நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
மறைக்கப்பட்ட வரலாறுகள் நேதாஜியை பிடித்துத் தருகிறோம் - காங்கிரஸ்.... இரண்டாம் உலகப்போரின் போது உலக வரைபடத்தில் தெரியாத சிறிய சிறிய நாடுகள் கூட கொள்கை ரீதியாக தங்கள் விரும்பிய பக்கம் சேர்ந்து ஒரு உக்கிரமான போர் மேடையில் தங்கள் வீரத்தை காட்டின.இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆங்கிலேயரை விரட்ட நினைத்தார் நேதாஜி. ஆனால் ஒரு மாபெரும் போர் நடந்த வரலாறு உடைய /அவ்வாறு சொல்லிக்கொள்ளும் பாரதம் கண்மூடி தனமாக ஆங்கிலேயருக்கு ஆதரவு என்று காந்தியின் பெயரால் அறிவித்தது. "லண்டன் மாநகரம் தாக்கப்பட்டால் அது நமக்கும் அவமானம்" என்றார் காந்தி."முன்பு நமது இந்திய நகரங்கள் ஆங்கிலேயரால் தாக்கப்பட்டதை விட லண்டன் தாக்கப்படுவது தான் வருத்தப்பட கூடிய செயலா? நேதாஜி கேட்டார். "ஹிட்லரின் சர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிழக்கு மாகாணத்தில் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அம்பாறை ஒன்று. மாவட்டத்தின் எல்லைப் பகுதி தமிழ் கிராமங்கள் விசேட அதிரடிப்படைகளினால் பல தடவைகள் தாக்கியழிக்கப்பட்டதுடன், இனப்படுகொலை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தனர். நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதற்காக முஸ்லீம் காடயர்கள் சிங்கள படைகளுடன் இணைந்து ஊர்காவல் படையினர் என்ற போர்வையில் தமிழர்களை அவர்களின் பூர்வீக காணிகளிலிருந்து விரட்டியடித்ததுடன், பலரை படுகொலை செய்தனர். அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க் கிராமங்கள் சிங்களம் மற்றும் முஸ்லீங்களால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் இன்றும் மீள்குடியேற்றப்படாமல் நில ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது. 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடு…
-
- 1 reply
- 541 views
-
-
“ஒரு இனத்தை அடையாளம் காட்டக்கூடியது மொழி தமிழைச் சிதைந்துவிடாமல் பேணிக்காப்பதும் வளர்ப்பதும் நமது கடமை” “அறிவின் அதியுயர்ந்த பண்பாகப் பிறப்பதுதான் எளிமை. தன்னலமும், தற்பெருமையும், அகன்ற நற்பண்பாக எளிமை தோன்றுகின்றது. இந்த எளிமை ஒருவரை அழகான மனிதராக ஆக்கிவிடுகின்றது.” எனத் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள், அறிவில் உயர்ந்தும் எளிமையாக வாழும் மனிதர்களைப் பற்றி மிக அழகாகக் குறிப்பிடுகின்றார். அண்மையில் பிரான்ஸ் வந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அறிவரசன் அவர்களைப் பார்த்தபோது தேசியத் தலைவரின் இந்த வாக்கியம் தான் நினைவில் தோன்றியது. புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பேராசிரியர் அறிவரசன் அவர்கள் அறிமுகம…
-
- 0 replies
- 606 views
-
-
ஈழத் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நிழல் யுத்தமாக, நில ஆக்கிரமிப்பு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒரு இனத்தின் உரிமைக்கான குரலை நசுக்கவேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் இருப்பை கேள்விக்குளாக்கவேண்டும் என்பதே ஆதிக்ககாரர்களின் சிந்தனை. அந்தச் சிந்தனையினையே சிறீலங்கா அரசாங்கம் இன்று செயற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது. வடக்கு மாகாணத்தில் இதற்காக தேர்வு செய்யப்பட்ட முதல் இலக்கு முல்லைத்தீவு மாவட்டம். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நிராயுதபாணிகளுடனான யுத்தத்தையே இன்று முல்லைத்தீவு களத்தில் சந்திக்கின்றது. அழுத்தம் கொடுக்காத அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகினவே தவிர அதற்கு அப்பால் எதனையும் சாதித்திராத நில…
-
- 0 replies
- 357 views
-
-
மத்திய மற்றும் மாகாண சபை அரசாங்களின் காணிச் சீர்திருத்தத் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் குடியிருப்புக் காணிகள் பறிபோகும் நிலையில் உள்ளதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தினால் ஒரு ஏக்கத் திட்டத்தின் கீழ் 50 வருடத்திற்கு மேல் குடியிருந்த காணிகள், சீர்த்திருத்தத் சட்டத்தின் கீழ் அபகரிக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு ஏக்கருக்கு மேல் ஒப்பக்காணிகள் வைத்திருந்தால் மேலதிகமானவற்றை அபகரிப்பதற்கு மத்திய மற்றும் மாகாணசபை சிங்கள் ஆட்சியாளர்கள் சட்ட வரையறையைப் பயன்படுத்தவுள்ளனர். இவற்றில் குறிப்பாக கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவ…
-
- 0 replies
- 295 views
-
-
இது ஒரு துப்பறியும் திரைப்படம் போலவே தொடர்கின்றது. இந்தக் கதையின் நாயகன் இறுதியில் வெற்றிபெறுவான். இது போலவே ஸ்நோவ்டென்னிடம் இருக்கும் ஆவணங்கள் அவருக்கு வெற்றியையே அளிக்கும். அமெரிக்காவின் கொடூர வேட்டையிலிருந்து தன்னைத் தப்புவித்துக் கொள்ளும் மர்ம ஆயுதமாகத் தனது தகவல்களைப் பயன்படுத்துவதன் மூலம் தன்னை மௌனமாக்க முயலும் அமெரிக்காவின் அதிகாரத்துவ மையத்தையே மௌனமாக்கி விடுகின்றார் என ஏற்கனவே ஸ்நோவ்டென்னைச் சந்தித்துப் பல விபரங்களை வெளிக்கொணர்ந்த கிளென் கிறீன்வால்ட் நிறுவனத்திலிருந்து ஐலீன் சலிவன் கூறியுள்ளார். அவரிடமிருக்கும் ஆவணங்களே அவருக்குரிய சிறந்த உயிர்க் காப்புறுதியாகும். உண்மையில் ஸ்நோவ்டென்னிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று அமெரிக்கா முழங்காலில் நின்று இறைவனைப் பி…
-
- 0 replies
- 298 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு 50 இலட்சம் ரூபாவை கொடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தலில் யாழ். மாவட்ட வேட்பாளர் பட்டியலில் பிரபல வர்த்தகரும் கனடா குடியுரிமை பெற்றவருமான காரைநகரை சேர்ந்த தம்பிராசா இடம்பிடித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு தகுதியான பலர் இருந்த போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கிய பங்கீட்டின் அடிப்படையில் தம்பி கொமினிக்கேசன் உரிமையாளராக இருக்கும் தம்பிராசாவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. இதற்காக ஆனந்தசங்கரிக்கு அவர் 50 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியதாகவும் தெரியவருகிறது. வர்த்தகரான தம்பிராசா கனடாவில் குடியேறி அங்கு குடியுரிமை பெற்றுக்கொண்டார். பின்னர் பாதுகாப்பு அமைச்…
-
- 4 replies
- 572 views
-
-
பிரித்தானியாவில் இருந்து சிறீலங்காவிற்கு உல்லாசப் பயணம் மேற்கொண்ட செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றிய குஹராம் ஷேக் (khurram Sheikh) என்ற பிரித்தானிய சுற்றுலாப் பயணி தங்காலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன், அவரது காதலியான ரஷ்யப் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். 2011ம் ஆண்டு நத்தார் தினத்தன்று இந்தக் கொடூரத்தை சிங்களப் பேரினவாதம் நடத்தியிருந்தது. இந்தக் கொடூரக் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் என தங்காலை பிரதேச சபையின் ஆளும் கட்சியின் தலைவர் உட்பட்ட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்தக் கொலை தொடர்பாக பெரிதாக அக்கறைப்படாத சிறீலங்கா அரசு, பிரித்தானியாவின் அழுத்தம் காரணமாகப் பின்னர் இதில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. என…
-
- 0 replies
- 341 views
-
-
சென்ற இதழ் கட்டுரையைப் படித்தவுடன் வழக்கறிஞர் விஜயகுமார் தொடர்புகொண்டு கட்டுரையில் அவசியம் குறிப்பிட்டிருக்க வேண்டிய செய்தி ஒன்றைச் சுட்டிக்காட்டினார். நீதியரசர் விக்னேஸ்வரனின் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நேர்க்காணலில், அவரிடம் கேட்கப்படும் ஒரு கேள்வியில், அந்தச் செய்தி இடம்பெற்றுள்ளது. 2009ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் - என்கிற உண்மையை, இவ்வளவு காலமாக தேசிய ஊடகங்கள் மூடிமறைத்து வந்தன. இங்கேயிருந்து ஐந்தாயிரம் ஆறாயிரம் மைலுக்கு அந்தப்புறம், பெயர் கூட வாயில் நுழையாத ஒரு நாட்டில், ஒரு பத்து பேரை அந்த நாட்டு அரசு சுட்டுக் கொன்றால்கூட, அய்யோ அய்யோ என்று அலறி, மனித உரிமைக்காக வரிந்துகட்டிக் கொண்டு தலையங்கம் எழுதுகிற 'மனிதாபிமான ப…
-
- 1 reply
- 507 views
-
-
கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்… = இரா .எட்வின் ========================================== உத்திரகண்ட் என்றாலே உதறுகிறது எல்லாம்.காணாமல் போனவர்கள் மற்றும் இறந்தவர்களைக்கணக்கிட்டால் ஐம்பதாயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள். நினைத்தாலே கண்களில் முட்டிக்கொண்டு வருகிறது. வயிறு பற்றி எரிகிறது. அதுகுறித்து ஆளாளுக்கு ஆயிரம் சொல்கிறார்கள். அது அவரவர் உரிமை.அதற்குள் சென்று விவாதிக்குமளவிற்கு நமக்கு அவகாசம் இல்லை. ஆனால்அதுகுறித்து வைக்கப் பட்டுள்ள மூன்று வகையான கருத்துக்களுக்கு நாம்வினையாற்ற வேண்டிய கடமை உள்ளது. 1) “இந்தப் பாழாப் போன கடவுள் தன்னோட பக்தர்களை இப்படியா கொன்றுகுவிப்பான்?” என்பது மாதிரியாக... 2) இப்படி ஒரு பேரிடர் வரப்போவதைக் கூட சொல்ல முடியாத வானிலைமுன்னறிவிப்பு ம…
-
- 0 replies
- 635 views
-
-
ராவணன் தமிழன் யப்பானில் அணுகுண்டு போட்டதில் தவறேதும் இல்லை!!!!!!! பலரின் தவறான திணிப்பே அமெரிக்கா உலகத்தின் ஏகாதி பதியம் என்பது, அதுவல்ல உண்மை, அதே தவறை பலபேர், செய்தவர்கள், செய்கிறார்கள், ஏன் இந்தியாவும் தெற்காசியாவின் கொடூரமான பயங்கரவாத அரசுதான், சோனியாவும் நவீன கிட்லர் பெண்மணிதான், . முதலாம் உலகப்போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடவில்லை, அனால் அதை வெல்வதற்கு அளப்பெரிய பங்காறியது, உலகம் காப்பாற்ற பட்டது, சாதிய இன வெறியர்களிடம் இருந்து, இரண்டாம் உலக போரில் அமரிக்கா பங்குகொள்ள திணிக்கப்பட்டது, அமரிக்கா இல்லாவிடில் உலகம் கிட்லரின் ஆளுகைக்குள் வந்திருக்கும், ஏன் இந்தியா கூட யப்பானிய வெறியர்களின் ஆளுகைக்குள் வந்திருக்க்கும் , தெரியாதா? கிட்லரின் ,ஆரி…
-
- 2 replies
- 698 views
-
-
Proud To Be Tamil தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்.... இந்த வாக்கியம் நம்மில் பலருக்கும் தெரியும், ஆராம்பத்தில் எதிரிகளால் இப்படி தவறாக மதிப்பிடப்பட்ட பலர் பின்னாட்களில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள். வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன் பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது. பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பத…
-
- 0 replies
- 467 views
-
-
-
- 8 replies
- 1.1k views
-
-
ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை "தீவிரவாதம்" "தீவிரவாதம்" என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே...! * கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா? * ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்…. உங்கள் ஜனநாயகமா?. * பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்…. உங்கள் ஜனநாயகமா? * மட்டக்களப்பில் வயத…
-
- 0 replies
- 585 views
-
-
குமாரபுரம் படுகொலைகள் தொடர்பான 4 சாட்சிகளை விசாரிக்க இருப்பதாகக் கூறி, சென்ற வாரம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது - இலங்கையின் அனுராதபுரம் உயர்நீதிமன்றம். குமாரபுரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் 1996ல் நடந்த படுகொலைகளுக்கு, 2013 வரை விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. குமாரபுரம் கிராமம் தான் என்றாலும், மூதூர் - கிளிவெட்டி பிரதான சாலை அதன் வழியாகச் செல்கிறது. அனேகமாக விவசாயிகள் அல்லது விவசாயத் தொழிலாளர்கள் வசிக்கும் கிராமம். பெரும்பாலும் ஓலைக் குடிசைகள், ஒரு சில கல் வீடுகள். சற்றுத் தொலைவில், கிளிவெட்டித் துறைமுகம். மிக அருகிலேயே அல்லைக்குளம். குளத்தைச் சுற்றிலும் அடர்த்தியான மரங்கள். அனைத்து இனமக்களும் சமாதானமாகவும் அமைதியாகவும் ந…
-
- 3 replies
- 447 views
-
-
கனடா, அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் சனிக்கிழமை யூலை 27ல் இடம்பெற்ற கறுப்பு ஜுலை நினைவெழுச்சி ஒன்றுகூடல் நிகழ்வின் பதிவுகள்: கனடியத் தமிழர் தேசிய அவையால் நடத்தப்பட்ட கருப்பு ஜூலை 2013 - 'நீதி வேண்டி மீண்டும் ஒரு வேள்வி' என்ற நினைவெழுச்சி நிகழ்வு சனிக்கிழமை யூலை 27 ஆம் நாள் 2013 மாலை 6 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square) முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டதுடன் கனடாவின் அரசியல் கட்சிகளான கன்செர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி, NDP கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து அரசியல் பிரமுகர்கள் நேரடியாக வருகை தந்தும் தமது செய்திகளை அனுப்பியும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். எழுச்சி உரைகள், உணர்வுப் பகிர்வுகள், கலை எழுச்சி …
-
- 0 replies
- 398 views
-
-
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாமா? August 1, 2013வகைகள்: அரசியல் | ஆசிரியர்: அரவிந்தன் நீலகண்டன் | மறுமொழிகள்: 0 அண்மையில் சென்னை வந்திருந்த போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் பணி புரியும் திரு.மகிழ்நன் ’அனைத்து சாதியினரும் அர்ச்சகராகுதல்’ குறித்து என் கருத்துகளைக் கூறுமாறு கேட்டிருந்தார். அவர் ஏறக்குறைய ஒரு மணி நேரம் உரையாடலின் போது அப்பிரச்சனையின் பல பரிமாணங்கள் குறித்து கருத்துகளைக் கேட்டார். அப்போது கூறப்பட்ட சில கருத்துகள் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘ரௌத்ரம் பழகு’ நிகழ்ச்சியில் ஜூலை 20 அன்று காட்டப்பட்டன. ஆகமங்களை முழுமையாக மறுக்க வேண்டும் என நான் கூறியதாக சில நண்பர்கள் கருதி என்னிடம் அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் கேட்டிருந்தனர். எனவே இந்த உரையாடலில் பேசப்ப…
-
- 1 reply
- 1.9k views
-
-
தம்பி சீமான், .வைகோ அண்ணா . நெடுமாறன் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் . சாதி அற்ற ஒரு தமிழகத்தை கட்டி எழுப்புங்கள் எந்த சாதி கட்சியுடனும் கூட்டணி வைக்காதீர்கள். கொள்கை வேறு அரசியல் தேர்தல் கூட்டு வேறு என்று இதுவரை செய்த தவறுகளை இனி தமிழன் செய்யது இருக்கவேண்டும் தூய தமிழகத்தை உருவாக்குங்கள் மதுக்கடைகளை இழுத்து மூடுங்கள் . நல்ல ஒழுக்கம் கொண்ட வள்ளுவன் சமுதாய நெறிகளை பலபடுத்துங்கள் . தமிழகம் தமிழனுக்கான பாரம்பரியங்களை கட்டிக்காத்து உலகத்தின் ஒட்டுமொத்த தமிழனின் சரணாளையமாக அவன் நிம்மதியான வாழ்விடம் என்பதை உறுதி படுத்துங்கள். தமிழகம் ஈழம் இவ்விரண்டு தாய் நிலமும் அதன் விரிந்த ஆகாயமும் கடலும் உலக தமிழன் தமிழிச்சி ஒவ்வொருவரின் பூர்விக உரிமை என்பதை யாரும் மறுபதற்கு இல்லை . இ…
-
- 1 reply
- 713 views
-
-
முக்கிய செய்திகள். வீரப்பன் என் மனதில் பதிந்த வீரர்களில் அவனுக்கு தனி இடம் உண்டு.. அந்த சிங்கத்தை நம்பவைத்து சாப்பாட்டில் விசம் வைத்து கொன்று.. இறந்த அவன் உடலை துப்பாக்கியால் சுட்டு தன் வீரத்தை காட்டியது தமிழக காவல்... அதற்கு சன்மானம் வேறு..... அவன் மீது ஒரு பாலியல் புகாரை இந்த காவல் துறை காட்ட முடியுமா?.... அவன் நினைத்திருந்தால் ராஜ்குமாருக்கு பதில் ஏதேனும் கவர்ச்சி நடிகையை கடத்தி சென்றிருக்க முடியும்.... பெண்களிடம் வீரத்தைகாட்ட அவன் புரச்சி நடிகன் இல்லை.. தமிழ்தாயின் வீரமகன்... அப்போது விடுத்த கோரிக்கையிலும் அவனுக்கு அவன் குடும்பத்திற்கென்று எதுவும் கேட்கவில்லை என்பது உலகறிந்த உண்மை.. அப்படி அவன் என்னதான் தப்பு செய்தான்... மலைவாழ் மக்களிடம…
-
- 0 replies
- 667 views
-
-
தமிழால் இணைவோம் நீர்.... கடவுளின் முதல் கொடை இந்த உலகிற்கு. 'நீரின்றி அமையாது இவ்வுலகு' என்று தெய்வப் புலவரால் சொல்லப் பட்ட ஒரு வஸ்து. உணவின்றி ஒரு மனிதனால் 7 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். ஆனால் நீரின்றி 14 மணி நேரத்திற்கு மேல் மனிதனால் தாக்கு பிடிக்க முடியாது. 75% உலகில் நீர் சூழப் பட்டு இருந்தாலும், குடிப்பதற்கான மென்நீர் 2.7% மட்டுமே பூமியில் இருக்கிறது. அதிலும் 2.5% நீர் ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிக் துருவங்களில் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கிறது. ஆக, நாம் வாழ்வது மீதம் உள்ள 0.2% குடிநீர் ஆதாரங்களை கொண்டுதான். மழைநீர் முன்னொரு காலத்தில் சுத்தமான குடிநீராகக் கருதப் பட்டு வந்தது. ஆனால் வானம் மாசுபடத் தொடங்கியதும், அதுவும் மாறிப் போனது. …
-
- 0 replies
- 426 views
-
-
நீதி கிடைக்கும்வரை ஓயாது தேடியவர்களின் வீரவரலாறு ஒன்று - ச.ச.முத்து Aug 1, 2013 முயற்சிகள் ஏதும் இன்றி முடங்கி மௌனமாக நீட்டிக்கிடக்கும் எந்த இனத்துக்கும் வலியவந்து நீதிதேவதை வரங்கள் ஏதும்தரப் போவதில்லை. உலகில் நடத்திமுடிக்கப்பட்ட இனப்படுகொலைகள் அனைத்துக்கும், இனச்சுத்திகரிப்புகள் அனைத்துக்கும் உரிய நீதி கிடைத்திருக்கா என்றால் இல்லை. இனப்படுகொலைகளின் வடுக்களை தாங்கியமக்கள் ஓய்வு இன்றி எழுந்து நீதிக்கான தேடலை ஆரம்பித்தால் நிச்சயம். அது கிடைத்தே தீரும். அது இன்றோ நாளையோ,நாளைமறுநாளோ திடீரென நிகழ்ந்து விடக்கூடிய ஒன்று அல்ல.அதற்கான நீண்ட பயணங்கள் ஓய்வு இன்றி நிகழ்த்தப்படும்போது அது பல கதவுகளை திறந்துவைக்கும். நீதியின் கதவு உட்பட.எல்லாவகையான கொடும்கொலைகளையும் செய்துமுடித்த…
-
- 0 replies
- 483 views
-
-
முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது இந்தச் சம்பவம் பற்றி தளபதி எழிலன் மனைவி ஆனந்தி 40 நிமிடம் தனது அனுபவங்களை விளக்குகிறார் — எல்லோரும் கேட்கவும். http://irruppu.com/?p=32948#more-32948
-
- 1 reply
- 796 views
-
-
Kabilan Sivapatham Mohamed Salah ------------------- இந்த உதைபந்தாட்ட வீரரின்பெயர் Mohamed Salah. எகிப்து (Egypt) நாட்டில் பிறந்த இவர் தற்பொழுது சுவிசில் முன்னனி கழகமான FC Basel அணியில் விளையாடி வருகிறார். கழகங்களிற்கான ஐரோப்பிய உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி தெரிவிற்கு FC Baselஅணி இஸ்ரேல் (Israel) நாட்டு கழகமான Maccabi Tel Avivஉடன் மோத வேண்டி வந்தது. முதலாவது ஆட்டம் சுவிசிலும் மற்ற ஆட்டம் இஸ்ரேலிலும் நடைபெறும். எகிப்தில் Mohamed Salah இஸ்ரேல் நாட்டில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ளகூடாது என அந்த நாட்டு ஊடகங்களும் மக்களும் அதிர்ப்தியை தெரிவித்தனர். Mohamed Salahவும் தனது உதைபந்தாட்ட வாழ்க்கை முடிந்தாலும் பரவாயில்லை தான் இஸ்ரேல் மண்ணை மிதிக்க மாடடேன் என்பதில் உறுத…
-
- 0 replies
- 436 views
-
-
ஐரோப்பாவிற்கு வருகை தந்திருக்கும் சுவாமி ஸ்ரீரவிசங்கர் குருஜி சுவிட்சர்லாந்து சென் மார்க்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அவர் தினக்கதிர் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் தமது கலாசாரத்தை அழியாது பேண வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவில் பெரிய மாற்றம் ஒன்று உருவாகினால் மட்டுமே ஈழத்தமிழர்களின் துன்பங்களுக்கு விடிவு கிடைக்கும் என்றும் ஸ்ரீரவிசங்கர் குருஜி தினக்கதிருக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். - See more at: http://www.thinakkathir.com/?p=51278#sthash.XozD5rEg.dpuf இந்த காணொளி தினக்கதிர் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது -
-
- 1 reply
- 429 views
-
-
மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..! காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...! அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட ்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார். இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை …
-
- 1 reply
- 1.8k views
-