதற்குத் தீர்வு 13 அல்ல என்பதை புதுடில்லி புரிந்துகொள்ளாதவரை, இலங்கையின் துணிச்சலும் இந்தியாவைப் புறக்கணித்துச் செயற்படும் தன்மையும் மேலும் கையோங்கும்– -அ.நிக்ஸன்- இலங்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகக் காலம் கடந்து இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்தியில், பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான சுப்பிரமணியன் சுவாமியின் கொழும்பு வருகை ஆரோக்கியமான உறவை உருவாக்குமெனக் கூறமுடியாது. ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய ந…
-
- 0 replies
- 478 views
-
-
பிராயச்சித்தம் கண்களைத் திறந்து கொண்டு குழிக்குள் விழுவதென்பது சில அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையாகும். ‘குழி’ என்று தெரிந்து கொண்டே விழுந்து விட்டு, அதற்கான பழியை வேறொருவரின் தலையில் சுமத்தி விடுவதில், சில அரசியல்வாதிகள் விற்பன்னர்கள். குழிக்குள் தானும் விழுந்து, தான் சார்ந்த சமூகத்தையும் சேர்த்துத் தள்ளி விட்ட, அரசியல்வாதிகளும் நமக்குள் இல்லாமலில்லை. தங்கள் பலவீனங்கள் காரணமாக, அரசியல் எதிராளிகளிடம் சிக்கிக் கொள்கின்றவர்கள், பின்னர் எதிராளிகளின் மகுடிச் சத்தங்களுக்குப் படமெடுத்தாட வேண்டிய நிர்ப்பந்தங்களுக்குள் மாட்டிக்கொள்வதுண்டு. கண்களைத் திறந்து கொண்டு குழிக்குள் விழு…
-
- 0 replies
- 814 views
-
-
மியான்மாரில் தொடரும் அவலம் - ஜனகன் முத்துக்குமார் மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், அண்மையில் ஏற்பட்ட வன்முறை, பல்லாயிரக்கணக்கான றோகிஞ்சா பொதுமக்கள், பங்களாதேஷுக்குள் அடைக்கலம் தேடுவதற்கு வழிவகுத்துள்ளது. குறித்த வன்முறையானது, கடந்த மாத இறுதிப்பகுதியில் றோகிஞ்சா போராளிகள், மியான்மாரின் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி, அதில் 12 படையினர் கொல்லப்பட்டமையை அடுத்து ஆரம்பித்ததோடு, அதனைத் தொடர்ந்து ரோஹிங்யா போராளிகள், பாதுகாப்புப் படையினரின் தாக்குதல் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டமையை அடுத்து, மேலும் வலுப்பெற்றுள்ளது. அரசாங்கத்துக்கும் றோகிஞ்சா மக்களுக்குமிடையிலான முரண்பாடு, அரசாங்கமானது, …
-
- 0 replies
- 571 views
-
-
முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்பதற்காகத் தமது கருத்துகளை, ஒளித்து வைத்திருப்பது, புத்திசாதுரியமான செயற்பாடு அல்ல; அப்படிச் செய்வது சந்தர்ப்பவாதத்தின் உச்சமமாகும். ஒரே நேரத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள், நம்மை நயவஞ்சகர்களாக மாற்றி விடக்கூடும். சொல்ல வேண்டிய விடயத்தைச் சொல்ல வேண்டிய தருணத்தில், சொல்லாமல் விடுவதென்பது, நமக்கு நஷ்டத்தையே கொண்டு வரும். புதிய அரசமைப்புக்கான செயற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழ் அரசியல் தரப்புகள், தமது சமூகம் சார்பில், தமக்கான தேவைகளை உச்சபட்சம் முன்வைத்துள்ளன. இலங்கையானது, மாகாணங்களின் அல்லது மாநிலங்களின் ஒன்றியமாக இருத்தல…
-
- 0 replies
- 937 views
-
-
கோரிக்கைகளை முன்கொண்டு செல்வதில் தலைமைகளின் சிந்தனை மாறுமா? - க. அகரன் சிறுபான்மை இனத்தின் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் பெரும்பான்மை இனத்தால் அல்லது அது சார்ந்த அரசாங்கத்தால் நிறைவேற்றப்படாத நிலையிலும் மறுக்கட்ட நிலையிலும் போராட்ட வடிவங்கள் உருப்பெறுகின்றன. இந்த வகையிலேயே இலங்கைத்தீவில் பன்நெடுங்காலமாகத் தமிழர் என்ற சிறுபான்மை இனத்தின் தேவைகளும் நிறைவு காண் தன்மைக்கு இட்டுச்செல்லப்படாமையால் பல்வேறு வடிவங்களிலான போராட்டங்கள் நடந்தேறியிருந்தன. தற்போதும் நடந்தேறி வருகின்றது. இவ்வாறான நிலையில் சிறுபான்மையினரான மக்கள் சமூகத்துக்கு, தான் சார்ந்த அரசியல் தலைமைகளின் தேவைப்பாடுகள் அதிகமாகக் காணப்படும். ஆயினும், அந…
-
- 0 replies
- 316 views
-
-
புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப - தலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டமொன்று, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் பேசப்பட்டது. எனினும், கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்த பேராசிரி…
-
- 0 replies
- 411 views
-
-
ஊழல் பெருச்சாளிகள் ஊழலுக்கு எதிரான கேலிக்கூத்து : மருத்துவ கலாநிதி முரளி வல்லிபுரநாதன் சில தினங்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் உள்ளுராட்சி தேர்தலில் ஊழலற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தார். அதே போல அண்மையில் தமிழ் தேசியப் பேரவையும் ஊழலற்ற தமிழ் தலைவர்களை நாடுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. தென் பகுதியில் தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிரான ஆர்வலர்களும் அமைப்புகளும் இயங்கி பல ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து ஊழல் செய்த மத்திய அமைச்சரைக் கூட மாற்றிய நிலையில் வட பகுதியில் உண்மையில் ஊழலுக்கு எதிரான போராட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆராய்வதற்காகவே இந்தக் கட்டுரை வரையப்பட்டு இருக்கிறது. வட மாகாண சபை பதவி …
-
- 0 replies
- 318 views
-
-
தமிழரசின் வீழ்ச்சியும் பெரமுனவின் எழுச்சியும் இதயச்சந்திரன் கடந்த உள்ளூராட்சிச் சபைத்தேர்தலில் 38 சபைகளில் அறுதி பெரும்பான்மை பெற்ற கூட்டமைப்பு, இன்று பூநகரி வெருகல் தவிர்ந்த 36 சபைகளில், பெரும்பான்மையை இழந்து பெரும் சரிவினை நோக்கியுள்ளது. தெற்கிலோ…மகிந்தாவைத் தலைவராகக் கொண்ட, ஜி.எல்.பீரிஸின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும் வெற்றியீட்டியுள்ளது. மறுவளமாகப் பார்த்தால் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது பூச்சியத்திற்கு முன்னால் எண்களைப் போடுமளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள அதேவேளை, நல்லாட்சி கண்ட இரணிலும் மைத்திரியும் வரலாறுகாணாத தோல்வியைச் சந்தித்துள்ளனர். இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் மைய நீரோட…
-
- 0 replies
- 307 views
-
-
திசைமாறி தடுமாறும் தமிழர் தரப்பு அரசியல் தமிழர் தரப்பு அரசியல் திசைமாறிய பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றியிருக்கின்றது. தமிழர் தாயகப் பிரதேசங்களாகிய வடக்கிலும் கிழக்கிலும் நிலவுகின்ற அரசியல் நிலைமைகளே இவ்வாறு சிந்திக்கச் செய்திருக்கின்றன. அரசியலில் சுய அரசியல் நலன்களை மாத்திரமே முதன்மைப்படுத்தியிருக்கின்ற போக்கு தலையெடுத்திருக்கின்றது. குறிப்பாக யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் படிப்படியாகத் தலை நிமிர்த்தியுள்ள கட்சி அரசியல் நலன்பேணும் தன்மை இதற்கு இந்த சுய அரசியல் நலன்சார்ந்த செற்பாடுகளுக்கு உத்வேகம் அளித்திருப்பதைக் காண முடிகின்றது. கட்ச…
-
- 0 replies
- 270 views
-
-
பேரம் பேசுமா கூட்டமைப்பு? Editorial / 2018 ஒக்டோபர் 19 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:38 தற்போதைய அரசாங்கம் 2015இல் பதவிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டுத் திட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறையும் அவ்வாறு நடந்து கொள்ளுமா, என்ற கேள்வி, இப்போது பரவலாக எழுந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் விடுதலையை முன்வைத்து, பாதீட்டுத் திட்டத்தை ஆதரிப்பதற்குப் பேரம்பேச வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளமை தான், இந்தக் கேள்விக்கான மூல காரணம். அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தான், பாதீட்டுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்க, தமது விடுதலையை முன்னிறுத்தி, அரசாங்கத்துட…
-
- 0 replies
- 623 views
-