நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
ஜனாதிபதி வேட்பாளராக வெளியேறியபோது என்னிடம் 1 ரூபா காசு கூட இருக்கவில்லை பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க எழுதிய "நான் கண்ட ஜனவரி 08" நூல் வெளியீட்டு விழாவில் உங்களுடன் இணைந்துகொள்ளக் கிடைத்தமைபற்றி மகிழ்ச்சியடைகிறேன். ஜனவரி 08ஆம் திகதியை அவர் பார்த்த விதத்தினை மலித் எழுதியுள்ளார். இங்குள்ள நீங்கள் ஜனவரி 08ஆம் திகதியை ஒவ்வொரு கோணத்தில் பார்த்திருப்பீர்கள். சில தினங்களுக்கு முன்னர் இந்த நூல் எனக்கு கிடைக்கப்பெற்றது. பின்னர் நான் அடிக்கடி நூலின் உள்ளடக்கத்தை வாசித்தேன். எமது நாட்டில் அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் உள்ளனர். அவர்களுள் ஜனவரி 08ஆம் த…
-
- 0 replies
- 445 views
-
-
கோட்பாட்டு ரீதியில் முரண்படும் தளபதிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் உருவாக்கம் அல்லது வடக்கில் இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கான சாத்தியம் தொடர்பாக, இலங்கை இராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இரண்டு மூத்த அதிகாரிகளின் கருத்துக்கள் அண்மையில் வெளியாகியிருக்கின்றன. ஒருவர், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன; இலங்கை இராணுவத்தின் அதிசிறப்பு படைப்பிரிவு எனக் கருதப்படும், 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். இறுதிக்கட்டப் போரில் அந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கி, இராணுவத்தின் பல்வேறு பதவிகளை வகித்து, கடந்த செப்டெம்பர் ஐந்தாம் திகதி தான் ஓய்வு பெற்றார். “நந்திக்கடலுக்கான பாதை” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் 780 பக்…
-
- 0 replies
- 327 views
-
-
செப்டெம்பர் 16 -மொஹமட பாதுஷா இலங்கை முஸ்லிம் சமூகம், 16 வருடங்களுக்கு முன்னர் இது போன்றதொரு நாளில் தமது கனவை இழந்துபோனது. தென்கிழக்கே ஒரு கிராமத்தில் உதித்த, ஆயிரம் விளக்குகளை விட பிரகாசமான ஓர் ஆதவன், மத்திய மலைநாட்டின் ஊரகந்த மலைத்தொடரில் அஸ்தமனமாகிப் போனது. அமெரிக்காவில் செப்டெம்பர் 11 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் இரட்டைக் கோபுரங்கள் நொருங்கி விழுந்ததைப் போல, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மரணச் செய்தி கேட்டு, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் நொருங்கிச் சுக்குநூறாகிப் போயினர். அன்று நொருங்கி விழுந்த சமூகம்தான் இன்று வரை சரியாக எழுந்திருக்கவேயில்லை. 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம்…
-
- 1 reply
- 961 views
-
-
அயர்லாந்து வரி ஏய்ப்பு: அப்பிளைக் கடித்தது யார்? தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அரசு யாருக்கானது என்ற வினா இடையிடையே எழும். காலங்காலமாக அரசாங்கத்தின் வகிபாகம் தொடர்ந்து மாறிவந்துள்ளது. அரசின் பிரதான வகிபாகம், இருந்துவரும் சமூக அமைப்பைப் பாதுகாப்பதும் சமூக உறுதியை நிச்சயப்படுத்துவதுமாக இருந்தது. ஆனால் இன்று அரசாங்கம் வெளிப்படையாகவே மக்கள் விரோதமான, சமூக நலன்களை இல்லாதொழித்துப் பல்தேசியக் கம்பெனிகளுக்குச் சேவகம் புரிவதாக வளர்ந்துள்ளது. இம் மாற்றம் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உலக அலுவல்களைத் தீர்மானிப்பதன் விளைவாக உருவானதாகும். கடந்த வாரம் ஐரோப்பிய ஆணையகம், உலகின் மிகப்பெரிய பல்தேசியக் கம்பெனிகளில் ஒன்றான அப்பிள் நிறுவனம் அயர்லாந்து அ…
-
- 0 replies
- 304 views
-
-
பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’ கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகின் அனேகமான நாடுகளில், பெண்களுக்கான உரிமைகள், ஓரளவு கிடைத்திருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த நிலைமையோடு ஒப்பிடும் போது, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மிக முக்கியமானது. முன்பை விட அதிகளவிலான பெண்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். முன்பை விட அதிகளவிலான பெண்கள், நாட்டின் தலைமைத்துவத்தில் இருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் தெரேசா மே, ஜேர்மனியின் அங்கெலா மேர்க்கெல், நோர்வேயின் ஏர்னா சோல்பேர்க், மியான்மாரின் ஆங் சாங் சூகி என்று நீளும் இந்தப் பட்டியலில், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டனும் இணைந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. …
-
- 0 replies
- 326 views
-
-
அரசியலென்றால் பதவி ஆசை மட்டும் தானா? கடந்த 4ஆம் திகதி, குருநாகலில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடும் கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை, கொழும்பு கெம்பல் பார்க்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது மாநாடும், இதற்கு முன்னர் கடந்த ஆறு தசாப்தங்களில் நடைபெற்ற அக்கட்சிகளின் மாநாடுகளைப் பார்க்கிலும் வித்தியாசமானவையாக இருந்தன. இதற்கு முன்னர், இவ்விரு கட்சிகளில் ஒரு கட்சியின் மாநாட்டில் மற்றைய கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஒரு கட்சியின் மாநாடு மற்றைய கட்சியைத் திட்டித் தீர்க்கும் தளமாகவே இருந்தது. ஆனால் இம்முறை, ஒரு கட்சியின் மாநாட்டில் மற்றைய கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஐ.தே.க மாநாட்டில் முன்னாள்…
-
- 0 replies
- 380 views
-
-
உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் சிரானி மில்ஸ் ஐ அதிபர் பதவியிலிருந்து விலகுமாறு தென்னிந்தியத் திருச்சபை குருமுதல்வர் உட்பட நிர்வாகத்தினரால் பணிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த கிழமை அக்கல்லூரி மாணவிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பாடசாலையின் சில ஆசிரியர்களை பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் மீது கோபம் கொள்ளச் செய்தது. பிரச்சனையின் உண்மையான காரணம் என ரெலிகிராப் ஆராய்கிறது, உடுவில் மகளிர் கல்லூரியானது தென்னிந்தியத் திருச்சபையின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணக் குருமுதல்வருக்குக் கீழ் இயங்கி வருகின்றது. இந்தப் பாடசாலையானது நீண்டகாலமாக கிறிஸ்தவ பாரம்பரியத்தைக்…
-
- 3 replies
- 625 views
-
-
மீள்குடியேற்றம்: அடுத்தது என்ன? 'மீள்குடியேற்றம்', இந்த வார்த்தைதான் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதிகமாக பேசப்பட்டு வரும் முக்கிய வார்த்தையாக இருக்கும். 3 தசாப்த காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அல்லது தடம்மாற்றிய இடப்பெயர்வுகள் எண்ணிலடங்காதவை. வடக்கு, கிழக்கில் தலைதூக்கியிருந்த விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என அரசாங்கமும் தனிநாட்டைப் பெற்று, உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் புலிகளும் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலத்தில், இருதரப்புக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தமது பூர்வீக மண்ணையும் சொத்துக்களையும் சொந்தங்களையும் விட்டு உயிரை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள வ…
-
- 1 reply
- 514 views
-
-
பாவமன்னிப்பா? பரிகாரமா? -கருணாகரன் செந்தில் என்று அழைக்கப்படும் முருகுப்பிள்ளை ரவீந்திரராஜா விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு காலம் செயற்பட்ட போராளி. அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையிலிருந்து மிக இளைய வயதில் புலிகளோடு இணைந்தவர். இராணுவத்தினருடனான போர்க்களமொன்றில் செந்தில் ஒரு காலை இழந்தார். அதற்குப்பிறகு அவர் கல்முனைக்குச் செல்லவில்லை. பொதுமக்களுக்கான பணிகளையே செய்தார். பழகுவதற்கு இனிய செந்தில், அமைதியான சுபாவமுடையவர். அதனால் மக்களின் மத்தியில் செல்வாக்கைப் பெற்றிருந்தார். இறுதி ஈழப்போரில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, படையினரின் புனர்வாழ்வு முகாமுக்கு (தடுப்புக்கு) சென்று மீண்டார். இப்பொழுது கிளிநொச்சி நகருக்கு அண்மையில் குடும்…
-
- 0 replies
- 227 views
-
-
உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் ஊடாக இலங்கையில் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக் கின்றவர்களுக்கே பாரியவாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்பதனை தமிழர் பிரச்சினையுடன் சம் பந்தப்பட்ட அனைவரும் உணரவேண்டும். ஒரு நாட்டுக்கான தூதுவர் அல்லது உயர்ஸ்தானிகர் என்பவர் மதிப்புக்குரியவர். அதனால்தான் அவர் ""அதி மேன்மை தாங்கிய"" என்று அழைக்கப்படுகின்றார். அவருக்கு உரிய பாதுகாப்பும் கௌரவமும் அளிக்கப்படவேண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மலேஷியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் தயாகமகே நாடு திரும்பும் நோக்கில் க…
-
- 1 reply
- 287 views
-
-
ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் முக்கிய விடயங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த சூட்டோடு, அவருடைய முதலாவது விஜயம் அமைந்திருந்தது. முள்ளிவாய்க்கால் என்ற கடலோரப் பிரதேசத்தில் ஒரு சிறிய நிலப்பகுதிக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் மீது மோசமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருந்தன. அவர்களும் அந்தத் தாக்குதலை எதிர்த்து மூர்க்கமாகப் போரிட்டிருந்தார்கள். இந்த மோதல்களுக்கிடையில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் சிக்கி சின்னாப…
-
- 0 replies
- 509 views
-
-
ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஜயத்தின் போது “இராணுவத்தை குறையுங்கள் காணிகளை விடுவியுங்கள் என்ற கருத்தை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மைத்திரி அதனை செய்ய சற்று கால அவகாசம் தேவை என தகவல்கள் வெளியிட்டிருந்தார். இவை நாட்டில் நிலையான சமாதானம் .நல்லிணக்க ஏற்பாட்டிற்கு மிகமுக்கியமானவையாகவுள்ளன. என்ற அடிப்படையிலேயே இக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இது ஒரு நல்ல சமிஞ்சை தானே, ஏன் நாம் ஆத்திரப்படுவான் என்ற தொனியில் சிலர் பேசுவதும் பலரது காதுகளில் விழுகின்றது. ஜனாதிபதியின் கருத்துக்கள் பலர் செவிமெடுக்காதமையினால் “கால அவகாசம்” என்பது விட்ட காணிகளை பிடிக்கவா? என்று தமிழ் மக்கள் சார்பிலும் புத்திஜீவிகள்…
-
- 0 replies
- 280 views
-
-
கபாலி படத்திற்கு பாலாபிஷேகம் செய்யும் இன்றைய தலைமுறையினரிடம் ஈழ பிரச்சனையில் இன உணர்வு இல்லை - கொங்கு பேரவை தலைவர் உ. தனியரசு பேச்சு ....
-
- 1 reply
- 514 views
-
-
நேற்று முன்தினம் ஐநா செயலர் பான்கி மூன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்தார். பான்கிமூனின் யாழ்ப்பாண வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள், இதுவரைகாலமும் மீள் குடியேற்றம் செய்யப்படாது முகாம்களில் வசிக்கும் மக்கள் எனப் பெருமளவானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு மக்கள் கொடுத்த மரியாதையை இந்தக் காணொளிமூலம் நீங்களும் அறிந்துகொள்ளுங்கள். http://thuliyam.com/?p=40139
-
- 0 replies
- 305 views
-
-
பான் கீ மூனின் விஜயம்: மற்றொரு பிணையெடுத்தல்! ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, இன்று புதன்கிழமை மாலை வருகிறார். முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து நான்கு நாட்கள் மாத்திரமே ஆன நிலையில் - அதாவது மே 23, 2009இல் - அவர் முதற்தடவையாக இலங்கை வந்திருந்தார். பான் கீ மூன், இலங்கை வந்த முதலாவது சந்தர்ப்பத்தில் நாடு, இரு விதமான பிரதிபலிப்புக்களைக் கொண்டிருந்தது. தெற்கும் அது சார் தளங்களும், பெரும் போர் வெற்றி மனநிலையில் திளைத்துக் கொண்டிருந்தன. அப்போது, அனைத்து விடயங்களும் போர் வெற்றி வாதம் என்கிற ஏக…
-
- 0 replies
- 315 views
-
-
காணாமல் போனாரா பிரபாகரன்? தமிழ் அரசியல்வாதிகள் தம்மைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக உலாவ வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முன்னாள் போராளிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகிறது. போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு தடுப்புக்காவலில் இருந்த போது, விசஊசி ஏற்றப்பட்டதான ஒரு பரபரப்புக் குற்றச்சாட்டை முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அண்மையில் அறிக்கைப் போர்களை நடத்தியிருந்தனர். இந்த விவகாரத்தை அணுக வேண்டிய முறையில் அணுகாமல், சரியான முறையில் கை…
-
- 0 replies
- 301 views
-
-
ஒன்றிணைந்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள்ளும் அதன் உள்ளூர் அமைப்புகளுக்குள்ளும் கொள்கை விவகாரங்களிலும் ஆழமானதொரு நெருக்கடி தோன்றியிருக்கின்ற ஒரு நேரத்தில் அதன் 65ஆவது வருடாந்த மாநாடு நடைபெறுகின்றது. சீனப்பாரம்பரியத்தின்படி நெருக்கடி என்பது ஒரு கெட்டவிடயமாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. நல்லதுக்கோ கெட்டதுக்கோ ஒரு நெருக்கடி ஒரு திருப்பு முனையாகக் கூட இருக்கலாம். சுதந்திரக்கட்சியைப் பொறுத்தவரை, கணிசமான பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், அதேவேளை அந்தப் ப…
-
- 0 replies
- 557 views
-
-
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களின் இலங்கைக்கான விஜயம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் முடிவு பெற்றாலும் அவரின் வருகையானது ஏதாவது தரப்பினருக்கு அனுகூலம் தரும் விஜயமாக இருந்துள்ளதா என்பது அவரின் விஜயத்தையொட்டிய பாரிய கேள்வியாக மாறியுள்ளது. இங்கு தரப்பினர் என்று பிரித்துக்காட்ட முனைவது அரசாங்கம், தமிழ் மக்கள், முஸ்லிம் சமூகம், பேரினவாதிகள் என்ற எல்லைப்படுத்தப்பட்ட கூட்டத்தினரையேயாகும்.செயலாளர் நாயகத்தினுடைய இலங்கைக்கான இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயமானது ராஜதந்திர ரீதியில் முக்கியம் கொண்டதாக கருதப்பட்டாலும் அல்லது கணிக்கப்பட்டாலும் அவரின் வருகையின் பெறுமானமானது உள்ளூ…
-
- 0 replies
- 355 views
-
-
விஷ ஊசி விவகாரம் : மரணித்த போராளிகளின் விபரங்களும் பொய்களும் பொதுவான மக்களின் பிரச்சனைகளிலிருந்தும், உண்மைகளிலிருந்தும் மக்களைத் திசைதிருப்புவதற்காக உண்மைக்குப் புறம்பான தகவல்களை கட்டவிழ்த்துவிடுவதென்பது ஆளும்வர்க்கங்களின் தந்திரோபாயங்களில் ஒன்று. அவ்வாறான தகவல்கள் வியாபாரமயபடுத்தப்பட்ட சமூகப் பிரக்ஞையற்ற ஊடகங்களால் மக்கள் மத்தியில் எந்தக் குறிப்பான ஆதாரங்களுமின்றி பரப்பப்படும். அதன் பின்னணியில் காணப்படும் அரசியல் என்பது ஆபத்தான பின் விழைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறானவற்றுள் ஒன்றே விஷ ஊசி ஏற்றப்பட்டதாக முதலில் சந்தேகத்திற்குரிய அரசியல்வாதிகளாலும், அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களாலும் பரவவிடப்பட்ட வதந்தி. இலங்கையின் தேசிய இன ஒடுக்குமுறை வரலாற்றில் இன்றைய இலங்கை அரசு மிகவு…
-
- 0 replies
- 510 views
-
-
இரகசியங்களை ஜனாதிபதி வெளியிடாமல் இருக்கலாமா? எப்போதும் தமது எதிரிகளுக்கு ஆயுதம் வழங்காது பேசுவதில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 19ஆம் திகதி மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் கூட்டரசாங்கத்துக்கு ஒரு வருடம் பூர்த்தியாவதையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது வசமாக மாட்டிக் கொண்டார். கூட்டு எதிர்க்கட்சி எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களை நேரடியாகக் குறிப்பிடாமல் அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, சிலர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகக் கூறியிருப்பதாகவும் அவ்வாறு அவர்கள் புதிய கட்சியொன்றை ஆரம்ப…
-
- 0 replies
- 332 views
-
-
கேபி. க்கு எதிராக ஏன் குற்றஞ் சுமத்தப்படவில்லை? அரசியல் கைதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஆற்றிய உரை ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து இப்போது ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. பெருமளவு காலம் கடந்துவிட்டபோதிலும் தடுப்புக் காவலிலுள்ள இந்தத் தமிழ் கைதிகளின் பிரச்சினைக்கு இன்னும் ஒரு முடிவு ஏற்படவில்லை என்பதோடு, பலர் நீண்ட காலம் தடுப்புக்காவலில் உள்ளனர். இக் கைதிகள் தமது விடுதலையைக்கோரி காலத்திற்குக் காலம் பல்வேறு எதிர்ப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். அதைவிடத் தீவிர குற்றங்களுக்காக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக…
-
- 2 replies
- 403 views
-
-
20 பொதுமக்களைப் பலி கொண்டு தொடங்கிய சம்பூர் சமர்! கிழக்கில் யுத்தம் வெடித்த நாட்கள்!! ஓகஸ்ட் 28. 2016, கிழக்கில் யுத்தம் மூண்ட நாட்கள். 20 பொதுமக்களை பலிகொண்டபடி சம்பூர் மீது இலங்கை அரச படைகள் தாக்குதல்களை தொடங்கின. விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் உள்ள சம்பூரைக் கைப்பற்றும் நோக்கில் முப்படைகளுடன் மும்முனையில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை இலங்கை இராணுவத்தினர் தொடங்கினர். ஆட்டிலெறி, பீரங்கிக்குண்டுகள், பல்குழல் ரொக்கட் குண்டுகள், மோட்டர் எறிகணைகளை செறிவாக வீசிக்கொண்டு கிபீர்-மிக் விமானங்கள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவாறு ஓகஸ்ட் 28 அன்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நகர்வு முயற்சியினை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டனர். டாங்கி…
-
- 0 replies
- 246 views
-
-
துப்பாக்கி ரவைகள், பெல்லட் குண்டுகள் என அடக்குமுறைகளாலோ, தேர்தல், வளர்ச்சி என்ற மாய்மாலங்களாலோ காஷ்மீரி மக்களை இந்திய அரசால் வெல்லமுடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. காஷ்மீரில் இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் எனும் அமைப்பைச் சேர்ந்த தளபதிகளுள் ஒருவரான புர்ஹான் வானி, ரம்ஜான் பண்டிகை முடிந்த மறுநாளே – ஜூலை 8 அன்று இரவில் அரசுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 22 வயதான, காஷ்மீர் இளைஞர்களிடையே செல்வாக்கு கொண்ட புர்ஹான் வானியைக் கொன்றதைப் பெரும் வெற்றியாக அறிவித்த மோடி அரசு, அக்கொலையையடுத்து காஷ்மீரில் வெடித்துக் கிளம்பிய மக்களின் போராட்டங்களை அடக்கமுடியாமல் தோற்றுப் போய் நிற்கிறது. புர்ஹான் வானியின…
-
- 1 reply
- 513 views
-
-
விச ஊசியும் முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும் முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 108 பேர் புற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள். சுமார் பத்தாயிரம் என்கிற அளவில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளில், 108 என்பது கணிசனமான எண்ணிக்கையாகும். அப்படியான நிலையில், இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவது இயல்பானவை. குறிப்பாக, புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்…
-
- 0 replies
- 313 views
-
-
கடந்த வாரத்தில் வடக்கை மையப்படுத்தி அமெரிக்காவில் இரண்டு முக்கிய செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. ஒன்று அமெரிக்க தூதுவர் அத்துல் கெசாப் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்தியமை. இரண்டாவது அமெரிக்க விமானப்படையின் சி-130 போக்குவரத்து விமானத்தில் வந்த அமெரிக்கப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட ஐந்து நாள் மருத்துவ முகாம் மற்றும் உதவிப் பணிகள். தற்போதைய நிலையில் அமெரிக்காவின் இந்த இரண்டு நகர்வுகளையும் சாதாரண விடயமாகக் கருதிவிட முடியாது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடம் தனது பரப்புக்குள் உள்ள நாடுகளில் ஆண்டு தோறும் நான்கு பெரியளவிலான மனிதாபிமான மருத்துவ உதவிப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஒப்பரேசன் பசுபிக் ஏஞசல் என்ற பெயரில் இ…
-
- 0 replies
- 649 views
-