Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் — March 17, 2025 புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ் அண்மைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் எழுச்சி குறித்து ஆறு கட்டுரைகளையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து மூன்று கட்டுரைகளையும் ஜெயராஜ் எழுதியிருந்தார். அவற…

  2. Published By: DIGITAL DESK 7 06 OCT, 2024 | 05:14 PM ஆர்.ராம்- ‘தமிழ்த் தேசியம்’ தான் வடக்கு, கிழக்கை மையப்படுத்திய அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் பிரதான கோசமாகும். ஆனால் அந்த அரசியல் கட்சிகளுக்குள் தங்களில் யார் தமிழ்த் தேசியவாதிகள் என்பதில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகக் கூடிய ஆகக்கூடுதலான விடயங்களை உள்வாங்கியிருக்கின்ற அரசியல்கட்சிகள் ‘தூய தமிழ்த் தேசியவாத சக்திகளாக’ அல்லது ‘தமிழர்களின் உரிமைக்கான குரல்களாக’ அடையாளப்படுத்தப்படுகின்றன. அதே நேரம், மத்திய அரசாங்கத்துடன் ஒன்றித்துப் பயணிக்கக் கூடிய அரசியல் கட்சிகள் அல்லது அங்கத்துவத்தினைக் கொண்ட…

  3. வன்முறையின் குறிக்கோள் இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் தொட­ரு­மா­க­வி­ருந்தால் நாங்கள் ஆயு­த­மேந்தி போரா­ட­வும்­த­யங்க மாட்டோம் என்ற ஆவே­ச­மான கருத்தை பாரா­ளு­மன்றில் தெரி­வித்­தி­ருந்தார் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன். கண்­டி­ நிர்­வாக மாவட்­டத்தில் தெல்­தெ­னிய திக­னவில் முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட கொடூர தாக்­குதல் மற்றும் வன்­மு­றைச்­சம்­ப­வங்­களைக் கண்­டித்து அவரால் மேற்­கண்ட காட்­ட­மான வாக்­கி­யங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. இதே­வேளை கடந்த செவ்­வாய்­க்கி­ழமை பாராளுமன்றில் இடம்­பெற்ற விவா­தத்­தின்­போது தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­ன­ணி, ஆளுங்­க­ட்சி மற்றும் எதிர்க்­கட்சி உறுப…

  4. நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும் July 6, 2018 102 . Views . நுஜிதன் இலங்கையிலே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையே உள்ளது. இவ்விதமாகத் தமக்கென தனியார் காணிகளை அபகரிப்பதும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துக்கு உலைவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிரக்கதிக்கு உள்ளாக்குவதும் இலங்கை அரசின் நடைமுடையாக இருந்து வருகிறது. அரசின் நல்ல…

  5. நாங்கள் மகிந்தவின் புலனாய்வு அமைப்பு அல்ல! - சம்பந்தனிடம் வித்தியாதரன் [ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 07:29.12 PM GMT ] முன்னாள் போராளிகள் சிலரை ஒன்றிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்தேன், பதில்கள் அனுமதிக்க முடியாது கூட்டமைப்பு திட்ட வட்டம் என்பன தொடர்பில் ஜனநாயக போராளிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளர் வித்தியாதரன் விபரித்துள்ளார். tamilwin.com

  6. நினைவுத் தூபியை அவமதிப்பது? நிலாந்தன்! ஜெனிவா கூட்டத் தொடர் காலப்பகுதியில் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன் நிகழ்ந்த இழுபறிகளுக்குள் தமிழ்மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டிருக்கிறது. ஜெனிவா கூட்டத் தொடரானது தமிழ் மக்களுக்கு மோட்சத்தை பெற்று தராது என்பது கடந்த 13 ஆண்டு கால அனுபவம்.ஆனால் அக்கூட்டத்தொடர் காலகட்டத்தில் வந்த ஒரு நினைவு நாளை நீதிக்காக போராடும் ஒரு மக்கள்கூட்டம் எவ்வாறு வடிவமைத்திருந்திருக்க வேண்டும்? தமிழ் மக்களைப் பொறுத்தவரை நினைவு கூர்தல் என்பது ஒரு கூட்டுத் துக்கத்தை கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும் ஒரு நிகழ்வுதான். தமிழ் மக்களை ஓர் உணர்ச்சிகரமான புள்ளியில் நினைவு நாட்கள் இணைகின்றன. எனவே தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்குரிய உச்சபட்ச …

  7. நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை மறுசீரமைக்கப்படுதலே பொருத்தம்!! நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை மறுசீரமைக்கப்படுதலே பொருத்தம்!! இன்­றைய அர­சி­ய­ல­ரங்­கில் நாட்டு மக்­க­ளால் பெரு­ம­ள­வில் பேசப்­ப­டு­மொரு விஷ­யம்­தான் நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அரச தலை­வர் பத­வியை ஒழிப்­ப­தென்­ப­தா­கும். இந்த முறைமை ஒரு சர்­வ­ாதி­கா­ரத் தன்மை கொண்­ட­தெ­னக் கரு­தப்­ப­டு­மா­னால், மேற்­கு­லக வல்­ல­ர­சான அமெ­ரிக்­கா­வில் இன்­றும் நடை­மு­றை­யி­லி­ருப்­ப…

  8. அரசியல் அதிகாரத்தை பகிர்வதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்றுங்கள் திருத்தப்பட்ட, இலங்கைதொடர்பான தீர்மான வரைபில் வலியுறுத்தல் ஐ.நா மனித உரிமைகள் பேரவை (யு.என்.எச்.ஆர்.சி) இலங்கை குறித்த திருத்தப்பட்ட தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.கொரோனா வைரசினால் இறந்தமுஸ்லி ம் களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கவலைகள் புதிய திருத்த வரைபில் உள்ளன. கொரோனா வைரஸ் நோய்க்கான (COVID-19) தொற்றுநோய்குறித்த நடவடிக்கைகள் மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடைமுறையில் ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாட்டை அதிகப்படுத்தியுள்ளதாகவும் திருத்தப்பட்ட வரைபு கவலையை வெளிப்படுத்துகிறது. கோவி…

    • 0 replies
    • 317 views
  9. சம்பந்தனின் நகர்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை பல்வேறு ஊகங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த புதன்கிழமை மாலை கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கின்றது. இரண்டு மணி நேரம் வரையில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் இருதரப்பினருமே இரகசியத்தை பேணி இருந்தபோதிலும் அந்த தகவல் வெளியில் கசிந்ததையடுத்து சந்திப்பு தொடர்பில் இருதரப்பினரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சந்திப்பின்போது புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று தான் க…

  10. தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்- நிலாந்தன் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளில், அதிகம் பேசு பொருளாக மாறியிருப்பது இந்தமுறைதான். அது ஒன்றுக்கு மேற்படட தரப்புக்களால் முன்னெடுக்கப்படுவதும் இந்த முறைதான். அதுமட்டுமல்ல,அது அதிகம் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதும் இந்த முறைதான். இந்தக் கோரிக்கையை கோட்பாட்டு ரீதியாக முதலில் முன்வைத்தவர் மு.திருநாவுக்கரசு. இக்கோரிக்கையை அதற்குரிய கோட்பாட்டு அடர்த்தியோடு விளங்கிக் கொள்ளாமல் பிரயோகித்தவர்கள் குமார் பொன்னம்பலமும் சிவாஜிலிங்கமும் ஆவர். மு.திருநாவுக்கரச…

  11. பதவி அரசியலும் அரசியல் பாசாங்குகளும் -என்.கே. அஷோக்பரன் யாழ்ப்பாண மாநகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஸ்வலிங்கம் மணிவண்ணன், மேயராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். யாழ். மாநகர சபையின் வரவு- செலவுத்திட்டம், இருமுறை தோற்கடிக்கப்பட்ட நிலையில், முன்னாள் மேயர் ஆர்னோல்ட், மேயர் பதவியை இழந்த நிலையில், மீண்டும் மேயர் பதவிக்காக,இலங்கை தமிழரசுக் கட்சியால் அவர் முன்னிறுத்தப்பட்டு இருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர் உறுப்பினர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினர் என, 20 மாநகர சபை உறுப்…

  12. எதிர்பார்ப்பு நிறைவேறுமா ? இலங்கை தேசியத் தலைமைகள் ஒரு நிரந்தரமான முடிவைக் காணவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் அவர்கள் முன்னே கொண்டு வரப்பட்டிருக்கிறது தேசியப் பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் பொறிமுறை எவ்வாறு அமையப் போகின்றது என்பதை வெளிப்படுத்த வேண்டிய கால நெருக்கடியொன்று உருவாகியுள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றமுறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். நாம் ஒன்று நினைக்க அர­சாங்கம் ஒன்றை சொல்லிக் கொண்­டி­ருக்­கி­றதே என்ற சொற் போரி­லேயே இன்று அர­சாங்­கத்­துக்கும் கூட்­ட­மைப்­புக்­கு­மி­டை­யி­லான பேச்­சு­வார்த்­தை­களின் நகர்­வுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அர­சியல் சாசனம் தமிழ் மக்­க­ளு…

  13. அமெரிக்காவின் வெளிநடப்பும் பாதிக்கப்பட்டோருக்கான நீதியும் ரொபட் அன்­டனி ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக அமெ­ரிக்கா உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளமை பல்­வேறு தரப்­பினர் மத்­தியில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றது. குறிப்­பாக யுத்­த­கா­லத்தில் பாதிக்­கப்­பட்டு தற்­போது நீதியை எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற மக்கள் மத்­தியில் ஒரு­வி­த­மான ஏமாற்­றத்தை அமெ­ரிக்­காவின் இந்த அறி­விப்பு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றது என்று கூறலாம். ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் பேரவை மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்…

  14. தேர்தல்கள் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைப் பிற்போடுமா? - க. அகரன் அரசாங்கத்தின் நிலைபேறு தன்மை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் அண்மைய காலங்களில் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளமை வெளிப்படை. குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் என்ற சொற்பதத்துடன் மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற கனவுடன் ஜனாதிபதி தேர்தலைச் சந்தித்த, ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் அதில் வெற்றி பெற்றதன் பின்னராக, அந்த ஆட்சிக்குள் பல்வேறு குழப்பகரமான நிலைமைகள் தோன்றி மறைவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாதுள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் களத்தில், பெரும் கட்சிகளாக வலுப்பெற்று, ஒன்றோடொ…

  15. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-05#page-21 http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-06#page-20

  16. இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவிருக்கும் கூட்டுக்கோரிக்கை எது? நிலாந்தன். தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமையோடு புதிய திருப்பத்தை அடைந்திருப்பதாக தெரிகிறது. டெலோ இயக்கம் அந்த நகர்வை முன்னெடுத்த பொழுது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்பதே பிரதான கோரிக்கையாக காணப்பட்டது. அக்கோரிக்கையை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளில் தமிழரசுக்கட்சி ஈடுபட மறுத்தமைக்கு அது மட்டும்தான் காரணமல்ல. அதைவிட ஆழமான காரணங்கள் உண்டு. சிறிய பங்காளிக் கட்சியான டெலோ அவ்வாறான ஒருங்கிணைப்ப…

  17. புனர்வாழ்வுப் பணியகச் சட்டமூலமும் 22ஆவது திருத்தமும்! நிலாந்தன். கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முதல் நாள் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஒன்றை வெளியிட்டார்.அது கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சட்டமூல வரைபு தொடர்பானது. அச்சட்ட மூல வரைபு புனர்வாழ்வு பணியகத்துக்கானது.அதை சவால்களுக்கு உட்படுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தையே சபாநாயகர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். புனர்வாழ்வு பணியகச் சட்டமூல வரைபில் சில பகுதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று உச்ச நீதி…

  18. கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் - நிலாந்தன். adminJanuary 12, 2025 சிறீலங்காவை கிளீன் பண்ணத்தான் வேண்டும். ஆனால் அதை எங்கிருந்து தொடங்குவது? சிறீலங்காவின் கறை எது? அல்லது அசுத்தம் எது? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அங்கிருந்துதான் சுத்தப்படுத்தலைத் தொடங்கலாம். சிறீலங்காவின் அசுத்தம் எது? இனப்பிரச்சினைதான். இன மோதல்கள்தான் சிறீலங்காவை உலக அரங்கில் அவமானப்படுத்தின. இனப்பிரச்சினைதான் சிறீலங்காவை ஜெனிவாவில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இனப்பிரச்சினைதான் தமிழ் மக்களை கூடு கலைந்த பறவைகள் ஆக்கியது. இனப்பிரச்சினைதான் சிறீலங்காவுக்குள் வெளிச் சக்திகள் தலையிடும் வாய்ப்பை வழங்கியது. இனப்பிரச்சினைதான் நாட்டைப் பொருளாதார ரீதியாக நாசமாக்கியது.…

  19. மற்றொரு இனப்படுகொலைக்கு திட்டமா? கொரோனா பாதுகாப்பில் காட்டப்படும் பாரபட்சம் எழுப்பியுள்ள கேள்விகள் – அகிலன் 27 Views சென்ற வார மின்னிதழ் கட்டுரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில், கொரோனா தொற்றைப் பயன்படுத்தி மற்றொரு இனப்படுகொலைக்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதா என்ற கேள்வி தமிழ்த் தரப்பினரால் எழுப்பப்பட்டிருக்கின்றது. கொரோனா தொற்று இலங்கை முழுவதிலும் வேகமாகப் பரவி வருவதற்கு அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் தான் காரணம் என்பதை சிங்கள மக்களும் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளமைதான் அரசுக்கு இன்றுள்ள பிரச்சினை. சிங்கள மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ள ஒரு நிலையில்தான், வடக்கில் …

  20. இனவாதத் தடைச்சட்டம் தமிழர்களை ஒடுக்கும் புதிய சட்டமா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக அன்பழகன்:- 26 ஏப்ரல் 2015 ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கவும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை வளர்ப்பதற்காகவுமே இலங்கையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என பல சட்டங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். பௌத்த சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான ஈழத் தமிழர் போராட்டத்தை ஒடுக்கும் இந்தச் சட்டங்கள் தமிழ் மக்களை கடுமையாக ஒடுக்கியுள்ளன. இதனால் தமிழ்மக்களின் இயல்பான வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இயல்பான வாழ்வை பாதிக்க வைத்தலின் ஊடாக போராட்டத்தை கைவிடச் செய்வதும் இந்தச் சட்டங்களின் நோக்கங்களாகும். இனவாதம், மதவாதம் ஆகியவற்ற…

  21. கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……! Veeragathy Thanabalasingham on July 10, 2023 Photo, SELVARAJA RAJASEGAR ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து ஒரு மீள்பார்வை இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டி நாட்டை விட்டு வெளியேற வைத்து சரியாக ஒரு வருடம் கடந்தோடிவிட்டது. ஜூலை 9 இலங்கை அரசியலில் மாத்திரமல்ல, தெற்காசிய பிராந்திய அரசியலிலும் கூட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாக பதிவாகிவிட்டது எனலாம். எமது பிராந்தியத்தின் வேறு எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகத் தேர்தல் ஒன்றில் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட…

  22. வடக்கில் விரிவடையும் இரா­ணுவ அதி­காரம் வடக்­கிலும் தெற்­கிலும் இப்­போது பெரும் பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­கின்ற ஒரே விடயம், போதைப்­பொருள் கடத்தல், விற்­பனை, பயன்­பாடு தான். வடக்கில் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ கஞ்சா பொதிகள் கைப்­பற்­றப்­ப­டு­வது சர்வ சாதா­ர­ண­மான விட­ய­மாகி விட்­டது போலவே, தெற்கில் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ ஹெரோயின், கொக்கைன் போன்­றவை ஒரே தட­வையில் சிக்­கு­வதும் சாதா­ர­ண­மாகி விட்­டது. இலங்கைத் தீவு இப்­போது, போதைப்­பொருள் கேந்­தி­ர­மாகி விட்­டது என்­பதைத் தான் இது காட்­டு­கி­றது. வெறு­மனே போதைப்­பொருள் கடத்தல் கேந்­தி­ர­மாக மாத்­தி­ர­மன்றி, அதனைப் பயன்­ப­டுத்­து­வோரை அதிகம் கொண்ட இட­மா­கவும், இது மாறி­யி­ருக…

  23. இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன. சிங்களமும், ச…

  24. கமால் குணரத்னவின் எச்சரிக்கை - புதிய சவால் புதிய அரசமைப்பை உருவாக்கி நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறவர்கள் தேசத்துரோகிகளே என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும், கடந்த சனிக்கிழமை (21) கம்பஹாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், முன்னாள் இராணுவ அதிகாரி, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வெளியிட்ட கருத்து, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஒழுங்குபடுத்தலின் கீழ், அவருக்கு முன்பாகவே, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். “தேசத்துரோகிகளுக்கு 1987-89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பியினரால் மரணதண்டனை அளிக்கப்பட்டது. அவர்கள…

  25. இந்திய - சீன - அமெரிக்க போட்டிக்குள் அகப்பட்டுக் கொள்ளும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவுக்கான தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்- தானி, குறுகிய நேர இலங்கைப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த மார்ச் 24ஆம் திகதி பகல், சில மணித்தியாலங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்த அவரது பயணத்தின் போது, சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன. எனினும், அவரது பயணத்தின் நோக்கம் குறித்து அதிகம் பேர் அக்கறை கொள்ளவில்லை. அவர் தனது பயணத்தின்போது, மத்தள சர்வதேச விமான நிலையத்தை, குத்தகைக்குப் பெறுவதற்கு விருப்பம் வெளியிட்ட பின்னர் தான், அவரது வருகையின் சூத்திரம் பலருக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது. அம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.