Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இஸ்ரேல் – ஈரான் போர்: மூன்று முக்கியமான கேள்விகள்! 14 Jun 2025, 4:46 PM சாக் பியூசாம்ப் வியாழனன்று இரவு, இஸ்ரேல் ஈரானுடன் போரைத் தொடங்கியது. ஈரானின் மூத்த இராணுவத் தலைமையையும் அணு விஞ்ஞானிகளையும் இலக்காகக் கொண்டு குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு ஒரு தந்திரோபாய வெற்றியாகவே அமைந்தன, ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே ஈரானின் ஒட்டுமொத்த இராணுவமும் அதன் புரட்சிகரப் படைகளின் தலைவர்களும் கொல்லப்பட்டனர். ஈரானிய வான் பாதுகாப்புத் தளங்கள் பெரும் சேதமடைந்தன. இஸ்ரேலுக்கு மிகக் குறைந்த இழப்புகளே ஏற்பட்டன. உடனடியாக ஈரானிடமிருந்து பெரிய பதிலடி எதுவும் வரவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை பிற்பகல், ஈரான் இஸ்ரேல் முழுவதும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியத…

  2. வீணடிக்கப்படும் மாகாண நிர்வாகம் September 21, 2025 — கருணாகரன் — “மாகாணசபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தாமல் பின்னடிப்பது ஏன்? விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்தி, மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாதபோது ஆளுநர்கள் எழுந்தமானமாகச் செயற்படுகிறார்கள். கண்டபாட்டுக்கு நிதியைச் செலவு செய்கிறார்கள்..” என்று ஒரு நீண்ட குற்றச்சாட்டுப் பட்டியலை எதிர்க்கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் சுமத்தியுள்ளன. அதிகாரத்திலிருக்கும் NPP ஆட்சிக்கு வர முன்பே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் முந்திய ஆட்சியாளர்கள் காலத்தைக் கடத்தி வந்தனர். 2017 க்குப் பிறகு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவேயில்லை. அப்போதும் மா…

  3. திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும் November 24, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய எதிர்வினையும் இதுகாலவரையில் இனவாத மற்றும் மதவாத அரசியலின் விளைவாக நாடும் மக்களும் அனுபவித்த அவலங்களில் இருந்து தென்னிலங்கை அரசியல் சமுதாயம் எந்தவிதமான படிப்பினையையும் பெறவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கிறது.. இலங்கையில் இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்நோக்கக்கூடிய சவால்…

  4. நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற என்னுடைய கவிதை ஒன்றுக்கு தொடர்ச்சியாக புலி எதிர்ப்பாளர்களிடமிருந்து கவிதையை எதிர்கொள்ள முடியாத காழ்ப்புணர்வு வந்து கொண்டே இருக்கிறது. அக் கவிதை பெரும்பாலும் மாவீரர் தினம், மே – இன அழிப்பு நினைவுநாள், இலங்கை சுதந்திர தினம் முதலிய நாட்களில் ஏராளமான தமிழ் இளையவர்களால் அதிகம் பகிரப்படுகிறது. ‘நீ ஸ்ரீலங்கன் இல்லை என்றால் எதற்காக ஆசிரியர் உத்தியோகம் செய்கிறாய்?’ என்பது தொடங்கி, ‘எந்த நாட்டின் அடையாள அட்டையை பயன்படுத்துகிறாய்’ என்பது வரை கேள்விகள் நீளும். அந்தக் கவிதையே யாவற்றுக்குமான பதிலை சொல்லி விடுகிறது. அண்மைய காலத்தில், கொரோனா பேரிடர் காலத்தில் சிங்கள இராணுவத்தை வைத்து அரசு செய்கிற அரசியலையும் வடக்கு கிழக்கில் அதனால் ஏற்படுகிற அச்சுறுத்தலை…

    • 0 replies
    • 456 views
  5. திரிசங்கு நிலையில் சுமந்திரன் சரியான முடிவெடுப்பது முக்கியமல்ல, அதனை சரியான நேரத்திலும் எடுக்க வேண்டும். அதுபோல சரியான முடிவை சரியான நேரத்தில் மாத்திரம் எடுத்தால் மட்டும் போதாது, சரியான முறையிலும் எடுக்க வேண்டும். இது, பொதுத் தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமைக்கு மிகவும் பொருத்தமானது. பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக தோன்றிய சர்ச்சைகள் மாத்திரமன்றி, தமிழ் அரசுக் கட்சியின் தலைமை தொடர்பாக தோன்றியிருக்கின்ற குழப்பங்களுக்கும் கூட, இது பொருத்தமுடையது தான். அம்பாறை மாவட்டத்தில் கருணா போட்டியிட்டு வாக்குகளை உடைக்க, தமிழர்களுக்கு கிடைக்க கூடிய ஒரு ஆசனமும் அங்கு இல்லாமல் போனது. இந்…

  6. மீண்டும் வீர வசனங்களை அள்ளி வீச ஆரம்பித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன். அதாவது, தமிழ் தேசிய இனத்தின் இருப்பை இல்லாதொழிக்க சிங்களம் முயற்சிப்பதாகவும், தமிழ் மக்களின் பிறப்புரிமையை பறிக்க எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் சம்பந்தன் கூறிய வீர வசனங்கள் ஊடகங்களில் பரவலாக இடம் பிடித்திருந்தது. அதுமட்டுமல்லாது, எதிர்வரும் மாதங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாமென்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார். அமெரிக்காவின் வசந்த அழைப்பும், தென்னாபிரிக்கா பயணமும், மார்ச் மனித உரிமைப் பேரவையில் சிங்களத்திற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேறும் என்கிற எதிர்பார்ப்பும் இணைந்து ,சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதுதான் சம்பந்தனின் கணிப்பு. இவ்வகைய…

    • 0 replies
    • 577 views
  7. ஜெயலலிதா இல்லாத தமிழகமும் இலங்கையும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கடந்த ஐந்தாம் திகதி மரணமடைந்ததை அடுத்து, தமிழக அரசியலில் ஒருவித நிலையற்ற தன்மை தென்படுகிறது. புதிய முதலமைச்சராக ஜெயலலிதாவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டாலும், ஜெயலலிதா வகித்த அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படப் போகிறார் என்பதைத் தமிழகத்தில், சகல அரசியல் கட்சிகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன. ஏனெனில், அக்கட்சியின் யாப்பின் பிரகாரம், அப்பதவி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்தப் பதவியை வகிப்பவர் கட்சித் தலைவர் என்று கூறும் அளவுக்கு, அது அ…

  8. விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலையில் பந்து விளையாட்டாக மாறியுள்ள காணி விவகாரம் – செல்வரட்னம் சிறிதரன் தமிழ் மக்களின் காணிப்பிரச்சினை என்பது பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்ற ஒரு விவகாரமாகும். வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்ற கோரிக்கை எழுவதற்கு இந்தக் காணிப் பிரச்சினையே மூல காரணமாகும். தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை படிப்படியாகக் குறைப்பதற்காகவே, வலிந்து மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களின் காணி உரிமைகளைப் பறித்தெடுக்கின்ற அரசியல் உத்தியை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பின்பற்றி வந்துள்ளன. ஆனால் ஆயுதப் போராட்டமானது, இந்த சிங்களக்…

  9. சீனாவின் செல்நெறியில் திபெத்தை விளங்கிக் கொள்ளல் -நரசிம்மன் புனைகதைகளின் மூலம் ஏமாற்றி, காரியங்களைச் சாதிக்கும் முயற்சிகளில் ‘அழுங்குப்பிடி’யாகத் தொடர்வதையே, திபெத்தில் சீனாவின் செல்நெறியாகக் காணப்படுகின்றது. ஆனால், அந்தப்போக்கை எவரும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்பதிலும் கவனமாகக் காரியமாற்றுகின்றது. திபெத் ஒருபோதும் சீனப்பேரரசின் கீழ் இருந்ததில்லை என்பது, சீனாவுக்குத் தேவையான மறைக்கப்பட வேண்டிய உண்மை என்பதால், எவரையும் நம்பவைக்கும் விதத்திலும் மிக நேர்த்தியாகவும் ஆனால் தந்திரமாகவும் திபெத் குறித்து பல புனைகதைகள் கட்டியெழுப்பப்பட்டு இருக்கின்றன. வரலாற்றுக் காலம் முதற்கொண்டு, ஆதாரபூர்வமான பல உண்மைகள், தான்தோன்றித்தனமான முறையில், மறைத்தழிக்கும் வகையிலேயே இ…

  10. தேர்தலைக் கண்டு ஓடும் கூட்டு அரசு ஐ.தே.க. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி கூட்டு அர­சாங்­கத்தின் எதிர்­காலம் பற்­றிய கேள்­விகள் நாளுக்குள் நாள் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இந்தக் கூட்டு அர­சாங்கம் நிலைத்­தி­ருக்க வேண்டும். அப்­போது தான், இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் உள்­ளிட்ட மிக முக்­கி­ ய­மான விவ­கா­ரங்­க­ளுக்கு தீர்வு காண முடி யும் என்ற நம்­பிக்கை பர­வ­லாக காணப்­ப­டு­கி­றது. எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்­தனும் கூட இந்தக் கருத்­தையே அண்­மையில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். ஆனால், இந்தக் கூட்டு அர­சாங்கம் இனி ­மேலும் நீடிக்கக் கூடாது, நீடித்தால் நாட்­டுக்கு ஆபத்து என்ற கருத்தை கூட்டு…

  11. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஜனவரியில் வரவிருக்கின்ற நிலையில், அதற்கான ஆயத்தங்களில் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் இருந்த இழுபறிகளுக்கு முடிவேற்பட்டுள்ளதையடுத்தே தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மாகாணசபைத் தேர்தல்களைப் போலவோ அல்லது பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களைப் போன்று, ஒப்பீட்டளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என கூற முடியாது. இருந்தபோதிலும், உள்ளுராட்சி சபைகளிலும் அரசியல் கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு போக்கே நாட்டில் நிலவுகின்றது. இதனால், அரசியல் கட்சிகள் தமது இருப்பின் மகிமையையும், தமது அரசியல் இருப்பின் பலத்தையும் பரீட்சித்துக் கொள்வ…

  12. இந்தியாவை நோக்கிச் செல்லுதல் ? - யதீந்திரா இந்தியா ஒரு பிராந்திய சக்தி. ஈழத் தமிழர்களுக்கான உடனடி அயல்நாடு. இது ஒரு மாறாத, ஒரு போதும் மாற்றவே முடியாத பிராந்திய யதார்த்தமாகும். இந்தியா தொடர்பில் இந்தக் கட்டுரையாளர் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றார். ஆனாலும் இந்தியாவை புரிந்து கொள்வதில் எப்போதுமே ஒரு குழப்ப நிலை இருக்கவே செய்கின்றது. இதற்கு என்ன காரணம்? பொதுவாகவே அரசியல் விவகாரங்களை எங்களின் விருப்பு வெறுப்புக்களிலிருந்து நோக்கக் கூடாது. மாறாக, யதார்தத்திலிருந்து நோக்க வேண்டும். குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர், அப்துல்லா ஒச்சலான் கூறுவது போன்று, ‘நேற்றையவற்றுடன் இன்றையவற்றை ஒப்பிடுவதை விட, அது இன்றெப்படி ஒரு யத…

  13. நினைவேந்தலும் அரசின் நிலைப்பாடும் யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட பொது­மக்­களை நினை­வு­கூர்­வ­தற்குத் தடை இல்லை என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருப்­பது ஆச்­ச­ரி­யத்­தையே ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. இருப்­பினும் இது வர­வேற்­புக்­கு­ரிய நிலைப்­பா­டா­கவே கருத வேண்டும். யுத்­தத்தில் பொது­மக்கள் எவ­ரையும் இரா­ணு­வத்­தினர் கொல்­ல­வில்லை. பயங்­க­ர­வா­தி­க­ளாக அர­சாங்கத் தரப்­பினால் சித்­தி­ரிக்­கப்­ப­டு­கின்ற விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரா­கவே அவர்கள் யுத்தம் புரிந்­தார்கள். நடந்து முடிந்த யுத்தம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­ப­ட­வில்லை என்றே அரச தரப்பில் கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்டு வந்­தன. இந்த நிலையில் கொல்­லப்­பட்ட பொது­மக்­களை நினை­வு­கூர …

  14. வெடுக்குநாறி மலையிலிருந்து தையிட்டிக்கு நிலாந்தன் தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். போலீசாரோடு முரண்பட்டதன்மூலம் அதை உணர்ச்சிகரமான ஒரு விவகாரமாக மாற்றியதும் அந்தக் கட்சிதான். அதன் விளைவாகத் தமிழரசுக் கட்சியும் உட்பட ஏனைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்பகுதிக்கு வரவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நீதிமன்றம் தலையிடும் ஒரு நிலைமை உருவாகியது. எனினும் போராட்டம் பெருமளவுக்கு கட்சிப் பிரமுகர்களின் போராட்டமாகவே இருந்தது. கொஞ்சம் தொண்டர்களும் காணப்பட்டார்கள். முன்னணி போலீசாரோடு முரண்பட்டதுங்கூட அதன் பாணியில் வழமையானது என்று சொல்லலாம். அரச படைகளோடு முரண்படுவதை ஒரு சாகசமாக முன்னணி செய்து வருகி…

  15. மெய்மை: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா? Editorial / 2018 நவம்பர் 12 திங்கட்கிழமை, மு.ப. 06:41 Comments - 0 - தமிழ் மிரரின் விவரணக் குழு இலங்கையின் நாடாளுமன்றத்தை, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தமை தான், இப்போதைய பிரதான பேசுபொருளாக இருக்கிறது. ஜனாதிபதியின் நடவடிக்கை சரியானதா, தவறானதா என்பது தொடர்பான கேள்விகள் ஒருபக்கமாகவிருக்க, இவ்வறிவிப்பால் நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சமும் உள்ளது. என்ன நடந்தது? கடந்த வெள்ளிக்கிழமை இரவு, 2096/70 என்ற இலக்கத்தின் கீழ் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியீட்டின் மூலமாக, அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு…

  16. காஷ்மீர்- குளிர் தேசத்துக்குப் போர்!! பதிவேற்றிய காலம்: Mar 3, 2019 ஜம்மு காஷ்­மீ­ரில் இந்­தி­யா­வை­யும் பாகிஸ்­தா­னை­யும் பிரிக்­கின்ற எல்லை 740 கிலோ மீற்­றர் நீள­மா­ன­தாக இருக்­கி­றது. இது பனி படர்ந்த மலை­களை ஊட­றுத்து எல்­லை­யி­டப்­பட்ட பிர­தே­சம். இந்­தி­யா­வை­யும் பாகிஸ்­தா­னை­யும் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான சிப்­பாய்­கள் இந்த எல்­லைக் கோட்­டின் இரண்டு பக்­கங்­க­ளி­லும் எந்த நே­ர­மும் தயார் நிலை­யில் நிற்­கின்­ற­னர். அவர்­கள் அந்­தப் பனி மலை­க­ளின் அழகை இர­சிக்­கும் நோக்­கில் அங்கு நிலை­கொள்­ள­வில்லை. ஒரு முனை­யி­லுள்­ள­வரை மறு முனை­யி­லுள்­ள­வர் கொல்­லும் நோக்­கில் ஆயு­தம் தாங்­கி­ய­வர்­க­ளாக வக்­கி­ரத்­து­டன் காத்­தி­ருக்­கி­றார்­கள். இந்­தி­யா­வின் …

  17. யதீந்திரா திருகோணமலையில், அமெரிக்கா படைத்தளத்தளமொன்றை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதான செய்திகளை ஆங்காங்கே காணக் கூடியதாக இருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், சீனாவின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில், சீனாவின் முன்னணி படைத்தளமாக மாறுவதற்கான வாய்ப்;புக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். சீனாவின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலேயே ஹம்பாந்தோட்டை சீனாவின் கைகளுக்கு சென்றிருக்கிறது. இது சீனாவின் கடன்பொறி ராஜதந்திரத்தின் (debt diplomacy ) வெற்றி என்றும் பென்ஸ் குறிப்பிட்டிருந்தார். இதே வேளை கடந்த ஆண்டு செம்டம்பரில், அமெரிக்க செனட்டர்கள் 14பேர் இணைந்து, அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மார்ட்டிக்கு (James Mattis) ஒரு கடிதத்தை அனுப்பியிருந்…

  18. 'உலகப் பயங்கரவாதி அமெரிக்கா!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- வல்லாண்மை பயங்கரவாதி என்கிறான் துப்பாக்கி வைத்திருப்பவனை, அணுகுண்டு வைத்திருப்பவன்! அன்புக்குரிய அண்ணர், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் மேற்கூறிய ~நறுக்கு|, பயங்கரவாதம் என்பதற்குரிய, தற்போதைய வரைவிலக்கணத்தை இவ்வாறு மிகச்சுருக்கமாக ஆனால் மிகத் தெளிவாக விளக்குகின்றது. இன்று ~பயங்கரவாதம்| என்ற சொல்லுக்குள், உலகிலுள்ள பல நீதியான விடுதலைப் போராட்டங்களும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளதற

    • 0 replies
    • 1.1k views
  19. அலைகளின் நடுவே sudumanal இலங்கை அரசியல் ஜீன் சீக்லர் (Jean Ziegler) அவர்கள் சுவிஸ் இல் ஓர் அறியப்பட்ட இடதுசாரியாவார். பிடல் கஸ்ரோ மரணித்தபோது சுவிஸ் வானொலி அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. அதில் “பிடல் இறந்துவிட்டார். இந்த உலகின் கடைசி புரட்சியாளர் பிடல் என சொல்லலாமா” என கேட்கப்பட்டது. “புரட்சியாளர்கள் ஒவ்வொரு 5 வருடத்துக்கும் பிறப்பதில்லை. பல ஆண்டுகள், சிலவேளை நூற்றாண்டுகள் கூட ஆகலாம்” என்றார். பிடல் கடைசி புரட்சியாளராக இருக்க முடியாது என்றார். அவர் சொன்ன அந்த 5 வருடம் என்பது தேர்தலில் புரட்சியாளர்கள் பிறப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ஆகும். 2019 இல் 3 வீத வாக்குகளை பெற்ற ஜேவிபியின் தலைவர் அநுர 2024 இல் 42 வீத வாக்குளை எடுத்து ஜனாதிபதியாக வருகிறார். …

  20. கோட்டா Vs சஜித் தெரிவுக்காக காத்திருக்கும் தமிழ்ப் பேசும் சமூகம் Editorial / 2019 ஓகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:59 Comments - 0 -அ. அகரன் அதிகாரமிக்கவர்களுக்கான போட்டியில்; இலங்கையின் அரசியல் களம் சூடுபிடித்து, நாளுக்குநாள் புத்தம் புதிய தகவல்கள், சுவாரஸ்யமிக்கதாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், ஜனநாயகத்துக்கான போராக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இருக்கவேண்டும் என்கின்ற கோரிக்கை, தற்போது வலுப்பெற்றுள்ள நிலையிலேயே ஜனாதிபதிக்கான வேட்பாளர்கள் தொடர்பில் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளோம். இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்னவென இருந்துவிட்டுப் போகும் நிலையில் சிறுபான்மைச் சமூகம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் இருந்துவிட முடியாது என்பதே யதார…

  21. பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கி…

  22. கேள்விகளுடன் உயிர்த்த ஞாயிறு லக்ஸ்மன் ஒன்றை மறைப்பதற்காக இன்னொன்றைக் கொண்டுவருதல் அல்லது உருவாக்குதல் என்பது எல்லா விடயங்களிலும் நடக்கின்ற ஒன்றே. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கம் அட்சியை ஏற்பதற்கு முன்னர் சொன்னவற்றைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு வெளிவருவதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்றே கொள்ளலாம். இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் திடீர் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு காரணமாக இருந்தது. அதேபோன்று, இப்போதிருக்கின்ற அரசாங்கம் உருவாவதற்கும் காரணமாக இருந்தது. ஆனால், மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தாலும், தொடர்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவது கட்டாயம் என்கிற த…

  23. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியாக காணப்படுகின்ற வடக்குக் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக உரிமையானது இன்றை வரைக்கும் பறிக்கப்பட்ட நிலையிலே காணப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் சென்று விட்ட நிலையிலும் வட பகுதில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியல் துயரங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை அவை இன்னும் நீண்டு விரிந்து கொண்டுதான் செல்கின்றது. தமிழ் மக்கள் மறுவாழ்வு பெற்று விட்டனர் அவர்களுடைய நிலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க்கப்பட்டு அவர்களுடைய நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியிலுள்ள அரசு சர்வதேச நாடுகளுக்கு கூறி வருகின்றது ஆனால் நிலைமை தலை கீழாகவே காணப்படுகிறது. இன்று வடக்கில் எந்தவிதமான செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் நிம்மதியாக செ…

    • 0 replies
    • 622 views
  24. தமிழ்க் கட்சிகளின் அணுகுமுறைகள் மாறுமா? கே. சஞ்சயன் / 2020 ஜூலை 05 பொதுத் தேர்தல் பிரசாரங்களில், தமிழ் அரசியல் கட்சிகள் சில முன்வைக்கின்ற கருத்துகள் தொடர்பாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. நாடாளுமன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட பல விடயங்கள், இந்தத் தேர்தலில் வாக்குறுதிகளாக முன்வைக்கப்பட்டு, பிரசாரப்படுத்தப்பட்டு வருவதே இந்த விமர்சனங்களுக்குக் காரணம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள், கடந்த ஒரு தசாப்த காலமாக முன்வைத்து வருகின்ற போர்க்குற்றங்களுக்கு, சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் என்பதை, உதாரணத்துக்குக் குறிப்பிடலாம். இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மீறல்கள், குற்றங்களுக்குத் தமிழ் மக்கள், நீதி கோரிப் போராட்டங்களை நட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.