நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவரது சகோதரர் மனோகரன் பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ஆம் திகதி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மனோகரன் தந்தி டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை இராணுவம் அறிவித்தது. பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ஆம் திகதி நடத்த உள்ளோம். பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாளிலேயே வீரவணக்க நிகழ்வு நடைபெறுகி…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் ஐக்கியப்படும் போதெல்லாம் சிங்களதேச அரசியல் பரபரப்படைய தொடங்கிவிடும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் தமிழ் சிவில் சமூகம் ஒன்றுகூடி முடிவு செய்திருக்கிறது. தமிழ் பொது வேட்பாளர் என்ற கோரிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுத்தொடங்கிய நிலையில் சிங்கள தேசத்தின் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அச்சமடைய தொடங்கி விட்டனர். அதனால்தான் மேற்குலக ராஜதந்திரி ஒருவர் அவசரமாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற தமிழர்களின் நிலைப்பாடு சிங்கள தேசத்தை மட்டுமல்ல சர்வதேச அரசியலிலும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும், இலங்கைத் தீவில் தமிழ் மக்களுடைய வ…
-
-
- 1 reply
- 484 views
-
-
யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் – மட்டு நகரான் May 3, 2024 தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கிழக்கில் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கவேண்டுமானால் போராட்டமே அதற்கான வழி என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுவரும் நிலையில் அங்கு தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ் தேசிய அரசியலில் தமிழர்கள் கொண்டுள்ள பற்று அவர்களை போராட்ட நிலைக்கு கொண்டுசென்று தமது இருப்பினை பாதுகாப்பதற்கு உந்துத…
-
- 0 replies
- 217 views
-
-
இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் – அகிலன் April 28, 2024 மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் உலகை அதிரவைத்துக் கொண்டிருந்த பின்னணியில்தான் ஈரான் அதிபா் கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தாா். அவரது இந்த விஜயம் இறுதிவரையில் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. போா் ஒன்றில் யாராலும் வெல்லமுடியாத நாடு எனக் கருதப்படும் இஸ்ரேல் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியதன் மூலம், சா்வதேசத்தின் கவனம் இப்ராஹிம் ரைசி மீது திரும்பியிருந்தது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் முதலாவது எதிரியாக அவா் மாறியிருந்தாா். இதனால், அவரது ஒவ்வொரு நகா்வும் அவதானிக்கப்படுகிறது. போா் பதற்ற நிலை தீவிரமடைந்திருந்த நிலையில்தான் அவா் இலங்கை வருவார…
-
- 0 replies
- 435 views
-
-
இலங்கைத் தீவு ஒரு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இன்றைய சூழலில் தமிழ் மக்களின் அரசியல் என்பது தீர்க்கமான எந்த முடிவுகளையும் எட்டாத திரிசங்கு நிலையில் தொங்குகிறது. கடந்த ஒரு நூற்றாண்டு கால ஜனநாயக அரசியலில் சிங்கள தலைவர்களினால் தொடர்ந்து ஏமாற்றப்பட்ட தமிழ் தலைவர்களின் வரிசையில் இன்றைய தமிழ் தலைவர்களும் தம்மை இணைத்துக் கொள்ள முண்டியடிப்பதாகத் தோன்றுகிறது. சிங்களத் தலைவர்கள் திருந்தி விட்டார்கள், இப்போது உண்மையை உணர்ந்து விட்டார்கள், கடந்த காலத் தலைவர்கள்தான் ஏமாற்றி விட்டார்கள், அவர்கள் தவறு இழைத்து விட்டார்கள், அவற்றையெல்லாம் மறந்து புதிய இலங்கையை உருவாக்குவோம், தமிழர்களும் சிங்களவர்களும் கலந்து மனம்விட்டு பேசினால் பிரச்சினை தீர்ந்துவிடும், சிங்களவர்களும் தமிழ…
-
- 0 replies
- 204 views
-
-
"The House of Representatives voted overwhelmingly to legalize same-sex marriage. The bill now goes to Thailand’s Senate. This would make Thailand the first country or region in Southeast Asia to pass such a law and the third in Asia, after Taiwan and Nepal. Mar 27 / 28, 2024 [CBC News, The new york times, The diplomat ::Asia, : AL JAZEERA .. etc ]" "ஒருபால் திருமணம்" / பகுதி 01 [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன் விமர்சியுங்கள், அத்துடன்…
-
- 4 replies
- 800 views
-
-
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!) April 22, 2024 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் உலாவரும் அனேகமான ஊடகங்கள் அவை அச்சு ஊடகங்களாயினும் சரி மின்னூடகங்களாயினும் சரி அவற்றில் கட்டுரைகள் எழுதும் அரசியல் ஆய்வாளர்-பத்தி எழுத்தாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தும் அநேகம் பேர் (சிலவேளை ஆசிரிய தலையங்கங்களில் கூட) முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்ற 2009 ஆம் ஆண்டு வரை இலங்கைத் தமிழர்களுடைய அரசியலில் எல்லாமே சரியாக நடந்து வந்தது போலவும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் இலங்கைத் தமிழர் தரப்பு அரசியல் குழம்பிப்போய்விட்டது போலவுமே கருத்துக்களைத் தொடர்ச்சியாக ம…
-
-
- 15 replies
- 1.5k views
- 1 follower
-
-
தோ்தல் களநிலையில் ஜே.வி.பி. ஏற்படுத்தப் போகும் அதிா்வுகள் – யதீந்திரா April 23, 2024 ஜனாதிபதித் தோ்தலை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருக்கும் நிலையில், அரசியலில் புதிய கூட்டணிகள், கட்சி தாவல்கள் ஆரம்பமாகியுள்ளது. அதேவேளையில், ஜே.வி.பி. இம்முறை கணிசமான தாக்கத்தை தோ்தல் களத்தில் கொடுக்கலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகின்றது. இவை குறித்து பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா வழங்கிய நோ்காணல். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலில் இம்முறை ஜே.வி.பி. அதிகளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகின்றது. பிரதான வேட்பாளா்கள் எவரும் 50 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை இது ஏற்படுத்திவிடலாம் எனக் கருதப்படுகின்றது. இது குறித்து உங்கள…
-
- 0 replies
- 383 views
-
-
மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு சவாலாக அமைந்த அன்னை பூபதி – வல்வை ந.அனந்தராஜ் April 21, 2024 இந்திய அரசின் அடாவடித் தனங்களுக்கு எதிராக இரண்டு சாதாரண அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீரை மட்டுமே அருந்தி, 31 நாட்கள் ஒரு துண்டு உணவு கூட அருந்தாது நோன்பிருந்து, சாவடைந்த அன்னை பூபதியின் நினைவுநாளான இன்றைய நாள் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்“ என்று உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகின்றது. மட்டக்களப்பு கிரானில், 1932 இல் பிறந்த கணபதிப்பிள்ளை பூபதியம்மா, இந்திய இராணுவம் தமிழீழ தாயகத்தில் நிலை கொண்டிருந்த காலப் பகுதியில், மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராகத் தீரமுடன் இயங்கி வந்ததால், மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் அ…
-
- 0 replies
- 178 views
-
-
வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை. எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” - இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடி…
-
- 0 replies
- 120 views
-
-
18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
"இலங்கையில் சைவ கோவில்கள் அழிக்கப்படுவதற்கு / தடைசெய்யப்படுவதற்கு மூல காரணம் என்ன?" உண்மையான புத்த போதனையை பின்பற்றுபவனுக்கு [பவுத்தனுக்கு] சாதி இல்லை; கடவுள் இல்லை. புத்தம் என்பதன் பொருளே அறிவு (புத்தி) என்பதுதான். புத்தர் அன்பினை வலியுறுத்தியவர். சாதிகளுக்கு எதிரானவர். ஒரு புத்த பிக்குவின் போதனையால் போர்களே வாழ்க்கையாய் இருந்த அசோகன் இனி போர் புரியமாட்டேன் எனச் சபதம் ஏற்று புத்த சமயம் [பவுத்தம்] தழுவினான். இதனால் புத்தரின் கொள்கையை உலகம் வியந்து வரவேற்றது புத்தருக்குப் பெருமை சேர்த்தது. அன்புதான் உலக ஜோதி, அன்பு தான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி என்று மக்களுக்குப் போதித்து வந்தவர் சித்தார்த்தன் எனும் பெ…
-
- 0 replies
- 328 views
-
-
"ஒவ்வொரு நாளும் அநேகமாக இந்தியாவில் இருந்து வெளிவரும் எதாவது ஒன்று அல்லது பல நாளிதழ்களில் பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகள் அல்லது வழக்குகளைக் காண்கிறோம் அது ஏன் ?" பாரத பூமி புண்ணிய பூமி. அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி. இங்கேதான் ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம் ஆனால் அதே நேரத்தில் சமஸ்கிரத புராணங்களையும் நம்புகிறோம் போற்றுகிறோம். இந்த புராணங்கள் கடவுள்களின் கற்பழிப்பை நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்தியாவில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும்? இதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். அது மட்டும் அல்ல 'அர்த்த சாஸ்திரம்' (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்" என்கிறது. விஷ்ணுவிற்கு து…
-
- 0 replies
- 189 views
-
-
பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024 ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன…
-
- 0 replies
- 196 views
-
-
12 APR, 2024 | 09:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நவீன பாதுகாப்பு தளவாடங்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன், இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை முழுமையாக வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே மேற்கண்டவாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை இந்தப் பெண் குறித்து நான் நேற்றுவரை அறிந்திருக்கவில்லை. இப்படியொருவர் இருப்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நேற்று இத்தாலியில் இருந்து எனது நெருங்கிய உறவினர் ஒருவர் பேசும்போது, "அண்ணா, சுஜிக்கு விழுந்த அடி பாத்தனீங்களோ? அவளின்ர வாய்க்கு நல்லா வேண்டிக் கட்டியிருக்கிறாள்" என்று கூறவும், யார் சுஜி என்று கேட்டேன். "உங்களுக்குத் தெரியாதே? அவளின்ர வீடியோக்களைக் காது குடுத்துக் கேக்க முடியாது. அவ்வளவும் தூஷணம். நான் இப்படி தூஷணங்களை வாழ்நாளில கேட்டிருக்க மாட்டன், அதுவும் ஒரு தமிழ்ப் பெண் பேசுவாளென்டு கனவிலையும் நினைக்கையில்லை. அனுப்பிவிடுறன…
-
-
- 128 replies
- 8.3k views
-
-
Published By: RAJEEBAN 06 APR, 2024 | 04:45 PM இலங்கை அதன் கடன்களை மீள செலுத்துவதை 2028ம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த இறுதிபேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுப்பதற்காக ஜப்பான் உட்பட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது. கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டன, அடுத்த சில வாரங்களில் முழுமையான அறிவிப்பு வெளியாகும் என இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயங்களிற்கான ஆலோசகர் சாகலரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை கடன்களை…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 1 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 ஏப்ரல் 2024 கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரசும் தி.மு.கவும் தாரை வார்த்திருப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், தி.மு.கவும் காங்கிரசும் இதனை மறுக்கின்றன. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? இந்தியா - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான போது கருணாநிதி என்ன செய்தார்? இனி மீட்க முடியுமா? கச்சத்தீவு தொடர்பாக இந்தியா - இலங்கை இருநாடுகளிடையே என்ன நடக்கிறது? கச்சத்தீவை மீட்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது குறித்து இலங்கை அமைச்சர் அளித்த பதில் என…
-
- 3 replies
- 848 views
- 1 follower
-
-
[TamilNet, Sunday, 04 February 2024, 15:40 GMT] இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் இன அழிப்புப் போரொன்றை ஓர் அரசு நடாத்தினால் அதற்கான பொறுப்புக்கூறலை சர்வதேச நீதிமன்றில் இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான 1948 ஆம் ஆண்டுச் சட்டத்தின் (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) ஊடாக அவ்வரசு எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை சியோனிச இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கைச் சர்வதேச நீதிமன்று நம்பகமான நீதிவரம்புக்குட்படும் (prima facie jurisdiction) குற்றச்சாட்டாக ஏற்றுக்கொண்டமை கனதியாக நிறுவியுள்ளது. இதுவரை காலமும் தமது நலன்களுக்கேற்ப அமெரிக்காவும் அதன் அணிவகுப்பும் சர்வதேசச் சட்டங்களையும் நிறுவனங்களையும் ‘விதிகளின் பாற்பட்ட சர்வதேச ஒழுங…
-
-
- 1 reply
- 292 views
-
-
மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெக…
-
- 1 reply
- 1.2k views
-
-
ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் – அரசியல் ஆய்வாளா் யதீந்திரா March 8, 2024 இலங்கையில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான நகா்வுகளைப் பாா்க்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகாரப் பகிா்வு தொடா்பில் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ராஜபக்ஷக்கள் குழம்பிப்போயுள்ளாா்கள். இந்த நிலையில், இன்றைய தாயகக் களத்தில் அரசியலில் என்ன நடைபெறுகின்றது என்பதை ஆராய்கின்றாா் அரசியல் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான யதீந்திரா! கேள்வி – பொலிஸ் அதிகாரத்தைத் தவிா்துவிட்டு 13 ஆவது திருத்தத்தின் மூலமாக அதிகாரப் பரவலாக்கல் தொடா்பாக சிறுபான்மையினக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை ஒ…
-
- 0 replies
- 189 views
-
-
அதானியூடாக இலங்கைக்குள் அமெரிக்கா. மகிந்த வழியில் நெத்தன்யாகு. சீரடையுமா சீனப்பொருளாதாரம்? வேல்தர்மா நன்றி - யூரூப்
-
- 0 replies
- 347 views
-
-
பட மூலாதாரம்,DR. S. JAISHANKAR | X 11 பிப்ரவரி 2024 மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். ஐந்து நாட்கள் விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் உள்ளிட்ட மூவர் இணைந்துகொண்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இந்தியா சென்றுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அநுர குமார திஸாநாயக்க சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்…
-
- 3 replies
- 361 views
- 1 follower
-
-
பிளக்கும் ஆப்புக்களாக செயற்படும் சகுனிகள் முருகாநந்தன் தவம் 74 வருட வரலாற்றை, பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி இன்று சந்தி சிரிக்கும் நிலைமைக்கு வந்துள்ளது. இந்தக் கட்சியில் இருந்து கொண்டு ஏனைய கட்சிகளைப் பிரித்தவர்கள், தாமே தாய்க்கட்சி என்று மார்தட்டியவர்களே இன்று இலங்கை தமிழரசுக் கட்சியை பிளக்கும் ஆப்புக்களாக தம்மை உருமாற்றிக் கொண்டு சதிகள், சூழ்ச்சிகளில் சகுனித்தனமாக செயற்பட்டு வருகின்றனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த ஜனவரி 21ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் நடத்தப்பட்டு அதில் சிவஞானம் ஸ்ரீதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே தலைவர் பதவிக் கனவுடனும் அனைத்து புலமைகளைக…
-
- 1 reply
- 424 views
-
-
பெப்ரவரி 3 ஆம் திகதி, இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) 7வது ஆண்டை நினைவுகூரும் வகையில், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) “நெருக்கடியை சமநிலைப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமை எதிர் இலங்கையில் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு” என்ற நிகழ்வு கடந்த 23 ஜனவரி 2024 அன்று கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொது அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், சிவில் மற்றும் RTI ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இலங்கை பத்திரகை ஸ்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. குமார் லோபேஸ் தனது ஆரம்பக் கருத்துக்களில், தகவல் அறியும் உரிமையின் முக்கியத்துவத்தையும் சட்டத்தை நிலையாக செயல்படுத்துவதில் உள்ள சவால்களையும் வலியுறுத்தினார். தகவல் அறியும் உரிமைச் சட்ட…
-
- 0 replies
- 199 views
-