நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
ஊடகவியலாளர்களை, ஒரு நாட்டின் உளவாளிகள் என்ற எழுந்தமானமாக எதுவித ஆதாரமுமற்று குற்றம் சாட்டும் போக்கு ஒன்று வளர்ந்து வருவதைக் காண்கிறோம். இது ஆரோக்கியமான அரசியல் விவாதங்களை உருவாக்க உதவாது என்பதனை, பிரித்தானியாவில் இயங்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளைத் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி, அவதூறு அரசியலிற்குள் செல்ல விரும்பாததால் இதனை இத்தோடு விட்டு விடுகிறேன். ஒடுக்கப்படும் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமும் புரிந்துணர்வும் உருவாக வேண்டிய கால கட்டமிது. தமிழ், முஸ்லிம், சிவில் சமூகங்களும் முற்போக்கான சிங்கள சிவில் சமூகங்களும் இணைய வேண்டிய தேவையொன்று ஏற்படுகிறது. கட்சிகளைப் பொறுத்தவரை, முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி …
-
- 0 replies
- 491 views
-
-
வட அமெரிக்க தமிழ்சங்க 25வது ஆண்டு நிகழ்வுகள்.பிரமாண்டமான நிகழ்வுகள்.ஆசனப்பதிவு மற்றும் விபரங்களுக்கு இணைப்பை அழுத்தவும் http://www.fetna.org/# http://www.fetna.org/index.php/fetna-2012-tamil-vizha http://www.fetna.org/index.php/fetna-2012-tamil-vizha http://canadiantamilcongress.net/article.php?lan=eng&id=53 அனைத்து தமிழர்களும் ஒன்றாக கை கோர்போம்!
-
- 3 replies
- 850 views
-
-
சர்வதேசத்தினை ஒன்றிணைத்து, பயங்கரவாதம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளை அழித்ததன் ஊடாக, தமிழினத்தையும் அவர்களிடம் இருந்த ஒரே பலத்தையும் அழித்துவிட்ட சிங்கள தேசம், இப்போது புதிய வடிவில் தமிழர்கள் மீதான தனது இன ஒடுக்குமுறையைத் தொடர்ந்து வருகின்றது. ஒரு இனத்தை அழிப்பதாயின் அந்த இனத்தின் மொழியையும், கலாச்சாரத்தையும் அழித்தாலே போதும். நாளடைவில் அந்த இனம் தானாகவே அழிந்துபோய்விடும் என்பது இனங்களுக்கான பொதுவிதி. அதேபோன்றுதான் ‘நிலத்தை இழந்தான் தன் இனத்தை இழந்தான்’ என்பதும். தமிழர்களின் மொழியையும், கலாச்சாரத்தையும் சீரழித்துவரும் சிங்கள தேசம், இன்னொருபுறம் நில அபகரிப்பிலும் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளது. பலஸ்தீனர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கும் அதனை நிரந்தர இஸ்ரேல் தேசம்…
-
- 0 replies
- 383 views
-
-
தமிழர் தாயக பூமியான வடக்குப் பிரதேசத்தை அடிமைகள் வாழும் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கே இந்தக் கொடுங்கோல் அரசு இராணுவத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது எனக் குற்றம் சுமத்தியுள்ள புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமாபகு கருணாரட்ன, தமிழர்களின் பொறுமையை இந்தப் பேரினவாத அரசு சோதிக்குமானால் விளைவுகள் விபரீதமாகும் எனவும் எச்சரித்துள்ளார். மயான பூமியையும் ஆக்கிரமித்து, அங்கு பௌத்த கொடியை நிலைநாட்டி சிங்கள தேசம் என்ற இனவாத மந்திரத்தை ஓதி நாட்டை சிங்களமயமாக்குவதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளது. தங்களின் உரிமைகளைக் கோரிப் பேராடிய தமிழர்களைக் கொன்று குவித்த இந்த அரசு, தமிழினத்தின் தனித்துவ சின்னங்களையும் இன்று அழித்து வருகின்றது…
-
- 1 reply
- 516 views
-
-
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்களும், பிரபல இந்திய நடிகர் ஷாருக் கான் மீது கொழும்பில் வெடிகுண்டு வீசியவர்களும், இலங்கை வந்த அமெரிக்க-பிரித்தானிய-பிரான்சிய அமைச்சர்களுக்கு எதிராக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களும், இன்று தமிழகத்தில் இலங்கை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களை விமர்சிப்பது நல்ல வேடிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சர்களுக்கு எதிராக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இலங்கை அமைச்சர்களுக்கு, இந்திய-தமிழக அரசுகள் ப…
-
- 0 replies
- 407 views
-
-
உலகில் அடிமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பல இனங்களை வரலாற்றில் நாம் பார்த்திருக்கின்றோம், இன்றும் நினைவில் வைத்திருக்கின்றோம். இவற்றில் பல தமது இருப்புக்கான அல்லது சுயத்திற்கான போராட்டத்தில் வெற்றி பெற்று உலகத்தின் முகத்தில் ஆச்சரியக் குறியை நிறுத்திய சம்பவங்களையும் வரலாற்றிலிருந்து நாம் அறிந்திருக்கின்றோம். இதிலிருந்து நாம் ஒரு உண்மையினை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதாவது ஆயுதங்களை மட்டுமே நம்பிய அல்லது விசுவாசித்த எந்தவொரு போராட்டமும் நிலைபெறவில்லை. அவை ஈற்றில் அழிந்துபோனது. அல்லது அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டது. இதனையே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைமையும் நன்கு புரிந்து கொண்டு, விடுதலைப் போராட்டம் உலகத்தின் கவனத்தை திசை திருப்பியிருந்தபோது, பேச்சுவார்த்தை என அ…
-
- 0 replies
- 520 views
-
-
நாடு முழுவதும் சிங்களவர்களுக்கு சொந்தமானது’ என்று கடந்த வாரம் பி.பி.சி ஊடாக மகிந்தரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச விடுத்த அறிவித்தல், இதுவரை காலமும் ‘இலங்கையர்’ என்ற வெற்றுக் கோசத்தை தாங்கிப்பிடித்து வந்த பல தரப்பினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சலசலப்பிற்கு ஆளாகிய தரப்பினரில் சிங்களத்திற்கு பரிவட்டம் கட்டும் தமிழ் ஒட்டுக்குழுக்கள் மட்டுமன்றி ‘இணக்க அரசியலின்’ பெயரில் சிங்களத்துடன் நீண்ட காலமாக ஒட்டி உறவாடும் முஸ்லிம் கட்சிகளும், மலையகத் தமிழ்க் கட்சிகளும் உள்ளடங்குகின்றன. வாளேந்திய சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்து தனது அரசியல் ‘சாணக்கியத்தை’ வெளிப்படுத்திய சம்பந்தரும் இதில் உள்ளடங்குகின்றார். ஆனால் இவ்வாறான அறிவித்தல்களை சிங்களவர்கள் வெளியிடுவது இது முதற்தட…
-
- 0 replies
- 554 views
-
-
பிரித்தானியாவில் போர்க்குற்றவாளி மகிந்தவின் பிரசன்னத்திற்கு எதிர்ப்பலைகள் ஓங்கியுள்ள நிலையில், சர்வதேசத்தின் பார்வை பிரித்தானியாவை நோக்கித் தற்போது திரும்பியுள்ள நிலையில் தற்போது இந்த சாதகமான சூழலில் ஒவ்வொரு தமிழ் மகனின் பங்களிப்பும் இன்றியமையாததாக உள்ளது. இந்த நேரத்தில் தாயகத்தில் சிங்களத்தின் அத்து மீறல்கள் மேலும் மேலும் உச்சமடைந்து கொண்டிருக்கின்றது. ஒரு போர்க்குற்றவாளியை பிரித்தானியாவின் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு அழைத்திருக்கும் நிலையில், லண்டன் பி.பி.சி தமிழோசை சேவைக்கு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய வழங்கிய செய்தியில், இலங்கையின் வடபகுதி தமிழர்களுக்கு உரித்தானதல்ல எனவும் யார்வேண்டுமானாலும் அங்கு காணி வாங்கலாம் எதுவும் செய்யலா…
-
- 0 replies
- 381 views
-
-
நெதர்லாந்தின் தலைநகரான ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பொன்று தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு போர்க்குற்ற நீதிமன்றம் 50 வருடகால சிறைத் தண்டனையை விதித்துள்ளது. உலக வரலாற்றில் ஒரு நாட்டின் முன்னாள் அதிபர் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை. இத்தனைக்கும் லைபீரிய ஜனாதிபதி நேரடியாகப் போரில் ஈடுபட்டவரோ அல்லது போரில் ஈடுபட்டவர்களுக்கு வழிகாட்டியாகவோ, தலைமை தாங்குபவராகவோ இருந்தவரும் அல்ல. அயல்நாடான சியராலியோனில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட ஆயுததாரிகளுக்கு தனது சுய இலாபங்களுக்காக ஆயுதங்களை வழங்கி உதவியதுதான் இவர் மீதான ப…
-
- 1 reply
- 524 views
-
-
பிரித்தானிய மகாராணியாரின் வைர விழாவிற்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக, லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களினால் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மான்சன் ஹவுஸில் பொதுநலவாய நாடுகளின் பொருண்மியப் பேரவையில் அவர் நிகழ்த்தவிருந்த உரை, கடும் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது. சிங்கக் கொடியோடு வாகனத்தில் பவனி வர முடியாதவாறு பல முற்றுகைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதியின் கொடும்பாவியோடு இலங்கை அரசியல் யாப்பும், நடு வீதியில் வைத்து எரிக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த விடுதியும், வந்திறங்கிய ஹீத்ரூ விமான நிலையமும், உரை நிகழ்த்தவிருந்த மாநாட்டு மண்டபமும், பல்லாயிரக்கணக்கான பல்லின மக்களால் சூழப்பட்டதால் மஹிந்த ராஜபக்ஷவின் பயணம் ப…
-
- 0 replies
- 515 views
-
-
வலிகாமம் யாழ்ப்பாணத்தில் தொன்மையான பாரம்பரிய வரலாறு கொண்ட பிராந்தியம் என்பதை அங்கு கிடைத்து வரும் தொல்லியல் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. சிகிரியா குகையோவியத்தில் உள்ள கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம் ஒன்று வலிகாமத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே இருந்த உறவு பற்றிக் கூறுகிறது. 12 ஆம் நூற்றாண்டில் வலிகாமத்தில் உள்ள துறைமுகம் சோழரின் கட்டுப்பாட்டில் இருந்ததை தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. 13 ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் அரசமைத்த கலிங்கமாகனின் முக்கிய படைத்துறைகளில் ஒன்று வலிகாமத்தில் இருந்ததாக சூளவம்சம் கூறுகிறது. அக்காலத்தில் முக்கிய குடியேற்றங்கள் நிகழ்ந்த இடங்களாக வலிகாமத்தில் உள்ள மயிலிட்டி, தெல்லிப்பளை, இணுவில், தொல்புரம் ஆகிய இ…
-
- 0 replies
- 418 views
-
-
சிறீலங்காவில் 2009 ஆண்டுக்கு முன்னர் எந்தொரு மூலைமுடுக்கிலும், யாரோ செய்யும் கொலைகளை இலகுவாக விடுதலைப் புலிகள்தான் செய்துள்ளார்கள் அக்கொலைக்கு அவர்களே பொறுப்பென தொடர்ந்து குற்றஞ்சாட்டிய சிங்கள அரசாங்கங்கள், இன்று வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்களப் படைகள் குவிக்கப்பட்டு முழுப் பாதுகாப்பையும் தனது கையில் வைத்துள்ள நிலையில், தமிழர்கள் பால்வேறுபாடின்றி மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்யப்படுகின்றார்கள். முற்றுமுழுதாக சிறீலங்கா படைகளின் கண்காணிப்பிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் கொலைகள் சாதாரண முறையில் இடம்பெறுகிறன. படைகள் மற்றும் படைத்துணைக்குழுக்கள் ஆகியவற்றைத் தவிர வேறெந்தத் தரப்பினரிடமும் ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலையில், ஆய…
-
- 0 replies
- 504 views
-
-
மு.கருணாநிதியும் அ.ராசாவும் அண்ணன் தம்பியா..? அட நம்பவே முடியவில்லையே - ஈழதேசம்..! நேற்று தா.பாண்டியனுக்கு ஒரு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார் மு.கருணாநிதி.ஈழத் தமிழர்களின் கல்லறைக்கு மலர் கொத்துக்களை சமர்ப்பிக்கிறார் என்று கூறிய தா.பாண்டியனுக்கு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. யுத்தம் முடிவுக்கு வரும் நிலையில் சோனியா அம்மையார் மற்றும் மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜியுடன் பேசி ஒரு நான்கு நாள் யுத்த நிறுத்ததிற்கு பாடுபட்டது தி.மு.கழகம் என்று செப்பினார். அதாவது இலங்கையின் நான்காம் கட்ட யுத்தத்தில் நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட தி.மு.கழகம் பாடுபட்டது என்கிறார். அப்போ மூன்றாம் கட்ட ஈழப் போரில் ஒரு ஐந்தாண்டு காலம்…
-
- 0 replies
- 722 views
-
-
ப.சிதம்பரம் பதவி விலக வேண்டுமா..? வேண்டாமா..? அல்லது இரண்டுமா..? ஈழதேசம் செய்தி..! இந்திய அரசை கோமாளிக் கூட்டம் ஆட்சி செய்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்றே அணைத்து நிகழ்வுகளுமே கைகொட்டிச் சிரிக்கும் அளவிற்கு நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் காங்கிரஸ் பெருச்சாளிகள் அனைவரும் பப்பூனாக மாறிவிட்டார்கள். ஊழலே நடக்கவில்லை என்பது, ஊழல் நடைபெற்றது ஆனால் ஸீரோ லாஸ் என்பது. வழக்குப் போட்டு,பலமான ஆதாரங்களை சமர்ப்பித்தவுடன் வேறு வழியே இல்லாமல் நீதிபதிகள் ஆமாம் ஊழல் நடைபெற்று உள்ளன என்றவுடன் பேருக்கு கைது செய்வது. கைது சம்பவங்கள் நடைபெற்றவுடன் ஊழலுக்கு எதிராக மிகத் தைரியமாக நடவடிக்கை எடுக்கும் கட்சி எங்கள் கட்சி தான் என்று பீற்றிக் கொள்வது. ஆளும் கட்சியான காங்கிரஸ் கூட்ட…
-
- 0 replies
- 617 views
-
-
பெட்ரோல் விலை உயர்வும் - தி.மு.க.வின் அயோக்கியத்தனமும் - ஈழதேசம் செய்தி..! ஒரே நாளில் ரூபாய் 7.50 என்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு விலையை உயர்த்தி உள்ளது சோனியா அரசு. யாரும் ஏதுவும் கேட்க மாட்டார்கள் என்ற தையிரியம். அப்படியே கேட்டாலும் ஏதாவது ஒரு பதிலை அல்லது அறிக்கையை வெளியிட்டால் சரியாயிற்று என்ற ஒரு ஆணவம். திரு.சீமான் அவர்கள் சரியாக சொல்லி விட்டார். நடுத்தர மக்கள் மீது செலுத்தப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட பொருளாதார அராஜகம் என்று. பெட்ரோல் விலை உயர்வை, மத்தியில் கூட்டணி அரசில் உள்ள தி.மு.க.தட்டிக் கேட்க வில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் கூறி விட்டன. பிருந்தா கரத் கோவை பொதுக் கூட்டத்தில் தி.மு.க. கட்சிக்கு தெரியாமல் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த …
-
- 0 replies
- 464 views
-
-
சம்பந்தர்.. பிரிக்கப்படாத ஒன்றிணைந்த சிறீலங்காவுக்குள்... சம உரிமை கோருகிறாராம். அதற்காக அவர் அர்ப்பணிப்போடு செயற்பட தயாராக இருக்கிறாராம். மக்களை அதை நோக்கி அவர் நகர்த்தி வருவாராம். ஆனால் சிறீலங்கா சனாதிபதி.. அதற்கும் தயார் இல்லையாம். சிறீலங்காவின் இறையாண்மையில்.. தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் எல்லோருக்கும் சம பங்களிப்புக்கான வாய்ப்பு இருக்க வேண்டுமாம். சிங்களவர்களோடு மட்டும் அது ஒட்டி இருக்கக் கூடாதாம்..! தமிழர்களுக்கு என்று மட்டும் தான் இறையாண்மை கேட்கவில்லையாம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் இடம்பெறுவதில் பிரச்சனை இல்லையாம். ஆனால் அது வெறுமனவே காலத்தை கடத்தும், தீர்வை எட்டாமல் தப்பிக்கும் செயலாக அமைகிறது எனக் கருதின் தான் அதற்கு Goodbye சொல்லவும் தயங்கமா…
-
- 9 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 809 views
-
-
இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜூலை 1, 2002-இல் உருவாக்கப்பட்டதே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம். இந்நீதிமன்றம் நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது.121 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன. ரஷ்யா, சீனா, இந்தியா, சிறிலங்கா போன்ற நாடுகள் உறுப்பினர்களாக சேரவில்லை. இருந்த போதிலும் இந்நாடுகள் செய்யும் குற்றங்களுக்கு உறுப்பு நாடுகளின் குடிமக்களாகவோ, உறுப்பு நாடுகளில் குறித்த நபர் குற்றங்களை செய்திருந்தாலோ அல்லது ஐ.நாவின் பாதுகாப்புச் சபையோ குற்றத் தாக்கலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன் வைக்கலாம். இந்நீதிமன்றம் ஐ.நாவுடன் இணைந்து செயற்பாடுகளை செய்தாலும், இது ஐ.நாவின் சட்ட வரைமுறைகள…
-
- 0 replies
- 588 views
-
-
அவர்களுக்கு தெரியும், அவர் அந்த பாதையால் அழைத்து வரப்பட மாட்டார் என்று. ஆனாலும் அந்த லண்டன் கீத்ரோ 4வது விமானநிலையத்தின் பயணிகள் வெளியேறும் பாதையில் அவர்கள் தமிழீழதேசிய கொடியை உயர்த்திபடி நின்றார்கள். இனப்படுகொலை குற்றவாளி மகிந்த என்று சத்தமிட்டபடியே நின்றிருந்தார்கள். அவர்களுக்கு தெரியும் அவர்களின் உறவுகளை கொன்று குவித்து இனப்படுகொலை வெறியாட்டமாடிய அந்த நரபலிமனிதனை அவர்களின் முன்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக பிரித்தானிய காவல்துறை அழைத்து கொண்டு வெளியேறாது என்று தெரியும். அப்படி இருந்தும் அவர்கள் அந்த வாசலில் தேசியகொடிகளை ஏந்தியபடியே திரண்டு நின்றிருந்தார்கள். அவர்களுக்கு நன்கு தெரியும். அந்த சிங்களதேசதலைவனை சுற்றி சர்வதேச ராஜதந்திரிகளுக்கான சலுகைகளும், இறையாண்ம…
-
- 0 replies
- 432 views
-
-
இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் மறைமுகமாக சிங்களப் பேரினவாதத்தால் எஞ்சியுள்ள தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுமைகளின் உச்சமாக இளம் சமூகத்தினரின் போக்கு மாற்றப்பட்டுள்ளமையைக் காணலாம். மிக மிக இளவயதினரே இன்று கலாசார சீரழிவுகளின் உச்சத்திற்கு சென்றுள்ளமையைக் காணக் கூடியதாக உள்ளது. அன்றாடம் நாம் பார்க்கும் ஊடகங்களின் செய்திகளில் தமிழர் தாயகப் பகுதியில் நடந்த கலாச்சார சீரழிவின் குறைந்தது இரண்டு செய்தியாவது காணப்படுகிறது. எமது சமூகம் எங்கே செல்கின்றது. பெற்றோரே தவறுசெய்யும் போது பிள்ளைகளை யார் கவனிப்பது என்ற நிலைக்கே எமது சமூகம் வித்திட்டுச் செல்கின்றது. யாழ்குடா உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் ஒரு சினிமாக் கலாசாரமே பின்பற்றப்படுகின்றது. ஆட்கடத்தல்கள், அடாவ…
-
- 3 replies
- 915 views
-
-
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசினை பதவி விலகக் கோரி கடந்த ஓராண்டுக்கு மேலாக மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. எதிர்ப்பாளர்களை இராணுவம் மூலம் அதிபர் ஆசாத் ஒடுக்கி வந்தநிலையில் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நாள்தோறும் கொல்லப்படும் அப்பாவிப் பொது மக்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்து ஐ.நா. வெளியிட்டு வந்த அறிக்கை, ஐ.நா. பொதுச் சபையில் சிரியாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் தடைகளை விதிப்பதற்கும் வழிவகுத்தன. இறுதியில் ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அனான் ஊடாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, அதனைக் கண்காணிப்பதற்கு ஐ.நா. படையினரையும் அனுப்பிவைத்தது. ஆனாலும், போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் இன்னமும் த…
-
- 0 replies
- 547 views
-
-
ஊடகவியலாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்டு கடந்த 31 ஆம் திகதியோடு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. கொலையாளிகள் யாரென்பது வழமை போல் கண்டறியப் படவில்லை. சாதாரண நிகழ்வாகிப் போன இப்படுகொலை வரலாறு முடிவின்றித் தொடர்கிறது. நடந்தவற்றிற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அபிவிருத்தி ஊடாக எல்லாவற்றையும் தீர்த்து விடலாமென சர்வதேசத்தை சமாளிக்க முற்படுகின்றார்கள். மாநாட்டு அரங்குகளில் தீவிர கொள்கைவாதிகள் போல் காட்டிக் கொள்பவர்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்களைத் தண்டிக்க சர்வதேசம் தயாராகி வருவதாக ஆறுதல் வார்த்தைகளை அள்ளி வீசுகின்றார்கள். எமது அபிலாஷை எதுவாக இருந்தாலும் தமது நலன்களை பாதிக்கும் எந்தவொரு அரசியல் தீர்வினையும் இலங்கை விவகாரத்தில் தலையிடும் வல்லரசாளர்கள் விரும்பமாட்டார்கள் என்கிற யத…
-
- 0 replies
- 474 views
-
-
தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு மிக மோசமாக நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட வடக்கு, கிழக்கு எங்கும் இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தட்டிக் கேட்பதற்கு யாருமில்லையென்ற துணிவோடு சிங்களப் பேரினவாதம் நாளுக்கு நாள் இந்த நில அபகரிப்பை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதிலும் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்ட வகையில் காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றது. பல வருடங்களிற்கு முன்னர் புலம்பெயர்ந்து சென்று சர்வதேச நாடுகளில் வசிக்கின்ற பலரின் காணிகளைச் சிறீலங்கா அரசு ஏற்கனவே அபகரித்துள்ளது. தமிழர்களின் இந்தக் காணிகள் சுவிகரிக்கப்பட்டு நிரந்தர படைமுகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அத…
-
- 0 replies
- 533 views
-
-
அறவழியில் முகிழ்த்து, ஆயுத எதிர்ப்பியக்கமாகப் பரிணமித்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம், நீர்த்துப் போகும் நிலையை நோக்கிச் செல்கின்றதோ என்று எண்ணத் தோன்றும் வகையிலான நிகழ்வுகள் இன்று தமிழீழத் தாயகத்திலும், புகலிட தேசங்களிலும் அரங்கேறி வருகின்றன. முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் உருவகம் பெற்ற ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற மாயமானிலிருந்தே இந்த தேக்க நிலை உருவெடுத்தது என்ற மெய்யுண்மையை நாம் புறந்தள்ளிவிட முடியாதவாறு தமிழீழ தேசிய அரசியற் களத்தில் இன்று கடுகதியில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் அமைகின்றன. அதீத கற்பனைகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற இந்த மாயமான் ஈழத்தமிழினத்தின் அரசியல் பிரக்ஞையை மழுங்கடிக்கும் பாதையில் செல்வ…
-
- 0 replies
- 571 views
-
-
முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதி உட்பட தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் பலவற்றிலும் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றுள்ளது. குறிப்பாக யாழ் பல்கலைக் கழகத்தில் சிறீலங்கா இராணுவத்தினரதும் புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களினதும் பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நிகழ்ந்தேறியுள்ளது. ஆயினும் பல மாணவர்கள் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர். ஏற்கனவே, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரும் பதாகைகள், சுவரொட்டிகள் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் சிறீலங்கா புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்டிருந்தமை தொடர்பாக த…
-
- 0 replies
- 569 views
-