அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமக்குரிய பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வார்களா? இழந்தவற்றை மீட்டுக்கொள்வார்களா அல்லது இருந்தவற்றையும் இழந்துவிடுவார்களா என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியிலே உருவாகியுள்ளது. பெரும்பான்மையினத்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற வரிந்துகட்டிக்கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமிழ் மக்கள் தமது இருப்பை உறுதிப்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேண்டிய நிலையில் பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் வழமைபோன்று தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை தன்னினத்திற்கு சகுனப் பிழையாக வேண்டும். தனக்குக் கிட்டாத மக்கள் பிரதிநிதித்துவம் என்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவி இன்னுமொரு தமிழனுக்குக் கிட்டக்கூடாது என்ற சிந்தனையுடனும் தேர்தல் களமாடப் பல தம…
-
- 0 replies
- 165 views
-
-
மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா, அரசியல் பொறியில் அகப்படுவாரா? :வியாசன் 07/13/2015 இனியொரு இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மைத்திரிபால சிரிசேனவின் நல்லாட்சி தலைகீழாக மாறிப் போனது. யாருக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியைக் கையகப்படுத்தினாரோ அவரையே பிரதம மந்திரியாக்க மைத்திரி முன் நிற்கிறார். மகிந்த ராஜபக்ச அரசில் அமைச்சராகப் பதவிவகித்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக இறுதி நேரத்தில் புற்றுக்குள்ளிருந்து கிளம்பிய மைத்திரிபால சிரிசேன இப்போது 180 பாகையில் திரும்பி மகிந்த ராஜபக்சவையும் அவரது சகாக்களையு ம் பாதுகாத்து ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதற்கு பச்சைகொடி காட்டியுள்ளார். இலங்கையை ஒட்டச் சுரண்டிய மகிந்த ராஜபக்சவுக்கும் அ…
-
- 0 replies
- 294 views
-
-
குழம்பிப்போயுள்ள கட்சிகள்! : செல்வரட்னம் சிறிதரன் 07/11/2015 இனியொரு.. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் பதவி வகிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டு மக்கள் மீது வலிந்து ஜனாதிபதி தேர்தலைத் திணித்தார். இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அந்த பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்கள் இருந்த நிலையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்தார். மூன்றாம் தடவையாக ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவருடைய அரசியல் எதிர்பார்ப்பு சுக்கு நூறாகியது. வீசிய கையும் வெறும் கையுமாக அவர் தென்மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்…
-
- 0 replies
- 278 views
-
-
பாராளுமன்றம் - வீடு, புலிகள் - செருப்பு தயாளன் கூட்டமைப்பு பிரகடனப்படுத்தியுள்ள புலிகள் இல்லாத தமிழ்த் தேசியம் உப்பில்லாமல் சமைத்துவிட்டு 'எனது சமையலை ருசிக்க வாருங்கள்' என்று அழைத்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? இவ்வாறான அழைப்பைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு விடுத்துள்ளது. 'புலிகள் இல்லாத தமிழ்த் தேசியம்' என்பதைத்தான் இக் கட்சி பிரகடனப்படுத்தியுள்ளது. நல்லது, அப்படியே 'புலிகளின் மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாக்குகள் எமக்குத் தேவையில்லை. அவர்கள் தாங்கள் விரும்பிய எவருக்கும் வாக்களிக்கலாம். ஏனையோர் எமக்கு வாக்களியுங்கள்' என்று தங்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவார்களாயின் இவர்களை நேர்மையா…
-
- 3 replies
- 460 views
-
-
முடிவுறாத அரசியல் போரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் இலக்கும்? - யதீந்திரா ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறவுள்ள ஒரு தேர்தல் என்னும் வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் உள்ள அதிருப்திகளை காண்பிக்க இது பொருத்தமான தருணமல்ல. இவ்வாறு நான் குறிப்பிடும் போது, இது ஒரு வழமையான கதைசொல்லல் போன்று தெரியக் கூடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைத்து வந்த நானே, இவ்வாறு கூறும் போது இதனை சில வாசகர்கள் ஆச்சரியமாகவும் பார்க்கலாம். ஆனால் இங்கு விளங்கிக்கொள்ள வேண்டிய விடயமோ வேறு. அதாவது, எனது கருத்து…
-
- 0 replies
- 374 views
-
-
கடந்தவாரம் தமிழ்த் தரப்புச் செய்திகளில் அதிகம் கவனிப்பைப்பெற்றவை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மிதவாத அரசியலில் இறங்கப் போவதாக வெளிவந்த அறிவிப்புக்களே. முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் மிதவாத அரசியலில் இறங்குவது என்பது இலங்கைக்குப் புதியதல்ல. அது உலகளாவிய தோற்றப்பாடும் கூட. நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத்போன்ற அனைத்துலக உதாரணங்களை இங்கு காட்டலாம். இச்சிறுதீவில் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த ஜே.வி.பியானது இப்பொழுது மிதவாத அரசியலில் ஈடுபடுகிறது. இப்பொழுது இச்சிறுதீவின் ஜனாதிபதியாக இருப்பவர் சில தசாப்தங்களுக்கு முன்பு ஜே.வி.யுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிறைவைக்கப்பட்டவர்தான். எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சே…
-
- 1 reply
- 286 views
-
-
ராஜபக்சவின் மீள்வருகை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்குச் சோதனை – அலன் கீனன்Jul 11, 2015 | 13:18by நித்தியபாரதி சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதானது சிறிலங்காவில் கடந்த ஒரு சில மாதங்கள் நடைமுறையிலிருந்த ஜனநாயக ஆட்சி மீண்டும் நசுக்கப்பட்டு நயவஞ்சக அரசியல் மீண்டும் தலைதூக்கப் போகிறது என்பதற்கான சமிக்கையாகவே நோக்கப்பட முடியும். சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று ஆறு மாதங்கள் கடந்த பின்னர் தற்போது மீண்டும் மகிந்த ராஜபக்சவின் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளார். சிறிசேன அதிபராக வெற்றி பெற்ற பின்னர் சிறிலங்காவில் ஜனநாயக ஆட்சிக்கான புதியதொரு வழி திறக்கப்பட்டு…
-
- 0 replies
- 282 views
-
-
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்; ஆட்சி மாற்றத்தை கேள்விக்குள்ளாக்குமா? யதீந்திரா படம் | COLOMBOTELEGRAPH மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடப்போகிறார் என்று தெரிகிறது. ஒருவேளை அவர் இறுதியில் போட்டியிலிருந்து விலகுவாரானால், அதில் ஏதோவொரு பலம்பொருந்திய சக்தியின் திருவிளையாடல் ஒழிந்திருக்கிறது என்றே நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அது தவிர அவர் போட்டியிடுவார் என்பது உறுதியாகிவிட்ட ஒன்றுதான். நான் மஹிந்தவின் மீள்வருகை தொடர்பில் எழுதிய முன்னைய பத்தியில் குறிப்பிட்டவாறு மஹிந்த தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான், அவர் மீண்டும் தன்னால் அரசியலில் நிமிர்ந்தெழ முடியுமென்று நம்புகிறார். அவரது நம்பிக்கை சரியென்று கூறுவதற்கும் அதனை பலப்ப…
-
- 0 replies
- 240 views
-
-
திரு கஜேந்திரகுமார் அவர்களும் , திரு சுமந்திரன் அவர்களும் ஏறத்தாள ஒரே காலப்பகுதியில் இரண்டு ஆங்கில ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியின் சிலபகுதிகளை இங்கு ஒப்பிட்டு நோக்கலாம். ஆங்கில ஊடகங்களில் எவ்வாறு இவர்கள் தொழிற்படுகிறர்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். முடிவு உங்களிடம். {தி,பாலமுருகனின் முகநூலில் இருந்து பிரதி செய்யப்பட்டது } ------------------------------------------------------ 1}Sunday Leader {19/04/2015} :-தமிழ் தேசியக்கூட்டமைப்பு புலிகளையும் அவர்களின் கொள்கைகளையும் ஆதரிக்கின்றது என்கிற ஒரு குற்றச்சாட்டு உண்மையானதா?? சுமந்திரன் : இல்லை , விடுதலைப்புலிகளில் எங்களுக்கு எந்த வித விசுவாசமும் இல்லை. அவர்களின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லை. நாங்கள் தமிழர்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
இனவாத நிகழ்ச்சி நிரலுக்குள் இனப்பிரச்சினை விவகாரம் by A.Nixon - on July 9, 2015 படம் | Buddhika Weerasinghe/ Getty Images, THE HUFFINGTON POST இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செயற்படுகின்றன. இந்த இரண்டு பிரதான கட்சிகள்தான் இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சி புரிந்தும் வருகின்றன. மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற கருத்து இந்த இரு கட்சிகளிடமும் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ் மக்களின் 60 ஆண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை குறைப்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் சார்ந்து சர்வதேச ரீதியாக வரக்கூடிய அழுத்தங்கள், யோசனைகளை தவிர்ப்பது. பிரதான நோக்கம்…
-
- 0 replies
- 247 views
-
-
ஜனவரி தேர்தலை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆகஸ்ட் தேர்தல் by Veeragathy Thanabalasingham - on July 8, 2015 படம் | AFP Photo, ISHARA KODIKARA, FCAS ஜனவரி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கிய மக்கள் பேதலித்துப் போய் நிற்கிறார்கள். அத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு அனுமதியளிக்க ஜனாதிபதி சிறிசேன இணங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜபக்ஷவுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படுவது தொடர்பான அறிக்கையை சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சுசில் பிரே…
-
- 0 replies
- 206 views
-
-
2015 பொதுத் தேர்தல்களின் பின்னர் உருவாகும் அரசு எதிர்நோக்கும் சவால்கள் by Lionel Guruge - on July 8, 2015 படம் | BUDDHIKA WEERASINGHE Photo, Getty Images மீண்டும் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல்களுக்கான திகதி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. தற்போது அனைத்து அரசியல் தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு போட்டி போடுகின்றனர். அரசியல் அதிகாரத்திற்காக தேர்தல் இயக்கத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பதே அவர்களுக்கிடையிலான போட்டியாகும். யார் எவ்வாறு அதிகாரத்திற்கு வந்தாலும் புதிய அரசும் ஜனாதிபதியும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் கீழ் செயற்பட வேண்டும். தற்போதைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு எவ்வாறு புத…
-
- 0 replies
- 287 views
-
-
உலகத் தமிழர் பேரவையினால் புலம்பெயர் தரப்புக்களை கையாள முடியுமா? யதீந்திரா அண்மையில் இலண்டனில் இடம்பெற்ற கூட்டமொன்று தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன் பங்குகொண்டமை தொடர்பில் தமிழ் தரப்பால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. மறுபுறம் மேற்படி கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்குகொண்டமை தொடர்பில் தெற்கில் விமர்சனங்கள் மேலெழுந்தன. தமிழ்ச் சூழலில் எழுந்த சர்ச்சைகளை இரண்டு வகையில் நோக்கலாம். ஒன்று, கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இருக்கின்ற போதிலும் குறித்த கூட்டம் தொடர்பிலான தகவல்கள் அவர்கள் மத்தியில் பரிமாறப்பட்டிருக்கவில்லை. ஒரு சிங்கள அமை…
-
- 0 replies
- 232 views
-
-
நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ் மக்களின் தெரிவு யார்? முத்துக்குமார் பாராளுமன்றத் தேர்தலுக்குத் திகதி குறித்தாகிவிட்டது. வருமா? வராதா? எனப் பல்வேறு விவாதங்களும் இடம்பெற்ற சூழலில் தேர்தல் வந்துவிட்டது. மைத்திரி அரசாங்கத்திற்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், தேர்தல் நடத்துவதைத் தவிர வேறு தெரிவு மைத்திரிக்கு இருக்கவில்லை. மகிந்தரின் மீள் எழுச்சியை பலவீனப்படுத்துவதற்காகத்தான் மைத்திரி தேர்தலைத் தொடர்ச்சியாகத் தள்ளிப் போட்டார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக மகிந்தர் ஒவ்வொரு நாளும் பலம்பெற்று வருகையில் மேலும் தாமதிப்பது பயன்தராது எனத் தெரிந்து கொண்டார். தென் இலங்கையில் மும்முனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. மகிந்தர் அணி எவ்வளவோ முயன்றும் பிரதமர் வேட்பா…
-
- 0 replies
- 283 views
-
-
இலங்கையின் அரசியல் அரங்கு களை கட்டிவிட்டது. அரங்காடிகள் எந்த அரங்கில் இணைந்து ஆடி, நடித்து மக்களைக் கவருவதென்பது இம்மாத மத்தியில் தெரிந்துவிடும். ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் அரசியல் இன்று வியாபாரமாக மட்டுமல்ல விபசாரமாகவும் காணப்படுவதாக உய்த்துணர்ந்தோர் கூறுகின்றனர். அந்த அளவு அரசியலரங்கு அசிங்கப்பட்டுள்ளது. நேற்றுவரை நீ யாரோ, நான் யாரோ என்றிருந்தவர்கள் பதவிகளைப் பெற ஒட்டியுறவாடவும் இணைந்து அரங்காடவும் கட்டியணைக்கவும் தயங்காத நிலையைக் காணலாம் . பொதுமக்களை, வாக்காளர்களை எப்படியாவது ஏமாற்றி தமக்குச் சார்பாக புள்ளடியைப் பெற்று அதன் மூலம் பதவிகளைப் பெற்று வளம் பெற்று வாழ எத்தனிப்போரை அரசியல்வாதிகள் என்கின்றோம். இவர்கள் இணைந்த கூட்டை அரசியல் கட்சிகளென்கின்றோம். கடந்தகால அ…
-
- 0 replies
- 175 views
-
-
நாங்கள் மகிந்தவின் புலனாய்வு அமைப்பு அல்ல! - சம்பந்தனிடம் வித்தியாதரன் [ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 07:29.12 PM GMT ] முன்னாள் போராளிகள் சிலரை ஒன்றிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்தேன், பதில்கள் அனுமதிக்க முடியாது கூட்டமைப்பு திட்ட வட்டம் என்பன தொடர்பில் ஜனநாயக போராளிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளர் வித்தியாதரன் விபரித்துள்ளார். tamilwin.com
-
- 2 replies
- 320 views
-
-
அதிகார பேராசை பிடித்து மகிந்த இராஜபக்சவும் அவருடைய கூஜா தூக்கிகளும் குட்டையைக் குழப்பிக் கொண்டேயிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவர்களுடைய திட்டங்களையெல்லாம் பொடிப்பொடியாக்குவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பவர் தீட்டக் கூடிய சதித் திட்டங்கள் பலவுண்டு. அதிலொன்றுதான் Giving a long enough rope to hang himself என ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற முறையாகும். அதாவது நல்ல நீட்டான கயிறு திரித்துக்கொடுத்து அக்கயிறைக் கொண்டே ஒருவர் தன்னைத்தானே தூக்கிலிட வைப்பது என இதற்குப் பொருள்படும். மகிந்த இராஜபக்ச மெதமுலனவில் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திலும் கட்சித் தலைவர் தனது ஆதரவாளர்களையும் தனக்கு ஆதரவான அமைச்சர்களையும் மகிந்த ஆதரவாளர்களாக பாசாங்கு பண்ணி அனுப்பி வைப்பதி…
-
- 0 replies
- 267 views
-
-
கூட்டமைப்பிடம் சில கேள்விகள் நிலாந்தன் 2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது. 2009 இற்குப் பின் அப்பொறுப்பை கூட்டமைப்பு வகிக்கத் தொடங்கியது. இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் கூட்டமைப்பிடம் கைமாறிய பின், வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. எனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் ஒரு சரியான மதிப்பீடு இருந்தால்தான் அடுத்த …
-
- 0 replies
- 290 views
-
-
தமிழ் டயாஸ்பொறா பலமானதா? கலாநிதி சர்வேந்திரா தமிழ் டயாஸ்பொறாவின் பலம் தொடர்பான கருத்துக்கள் அண்மையில் வெளிப்பட்டிருந்தன. எரிக் சூல்கெய்ம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டன் பேச்சுவார்த்தை தொடர்பாக நிலாந்தன் எழுதிய கட்டுரையில் எரிக் சூல்கெய்ம் வெளிப்படுத்திய கருத்தைக் குறிப்பிட்டு இலண்டன் பேச்சுவார்த்தைகளின் போதும் பின்னும் தமிழ் டயாஸ்பொறா நடந்து கொள்வதைப் பாரத்தால் அப்படியா தெரிகிறது என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார். உண்மையில் தமிழ் டயாஸ்பொறா பலம்மிக்கதுதானா? இதுவே இன்றைய பத்தியின் பேசுபொருள் ஆகிறது. இங்கு பலம் என்பது எதனைக் குறிக்கிறது? வளங்கள் நிறைந்த சமூகம் என்பதையா? அனைத…
-
- 3 replies
- 1.1k views
-
-
கடந்த ஜுன் மாதம் 17ந்திகதி அமெரிக்காவை ஒரு கலக்குகலக்கிய சம்பவம் தென் கரோலைனா மாநிலத்தில் சார்ள்ஸ்டன் என்னும் ஊரில் நிகழ்ந்தது. ஒருகிறிஸ்தவ ஆலயத்தில் விவிலிய நூல் வகுப்பில் கலந்து கொண்டிருந்த ஒன்பது கறுப்பினத்தவர்களை 21 வயதான வெள்ளை இளைஞன் துப்பாக்கியால் கொன்று குவித்தான். பகிடி என்னவென்றால் அவன் தானும் இந்தவிவிலிய நூல் வகுப்பில் ஒருமணி நேரமாகக் கலந்து கொண்டிருந்தவன். திடீரென்று எழுந்துநீஙங்கள் கறுப்பினத்தவர்கள் எங்கள் நாட்டையே ஆக்கிரமிக்கப் பார்க்கிறீர்கள், எஎங்கள் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறீகள் எனவே உயிர்வாழத் தகுதி அற்றவர்கள் என பெரிய உரையர்ற்றி விட்டுத்தான் தூப்பாக்கியைத் தூக்கி இருக்கின்றான். அங்குவகுப் பெடுத்துக் கொண்டிருந்த பாதிரியும் எட்டுப் பேரு…
-
- 0 replies
- 910 views
-
-
எவராலும் கருத்தில் கொள்ளப்படாத புலம்பெயர் மக்களின் உரிமைகள் – பிரான்செஸ் ஹரிசன்Jun 26, 2015 | சிறிலங்காவில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாகப் பேசப்படுகின்றது. ஆனால் இன்னமும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் எவ்வாறான உரிமைகளை இழந்து வாழ்கின்றனர் என ஆராயப்படவில்லை. இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் huffingtonpost ஊடகத்தில், பிரான்செஸ் ஹரிசன் (Frances Harrison* ) எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. தமது சொந்த நாட்டிலிருந்து ஒரு தடவை புலம்பெயர்ந்த மக்கள் அந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பில் ஆதரவளிக்க இயலாதவர்களாகக் கருதப்படுகின்றனர். புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் பிள்ளைகள் த…
-
- 3 replies
- 1.1k views
-
-
திருமலையில் பறிபோகும் தமிழ்நிலங்களும் அழிக்கப்படும் வளங்களும்! திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னக்கரச்சை உப்பளத்தை அவ்விடத்தில் நிறுவாது அம்மக்களின் பாரம்பரிய தொழிலை செய்ய அனுமதிக்குமாறு கும்புறுபிட்டி மக்கள்கோரிக்கைவிடுத்தனர். இவ்வுப்பளத்தை தனியார்கம்பனி ஆரம்பிப்பதற்கு கடந்த பல வருடங்களாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது. மக்களால் எதிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுத்து வந்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்தனன் சுட்டிக்காட்டுகின்றார். இதனால் உப்பள பணிகள் இழுபறிநிலையில் இருந்து இருகின்றன. இந்நிலையில், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் இச்செயற்றிட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உப்பள உரிமையாளர்களுக்கும் இடையில் கும்புறுப்பிட்டி க…
-
- 1 reply
- 713 views
-
-
ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு சிறிசேன உறுதியளித்தது உண்மையா? - குமாரவடிவேல் குருபரன் 15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம். ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் திரு. சுமந்திரன் அவர்கள் முன்னர் பகிரங்கமாக அறியப்படாத செய்தி ஒன்றை வெளியிட்டார். மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஒற்றையாட்சி அரசை மைத்ரிபால விட்டுக்கொடுக்க மாட்டார் என்ற வாசகம் சேர்க்கப்பட இருந்ததாகவும், தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வார…
-
- 0 replies
- 686 views
-
-
அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒரு மாயையா? நிலாந்தன்:- 21 ஜூன் 2015 ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 29 ஆவது அமர்வு கடந்த கிழமை தொடங்கியது. அதில் தொடக்க உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் உள்நாட்டுப் பொறிமுறையை ஆதரித்துப் பேசியிருந்தார். வரும் செப்ரெம்பருக்குள் அவ்வாறான ஓர் உள்நாட்டுப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் உருவாக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரைப் போலவே தமிழ்ப்பகுதிகளுக்கு வந்து போகும் மேற்கத்தேய தூதுவர்களும் இங்கு சந்திக்கும் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் உள்ளாட்டுப் பொறிமுறையை ஆதரித்துக் கதைத்து வருகிறார்கள். அண்மையில் அ…
-
- 3 replies
- 804 views
-
-
வசூல்ராஜாக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்…??? ஆரம்பகாலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற போர்வையில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றிபெற்ற தமிழ்த்தலைவர்கள் பலர் கட்சிக்குள் ஏற்பட்ட சாதி, சமூக வேறுபாடுகள் காரணமாக பிளவுபட்டனர். இதன் விளைவாக அவர்கள் காலத்திற்கு காலம் புதிய புதிய லேபள்களில் தேர்தல்களைச் சந்தித்து வந்தனர். ஒருகட்டத்தில் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய பரிமாணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரேநேரத்தில் இலங்கை அரசாங்கத்தினையும், தமிழ்த்தலைவர்களையும் துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எதுவுமில்லை. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சமர்வரை தமிழ்த்த…
-
- 6 replies
- 1.7k views
-