அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
சீனா: ஒரு பட்டை ஒரு பாதை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ காலத்துடன் கருத்துக்களும் மாறுகின்றன. உலகின் தீர்மானகரமான சக்திகள் எப்போதும் ஒன்றாக இருக்கின்றன. மாறுகின்ற காலங்கள் அதிகாரத்தின் தன்மையையும் இயங்கியலையும் தீர்மானிக்கவும் மாற்றவும் வல்லன. மாற்றங்கள் மாறாது நிகழ்ந்து கொண்டேயிருக்கும் என்பதை காலம் பலமுறை சுட்டிக் காட்டியபடி இருக்கிறது. எல்லாச் செயல்களும் அதிகாரத்துக்கான அவாவினால்ல. அதேவேளை அதிகாரத்தின் தன்மைகள் மாறியுள்ள நிலையில் புதிய பாதைகள் அதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்வனவாக இருக்கின்றன. இந்தவாரம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 29 நாடு…
-
- 0 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கோரி நிற்கும் கடப்பாடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக நாளை காலை (மே 18) மீண்டும் கூடப் போகின்றோம். மௌன வணக்கம் செலுத்தி, அஞ்சலிச் சுடரை ஏற்றி, நினைவு உரைகளை நிகழ்த்திவிட்டுக் கலைந்து செல்வதுடன் இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முடித்துக் கொள்ளப்போகிறோம்(?). அப்படியானால், முள்ளிவாய்க்காலில் நாம் மேற்கொள்ள வேண்டிய கூட்டுச் சத்தியத்துக்கான கடப்பாடு எங்கு போனது? முள்ளிவாய்க்கால் என்பது நினைவேந்தலுக்கான களம் மட்டும்தானா? அதனை மீறிய கூட்டுப் பொறுப்பையும் நீதி கோரலுக்கான தார்மீகத்தையும் அது கொண்டிருக்கவில்லையா? இப்படி ஏராளமான கேள்விகளினால் தொக்கி நிற்கிறது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல…
-
- 1 reply
- 383 views
-
-
சொல்லி மகிழும் பொய்கள் - முகம்மது தம்பி மரைக்கார் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுதல் என்பது மிகவும் முட்டாள்தனமாக செயற்பாடாகும். நம்மிடம் இல்லாததொன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, அதனூடாக ஓர் இலக்கை அடைய முடியாது. தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவொன்று உள்ளதாக நாம் நம்புவதும், பேசிக் கொள்வதும் - நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் எத்தனங்களாகும். தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உறவு என்பது, பிட்டும் தேங்காய்ப்பூவும் போலானவை என்று சொல்வதில் உண்மையில்லை என்பது நமக்குத் தெரியாததல்ல. ஆனாலும், திரும்பத் திரும்ப அவ்வாறான பொய்களை நாம் சொல்லி மகிழ்கின்றோம். இலங்கை வரலாற்ற…
-
- 0 replies
- 855 views
-
-
வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு இன்று வயது 41! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- 1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பத்தொரு ஆண்டுகள் கடந்துவிட்டன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. மித வாத அரசியலில் தமிழ் தரப்புக்கள் சந்தித்த தோல்விகள் மற்றும் அனுபவங்களால் தனித் தமிழீழம் அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு நகர்ந்தமையே வட்டுக் கோட்டைப் பிரகனடம் ஆகும். தந்தை செல்வநாயகம் தலையில் கூடிய மாநாட்டில் 01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண…
-
- 1 reply
- 779 views
-
-
மோடியின் இலங்கை வருகை: பிராந்திய ஆதிக்க வெளிப்பாடு - கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வந்து திரும்பி விட்டார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள், மோடியினுடைய இரண்டாவது இலங்கை விஜயம் இது. முதல் பயணம், 2015இல் நடந்தது. அப்போது அவர், வடக்கே - யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார். இப்பொழுது இரண்டாவது பயணத்தில், மத்திய பகுதியான மலையகத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். இரண்டு பயணங்களும், இந்திய நோக்கு நிலையிலும் வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கிலும், முக்கியமானவை. மோடியின் முதலாவது இலங்கை விஜயத்தின்போது, தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழர் வட்டாரங்களிலும், மெல்லிய சலசலப்பு இருந்தது. குறிப்பாக ஈழ ஆதரவுத் தலைவர்களான தொல். …
-
- 0 replies
- 613 views
-
-
கலங்கிய குட்டையில் முல்லைத்தீவு மீன்பிடி சிவப்பு குறிப்புகள் - அகிலன் கதிர்காமர் யுத்தத்தின் இறுதிக்கட்டப் பேரழிவு, சுனாமி, பல தசாப்தங்களான இடப்பெயர்வு என, முல்லைத்தீவு மீனவ சமுதாயம், பெரும் துன்பங்களைக் கண்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தபட்சம் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் தரைமட்டமாகியும் வாழ்வாதாரம் இழக்கப்பட்டும் உள்ளன. இருப்பினும், யுத்தத்துக்குப் பின்னரும், அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குறைந்தது ஒருவராவது, புலிகளால் பலவந்தமாக போராளிகள் ஆக்கப்பட்டனர். ஒரு தலைமுறை இளைஞர்கள், மனிதக் கேடயங்களாக்கப்பட்டனர். பேரழிவுடன் யுத்தம் முடிந்தபோது…
-
- 0 replies
- 400 views
-
-
தென்கிழக்கு அலகு கற்பனாவாதமா? - மொஹமட் பாதுஷா அரசியலில் மட்டுமல்ல எல்லா விடயங்களிலும் கருத்து வேற்றுமைகள் இருப்பது சர்வசாதாரணமானது. மாறுபட்ட கருத்துகள், எண்ணங்களில் இருந்து புதுவிதமான கருத்துருவாக்கங்கள் பிறக்கின்றன. ஆனால், ஒவ்வொருவரும் கொண்டுள்ள கருத்துகள் ஒரு பொதுத் தளத்தில் அமர்ந்து பேசப்படாதவிடத்து, அவை கருத்து முரண்பாடுகளாக ஆகிவிடுவதைக் காண்கின்றோம். உலக மரபில் தோற்றம்பெற்ற அனைத்து விதமான இன முரண்பாடுகளும் முரண்பட்ட கருத்துகளை ஒரு மேசையில் அமர்ந்து, மனம்விட்டுப் பேசாமல் விட்டதன் பக்கவிளைவு என்றும் சொல்ல முடியும். வேறுபட்ட இனக் குழுமங்கள், மனிதகுல வர்க்கங்கள், சமயங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் ஒவ்வொரு வி…
-
- 2 replies
- 516 views
-
-
தோல்வியுற்ற அரசாகுமா? - கே.சஞ்சயன் காலிமுகத்திடலில் கூட்டு எதிரணியினர் நடத்திய மேதினப் பேரணியில் திரண்டிருந்த மக்கள் கூட்டம், அரசியல் மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் எழுச்சி கொள்கிறாரா? அரசியல் ரீதியாகப் பலம் பெற்று வருகிறாரா என்ற கேள்விகள், எல்லா மட்டங்களிலும் எழுந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பலம் பெறுவதானது, வெறுமனே ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான அச்சுறுத்தலாக மாத்திரமன்றி, தற்போதைய அரசியல் சீர்திருத்த முயற்சிகளுக்கும் கூட ஆபத்தானது என்ற பார்வை பரவலாக இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் மேதினக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அணிதிரண்டமையா…
-
- 2 replies
- 669 views
-
-
ஒரு வார்த்தையேனும் கூறாதது ஏன் ? ரொபட் அன்டனி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் மேலோங்கிய நம்பிக்கைகளுக்கிடையே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கான இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு நாடுதிரும்பியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவதற்கு முன்பாக அவர் முன் உள்ள கடமைகள் தொடர்பாக நாம் அடிக்கடி சுட்டிக்காட்டியிருந்தோம். குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் தீர்வுப் பிரச்சினை மற்றும் மலையக மக்களின் அபிவிருத்திப் பிரச்சினை, அடிப்படை தேவை பிரச்சினை தொடர்பாக ஆராயவேண்டிய கடமை மற்றும் பொறுப்பு இந்தியப் பிரதமருக்கு இருப்பத…
-
- 2 replies
- 878 views
- 1 follower
-
-
ஆயுதப் போராட்டத்தில் அல்லது அரசாங்கத்தின் அடக்குமுறையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நாடுகளில் நீதித்துறை மற்றும் நீதித்துறை சாராத நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை குறிப்பதே நிலைமாற்று நீதியாகும்.சமாதானம் மற்றும் நல்லாட்சியுடன் மாற்றமடைவதை இது சுட்டி நிற்கின்றது. இழைக்கப்பட்ட தவறுகளை நிவர்த்தி செய்தலை இந்த நிலைமாற்று நீதி நடவடிக்கைகள் நாடி நிற்கின்றன. இழப்பீடுகளை வழங்குதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், மீள இடம்பெறாமையை உறுதிப்படுத்துதல் போன்றவை நிலைமாற்று நீதி நடவடிக்கைகளாகும். இந்த நடவடிக்கைகளில் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களும் உள்ளடங்குகின்றன. துஷ்பிரயோகங்களை தடுக்க முடியாத அல்லது அவற்றில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மறுசீரமைப்பதே நிறுவன ரீதியான …
-
- 0 replies
- 468 views
-
-
பயங்கரமாகும் எதிர்ப்புச் சட்டம் தமிழ்த் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றிருந்த காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, மற்றுமொரு தமிழ்த் தலைவராகிய இராசவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காலப்பகுதியில், அதற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுகின்றது இறுதி யுத்தத்தின்போது மிக மோசமான முறையில் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தன, போர்க்குற்றங்கள் புரியப்பட்டிருந்தன என்ற சர்வதேச குற்றச்சாட்டின் பின்னணியில், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரான காலப்பகுதியில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு இலங்கை அரசு மீது அழுத்தங்கள் பிரயோகிக்…
-
- 1 reply
- 567 views
-
-
நேற்றய தினம் வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் திரு மோடி அவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகளாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசியிருந்தார். அதன்பின் பத்திரிகையாளருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவர் திரு அடைக்கலநாதன் கூறும் பொழுது சமஸ்டி தீர்வை தமிழர்கள் பெறுவதற்கு இந்தியா ஒத்துழைக்கவேண்டும் என திரு சம்பந்தன் அய்யா கேட்டுகொண்டதாக கூறப்பட்டது. கடந்த ஒரு வருடமாக புதிய அரசியல் அமைப்பு குறித்து திரு சுமந்திரன் மற்றும் திரு சம்பந்தன் அவர்களும் எல்லாகட்சிகளுடனும் பேசிக்கொடிருக்கிறார்கள். அப்படியானால் திரு மோடி இலங்கை வரும்வரை ததேகூ இந்தியாவுடன் தொடர்பில் இருக்கவில்லையா? ததேகூ பிரதிநிதிகள் இந்தியா சென்று பிரதமர் திரு மோடி அவர்களை சந்திக்காவிடாலும் வெளியுறவு அதிகாரிகளை சந்தித்து எ…
-
- 0 replies
- 451 views
-
-
குப்பை... இலங்கை, தெற்காசியா, அதற்கும் அப்பால் ஒரு பார்வை வறுமை ஒழிப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் இவ்வருடத்தின் நான்காவது மாதத்தை நாம் கடந்து விட்டோம். அசமத்துவம் மிகுந்திருக்கும் ஒரு நாட்டில் சமத்துவத்தைக் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் தன்னை அர்ப்பணித்திருக்கிறது என்று நாம் நினைத்துக்கொள்வோம். 2017 இல் வறுமை எவ்வாறு கையாளப்படப் போகின்றது என்பதை நாம் இன்னமும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று அசமத்துவத்தின் இருண்ட முகத்தை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. சக மனிதப் பிறவிகளின் வீடுகள…
-
- 0 replies
- 3.9k views
-
-
போட்டி அரசியல் மலையக அரசியல் தொழிற்சங்க நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருவது தெரிந்த விடயமாகும். இவ்விரு சாராரினதும் மக்கள் நலன்கருதிய செயற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகின்றன. உச்சகட்ட சேவைகளை இவர்கள் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் இருந்தும் பின் நிற்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மலையகத்தில் நிலவும் போட்டி அரசியல் கலாசாரமானது மலையக மக்கள் பல்வேறு உரிமைகளையும் பெற்றுக்கொள்ள தடைக்கல்லாக இருப்பதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். மலையகமும் அரசியலும் அரசியல் என்பது ஒரு சாக்கடை எ…
-
- 0 replies
- 441 views
-
-
ஈழ தமிழர்களோடு சமகால அரசியல் சம்பந்தமாக கலந்துரையாடும் பொழுது எல்லோரும் கூறுவது இந்தியாவின் உதவியின்றி ஈழ தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பது கடினம் என்றும் ஆனபடியால் இந்தியாவுடன் நல்லுறவை பேணப்படவேண்டும் என்பதேயகும். இவற்றுள் இரண்டு பொருள் பொதிந்துள்ளது ஒன்று இந்தியா தமிழர்களுக்கு உதவி செய்தோ அல்லது இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தோ பிரச்சினையை தீர்ப்பார்கள் இரண்டாவது தீர்ப்பது போல் நடித்து தீர்வை குழப்பியடிப்பார்கள் என்பதுதான். பெரும்பாண்மையான ஈழ தமிழர்கள் அமைப்புகளும் மக்களும் கருதுவது இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தாவது பிரச்சினையை தீர்த்துவைப்பார்கள் என்பதாகும் ஆனால் எனது அபிப்பிராயம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது இந்தியா ஒரு காலத்திலும் ஈழ தமிழர்கள் பிரச்…
-
- 5 replies
- 1.1k views
-
-
உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படுமா? ஜனநாயக வழிப்பாதையில் செல்வதாக தம்பட்டமடிக்கும் எந்தவொரு நாடும் உரிய காலத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது ஜனநாயக கடமையாகும். 2015 ஆம் ஆண்டுடன் காலாவதியாகிப் போன உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இன்னும் நடத்தாமல், பல்வேறு காரணங்களைக் காட்டி அரசாங்கம் இழுத்தடிப்பு செய்துவருகின்றது என எதிர்த்தரப்பினர் கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மையிருக்கத்தான் செய்கிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்தும்படி அரசாங்கத்தை வலியுறுத்தி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபடப்போவதா…
-
- 0 replies
- 502 views
-
-
இலங்கையில் சீனாவின் மீள்வருகை தொடர்பான சமிக்ஞைகளுக்கு மத்தியில் இந்தியாவின் செல்வாக்கினை மீள உறுதிப்படுத்தும் நோக்குடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். 2015 ஜனவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றபோது, சீனாவுடனான உறவுகள் தளர்த்தப்படுமென உறுதிமொழி வழங்கியிருந்தார். அதற்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்தவர், சீனாவிடமிருந்து பாரியளவான நிதி உதவிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அன்றைய காலப்பகுதியில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை இந்திய உறவில் பொன்னான தருணங்களை வரைவதற்கான உறுதிமொழியினை வழங்கியிருந்தார். அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழிந்திருக்கும் நிலைய…
-
- 0 replies
- 394 views
-
-
பிரான்சின் அரசியல் மாற்றம் – சிறிலங்கா கற்க வேண்டிய பாடம்! பிரான்சின் அரசியல் மாற்றம் – சிறிலங்கா கற்க வேண்டிய பாடம்! மறுமலர்ச்சிகளை விரும்புவதாக பிரெஞ்ச் நாட்டு மக்கள் கூறுகின்றனர். இவர்கள் தற்போது 39 வயதான இம்மானுவேல் மக்ரோனை புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்ரோன் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைத் தனதாக்கி, தனக்கு எதிராகப் போட்டியிட்ட மேரியன் லீ பென் என்பவரை வென்று பிரான்சின் புதிய அதிபராகியுள்ளார். இவரது வெற்றியானது வெறித்தனமான ஜனரஞ்சக தேசியவாதத்திற்கு எதிராகக் கொடுக்கப்பட்டுள்ள கடுமையான பதிலையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவ்வாறான வெறித்தனமான ஜனரஞ்சக தேசியவாதமே டொனால்…
-
- 0 replies
- 437 views
-
-
மாயையைக் கண்டு மிரளும் மைத்திரி : உள்ளூராட்சிச் சபை தேர்தல் மேலும் தாமதம் எதைச் செய்தாவது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் இந்த ஆட்சியாளர்களும்-, எதைச் செய்தாவது இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் மகிந்த அணியினரும் தள்ளப்பட்டுள்ளதை தற்போதைய அரசியல் செயற்பாடுகளைப் பார்க்கும்போது தெளிவாக அவதானிக்கலாம். ஊழல்,மோசடிகளை ஒழிக் கப் போவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பப் போவதாகவும், பூரண ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாகவும் வாக்குறுதியளித்து மகிந்தவிடமிருந்து ஆட்சியை தற்போதைய ஆட்சியாளர்கள் கைப…
-
- 0 replies
- 431 views
-
-
Body Language எனப்படும் உடல் மொழி. இந்தத் தலைப்பை... எழுத தூண்டியது. மேலே... உள்ள படம் தான். இந்தியப் பிரதமர் மோடியும், ஸ்ரீலங்காவின் எதிர்க் கட்சித் தலைவருமான சம்பந்தன் சந்திப்பு. இதில்.... நான் அவதானித்த, உடல் மொழிகளை பட் டியலிடுகின்றேன். 1) ஒருவர் இரு கையையும் , குறுக்கே கட்டி வைத்திருந்தால்... (இடைவெளி வேண்டும், தூர நில்) 2) இருவர் பேசும் போது... தண்ணிப் போத்திலை, தூக்கினால்.... (பிச்சை எடுக்க, வழியில்லாமல்.. அரசியலுக்கு வந்திருக்கிறம் எண்டு அர்த்தம்.) 3) மோடியின் கால்கள்... ஓட்டிய படி சாதாரணமாக இருக்கின்றது. 4) சம்பந்தனின் கால்களில், விரிசல் உள்ளதை.... உன்னிப்பாக அவதானித்தால், கண்டு கொள்ள முடியும். இதில் கன …
-
- 0 replies
- 391 views
-
-
உலக நாடுகள் இனி என்ன செய்யும்? இலங்கை அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. தான் நினைக்கும்போது ஆட்சியைக் கவிழ்க்கும் பலத்தைப் பெற்றுவிட்டேன் என்று முழக்கமிட் டுள்ளார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. அரச தலைவருக்கான தேர்தலில் தோல்வியடைந்து சில ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில் மீண்டெழுந்து வந்து இந்த முழக்கத்தை அவர் நிகழ்த்தியிருக்கிறார். கடந்த மே தினத்தில் தலைநகர் கொழும்பின் காலி முகத்திடலில் கூடிய தனது ஆதரவாளர்களின் கூட்டத்தைப் பார்த்த பின்னரே மகிந்த இப்படி ஆர்ப்பரித்திருக்கிறார். சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில்…
-
- 8 replies
- 685 views
-
-
போட்டோ ரீக்கோ: வங்குரோத்தான அமெரிக்காவின் நவகொலனி - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாடுகள் சுதந்திரமானவை. ஒருபுறம் இக்கூற்று உண்மையாக இருக்கிறபோதும், மறுபுறம் இக்கூற்று எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மையல்ல என்பதை நாமறிவோம். பல நாடுகள் சுதந்திர நாடுகள் போல் தோற்றங் காட்டினாலும் அவை அதன் இயங்குநிலையில் அவ்வாறல்ல. குறிப்பாக கொலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த நாடுகள் பல நீண்டகாலத்துக்கு கொலனித்துவ ஆதிக்கவாதிகளின் நலன்களுக்குப் பங்கமில்லாமல் நடந்து கொண்டன. ஆனால் அது என்றென்றைக்கும் ஆனதல்ல என்பதைப் பலநாடுகளில் உருப்பெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் காட்டி நின்றன. இன்று காலம் மாறிவிட்டது. நாடுகளைக் கட்டுப்படுத்தும், செல்வாக்குச் செலு…
-
- 0 replies
- 515 views
-
-
விளையாட்டுவீரர்கள் 30-35 வயதுகளில் ஓய்வு பெற்றுவிடுவார்கள் அப்படி செய்யாவிட்டால் ஓய்வு பெறவைத்துவிடுவார்கள்.அரசாங்க உத்தியோகத்திலுள்ளவர்கள் 55-60 வயதுகளில் ஓய்வு பெற்றுவிடுவார்கள். இந்த வயதுகளில் இவர்கள் ஓய்வு பெறுவதற்கான காரணம் அவர்களது உடல் தகுதி அவ் வேலைகளை செய்வதற்கான தகுதியை இழந்துவிடுகிறது,ஆனால் கடின உழைப்பில் ஈடுபடும் மற்றும் அதிக சுற்றுலாவில் ஈடுபடும் அரசியல்வாதிகலால் மட்டும் எப்படி 70-90 வயது வரை சலிப்பில்லாமல் ஈடுபடமுடிகிறது என்று ஆழ்ந்து சிந்திதபொழுதான் எனக்கு ஒரு யோசனை தோண்றியது, எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென்று ஒரு இளைஞர் அணியை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு பதிலாக ஏன் அவர்கள் முதியோர் அணிகளை உருவாக்க கூடாது இதன் மூலம் முதியோர் இல்லங்கள…
-
- 0 replies
- 685 views
-
-
தனித்து விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய முன்னாள் போராளிகள் பலர், தற்போது நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததுதான். இதில், மட்டக்களப்பு, செங்கலடியைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளியொருவர், சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார் என அறிவிக்கப்பட்டது. அவரது கணவரும் முன்னாள் போராளி என்று தெரிவிக்கும் செய்தி, கணவர் இறந்த பின்னர், குடும்பத்தைக் கொண்டுசெல்ல இயலாமல், மன அழுத்தத்துக்கு மத்தியிலேயே இந்த முடிவை எடுத்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு, ஆறு வயதில் பிள்ளையொன்றும் உள்ளது. முன்னைய காலங்களில் என்றால், இந்தச் செய்தி, ப…
-
- 0 replies
- 998 views
-
-
புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை? ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் தாயகப் பகுதிகளை நோக்கி வருகை தரும் புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக, புலம்பெயர்அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களின் வருகை எதிர்பார்க்கப்பட்ட அளவினைத் தாண்டியிருக்கின்றது. தாயக மக்களை நேரடியாகச் சந்திப்பதும் அவர்களின் பிரச்சினைகள், ஆதங்கங்களைப் புரிந்து கொள்வதும், அதனூடாகக் களம் எப்படியிருக்கின்றது என்கிற அடிப்படைகளை…
-
- 0 replies
- 498 views
-