Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஒரு வழக்கறிஞர் என்ற ரீதியில் நீதிமன்றத்தின் கௌரவம் குறித்தும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் சட்டத்தின் ஆதிபத்தியம் குறித்தும் தமது மனச்சாட்சிக்குத் தாம் பொறுப்புக் கூற வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்து விசாரணை மேற்கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த அவர் முடிவு செய்தமை இதனாலேயே ஆகும். ஒரு நாட்டின் தலைவரது செயற்பாடுகள் மட்டுமே அவரது கருணையை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டுமேயல்லாது, அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. அதேசமயம் ஒரு சாதாரண பொதுமகனது மனதில் உருவாகும் கருணை போன்றல்லாது, ஓர் அரச தலைவரது நெஞ்சத்த…

    • 0 replies
    • 720 views
  2. ஜோன் ஹெரியின் வருகை, இலங்கையின் மீதான அமெரிக்க அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? - யதீந்திரா அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது இரண்டாவது தவணைக்கான வெளிவிவகாரச் செயலராக (Secretary of State) ஜோன் ஹெரியை நியமித்திருக்கின்றார். ஒபாமாவின் முதலாவது தவணைக் காலத்தில் வெளிவிவகாரச் செயலராகவிருந்த கிலாரி கிளின்ரன் அப்பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதை விரும்பாத நிலையிலேயே, அவரது இடத்தை நிரப்பும் பொறுப்பு தற்போது ஜோன் ஹெரிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒபாமாவின் முதலாவது தெரிவு ஹெரி அல்ல. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுர் சூசன் ரைஸே (Ms. Susan Rice) இப்பொறுப்பிற்கு நியமிக்கப்படுவாரென்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த செப்டம்பர் பெங்காசியில் அமெரிக்க தூதுவராலயத…

  3. வைத்திய கலாநிதி இ.சிவசங்கர் அவர்கள் கைது செய்யப்பட்ட விடயம் தமிழ் மருத்துவர் களை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது. இலங்கையில் மருத்துவப் பட்டத்தை நிறைவு செய்கின்ற தமிழ் வைத்தியர்கள் இந்த மண்ணில் இருந்து சேவையாற்றுவதற்கு விருப்பமில்லாது நாட்டைவிட்டு வெளியேறி இருக்கின்ற சூழமைவில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான தமிழ் மருத்துவர்களே தாம் பிறந்த மண்ணிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற பெருவிருப்போடு பணிபுரிந்து வருகின்ற இவ்வேளையில், தமிழ் மருத்துவர்களை நோக்கிய படைத் தரப்பின் சந்தேக பார்வை, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த நாட்டின் ஒட்டுமொத்த சமூகமும் புரிந்து கொள்வது அவசியம். வட மாகாணம் முழுவதிலும் மருத்துவர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருக்கின்ற போது, மருத்துவர்கள்…

    • 0 replies
    • 843 views
  4. இலங்கைக்கு உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் வரும்போதேல்லம் தம்மோடு இணைந்திருக்கும் தமிழர் ஒருவரை பலி கொடுத்து புலிகள் மீது பழியைப் போட்டுவிட்டு அதிலிருந்து தப்பிக் கொள்வதுதான் வழக்கம். கடந்த காலங்களில் மகிந்த அரசின் இந்தத் திட்டம் வெகு கச்சிதமாக மிகப் புத்திசாலித்தனமாக நிறைவேற்றப்பட்டுள்ளதை பல ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளார்கள். இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் களத்தை அழிப்பதற்கு சிங்கள அரசு கையாண்ட மிகப் பெரிய தந்திரம். சிங்கள அரசிற்கு மிகுந்த நம்பிக்கையுடன் உழைத்த முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் ஆகியோரை கொலை செய்தது சிங்கள அரசு. ஆனால் அவற்றை புலிகள்தான் செய்தார்கள் என்பதை மிகத்திறமான பரப்புரையின் மூலம் உலகை நம்ப வைத்தது சிங்கள அரசு. அந்…

  5. இலங்கைத்தீவில் இந்தியாவும் சீனாவும் - ஏமாற்றப்படும் ஈழத்தமிழர்களும் [ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 08:21 GMT ] [ புதினப் பணிமனை ] இலங்கைத்தீவு என்பது சீனாவுக்கு ஒரு தரிப்பிடம் மட்டுமே. சீனாவைத் திருப்திப்படுத்தக்கூடியளவுக்கு இலங்கைத்தீவில் வளங்களோ அல்லது நுகர்வோரின் எண்ணிக்கைப்பலமோ இல்லை. 'புதினப்பலகை'க்காக ம.செல்வின் சிறீலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இறுகிவரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கநிலைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் பாரிய சவாலாக உருவாகி வளர்ந்து வருகின்றது என்பதனை புதுடெல்லியில் உள்ள அதிகாரக்கட்டமைப்பு தொடக்கம் சாதாரண இந்தியக் குடிமகன்வரை அனைவரும் புரிந்துள்ளனர். …

  6. தமிழ் அரசியலில் ஒரு முக்கிய ஆண்டாக 2013 இருக்கும் - அ.சுமந்திரன் சந்திப்பு: ரூபன் சிவராஜா நோர்வே கற்கை மையத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட 'தமிழர் தேசியப் பிரச்சினையைக் கையாளல்' தொடர்பான கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காக ஒஸ்லோ வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சுமந்திரன் அவர்களை பொங்குதமிழுக்காக சந்தித்து உரையாடினோம். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் சிறிலங்கா நாடாளுமன்றத்திலே நிகழ்த்திய சர்ச்சைக்குரிய உரையின் தாக்கம் அடங்குதவற்கு முன்னர் இடம்பெற்ற இச்சந்திப்பில் சம்பந்தன் அவர்களின் உரைகுறித்தும் தற்போதைய அரசியல் நிலைகுறித்தும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் சுமந்திரன் அவர்களுடன் விரிவாகப் பேசியதிலிருந்து... …

  7. இலங்கையை பொறுத்தமட்டில் 2012ஆம் ஆண்டு பொருளாதார நிலை பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருந்தது. 2012ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி வீதம் 8 சதவீதமாக அமைந்திருக்கும் என பல தரப்பினரின் மூலம் எதிர்வுகூறப்பட்டிருந்த போதிலும், வருட நிறைவில் 6.8 வீத வளர்ச்சியே எய்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் நாட்டில் நிலவிய வெவ்வேறான சூழ்நிலைகள், காலநிலை மாற்றம், அரசியல் சூழல், பங்குச்சந்தை நிலைவரம், நாணய மாற்றுக் கொள்கை போன்றவற்றுடன், சர்வதேச நாடுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் அமையதியற்ற சூழ்நிலை போன்றனவும் பங்களிப்பு வழங்கியிருந்தன. நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்களிப்பு செலுத்தும் துறைகளாக …

  8. "மாதர் தம்மை இழிவு செய்யும் மூடர்களை அழித்திடுவோம்" என உணர்ச்சி பொங்கப் பாடிய பாரதியாரின் பாரத தேசத்தில் இன்று வீதிகளில் வைத்தே பெண்கள் காட்டுமிராட்டித்தனமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன பாருங்கோ... டில்லியில் ஓடும் பஸ்ஸில் பல்கலைக்கழக மாணவி ஒருத்தி மிக வக்கிரக் குணம் கொண்ட காமுகர்களால் படுபயங்கரமாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டமை இந்திய நாட்டில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்குப் பாருங்கோ... ஓடும் பஸ்ஸில் நடத்தப்பட்ட மிருகத்தனமான இக்கொடூர வன்புணர்ச்சி அந்த நாட்டிலுள்ள ஒட்டு மொத்த மக்களையும் கதிகலங்க வைத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டுச் சட்ட திட்டங்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. உள்ளூர் சட்ட திட்டங்களில் அதிகார …

    • 0 replies
    • 662 views
  9. பிறக்கப் போகும் அடுத்த ஆண்டில், மிக முக்கியமானதொரு எதிர்பார்ப்புக்குரிய விடயமாக மாறியிருப்பது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் தான். வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், தமிழர்களின் அவலநிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல்கட்சிகளால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், எதையும் சமர்ப்பிக்க முடியாது என்ற போதும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அவலநிலையை வெளிக்கொண்டு வருவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக கிடைக்கின்ற வாய்ப்புகளை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, ஐ.நா மனித…

  10. இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம் என்பது ருஷ்ய நாட்டில் ஜார் மன்னள் நடத்திய கொடுங்கோல் ஆட்சி கண்டு கொதித்தெழுந்த மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுப்பிய அனல் கக்கும் கவிதை வரிகள். மனித சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்து குமுறி இடித்த கொடியவர்களின் காட்டாட்சி பாரதியை மட்டுமல்ல ருஷ்யத் தொழிலாளி வர்க்க்த்தையே திரண்டெழ வைத்து மாபெரும் புரட்சியை வெடிக்க வைத்து ஜார் மன்னனையே அரியணையிலிருந்து தூக்கியெறியும் நிலையை உருவாக்கியதுடன் ஒரு புதிய சுதந்திர ஆட்சியையும் தோற்றுவித்தது. இலங்கையிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் மீது இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற வகையிலான ஒரு காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டதை அண்மைக்கால சம்பவங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. கடந்த மா…

  11. இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களுக்கு நடந்தது என்ன? மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ் 27 டிசம்பர் 2012 மனநல மருத்துவர் எஸ். சிவதாஸிடம் பகிரங்கக் கேள்விகள் சில.... மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ் வவுனியா பொது வைத்தியசாலை 2012–12–12 காலை 9.00 விடுதி இல 12, வவுனியா பொது வைத்தியசாலை. (மனநல மருத்துவர் எஸ். சிவதாஸின் இந்தக் கட்டுரை குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மின் அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது) (இதன் கீழ் உள்ள மனநல மருத்துவர் எஸ். சிவதாஸிடம் பகிரங்கக் கேள்விகள் சில... என்ற பகுதி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இப்போ இணைக்கப்பட்டுள்ளது.) வன்னியைச் சேர்ந்த 14 வயது பெண் ஒருத்தி மருத்துவவிடுதியிலிருந்து எனது கருத்திற்காக அனு…

  12. மகிந்த சிந்தனை வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் இராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. * அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்தால் மோசடிக்கு இடம் ஏற்படும் * மாகாணசபை முறையை இந்தியா திணிக்கவில்லை *பண்டாரநாயக்க காலத்திலிருந்து விவாதிக்கப்பட்ட விடயம் அதிகாரப் பகிர்வு * மாகாண சபையை ஒழிப்பதால் சிங்கள முஸ்லிம் இளைஞர்களுக்கும் தவறான செய்தியாகிவிடும் * மகிந்த சிந்தனையில் அளித்த வாக்குதியை நிறைவேற்றுகஇராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் மக்களின் இறைமையின் செயற்பாடானது பிரிக்கப்பட்டுவிட்டது. அது நாடாளுமன்றத்துக்…

  13. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் பற்றிய விவாதம் ஒன்றுக்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், அமெரிக்காவில் ஏற்படப்போகும் அரச நிர்வாக மாற்றங்களை இலங்கை அரசாங்கம் அதிக நம்பிக்கையுடன் எதிர்கொண்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெறுவதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக மிட் ரோம்னி வெற்றி பெற்றால், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் என்று அரசாங்கம் கருதியிருந்தது. ஒபாமா வெற்றி பெற்றதும், இலங்கை அரசாங்கத்துக்கு நாடி, நரம்புகள் தளர்ந்து போனது உண்மை. அடுத்து, ஒபாமாவின் இராஜாங்கத் திணைக்கள நியமனங்கள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டன. …

  14. சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்க முன்பு கொல்லப்பட்ட பிறகு, அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அந்த பத்திரிக்கை அவர் வகுத்த பாதையில் இருந்து விலகுவதாக விமர்சகர்கள் குறை கூறுகின்றனர். சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இலங்கையில் ஊடகச் சுதந்திரம் மோசமான நிலையில் இருப்பதை இது வெளிக்காட்டியது. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் அக்கொலை வழக்கு முற்றுப் பெறாமல் இருக்கிறது. லசந்தாவின் கொலைக்குப் பிறகு – அரசுக்கு எதிரான செய்திகளை வெளி…

    • 0 replies
    • 951 views
  15. தமிழ் மக்களுக்கு என்ன தேவை? : சண் தவராஜா இந்தப் பகுதியில் இனியொரு… இன் பிரதான கருத்தியலுக்கு முழுமையாக உடன்பாடற்ற, முழுமையான தொடர்பற்ற அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்கள் பதியப்படுகின்றன. விவாதத்தை நோக்கமாகக் கொண்டு கருத்துக்களைச் செழுமைப்படுத்தும் நோக்கில் இப் பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்குப் பரிகாரமாக ஏதோவொரு தீர்வை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய சூழலில் சிறி லங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள கூட்டத் தொடருக்கு முன்னதாக இந்தத் தீர்வு ஒப்புக்காகவேனும் வழங்கப்பட்டாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எப்பாடு பட்டேனும் அத்தகைய தீர்வு ஒன்றை வழங்காமல் …

  16. சீன - இந்திய - சிறிலங்கா உறவும் இந்திய மாக்கடலும்: தமிழ்நாட்டு தமிழரின் கைகளில்? [ புதன்கிழமை, 26 டிசெம்பர் 2012, 08:57 GMT ] [ நித்தியபாரதி ] சீன-இந்திய-சிறிலங்கா பூகோள மூலோபாய உறவுநிலையானது முக்கியமாக இந்தியாவில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கிலேயே தங்கியுள்ளது. இந்தியத் தமிழர்கள், சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய காரணியாக உள்ளனர். இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட Foreign Policy Research Institute - FPRI தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள Mark J. Gabrielson, Joan Johnson-Freese ஆகிய இருவரால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட…

  17. காணாத தேசத்திற்கு இல்லாத வழி : தங்கம் வன்னிப்பகுதியிலிருந்து 109 பெண்கள் இராணுவத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பான செய்தி பற்றி சிதறுசமூகத்தில் பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை ஊடகங்களில் இச்செய்தியை விமர்சிக்க முடியாத சூழலில் இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் ஊடகங்களில் நடைபெறுவது ஒருவகையில் ஆரோக்கியமானதே. தெற்காசிய நாடுகளையொத்த நிலையில் இலங்கையிலும் தந்தைவழிப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூக அமைப்பே காணப்படுவதாக நாம் இன்றும் கொள்ளவேண்டும். இச்சமூக அமைப்பில் பெண்கள் பத்னிகளாக, வீராங்கனைகளாக இன்னபிற புனைவுகளைக்குட்பட்டவர்களாகவோ அல்லது பரத்தையாகவோ, விபச்சாரிகள் போன்ற புனைவுகளுக்குட்பட்டவர்களாகவோ இருக்க …

  18. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு ஏன்? அப்படிப் பார்க்கிறபோது இன்றைக்கு இலங்கையிலே இருக்கிற தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம்-எல்.டி.டி.இ. அமைப்பினர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக ஈரோஸ் இருக்கிறார்கள். மற்ற இயக்கங்கள் இல்லை என்று சொல்லவில்லை. இருக்கிறார்கள். அங்கே இருந்து அவர்களால் பணியாற்ற முடியவில்லை. சிங்கள ராணுவத்திற்கு எதிராக அங்கே விடுதலைப் புலிகள்தான் தன்னந்தனியாக நின்று போராடி உயிர்த் தியாகம் செய்து வருகிறார்கள். சொல்வார்களே… கண்ணீரும் செந்நீரும் கொட்டி சுதந்திரப் பயிர்வளர்த்தார்கள் என்று அப்படி அவர்கள் வளர்க்கிறார்கள். பொதுவாக ஆண்கள் செந்நீரைச் சிந்துவார்கள், பெண்கள் கண்ணீரைச் சிந்துவார்கள். ஆனால் இலங்கை தமிழ் பகுதியைப் பொறுத்…

  19. நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு http://www.youtube.com/watch?v=xycN1kpUfgQ

  20. விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் சுற்றிவளைக்கப்படும் சீனம் ஹிலாரியின் பயணத்துக்குப் பின்னர், இப்போது மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அகற்றியுள்ளன. இதனால் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகள் மட்டுமின்றி, இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளும் மியான்மரில் பெருக வாய்ப்புள்ள சூழல் நிலவுவதாக இந்தியப் பெரு முதலாளிகளின் சங்கமான "ஃபிக்கி' பூரிக்கிறது. இவை ஒருபுறமிருக்க, கடந்த ஈராண்டுகளில் பிலிப்பைன்சுக்கும் சிங்கப்பூருக்கும் அதிநவீன போர்க்கப்பல்களை அமெரிக்கா கொடுத்துள்ளதோடு, வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளையும் நடத்தியுள்ளது. சீனாவை அடுத்துள்ள தைவானுக்கு மிகப்பெரும் அளவிலான ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. மே…

  21. சிறீலங்காவின் யாழ் பிராந்தியத்திற்கான கட்டளை தளபதியுடன் கடந்த 21ஆம் திகதி யாழ் பல்கலைச் சமூகம் சந்திப்பொன்றை நடத்தியது யாவரும் அறிந்ததே. இக் கலந்துரையாடலில் காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைகழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு யாழ். மாவட்ட கட்டளை தளபதி அரும்பாடுபடுகின்றார் என்பது இதனூடாக அறியலாம். அரும்பாடு பட்டாவது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என இவர் நினைப்பது பகல் கனவாக அமையும். யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் மாவீரர் தினத்தை கொண்டாட முனைந்தார்கள் என்ற குற்றசாட்டில் கைது செய்யப்படார்கள் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர்கள் விடுதலைப் புலிகளின…

  22. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அவர்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தியதை எப்படி குற்றமாக எடுத்துக்கொள்ள முடியும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியுள்ளது. வன்செயல் எதிலும் ஈடுபடாது அமைதியாக இடம்பெற்ற நினைவுகூரல் நிச்சயமாக பயங்கரவாதமாகாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் நால்வரையும் உடனடியாக விடுதலைசெய்யுமாறு இலங்கை அரசை அது கோரியுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் விவகாரம் சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவரும் நிலையில், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. மேலும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் உடனடியாக நீதிம…

    • 0 replies
    • 718 views
  23. தாயகத்தில் சிங்களமும் பிராந்தியமும் சர்வதேசமும் செய்து வரும் நகர்வுகளின் அடிப்படையில் பார்த்தால் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான ஏது நிலைகளே அதிகம் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனை தமிழ் மக்கள் தாங்கிக் கொள்ள முடியாத போதும் மாற்று வழி இன்றி அதனைத் தேர்வு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால்.. (ஒருவேளை)... இன்றைய நிலவரப்படி.. எந்த அமைப்பு அதனைத் தொடர்வதை விரும்புவீர்கள்..??! கவனிக்கவும்.. இதில் ஒட்டுக்குழுக்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கம் எமக்கில்லை. ஒட்டுக்குழுக்கள் காட்டிக்கொடுப்புகள்.. மக்கள் விரோத நடவடிக்கைகள் என்று எல்லாவற்றையும் முழுமையாக கைவிட்டு இதய சுத்தியோடு செயற்பட்டு அளப்பரிய தியாகங்கள் புரிந்து குறைந்த அளவு அல்லது மக்களுக்கு பாதிப்பு வராத வகையில்…

    • 33 replies
    • 2.7k views
  24. உலக வரலாற்றில் இரத்தம் வடிக்கும் மனிதர்களாக ஈழத்தமிழர்கள் ! எத்தனை எத்தனை ஆண்டுகள் ஈழமக்கள் கண்ணீர் வடிக்கின்றார்கள் இந்த உலகை வழி நடத்துகின்றோம் என்னும் அனைத்துலக அரசியல் மேதாவிகள் என்ன செய்கிறார்களோ? ஏன் இன்னும் ஈழத்தமிழ் மக்களின் கண்ணீருடன் பொறுமை, உண்மைக்காக உழைப்பதாக சொல்லும் உலக மேதாவிகள் என்னதான் சொல்ல வருகின்றார்கள்? எம்மை என்ன செய்ய நினைக்கின்றது உலகம், இப்படியே அகதிகளாக எத்தனை காலம் அங்குமிங்கும் மனிதன் ஓடி அலைவது, ஈழத்து பெற்றோர் வெளிநாடுகளை நம்பியா தங்கள் பிள்ளைகளை பெற்றெடுத்தார்கள்? வெறும் வெள்ளிக்காசு தரும் சுக வாழ்வை எண்ணி அகதி அந்தஸ்த்து தேடி அலையும் ஓர் இனமாக ஈழத்தமிழினம் பிறரால் பார்க்கப்படுகின்றது அது முற்றிலும் அறிவீனமான ஆழப்பார்வை அற்றோர் …

    • 0 replies
    • 983 views
  25. பாறை நிலத்தில் தலையைப் புதைக்குமா தீக்கோழி? ஆக்கம்: இதயச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் உரை, பல அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மேதினக் கூட்டத்தில் சிங்கக் கொடி பிடித்ததை சரியென்று நியாயப்படுத்தி ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மீண்டுமொரு சர்ச்சை அவரது நாடாளுமன்ற உரையால் கிளம்பியுள்ளது. தான் சொல்வது சரியென்பதில், எப்போதும் உறுதியாகவிருக்கும் அரசியல்வாதி அவர். புலிகளைத் திட்டித்தான், சிங்களத்தினதும், வல்லரசாளர்களினதும் ஆதரவினைப் பெறவேண்டுமென நினைத்தால் அதையும் செய்வார் அப்பெருமகன். ஆனால் அவர்களின் சொந்த நலன்கள், எமக்கான பிறப்புரிமையை அங்கீகரிக்காது என்பதுதான் நிஜம். ஆகவே ,இனிமேல்…

    • 0 replies
    • 591 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.