Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்த ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் பிரித்தானியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் !

Featured Replies

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்த ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் பிரித்தானியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் நா.த.அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இதனொரு அங்கமாக பிரித்தானியாவில் ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இலண்டன் மாநகரத்தின் தென்மேல் தேர்தல் பிரந்தியம் :

திரு. அப்பாத்துரை வைரவமூர்த்தி

திரு. வடிவேலு சுரேந்திரன்

ஸ்கொட்லண்ட் தேர்தல் தொகுதி :

திரு. மோகன் தியாகராஜா

இலண்டனுக்கு வெளிப் பிரந்தியம் :

திரு. குணசீலன் வன்னியசிங்கம்

வேல்ஸ் தேர்தல் தொகுதி :

திரு. பொபி விஜே

ஆகியோர் நா.த.அரசாங்கத்தின் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உத்தியோகபூர்வமாக புதன்கிழமை (07-12-2011) அன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் முழுவிபரம் :

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கான அங்கத்தவர்கள் தேர்வு - இலண்டன் மாநகரத்தின் சில தேர்தல் மாவட்டங்களுக்கான வெற்றிடங்கள் நிரப்புதல்:

இலண்டன் மாநகரத்தின் தென்மேற்குத்; தேர்தல் தொகுதி:

2010 ஆம் ஆண்டு மே மாதம் நடந்து முடிந்த தேர்தலில் தவிர்க்க முடியாத காரணங்களினால் தென்மேற்குத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டவர்களில் நான்கு போட்டியாளர்கள்இ வாக்களிப்பு நடந்து முடிந்த நிலையில்இ தாம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு ஏனைய ஐந்து வேட்பாளர்களையும் வெற்றி பெற வைத்தார்கள். தற்போதுஇ அந்தத் தொகுதியில் ஏற்பட்ட இரு வெற்றிடங்களைப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டவர்களில் இருவர் தமது வாபஸை மீளப் பெற்றுக் கொண்டதன் மூலம் தம்மை அப் பதவிகளுக்கு நியமிக்கும் தகுதியைப் பெற்றார்கள்.

திரு. அப்பாத்துரை வைரவமூர்த்திஇ திரு. வடிவேலு சுரேந்திரன் ஆகிய இவ்விருவரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில்இ இலண்டன் மாநகரத்தின் தென்மேல் தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அங்கத்தவர்களாக இத் தவணையின் எஞ்சியுள்ள காலப் பகுதிக்குஇ இலண்டன் மாநகரத்தின் தென்மேற்குத்; தேர்தல் தொகுதியின்; பிரதிநிதிகளாகப் பணிபுரிவார்கள் என்பதைப் பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலண்டனுக்கு வெளியேயான தேர்தல் தொகுதி:

2010 ஆம் ஆண்டு மே மாதம் நடந்து முடிந்த தேர்தலில் இத் தேர்தல் தொகுதிக்கு மூன்று அங்கத்தவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் காலத்தில் ஏற்பட்ட அனுபவத்தின் விளைவாக இத் தேர்தல் தொகுதியைத் தமிழர் செறிவாக வாழும் முக்கிய மூன்று பிரிவுகளைக் கொண்ட மூன்று தேர்தல் தொகுதிகளாகப் பிரிப்பதற்கு இலண்டன் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவை நாமும் ஏற்றுக் கொண்டோம். இதன் பிரகாரம் இத் தேர்தல் தொகுதி தமிழர் செறிந்து வாழும் ஸ்கொட்லண்ட்இ வேல்ஸ்இ இலண்டன் (இலண்டனுக்கு வெளிப் பகுதி) என மூன்றாகப் பிரிக்கப்பட்டது.

ஸ்கொட்லண்ட்:

ஸ்கொட்லண்ட் நகரிலுள்ள முக்கிய தமிழ் மக்கள் அமைப்புக்களின் அனுசiணையுடன் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் திரு. மோகன் தியாகராஜா அவர்கள்இ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் ஸ்கொட்லண்ட் தேர்தல் தொகுதியைப் பிரதிநிதிப் படுத்த ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அங்கத்தவராகஇ இத் தவணையின் எஞ்சியுள்ள காலப் பகுதிக்கு ஸ்கொட்லண்ட் தேர்தல் தொகுதியின் பிரதிநிதியாகப் பணி புரிவார் என்பதைப் பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலண்டன் (இலண்டனுக்கு வெளிப் பகுதி)

2010 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தல்இ தேர்தலில் நடந்த அசம்பாவிதங்கள் காரணமாக இரத்துச் செய்யப்பட்டது. தேர்தலில் நடந்த அசம்பாவிதங்களில் வேட்பாளர்கள் எவருக்கும் பங்கில்லை என்ற அடிப்படையில் தேசீயப் பற்றுடன் தேர்தலில் போட்டியிட்டவர்களில் ஒருவரை இத் தொகுதிப் பிரதிநிதியாக்குவதில் இலண்டன் தேர்தல் ஆணையம் முனைப்புக் காட்டியது. தர்க்க ரீதியாக இது நடைமுறைச் சாத்தியம் என்னும் அடிப்படையில் நாமும் இதற்கு அனுசரணையாக இருந்தோம். திரு. குணசீலன் வன்னியசிங்கம் அவர்கள் இத் தொகுதிப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அங்கத்தவராகஇ இத் தவணையின் எஞ்சியுள்ள காலப் பகுதிக்கு இலண்டனுக்கு வெளிப் பகுதித் தேர்தல் தொகுதியின் பிரதிநிதியாகப் பணி புரிவார் என்பதைப் பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வேல்ஸ்:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில்இ வேல்ஸ் தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அங்கத்துவருக்கான தேர்வுக்கான விண்ணப்பம் கோரப்பட்டு திரு. பொபி விஜே அவர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அங்கத்தவராகஇ இத் தவணையின் எஞ்சியுள்ள காலப் பகுதிக்கு வேல்ஸ் தேர்தல் தொகுதியின் பிரதிநிதியாகப் பணி புரிவார் என்பதைப் பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலண்டன் தேர்தல் ஆணையமும் எம்முடன் இணைந்து வாழ்த்துகின்றது.

http://skypetamil.com/details.php?nid=29&catid=54873

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.