Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மாற்று அணி எனப்படுவது புதிதாகச் சிந்திப்பது – நிலாந்தன். July 14, 2019 புதிதாக சிந்திக்காத எந்த ஓர் ஊடகமும், தமிழ் மக்களின் அரசியல் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்துமா? கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் புது விதி பத்திரிகை அதன் பதிப்பை நிறுத்தியது. இதற்கும் கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையும் அதன் பாதிப்பை நிறுத்தியது.அதேசமயம் அது தொடர்ந்தும் ஒரு மின் இதழாக வெளிவருகிறது. அது நிறுத்தப்பட்ட அதே காலப்பகுதியில் ஒரு புதிய இணைய இதழ் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதழின் ஆசிரியர் தேவராஜா. முன்பு வீரகேசரி வார இதழின் ஆசிரியராக இருந்தவர். இப்படியாக இரண்டு பத்திர…

  2. கலாநிதி ஜெகான் பெரேரா முக்கியமான தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறை எச்சரிக்கையுடனானதாகவும் முன்னைய அரசாங்கம் தீர்மானித்த திசையில் தொடர்வதாகவும் அமைந்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையையும் அதன் இறுக்கமான நிபந்தனைகளையும் பின்பற்றுவதில் இது தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய கடுமையாக கண்டனத்துக்குள்ளான முக்கியமான அதிகாரிகளே பொருளாதாரத்தைக் கையாளுவதற்கு பதவிகளில் தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் ஜெனீவாவில் தீர்மானத்துக்காக முடிவெடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தின் வடிவில் வந்த மிகவும் உடனடியான சர்வதேச சவாலை எதிர்கொண்டதிலு…

  3. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்திய – இலங்கை இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் – யாருக்கு இதனால் சாதகம்? December 21, 2024 12:56 pm இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் கடல் மார்கமான பாலமொன்றை அமைக்கும் திட்டம் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரவலாக பேசப்படுகிறது. 2015ஆம் ஆண்டுமுதல் இந்தப் பாலம் குறித்த பேச்சுகள் இருநாட்டிலும் உள்ள போதிலும் இதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியுற்றே வருகின்றன. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்தியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுடன் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் இந்தப் பாலத்தை அமைப்பதற்கான இணக்கப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு …

  4. துரோகிகள் Vs தியாகிகள்! June 15, 2025 — கருணாகரன் — தமிழரசுக் கட்சி ஆரம்பித்து வைத்த தியாகி – துரோகி ஆட்டத்தை, தமிழரசுக் கட்சியே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியின் ஆதரவோடு உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியதோடு ஈ.பி.டி.பியும் துரோகிப் பட்டியலில் இருந்தும் அரச ஒத்தோடிகள் என்ற பழிப்பெயரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட புனிதமளிப்பு நடைபெற்றுள்ளது. இனி, ஈ.பி.டி.பியை தமிழரசுக் கட்சியினர் துரோகிப் பட்டியலில் சேர்க்க முடியாது. அவர்களும் தமிழ்தேசிய அரசியலில் சங்கமித்துள்ளனர். இதுவரையிலும் ஈ.பி.டி.பியை துரோகி என்று சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அந்த வார்த்தைகளைச் சொன்னவர்களுடைய முகங்களிலேயே காறி உமிழ்ந்துள்ளன. அல்லது அவ்வாறு ஈ.பி.டி…

  5. திலீபன் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது எதனை? - நிலாந்தன் திலீபனின் நாட்களில் யுத்த களத்தில் வெற்றிகள் கிட்டும் என்ற ஒரு நம்பிக்கை ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த காலங்களில் இருந்தது. அவருடைய நினைவு நாள் ஒன்றில் யாழ் கோட்டை வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்து அந்த நம்பிக்கை தோன்றியது. திலீபனின் பசிக்கும் தாகத்துக்கும் அவ்வாறு அபரிதமான சக்தி உண்டு என்ற ஒரு நம்பிக்கை. ஆனால் 2009க்கு பின்னர் திலீபனின் நாட்களில் திலீபன் யாருக்கு சொந்தம்? அல்லது திலீபனை யார் யார் நினைவு கூரலாம்? என்று கேட்டு மோதும் நிலைமை காணப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளிலும் நினைவு கூர்தலை அரசாங்கம் தடுக்கும் போதெல்லாம் தமிழ்க் கட்சிகள் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுபட்டு அவற்றை அனுஷ்டிப்பதுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு …

  6. பாதுகாப்பு மறுசீரமைப்பு திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். கடந்த 29ம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்த போதே அவர் இதனை சுட்டிக்காட்டியிருக்கிறார். ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்றிருந்த பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு, கிளஸ்டர் குண்டு தொடர்பான நம்பகமான விசாரணை, இராணுவ மய நீக்கம் உள்ளிட்ட விடயங்கள் பற்றித்தான் ஊடகங்களில் பெரும்பாலும் செய்திகள் வெளியாகின. ஆனால் செய்ட் அல் ஹூசைனின் வாய்மூல அறிக்கையின் 34வது பந்தியில் இராணுவ மறுசீரமைப்பு தொடர்பாக…

  7. 2009 க்குப் பின்னரான தமிழ்மக்களின் நிலைமை: விளக்குகிறார் பேராசிரியர் சிதம்பரநாதன் 2009 க்குப் பிறகு எம் சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. மாறாக எம் சமூகத்தை சீரழிக்கும் வேலைகள் தான் இடம்பெறுகின்றன. 2009 க்குப் பின்னரான தமிழர் தாயக நிலைமைகள் குறித்து விளக்குகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி சிதம்பரநாதன்.

  8. தொடர்ந்து துரத்தும் புலிக் கனவு -சுபத்ரா - “12 ஆண்டுகளுக்குப் பிறகும், புலிகளின் கொள்கை பற்றி எச்சரிக்கப்படுகிறது. அது உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்ற அச்சம் ஏற்படுகிறது என்றால், அவர்களை மௌனிக்கப் பயன்படுத்தப்பட்ட இராணுவ வழிமுறை சரியானதா என்ற கேள்வி எழுகிறது” “தமிழ் மக்களின் பிரச்சினையின் பிரதிபலிப்புத் தான் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருந்தால், விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்றிருக்க முடியாது” உலகிலேயே யாரும் செய்யாத காரியத்தை இலங்கை இராணுவம் செய்திருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற வல்லமை வாய்ந்த அமைப்பு ஒன்றை வேறெந்த நாடும் அழித்ததில்லை என்றும், கடந்த 11 ஆண்டுகளாக சிங்களத் தலைவர்களும் இராணுவ அதிகாரி…

  9. ஜெனிவாவை நோக்கித் தமிழ்த் தரப்பை ஒன்றிணைக்க முடியுமா? நிலாந்தன்… January 3, 2021 கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட அச்சந்திப்பின் நோக்கம் அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரை நோக்கித் தமிழ்த் தரப்பு எப்படி ஒரே அணியாக அணுகலாம் என்பதற்குரிய வழிவகைகளை கண்டுபிடிப்பதே. திருமலை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரான நோயல் இமானுவேல் அடிகளார் ;மதகுருக்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவர்களோடு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் அழைப்பு…

  10. போட்டிக் களமாகிய கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் – வேல்தர்மா February 11, 2021 Share 2 Views ராஜபக்ச சகோதரர்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய மாட்டோம் என தொடர்ந்து முழங்கி வந்தனர். 2019 நவம்பரில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் 2020 ஓகஸ்ட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்த்தலுக்கும் பரப்புரை செய்யும் போதும் அவர்கள் இதை அடிக்கடி தெரிவித்திருந்தனர். ஆனால் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய முடிவு செய்தனர். பின்னர் அழுத்தம் காரணமாக அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர். கொழும்புத் துறைமுகத்த…

  11. புவிசார் அரசியல் இராஜதந்திரத் தளம் குறித்த விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்துள்ள வினாவும்- பி.மாணிக்கவாசகம் 86 Views இலங்கை பற்றிய ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணை வரைபை முற்றாக்குகையில் காரசாரமான நிலைமகள் எழுந்திருக்கின்றன. அண்மையில் வெளியாகிய அதன் ஆரம்ப வரைபு தமிழ்த்தரப்பை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருந்ததைக் காண முடிந்தது. ஆயினும் அந்த வரைபை அப்படியே ஏற்றுக்கொள்வதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிக்கை வடிவில் தெரிவித்திருந்தார். கடுஞ்சொற்களையும், கடும் குற்றச்சாட்டுக்களையும் கொண்டிருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட்டின் வாய்மொழி அறிக்கையை நிராகரித்து இலங்கையின் வெளியுறவுத்துறை …

  12. சிறிலங்கா இராணுவத்தின் நில அபகரிப்பும் - தமிழ்மக்களின் சொத்துரிமையும் [ சனிக்கிழமை, 13 யூலை 2013, 07:22 GMT ] [ நித்தியபாரதி ] சொத்து உரிமை என்பது பலவீனமாகவும், வினைத்திறனற்றதாகவும் இருப்பதால் போருக்குப் பின்னான சூழலில் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. இரத்தம் சிந்தப்பட்ட நீண்ட கால யுத்தமானது முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பொருளாதாரத்திற்கு மீளவும் புத்துணர்வு வழங்குவதில் மிகப் பாதுகாப்பான சொத்து உரிமைகள் என்பது தேவைப்பாடானதாகும். இவ்வாறான சூழலில் வாழும் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்களுக்கு குறிப்பாக விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரமானது சொத்துப் பாதுகாத்தல் உரிமையிலும், தமது நிலங்களைப் பயன்படுத்தும் உரிமையிலுமே தங்கியுள்ளது. இதற்கும் மேலாக, நம்பகம…

  13. விசேட தேவையுடையோரின் பிரச்சினைகள்: சர்வரோக நிவாரணியா அரசியல் தீர்வு? - கருணாகரன் நோர்வேயிலிருந்து சஞ்சயன் செல்வமாணிக்கம் என்பவர் தொடர்புகொண்டு, “வன்னியில் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட கொஞ்சப்பேருக்கு உதவிகளைச் செய்யச் சிலர் விரும்புகிறார்கள். உடல் பாதிப்புக்குள்ளான சிறார்களைப் பராமரிக்கும் அமைப்பு அல்லது, கூடுதலான பாதிப்பைச் சந்தித்துள்ள சிலரைத் தெரிவு செய்து தரமுடியுமா?” எனக் கேட்டார். ஏற்கெனவே, மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலிருக்கும் முன்னாள் போராளிகள் உட்பட, போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு நண்பர்களுடன் இணைந்து, சஞ்சயன், உதவிகளைச் செய்திருக்கிறார். அந்தப் பணிகளின்போது, படு…

  14. இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும் [ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 07:05 GMT ] [ நித்தியபாரதி ] முத்தரப்பு உடன்படிக்கையானது, சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது பிராந்தியப் பாதுகாப்பில் ஒன்றிணைந்து செயற்படுவதோடு மட்டுமல்லாது, தொடர்பாடல்களை மேற்கொண்டு தேவையான தகவல்களை வழங்குவதுடன் கண்காணிப்பு முறைமைகளையும் நடைமுறைப்படுத்த வழிசமைக்கிறது. இவ்வாறு Iranga Kahangama* என்னும் ஆய்வாளர் கொழும்பை தளமாகக் கொண்ட Daily Mirror ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் தெரித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் வர்த்தக மற்றும் மூ…

  15. பொறுப்பு கூறலில் பொறுப்பு உள்ளவர்களின் பொறுப்பில்லாத போக்கு - காரை துர்க்கா பயங்கரவாதிகளின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுக்கும் ஒரு புனித யுத்தமே நடைபெறுவதாக வன்னி, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்துக்கு முகவுரை கொடுத்தனர் கடந்த ஆட்சியாளர்கள். பல வழிகளிலும் ஒன்று திரட்டப்பட்ட அசுர பலம் கொண்டும் பல நாடுகளது நேரடியானதும் மறைமுகமானதுமான ஒத்தழைப்புடனும் தமிழ் மக்களது இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்துக்கு 18.05.2009 இல் முடிவுரையும் எழுதினர் கடந்த ஆட்சியாளர்கள். ஆனால், அவ்வாறு நடைபெற்ற இறுதிப் போரில் மனித குலத்துக்கு தீங்கு இழைக்கக் கூடிய பல போர்க் குற்றங்கள் இடம் பெற்றுள்ளன என்ற குற்றச்சாட்…

  16. இது வெறுமனே சட்டம் ஒழுங்குப் பிரச்சனையல்ல...! http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-04#page-11

  17. மோடி- புட்டின் சந்திப்பும் பிபின் ராவத்தின் மரணமும் –விபத்தில் சிக்கிய கெலிகொபட்டர் ரஷியாவில உற்பத்தி செய்யப்பட்டது. Mi-17V5 கெலிகாப்டர்கள் ஏனைய வல்லரசு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய ஊடகங்கள் கெலிகொப்படரின் தரத்தை கேள்விக்குட்படுத்தாமல், காலநிலை மற்றும் விமானியின் செயற்பாட்டுத் தவறுகளே அதாவது மனிதக் காரணிகளையே விபத்துக்குப் பிரதான காரணம் என்ற வாதத்தை முன்வைக்கின்றன— -அ.நிக்ஸன்- உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பௌடி என்ற பிரதேசத்தில் 1958 ஆம் ஆண்டு பிறந்த பிபின் லக்ஸ்மன் சிங் ராவத் (Bipin Laxman Singh Rawat) 1958ஆம் மார்ச் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். இந்தியாவின் முதல் முப்…

  18. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது நடந்துகொண்டிருக்கும் இன அழிப்பை யேர்மனியில் நடைபெற்ற தீர்பாயத்தில் ஆராய்ந்து உண்மைத்தன்மையுடன் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நெற் இணையத்துக்கு மே 17 இயக்கத்தின் திருமுருகன் அவர்கள் வழங்கிய செவ்வி. http://www.youtube.com/watch?v=QMxZS7QewyA&feature=player_embedded http://www.sankathi24.com/news/36738/64/17/d,fullart.aspx http://www.youtube.com/watch?v=QMxZS7QewyA&feature=player_embedded

  19. மீண்டும் வலுப்பெறும் சர்வதேச விசாரணை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் கொடுக்கப்பட்ட ஆறு மாதங்களிலேயே, “பூகோள நீதித்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்” என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனீவாவில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி, நடந்து வருகின்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று உரையாற்றிய போதுதான், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார். கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு இரண்டு ஆண்டு காலஅவகாசம் கொடுக்கப…

  20. கூட்டமைப்பின் உடைவு யாருக்கு சாதகம்? தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களில் போட்­டி­யிடப் போவ­தில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். முடி­வெ­டுத்­ததை அடுத்து, கூட்­ட­மைப்பு பல­வீ­ன­ம­டை­வது போன்ற தோற்­றப்­பாடு காணப்­பட்­டது. எனினும், அடுத்த சில நாட்­க­ளி­லேயே, ஈ.பி.ஆர்.எல்.எவ். - தமிழ்க் காங்­கிரஸ் கூட்­டணி முயற்சி முளை­யி­லேயே கருகிப் போனதும், ஜன­நா­யகப் போரா­ளிகள் கட்சி, வரதர் அணி போன்­ற­வற்­றுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான முன்­னா­யத்­தங்­களில் இறங்­கி­யதும், கூட்­ட­மைப்பு மீண்டும் பல­ம­டை­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டு­களை அதி­க­ரிக்கச் செய்­தது. எனினும், உள்­ளூ­ராட்சித் தேர்தல் ஆசனப் பங்­கீட்டுப் பேச்­…

  21. அரசியல் களம் - சட்டத்தரணி மணிவண்னன் - தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி

  22. பொன்சேகாவின் நெருக்கடியும் கோத்தாவுக்கு உள்ள சவாலும் கடந்­த­வாரம் நிகழ்ந்த அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது, எதிர்­பார்ப்­புக்­கு­ரி­ய­தாக இருந்த சில விட­யங்­களில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்­கு­ரிய பத­வியும் ஒன்­றாகும். பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு, பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பத­விக்குப் பதி­லாக, சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்­கப்­படக் கூடும் என்ற எதிர்­பார்ப்பு பர­வ­லாகக் காணப்­பட்­டது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் பத­வியில் இருந்து, சாகல ரத்­நா­யக்க வில­கிய பின்னர், அந்தப் பதவி சரத் பொன்­சே­கா­வுக்கு வழங்­கப்­ப­டலாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது என்­பதை விட, அவரை அந்தப் பத­விக்கு நிய­மிப்­பதே பொருத்தம் என…

  23. தடுக்கப்படாத கலவரமும் தேவையற்ற பிரேரணையும்

    • 0 replies
    • 672 views
  24. தலைகீழ் மாற்றம் -பி.மாணிக்கவாசகம் November 28, 2018 ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலமே தீர்க்கமானது. தீர்மானிக்க வல்லது. ஆனாலும், சிறுபான்மையின் நியாயமான கருத்துக்களை உள்ளடக்கி, பெரும்பான்மையாக எடுக்கப்படுகின்ற முடிவுகள் அந்த ஜனநாயக சக்திக்கு அல்லது பலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். அத்தகைய செயற்பாடுகளின் மூலம் ஒரு ஜனநாயக அரசு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் திகழும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆசியாவில் நீண்டகால ஜனநாயகப் பெருமையுடையதாகக் கருதப்படுகின்ற இலங்கையின் ஜனநாயகம் அப்படியல்ல, தலைகீழானது என்பதை தற்போது அரசியல் அதிகாரத்துக்காக எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் வெளிப்படுத்தி வருகின்றன. எண்ணிக்கையில் …

  25. கடந்து வந்த- 10 வருடங்கள்!! பதிவேற்றிய காலம்: Mar 3, 2019 இலங்­கை­யில் இனப்­பி­ரச்­சினை ஆரம்­பித்த காலத்­தி­லி­ருந்து தமி­ழர்­க­ளில் பல­ரும் காணா­ம­லாக்­கப்­பட்­ட­னர். இது விட­யத்­தில் சிங்­க­ள­ வர்­கள் அல்­லது ஆயு­தம் தாங்­கிய சிங்­க­ள­வர்­கள் முதன்­மைச் சூத்­தி­ர­தா­ரி­க­ ளாக இனங்­கா­ணப்­ப­டு­கின்­ற­னர். 2009 ஆம் ஆண்டு மே 18ஆம் திக­திக்­குப் பின்­பான நாள்­க­ளில் பெருந்­தொ­கை­யா­ன­வர்­களை உயி­ரு­டன் இலங்கை இரா­ணு­வத்­தி­டம் கைய­ளித்த நிலை­யில் அவர்­க­ளுக் என்ன நடந்­தது என்­ப­தாக அவர்­தம் உற­வு­க­ளின் நீண்ட காலத் தேடலே தற்­போது முனைப்­ப­டைந்­துள்ள காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விவ­கா­ர­ம் ஆகும். அந்­தக் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங்­கள் பத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.