அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
பிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன் August 8, 2019 159 . Views . பிரக்சிட் நெருக்கடியினால் முன்னால் பிரதமர் தெரேசா மே பதவி விலகியதைத் தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இப்சோஸ் மோரி (Ipsos Mori) என்னும் நிறுவனம், இவ்னிங் ஸ்டாண்டர்ட் (Evening Standard) பத்திரிகைக்காக நடத்திய கருத்துக் கணிப்பின்படி கன்சர்வேடிவ் கட்சிக்கான ஆதரவு தற்பொழுது பத்துப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினை விட முன்னணியில் அவர் நிற்பதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரக்சிட்டினால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாகவே அடுத்த பிரதமராக வரக்கூடிய சாத்தியம் அதிகமாயிருந்த ஜெரமி கோர்பின் பின்னுக்கு தள்ளப்பட்டு …
-
- 0 replies
- 640 views
-
-
*நிகழ்ச்சி நிரல்* 6.30 ஆரம்பம்,அறிமுகம் (9am Toronto 2 pm London UK) 6.35 கனடா அமைப்பாளர் உரை 6.45 கருத்து பகிர்வு *Dr.அருள்கோகிலன்* தேசியபுத்திஜீவிகள் அமைப்பு வடமாகாணம் 7.30 கேள்விபதில்கள் 8.30 நிறைவுரை. Topic: புலம்பெயர் தோழர்களுடன் விசேட கூட்டம் Time: Oct 27, 2024 06:00 PM Colombo Join Zoom Meeting https://gurus-club.zoom.us/j/81920505564?pwd=8Q3PB3qGPqPpqnqGOPq9CvzWJ4B6br.1 Meeting ID: 819 2050 5564 Passcode: 271786
-
- 0 replies
- 1.3k views
-
-
அர்ச்சுனாவின் அரசியலும் அதைவிரும்பும் இரசிகர்களும். ( யாழ் தினக்குரல்- 2/2,ஞாயிறு) தமிழ்த் திரைப்படமொன்றில் தன்னை ஊரில் ரவுடியாகப் ‘பில்ட்டப்’ பண்ணும் நோக்கில் நகைச்சுவை நடிகர் வடிவேலு “நானும் ரவுடிதான். என்னையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு போங்கள்” என்று கெஞ்சுவதை சிலர் பார்த்திருப்பீர்கள். அந்தக்காட்சிதான் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனா இராமநாதனை சாவகச்சேரியில் வைத்து அனுராதபுர காவல்துறையினர் கைது செய்தபோது அவர் நடந்தகொண்டவிதம் நினைவுபடுத்தியது. காவல்துறையினர் அவரைக் கைவிலங்கின்றி அழைத்துச்செல்ல முற்பட்டபோது அர்ச்சுனா தனக்கு விலங்கிட்டுக் கூட்டிச் செல்லுங்கள் என்று தானே வலிந்து கேட்டு விலங்கு கையில் மாட்டப்பட்டதைப் பார்த்தோம். அர்…
-
- 0 replies
- 322 views
-
-
கூடுவிட்டுக் கூடுபாயும் யானைக் கூட்டம் -விரான்ஸ்கி இலங்கை அரசியலில், ‘தோல்விகளின் தொடர் நாயகன்’ என்று கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முகங்கொடுத்த உட்கட்சி அழுத்தங்கள், அவமானங்கள், நிராகரிப்புகள் என்று எல்லாவற்றில் இருந்தும் மீண்டெழுந்து, கட்சியின் செயற்குழுவின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளார். அசுர வெற்றியைப் பெற்றுக்கொண்ட ராஜபக்ஷக்களுக்கு முன்னால், துரும்பாகிவிட்ட சஜித் தரப்பின் அரசியல், “இனி என்ன”, என்ற மிகப்பெரிய கேள்வி, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியிலும் சரி, இலங்கை அரசியலிலும் சரி வியாபித்து …
-
- 0 replies
- 246 views
-
-
தற்கொலைப் போராளிகளும் சமயப் பின்னணியங்களும்: சில எண்ணங்கள் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சச்சிதானந்தன் சுகிர்தராஜா, இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பின்-காலனியத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். ஐந்து தனி நூல்களை எழுதியுள்ள சுகிர்தராஜா, சில தொகை நூல்களின் ஆசிரியருங்கூட. இவரது நூல்களை ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களும் சில அமெரிக்கப் பதிப்பகங்களும் வெளியிட்டுள்ளன. கணையாழியில் தொடர்ச்சியாக எழுதிய சுகிர்தராஜா, இலங்கையிலிருந்து வெளிவரும் உயிர்நிழல், கூடம் ஆகிய இதழ்களிலும் சமீபத்தில் எழுதியுள்ளார். n லண்டனிஸ்தான் என்னும் பெயர் இதுவரை உலக விமானநிலையப் பட்டியலில் சேர…
-
- 0 replies
- 855 views
-
-
டில்லிக் கலவரம்: ஒரு ‘கறுப்பு அத்தியாயம்’ எம். காசிநாதன் / 2020 மார்ச் 02 வலிமைமிக்க இந்திய ஜனநாயகம், ‘டெல்லிக் கலவரம்’ போன்றவற்றைச் சமாளித்து, தன் பன்முகத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல்மிக்கது. என்றாலும், அதே ஜனநாயக ரீதியிலான தேர்தலில் வெற்றி பெற்று வந்தவர்கள், ‘வெறுப்புப் பேச்சுகளை’ விதைத்து, இப்படியொரு சூழலை உருவாக்கியிருப்பது, அசாதாரணமான நிகழ்வாகவே தோற்றமளிக்கிறது. குறிப்பாக, காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்ட போதும், அயோத்தி வழக்குத் தீர்ப்பு வந்தபோதும் அமைதி காத்த மக்கள், இப்போது குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் களமிறங்கி, உலக அரங்கில் இந்தியாவின் மாண்புமிக்க ஜனநாயகத்தைக் களங்கப்படுத்த நினைப்பது …
-
- 0 replies
- 505 views
-
-
மீண்டும் பழையபடி மீண்டும் துப்பாக்கிச் சூடும் கொலையும் ஹர்த்தாலுமா? கடந்த செவ்வாய்க்கிழமை வடமாகாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலினால் இயல்பு வாழ்க்கை முற்றாகவே பாதிக்கப்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் பரவலாக இக் கேள்வியைத்தான் பெருமூச்சு விட்டபடி தங்களுக்குள் கேட்டுக்கொண்டார்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்ததைக் கண்டனம் செய்வதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் அந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. மாணவர்கள் பலியான கொடூரச் சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருந்ததால் ஹர்த்தாலுக்கு அவர்களிடமிருந்து முழுமையான…
-
- 0 replies
- 518 views
-
-
மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் கனவு நனவாகி விட்டால் நிலைமை என்ன? 2009 மே மாதம் முற்றுப் பெற்ற 26 வருட கால உள்நாட்டு யுத்தத்தில் பங்கேற்ற ஆயுதப்படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து ஈட்டிய வெற்றியின் காரணமாக ‘யுத்த கதாநாயகர்கள்’ (War heroes) என்றழைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை எச்சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பதற்கு தான் உறுதிபூண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிவருவதை யாரும் அறிவர். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் 3 கடற்படைத் தளபதிகளுக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டது தவறு என்ற தோரணையில் ஜனாதிபதி மைத்திரிபால் 12.10.2016ஆம் திகதி இலங்க…
-
- 0 replies
- 319 views
-
-
. மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் முதலாவது மாவீரர் நாள் மிக இயல்பாகக் கொண்டாடப்பட்டுள்ளmaveeraraது. குறிப்பாக வன்னியில். இந்த மாவீர்நாள் கொண்டாட்டங்களைப் பற்றி ஏராளமான பதிவுகளும் அபிப்பிராயங்களும் தமிழ், சிங்களப் பொதுவெளியில் பகிரப்படுகின்றன. அதிகமானவை தமிழில்தான். எல்லாப் பதிவுகளையும் தொகுத்துப் பார்த்தால் இலங்கை அரசியற் போக்கும் தமிழ்ச்சமூகத்தின் இன்றைய நிலையும் எப்படி என்பது தெரியும். முதலில் இதைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கலாம். ஏனென்றால், இந்த மாவீர்நாள் கொண்டாட்டத்துக்கான சாதகமான சூழல் உருவாகியது கடந்த மே மாதத்தில். இந்த நிலையை உருவாக்கியது தற்போதைய அரசாங்கமே தவிர, வேறு யாருமல்ல. இதற்குக் காரண காரியங்கள் உண்டு. தன்னுடைய நலன்…
-
- 0 replies
- 445 views
-
-
ஆர்ப்பாட்டம் ஒரு ஜனநாயக உரிமை என்.கே. அஷோக்பரன் இலங்கையில், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்த 1992ஆம் ஆண்டு காலப்பகுதி. 1977 இலிருந்தே ஐக்கிய தேசிய கட்சிதான் தொடர்ந்து ஆட்சியிலிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தது. எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடித்துவிட, அவர்கள் பகீரதப் பிரயத்தனத்தை முன்னெடுத்த காலகட்டம் அது. இதன் ஒரு படியாக, அதிகரித்து வரும் விலைவாசி, ஊழல், தனியார்மயமாக்கல், அதிகரிக்கும் கடத்தல்கள், படுகொலைகள் உள்ளிட்ட காரணங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒரு புதுவிதமான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. அதுதான் ‘ஜன கோஷா’. அரசாங்கத்துக்கு தன…
-
- 0 replies
- 717 views
-
-
இரட்டைவாய்க்கால் — முள்ளிவாய்க்கால்: தொழில்நுட்ப உச்சத்தின் சாட்சியில் ஒரு உச்சப் படுகொலை -கௌதமன் 31 Views முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை 2002 பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் இந்த சமாதானம் முழுமை பெற்று இயல்பு வாழ்க்கை திரும்பாதா என்ற ஏக்கம் இலங்கை மக்களின் மனதை அழுத்திய போதும், இது ஒரு பெரும் தமிழ் இன அழிப்பிற்கான அத்திவாரம் என்று அன்று ஈழத் தமிழர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தாய்லாந்து, நோர்வே, யேர்மன், யப்பான் என ஆறு கட்டம் வரை பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போதும், சமாந்தரமாக ரணில் அவர்களின் தந்திர நகர்வுகள் புலி எதிர்ப…
-
- 0 replies
- 432 views
-
-
பலஸ்தீனம் மீது தொடரும் ஒடுக்குமுறையும் நிலப்பறிப்பும் குடியேற்றங்களும் June 11, 2021 ரூபன் சிவராஜா மே 10-ஆம் நாளிலிருந்து தொடர்ச்சியாக பலஸ்தீனத்தின் காஸா மீது தனது இராணுவ இயந்திரத்தினை ஏவி தாக்குதல்களை நடாத்தியிருக்கிறது இஸ்ரேல். பெருமெடுப்பில் வான், தரை வழித்தாக்குதல்களில், மொத்தம் 240 பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 60 வரையானவர்கள் சிறுவர்கள். காஸாவில் அமைந்திருந்த ஊடகக் கட்டிடத்தை இலக்குவைத்து வான்வெளித் தாக்குதல் நடாத்தி அதனை இஸ்ரேல் படைகள் தரைமட்டமாக்கியுள்ளன. அல்-ஜசீரா, AP உட்பட்ட உலக ஊடகங்களின் அலுவலகங்கள் அக்கட்டிடத்தில்தான் அமைந்திருந்தது. கட்டிட உரிமையாளருக்கு முற்கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டு, ஒரு மணித்தியால அவகாசம் கொடுக்கப்பட்டு, 12 மாடிகள…
-
- 0 replies
- 441 views
-
-
ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல் ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல் என்பதானது இலங்கை அரசு மனித உரிமைகள் நிலைமைகளைச் சீர் செய்வதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற சர்வதேச கோரிக்கைக்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச செவி சாய்த்து, அண்மையில் பதிலளித் துள்ளமை பலரையும் ஏறிட்டு நோக்கச் செய்திருக்கின்றது. பௌத்த சிங்கள பேரின தேசிய வாதத்தில் ஊறி, இராணுவ மனோபாவ சர்வாதிகார ஆட்சியில் ஆழ்ந்துள்ள அவருடைய போக்கிற்கு முரணாக இந்தக் கருத்து வெளிப்பாடு அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும். பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை உதறித் தள்ளி, ஜனநாயக விழுமியங்களுக்கு மாறாக சர்வாதிகார ஆட்சிப் போக்கில் செல்கின்ற அவர், பொறுப்புக் கூறல் விடயத்தி…
-
- 0 replies
- 585 views
-
-
வன்னியில் இரட்டை உளவாளிகளின் ஊடுருவல்கள்! வெளிவராத தகவல்களை வெளியிட்ட மூத்த போராளி நன்றி - யூரூப்
-
- 0 replies
- 729 views
-
-
கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்? எதிர்வரும் 2018, தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப் போகின்றது. முதலாம் காலாண்டுப் பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோடு ஆரம்பிக்கும் தேர்தல் பரபரப்பு, மாகாண சபைத் தேர்தல்கள் வரையில் நீடிக்கும் வாய்ப்புண்டு. அந்தக் காலப்பகுதிக்குள், புதிய அரசமைப்பு மீதான, பொது வாக்கெடுப்புக்கான சாத்தியமும் காணப்படுகின்றது. தமது அரசியல் தலைமைத்துவத்தை, வாக்கு அரசியல் மூலமாகத் தேடிக்கொள்ள நினைக்கும் சமூகமொன்றில், தேர்தல்கள் செலுத்தும் தாக்கம் மிகப்பெரியது. அப்படியான கட்டத்தை தென்னிலங்கை 1950களின் ஆரம்பத்திலேயே அடைந்துவிட்டது. அவ்வாறான கட்டத்தை நோக்கியே, தமிழ்த் த…
-
- 0 replies
- 449 views
-
-
தேர்தலுக்குப் பின் நடக்கப்போவது என்ன? உள்ளூராட்சித் தேர்தலுக்கு இன்னமும், ஆறு நாட்களே இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் உச்சக்கட்டப் பிரசாரங்களில் இறங்கியுள்ளன. இந்தத் தேர்தலில் ஒருவரை ஒருவர் தாக்குவதற்கும், பழிபோடுவதற்கும் தான் பிரசாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வில், ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில், தனிப்பட்ட முறையிலான குற்றச்சாட்டுகள், சேறு பூசல்களுக்கான வாய்ப்பு இன்னும் அதிகமாக இருக்கப் போகிறது. வரும் 8ஆம் திகதி பிரசாரங்கள் ஓய்ந்த…
-
- 0 replies
- 371 views
-
-
எங்கே போகிறது வடக்கு அரசியலும் அரச சேவையும் எங்கே போகிறது வடக்கு அரசியலும் அரச சேவையும் அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தொடருந்துப் பாதையின் இரு தண்ட வாளங்கள் போன்றவர்கள். ஒன்றைவிட்டு ஒன்று விலகவோ, ஒன்றை ஒன்று நெருங்கவோ கூடாது. சமாந்தரமாகச் சென்றால்தான், மக்கள் பயன்பெற முடியும். அதனால் அரச அதிகாரிகள் தத்தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றவெனச் சட்டங்கள் ஆக்கப்…
-
- 0 replies
- 432 views
-
-
இன அழிப்பை தடுக்க சர்வதேச விசாரணை தேவை: தீபச்செல்வன்:- 09 செப்டம்பர் 2014 இலங்கை அரசாங்கம் ஈழ மக்களுக்கு எதிரான யுத்தத்தில் மிகவும் கொடிய போர்க்குற்றங்களை இழைத்து மாபெரும் இனப்படுகொலை ஒன்றை செய்துள்ளது. இதற்கான மிகவும் நம்பகரமான ஆதாரங்கள் பல்வேறு ஊடகங்களால் வெளியிடப்பட்டு அவற்றின் நம்பகத் தன்மை துறைசார்ந்த வல்லுனர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை உலகமெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் குறிப்பிட்டு போராட்டங்களை நடத்தியபோதும் மனித உரிமை மீறல்கள் என்றும் போர்க்குற்றங்கள் என்றுமே ஐ.நாவும் சில நாடுகளும் அடையாளப்படுத்தும் நிலையில் எப்படியான விசாரணையையும் அனுமதிக்க முடியாது என்ற நிலையை இலங்கை அரசாங்கம் பல்வேறு வகையிலும் வெளிப்படுத…
-
- 0 replies
- 446 views
-
-
வடக்கு கிழக்கு மாகாண தேர்தலும் சவால்களும் மாகாண சபைத் தேர்தலுக்கான வாடை வீசத்தொடங்கியுள்ளது. உள்ளூராட்சி தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமையில் மீண்டும் மாகாண சபைக்கான தேர்தல் சங்கை ஊதத்தொடங்கியுள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அவரது இந்த அறிவித்தலானது வடகிழக்கில் ஒரு பரபரப்பையும் தேசிய அரசியலில் சலனத்துக்கான எச்சரிக்கையையும் வழங்கியிருக்கின்றது. உள்ளூராட்சி தேர்தலில் எதிர்பாராத தோல்வியைக்கண்ட சுதந்திரக்கட்சியும் ஐ.தே.க.வும் மாகாண சபைகளுக்கான ேதர்தலை இப்ேபாதைக்கு நடத்தப்போவதில்லை. அதாவது "பொல்லைக்கொடுத்து அடிவாங்க" அவர்கள் தயாராகவில்லையென்ற வதந்திகளுக்கு மத்தியில் …
-
- 0 replies
- 362 views
-
-
இலங்கையும் 2,500 ஆண்டுகளைக் கடந்த இந்திய உறவும் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் 1800களில் பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டு, முறையே 1947 மற்றும் 1948 ஆண்டுகளில் சுதந்திரம் பெற்றன. இந்தியா இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு. இரண்டு நாடுகளும் இரு தரப்பு அறிவுசார், கலாச்சார, மத மற்றும் மொழியியல் ரீதியலான தொடர்புகளை கொண்டிருக்கின்றன. வரலாற்று ரீதியாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் 2,500 வருட காலமாக பகிரப்பட்ட சமய மற்றும் கலாச்சார அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இலங்கை தனது கடல் எல்லையைப் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வதால், முக்கியமான பொருளாதார, இராஜதந்திர மற்றும் கடல்சாா் பாதுகாப்பு உறவுகள் மிகவும் நெருக்கம…
-
- 0 replies
- 766 views
-
-
மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து நகரும் அரசியல்….! நரேன்- கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்து சில மாதங்கள் கடந்து விட்டது. வடக்கு மாகாண சபையின் காலம் முடிவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முற்பகுதியில மகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்ற நிலையே உள்ளது. இந்த தேர்தலுக்கான நகர்வுகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. இதனையே அண்மைய சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளும் தமது வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில் வடக்கு நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி வன்னியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடாகவும், யாழில் அமைச்சர…
-
- 0 replies
- 398 views
-
-
மண்குதிரைகளும் மாகாண சபைத்தேர்தலும்- சி.நவாதரன். இலங்கையில் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருட இறுதிக்குள் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக பரவலாக பேசப்படுகின்றது. தென்னிலங்கையை பொறுத்தவரை இடியப்ப சிக்கலாக மாறியுள்ள அரசியல்தளத்தில்தான் இத்தேர்தல் நிகழவிருக்கிறது, எல்லா விதத்திலும் தோல்விகண்டு மிகவும் பலவீனமான நிலையில் உள்ள நல்லாட்சி அரசு 2020 வரைக்காவது தாக்குப்பிடிக்குமா என்பதை நாடிபிடித்துப்பார்க்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இம்மாகாண சபைத்தேர்தல்கள் அமையவிருக்கிறது. மறுபக்கம் தன் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் இன்னொரு சந்தர்ப்பமாகவே மஹிந்த அணியினர் இத்தேர்தலை எதிர்கொள்கின்றனர். மத்தியில் யார் ஆளும் கட்சி யார் எதிர்…
-
- 0 replies
- 808 views
-
-
இனப்பிரச்சினை தீர்வு குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு Veeragathy Thanabalasingham on March 21, 2023 Photo, @anuradisanayake இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சகல இனங்களையும் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றே நிரந்தரமான தீர்வாக அமையும் என்று பேசவும் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கும். எந்த இனத்தவருக்கும் பாதிப்பு இல்லாதவகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் உயரிய நோக்குடன் கூறப்படுகின்ற யோசனையாகவும் தெரியும். அதை எதிர்த்து பெரிதாக வாதிடுவதும் கஷ்டமானதாக தோன்றும். ஆனால், அவ்வாறு நடைமுறையில் சாத்தியமானதாக உலகில் எங்குமே முன்னுதாரணம் ஒன்றை எவராலும் கூறமுடியாது. அந்தக் கருத்தை எமது…
-
- 0 replies
- 665 views
-
-
கனடாவிற்கு செல்லுதல் ? - யதீந்திரா தமிழர் வாழ்வில் புலப்பெயர்வு மிகவும் கவர்சிகரமான ஒன்று. எவருக்கு புலம்பெயர விரும்பமில்லை என்று கேட்டால் – இல்லையென்று சொல்பவர்கள் அரிதானவர்களாகவே இருக்க முடியும். அந்தளவிற்கு அது ஒரு கவர்சிமிக்க வாழ்வாகிவிட்டது. தமிழர் அரசியலில் தீர்க்கதரிசிகள் எவரும் இருந்ததாக தெரியவில்லை. செல்வநாயகம் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று ஒரு முறை கூறியிருந்தார். அதனையும் ஒரு தீக்கதரிசன பார்வையென்று கூறிவிட முடியாது – ஏனெனில், கடந்த 74 வருடகால அரசியல் நகர்வில், தமிழ் மக்களை கடவுளும் காப்பாற்றவில்லை. இருந்ததையும் இழந்து, இருப்பதையும் பாதுகாக்க முடியாதவொரு கையறு நிலையில்தான் தமிழினம் திண்டாடிக்…
-
- 0 replies
- 368 views
-
-
நன்றி - யூரூப்
-
- 0 replies
- 307 views
-