நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
[size=4]ஜூலை 1983 சம்பவம் என்று இலங்கை அதைப் பதிவு செய்திருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு இது கறுப்பு யூலை (கருப்பு ஜீலை). திருநெல்வேலியில் எல்.டி.டி.ஈ. நிகழ்த்திய தாக்குதல் சம்பவத்துக்குப் பதிலடியாக நிகழ்த்திய வன்முறைச் செயல் என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. சிங்களர்களின் திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மிருகத்தனம் என்று மட்டுமே அதை அழைக்க முடியும்.[/size] [size=1] [size=4]அரசாங்கத்தின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு ஜீலை 24 அன்று ஆரம்பித்தார்கள். மொத்தம் ஏழு நாள்கள். தமிழன் என்று ஓர் இனமே இருக்கக் கூடாது என்னும் உக்கிரம் அவர்களிடம் தெரிந்தது. அந்த ஏழு நாள்களில் எத்தனை லிட்டர் பெட்ரோல் செலவானது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால், எத்தனை தமிழர்கள் இறந்துபோயிருப்பார்கள் எ…
-
- 0 replies
- 992 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை, கியூபா, சீனா போன்ற "கம்யூனிச நாடுகள்" எதிர்த்து வந்துள்ளன. தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப் படும் பொழுது, இந்த நாடுகள் எதிர்த்து வாக்களித்து வந்துள்ளன. கம்யூனிஸ்ட் நாடுகள் என்று அறியப்பட்டிருக்கும் சீனாவும் கியூபாவும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதற்கு என்ன காரணம்? உலகில் எங்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள், ஏன் இன்று ஆதிக்கச் சக்திகளுக்குத் துணை போகின்றன? இலங்கை அரசின் போர்க் குற்றங்களை கியூபா அறிந்திருக்கவில்லையா? குறிப்பாக, வலதுசாரித் தமிழ்தேசியவாதிகள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, "கம்யூனிச நாடுகள் தமிழ் மக்களின் விரோ…
-
- 0 replies
- 742 views
-
-
[size=3]பிரபாகரனின் தந்தை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். அவர் சிலோன் அரசாங்கத்தில் மாவட்ட காணி அதிகாரியாக ([/size]DISTRICT LAND OFFICER[size=3]) பல ஆண்டுகள் கடமையாற்றினார்.[/size] [size=3]சராசரி நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்திற்கே உரித்தான அனைத்து அம்சங்களும் அந்தக் குடும்பத்துக்கு இருந்தன. நிலையான வேலை, நிம்மதியான வாழ்க்கை ஆகியவற்றை வாழ்க்கையின் ஆதாரத் தேவையாகக் கருதிய வேலுப்பிள்ளை தனது குழந்தைகள் நல்ல கல்வி கற்பதன் வாயிலாக மட்டுமே அந்த நிலையை எட்ட முடியும் என்று வெகுவாக நம்பினார்.[/size] [size=3]பிரபாகரனின் அண்ணன் மனோகரன் அரசாங்க வேலையில் சேர்ந்தார். பிரபாகரனின் இரு தமக்கைகளும் அரசு ஊழியர்களை மணம் புரிந்தனர். (அதன் பிறகுதான் இனக் கலவரங…
-
- 1 reply
- 1.5k views
- 1 follower
-
-
[size=3][/size] [size=3][size=4]இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத் தண்டனைய எதிர்நோக்கியுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையைக் குறைக்கக் கோரும் கருணை மன தற்போதைய புதிய குடியரசுத்த தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 1991ம் ஆண்டு தமிழகத்தில் இடம்பெற்ற ஒரு குண்டுத்தாக்குதலில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லபப்பட்டார். அதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டன. அதில் முதன்மையான குற்றவாளிகள் என நளினியும் அவரது கணவர் முருகன் உள்ளிட்ட நால்வருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.[/size][/size] [size=3][s…
-
- 0 replies
- 450 views
-
-
இதனை வண்ணத் திரை பகுதியில் இணைக்க மனம் வரவில்லை. இன்னும் பிறக்காத என் அடுத்த தலைமுறைக்கு, வணக்கம். இன்னும் பிறக்காத உங்களுக்காக எண்பதுகளின் இறுதியில் பிறந்தவன் எழுதும் கடிதமிது. உங்களுக்கு என் பெயர் தேவையில்லை… என் அடையாளங்கள் தேவையில்லை… என்றாவது ஒரு நாள் நீங்கள் இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்…! இது வரலாற்று சிறப்புமிக்க கடிதமும் இல்லை… நானும் சிறப்புமிக்கவனும் இல்லை…! உலகமயமாக்கலின் இரு பக்க விளைவுகளையும் பார்த்து வாழ்பவன...ின் புலம்பல் கடிதம்…! எப்போதும் எழுத தோன்றுவது இல்லை…! ஏதாவது விஷயங்கள் நம்மை அழ்ந்து பாதித்தால் மட்டுமே எழுத தோன்றுகிறது…! இந்த கடிதமும் என்னை பாதித்த ஒரு விஷயத்தை பற்றி தான்…! நான் சொல்ல போகிற ஒருத்தியை பற…
-
- 5 replies
- 976 views
-
-
-
[size=5]சீமான் சூடான பேட்டி : சத்தியம் டிவி![/size] http://youtu.be/UxVoKZaHR3M
-
- 3 replies
- 1.2k views
-
-
சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள்... சிரித்தபடி நிற்கும் மகிந்த 'கட்-அவுட்'கள்... அ.மார்க்ஸ் பார்த்த ஈழ அனுபவங்கள்! ஈழத் தமிழர்கள் மத்தியில் பேரழிவுகளை ஏற்படுத்திய யுத்தம் முடிந்த இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாம் முறையாக அந்தப் பகுதிக்குச் சென்று பல தரப்பினரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இம்முறை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர்கள் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர். அந்தக் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரும், அந்தச் சங்கத்தின் பொருளாளராக இருந்து சென்ற ஆண்டு மறைந்தவருமான பேராசிரியர் சிவத்தம்பி குறித்து நினைவுப் பேருரை ஆற்றுவதற்காக நான் அழைக்கப்பட்டு இருந்தேன். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த ஜூலை 8 அன்று இந்நிகழ்வு நடைப…
-
- 14 replies
- 5.1k views
-
-
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் இருப்பது போன்று நாடாளுமன்றத்தின் இன்னொரு சபையாக மாநிலங்களவையை (செனற் சபை) அமைப்பதே இதுகாறும் அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக தான் கூறிவந்ததன் அர்த்தம் என்று கடந்த வாரம் இந்து நாளேட்டிற்கு வழங்கிய செவ்வியில் வெளிப்படையாகவே சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்வாண்டு நடைபெறும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் போன்று அடுத்த ஆண்டு செப்ரம்பர் மாதமளவில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் மகிந்தர் அறிவித்துள்ளார். எமது கடந்த பத்தியில் குறிப்பிட்டது போன்று வடக்குக் கிழக்கு மாகாண சபைகளுக்கு உயிரூட்டுவதைத் தவிர இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக வேறு எந்…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா - இந்திய அரசுகள் வெளிப்படையாக அறிக்கைகளை வெளியிட்டுவரும் நிலையில், ஏன் இன்னும், இந்நாடுகளின் அரசுகள் அந்த அமைப்பு தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்பாக காட்ட முற்படுகிறது? இந்தியாவின் இறைமைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினால் அச்சுறுத்தல் ஏற்படலாம். அதனால், மேலும் இரு ஆண்டுகளுக்கு தடை நீடிப்பதாக கடந்தவாரம் இந்திய அரசு அறிவித்துள்ளது. புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மைக்கு என்றுமே எதிராக செயற்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்குள் ராஜுவ் காந்தியின் கொலையை முன்னுதாரணப்படுத்தி காரணங்களை முன்வைக்கலாம். ஆனால், ராஜுவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மாத்திரம் சம்பந்தப்படவில்லை என்பதை பல ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக்…
-
- 0 replies
- 418 views
-
-
வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கு 15 பில்லியன் டொலர்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது இலங்கை அரசு. 1997 ஆம் ஆண்டிலிருந்து வாங்கிய மொத்த கடனே இத் தொகையாகும். இக்கால இடைவெளியில் சீனாவிடமிருந்து வாங்கிய 2.96 பில்லியன் டொலருக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகையோடு ,மொத்தமாக 4.9 பில்லியன்களை கொடுக்க வேண்டியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 4.64 பில்லியன் டொலர்கள் கடன். வாங்கிய கடனை சீனாவிற்கு மீளச்செலுத்தும் காலம் 12 வருடங்கள். ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு (ADB) 21 வருடங்கள். இவை தவிர அமெரிக்கா, இந்தியா அனைத்துலக நாணய நிதியம், உலக வங்கி, சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஜப்பானிய வங்கி (JBIC) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தும் இலங்கை கடன் பெற்றுள்ளது. கடன் பெற்ற நெஞ்சம் கலங…
-
- 1 reply
- 541 views
-
-
புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம் !: A.P.G சரத்சந்திர (சிங்கள மொழியிலிருந்து..) அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் க…
-
- 1 reply
- 600 views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றது. இந்நிலையில் தமிழர் தரப்பு வழக்கம் போல் இந்த தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், சர்வதேசம் மிக உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை நாங்கள் உணராமலிருக்க முடியாது. எனவே தேர்தலில் தமிழ் தலைமைகள் எடுக்கும் முடிவுகளும், நடந்து கொள்ளும் முறைகளுமே 60 வருட கால இனவிடுதலைப் போராட்டத்தின் அடுத்த பாகத்தை தீர்மானிக்கப்போகின்றது எனும் வகையில் உறங்கு நிலையிலுள்ள தமிழர்களை தட்டியெழுப்புவது வரலாற்றுக் கடமை என குறிப்பிடுவது மிகையாகாது. வடகிழக்கு தமிழர்களின் 60 வருடகால விடுதலைப் போராட்டம் குறித்தும், அந்த போராட்டத்தில் தமிழர்கள் செய்துள்ள அளப்பரிய தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள், உயிர்கொடைகள் குறித்தும் யாருக்கும் சொல்லித்தெரிய…
-
- 0 replies
- 489 views
-
-
தமிழ் மக்களின் கலாசாரத்தையும் பண்பாடு - பழக்க வழக்கங்களையும் மிக மோசமாகப் பின்னடைய வைப்பதற்கான யுத்தம் ஒன்று இன்று தமிழர் தாயகப் பகுதியில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த யுத்தம் நீண்ட காலத் திட்டமிடல்களுடன் செயற்படுத்தப்படுகின்றது. தமிழ் இளைஞர், யுவதிகளின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் அவர்களின் போராட்ட உணர்வையும் சுதந்திர வேட்கைகளையும் திசை திருப்புவதற்காகவே இந்த கலாசாரப் பிறழ்வு யுத்தம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே யாழ்ப்பாணக் குடாநாட்டின் கலாசாரம் சீரழிந்துவிட்டது என்றும் யாழ்ப்பாணம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது என்றும் உலகம் பூராகவும் கதை பரப்பப்படுகிறது. யாழ்ப்பாணம் ஏதோ குட்டிச்சுவர…
-
- 0 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்று அகதி அந்தஸ்து கோருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. உயிர் ஆபத்துமிக்க கடல் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியா செல்லும் தமிழ் மக்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. சிறீலங்காவின் இன அழிப்பில் இருந்து உயிர் தப்பிய தமிழர்களே இவ்வாறு ஆபத்துமிக்க பயணங்களை மேற்கொண்டு செல்கின்றார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால், இந்த மக்களையும் நாட்டுக்குள் இழுந்துவந்து அழித்துவிடும் சிந்தனையில் இருக்கின்றது சிறீலங்கா. அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்று அகதி அந்தஸ்து கோருபவர்களை கடலில் வைத்துத் திருப்பி அனுப்ப வேண்டும் என அவுஸ்திரேலியாவுக்கான சிறீலங்கா உயர் ஸ்தானிகர் திசேர சமரசிங்க க…
-
- 0 replies
- 436 views
-
-
வன்னிப் பெருநிலம் பதற்றமும் நம்பிக்கையின்மையும் ஸர்மிளா ஸெய்யித் மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கை வாழ் மக்களில் 90 சதவீதமானவர்கள் அறியாத முள்ளிவாய்க்கால் இன்று உலகப் பிரசித்தம் பெற்றதாகிவிட்டது. உலகத்தின் கவனத்தை ஈர்த்ததும் தமிழ் மக்களின் அரசியல், சமூக வாழ்விலிருந்து பிரித்து நோக்கவும் முடியாத இடத்தை முள்ளிவாய்க்கால் பெற்றுள்ளது. இலங்கைச் சிறுபான்மைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த பிரக்ஞைகளைப் பல்வேறு காலகட்டங்களாகப் (1983 - 2009) பிரித்து நோக்க முடிந்தபோதும், முக்கியமாகப் போருக்கு முன்னர் - போருக்குப் பின்னர் அல்லது ஜெனீவாப் பிரகடனத்திற்கு முன்னர் - ஜெனீவாப் பிரகடனத்திற்குப் பின்னர் என இருவேறு கண்…
-
- 0 replies
- 762 views
-
-
ஏதோ போர் முடிந்துவிட்டது தமிழர்கள் இனிமேல் அமைதியாக வாழ்வார்கள் என்று கொக்கரித்த சிங்கள அரசு, இன்று முன்னிலும் விட அடக்குமுறை ஆட்சியை நடத்துகிறது. விசாரணையின்றி தமிழ் மக்களை சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்வது தொடங்கி, கைதிகளை அடித்துக் கொல்லும் நிலைவரை சிங்கள அரச பயங்கரவாதிகள் செய்கிறார்கள். நூறு முள்ளிவாய்க்கால்களை சம்பந்தன் விரும்புகிறாரா என்று கேள்வி கேட்குமளவு தமிழர்களின் பரிதாப நிலையே இன்று நிலவுகிறது. சிங்கள அரச பயங்கரவாதத்தின் குகைக்குள் இருந்து கொண்டு மூச்சுவிடும் தமிழ் அரசியல்வாதிகளினால் வெளிப்படையான எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது. மறைமுகமாக சில இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளையே தமிழ் அரசியல்வாதிகள் (தமிழ்த் தேசிய முன்னணி அரசியல்வாதிகளுக்கு …
-
- 0 replies
- 379 views
-
-
இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் உரிமைகளை நிலைநிறுத்துவதற்காகப் பல ஆண்டுகளாக, பல பரிமாணங்களில் நகர்த்தப்பட்ட விடுதலைப் போராட்டம், முள்ளிவாய்க்காலின் பின்னர் பாரிய சவால்களை எதிர்கொண்டு நிற்கிறது. இச் சவால்களையும் சர்வதேச மாற்றங்களையும் வெற்றிகொண்டு, எமக்கான அரசியல் வெற்றிடத்தை கடந்து செல்வதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்கான கருத்தியல், கொள்கை, நடைமுறைச் சாத்தியம் போன்றனவற்றை மதிநுட்பமாக ஆராய்ந்து பொருத்தமான அணுகுமுறையுடன் செயற்படக்கூடிய வகையில் ஈழத்துச் சமூகத்திற்குள் ஏற்படும் தெளிவான சமுதாயப்புரட்சியே ஈழத்து அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான அடிப்படையாக இருக்கின்றது. கடந்த முப்பது வருடகால ஆயுதப்போராட்டம் தமிழ்மக்களின் பலத்தைக் கட்டமைத்து, பேரம் பேசுவதற்கான வ…
-
- 0 replies
- 486 views
-
-
விண்ணுய வீரத்தை விமான தளத்துள் சமராடிக் காட்டிய எம் கரும்புலி மறவரின் நினைவு சுமந்து கறுப்பு யூலையின் நாளுள் நனைவோம். எட்டி உதைக்கும் கால் தழுவி தொழுது கிடந்த பொழுதுகளாகவே ஆண்டுகள் பலவாக அப்படியே கிடந்தோம். காலிமுகத்திடலில் யூனியன்கொடி இறக்கி ஏற்றி வைத்த சிங்கக்கொடியின் நிழலே எந்நாளும் எமக்கானது என்ற நினைப்பிலேயே நீட்டித் தூங்கிக் கிடந்தனர் எம் முன்னோர். ஒரு தீவு ஒரே நாடு என்ற தேசியக்கனவில் திளைத்திருந்தோம். -சத்தியமாகவே லங்கா நமது நாடென்றே மனதார நினைத்திருந்தோம். ஆதிகாலைப் பொழுதொன்றில் யாழ்தேவி புகையிரத்தின் உள்ளிருந்து களனிப்பாலத்தின் முழு அழகையும், சேறு உழக்கும் எருமையின் காலடியில் விரிந்திருக்கும் செங்கமலப்பூவின் சிலிர்ப்பையும், விடிந்தும் விடியாத அந்தப் பொழுதில் தூ…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழ் மக்களின் அரசியல்த் தீர்வுத் திட்டத்தைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஒன்றான கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிவாகை சூடுவதற்காக கொழும்பு மகிந்த அரசாங்கம் பல்வேறு கைங்கரியங்களைக் கையாண்டுவருகின்றது. கிழக்கு மாகாணம் மூன்று மாவட்டங்களைக் கொண்ட பகுதி, ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்வதற்காக பல்வேறு தந்திரோபாயங்களை அது மேற்கொண்டுவருகின்றது. கடந்த கால மாகாண சபைத் தேர்தலில் ஆயுதக்குழுவுக்கு ஆதரவுகளை வழங்கிய இந்தியா இன்று, சர்வதேச நாடுகளை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை நாடியுள்ளது. இந்தியா இன்று இத் திட்டத்தைக் கொண்டுவரவில்லை. இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்தினுடாகவே தமிழர்களின் ஈழ சாம்ராஜ்யத்தை அழிக்க முற்பட்டது. இங்குத…
-
- 0 replies
- 507 views
-
-
[size=4]திமுக இன்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை :[/size] [size=4]’’இலங்கை விமானப்படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் உங்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறாரே?”[/size] [size=4]’’முதலமைச்சர் கொடநாட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கின்ற நேரத்திலும், என்னைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் எப்படித்தான் இருக்குமோ? ஜெயலலிதா தமிழகத்தின் முதல் அமைச்சர். இலங்கை விமானப் படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டியது மத்திய அரசு. எனவே தமிழக முதல் அமைச்சர் கேட்க வேண்டியது மத்திய அரசை! அதை விட்டுவிட்டு, “தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே தம்பட்டம்[/size] [size=4]அடித்துக்கொண்டு, தமிழினத்தை இலங்கை அரசு அழிக்கக் காரணமாக இருந…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழீழ உறவுகளே, 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள இனவெறி அரசு ஈழத் தமிழர்கள், எம் மீது நடாத்திக் கொண்டிருக்கும் திட்டமிட்ட இனப்படுகொலை பல்வேறு வழிகளில் உலகமே கண்டிராத உச்சக்கட்ட எல்லையை தாண்டி கங்கணம் கட்டி தொடர்கின்றது . இவ் வேளையில் தான் தமிழ் இளையோர் அமைப்பு நியூசிலாந்து ஆகிய நாம் ஓர் அவசர வேண்டுகோளோடு உங்கள் முன் வருகின்றோம். ஆண்டுகள் எத்தனையோ கடந்தாலும் சிங்கள அரசு எம்மை அழிப்பதில் முழு வீச்சோடு செயல்ப்படுகிறான் .அகிம்சை வழியில் போராடினோம். ஆயுத வழியில் போராடி தமிழீழ அரசை அமைத்தோம். ஆனாலும் பிராந்திய நலம் கொண்ட சில வல்லரசு நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசு எம் மீது போர்விதிமுறைகளை தாண்டிய யுத்தத்தை திணித்தார்கள். வீரம் கொண்ட எம…
-
- 1 reply
- 633 views
-
-
ஏதோ போர் முடிந்துவிட்டது தமிழர்கள் இனிமேல் அமைதியாக வாழ்வார்கள் என்று கொக்கரித்த சிங்கள அரசு, இன்று முன்னிலும் விட அடக்குமுறை ஆட்சியை நடத்துகிறது. விசாரணையின்றி தமிழ் மக்களை சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்வது தொடங்கி, கைதிகளை அடித்துக் கொல்லும் நிலைவரை சிங்கள அரச பயங்கரவாதிகள் செய்கிறார்கள். நூறு முள்ளிவாய்க்கால்களை சம்பந்தன் விரும்புகிறாரா என்று கேள்வி கேட்குமளவு தமிழர்களின் பரிதாப நிலையே இன்று நிலவுகிறது. சிங்கள அரச பயங்கரவாதத்தின் குகைக்குள் இருந்து கொண்டு மூச்சுவிடும் தமிழ் அரசியல்வாதிகளினால் வெளிப்படையான எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது. மறைமுகமாக சில இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளையே தமிழ் அரசியல்வாதிகள் (தமிழ்த் தேசிய முன்னணி அரசியல்வாதிகளுக்…
-
- 0 replies
- 550 views
-
-
பிரித்தானியக் குடியேற்றத்தின் பின்னான காலம் நெடுகிலும் தனது தேசிய அடையாளத்திற்காக மரணத்துள் வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்கள் கூட்டம் தான் இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர். 1956 இல் தான் முதல் படுகொலையைச் எதிர்கொண்டனர். 1952 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பிரதமரான டி,எஸ்.சேனாநாயக்கவினால் 7.2 மில்லியன் டொலர் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயத் திட்டத்தின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைப்பதற்கான பேரினவாத நோக்கமே அடிப்படையாக அமைந்தது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான முதல் பரீட்சாத்த முயற்சியாக இது கருதப்படலாம். பட்டிப்பளை ஆறு என்ற தமிழ்ப் பெயர் கல் ஓயா என்று சிங்களத்தில் மாற்றப்படிருந்தது. 150 குடும்பங்களைக் குடியேற்று…
-
- 0 replies
- 566 views
-
-
எமது தமிழ் இனம் தமது பூர்வீக நிலங்களில் தமது வரலாற்றை சிதைக்கின்ற வகையிலேஇனி வரலாறு எழுதுகின்ற போது தமிழன் பூர்வீகமாக வாழ்ந்த வரலாறு இல்லை என்று சொல்லக்கூடிய வகையிலே சதித்திட்டத்தோடு எங்களுடைய தமிழ் பேசும் இனத்தை அழிப்பதற்காண திட்டங்களை தீட்டி அதன் அடிப்படையிலே உருவாக்கப்பட்ட விடையம் தான் இந்த நில அபகரிப்பு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காணி அபகரிப்பு மற்றும் மீனவர்களுக்காண பாஸ் நடைமுறைகளுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த சாத்வீக போராட்டம் நேற்று சனிக்கிழமை காலை மன்னார் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம் பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போத…
-
- 0 replies
- 400 views
-