Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவறுகளைத் தொடர்ந்து இழைத்து விபரீதங்களை வாங்கிக் கொள்வோர்

Featured Replies

தவறுகளைத் தொடர்ந்து இழைத்து விபரீதங்களை வாங்கிக் கொள்வோர்

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தை இன்றுவரை கையாண்ட எல்லாத் தரப்புகளுமே தமது பொறுப்பற்ற போக்கினால் எழக்கூடிய விபரீத விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல், குறுகிய எண்ணப் போக்கில் இவ்விட யத்தை அணுகி, அதன் மூலம் அதனை மென்மேலும் சிக் கலாக்கியிருக்கின்றன என்பதே நிதர்சனம்.

இப்பிணக்கில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சிங்களத் தலைமைகளில் இருந்து, அயல் வல்லாதிக்க சக்தியான இந்தியா முதற்கொண்டு, சர்வதேச சமூகம் வரை இத்தவ றுக்கு விதிவிலக்கல்ல என்பதே அனுபவப் பாடம்.

இவ்வாறு தவறுகளை இழைத்தோருக்கு காலம் கடந்து தான் அத்தவறுகள் விபரீத விளைவுகளை ஏற்படுத்தி மோசமான பட்டறிவை தந்த பின்னர்தான் அவற்றின் தாற் பரியம் புரியத் தொடங்குகின்றது என்பதே இவ்விடயத் தில் உள்ள பொது அம்சமாகும்.

தன்னுடைய புவியியல் கேந்திர நலனை முன்னிறுத்தி, அதன் அடிப்படையில் தான் வகுத்த தீர்வுத்திட்டம் ஒன்றை, உரிமைக்காகத் தம்முயிரையும் , உதிரத்தையும், உடைமை களையும் ஈகம் செய்து போராடும் தமிழினத்தின் மீது வலோற்காரமாகத் திணிக்க முயன்ற இந்தியா, அந்த வர லாற்றுத் தவறின் மூலம் மிக மோசமான பாடத்தைப் படிக்க நேர்ந்தது. ஒரு சிறிய கரந்தடிப்படையணியுடன் மோதிய பிராந்திய வல்லாதிக்க சக்தி, அப்போது எதிர்கொண்ட எதிர்பாராத மோசமான இராணுவப் பின்னடைவு காரண மாக, இவ்விவகாரத்தில் தனது பிராந்திய வல்லாதிக்கத் தகுதியைப் பெயருக்கு வைத்துக்கொண்டு இற்றைவரை இவ்விடயத்தில் தள்ளிநின்று பார்க்கும் பார்வையாளராக ஒதுங்கிக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின் றது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதற்காக 2002 ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட சமா தான முயற்சிகளில் சர்வதேசம் அதிகளவில் ஈடுபாடும், பங்களிப்பும் வெளிப்படுத்தியது.

அந்த அமைதி முயற்சிக்கான காலத்தில் சமாதான எத்தனங்கள் முன்னெடுக்கப்படும் வேளையில் விடு தலைப் புலிகளைத் தடைசெய்து, பயங்கரவாத அமைப்பு களின் பட்டியலில் சேர்ப்பது மோசமான பின்னடைவு களைக் கொண்டுவரும் என சர்வதேச சமூகத்துக்குத் திரும்பத் திரும்ப எடுத்துரைக்கப்பட்டது. அமைதி முயற்சி களில் இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சமதரப்பு என்ற அந்தஸ்தில் ஈடுபட்டிருக்கும்போது, அதில் ஒரு தரப்பான புலிகளின் அந்தஸ்தை மோசமாகப் பின்னடை வுக்குள் ஆழ்த்தும் விதத்தில் சர்வதேசம் நடந்துகொண் டால், அமைதி எத்தனங்களே பாழ்பட்டுப் போகும் என்று சர்வதேச சமூகத்துக்கு எச்சரிக்கப்பட்டது. ஆனால் அந்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்தி மேற்குலகம் நடந்து கொண்டது. புலிகள் இயக்கத்தைத் தடை செய்து, அமைதி முயற்சிகளில் அந்த அமைப்பின் சம அந்தஸ்தைக் குலைக்கவும், அதன் மூலம் சமாதான நடவடிக்கைகளைக் குழப்பவும் அது கால்கோள் இட்டது.

புலிகளின் அந்தஸ்தைத் தரம் இறக்கி, அதனால் அமைதி முயற்சிகளுக்கு வேட்டு வைத்த சர்வதேசம், இப் போது மற்றைய தரப்பான இலங்கை அரசு, இனப்பிரச் சினை விவகாரத்தைக் கையாள்வதில் மேற்கொள்ளும் திருகுதாளத்தைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியா மல் திகைத்துப்போய் நிற்கின்றது.

இந்த வகையில், தென்னிலங்கை ஆட்சி இப்பிணக் குத் தொடர்பாகத் தொடர்ந்து இழைத்து வரும் தவறு களோ அனேகம்.

ஈழத் தமிழரின் தாயக பூமியின் மைய மண்ணான யாழ். குடாநாட்டில் இருந்து தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்ட சக்திகளான விடுதலைப் புலி களை வன்னிக்கு விரட்டியடித்த தென்னிலங்கைச் சிங் களம், அந்தச் "சாதனையை' பெரும் சரித்திர பூர்வ நிகழ் வாக விழாவெடுத்துக் கொண்டாடியது. ஆனால் உண் மையில் அதன் பெறுபேறாக நடந்தேறியது என்ன?

1996 முற்பகுதியில் அதுவரை வெறும் கரந்தடிப் படையாக தாக்கிவிட்டு மறையும் கெரில்லா படை அணியாக விளங்கிய விடுதலைப் புலிகள் யாழ். குடா நாட்டிலிருந்து வன்னிக்காடுகளுக்குத் துரத்தப்பட்டனர். விளைவு என்னவாயிற்று?

கரந்தடிப் படையாகக் காடுகளுக்குள் முடக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அங்கிருந்தபடியே விஸ்வரூபம் எடுத்து, பிரமிப்பூட்டும் போரியல் வளர்ச்சியோடு, காத்திர மான தாக்குதல் பலத்தோடு, பெரும் மரபு வழி இராணு வமாக சில ஆண்டுகளில் வெளிப்பட்டனர்.

இப்போது கிழக்கில் குடுமிமலை(தொப்பிகல) காட்டி லிருந்தும் புலிகளைத் துரத்தியடித்து விட்டோம் என மார் தட்டும் தென்னிலங்கை, புலிகளிடமிருந்து தாங்கள் புதி தாகக் கைப்பற்றியவை எனக் கூறப்படும் பெரும் பிரதேசங் களில் அகலக் கால் வைத்தபடி விளைவை எதிர்கொள்ளக் காத்திருக்கின்றன.

யாழ். குடாநாட்டிலிருந்து துரத்தப்பட்ட புலிகள் பின் னர் விஸ்வரூபமாக வெளிப்பட்டமை போல கிழக்கிலி ருந்து துரத்தப்பட்ட அவர்கள் இனிமேல் எப்படி வெளிப் படுவர்?

""இடம், காலம், சூழல் என்பவற்றுக்கு ஏற்பவே விடு தலைப் புலிகள் தங்களது இராணுவத் தந்திரோபாயங் களை வகுக்கின்றனர். கிழக்கில் தாங்கள் விரித்த பொறிக் குள் தாங்களே அகப்பட்டுக் கொண்டு விட்டனர் என் பதை சிங்கள இராணுவம் விரைவில் உணர்ந்துகொள் ளும்.'' என்று புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதை இந்தப் பின்னணியில் நோக்கி விளைவை உய்த்தறிவதே பொருத்தமானது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.