நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
சிலை திறப்பின் உணர்வலைகள் ! (ஸ்ரீ கிருஷ்ணர் ) 2000ம் காலப்பகுதியில் மட்டக்களப்பில் வாழ்ந்த புத்திஜீவிகள் எனப்படும் சிலருக்கு உயர்பதவிகளைப் பிடிக்க பிரதேசவாதம் தேவைப்பட்டது. இதே வேளை அன்றைய ஆயுதப்போராளியான கருணா எனப்படும் (விநாயகமூர்த்தி முரளிதரன்) புலிகள் இயக்கத்திலிருந்து பல்வேறு தவறுகளையும், மோசடிகளையும் செய்தபின்னர் தன்னைச் சுற்றவாளியாக வெளியுலகத்துக்கு காட்ட அவருக்கு தேவைப்பட்ட ஆயுதம் பிரதேசவாதமாகும். ஒருசில பிரதேச கல்விமான்கள் தமது இலக்கை அடைவதற்காகக் காலத்துக்கு காலம் மெதுவாகச் சில மூத்த போராளிகளின் மூளையில்பிரதேசவாத நஞ்சை ஏற்றினர்.மட்டக்களப்புப் பிரதேச அதீத பற்றுக் சில கொண்ட மூத்த போராளிகள் இந்த கல்விமான்கள் எனப்படும் கபடர்களின் வலைக்குள் வீழ…
-
- 0 replies
- 425 views
-
-
சசிப்பெயர்ச்சிப் பலன்கள்! இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும்வரை இப்படியொரு அறிவிப்பை அம்மையார் வெளியிடவில்லை. ஆகவே, நம்பிக்கையுடன் எழுதத் தொடங்கினேன். உடன்பிறவா சகோதரி சசிகலா உள்ளிட்ட பதினான்கு பேரைக் கட்சியை விட்டு நீக்கிய அறிவிப்பு வெளியானபோது அதிமுகவினர் அத்தனைபேருமே தங்கள் கைகளைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். நம்பமுடியாத அறிவிப்பு. ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும், அறிவித்தவர் அம்மா என்பதால்! ஒவ்வொரு கட்சியிலும் நம்பர் டூ என்ற அலங்காரப் பதவி ஒன்று இருக்கும். ஆனால் அதற்கான அதிகாரங்கள் அனைத்தும் இன்னொருவரிடம் இருக்கும். உதாரணம் : திமுகவில் பேராசிரியர் அன்பழகன் வகிக்கும் பதவி. கட்சிப் பதவியைப் பொறுத்தவரை அவர்தான் நம்பர் டூ. ஆனால் உண…
-
- 0 replies
- 909 views
-
-
2019 ஜனாதிபதி தேர்தலின் தனித்தன்மை நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தலாகும். முன்னைய 7 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது சில பிரத்தியேகமான -- சுவாரஸ்யமான அம்சங்களை இத்தடவை தேர்தலில் காணக்கூடியதாக இருக்கிறது. முன்னைய ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான வேட்பாளர்கள் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக அல்லது எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்துக்கொண்டே போட்டியிட்டார்கள்.ஆனால், இத்தடவை அவ்வாறு யாருமே களத்தில் இல்லை. அரசியல் நிலைவரங்களை நோக்கும்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாசவுமே பிரதான வேட்பாளர்கள் என்று தெரிகிறது.அவ்வாறானால் இலங்கையின் ஜனாதி…
-
- 0 replies
- 681 views
-
-
இன்றைய பார்வையில் 1987 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கை -கேணல்.ஆர்.ஹரிகரன்- இலங்கையில் புதிய அரசொன்றை வரைவதற்கான செயன்முறைகளில் ராஜபக்ச அரசாங்கம் இறங்கியிருக்கிறது. முழுமையான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்கு முன்னதாக முன்னைய நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டில் கொண்டுவந்த 19ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கு வகைசெய்யக்கூடிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. அது பற்றிய அரசியல் வாதப்பிரதிவாதங்கள் இலங்கையில் தீவிரமாக மூண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பெ…
-
- 0 replies
- 605 views
-
-
இரண்டு எதிர்க்கட்சிகளின் எதிர்காலம் மின்னம்பலம்2021-10-18 ராஜன் குறை சில மாநிலங்களில் ஆட்சி செய்தாலும், தேசிய அளவில் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும், தமிழ்நாட்டில் முதன்மை எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.கவுக்கும் கடந்த சனிக்கிழமை - 2021அக்டோபர் 16 - முக்கியமான நாள். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட செயற்குழு, அதிருப்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று அன்று கூடியது. அ.இ.அ.தி.மு.க கட்சி தொடங்கப்பட்டு பொன்விழா காணும் நேரம் அதன் முன்னாள் (தற்காலிக) பொதுச்செயலாளர் சசிகலா, ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தி அந்தக் கட்சியின் மீது உரிமைகோரும் தன் அரசியல் செயல்பாட்டை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தலைவர் யாரென்று தெரியும்; அது நடைமுறைய…
-
- 0 replies
- 513 views
-
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு. 14.12.2013, சனிக்கிழமை அன்று செங்காலன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான செங்காலன் வாழ் தமிழ்மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வானது மிகவும் உணர்வுபூர்வமாகவும் நம்பிக்கையை தந்த எழுச்சி நிகழ்வாகவும் இருந்தது. மாவீர வித்துக்களான அரசியல் பெருந்தகைகளின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக …
-
- 0 replies
- 368 views
-
-
வெளி ஆட்களின் பொறியில் வசமாக சிக்கியுள்ள இலங்கை April 17, 2022 — கருணாகரன் — அரசியற் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடி என நாடு பெரும் பிரச்சினைச் சூழலுக்குள் சிக்குண்டிருக்கிறது. பலரும் கருதுவதைப்போல இது இப்பொழுது – இந்த ஆட்சியில்– ஏற்பட்ட திடீர் நெருக்கடியல்ல. அல்லது இந்த நெருக்கடிக்கு ராஜபக்ஸவினர் மட்டும் காரணமும் அல்ல. ஆனால் இந்தத் தரப்புக்குக் கூடுதல் பொறுப்புண்டு. இவர்கள் முன்னரும் அதிகாரத்தில் இருந்தனர் என்பதோடு இப்பொழுதும் ஆட்சியில் இருக்கும் தரப்பாக உள்ளனர் என்பதால் இந்தப் பொறுப்புக் கூடுதலாகச் சேருகிறது. இப்பொழுது ஆட்சியில் இருக்கும் தரப்பு என்பதே இங்கே கவனத்திற்குரியது. ஏனென்றால் நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டியவர்கள் ஆட்சியில் இருப்பவ…
-
- 0 replies
- 200 views
-
-
சிவந்தனிடம் ஒரு கோரிக்கை – ஈழமுரசு ஆசிரிய தலைப்பு * இவ் விடயம் 06. 08. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 21:00க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நீதி கேட்டு நடக்கும் இளைஞனின் பயணம் 600 கிலோ மீற்றர்களையும் கடந்து முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. இன்னும் அரைவாசித் தூரத்தைக் கடக்கவேண்டிய இளைஞனின் மனதிலும், கால்களிலும் சோர்வினைக் காண முடியவில்லை. நெஞ்சில் உறுதி மட்டும் அசைக்கமுடியாத அளவிற்கு இருப்பதை உணரமுடிகின்றது. தனது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு நீதி வேண்டும் என்பதே இந்த இளைஞனின் ஒரே குறிக்கோளாக இருக்கின்றது. அந்த இளைஞனின் கரம்பற்றி மேலும் பல தமிழர்கள் நடந்துகொண்டிருப்பது இன்னும் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கின…
-
- 0 replies
- 771 views
-
-
பாதுகாபப்பு செயலரானார், பசனாயக்கா. இவர் இராணுவ தொடர்பு இல்லா, முன்னால் சூழல் சுற்றாடல் செயலர் ஆவார்.
-
- 0 replies
- 581 views
- 1 follower
-
-
அரசுக்குத் தொடர்ந்தும் – ஆதரவை வழங்க வேண்டுமா கூட்டமைப்பு? கூட்டரசுக்குத் தொடர்ந்தும் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண் டுமா? என்ற கேள்வி தமிழ் மக் கள் மத்தியில் தற்போது தோன்றியுள்ளது. தாம் பல வகைகளிலும் இந்த அரசால் ஏமாற்றப்பட்டு, நடுத்தெருவில் நிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார். அது அரசின் மீதான கூட்டமைப்பின் வெறுப்பைத் துலாம்பாரமாகவே எடுத்துக்காட்டிவிட்டது. மாவை சேனாதிராஜாவின் கருத்தில் நியாயம் இல்லாமலில்லை. இறுதியாக இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ததில் கூட்டமை…
-
- 0 replies
- 279 views
-
-
எந்திரன் முகம்மது தம்பி மரைக்கார் / 2018 நவம்பர் 27 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:31Comments - 0 “நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதையடுத்து, “இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது” என்று, ஒரு சாரார் கோபப்படத் தொடங்கியுள்ளனர். இன்னொரு தரப்பினரின் பார்வை, வித்தியாசமாக உள்ளது. “அந்த மனிதர், இந்தளவுக்குப் பிடிவாதமாக இருக்கிறார் என்றால், ரணில் விக்கிரமசிங்கவால் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பார்” என்று கேட்கின்றனர். ஜனாதிபதியின் தீர்மானம் பற்றிய மேற்படி அபிப்பிராயங்களுக்கு இடையில்தான், மக்கள் தெரிந்து கொ…
-
- 0 replies
- 951 views
-
-
கோத்தாவுடன் எனக்கு எந்த தொடர்புமில்லை : இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் (ஆர்.யசி ) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்பும் இருந்ததில்லை. அவர்கள் எனக்கு சம்பளம் கொடுக்கவும் இல்லை. என்னைக் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைக்க வேண்டும் என்ற தேவை சிலருக்கு உள்ளது என இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியளித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவிக்குழு முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்காக அழைக்…
-
- 0 replies
- 258 views
-
-
முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதி உட்பட தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் பலவற்றிலும் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றுள்ளது. குறிப்பாக யாழ் பல்கலைக் கழகத்தில் சிறீலங்கா இராணுவத்தினரதும் புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களினதும் பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நிகழ்ந்தேறியுள்ளது. ஆயினும் பல மாணவர்கள் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர். ஏற்கனவே, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரும் பதாகைகள், சுவரொட்டிகள் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் சிறீலங்கா புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்டிருந்தமை தொடர்பாக த…
-
- 0 replies
- 576 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா - இந்திய அரசுகள் வெளிப்படையாக அறிக்கைகளை வெளியிட்டுவரும் நிலையில், ஏன் இன்னும், இந்நாடுகளின் அரசுகள் அந்த அமைப்பு தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்பாக காட்ட முற்படுகிறது? இந்தியாவின் இறைமைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினால் அச்சுறுத்தல் ஏற்படலாம். அதனால், மேலும் இரு ஆண்டுகளுக்கு தடை நீடிப்பதாக கடந்தவாரம் இந்திய அரசு அறிவித்துள்ளது. புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மைக்கு என்றுமே எதிராக செயற்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்குள் ராஜுவ் காந்தியின் கொலையை முன்னுதாரணப்படுத்தி காரணங்களை முன்வைக்கலாம். ஆனால், ராஜுவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மாத்திரம் சம்பந்தப்படவில்லை என்பதை பல ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக்…
-
- 0 replies
- 418 views
-
-
குளங்களைத் தொலைக்கும் தலைமுறை -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தண்ணீரைக் காக்கத் தவறுகின்ற சமூகம் வாழ்வதற்குத் தகுதியற்றது. எங்கள் கண்முன் எம் நீராதாரங்கள் களவாடப்படுகின்ற போது, வாழாவிருக்கின்ற சமூகம் அடிப்படை அறங்களை முற்றுமுழுதாகத் தொலைத்துவிட்டது என்றே கொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை (26) வவுனியாக்குளத்தைக் காப்பாற்றுமாறு கோரி சத்தியாக்கிரகமொன்றை வவுனியாக் குளத்துக்கான மக்கள் செயலணி நடத்தியது. இது எம் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் பேரவலமொன்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. போருக்குப் பின்னரான இலங்கையில், அபிவிருத்தியின் பெயரால் அரங்கேறும் அவலங்களை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இனியாவது நாம் பேசியாக வேண்டும். அடுத்த தலைமுற…
-
- 0 replies
- 588 views
-
-
வீட்டைக்கட்டிப்பார்... திருமணத்தை செய்துபார்... என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்த அனுபவம் என்பது ஒரு மனிதன் படிக்கும் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம். ஏன்னென்றால் இந்த இரண்டையும் ஒருவன் வெற்றிகரமாக முடித்துவிட்டால் எந்த அனுபவம் வருகிறதோ இல்லையோ பணம் சார்ந்த அனைத்து பக்குவமும் அவனுக்கு வந்துவிடும். பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும். ஒரு வேலை ஆரம்பிக்க எவ்வளவு பணம் தேவைப்படுகிறது. அதை எங்கிருந்து பெருவது போன்ற உலக அனுபவங்கள் அவனுக்கு கிடைத்து விடுகிறது..... இந்த கதையை படித்தால் உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.... சாதாரண “கார்” ஒன்று வாங்குவதற்காக ஒரு விவசாயி... கார் விற்கும் கடைக்குச் சென்றார். அவர் விரும்பிய மற்றும் கையில் உள்ள 2 லட்சம் விலையில் உள்…
-
- 0 replies
- 422 views
-
-
இடதுசாரி அலையில் தென் அமெரிக்கா -சுவிசிலிருந்து சண் தவராஜா. சிலி நாட்டில் டிசம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் 56 விழுக்காடு வாக்குகளைப் பெற்று கப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி மாணவர் தலைவரான இவரின் வெற்றி தென் அமெரிக்கப் பிராந்தியத்தின் தற்போதைய அரசியல் போக்கின் ஒரு காட்டியாக உள்ளது. 2010 முதலே இந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் தேர்தல்களில் இடதுசாரிகள் அல்லது இடதுசாரிக் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள வேட்பாளர்கள் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் போக்கு தென்படுகின்றது. சில நாடுகளில், இக் காலப் பகுதிகளில் இடதுசாரிகள் தங்கள் பதவிகளை இழந்திருந்தாலும், அந்தந்த நாடுகளில் உள்ள நடப்பு அரசியல் நிலவரம், இடதுசாரிகளை நோக்…
-
- 0 replies
- 249 views
-
-
தமிழர் தாயகப் பகுதியில் இன்று சர்வதேசப் பிரதிநிதிகள் ஒருவர்பின் ஒருவராகச் சென்று தமிழ் மக்களை குசலம் விசாரிப்பதற்குக் குறைவில்லை. மக்களும் தமது உள்ளக்கிடக்கைகளையெல்லாம் அவர்களிடம் கொட்டித் தீர்க்கின்றனர். சர்வதேசப் பிரதிநிதிகளும் மக்களின் குறைகளை கேட்டுவிட்டு, சிறீலங்கா அரச பிரதிநிதிகளையும் சந்தித்து கைகுலுக்கவும் தவறவில்லை. ஆனால், சிறீலங்காப் படையினரால் பல நெடுங்காலமாக அபகரித்துவைத்துள்ள மக்களின் வதிவிடங்களும் உடமைகளும் அழிவடைந்துள்ள நிலையில், இன்று முற்றாக அழிக்கப்படுகின்றன. யாழ்.மாவட்டம் வலி. வடக்கில் மக்களின் வீடுகளையும் உடமைகளையும் அடையாளம் தெரியாதவாறு, படையினர் அழித்துவருவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டமையும் - குறித்த …
-
- 0 replies
- 310 views
-
-
சிக்கல் ஸ்ரீலங்காவின் சூழ்ச்சி அரசியலை புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழனும் சரிபார்க்கவேண்டும் * இவ் விடயம் 06. 08. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 20:57க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள் ஸ்ரீலங்காவின் இனவாத அரசுத்தலைவரும், அந்த நாட்டின் எதிர்க்கட்சியான பாசிச நாசித்துவத்தின் ஊற்றுவாயாக 1950. 1952 ம் ஆண்டுகளிலேயே டி.எஸ் செனநாயக்கவினால் உருவாகி இனங்காணப்பட்ட, ஐக்கியதேசியக்கட்சியின் இன்றய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், கட்சிப்பகைமறந்து மாற்று அரசியல் கருத்துமறந்து சிங்களவர்கள் என்கின்ற ஒற்றுமையுடன் ஒருமுகத்தோடு மாதம் ஓரிருமுறை சந்தித்து பேசிக்கொள்வதை ஒருமரபுசார்ந்த நடைமுறையாக வைத்திருக்கின்றனர். கட்சி பிறழ்வுகாரணமாக ஆட்சி அதிகாரத்தை ஒருவரிடமிருந்து ஒருவர்…
-
- 0 replies
- 643 views
-
-
சீனா ஏன் ஆர்வமாக இல்லை பாரிஸ் கிளப் ஜப்பான் மற்றும் இந்தியா காட்டிய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் சீனா ஏன் ஆர்வமாக இல்லை. சீனாவின் திட்டங்கள் வெள்ளை யானை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தில் சுமையாக இருப்பது அம்பலமாகிவிட்டதால், அதன் விளைவுகளில் சீனா உறுதியாக உள்ளது. பல உயர் மட்ட குழுக்கள் வந்தாலும்சீனாவிடம் இருந்து எந்த அர்ப்பணிப்பும் இல்லை. கடன் மறுசீரமைப்பு அல்லது சாத்தியமான வருமானம் ஈட்டும் முதலீடுகள் தொடர்பிலும் ஆக்கப்பூர்வமான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை. இலங்கை மற்றும் முக்கிய கடன் வழங்குநர்கள் சீனா இல்லாமல் நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முறையாகத் தொடங்கினர் - அதன் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குபவர் - வளரும் நாடுகளில் கடன…
-
- 0 replies
- 258 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னொரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் இழுத்துவிட அரசாங்கத் தரப்பு முனைப்புக்காட்டி வருகிறது. ஏற்கனவே பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஒரு வருடத்தை விரயமாக்கி அரசாங்கத் தரப்பு கைகழுவி விட்டது. தற்போது நாடாளுமன்றத் தெவுக்குழு என்ற பொறிக்குள்'' கூட்டமைப்பை இழுத்துவிட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன. இது உண்மையில் பெரிய பொறி என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. இந்தப் பொறியில் கூட்டமைப்பு சிக்குவதன் மூலம் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளுக்கும் அரசாங்கத் தரப்பு பெரும்பான்மையின ஜனநாயகத்தின் மூலம் சவப்பெட்டிக்கான இறுதி ஆணியை அடிப்பதாகவே அமையும். பெரும்பான்மையின் ஜனநாயகம் தமிழ் மக்கள…
-
- 0 replies
- 601 views
-
-
தைப்பொங்கல் நினைவாகும் தமிழ்ஈழப் (பிரகடனப்) பொங்கல்கள்! இயக்கங்கள்முதல் இதழ்கள்வரை... சிலநினைவுகள் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நியூசீலாந்தில் இருந்து எஸ் எம் வரதராஜன்:- லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் பிரகடனம் செய்யப்பட்ட தமிழ் ஈழப் பிரகடனம் காற்றோடு காற்றாகி இந்தத் தைப் பொங்கலுடன் 34 வருடங்களாகிவிட்டன. 1982 இல் செய்யப்பட்ட இந்தப் பொங்கல் பற்றிப் பேசும்போது அமரர் கிருஷ்ணா வைகுந்த வாசனின் பெயர் என்றும் பேசப்படும்! ஏனெனில் 1978 இல் அவை ஐ நா சபையில் தாம் தமிழ் ஈழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி தமிழ் ஈழம் என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார். அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிர்ஷ்ணா வைகுந்த…
-
- 0 replies
- 581 views
-
-
பன்மொழி கலைஞர் செல்வி அனு சிவலிங்கம் - வ.ஐ.ச.ஜெயபாலன் * பன்மொழி கலைஞர் தோழியர் அனு சிவலிங்கம் வன்னியை சேர்ந்தவர். போர் சூழல்லால் சின்னவயசில் அவரது குடும்பம் கொழும்புக்கு புலம்பெயர்ந்தது. அங்குதான் தமிழ் சிங்களம் ஆங்கிலமென மும்மொழி புலமையும் பெற்றார், ஜனநாயக ஆர்வலரான பன்மொழிக் கவிஞர் அனு சிவலிங்கத்தின் தமிழ் சிங்கள புலமையும் சமூக அக்கறையும் மலையக மக்கள்மீதன கரிசனையும் எனக்கு அனுமீதான பெருமதிப்புக்குக் காரணமானது. வன்னி மண் வன்னி மற்றும் மன்னார் மக்களதும் வன்னி முஸ்லிம்களதும் குடியேறிய (1950பதுகளின்பின்) யாழ்ப்பாணதமிழரது வம்சாவழியினரதும் குடியேறிய மலையகத் தமிழரதும் பூமியாகும். எங்கள் குட்டித் தோழி அனு வன்னியை சேர்ந்தவர். எவ்வித சமரசங்களுமற்ற ஜனநாயக வாதியான…
-
- 0 replies
- 516 views
-
-
முப்பது வருடங்களாக இந்தியாவின் நயவஞ்சக செயல்களின் பலனை தமிழர் அனுபவித்தும் இன்னமும் பலருக்கு பட்டறிவு வரவில்லை போலும். எமது இன உரிமைக்கான தீப ஒளியை காண வேண்டுமாயின் முதலில் எமது இனத்தின் உண்மையான எதிரி நரகாசுரன் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். கடந்த காலத்தில் இந்திய நரகாசுரனின் நயவஞ்சகத்தை மறந்தவர்களுக்காக வரலாற்றில் இடம் பெற்ற சில முக்கிய சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதன் பின்பு உண்மையான நரகாசுரன் யார் என்பதை நீங்களே அடையாளம் கண்டு கொள்ளுங்கள். 1. 1987ம் ஆண்டு அமைதி படை என்ற பெயரில் இலங்கையினுள் நுழைந்த இந்திய இராணுவம் பிரபாகரனை கொல்வதற்கு அவரது இரகசிய இருப்பிடத்தை இலக்கு வைத்து கொலை ஆயுதங்களுடன் கொமாண்டோ படை அணியினரை யாழ் மருத்துவ பீட…
-
- 0 replies
- 359 views
-
-
2500 வருடங்களுக்கு அதிக கால வரலாற்றைக் கொண்ட காதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது ஆனி அல்லது ஆடி மாதம் இடம்பெறுவது வழக்கமாகும். ஆனால், இம்முறை வழக்கத்திற்கு மாறாக கதிர்காம உற்சவ வரலாற்றில் முதன் முறையாக ஒரு மாத கால தாமதத்துடன் கதிர்காம உற்சவத்தின் ஆரம்ப திகதி ஆகஸ் மாதம் 7ஆம் திகதியாக அறிவிக்கபப்பட்டுள்ளமை யாத்திரிகைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காம வருடாந்த உற்சவமானது, பலரது எதிர்பார்ப்புமிக்க ஒன்றாகும். காரணம் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்நாளுக்காக காத்திருப்பர். கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, போன்ற மாவட்டங்களிலிருந்து, சுமார் ஒருமாத காலத்திற்கு முன்னதாக காடுகளினுடாக பாத யா…
-
- 0 replies
- 464 views
-