அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
மாகாண சபைகளுக்கான தேர்தலும் ”கொரோனா இராஜதந்திரமும்” – தாயகன் புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் உருவாக்கத்தின் மூலாதாரமான 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட வேண்டும், மாகாணசபைகள் ஒழிக்கப்பட வேண்டும்,மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என அரசின் பங்காளிகளும் முக்கிய அமைச்சர்களும் போர்க் கொடிதூக்கியுள்ள நிலையில் அதற்கான நகர்வுகளையே மேற்கொண்டு வந்த கோத்தபாய ராஜபக்ச அரசு ,திடீரென 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த முயற்சிப்பதன் பின்னணி என்ன? 0 தாயகன் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட…
-
- 0 replies
- 502 views
-
-
மாகாண சபைகள் தப்பிப் பிழைக்குமா? மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, “மாகாண சபைகளை இரத்துச் செய்வதாக, நான் ஒருபோதும் கூறவில்லை” எனக் கூறியிருக்கிறார். இது, பிரதான அச்சு ஊடகங்களிலும் பல இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. சரத் வீரசேகர, இவ்வாறு கூறுவதாலேயே இது முக்கிய செய்தியாகிறது. ஏனெனில், அவர் மாகாண சபைகளுக்கு எதிரானவர். “மாகாண சபைகளை ஒழிப்போம்” என அவர் கூறினாலும், அது செய்திதான். ஆனால், “நான் மாகாண சபைகளை ஒழிப்பதாகக் கூறவில்லை” என்று அவர் கூறுவது, அதைவிட முக்கியமான செய்தியாகும். உண்மையிலேயே, மாகாண சபைகளை இரத்துச் செய்வதாக சரத் வீரசேகர எங்கும் கூறவில்லையா? நேரடியாக இல்லாவிட்டாலும், அந்தக் கருத்துப்பட பலமுறை, அவர் கருத்து…
-
- 0 replies
- 363 views
-
-
மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம்: அரசாங்கம் கையிலெடுக்கும் இன்னுமொரு ஆயுதம் அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதில் கிட்டத்தட்ட தோல்வியைக் கண்டுள்ள அரசாங்கம், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை பெரும்பான்மைப் பலத்துடன் நிரூபித்திருக்கின்றது. இதனால் ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற நிலையில் அரசாங்கம் தனது கௌரவத்தைக் காப்பாற்றியிருக்கின்றது. ஆனால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு இச்சட்டமூலம், ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதுடன், இதுவிடயத்தில் சிறுபான்மைக் கட்சிகள் மீண்டுமொரு தடவை நம்பவைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு இருப்பதாகவே உணர முடிகின்றது. இப…
-
- 0 replies
- 323 views
-
-
மாகாண சபைகள் விடயத்தில் இந்தியாவை நம்பி இருக்கலாமா? -எம்.எஸ்.எம். ஐயூப் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு, சிறுபான்மை மக்களைச் சீண்டாமல் இருக்கவே முடியாது. பெரும்பான்மை மக்கள் மத்தியில், தமக்கு இருக்கும் ஆதரவை, சரியாமல் தக்கவைத்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியே இல்லை. கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வது, அதில் ஒரு முக்கிய அம்சமாகும். இப்போது உள்நாட்டில், பொதுஜன பெரமுன தவிர, ஏனைய சகல அரசியல் கட்சிகளும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருக்கும் இடதுசாரிக் கட்சிகளும் மருத்துவ சங்கங்களும், சீனா தவிர்ந்த ஏனைய சகல நாடுகளும் உலக சுகாதார நிறுவனமும் என, முழு உலகமுமே பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கொள்கை…
-
- 0 replies
- 488 views
-
-
மாகாண சபைத் தேர்தலுக்காக காத்திருக்கும் தமிழ்க் கட்சிகள் புருஜோத்தமன் தங்கமயில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த மாகாண சபைகளுக்கான தேர்தல், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியால், அரசியல்வாதிகள் முடங்கியிருந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு, அவர்களை உற்சாகமடைய வைத்திருக்கின்றது. முதலமைச்சர் கனவோடும் அமைச்சர் கனவுகளோடும் பலரும் பல மாதங்களாகக் காத்திருக்கிறார்கள். அதிலும், பாராளுமன்றத் தேர்தலில் தோற்றவர்களின் பதவிக்கான காத்திருப்பு என்பது, சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசியல் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான வித்தியாசம் என்பது ப…
-
- 0 replies
- 397 views
-
-
மாகாண சபைத் தேர்தலும் இந்தியாவும் -மொஹமட் பாதுஷா நாட்டில் மாகாண சபைத் தேர்தல், நீண்டகாலமாக இழுபறியாக உள்ள நிலையில், மாகாண சபை முறைமையே இல்லாதொழிக்கப்பட்டு விடுமோ என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதற்கிடையில், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை, முறையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இந்தியா அதிகப்படியான அழுத்தம் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றது. ‘இப்போதைக்கு தேர்தலொன்றை நடத்துவதில்லை' என்று அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய நிலையிலேயே, முதலாவதும் இரண்டாவதும் அலைகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டமை கவனிப்புக்குரியது. அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை, எந்த எல்லை வ…
-
- 0 replies
- 790 views
-
-
மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும்? – அகிலன் 51 Views மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடத்தப்படும்? எந்த முறையில் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படும்? கொழும்பு அரசியலில் இப்போது பிரதான கேள்விகளாக இருப்பவை இவைதான். ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னர் இவை குறித்த கேள்விகள் பலமாக எழுப்பப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என அந்தத் தீர்மானத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைவிட, சிறீலங்கா அரசாங்கமும் இது தொடர்பில் சர்வதேசத்துக்கும், இந்தியாவுக்கும் உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டிருக…
-
- 0 replies
- 312 views
-
-
மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை விக்கி நாடாதது ஏன்? திருமதி வாசுகி சிவகுமார் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது எழுப்பிய கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்;. 23 ஜுலை 2017 தினகரன் வாரமஞ்சரியில் வெளியிடப்பட்டது. கேள்வி 1:- பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு மத்தியில், குறுகிய காலம் மட்டுமே நீடித்திருந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த நீங்கள் அந்த மாகாண சபைக்கும், தற்போதைய மாகாண சபைக்கும் இடையே அரசியல் மற்றும் நிர்வாகரீதியாக காணுகின்ற வேறுபாடுகள் எவை? பதில்:- உங்களுடைய கேள்வியிலேயே அந்த மாகாண சபை உட்பட்டிருந்த ந…
-
- 0 replies
- 520 views
-
-
மாகாண சபையை எங்கிருந்து திட்டமிடுவது? நிலாந்தன்! April 17, 2021 மாகாணசபைத்தேர்தல்களை அரசாங்கம் நடத்தினால் இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த்தரப்பு பலவீனமான பெரும்பான்மையைத்தான் பெறலாம் என்ற கணிப்பு பரவலாக உண்டு. கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் வாக்குகளை மூன்றாக உடைக்கும். தவிர பிள்ளையான், வியாழேந்திரன், கருணா ஆகிய மூவரும் வாக்குகளைப் பிரிப்பார்கள். இவ்வாறாக தமிழ்வாக்குகள் அங்கே ஆறுக்கும் மேற்பட்ட தரப்ப்புக்களால் பிரிக்கப்படும் ஆபத்து உண்டு. இது ஒரு பலமான பெரும்பான்மையை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தும். இதனால் முஸ்லிம்களோடு இணைந்துதான் ஆட்சியை நடத்த வேண்டி இருக்கும் என்ற கணிப்பு பலமாக உண்டு. தமிழ்த்தரப்போடு ஒப்ப…
-
- 0 replies
- 592 views
-
-
மாகாண சபையை வைத்தே உள்ளூராட்சி ஆட்சியமைப்பு - அதிரன் எல்லோரும் அரசியல்வாதிகள். ஆனால், இன்னமும் எதுவும் முடிந்தபாடில்லை. அரசியலில் இலங்கை முழுவதுமே இப்போது பெரும் அமளி துமளியாக இருக்கிறது. யாருக்கு அமைச்சுப்பதவி போகும்; யாருக்கு வரும், பிரதமர் இருப்பாரா இல்லையா. நாடாளுமன்றம் கலையுமா என்பதே அந்த அமளிதுமளி. இதற்கு எப்போது முடிவு கிடைக்கும் என்றே தெரியவில்லை. இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் ஆட்சியமைக்க முடியவில்லை. பல சபைகளில் பெரும்பான்மை உறுப்பினர்களை வென்றுள்ள கட்சிகளுக்குக்கூட வேறு கட்சிகள், நபர்களின் ஆதரவுகள் தேவை என்ற நிலை இருக்கிறது. அதற்கு விட்டுக்கொடுப்புகளுடனும், நிபந்தனைகளுடனும் ஆதரவ…
-
- 0 replies
- 322 views
-
-
மாகாணசபை : யாருக்கும் வெட்கமில்லை July 1, 2021 — கருணாகரன் — “மாகாணசபையை நிராகரிக்கும் அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டோர், மாகாணசபைத் தேர்தலில் ஆர்வமாக இருப்பதும் அந்த அதிகாரத்துக்குப் போட்டியிடுவதும் எதற்காக?; சனங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொண்டு தாங்கள் இன்னொரு விதமாக செயற்படுவது ஏன்?இதைப்பற்றிச் சனங்கள் கூட அறியாமல் இவர்களுடைய ஏமாற்றுகளுக்கு (பம்மாத்துகளுக்கு) எடுபடுவது எதற்காக? மாகாணசபையை ஏற்றுக் கொள்ளாத அரசியல் ஆய்வாளர்கள் கூட மாகாணசபைத் தேர்தல் என்று வந்து விட்டால் இந்தத் தரப்புகளின் பக்கம் நின்று கூவுவது ஏன்?” என்ற கேள்விகளை நீண்டகாலமாகவே எழுப்பிக் கொண்டிருக்கிறார் நண்பர் ஒருவர். அவருடைய கேள்விகள் நியாயமானவையே! ஆகவே இதைப்பற்றி நாம் …
-
- 0 replies
- 645 views
-
-
மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் தேர்தல் பிரச்சார ரதம் புறப்படத் தொடங்கிவிட்டது. தமிழர் பிரச்சனைகளுக்கு மாகாண சபைகள் தீர்வல்ல என்ற கூட்டமைப்பு அணியினரும் ரத பவனியில் தங்களை இணைத்து மக்கள் முன்னால் வரத்தொடங்கி விட்டனர். முதன்மை வேட்பாளர் பிரச்சனைகளும், அவரின் முன், பின்புலங்கள் தொடர்பான அலசல்களும் ஓரளவு குறைவடைந்து, மக்கள் மத்தியில் இருந்த எதிர்வினை அதிர்வுகள் மெல்ல மெல்ல அகன்று வருகின்றன. எப்படியும் தேர்தல் தினத்துக்கிடையில் அந்த அதிர்வுகள் இல்லாமல் போய்விடும். அவ்வளவு உக்கிரமான வகையில் பிரச்சாரங்கள் இனி அமையும். இதற்குக் கட்டியம் கூறும் வகையில் சம்மந்தரும் சுமந்திரனும் இணைந்து மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தில் சில அறிக்கைளை மென்மையாக கசிய விட்டுள்ளனர். அதில் புலம்பெயர் தமி…
-
- 19 replies
- 2.3k views
-
-
மாகாணசபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம் October 14, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — மாகாணசபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்க தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும் அறிவிப்புக்கள் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க சந்தேகத்தை வலுப்படுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன. நீண்டகாலமாக தாமதிக்கப்படும் மாகாணசபை தேர்தல்களை அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது என்றும் தற்போதைய எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த வியாழக்கிழமை (9/10) பாராளுமன்றத்தில் அறிவித்தார். “மாகாணசபை தேர்தல்களை…
-
- 0 replies
- 143 views
-
-
மாகாணசபை முறுகல் நிலை தந்த படிப்பினைகள் – செல்வரட்னம் சிறிதரன்:- வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வந்துள்ளன. தொடர்ந்து சபை நிர்வாகத்தை சரியான முறையில் ஒற்றுமையாக முன்னெடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட பலரும் உறுதிபூண்டிருக்கின்றார்கள். இது மகிழ்ச்சிக்குரியது. முன்னாள் நீதியரசர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்ட வடமாகாண சபையின் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதையடுத்து ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமைகளின் மூலம் கிடைத்துள்ள அனுபவங்கள் மிகவும் கசப்பானவை. இத்தகைய நிலைமைகள் மீண்டும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். …
-
- 1 reply
- 355 views
-
-
மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் May 25, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களுக்கு பிறகு உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மாகாணசபை தேர்தல்களை பற்றி பேசுவது பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்கள் சுமார் இரண்டரை வருடங்கள் தாமதிக்கப்பட்ட அதேவேளை மாகாணசபை தேர்தல்கள் ஏழு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்றன. உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி காரணமாக மாகாணசபை தேர்தல்களை தற்போதைக்கு நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டாது என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அரசாங்கம் மாத்திரமல்ல, எ…
-
- 0 replies
- 186 views
-
-
மாகாணசபைகள் வரலாற்றின் மீள்பார்வை November 17, 2023 — வி. சிவலிங்கம். — எதிர்வரும் நவம்பர் 19ம் திகதி இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இணைவதை நினைவு கூருமுகமாக இக் கட்டுரை வெளியாகிறது. இவ் வரலாற்றுச் சம்பவங்கள் என்பவை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினம் என்பதோடு அவரது அரசியல் வரலாறு வடக்கு, கிழக்கிற்கான மாகாணசபை உருவாக்கத்தோடும் இணைந்துள்ளதால் அவ் இணைந்த மாகாணசபையின் முதலாவது தேர்தல் நடைபெற்று 35 ஆண்டுகள் கடந்துவிட்ட தினமாகவும் நினைவூட்டப்படுகிறது. தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அரசியல் வரலாற்றுச் சம்பவமாக இவை இரண்டையும் இணைத்துப் பேச முடியும். ஏனெனில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அட…
-
- 0 replies
- 625 views
-
-
மாகாணசபைத் தேர்தலும் -கிழக்கின் நிலையும் – மட்டு.நகரான் October 21, 2021 மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணமுள்ளன. தமிழர் அரசியலில் கடந்த காலத்தில் மாகாணசபை தொடர்பில் ஆர்வம் குறைந்திருந்த நிலையிலும், இன்று அந்த நிலைமை மாற்றமடைந்துள்ள முழுமையான ஆர்வத்துடன் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளவர்கள் செயற்படுவதைக் காணமுடிகின்றது. மாகாணசபைத் தேர்தல் என்பது, இன்று வடகிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சூழ்நிலைக்குச் செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. வடகிழக்கு இணைந்த தமிழ்த் தேசியத்தின் மிக முக்கியமான கோரிக்கையாக வடகிழக்கு இணைந்த மாகாணசபையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வாய்கிழியக் கூவியவர்கள்…
-
- 0 replies
- 331 views
-
-
ஐயா மகாஜனங்களே உங்ககிட்ட கொஞ்சம் மனம்விட்டு பேசனுங்கய்யா. சில வெப்சைட்டுகள்ள வர்ற நியூசுகளை வாசிக்க காளமேகம் றொம்ப கடுப்பு ஆயிடுச்சு. ஏதோ நம்ம அரசியலப்பற்றிச் சொல்லியிருக்கிறாங்கள், பாத்துப் பயனடைவம் எண்டு இந்த லிங்கை கிளிக் பண்ணினால்........ http://inioru.com/?p=36664 ஏம்பா இப்பிடி? ஒண்ணும் புரியலீங்க, அதுதான் நம்மளுக்கு தெரிஞ்ச தமிங்கிலத்தில நாம நினைக்கிறத விசயத்தை சொல்லியிடலாம் என்டு நினைக்கிறனுங்கய்யா. மாகாண சபைத்தேர்தலில நம்ம நீதவான் விக்கினேஸ்வரன் ஐயா முதலமைச்சரா போட்டி போடப்போறார் என்று முடிவாயிடிச்சுங்கய்யா. நீதவான் சொல்லுறாருங்கய்யா ‘விட்டுக் கொடுப்பை நிர்ப்பந்திக்கும் கடுமையான அழுத்தம் வெளியில் இருந்தோ அல்லது உள்நாட்டில் இருந்தோ அதிகாரத்தில் இருப்பவர்கள் மீ…
-
- 0 replies
- 865 views
-
-
மாகாணசபைத் தேர்தல் சட்டமும் முஸ்லிம் அரசியல் எதிர்காலமும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-5
-
- 0 replies
- 243 views
-
-
மாகாணசபைத் தேர்தல் தனிநபர் பிரேரணையும் தனிநபர்களின் நிகழ்ச்சித் திட்டங்களும் Digital News Team 2017 ஆம் ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில் ரணில் – சுமந்திரன் கூட்டு முயற்சியில் கொண்டுவரப்பட்ட ‘ மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம்’ ஆகும். இதை இருவரின் கூட்டுமுயற்சி எனக் கூறுவதன் காரணம், இருவருக்கும் அத்தேர்தலை ஒத்திவைக்கவேண்டிய தேவை இருந்ததுடன், நல்லாட்சிக் காலத்தில் சம்பந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாகச் செயற்பட்டமையுமாகும். தென்னிலங்கையில் நல்லாட்சியாளர்கள் மீது அதிகரித்து வந்த அதிருப்தியினால் மாகாணசபைத் தேர்தல்கள் தனக்குப் பாதகமாக அமைந்துவிடலாம் என ரணில் தரப்புக்கு ஏற்பட்ட பயம் ஒருபுறமும், மறுபுறத்தி…
-
- 0 replies
- 226 views
-
-
மாகாணசபைத் தேர்தல்: புதிய அரசியல் தடத்தைப் பதியுமா? -க. அகரன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தாக்கத்தில் இருந்து, மீள்வதற்குள்ளாகவே மாகாணசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்குள் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தம்மைக் கருதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பின்னடைவைச் சந்தித்தமையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கான காரணங்களைத் தேடிய அலைச்சலை, முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. கொழும்பில் நடைபெற்று முடிந்த, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காரசாரமான வாதப்பி…
-
- 0 replies
- 478 views
-
-
மாகாணசபையை தளமாகக் கொள்ளும் தமிழர் அரசியலும், அதன் மீதான விமர்சனங்களும் - யதீந்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையில் போட்டியிடும் முடிவை அறிவித்த நாளிலிருந்து, சில விமர்சனங்களும் மேலெழுந்தவாறே இருக்கின்றன. அதாவது ஒன்றுமில்லாத மாகாணசபையை கூட்டமைப்பு ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்கிறது என்பதுதான் அவ்வாறான விமர்சனங்களின் அடிப்படையாக இருக்கிறது. இத்தகைய விமர்சனங்களின் சொந்தக்காரர்கள், 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவான மாகாணசபை முறைமையை தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக்கொள்வதானது, ஓர் உண்மையான தீர்வை நோக்கிச் செல்வதற்கான பாதையை மூடிவிடும் என்கின்றனர். மாகாணசபையை கையாளுவது தொடர்பான முன்னைய பத்திகள் தொடர்பில் என்னுடன் பேசிய புலம்பெயர் ஊடக நண்பர் ஒருவர் பி…
-
- 0 replies
- 427 views
-
-
மாகாணத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக அனைவரும் அணிதிரளுங்கள்; சுரேஷ் பிறேமச்சந்திரன் 6 Views மாகாணங்களுக்கென்று குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக எதேச்சாதிகாரமாகப் பறிக்கப்படுகின்றது. இந்தப் போக்கை அனைத்து அரசியல் தலைமைகளும் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிறேமச்சந்திரன் அறைகூவல் விடுத்திருக்கிறார். மாகாண பாடசாலைகளை தரம் உயர்த்தல் என்ற போர்வையில் மத்திய அரசு மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றிவருகின்றது. இந்தப் போக்கு கண்டனத்திற்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் என்று தெரிவித்துள்ள சுரேஷ் பிறேமச்சந்திரன் அரசின…
-
- 0 replies
- 278 views
-
-
மாடறுப்பு விவகாரம்: ஜீவகாருண்யம்? ஒவ்வொரு வருடத்திலும் ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் மாடறுப்பு தொடர்பான பிரச்சினை பெரும் பேசுபொருளாகி விடுகின்றது. குறிப்பாக, முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட எத்தனிக்கின்ற காலப்பகுதியில், மாடுகள் சார்ந்த அரசியலொன்று சூடு பிடிக்கத் தொடங்கி விடுவதைக் காண்கின்றோம். மாடறுப்பு தொடர்பாக, முஸ்லிம்களின் பக்கத்தில் சில தவறுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும், மாடறுப்பு தொடர்பாகக் குரல் எழுப்புகின்ற செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் வேறு ஒரு நிகழ்ச்சிநிரலின் ஊடாகத் தமக்கு அளிக்கப்பட்ட வேலையைச் செய்வதாகவே எண்ணத் தோன்றுகின்றது. இலங்கையில் மாடுகளுக்காகவும் நா…
-
- 0 replies
- 736 views
-
-
மாட்டிறைச்சியை முன்வைத்த பிணக்குகள் மாட்டிறைச்சிக்கு எதிரான மனநிலையை, தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பும் முயற்சியொன்று கடந்த சில வருடங்களாக மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது. மாட்டிறைச்சியை முன்னிறுத்திய மத அடிப்படைவாதம், இந்தியா போன்று, இலங்கைக்கும் புதியதல்ல. முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை வளர்ப்பதற்காக பௌத்த அடிப்படைவாதிகளும், அதுசார் நிறுவனங்களும் மாட்டிறைச்சி விவகாரத்தை, தென் இலங்கையில் அவ்வப்போது, தூசி தட்டித் தூக்கிப் பிடிப்பதுண்டு. அவ்வாறானதொரு நிலையை, தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி, மத அடிப்படைவாதத்தை மேல் மட்டத்தில் பேணுவதற்காகச் சில தரப்புகள் ஒன்றிணைந்திருக்கின்றன. …
-
- 1 reply
- 2.4k views
-