நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
தமிழன்( Tamilan ) சமூகம் · 13,281 விருப்பங்கள் கருணாநிதி குடும்பத்து சொத்து மதிப்பு - மயக்கமே வருகிறது..! இதயம் பலகீனமாக உள்ளவர்கள் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தயவுசெய்து இதை படிக்கவேண்டாம்.. கீழ்கண்ட செய்திகள் ஜூனியர் விகடன் 10 ஆகஸ்ட் 2011 இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இ…
-
- 1 reply
- 3.1k views
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வா தொடர்ந்து தமிழக ஊடகங்கள் தமிழர்களின் பிரச்சனைகளை மூடிமறைத்தும், அவற்றைத் திசைதிருப்பியும் வருகின்றன. தமிழகத்தில் உள்ள திருடர்களின் ஊடகங்கள் சிபிஐக்குப் பயந்து இயங்குகின்றன. அதனைப் போன்று வடவர்களின் அடிவருடிகளின் ஊடகங்களும் இயங்குகின்றன. இவை தொடர்ந்து பாகிஸ்தான் அல்லது சீனாவைப் பற்றித் தான் அதிகம் பேசிக்கொண்டே இருக்கின்றன. இவை பாகிஸ்தான், சீனாவின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டப்படவேண்டும் என்று விவாதங்களை நடத்தி உரக்கக் குரல் எழுப்பி வருகின்றன. வடவர் அடிவருடிகளே, திருடர்களே தமிழர்களுக்கும் தமிழினத்திற்கும் எதிராக தினமும் அட்டூழியங்களை மேற்கொள்ளும் சக்திகளைப் பற்றி ஏனடா வாய் திறக்க மறுக்கிறீங்க? தமிழக மீனவர்களுக்கு தமிழக கடல் எல்லையில் சிங்கள அ…
-
- 1 reply
- 652 views
-
-
15-08-13 அன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலண்டனில் ஆற்றிய உரை.....
-
- 0 replies
- 323 views
-
-
மருதம் விவசாயம் இன் புகைப்படம் ஒன்றை Paramakudi Devendran பகிர்ந்துள்ளார். பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி (Second Green Revolution will root a negative consequences) கோ.நம்மாழ்வார் - இரண்டு பெரும் நிகழ்வுகள் இன்றைய உலகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. ஒன்று பூமி வெப்பம் அதிகரிப்பது, மற்றொன்று பட்டினிச் சாவுகள். இவை இயற்கைச் சீற்றத்தால் நிகழ்பவைகளா? இதனை அலசுகிறது இக்கட்டுரை. உலக சுகாதார அமைப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம் 2020ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் ஆண்டுதோறும் 3 இலட்சம் பேர் பலியாக காரணமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. இந்த கணிப்புக்கு முன்கூட்டியே 2000 மாவது ஆண்டு முதல் காலநில…
-
- 3 replies
- 572 views
-
-
http://www.perarivalan.com/ இது அநீதி முறுக்கிய தூக்குக்கயிற்றின் கீழே வெகுகாலமாய் நின்று கொண்டிருக்கும் பேரறிவாளனுக்கான இணையவெளி. ஏற்கெனவே ஒருமுறை நிச்சயித்திருந்த தண்டனைக்கான நாளை, நாம் எல்லோரும் தெருக்களில் இறங்கி நின்று, ஒட்டுமொத்தமாய்ப் போராடி வெற்றி கண்டோம். தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. இன்னும் ஒரு முறை எழுச்சியில் மரணதண்டனையை முற்றும் முழுதுமாய் இந்தியாவிலிருந்து நீக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை என் உடலின் உள்ளத்தின் ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. இது தான் நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு. இன்றைய நிலையில், சமூக ஊடகங்கள் தாம் நம் பக்கபலமாயும் பாதையாகவும் இருக்கமுடியும். பேரறிவாளனின் இணைய வெளியைப் பயன்படுத்தி நாம் எல்லோரும் ஒருவருடன் ஒருவர் கைகோர்க்க வேண்டு…
-
- 0 replies
- 323 views
-
-
கொழும்பு நகரில் இடம் பெறும் விபச்சார நடவடிக்கைகளில் சில காவற்துறை அதிகாரிகள் தொடர்புக் கொண்டுள்ளதாக இரண்டு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள், உரிமையாளர்கள் மற்றும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழிற்சங்க ஒன்றியம் என்பன முன்வைத்துள்ளன. நீண்ட நாட்களாக முச்சக்கர வண்டி சாரதிகளாக அல்லாதவர்கள் தமது தொழிலை முன் எடுப்பதன் காரணமாக தாம் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங் கொடுப்பதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், முச்சக்கர வண்டி தொழிற்துறையை கண்காணிப்பதற்கான நிறுவனம் ஒன்று அவசியம் எனவும் அவர் கோரிக்க…
-
- 1 reply
- 435 views
-
-
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி வைக்கப்பட்டிருந்த பரிஸ் கோபுரமொன்று தற்போது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகத் திறக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பரிஸ் மத்திய பகுதியில் (சத்தலே லே ஹாலுக்கு அருகில்) நகரில் 16ம் நூற்றாண்டில் 1500ம் ஆண்டுகளில் Tour Saint-Jacques என்ற இக்கோபுரம் கட்டப்பட்டது. எனினும் சில நாட்களிலேயே இக்கோபுரம் மூடு விழாவும் கண்டது. 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியின் காரணமாக இங்கிருந்த தேவாலயம் சேதமடைந்தபோதும், இக்கோபுரத்திற்கு சேதாரம் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்பட்டது. எனினும், ஈபிள் கோபுரத்திற்கு இணையாக கருதப்பட்ட இக்கோபுரம், 500 வருடங்களுக்குப் பிறகு, தற்போது புனரமைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது. கிட்டத…
-
- 0 replies
- 558 views
-
-
வீட்டின் செல்லப்பிராணிகளாக இருக்கும் நாய்கள், பூனைகளுக்கு அடுத்தபடியாக அதிகமாக விரும்பப்படுவது முயல்கள்தான் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளைப் போல அழகாக துள்ளி விளையாடும் முயல்கள் மனஅழுத்தத்தை குறைக்கும்என்கிறார்கள் ஆராய்ச்சியாளர். ஏற்கனவே வெள்ளை மற்றும் கருப்பு நிற முயல்குட்டிகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள நிலையில், தற்போது இருட்டில் அவை பச்சை நிறத்தில் ஒளிரும் தன்மை உடையவைகளாக மாற்றி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று ஒளிரும் தன்மையுடைய முயல்கள் பல நோய்களுக்கு மிக குறைந்த விலை மருந்தாக பயன்படும் எனவும் கருதப்படுவதுடன் இந்த சாதனையை துருக்கியில் உள்ள இஸ்தான்புல் ஹவாஸ் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் உயிரியல் விஞ்ஞானிகள் முயலை கொண்டு மேற்கொண்ட ஆராச…
-
- 1 reply
- 444 views
-
-
சென்னை: உலகஅளவில் கடந்த பத்து ஆண்டுகளில் 22 நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கள் நடந்துள்ளன. இவற்றில் 19 விபத்துக்கள் பெரிய அளவிலானவை. இந்த 22 விபத்துக்களில் பெரும்பாலானவை அமெரிக்காவைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகும் . அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யுஎஸ்எஸ் மின்னபோலிஸ்-செயின்ட் பால் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல், கடந்த 2006ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. பாறையில் சிக்கி மோதியது அந்தக் கப்பல் . பிளைமவுத் அருகே தமர் நதியில் போய்க் கொண்டிருந்தபோது இது விபத்தில் சிக்கியது. மனித் தவறே இதற்குக் காரணம் என்று சமீபத்தில் கூறப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த 22 விபத்துக்களில் 9 விபத்துக்கள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சந்தித்தவை ஆகும் . ரஷ்யாவைச் சேர்ந்த 5 நீர்மூழ்க…
-
- 2 replies
- 2.4k views
-
-
மும்பை கடற்படைத் தளத்தில் விபத்துக்குள்ளான ஐஎன்எஸ் சிந்துரக்சக் (INS Sindhurakshak) நீர்மூழ்கிக் கப்பல் 1997ம் ஆண்டு ரஷ்யாவில் கட்டப்பட்டதாகும். டீசல் என்ஜினால் இயங்கும், 283 அடி நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவின் மிகப் பிரபலமான போர் கப்பல்களை கட்டும் செவ்மாஸ்க் (Sevmask) தான் உருவாக்கியது . மணிக்கு 31 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கடியில் 300 மீட்டர் வரை மூழ்கும் திறன் கொண்டது. இந்த நீர்மூழ்கியில் 200 கி.மீ. வரை சென்று போர்க் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்ட கிளப் எஸ் (Klub-S) வகையிலான ஏவுகணைகளும், சாம் வகை ஏவுகணைகளும், நீரில் மூழ்கிச் செல்லும் டார்பிடோ ரக ஏவுகணைகளும் உண்டு இந்தியா உருவாக்கிய USHUS hydro-acoustic ரக சோனார் உதவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வாதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தும் படம் 'Madras Cafe'. இதனை எதிர்த்து குரல் கொடுப்பதற்கும், இதனைத் தடை செய்வதற்கும் தமிழகத்தில் முதுகெலும்புள்ள தமிழர்கள் இல்லையா? சிங்களப் பேரினவாதம் மனிதாபிமான நடவடிக்கை என்று தமிழின அழிப்பை நியாயப்படுத்தி இனப்படுகொலையினை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. சிங்கள அரசும், இந்திய அரசும் இணைந்து ஈழத்தில் நிகழ்த்தியது இனப்படுகொலையல்ல, அது மனிதாபிமான நடவடிக்கை என்பதனையே இப்படம் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறு இப்படம் தொடர்பான சில தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழினத்தை அழித்த சிங்கள அரக்கர்களும் சோனியா என்ற அரக்கியின் அரசும் இன்று தமிழின அழிப்பை நியாயப்படுத்தும் முயற்சியி…
-
- 1 reply
- 442 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அரச, இராணுவ பயங்கரவாதங்கள் காரணமாக தாயகத்தில் வாழ முடியாத நிலையில் புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று அங்கு பிரஜாவுரிமை பெற்றுத் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகள் தற்போது தமது பூர்வீக தாயகத்திற்கு திரும்பியிருக்கின்றனர். புலம்பெயர் தேசத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பருவகால விடுமுறையைப் பயனுள்ளதாக களிப்பதற்காகவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதேசங்களைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகள் தாயத்திற்கு வந்திருக்கின்றனர். பல வருடங்களாக காணாமல் இருந்த தமது ஊர் உறவுகளை நேரில் பார்த்து இவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். தாயகத்தில் கால் பதித்துள்ளமையால் இவர்கள் இரட்டிப்பு சந்தோசத்தில்…
-
- 1 reply
- 519 views
-
-
தமிழ் அரசியல் களத்தில் தற்போது தமிழ் தேசிய அரசியல் தேக்கநிலை காணப்படுகிறது. இந்த தேக்கநிலையை மாற்றி அமைப்பதற்கு தாயகத்தமிழ் மக்களும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் இணைந்து தமிழீழ அதிகாரசபை ஒன்றை உருவாக்க வேண்டும். இதன் ஊடாகவே தமிழீழ விடுதலை நோக்கிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என எத்தியோப்பியா மடவளப்பு பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் கலாநிதி கெனடி விஜயரத்தினம் தெரிவித்தார். சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்திருக்கும் கலாநிதி கெனடி விஜயரத்தினம் ஜி.ரி.வியின் செய்தி ஆசிரியர் இரா.துரைரத்தினத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனை தெரிவித்தார். குறிப்பு இது ஜி.ரி.விக்காக எடுக்கப்பட்ட பிரத்தியேக செவ்வியாகும். இதனை பயன்படுத்துவோர் ஜி.ரி.விக்காக எடுக்கப்பட்ட பிரத்தியேக ச…
-
- 1 reply
- 448 views
-
-
ஆங்கிலவழிக் கல்வியும் நீங்களும்… கடந்த திங்கட்கிழமை மாலை, இமெயில் தமிழர் சிவா அய்யாதுரையின் சொற்பொழிவை, அரங்கம் ஒன்றில் கேட்க நேர்ந்தது. ராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்ட பர்மா ரிட்டன் தந்தைக்கு, மும்பையில் பிறந்து, தனது ஏழாம் வயதில் குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர் சிவா அய்யாதுரை. “நான் தமிழும் இங்லிஷும் மிக்ஸ் பண்ணி பேசுறேன்” என்று மேடையேறியவர், கிட்டத்தட்ட 98 விழுகாடு ஆங்கிலத்தில்தான் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்த சொற்பொழிவு, 100 விழுக்காடு புரியும்படி எளிமையாக இருந்தது. எனக்கு ஆங்கிலப் புலமை இப்போதுவரை கைகூடவில்லை. அலுவல் நிமித்தமாக பல்வேறு ஆங்கிலக் கூட்டங்களுக்கு சென்றபோதும், மண்டை குழம்பியே வெளியேறியிருக்கிறேன். சிவா அய்யாத…
-
- 0 replies
- 439 views
-
-
புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழ்பவர்கள் அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை தாய் மொழியாக பயிற்றுவிக்க தவறின் எதிர்காலத்தில் அடையாளம் வேர் அற்ற ஒன்றாக மாறிவிடும் என எதியோப்பிய பல்லைக்கழக இணைப்பேராசிரியர் கெனடி விஜயரத்தினம் தெரிவித்தார். சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்த அவர் ஸ்ரீவிஷ்ணு துர்க்கா அம்மன் ஆலய மண்டபத்தில் நடந்த மக்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார். சுவிஸ் காரை அபிவிருத்தி சபை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. உலக மயமாக்கல் சூழலில் கூட ஒவ்வொரு தேச மக்களும் தமது பண்பாட்டு தனித்துவங்களை பேணுவது அவசியமாகும். இந்த பண்பாட்டு தனித்துவங்களை பேணுவதாக இருந்தால் தாய்மொழியை பேணுவது அவசியம் என அவர் தெரிவித்தார். http://www.thinakkathir.com/?p=51711#sthash.wesaAtGe…
-
- 2 replies
- 405 views
-
-
தமிழ் திரையுலகில் இன்று மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சத்யராஜ். இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு அவரது கால்ஷீட் டேட் இல்லை என்பதுதான் இன்றைய நிலவரம். சில நாட்களுக்கு முன் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் அன்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நண்பர் ஜேம்ஸ்சுடன் பேசிக்கொண்டிருந்த போது சத்யராஜ் சார் பற்றி அவர் சொன்ன தகவல்கள் வியப்பை ஏற்படுத்தின..? அதாவது ஷாருகான் நடிக்கும் இந்தி படத்தில் தமிழ் பேசும் நாயகியின் தந்தையாக நடிக்க பெரும் தொகையுடன் சத்யராஜை அணுகியிருக்கிறார்கள். அப்போது சத்யராஜ் போட்ட சில கண்டிஷன்கள்தான் அவர் மேல் இருந்த மரியாதையை மேலும் பல மடங்கு உயர்த்தியது. அதாவது ’ நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடத்தப்படக்கூடாது .. நீங்…
-
- 2 replies
- 694 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என உலகத் தமிழ் வழக்குரைஞர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. உலக தமிழ் வழக்குரைஞர் பேரவைக் கூட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது. ஈழத் தமிழர்கள் உரிமையை பாதுகாக்க பொது வாக்கெடுப்பு நடத்த, ஐ.நா. சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும். இலங்கை இனப் போரினால் இந்தியா வந்து நீண்ட காலமாக குடியிருப்பவர்களில், விரும்புவோருக்கு குடியுரிமை வழங்கவேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றும் செய்திட வேண்டும். மேலும் வழக்கு மொழியாக தமிழை அமல்ப…
-
- 0 replies
- 304 views
-
-
நான்காம் தமிழ்ச் சங்கம் அந்நியனுக்கெல்லாம் இங்கு மணிமண்டபம். உலகை ஆண்ட தமிழ் மன்னன் இராசராச சோழனுக்கு இல்லை மணிமண்டபம். ............................................................................................. ----------------------------------------------------------------------------- நான்காம் தமிழ்ச் சங்கம் இராசராச சோழனுக்கு மணிமண்டபம் கட்ட ஊர் பொது மக்களுடன் பேசி மணிமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வடிவமைப்பு வேலைகள் நடைபெறுகிறது மணிமண்டபம் கட்ட முழுச் செலவையும் நாம் ஏற்க்க முடியாது அதனால் தமிழர்கள் அனைவரும் மணிமண்டபம் கட்ட தங்களால் முடிந்த நிதி உதவி செய்யுமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.முகவரி.நான்காம் தமிழ்ச் சங்கம்.எண்.39.நவநீதம்மாள் …
-
- 3 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பிரதேசத்தில் தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிக்கும் நோக்கத்தில் திட்டமிட்ட வகையில் மின் தடை அமுல்படுத்தப்படுகின்ற விடயம் மின்சார சபையின் உள்ளக தகவல்கள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. சிறிலங்கா மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் ஊடாக இந்த தகவல் வெளிவந்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது பகல் வேளைகளிலும் இரவிலும் தொடர் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. பரீட்சைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக இருந்தே யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நேரங்களில் மின்ச…
-
- 1 reply
- 411 views
-
-
”மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கூட்டம் நடத்துறாங்க. ஆனா, சீமான் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்குத்தான் தடை, சில ஊர்களில் நுழையவும் தடை… இது ஏன்?” ”என் செயல்பாட்டை, பேச்சை, உணர்வை, கனவை எந்த சட்டதிட்டங்களாலும் தடுக்க முடியாது. ‘என் வளர்ச்சியைத் தடுத்து முடக்கணும்’னு திட்டம் போட்டா, அதிகபட்சம் பத்து வருஷம் என்னைக் கட்டுப்படுத்தி வெச்சிருப்பீங்களா? நான் வேற எதுவுமே பண்ணாம, பத்து வருஷம் படம் மட்டுமே எடுத்துட்டு இருக்கேன். அப்புறம் வேற யார் இருப்பா? நான்தான் இருப்பேன். இந்த அடக்குமுறைகள் எல்லாம் மேலும் மேலும் நம்மை வெறியேற்றி, இன்னும் வீரியமாகப் பாயவைப்பதற்கான வேலையே தவிர, வேறொன்றும் இல்லை!” ” ‘பிரபாகரன் இறந்துவிட்டார். அவரின் பெயரைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கிறா…
-
- 0 replies
- 525 views
-
-
கடந்த கால வரலாற்றை உற்று நோக்கினால் உலக நாடுகள் பல்வேறு கட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணி திரண்டதையும் பின்பு அணி மாறியதையும் கண்டோம். அனைத்துலக அரசியல் நோக்குக்கும் தேவைக்கும் ஏற்ப அதன் போக்கும் காலத்துக்குக் காலம் மாறுபட்டுச் செல்வதை அவதானிக்க முடிகிறது .” இவ்வாறு கடந்த வாரம் நியூசிலாந்து தமிழ் சங்கத்தின் ஆதரவில் நடைபெற்ற கறு ப்பு ஜூலை நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய அதன் தலைவர் வைத்திய கலாநிதி சிவ வசந்தன் தெரிவித்தார் . அவர் தொடந்து பேசுகையில் - "இன்று தென் ஆசிய வட்டகையில் முக்கிய இடம் வகிக்கும் இந்து மாக்கடல் என்றுமில்லாத அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகின் முக்கிய வணிகக் கப்பல் வழித்தடமாகவும் அதனூடாக உலகின் ஒரு முக்கிய பொருளாதார…
-
- 0 replies
- 351 views
-
-
அரியானா மாநிலத்தில் அரசு நிலத்தை தனது பெயரில் மாற்ற சோனியா மருமகன் ராபர்ட் வதோரா போலியான ஆவணங்கள் மற்றும சட்ட மீறல்களை செய்ததாக ஐ.ஏ.எஸ்.அதிகாரி அசோக் கேம்கா தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அரியானா மாநிலத்தில் காங். ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வர் பூபிந்தர்சிங்ஹூடா முதல்வராக இருந்து வருகிறார். குர்கான் அருகே ஷிக்கோபூர் கிராமத்தில் 3. 5 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானதாக இருந்தது. இந்த நிலம் முதன்முதலில் டி.எல்.எப்., என்ற நிறுவனத்திற்கு குறைந்த விலையில் விற்கப்பட்டது. அதாவது சுமார் 200 கோடி மதிப்புள்ள இந்த நிலம் வெறும் 7. 5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு அன்னா ஹசாரேயின் நெருங்கிய நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தகவலை…
-
- 4 replies
- 575 views
-
-
இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 220 மொழிகளை இழந்துவிட்டதாக வதோத்ராவில் இயங்கும் மொழி ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1960ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 1,100 மொழிகள் பேசப்பட்டு வந்தன. ஆனால், அவற்றில் சுமார் 220 மொழிகள் தற்போது வழக்கத்திலேயே இல்லாமல் மாயமாகிவிட்டது என்று எழுத்தாளரும், ஒருங்கிணைப்பாளருமான கணேஷ் தேவ் தெரிவித்துள்ளார். இதுவரை நாங்கள் செய்த ஆய்வில் சுமார் 780 மொழிகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதில் 100 மொழிகளை எங்களால் திரட்ட முடியாமல் கூட போயிருக்கலாம். எனவே அதையும் சேர்த்தால் 880. 1100 மொழிகளில் தற்போது 880 மொழிகள்தான் உள்ளன என்றால், மற்ற மொழிகள் மாயமாகிவிட்டன. இது கவலை தரும் நஷ்டம் என்று தெரிவித்துள்ளார்…
-
- 2 replies
- 519 views
-
-
2500 வருடங்களுக்கு அதிக கால வரலாற்றைக் கொண்ட காதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது ஆனி அல்லது ஆடி மாதம் இடம்பெறுவது வழக்கமாகும். ஆனால், இம்முறை வழக்கத்திற்கு மாறாக கதிர்காம உற்சவ வரலாற்றில் முதன் முறையாக ஒரு மாத கால தாமதத்துடன் கதிர்காம உற்சவத்தின் ஆரம்ப திகதி ஆகஸ் மாதம் 7ஆம் திகதியாக அறிவிக்கபப்பட்டுள்ளமை யாத்திரிகைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காம வருடாந்த உற்சவமானது, பலரது எதிர்பார்ப்புமிக்க ஒன்றாகும். காரணம் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்நாளுக்காக காத்திருப்பர். கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, போன்ற மாவட்டங்களிலிருந்து, சுமார் ஒருமாத காலத்திற்கு முன்னதாக காடுகளினுடாக பாத யா…
-
- 0 replies
- 464 views
-
-
219 ஆவது வாரமாக "மறக்க மாட்டோம் - மறக்கவும் விடமாட்டோம்" 219 ஆவது வாரமாக "மறக்க மாட்டோம் - மறக்கவும் விடமாட்டோம்" சிறி லங்கா குற்றமிழைத்த நாடு - குற்றவாளிகளுக்கு தண்டனை அழிப்பது தான் உலக சட்டத்தின் அடிப்படை- ஆனால் பூலோக அரசியலை- பூலோக அரசியல் நலன்களை தனக்கு சாதகமாக வைத்துகொண்டு சிறி லங்கா சிங்கள அரசு, அமெரிக்க, இந்திய, சீன என்று எல்லோருடனும் சதுரங்க அரசியல் விளையாடுகிறது. தான் செய்த குற்றங்களில் இருந்து தப்புகிறது சிங்கள நாடு. இந்த விளையாட்டில் பலி மக்கள், அதில் மிக முக்கியமானவர்கள் ஈழத் தமிழ் மக்கள். அத்துடன் தமிழ் பிரதேசமான வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரிக்க சேருவல பகுதியில் புது மாகாணம் ஒன்றை உருவாக்க இருக்கிறது இதே சிங்கள நாடு. ஐக்கிய நாடுகள் சபையின் மனி…
-
- 0 replies
- 309 views
-