அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
உள்ளூராட்சி மன்ற தேர்தலும் இடைக்கால அறிக்கையும் தமிழ் தேசிய இனம் எதிர்நோக்கிய எந்தவொரு தேர்தலும் பதவியை மையப்படுத்தி யதாகவோ அல்லது அபிவிருத்தி, உட்கட்டுமானங்கள், சபைகளுக்கு என்று குறித்தொதுக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துதல் என்பதற்கும் அப்பால் தேசிய இனப்பிரச்சினையை மையமாகக் கொண்டு அதற்கான தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்டே அமைந்துள்ளது. தமிழ் தேசிய இனத்தின் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் ஜனநாயக வழியில் அதற்கான குரல் பல்வேறு அச்சுறுத்தல்களையும், அதிகார பலப்பிரயோகங்களையும் மீறி தேர்தல் அரங்குகளில் எதிரொலித்து வருகிறது. இத்தகைய பின்ன…
-
- 0 replies
- 359 views
-
-
ஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தமிழ் தலைவர்கள் அஞ்சியோடுகின்றனர்? கடந்த வாரம் வவுனியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள்? அடுத்தது என்ன? – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் முன்னணி தமிழ்த் தேசிய கருத்தியலாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இதில் பங்குகொண்டிருந்தனர். இந்த நிகழ்வை மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. அவர்களின் தவல்களின்படி மேற்படி நிகழ்விற்காக கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் நான்கு கட்சிகள் மற்றும் கூட்டமைப்பிற்கு எதிர் நிலையிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அழைக்கப்…
-
- 0 replies
- 359 views
-
-
பொறுப்புக் கூறலுக்கு நம்பகத்தன்மை வேண்டும் தற்போது ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையில் 37ஆவது கூட்டத்தொடர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வழமையாகவே பயங்கரவாதிகளுடனான தார்மீக யுத்தம் எனக் கூறிவந்த அரசு இப்போது அவ்விதம் கூறமுடியாத நிலையில் இருக்கிறது. காரணம் அகிம்சையோடு நிராயுதபாணிகளாக அண்டி, ஒன்றாகக்கலந்து வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகக் கணிக்கப்பட்டுத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். மகிந்தவின் ஆட்சிக்கால இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட இச்செய்கை, மைத்திரி ஆட்சிக்கு வந்தது முதல் இற்றைவரை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எந்த பாதுகாப்பும் இல்லை. போர்க்குற்றத்தை ஏற்றுக்க…
-
- 0 replies
- 359 views
-
-
இக்கட்டுரையானது அண்மையில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் வெளியான “Tiger Diaspora Backs Gajendrakumar Ponnambalam” என்ற கட்டுரைக்கு பதிலாகஅமைந்த ஆங்கிலக்கட்டுரையின்[ii] மொழிபெயர்ப்பும் எதிர்வரும் தேர்தல் குறித்தசில அவதானிப்புகளும்ஆகும். இலங்கைத் தீவிலே தமிழரின் அரசியல் போராட்டங்களையும், தமிழர் அபிலாசைகளையும், தமிழினம் பல தசாப்த காலமாய் எதிர்நோக்கி வரும் அடக்குமுறைகளை வெளிச்சமிட்டு காட்டுதலையும் சட்டப்படி குற்றங்களாக்குவதன் மூலமாகவே (criminalize) தொன்று தொட்டு வந்த இலங்கை அரசுகளும் அரசின் விவரணையை ஆதரிக்கும் ஊடகங்களும் தமிழரின் நியாயமான கோரிக்கைகளை நசுக்கியுள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னான தசாப்தங்களில் இலங்கைத் தீவில் வாழும் தமிழினம் தமக்கெதிரான அடக்குமுறைகளை உள்நாட்டிலோ சர…
-
- 0 replies
- 359 views
-
-
திருமலை விவகாரம்: இன, மத சகிப்புத் தன்மையின் அவசியம் மொஹமட் பாதுஷா பல்லின, பல்மதம், பல்கலாசாரங்களைக் கொண்ட நாடுகளில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்கள் கூட்டத்துக்கும் இடையில் அவர்கள் தனித்துவங்கள், கலாசாரம் பற்றிய பரஸ்பர புரிதல் அவசியமாகின்றது. இதற்கு இன, மத சகிப்புத்தன்மை மிகவும் அடிப்படையான விடயமாகும். இலங்கையில் இன, மத சகிப்புத்தன்மையில் ஏற்பட்ட பின்னடைவே பல்வேறு இன முரண்பாடுகளுக்கும் தேவையற்ற நெருக்கடிகளுக்கும் வித்திட்டுள்ளது. இருப்பினும், சகோதர இனத்தின் பிரத்தியேகமான பழக்க வழக்கங்களை நேரிய மனதுடன் சகித்துக் கொள்ளவதில், இன்னும் முன்னேற்றம் வேண்டும் என்பதையே அண்மையில் திருகோணமலையில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கசப்பான நிகழ்வு உணர்த்தி நிற்கின்றது. …
-
- 0 replies
- 359 views
-
-
ரணிலின் வெற்றியும் எதிர்கால சாவல்களும் நல்லாட்சி அரசாங்கத்தை உலுக்கிய நம்பிக்கை இல்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து ரணில் விக்கிரமசிங்க பிரதமர் என்ற அரசியல் அந்தஸ்தில் மறுபிறவி எடுத்திருக்கின்றார் என்றே கூற வேண்டும். இப் பிரேரணை வெற்றிபெற்றிருந்தால் அவர் பிரதமர் பதவியைத் துறக்க நேரிட்டிருக்கும். வேறொருவர் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பார். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியும் கூட அவரிடமிருந்து சிலவேளை பறிபோயிருக்க நேரிட்டிருக்கலாம். அது மட்டுமல்லாமல் நாட்டில் ஜனநாயகத்தையும் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி முழுமை…
-
- 0 replies
- 359 views
-
-
கரையோர மாவட்டமும் தனி அலகும் தெளிய வேண்டிய மயக்கங்கள் மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருப்பவர்களுக்கும் கூட, சில வேளைகளில் அந்தமொழிகளில் இருக்கின்ற சில சொற்களின் அர்த்தங்கள் விளங்காமல் போவதுண்டு. ஒரே மாதிரியான இரு சொற்கள் மயக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதுபோல, முஸ்லிம் மக்களால் கோரப்படுகின்ற கரையோர மாவட்டம் மற்றும் முஸ்லிம் தனியலகு ஆகியவை தொடர்பிலும் பெருமளவானோர் குழம்பிப் போய் இருக்கின்றனர். இரண்டினதும் ஆழ அகலங்கள் என்ன? அவற்றுக்கிடையான வித்தியாசங்கள் என்ன? என்பது பற்றி, ஒருசில மக்கள் பிரதிநிதிகளும் விளங்காத்தனமாக அறிக்கை விடுவதைக் காண முடிகின்றது. அரசமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையின் …
-
- 0 replies
- 359 views
-
-
அதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும் – பி.மாணிக்கவாசகம் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இல்லாதொழித்துள்ளதாக அரச தரப்பினர் கூறுகின்றனர். ஆயினும் இல்லாமல் செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, பயங்கரவாதம் தலையெடுக்கின்றது. நாட்டில் பிரிவினைவாதம் உயிர்த்தெழுகின்றது என அச்சமூட்டி அரசியல் செய்கின்ற மோசமான அரசியல் பிற்போக்கு இப்போது தீவிரமடைந்திருக்கின்றது. குறிப்பாக ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஊழல்களை ஒழித்து, தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், குடும்ப அரசியல…
-
- 0 replies
- 359 views
-
-
தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கான அறைகூவலும் சாத்தியமின்மையும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கை தமிழர் அரசியலை, குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில், அதைப் பற்றிப் பேசும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும், தமிழர் அரசியலில் ‘ஒற்றுமை’ வேண்டும் என்று கூறுவது, உலக சமாதானம் வேண்டும் என்று உலகத் தலைவர்கள் சொல்வது போன்ற சம்பிரதாயபூர்வமான சொற்றொடராகவே மாறிப்போயுள்ளது. தமிழர் அரசியலைப் பற்றி கருத்துரைப்பவர்கள், தமிழர் அரசியலில் ஒற்றுமை இல்லை என்றும், தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்றும் சொல்வதை, பெரும்பாலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அந்தப் பொது மனநிலைக்குத் தீனி போடுமாற்போல, அரசியல்வாதிகளும் அவ்வப…
-
- 1 reply
- 359 views
-
-
சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 80வது ஆண்டில் ஈழத்தமிழர் இறைமையின் தொன்மை குறித்து சில தெளிவுகள் – மூத்த அரசியல் ஆய்வாளர் சூ. பற்றிமாகரன் January 31, 2025 நீதியரசர் சச்சி பொன்னம்பலத்தின் “சிறிலங்கா-தமிழர் தேசியப் பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்” நூலிருந்து சில தரவுகள்சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்கா இரு தேச இனங்களின் இறைமைகளின் சமத்துவத்தை உறுதிப்படுத்தி நாட்டை பொருளாதார பெருவீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கான சில வரலாற்று வழிகாட்டல் ஈழத்தமிழர் இறைமையை இலண்டன் கிழக்கிந்தியக் கம்பெனி 1796 இல் டச்சுக் காலனித்துவ அரசிடம் இருந்து கைப்பற்றி மதராசில் இருந்து ( இன்றைய சென்னை) தமிழகத்துடன் இணைந்ததாக முழு இலங்கையையும் 1802 வரை ஒரே சட்டத்தில் ஓரே …
-
-
- 3 replies
- 359 views
-
-
கிழக்கில் அருணின் அரசியல் முக்கியத்துவம்……! December 11, 2024 — அழகு குணசீலன் — “நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு தேவை. அந்த அரசியல் அமைப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்……. புதிய அரசியல் அமைப்பில் பதின்மூன்றாவது திருத்தம் மட்டும் அல்ல பழைய அரசியல் அமைப்பில் செய்யப்பட்டுள்ள இருபத்தியிரண்டு திருத்தங்களும் இல்லாமல் போகும்….” . இது வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் தர்க்க ரீதியான குழப்பங்களை தவிர்த்த கருத்து. அண்மையில் ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வாவினால் கூறப்பட்டு, பின்னர் மறுக்கப்பட்ட/திருத்தப்பட்ட தெளிவற்ற கருத…
-
- 0 replies
- 359 views
-
-
படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே நிலவும் மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்? இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் வ…
-
- 0 replies
- 359 views
- 1 follower
-
-
தேசியக் கட்சிகளுக்கான விசுவாசம்: எந்தக் கருமத்தையும் ஈடேற விடாது -க. அகரன் அரசியல் சக்கரம் பல படிப்பினைகளை உணர்த்தியதாகவே சூழன்று கொண்டிருக்கின்றது, என்பதற்கு அண்மைய இலங்கை அரசியல் போக்கு சான்றாகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக எண்ணப்பட்ட பலரும், தமது பலம்பொருந்திய மக்கள் தளத்தை வெளிப்படுத்தியதாகவே, நடந்து முடிந்த தேர்தல் காணப்படுகின்றது. ஸ்திரமில்லாத சபைகளை உருவாக்கும் விதமாக, உள்ளூராட்சி மன்றங்கள் அமைந்திருந்தாலும் கூட, தேர்தல் முறைமையானது, நீண்ட காலப் பகையாளிகளை, அன்னியோன்னியம் ஆக்கியுள்ள நிலையில், இனம் சார்ந்த கருத்தியல் கொண்டவர்களை, நிரந்தரப் பகையாளிகளாகவும் உருவாக…
-
- 0 replies
- 359 views
-
-
யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்! -- ---- ----- *இவர்கள் தமிழர்களை சிதைக்கும் அரசியல் கருவிகள். *செம்மனி பேசும் நிலையில் ரணில் கைது *முறிந்த பனைமரக் குழுக்களின் தொடர்ச்சி *ஜெனீவா கூட்டம் ஆரம்பிக்கவுள்ள நிலையில்... -- ---- --- மாற்றுக் கருத்து என்ற போர்வையில் தமிழர்களின் "அரசியல் விவகாரம்" என்ற பிரதான இலக்கை திசை திருப்ப - மலினப்படுத்த பலர் பலவிதமான விடயங்களைக் கையில் எடுக்கின்றனர். 2009 இற்குப் பின்னர் இத் தன்மை வெவ்வேறு வடிவங்களில் உருவெடுத்து முளைத்துள்ளது. முறிந்த பனைமரக் குழுக்களிடம் இருந்து 1980 களில் ஆரம்பித்தது தான் இந்த மாற்றுக் கருத்து. உண்மையில், விடுதலை வேண்டி நிற்கும் இனம் ஒன்றுக்குள் வரக் கூடிய மாற்றுக் கருத்து என்பது, அந்த இனத்தின் வ…
-
- 0 replies
- 359 views
-
-
2015இல் நிகழ்ந்த ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், எல்லாவற்றையும் நிறைவேற்றுவோம் என்று ஜெனீவாவில் வாக்குறுதிகளைக் கொடுத்து, சர்வதேச சமூகத்தை நம்பவைத்து வந்த இலங்கையின் தற்போதைய அரசாங்கம், தமது வாக்குறுதியை மீறும் வகையில் செயற்படுவதை சர்வதேச சமூகத்தினால் பொறுத்துக்கொள்ள முடியா திருக்கின்றது. இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ள விவகாரம், புதியதொரு பரிமாணத்தைத் தொட்டிருக்கிறது, இதனை ஐ.நாவும் சர்வதேச சமூகமும், தமக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கின்றன. 2010ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு, பொறுப்புக்கூறுவதற்கு எடுக்கப்பட்டு வந்…
-
- 0 replies
- 359 views
-
-
புதிய பொறிமுறை யோசணையை முன்வைக்கவுள்ள ஹுசைன்? உள்நாட்டில் தேர்தல் தொடர்பான பரபரப்புக்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அதேகாலத்தில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விடயங்கள் தீவிரமடைய ஆரம்பித்திருக்கின்றன. தேர்தல் காலத்தில் இலங்கையில் பல்வேறு விடயங்கள் பிரசாரப்பணிகளின் போது பேசப்படவுள்ள நிலையில் ஜெனிவா விவகாரமும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது எதிர்வரும் பெப்ரவரிமாதம் 27ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அதுவும்…
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் ! March 24, 2021 இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இங்கிலாந்து அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம் இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்திருக்கிறது மோடி அரசு. ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. அதே சமயத்தில் சீனா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டது. பெரும்பான்மை அடிப்…
-
- 0 replies
- 358 views
-
-
இழுத்தடிக்கப்படும் நீதி என்.கண்ணன் குருநாகலையில் அமைக்கப்பட்ட இராணுவத்தினரின் நினைவுத் தூபியை திறந்து வைத்து உரையாற்றிய போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருக்கிறார். அதாவது, போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டில் நடத்தப்படும் விசாரணைப் பொறிமுறைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதே அவரது அந்த நிலைப்பாடு. இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்துவது இதுதான் முதல் தடவையல்ல. ஏற்கனவே அவர் பலமுறை இதனை கூறியிருக்கிறார். வெளிநாட்டு நீதிபதிகள் மாத்திரமன்றி, …
-
- 0 replies
- 358 views
-
-
உயர்நீதிமன்றின் தீர்ப்பும் அரசாங்கத்தின் அச்சமும் தேசிய அரசாங்கமானது பதவிக்கு வந்த காலத்திலிருந்து எந்தவொரு தேர்தலையும் நடத்த முன்வரவில்லை. உதாரணமாக இலங்கையிலுள்ள 335 உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலம் இரண்டு வருட காலத்துக்கு மேலாகியும் அவற்றை நடத்துவதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஏன் தேர்தலுக்கு முகங்கொடுக்க இந்த அரசு தயங்குகின்றது என்ற சூட்சுமம் இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றது. “நீதித்துறையானது 20 ஆவது திருத்தம் தொடர்பாக தமது கடமையை உச்சளவில் செய்துள்ளது. இது இலங்கை நீதித்துறை வரலாற்றில் உச்சளவிலான பதிவாகவு…
-
- 0 replies
- 358 views
-
-
இராணுவத்தின் களமிறக்கம்; பொறுப்பற்ற தமிழ்த்தலைமை இரண்டு பொலிஸார் மீது, கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு நடத்தப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் வந்திருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, “நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தேவைப்பட்டால் இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினரின் உதவியையும் பெறுவேன்” என்று கூறியிருந்தார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுமார் ஆயிரம் பேரைக் கொண்ட விசேட அதிரடிப்படையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொலிஸ்மா அதிபர், அவர்களின் மூலம், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், முப்படைகளையும் களமிறக்குவேன் என்று எச்சரித்தமை, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய…
-
- 0 replies
- 358 views
-
-
ராஜபக்ஷர்களுக்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மக்களின் பங்கு? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்ப் பரப்பிலுள்ள சில தரப்புகளால், “..ராஜபக்ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம், தென் இலங்கை மக்களின் வயிற்றுப் பசிக்கான பிரச்சினை. அதில் பங்களிப்பது அவசியமற்றது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து, வேடிக்கை பார்க்க வேண்டும்....” என்கிற கருத்துருவாக்கம், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக, புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் அதைத் தலையாய பணியாக ஏற்றும் செயற்படுகின்றனர். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. சமையல் எரிவாயு தொடங்கி, எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. தங்களது நாளாந்த வேலைகளை …
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கையில் மாறிவந்த ஆட்சி தள்ளாடிக்கொண்டிருக்கிறது??
-
- 0 replies
- 358 views
-
-
சிறீலங்கா சிறைகளில் கிடக்கும் தமிழருக்கும், அவுட்விட்ஜ் யூதர்களுக்கும் என்ன வேறுபாடு..? யூதர்களைப் போல அறிவுள்ளவர்கள் இலங்கை தமிழர் என்று ஒரு காலத்தில் சொன்னார்கள்.. ஆனால் யூதர்களைப் போல சிறைக் கொட்டடிகளில் கிடந்து கொல்லப்படுவோரே தமிழர் என்ற வரலாற்றை பலர் பேச மறந்தார்கள். அன்று போலந்து சிறைக்கொட்டடிகளுக்குள் வாடிய யூதர்கள் போல தமிழர்களின் வாழ்வும் கண்ணீருடன் கரைந்து போகிறது. ஆகவேதான் நேற்று நடைபெற்ற போலந்து சிறைக்கொட்டடி நினைவுகளுடன் சிறீலங்கா சிறையையும் ஒப்பிட வேண்டியுள்ளது. போலந்து நாட்டில் இருந்த அவுஸ்விட்ஜ் என்னும் நாஜி படுகொலை முகாமில் இருந்து யூதர்களும், சிறுபான்மை மக்களும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் ரஸ்யப்படைகளால் விடுதலை செய்யப்பட்ட 70 வருட நிகழ்வு நேற்ற…
-
- 0 replies
- 358 views
-
-
Published By: PRIYATHARSHAN 19 JUN, 2025 | 04:06 PM வீ. பிரியதர்சன் உங்கள் பிள்ளை, உடன்பிறந்தவர், கணவன், மனைவி அல்லது பெற்றோர் என ஒரு அன்புக்குரியவர் காணாமல்போனதை கற்பனை செய்து பாருங்கள், அவர்களை மீண்டும் கொண்டுவர அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள், அதற்குப் பதிலாக உங்கள் வேண்டுகோள்கள் செவிடர் காதுகளில் விழுகின்றன. அரசாங்கங்களும் புரட்சிகளும் வந்துபோயின. அனைத்தும் நீதியை உறுதியளித்தன. ஆனால் இறுதியில் அந்த நீதியை வழங்கத் தவறிவிட்டன. ஆயினும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் 3 மூவாயிரம் நாட்களுக்கு மேலாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர் நீதிக்காக. ஆம், இந்நிலையிலேயே 2025 ஆம் …
-
- 1 reply
- 358 views
- 1 follower
-
-
தேர்தல் களத்தில் தமிழ்ப் பெண்களின் வகிபாகம் அரசியற் கொள்கையா? அனுதாப இலக்கா? August 1, 2020 எஸ்தி இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் – 1931ல் சட்டசபை உருவாக்கப்பட்டபோதே ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இலங்கையின் சனத்தொகையில் 52 வீதமானோர் இப்போது பெண்களாக இருக்கின்றபோதிலும் இவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக்குறைவு. முக்கியமாக கடந்த நாடாளுமன்றத்தில் 5.3 வீதமானவர்களே பெண்களாக இருந்தனர். சர்வதேச புள்ளிவிபரத்தின்படி இவ்விடயத்தில் 190 நாடுகளில் இலங்கைக்கு 180வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலாவது சட்டசபைத் தேர்தல் 1931ல் இடம்பெற்றபோது இந்திய வம்சாவளிப் பிரமாண தமிழ்ப் பெண்ணான லீலாவதி அசரப்பா பலாங்கொட தொகுதியி…
-
- 0 replies
- 358 views
-